Posts Tagged ‘இந்துக்களின் உரிமைகள்’
ஏப்ரல் 14, 2013
சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?
![Saudi Arabia and its flag](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/saudi-arabia-and-its-flag1.jpg?w=450&h=190)
பிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:
- ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
- கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].
என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:
- சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].
- அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]
- வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]
- கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]
- சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.
என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.
![Saudi royal life](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/saudi-royal-life.jpg?w=450&h=388)
இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
![Saudi women](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/saudi-women.jpg?w=450&h=295)
சவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன?: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்?”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்!
![Saudi women protesting](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/saudi-women-protesting.jpg?w=450&h=255)
சவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.
![Saudi worker](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/saudi-worker.jpg?w=450)
இஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.
![Saudi workerker striking](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/saudi-workerker-striking.jpeg?w=450&h=307)
இலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.
வேதபிரகாஷ்
14-04-2013
[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.
[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=681845
[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.
குறிச்சொற்கள்:அடிமை, அரசியல், அருந்ததி ராய், அரேபியா, அல்லா, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், கலவரம், குரான், குல்லா, கூலி, சம்பளம், சவுதி, சிங்களவர், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், தமிழர், தீவிரவாத அரசியல், தீவிரவாதம், தேசத் துரோகம், நிகாதத், பர்மா, பாகிஸ்தான், பிக்கு, பெட்ரோல், பௌத்தர், மக்கா, மதினா, மலையாளி, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், மெக்கா, மெதினா, வளைகுடா, வேலை
அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரேபியா, ஆதரவு, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சவுதி, செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஹமது நபி, மென்மை, வகுப்புவாத அரசியல், வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஏப்ரல் 12, 2013
சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)
![Where the three immolated themselves - Chawli mutt](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/where-the-three-immolated-themselves-chawli-mutt.jpg?w=450)
நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.
![Modi-Rahul-Sonia-Advani](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/modi-rahul-sonia-advani.jpg?w=450&h=337)
சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.
![Sonia attending Lingayat conference Aprl 2012](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/sonia-attending-lingayat-conference-aprl-20121.jpg?w=450&h=386)
ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.
![PHOTO CAPTION](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/sonia-attending-lingayat-conference-april-5.jpg?w=450&h=307)
லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.
![Sonia faces](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/sonia-faces.jpg?w=450&h=382)
லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.
![el_sari_rojo_javier_moro](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2010/06/el_sari_rojo_javier_moro.jpg?w=450)
el_sari_rojo_javier_moro
மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.
![CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/cm-visited-siddaganga-mutt-31-07-2010.jpg?w=450&h=326)
31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.
![CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/cm-visit-to-siddaganga-mutt-02-08-2011.jpg?w=450&h=289)
02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.
28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்
![Siddhaganga mutt meets Modi](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/siddhaganga-mutt-meets-modi.jpg?w=450&h=295)
இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.
![Siddhaganga mutt meets Modi2](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/siddhaganga-mutt-meets-modi2.jpg?w=450&h=302)
அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.
![Courtesy- Keerthana Dharavalli- facebook](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/courtesy-keerthana-dharavalli-facebook.jpg?w=450&h=337)
இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.
வேதபிரகாஷ்
12-04-2013
[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.
[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.
The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm
[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html
குறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism
ஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஏப்ரல் 11, 2013
சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)
![Jagannaath Swami - colour photo](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/jagannaath-swami-colour-photo.jpg?w=450)
மூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.
![Pranav Swami - colour photo](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/pranav-swami-colour-photo.jpg?w=450)
சிவகுமார், ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.
![KPN photo](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/lingayat-matathipatis-supporting-yeduriyappa-earlier.jpg?w=450&h=328)
நிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.
![KPN photo](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/lingayat-mutt.jpg?w=450&h=283)
அஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.
குறிச்சொற்கள்:அரசியல், ஆசிரமம், ஆசை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், எடியூரப்பா, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸ், சமாதி, சாமியார், சாலை, சுவாமி, செக்யூலரிஸம், சொத்து, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜீவசமாதி, தற்கொலை, நிலம், பதவி, பிஜேபி, பீதர், மடம், மதிப்பு, முஸ்லீம்
அடையாளம், அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூதர், ஆதரவு, ஆத்மா, இலக்கு, உடல், உண்மை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எடியூரப்பா, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கர்நாடகம், காங்கிரஸ், சம்மதம், சவ்லி, சிவன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, நெருப்பு, நேர்மை, பிஜேபி, பீதர், பௌத்தம், மதம், மனம், லாதரவு, லிங்கம், லிங்காயத், வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
ஏப்ரல் 11, 2013
சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா?
![Guru and the faithful followers](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/guru-and-the-faithful-followers.jpg?w=450&h=252)
ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் – மற்றும் அவரது சீடர்கள்
மாருதிராவ் சுவாமி தாக்கப்பட்டது (டிசம்பர் 31, 2012), மறைந்தது (ஜனவரி 31, 2013): கர்நாடகாவில், சவ்லி மடத்தில், மூன்று இளைய மடாதிபதிகள், யாக குண்டத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தி பலவிதத்தில் அலசப்பட்டு வருகின்றது. பீதர் மாவட்டத்தில் உள்ள சவ்லி மடம், தமிழ் நாளிதழ்கள் கூறுவது போல, பழமை வாய்ந்த மடமல்ல, 1989ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. ரெட்டி சமூகத்தினருக்கு சொந்தமானது என்றெல்லாம் எழுதியுள்ளனர். இந்த மடத்தின் தலைமை மடாதிபதி, கணேஷ் மகா சுவாமி என்பவர். இளைய மடாதிபதியாக இருந்த, மாருதி ராவ் சுவாமி (Maruti Rao Swami), மடத்தின் அருகிலேயே 31-12-2012 அன்று யாரோ அடையாளம் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கிடந்தார். அப்பொழுது போலீஸார் அதிகம் அக்கரை காட்டவில்லை. பிறகு ஜனவரி 31 2013, முதல், மாயமாகி விட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் ஏ.எம். ஜோதி என்ற எஸ்.பி இதுவரை ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. “அவரைக் கடத்திக் கொண்டு சென்றுள்ளனரா, உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எங்களுக்கு ஒன்றும் தெரியாது”, என்கிறார். “மறைவதற்கு முன்பு தனது தாயாருடன் பேசியுள்ளார். தான் இறந்ததும் இன்சூரன்ஸ் பணத்தைக் கொண்டு கடன்களை தீர்த்து விடுமாறு கூறியுள்ளார்”, என்று மேலும் கூறுகிறார்[1]. போன் மூலம் யார் யாருடன் பேசியுள்ளனர் என்பதைக் கண்டு பிடிக்கும் போது, மற்ற சீடர்கள் பேசியதையும் போலீஸார் கண்டறிய முடியும்.
![Chawli mutt Karnataka](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/chawli-mutt-karnataka.jpg?w=450&h=272)
சௌலி மடம் – மடாதிபதியின் சிலை – போலீஸ் விசாரணை
கணேஷ் மகாசுவாமி தற்கொலை செய்து கொண்டது (பிப்ரவரி 28, 2013): பல இடங்களில் தேடியும் மாருதி ராவ் சுவாமிகள் கிடைக்காததால், மடாதிபதி தான், அவரை கொன்று விட்டார் என, சில பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. குறிப்பாக அஷோக் சுவாமிகள் என்ற சீடர் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்தார் (விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன). இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால், மனம் உடைந்த, தலைமை மடாதிபதி கணேஷ் மகா சுவாமி, கடந்த பிப்ரவரி, 28ம் தேதி இரவு, கோயில் கருவறையில் உள்ள சிவன் சிலை மீது, கடிதம் எழுதி வைத்து விட்டு, கருவறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.
![Chawli mutt suicide - entrance](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/chawli-mutt-suicide-entrance.jpg?w=450&h=272)
போலீஸ் விசாரணை
ஜீவசமாதி அறிவிப்பு: கடந்த பிப்ரவரி, 6ம் தேதி, மடத்தில் நடந்த ஆன்மிக கூட்டத்தில் பங்கேற்ற, கணேஷ் சுவாமிகள், “இது என்னுடைய கடைசி பொது நிகழ்ச்சி. நான் ஜீவ சமாதி அடையப் போகிறேன்‘ என்றார். அதிர்ச்சியடைந்த பொது மக்கள், முடிவை மாற்றிக் கொள்ளும்படி கூறினர். எப்போதும், காலை, 10:00 மணிக்கெல்லாம் தன் அறையிலிருந்து வெளியே வந்து தரிசனம் தரும் கணேஷ் சுவாமிகள், பிப்ரவரி, 28ம் தேதி, காலை, 11.30 மணியாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மடத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் அங்கு இல்லை; கோவில் கருவறையில் பிணமாக கிடந்தார். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட, அவரின் கடிதத்தில், “மாருதி சுவாமிகளை சமூக விரோதிகள் தாக்கிய புகாருக்கும், அவர் கடத்தப்பட்டதாக மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீதே பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்‘ என, குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான், இளைய மடாதிபதிகள் மூவர், தற்கொலை செய்து கொண்டது, சவ்லி மடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Jagannaath Swami](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/jagannaath-swami.jpg?w=450&h=337)
ஜகன்னாத சுவாமி – தீக்குளித்த மூன்றில் ஒருவர்
சௌலி மடம் வளர்ந்த விதம் (1989-2012): இந்த மடத்திற்கு சொந்தமாக ஆறு ஏக்கர் பரப்புள்ள நிலம் இருக்கிறது. இதை கிராம மக்களும், ஞானேஸ்வர மகராஜும் கொடுத்துள்ளனர். பிறகு பணத்திற்கு குறைவு எதுவும் இல்லாதலால், அவ்விடம் பெரிய மடமாகக் கட்டப்பட்டது. வரும் பக்தர்களுக்கு போதனை செய்து கொண்டு, வாரத்திற்கு ஒருமுறை தரிசனம் கொடுத்து வந்தார். தான் இறக்கும் போது, தன்னோடு இறக்கும் ஒரு குழுமத்தை உருவாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது[2]. சுமார் 50 அடி உயரத்தில் தன்னுடைய சிலையை அமைத்து, அதைச் சுற்றிலும், மற்ற கடவுளர்களது சிலைகளை சிறியதாக வைத்து அமைத்தார். புகழ் அதிகரிக்கும் போது, சாமியார்களுக்கு, குரு போன்றவர்களுக்கு, தாமே கடவுள் என்ற எண்ணம் வந்டுவிடும் அல்லது பக்தர்களே அவர்களை அவ்வாறு செய்துவிடுவர்.
![Pranav Swami](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/pranav-swami.jpg?w=450&h=311)
பிரணவ் குமார் சுவாமி – இளைஞரான தீக்குளித்தவர்ளில் ஒருவர்
எடுயூரப்பா வந்தது, ஆசிரமத்தில் பிளவு ஏற்பட்டது: முந்தைய முதலமைச்சர் எடியூரப்பா இங்கு சிலமுறை வந்துள்ளார். அப்பொழுது, மடத்திற்கு ஏதாவது செய்யுமாறு வேண்டியுள்ளார். வரும் பணத்தில், தன்னுடைய சிலையை இன்னும் பெரிதாக வைக்கவும் ஏற்பாடுகளை ஆரம்பித்தார். இதை சில பக்தர்கள் விரும்பவில்லை. மேலும் பிரணவ சுவாமி, வீர ரெட்டி சுவாமி மற்றும் ஜகன்னாத சுவாமி இவருடன் இருக்க, மற்றவர்கள் விலகி சென்றுவிட்டனர். இருப்பினும் மற்ற 13 சீடர்களும் மடத்திற்கு வெளியே, ஆனால், பிரதான வாயிலின் அருகே அறைகளைக் கட்டிக் கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் எல்லோரும் படித்தர்கள் அல்லர், வேதம் முதலியவை தெரியாது. பெரியவர் சொன்னதைக் கேட்டு நடந்து வந்தனர். உண்மையில் அவர்களுக்கு இந்த மடத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது[3]. ஆகவே கூட ஒட்டிக் கொண்டு வந்தவர்கள், நிச்சயம் ஆன்மீகத்திற்கு என்றில்லாமல், சொத்து, பதவி முதலிய ஆசைகளுடன் இருந்தனர் என்று தெளிவாகிறது. அத்தகையோர் அரசியல்வாதிகளுக்கு எளிதாக பணிந்து வேலை செய்வது சகஜமே.
![KPN photo](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/04/lingayat-matathipatis-supporting-yeduriyappa.jpg?w=450&h=322)
எடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத் மடாதிபதிகள்
யார் அடுத்த மடாதிபதி – என்ற போட்டி வந்தது: முதலில் பெரியவருக்குப் பிறகு, தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மடாதிபதியாக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். பிறகு, இதனை அரசு நிர்வாகத்தில் அல்லது மற்ற மதக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் அரசியல் ஆக்கவேண்டும் என்ற முதல் முயற்சி எனலாம்[4]. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை[5]. இதன் பிறகு தான், இந்த மூன்று சீடர்களும் அத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லது, தமது குரு சொன்னப்படி உயிர்விடுவது சிறந்தது என்றும் எண்ணினர்[6]. டிராக்டர்களில் விறகைக் கொண்டுவந்து வாயிலின் பக்கத்தில் குவித்துள்ளனர். இரண்டு கேன்களில் 60 லிட்டர் மண்ணெண்ணையும் வாங்கி வைத்துள்ளனர். பிறகு, அவர்கள் தீர்மானித்தபடியே, தீயை வளர்த்து அதில் குதித்துள்ளனர், இவற்றை ஒரு வீடியோ மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வீடியோவை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்[7].
[4] தமிழகத்தில் அப்படித்தான், மடாதிபதிகள், கோவில்கள் மிரட்டப்பட்டு, அரசுடமையாகி உள்ளது என்பதனை நினைவு கூரலாம். அதற்கு நாத்திகர்கள் ஒத்துழழைத்தனர் என்றால், இங்கு காங்கிரஸ்காரர்கள் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது.
[5] The other 13 disciples stayed in rooms built just outside the main entrance. Since the maharaj died, the three closest to him stayed inside the temple. Due to tension created by the mysterious circumstances of his death, police were posted outside the gates. Police say the 16 disciples had tried to resolve among themselves the issues of leadership and succession but could not reach a consensus. “Nearly all the disciples are illiterate; none knows the scriptures. They just followed what the chief seer said. Without him, they didn’t know what to do with this huge mutt,” says SP Tyagarajan. “About a fortnight ago, they met and one suggestion was to hand the mutt over to the district administration or to a religious group. They failed to take a decision,” he added
குறிச்சொற்கள்:அரசியல், ஆசை, ஆத்மா, இதயம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், உத்தரவு, உயிர், கணேஷ் மகா சுவாமி, கர்நாடகா, குரு, சமாதி, சவ்லி, சீடன், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன்முக்தி, தற்கொலை, துடிப்பு, பசவேஸ்வரர், பதவி, பீதர், மடம், மடாதிபதி, முஸ்லீம், மூச்சு, லிங்கம், லிங்காயத், வீரசைவம்
அடையாளம், அமைதி, அரசியல், ஆதரவு, இந்திய விரோதிகள், இந்துக்கள், உண்மை, உத்தரவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, குரு, சட்டம், சீடன், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனம், தலித், திரிபு வாதம், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், பசவேஸ்வரர், பௌத்தம், மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மனம், யோகா, லிங்கம், லிங்காயத், வன்புணர்ச்சி, வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
மார்ச் 24, 2013
கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.
மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.
அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.
காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.
உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?
© வேதபிரகாஷ்
24-03-2013
குறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்
அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 20, 2013
2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!
எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.
![manmohan-singh-scam](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/03/manmohan-singh-scam.jpg?w=450&h=337)
எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!
இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
![UPA-scam-list](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/03/upa-scam-list.jpg?w=450&h=637)
ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு
மோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.
![2G scam -Congress-DMK nexus](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/03/2g-scam-congress-dmk-nexus.jpg?w=450&h=316)
2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.
தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.
![Augusta - deal-commission-Italian connection](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/03/augusta-deal-commission-italian-connection.jpg?w=450&h=227)
வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!
மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].
![05Fir12-13.qxp](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/03/coalgate-scam.jpg?w=450&h=587)
தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!
224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
Chidambaram, Finance Minister[11]: Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties. |
நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].
![CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2013/03/congress-sonia-gandhi-rahul-gandhi-manmohan-singh-scams-list.jpg?w=450&h=551)
© வேதபிரகாஷ்
20-03-2013
[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.
[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.
குறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism
1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 20, 2012
இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?
இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[2]. |
The country belonged to all and people are free to live in any part of the country[3]. |
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[4]. |
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[5]. |
அதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்?
அவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?
இருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே?
ஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை?
சோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்?
குறிச்சொற்கள்:அகதி, அசாம், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், உரிமை, காஷ்மீரம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜம்மு, தீவிரவாதம், நாடு, பாகிஸ்தான், மக்கள், மாநிலம், முகாம், ராஜிவ் காந்தி, வாழ்வு, வேலை, Indian secularism, secularism
அகதி, அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசு விருதுகள், அருந்ததி ராய், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, ஈத், உண்மை, உரிமை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், சஜ்ஜன் குமார், சமதர்மம், சமத்துவம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார் படேல், சர்தார் வல்லபாய் படேல், சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட், சவர்க்கர், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், செய்யது அலி ஷா கிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜம்மு, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், பாரதிய ஜனதா, பிஜேபி, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முகாம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வாழ்வு, வேலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஓகஸ்ட் 10, 2012
தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?
![Rajiv-Mohanta-accord](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/rajiv-mohanta-accord.jpg?w=450)
ராஜிவ்-மொஹந்தா உடன்படிக்கையினை மறைத்த-மறந்த சோனியா மேய்னோ: 1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி[1],
- 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்,
- 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது,
- 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்.
ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்! உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும்? 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.
![allah-in-dinia-by-2030](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/allah-in-dinia-by-2030.jpg?w=450)
உள்துறை அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட முறை: 25 ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை[5]. 1980களில் ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் என்று பலவற்றில் வலியவந்து கையெழுத்துப் போட்டார். ஆனால், நிறைவேற்ற அத்தகைய வேகத்தைக் காட்டவில்லை[6]. காங்கிரஸ்காரர்கள் வேறு விருப்பங்களில் ஆழ்ந்திருந்தார்கள். போபோர்ஸ் வழக்கை வைத்துக் கொண்டு பிரச்சினையையும் திசைத்திருப்பினர்[7]. அந்த உடன்படிக்கையின்படி, அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் வேலை செய்திருக்க வேண்டும்[8], ஆனால், காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளமலேயே இருந்து வந்தனர்[9]. அதாவது அவர்கள் அப்படி இருக்கச் சொல்லப் பட்டது அல்லது முஸ்லீம் லாபிற்குப் பணிந்து ஓன்றும் தெரியாதது மாதிரி இருந்தார்கள். பிரபுல்ல குமார் மொஹந்தா சொல்வதின்படி, அவர் 1996ல் முதல் மந்திரியாகியதும், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், நிதி-அமைச்சர் முதலியோர் ஓடிவிட்டனர்[10]. அப்படியென்றால் அவர்கள் யார்-யார் என்று அடையாளங்கண்டு கொள்ளலாம். சிதம்பரம், மன்மோஹன் சிங் முதலியோர். இவர்கள் எல்லோரும் இப்பொழுது மாறியுள்ளார்கள் அவ்வளவுதான்! கொடுமையென்னவென்றால், மன்மோஹன் சிங் அசாமில் இருந்துதான் தேந்தெடுக்கப் பட்டு, பிறகு பிரதம மந்திரியாகியுள்ளார். இவர்கள் எல்லோரும் எப்படி அசாமின் மக்களுக்கு உழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
![Mamtha-protecting-infiltrators](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/mamtha-protecting-infiltrators.jpg?w=450&h=402)
2014 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு சோனியா ஆடும் அபாயகரமான விளையாட்டு: இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவிற்கு வேண்டியவர், ஒரு பலமான, திடமான, செயல்படக் கூடிய, தைரியமான பிரதம மந்திதான் வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். இந்திரா காந்தியையும் மிஞ்சும் வண்ணம் ஊழலில் சோனியா கோடி-கோடிகளில் ஊழல் செய்துள்ளார். அதாவது அவரது தலைமையின் கீழ்தான் அத்தகைய கோடி-கோடி ஊழல்கள் நடந்துள்ளன. இதனையும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலை வெல்வது என்ற திட்டத்தில் சோனியா செயல்பட ஆரம்பித்துள்ளார். முஸ்லீம்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான்-பங்களாதேசங்களை இணைக்க, இந்திய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு முஸ்லீம் மக்கட்தொகையை பலவழிகளில் பெருக்கி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு வழுமுறைதான், லட்சக்கணக்கில் பங்களாதேச முஸ்லீம்களை இந்தியாவில் நுழையச் செய்வது. சிதம்பரம் காலத்தில், நிறையவே உதவியுள்ளார் என்று அவர் அமைதியாக இருந்ததிலிருந்தே தெரிகிறாது. 2010 மொஹந்தாவின் பேட்டியிலுருந்தும் உறுதியாகிறது.
![Mughalstan_-_Proposed_partition_of_India_along_ethnic_lines](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/mughalstan_-_proposed_partition_of_india_along_ethnic_lines.jpg?w=450)
பிஜேபி ஆட்சி காலத்தில் (1998-2004) ஏன் அமூல் படுத்தப் படவில்லை?: காங்கிரஸோ மற்றவர்களோ இப்படி தாராளமாக சேள்வியை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து, திரணமூல் காங்கிரஸ் ஆரம்பித்த அம்மையாரும் தான் காரணம்[11]. 65 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லீம்களை நுழையவிட்டு, ஓட்டுவங்கிகளை உண்டாக்கி மேற்கு வங்காளத்தில் ஸ்திரமாக இருந்தனர். ஆனால், மமதா பானர்ஜி அதே முறையைக் கையாண்டு, அதாவது முஸ்லீம்கள்-மாவோயிஸ்டுக்கள் மூலம் பதவிக்கு வந்தார். காங்கிரஸை ஆட்டிப் படைக்கிறார். அதேப்போலத்தான் 1998-2004 காலத்தில் வாஜ்பேயை, இந்த பெண்மணி சதாய்த்து எதிர்த்து வந்தார். அப்பொழுதே மஹந்தா-மமதா பிரச்சினை வந்தது. காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, மஹந்தாவை ஓரங்கட்டியது. இது, பிஜேபி ஆட்சி போனது, மம்தா வளர்வதற்கு சாதகமாக இருந்தது.
![Muslim MLA s in WB Assembly 2011](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/muslim-mla-s-in-wb-assembly-2011.jpg?w=450)
உச்சநீதிமன்றதீர்ப்பினையும்மதிக்காதசோனியா–காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் மட்டுமல்ல, புதிய சட்டங்களையும் ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவிற்குள் புகுந்தவர்களைக் கண்டுபிடிக்கும் சட்டம் 1983 [the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983], என்று ஒரு சட்டம் அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் அதனை செல்லாது என்று தீர்ப்பளித்து, அந்நியர் சட்டம் 1946ன் [the Foreigners’ Act of 1946] படி அடையாளங்காணுமாறு ஆணையிட்டது[12]. ஆனால், ராஜிவோ இப்பொழுதைய சோனியாவே, இதை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை.
![Muslim warning with truncated Indian map](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/muslim-warning-with-truncated-indian-map.jpg?w=450&h=814)
Photos – courtesy : http://www.hinduexistence.wordpress.com [புகைப்படங்கள் இந்த இணைதளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது]
© வேதபிரகாஷ்
10-08-2012
[1] The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.
[2] காந்தி பாகிஸ்தான் உருவாக வேண்டிய நிலை வந்தால், தனது பிணத்தின் மீதுதான், நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்று அவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்றனர், இவரோ நவகாளிற்கு முஸ்லீம்களைக் காப்பாற்றுகிறேன் என்று யாத்திரைக் கிளம்பி விட்டார்.
[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).
http://indiansaga.com/history/postindependence/accord.html
[4] And in the 1983 elections, people did not come out to cast their votes but the Congress put up their candidates. They only got 15 votes, 20 votes. And the election machinery declared that they were elected.
[9] As per the clause of the Assam Accord, the Central Home Ministry is the nodal ministry to implement the Accord. Therefore, the Home Ministry should come forward. For the last few years, the Home Ministry has not come forward with sincerity. So the implementation of the Assam Accord was delayed. On the other hand, there is an insurgency problem in the Northeast, which creates a lot of trouble. In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.
[10] In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.
[12] the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983, was scrapped by the Supreme Court and as per the Accord detection would be done on the basis of the Foreigners’ Act of 1946 which puts the onus of proving citizenship on the individual.
http://newindianexpress.com/nation/article586268.ece
குறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உடன்படிக்கை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சிதம்பரம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, தீவிரவாதம், தேசத் துரோகம், பாகிஸ்தான், மஹந்தா, மும்பை பயங்கரவாத தாக்குதல், மொஹந்தா, ராஜிவ், ராஜிவ் காந்தி, conversion, Indian secularism, Justice delayed justice denied
1947 மத-படுகொலைகள், அன்சாரி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, காங்கிரஸின் துரோகம், காந்தி கணக்கு, குண்டு, குண்டு வெடிப்பு, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தி ரெட் சாரி, தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, நேரு, மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதவாத அரசியல், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 8 Comments »
ஓகஸ்ட் 9, 2012
சோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு!
![Raged Sonia shows her colour](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/raged-sonia-shows-her-colour.jpg?w=450&h=304)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].
![The Real face of Sonia](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/the-real-face-of-sonia.jpg?w=450&h=337)
Initiating the discussion, Mr. Advani said UPA-II is illegitimate. “It has never happened in the history of India. Crores of rupees were never spent to get votes,” he said[2]. This evoked a sharp reaction from the Treasury Benches. UPA members were on their feet and demanded an apology from him.Intervening, Ms. Kumar said the word used by Mr. Advani had hurt the sentiments of everyone. “If you want, you can withdraw it,” she said. Or, she would go through the records and expunge any objectionable or unparliamentary word.
With the Congress MPs continuing their protest, the Speaker adjourned the House for lunch.
However, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government. |
இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.
ஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார். |
![SONIA_1_1170449g](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/sonia_1_1170449g.jpg?w=450&h=295)
அசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
![Real sonia exposed](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/real-sonia-exposed.jpg?w=450&h=382)
ஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:
- அசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.
- ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.
- அசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].
- சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
- கலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.
- சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].
- அதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.
- இது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
- பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.
- ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.
- இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.
இவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும்? அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.
![Sonia faces](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/sonia-faces.jpg?w=450&h=382)
சோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.
![Courtesy- Keerthana Dharavalli- facebook](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/courtesy-keerthana-dharavalli-facebook.jpg?w=450&h=337)
3 Congress ministers have orgainsed a relief camp for Assam victims. On the banner it is mentioned “ONLY FOR MUSLIMS”… Is this True “SECULARISM”. Y is it that congress calls BJP as “COMMUNAL”??? when Photographers clicked pics of banner, their cameras were broken into pieces..
http://www.facebook.com/photo.php?fbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்?
அத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.
![Muslims destroy Hindu houses in Bangladesh](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/08/muslims-destroy-hindu-houses-in-bangladesh.jpg?w=450&h=315)
அசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை?: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா? அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா?. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.
The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.
1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி, 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்!
குறிச்சொற்கள்:அசாம், அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊடுருவல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, தீவிரவாதம், தேசத் துரோகம், மொஹந்தி, ராகுல், ராஜிவ், Indian secularism, secularism
அடையாளங்காட்டிய சாட்சி, அரசியல், அவதூறு, இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இளமை சோனியா, உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சிகப்புப் புடவை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பங்களாதேஷ், மத வாதம், மதம், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மொஹந்தி, ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஏப்ரல் 30, 2012
நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!
சட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman, self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.
![Nithiyanantha as Junior pontif of Madurai Adhinam](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/04/nithiyanantha-as-junior-pontif-of-madurai-adhinam1.jpg?w=450&h=313)
விழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].
![Senior and Junior pontifs - news conference](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/04/senior-and-junior-pontifs-news-conference.jpg?w=450)
2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].
![swamiji-accepts-honor](https://secularsim.wordpress.com/wp-content/uploads/2012/04/swamiji-accepts-honor.jpg?w=450&h=158)
மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.
இந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.
“எனக்கு முழு அதிகாரம் உள்ளது‘ புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.
தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: “உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.
இந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:
கேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்?
பதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.
கே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா?
ப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.
கே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே?
ப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.
கே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்?
ப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.
கே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?
ப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.
கே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா?
ப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.
ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை?
குறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், ஆதீனம், ஆர்பாட்டம், இந்திய விரோத போக்கு, இந்து, இந்து கட்சி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்களின் உரிமைகள், இரவில் காமி, இளைய பட்டம், எதிர்ப்பு, கருணாநிதி, கலாச்சாரம், சம்பந்தர், சம்பிரதாயம், செக்யூலரிஸம், நித்யானந்தா, பகலில் சாமி, பட்டம், பரம்பரை, பாரம்பரியம், மடம், மடாதிபதி, மதுரை, ரஞ்சிதா, Indian secularism
அரசின் பாரபட்சம், அரசியல், அர்ஜுன் சம்பத், ஆதினம், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இரவில் காமி, கடவுள், கம்யூனிஸம், தாலிபான், திராவிட முனிவர்கள், தூஷணம், நக்கீரன், நித்தி, நித்யானந்தா, பட்டம், மடம், மடாதிபதி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மதுரை ஆதினம், மார்க்சிஸம், ரஞ்சிதா, வகுப்புவாத அரசியல், விழா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »