Archive for the ‘அடையாளம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

நவம்பர் 1, 2022

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலையில் மூவர் கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.

கன்னூர் மடாதிபதி வீடியோவை வைத்து காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –

  1. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
  2. கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
  3. மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்

ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].

போன்களை கைப்பற்றி உரையாடல்களையும் கேட்டு வபுலன் விசாரணை நடத்தப் பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம்  மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] தினமலர், கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம்: கைதான கல்லூரி மாணவி குறித்துதிடுக், Updated : நவ 01, 2022  09:24 |  Added : நவ 01, 2022  09:21.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3159346

[3] தினத்தந்தி, மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது, தினத்தந்தி அக்டோபர் 31, 2:59 am.

[4] https://www.dailythanthi.com/News/India/abbot-suicide-case3-people-including-a-college-student-were-arrested-826146

[5] தினத்தந்தி, ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம்இளம்பெண் பகீர் வாக்குமூலம், By தந்தி டிவி 31 அக்டோபர் 2022 2:16 PM

[6] https://www.thanthitv.com/latest-news/karnataka-bandemutt-swamiji-sucide-145746

[7] தினத்தந்தி கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல், நவம்பர் 2, 1:23 am (Updated: நவம்பர் 1, 10:18 am)

[8] https://www.dailythanthi.com/News/India/including-the-arrested-college-student3-people-in-police-custody-for-6-days-826808

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல், By Nantha Kumar R, Published: Sunday, October 30, 2022, 0:21 [IST].

[10] https://tamil.oneindia.com/news/bangalore/honeytrap-karnataka-lingayat-seer-suicide-case-bangalore-woman-and-2-others-arrested-by-police-482828.html

திடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம் தொடர் பயிலரங்கம்!

ஜூன் 10, 2020

திடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம்  தொடர் பயிலரங்கம்!

Kural new warriors June 2020

தென்னிந்திய படிப்பு மையம்: தென்னிந்திய படிப்பு மையம் [Centre for South Indian Studies[1]] என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டு, திடீரென்று திருக்குறளில் அபரிதமான காதலை வெளிப்படுத்தி இருப்பது புளகாங்கிதம் அடையும் வகையில் புல்லரிக்கிறது. 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் எங்களுக்கு, தென்னிந்திய படிப்பு மையம் என்று புதியதாக முளைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், இவர்களை நாங்கள் இந்திய வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, என IHC, SIHC, APHC, TNHC, THC, AIOC etc., எங்குமே பார்த்ததில்லை! திருக்குறளை கேவலப் படுத்தி, தூஷித்து, அசிங்கப் படுத்திக் கொண்டிருந்த போது, இவர்கள் எல்லோரும் எங்கிருதார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது பல்கலைக்கழகத்தில் “சைவ சித்தாந்த மாநாடு” நடந்தபோதும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது, குறள், வள்ளுவர் என்று கிளம்பி விட்டார்கள். ஏற்கெனவே சில கோஷ்டிகள், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி நாறடித்து விட்டார்கள். ஆகவே, இதன் பின்னணி என்ன என்று அறியப் படுத்த வேண்டும். 05-06-2020 அன்றே, “வள்ளுவரை, திருவள்ளுவரை, குறளை, திருக்குறளை எந்த விதத்திலும் வியாபாரம் செய்யக்கூடாது. வள்ளுவம் வணிகத்திற்கு அல்ல!” என்று பதிவு போட்டிருந்தேன்.

Centre for South Indian Studies, commercialization of Valluver-1

தென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி [Centre for South Indian Studies (CSIS)[2]]: தென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி என்ன என்று கேட்டபோது, சரியான பதில் கிடைக்கவில்லை. இணைதளத்தில் தேடி பார்த்த போது, இது ஒரு டிரஸ்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் கீழ்வருமாறு:

Centre Board of Trustees உறுப்பினர் பெயர் நிபுணத்துவம்
1 என்.சி.பிந்த்ரா [NC Bipindra[3]]

 

பத்திரிக்கையாளர்
2 மருத்துவர் சுப்பையா சண்முகம்

[Dr Subbiah Shanmugam[4]]

புற்றுநோய் நிபுணர்[5]
3 பி. சந்தீப் குமார் [Sandeep Kumar P[6]] பொருளாதாரம்-வணிகம்
4 அபிஷேக் டான்டன் [Abhishek Tandon[7]] வணிகவியல் பேராசிரியர்

இவர்கள் எல்லோருமே தத்தம் துறைகளில் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால், சரித்திரத்துடன் சம்பந்தப் படாதவர்களாக இருப்பது விசித்திரமாக இருக்கிறது. அவர்கள் சரித்திர ஆராய்ச்சி செய்யக் கூடாது என்பதில்லை, ஆனால், கடந்த 40-60 வருடங்களில் இவர்களது / அவர்களைச் சார்ந்த சித்தாந்திகளது பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை. தமிழகப் பல்கலைக் கழகங்களில் சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளார்களா, முறையாக சித்தாந்திகளை எதிர்கொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை. தமிழகம், தமிழக வரலாறு, தென்னிந்தியா சரித்திரம் என்பதில் எல்லாம் நிறைய நடந்துள்ளன. அந்நிலையில், விசயங்களை அறிந்தவர்களை விடுத்து, இப்படி புதியவர்களைப் போட்டிருக்கும் போக்கு புரியவில்லை. இப்பொழுது, “தொடர் பயிலரங்கம்” என்று ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் யாருக்கு பயிற்றுவிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Centre for South Indian Studies, commercialization of Valluvar-2

தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவதரித்த தினம் வைகாசி அனுசம் ஜூன் 5, 2020: இதுவரை, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்ற பெயரில் 2017லிருந்து, இந்துத்துவ வாதிகள் சேர்ந்து, ஒரு நிறுவனத்தை அமைத்து, விழாக்களை நடத்தினார்கள். 2017ல் விஜி சந்தோஷத்திற்கே, விசுவாசமாக எல்லீஸர் விருது வழங்கி, சந்தோசித்தார்கள்.  2018லும் கொண்டாடினார்கள். இதிலும் விஜி.சந்தோசம் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. 2019ல் தெரியவில்லை. இப்பொழுது, 2020ல் வேறு பெயரில் / இயக்கத்தின் கீழ் நடத்துகிறார்கள் போலும். ஆனால், இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்று அவர்களே சொல்கிறார்கள். குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர் – பேராசிரியர் மதுசூதனன் கலைச் செல்வன், என்ற பெயர் திகைப்பாக இருக்கிறது. இவர் ஏற்கெனவே இந்து-எதிர்ப்பு வாதங்கள், திரிபு விளக்கங்கள் முதலியவை செய்துள்ளது தெரிகிறது[8]. மேலும், காஞ்சி சங்கரச்சார்யா முதல் மற்ற ஆதினம் வரை போட்டோ எடுத்துக் கொண்டு, சமூக வளைதளங்களில் போட்டுக் கொண்டு, அதிரடி விளம்பரப் பிரியராக இருப்பதும் தெரிகிறது. இவரை யாரும் கேள்விக் கேட்கக் கூடாது, லேப்டாப்பை வைத்துக் கொண்டு, கதாகாலக்ஷேபம் செய்வதில், வித்தகராக இருப்பது பிரபலம். நவீனகால டூரிஸம் என்று ஐந்து நட்சத்திர பாணியில் “டூர்” நடத்துகிறார்கள்[9].

தேதி தலைப்பு பேச்சாளர்
ஜூன்.4 2020 வரலாற்றில் வள்ளுவர் தினம் கல்வெட்டு

எஸ். ராமச்சந்திரன்

ஜூன்.5 2020 வள்ளுவரின் அறக்கோட்பாடுகள் பேராசிரியர் கே.எல். மாதவன்
ஜூன்.6 2020 வள்ளுவரின் இறைக் கொள்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்
தெ.ஞானசுந்தரம் பதிலாக இவர் பேசினார். பேராசிரியர்

செ. ஜகந்நாதன்

இதில். கல்வெட்டு ராமச்சந்திரன் தவிர, மற்றவர்கள், தென்னாட்டு சரித்திரத்தில் என்ன ஆராய்ச்சி செய்தார்கள் என்று தெரியவில்லை. பொறுமையாக, இவர்கள் பேசியதைக் கேட்டு, குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, இக்கட்டுரையை எழுதுகிறேன். இவர்கள் அதை எப்படி முறையாக மறுப்பது, எதிர்ப்பது என்பதில்லாமல், அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! இதனால், யாருக்குப் பலன் என்று தெரியவில்லை.

Centre for South Indian Studies, commercialization of Valluvar-3

எஸ். ராமச்சந்திரன் சரித்திரத்தைச் சொன்னார்: ராமச்சந்திரன் மட்டும் தான் பிரச்சினையை அணுகியுள்ளார். 1969ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எவ்வாறு திருக்குறளுக்கு எதிராக வேலை செய்து வருகிறது என்று எடுத்துக் காட்டினார். உண்மையில் வைகாசி-அனுசம் அன்று வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட 1966ல் பிறப்பித்த அரசு ஆணை உள்ளது. 1966ல் இந்திய ஜனாதிபதி, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம், திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப் பட்டது. 1971ல் கருணாநிதி முதலமைச்சர் ஆனதும், இதனை மாற்ற முயன்றார். அந்த ஆணையை நீக்கி, புதிய அணையை பிறப்பிப்பதற்குப் பதிலாக, தை.2க்குப் பிறகு, திருவள்ளுவர் தினம் என்று அறிவித்து, கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. திருவள்ளுவர் கோவில் திருப்பணிக் குழுவுடன், திருவள்ளுவர் கோவில் நிலமீட்பு இயக்கமும் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால், வள்ளுவர் கோட்டம் என்று ஆரம்பித்து, திசைத் திருப்பப் பட்டது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அதற்குள், தெய்வநாயகம் கோஷ்டி எவ்வாறு, கருணாநிதியின் உதவியுடன் “திருவள்ளுவர் கிறிஸ்தவர், திருக்குறள் கிறிஸ்தவர் நூல்” முதலியவற்றை வெளியிட்டதையும் குறிப்பிட்டார்.

Prof Ram Nah NMadurai

ஜூம்ஜூம்  தொடர் பயிலரங்கம்!: இந்த கொரோனா காலத்தில், எல்லோருமே, பெரும்பாலும், இத்தகைய ஜூம்-கூட்டத்தை ஏற்பாடு செய்வது வழக்காமாகி விட்டது. இப்படி சிலர் பேசிக் கொண்டே இருப்பர், மற்றவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இதில் கேள்வி கேட்பது, பதில் சொல்வது முதலியன இல்லை. பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான். பிறகு யூ-டியூப்பில் போடுகிறார்கள். பொழுது போகவில்லை என்றால், ஏதோ, டிவி பார்ப்பது போல பார்க்கிறார்கள். ஆனால், படிப்பு, ஆராய்ச்சி, இதனால் பலன் என்றெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. விளம்பரம், காசு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். நோய் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. இவர்களால் மருந்து கொடுக்க முடியவில்லை. போதாகுறைக்கு, அந்நோயுக்கு சாதகமாக சிலவற்றை செய்து சென்று விடுகிறார்கள். அரசியல், அதிகாரம், குறிப்பிட்டத் தலைவரை ஆதரிப்பது என்ற ரீதியில் செல்லும் இத்தகைய தமாஷாக்களால், சிலருக்கு பலன் கிடைக்கலாம், ஆனால், பிரச்சினையை விட்டு விடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

10-06-2020

Madghu sudden interest in Tirukkural

[1] The so-called “Centre for South Indian Studies” appeared to have floated recently with not known persons like N.C.Bipindra, Subbaiah Shanumuga, Sandeep Kuma, Abhishek Tandon.

[2] Centre for South Indian Studies (CSIS) is a public charitable trust established in Delhi, engaged in academic study, research and analysis of economic, social, historical and political developments, both past and contemporary. CSIS commissions scientific research on various subjects and topics pertaining to South India, directly by its researchers and funds studies of interests that conform to its aims and objectives. It also motivates academicians and students to take up new research initiatives to rework on conventional narratives on South India to enable understanding these topics scientifically. Apart from organising research programmes, CSIS also brings out publications periodically and carries out social awareness programmes. CSIS regularly organises lectures, debates, panel discussions and talks on various subjects related to South India. We also organise seminars and workshops, as part of our academic activity. https://csisdelhi.com/about-centre-for-south-indian-studies/

[3] NC Bipindra has been a journalist for over two decades, writing and reporting on matters aerospace, defence and national security for two-thirds of that period. He has worked as the Defence Affairs Editor of a leading national daily newspaper and as the Chief Defence Correspondent of India’s premier news wire, establishing a strong relationship with politicians, government officials and the armed forces. While journalism has been a passion, Bipindra is also a qualified lawyer, with specialisation in Criminal and Civil laws, Arbitration and Intellectual Property Rights. He also has valuable experience as a serial entrepreneur. He is also a social media best-practices mentor to several individuals, including politicians and celebrities, business houses and social institutions.

[4] Dr Subbiah Shanmugam is a Surgical Oncologist and a Professor, with over 30 years of medical practice, of which 20 years have been spent teaching medical students. At present, he is the Head of the Department of Surgical Oncology at the Government of Tamil Nadu’s Kilpauk Medical College and Government Royapettah Hospital at Chennai. During his spare time, the medical doctor is involved in the activities of several professional organisations and social movements. Dr Subbiah is at present the Visitor’s (President of India) nominee in third Executive Council (2016-19) at the Central University of Tamilnadu, Tiruvarur, and an External Member of the Board of Studies for Super-Specialities, Rajiv Gandhi Medical University, Karnataka (2018-21). He was a National Executive member of Indian Association of Surgical Oncologists between 2014 and 2016.

[5] Oncology is a branch of medicine that deals with the prevention, diagnosis, and treatment of cancer. A medical professional who practices oncology is an oncologist.

[6] Sandeep Kumar P is a research scholar on Applied Economics and Business Management. He is also an active participant in various social movements. As a writer, he contributes to various journals on socio-political issues in English and Malayalam. He is a regular participant of Malayalam TV debates on issues pertaining to national importance. Sandeep is also member of various committees under Ministry of Human Resources Development and Ministry of Health, Government of India.

[7] Abhishek Tandon is currently working as an Assistant Professor in Shaheed Sukhdev College of Business Studies, University of Delhi. He received his PhD degree in Software Reliability and Marketing from Department of Operational Research, University of Delhi. He was awarded best Teacher award by Government of NCT of Delhi in 2016-17. He has published papers in the field of Reliability Modeling, Optimization theory, Forecasting and Marketing Research. He is a life member of the Society for Reliability Engineering, Quality and Operations Management (SREQOM).

[8] ஜூன் 14, 2019 அன்று திநகரில், “மிஸ்டிக் பல்மேரா” என்ற இடத்தில், கோவில்களில் கொக்கோக சிலைகள் என்ற தலைப்பில் பேசியபோது, கேள்விகள் கேட்டபோது, தடுக்கப் பட்டது. லிங்கத்தைப் பற்றி, வழக்கம் போல, “ஃபல்லிக்” என்றெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது.

 [9] Embassy Travel and Tours Pvt. Ltd, Mystery Palmyra போன்ற எலைட் அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன. செல்லும் இடங்களில் ஜாலியாக, 5-ஸ்டார் வசதியாக இருக்கலாம்.

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

ஒக்ரோபர் 27, 2019

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

Hindu has to donate 25,000 to muslim and christian trursts-news cutting

இந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘இந்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.

Hindu has to donate 25,000 to muslim and christian trursts

செக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

Hindu has to donate 25,000 -news cutting

மதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்திகளாக வந்திருக்கின்றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.

Richa Patel case July 2019

19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].

Richa Patel case - quran-July 2019

சமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும்? என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Richa Patel case - quran-distribution, July 2019

செக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்?: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.

© வேதபிரகாஷ்

27-10-2019.

Richa Patel case - quran-distribution, July 2019-news cutting

[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2397791&Print=1

[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019

[4] https://www.bbc.com/tamil/india-49013910

[5] The Hindu, Court ordeers Teenager to donate Quran over offensive Facebook post, PTI, RANCHI, JULY 16, 2019 21:20 IST, UPDATED: JULY 17, 2019 14:49 IST

[6] https://www.thehindu.com/news/national/other-states/donate-quran-courts-bail-condition-to-woman-arrested-for-offensive-post/article28491887.ece

[7] Indian Express, Donate Quran, court’s bail condition to Jharkhand woman arrested for offensive Facebook post targeting Muslims, Published: 16th July 2019 11:46 PM | Last Updated: 17th July 2019 12:51 AM.

[8] http://www.newindianexpress.com/nation/2019/jul/16/donate-quran-courts-bail-condition-to-jharkhand-woman-arrested-for-offensive-facebook-post-targeti-2004857.html

[9] Times of India, Ranchi court withdraws order to distribute Quran for bail over ‘communal’ FB post, Jaideep Deogharia | TNN | Updated: Jul 19, 2019, 13:29 IST.

[10] https://timesofindia.indiatimes.com/city/ranchi/ranchi-court-withdraws-order-to-distribute-quran-for-bail-over-communal-fb-post/articleshow/70267057.cms

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம்வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

Pondy Lit Fest -Tavleen singh, RAW, Kiran Bedi inaguration

சித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within-photo

வலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.

Pondy Lit Fest - left, right ideological struggle

வலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர்,  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.

Pondy Lit Fest -Tavleen singh, and others

சித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம்  முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.

Empty chairs, but no mind toaccommodate

தேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள்! இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா? அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within

வலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:

  1. சமூகத்தில் முற்போக்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  2. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  3. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.

சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது! காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது! நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது!

© வேதபிரகாஷ்

07-10-2019

Pondy Lit Fest -audience

[1] The Print, Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within, Abhijit Iyer-Mitra

Updated: 29 September, 2019 4:01 pm IST

[2] https://theprint.in/opinion/pondy-lit-fest-shows-indias-right-wing-has-more-disagreements-within/298483/

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)

 ABVP 2018 conference. arch-1st day

பள்ளி வளாகத்திற்கு செல்லும்  தெருவின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள வளைவு.

ABVP 2018 conference

ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகம்.

ABVP 2018 conference.banner atg ate

வாசலில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

ABVP 2018 conference.vivekananda entrance

வாசலில் வைக்கப் பட்டுள்ள விவேகானந்தர் சிலை.

சென்னையில் தேதிகளில் ஏபிவிபியின் 23வது மாநில மாநாடு: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவ-மாணவியர் அமைப்பு சார்பில் “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” என்ற தலைப்பில் பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் 23வது மாநில மாநாடு வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 225 கல்லூரிகளில் இருந்து 2,000 மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் பத்து மணி அளவில் கொடியேற்றத்துடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் துவங்கின. கே.ஆர். பரமசிவம் கண்காட்சி துவக்கப்பட்டது

ABVP 2018 conference. Chandra Kumar Bose-1st day

தமிழகமும், தேசியமும்: சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்தரகுமார் போஸ் கலந்து கொண்டு உரையாற்றினார், என்று குறிப்பிட்டாலும், அவர், போஸின் அண்ணனான சரத் சந்திர போஸின் பேரன் ஆவர். இவர் சுபாஷ் சந்திர  போஸுக்கும், தமிழகத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பைப் பற்றி விவரித்தார். போஸ் இந்திய தேசிய ராணுவம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபோது, 3,000 இளைஞர்களை, முத்துராம லிங்கம் அனுப்பி வைத்தார். இந்திய தேசியத்திற்கு, சுதந்திர போராட்டத்திற்கு, தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகம் தேசியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது.ஆகவே, தமிழகம் என்றுமே, இந்திய தேசியத்திற்கு எதிராக இருந்ததில்லை. காங்கிரஸ் போஸை, பல வழிகளில் அமுக்க பார்த்தது. அத்தகைய சதிகள் இல்லாமல் இருந்திருந்தால், போஸ் தான், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகி இருப்பார்.

ABVP Conference 2018- subbaiah

துவக்க விழா நிகழ்ச்சிகள், தீர்மானங்கள்: கோவா என்.ஐ.டி இயக்குனர் [Director, NIT, Goa] மாணவ-மாணவியர் எவ்வாறு நன்றாகப் படித்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். பல துறைகளில் மேம்பட்டு, தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினார். சுனில் அம்பேத்கர் ஏபிவிபியின் துவக்கம், வளர்ச்சி முதலியவற்றைப் பற்றி விவரித்தார். கடந்த 67 வருடகங்களில் கம்யூனிஸ இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்து கிடங்கும் நிலையில், ஏபிவிபி பிரியாமல் கட்டுக் கோப்பாக இருந்து வருகிறது. மருத்துவர் சுப்பையா சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் ஜாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறார்கள், ஆனால், இங்கு, 1200 மாணவ-மாணவியர் கலந்து கொண்டுள்ள நிலையில், அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதில்லை, அவர்களும் அதைப் பற்றி கவலைப்பட்டதில்லை. அதுதான் ஏபிவிபியின் பலம், என்று எடுத்துக் காட்டினார். காலை பத்து முதல் 12 வரை ஆரம்பவிழா நிகழ்ச்சிகளூக்குப் பிறகு, மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகள், உயர்கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு சார்ந்த  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

  1. தமிழகத்தில், கல்வித் துறையில் நடக்கும் ஊழல்.
  2. தமிழகத்தில், கல்விஇன் நிலை.
  3. கேரளாவில் நடக்கும்கொலைகள்.

இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளின் சிறு குறிப்பு கீழ் வருமாறு.

ABVP 2018 conference. Martialarts demo-1st day

இந்தியாவில் உள்ள மாணவமாணவியர் அமைப்புகள்: இந்தியாவில் பல மாணவ-மாணவியர் அமைப்புகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு அரசியல்கட்சியும் ஒரு மாணவ-மாணவியர் சங்கத்தை வைத்துள்ளது. இதில் காங்கிரஸைத் தவிர, மற்ற எல்லா குழுமங்களும், இந்திய தேசியத்தை எதிர்க்கும் சித்தாந்தங்கள் கொண்டவைகளாகத் தான் இருந்து வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் குழுமங்கள் அடக்கி வாசித்து வருகின்றன. இவற்றில் இந்தியாவை ஆதரிக்கும் குழுமம் என்றால் ஒன்றே ஒன்று அது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள மாணவ-மாணவியர் அமைப்புகள்:

Name of the organization / association Associated with
All India Students Federation (AISF) related to Communist Party of India
All Bodo Students Union (ABSU) Related to Revolutionary Communist of Bodolonand
All India Democratic Students Organisation (AIDSO) Socialist Unity Centre of India (Communist)
All India Revolutionary Students’ Federation (AIRSF) Communist Party of India (Maoist)
Akhil Bharatiya Vidyarthi Parishad  (ABVP) Constitutionally  Rastriya Swayamsevak Sang
All India Students Association (AISA) Communist Party of India (Marxist–Leninist) Liberation
Bahujan Samaj Student’s Forum (BSSF) Bahujan Samaj Party
Campus Front of India [CFI] Popular Front of India
Chhatra Bharati [CB] Third Front and Anna Hazare
Chin Student Association [CSA] No affiliation
Concern No affiliation
Kerala Students Union [KSU] Indian National Congress
MGJSM Student wing of the Jacobite Syrian Christian Church
MGOCSM Student wing of the Indian Orthodox Church
Mithila Student Union [MSU] No affiliation
Muslim Students Federation [MSU] Indian Union Muslim League
National Students Union of India [NSUI] Indian National Congress
Progressive Democratic Students Union [PDSU] Communist Party of India (Marxist-Leninist) New Democracy in Andhra Pradesh & Punjab
Radical Students Union [RSU] Communist Party of India (Maoist) in Andhra Pradesh
Students Islamic Organisation of India [SIOI] Jamaat-e-Islami Hind
Students’ Federation of India [SFI] Communist Party of India (Marxist)
Student Organisation of India [SOI] Shiromani Akali Dal
Trinamool Chhatra Parishad [TCP] Trinamool Congress
Twipra Students Federation A Nationalist students organisation of Tripura
National conference students union Jammu & Kashmir National Conference
West Bengal State Chhatra Parishad Indian National Congress

இவற்றில் பெரும்பாலானவை, இடதுசாரி சித்தாந்த இயக்கங்களை சேர்ந்தவையாக இருப்பதை கவனிக்கலாம்.

ABVP 2018 conference-Pramasivam exhibition

பேராசிரியர் கே. ஆர். பரமசிவம் நினைவாக கண்காட்சி: உள்ளே நுழையும் போது, ஒரு வளைவு வைக்கப் பட்டிருந்தது. கல்லூரி வாயிலிலும் வளைவு மற்றும் பேனர் இருந்தன. வாயிலுக்கு நேராக, விவேகானந்தரின் சிலை ஏபிவிபி கொடிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. வலது பக்கம் பேராசிரியர் கே.ஆர். பரமசிவம் [காவூரி ராமலிங்கம் அப்பல] கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மதுரைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் கே.ஆர். பரமசிவம்.  இவர் அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏபிவிபியின் துணைத் தலைவராக இருந்த அவரது 20 வது ஆண்டு நினைவாக, இக்கண்காட்சி வைக்கப்பட்டது. 28-03-1998 அன்று மதவெறியர்களால் தெருவில் படுகொலை செய்யப்பட்டார் பேராசிரியர் பரமசிவம் அவர்கள். இவர் கொலை செய்யப்பட்ட போது அன்று முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை[1]. பரமசிவத்தின் சகோதரர் எழுத்தாளர் நரசய்யா[2] அப்போது வேதனையுடன் ஒரு பத்திரிகையில் கூறினார்[3]: “ஏபிவிபியில் இருந்த ஒரே காரணத்துக்காக என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். யாருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யாதவன். நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்.”

© வேதபிரகாஷ்

27-02-2018

ABVP 2018 - K. R. Paramasivam 28-03-1998 murdered at Madurai

[1] 30-01-1988 முதல் 27-01-1989 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 2009ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.

[2] காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர்  ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக்  கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு  விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர்  வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில்  வசித்து வருகிறார்.

[3] http://www.tamilhindu.com/2009/03/professor-paramasivam-a-tribute/