Archive for the ‘அசைவம்’ Category

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

ஒக்ரோபர் 26, 2022

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு முதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].

பாலியல் புகார்போக்சோவில் வழக்குப்பதிவுகைதான மடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடாதிபதியை சந்தித்த ராகுல் காந்திஅடுத்த பிரதமராக ஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார்.  அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்கு வந்த இந்திரா காந்தி பிரதமரானார்; அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமரானார். தற்போது ராகுல் காந்தியும் வந்திருப்பதால் அவரும் நிச்சயம் பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.

05-09-2022 அன்று பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக‌ பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதுமதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2022.


[1] தினமலர், மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை மூன்று பக்க கடிதத்தில் பரபரப்பு, பதிவு செய்த நாள்: அக் 25,2022 00:02

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3153752

[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில் சாமியார் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணி என்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST

[4] https://tamil.news18.com/news/national/karnataka-lingayath-mutt-seer-basava-siddalinga-swami-dies-by-suicide-note-found-796801.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ரொம்ப மிரட்டுறாங்க.. கடிதம் எழுதி தூக்கிட்டு மடாதிபதி தற்கொலை.. கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி, By Nantha Kumar R, Updated: Tuesday, October 25, 2022, 15:30 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-kanchugal-bande-mutt-pontiff-basavalinga-swamy-suicide-after-writes-death-note-482143.html

[7] மாலை முரசு, ராகுல்காந்தி சந்தித்த மடாதிபதி போக்சோவில் கைது: மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் !!, Ramadevi, Sep 2, 2022 – 07:22; Updated: Sep 2, 2022 – 07:24

[8] https://www.malaimurasu.com/posts/india/Unidentified-person-entered-Indian-border

[9]  புதிய தலைமுறை, கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார்– 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, 01-09-2022 01.29 PM

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/146435/Karnataka-Sex-complaint-against-abbot-7-days-to-file-report

[11] தமிழ்.இந்து, கர்நாடகாவின் இளம் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2022 07:59 AM, Last Updated : 06 Sep 2022 07:59 AM

[12] https://www.hindutamil.in/news/india/861893-basavalinga-swamy-a-young-abbot-of-karnataka-commits-suicide.html

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

ஏப்ரல் 4, 2017

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்:  உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

Congress - calf and cow symbol

பசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.

Get sinned if one kills cow

முகமதியஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக்    கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

Anti-Gandhi pro-beef campaign

மாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது.     முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.

Anti-Gandhi pro-beef campaign-gandhi against beef

பிஜேபிக்காரர்கள் குழப்புகின்றனரா, குழம்பியுள்ளனரா?: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.

Gandhi againat cow slaughter

பசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.

Gandhi againat cow slaughter-MODI

பசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].

Cow slaughter-Act-implementation-violation

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

04-04-2017

Cow slaughter-Act-implementation-violation-in states

[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.. வேட்பாளரின் வாக்குறுதி!, Posted Date : 15:26 (02/04/2017); Last updated : 10:00 (03/04/2017

[2] http://www.vikatan.com/news/india/85204-bjp-candidate-campaign-against-beef-ban.html

[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/02170000/Give-me-your-vote-I-will-give-you-good-quality-beef.vpf

[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனேதரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.. வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/03225742/1077888/Am-against-cow-slaughter-says-BJP-candidate.vpf

[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST

[8]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9609759.ece

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ஒக்ரோபர் 16, 2016

 

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ravana-balaya-sri-lanka-fundamentalist-groupராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.

psdhivu-sri-lanka-16-10-2016இட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]:  “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதுஇலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].

ravana-balaya-sri-lanka-fundamentalist-group-jatayuகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்?: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.

dusshera-modi-sonia-pranab-etcமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].

प्रधानमंत्री नरेंद्र मोदी ने लखनऊ के ऐशबाग के रामलीला मैदान पर जय श्री राम के उद्घोष के साथ अपना भाषण शुरू किया। उन्होंने सभी को विजयादशमी की शुभकामनाएं दी। पीएम मोदी ने कहा कि यह मेरा सौभाग्य है कि मुझे अति प्राचीन कार्यक्रम में आने का सौभाग्य मिला। मुझे ने कहा कि विजयादशमी असत्य पर सत्य की विजय का त्यौहार है। हम रावण को हर वर्ष को जलाते हैं। रावण को जलाते समय हमें यह भी ध्यान रखना चाहिए कि हम अपने भीतर की व सामाजिक बुराइयों को भी खत्म करना चाहिए। விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.
मोदी ने कहा कि इस बार रामलीला का विषय आतंकवाद है। आतंकवाद मानवता का दुश्मन है। भगवान श्रीराम मानवता का प्रतीक है, वो आदर्शों का पालन करते हैं। आतंकवाद के खिलाफ सबसे पहले लड़ाई जटायु ने लड़ी थी, उसने एक स्त्री के सम्मान के लिए अत्याचारी से लड़ाई लड़ी थी। जटायु आज भी अभयता का संदेश देते हैं। साथ ही उन्होंने यह भी संदेश ‌दिया कि आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे। தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.
मोदी बोले आज आतंकवाद के कारण पूरा विश्व तबाह हो रहा है। हम सीरिया की तबाही की तस्वीर देख रहे हैं। आज जरूरी है कि पूरा विश्व आतंकवाद के खिलाफ एक हो। आतंकवाद के खिलाफ पूरी दुनिया को एक होना ही होगा। தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.
प्रधानमंत्री ने कहा कि आज पूरा विश्व गर्ल चाइल्ड डे मना रहा है। जब रावण ने एक सीता का अपहरण किया था तो हम लोग हर साल उसे जलाते हैं लेकिन आज मां के गर्भ में बेटियों की हत्या की जा रही है। हमें इस बुराई को मारना होगा। उन्होंने कहा कि घर में बेटा पैदा होता है ‌तो जश्न मनाया जाता है, अगर बेटी पैदा हो तो उससे भी बड़ा जश्न मनाया जाना चाहिए। आज हमें महिलाओं को बराबरी का अधिकार देना होगा। இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.

satan-mara-evil-etcமாரா, சாத்தான், எதிர்கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

16-10-2016

stoning-satan-hajj-ritual

[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம்! இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.

[2] http://www.pathivu.com/?p=90264

[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா? மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016  10:41 am

[4] http://tamil.adaderana.lk/news.php?nid=84482

[5] Economic Times, PM Narendra Modi’s Ravana terrorism comment draws ire in Sri Lanka, PTI, Updated: Oct. 14, 2016, 06.27 pm.

[6] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka/articleshow/54853192.cms

[7] Nai Dunia, मोदी के बयान से श्रीलंका में रावण के अनुयायी नाराज, Published: Fri, 14 Oct 2016 10:39 PM (IST) | Updated: Fri, 14 Oct 2016 10:42 PM (IST)

[8] http://naidunia.jagran.com/world-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka-835607

[9] The Hindu, Modi likens war on terror to killing of Ravan at Ramlila event, Updated: October 11, 2016 21:45 IST

[10] http://www.thehindu.com/news/national/other-states/live-modi-attends-ramlila-function-in-lucknow/article9208219.ece

[11] अमर उजाला, विजयदशमी पर बोले मोदी, आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे, टीम डिजिटल – लखनऊ, , Updated Wed, 12 Oct 2016 05:19 PM IST

[12] http://www.amarujala.com/lucknow/prime-minister-narendra-modi-in-lucknow

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

நவம்பர் 5, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

N Ram opposed - for food untouchability - 04-11-2015

N Ram opposed – for food untouchability – 04-11-2015

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்![1]: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை [03-11-2015] முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர். ஈழத்தில் 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம். மேலும், பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம். இவர்கள் இணைந்து நடத்தும் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை எதிர்க்கும் வகையில் இன்று மாலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

N Ram opposed - participating parties - 04-11-2015

N Ram opposed – participating parties – 04-11-2015

போராட்டத்தின் போது எம்.கே.நாராயணன், என்.ராமின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Beef politics enters The Hindu.1

Beef politics enters The Hindu.1

 

பார்ப்பன வெறியன் இந்து ராம்”, “மோடியின் கைகூலிஎன்றெல்லாம் கத்திய காம்ரேடுகள்: தமிழகத்திலிருந்து வெளியாகும் தி ஹிந்து பத்திரிகையினையும் என். ராமையும் கண்டித்து, ஹிந்து பத்திரிகை அலுவலகத்தினை முற்றுகையிட்டு “மே பதினெழு இயக்கம்” போராட்டம் நடத்தியது[2]. இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் உள்ளிட்ட தோழர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.  மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[3] என்று சிலர் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்திக்கொண்டிருந்தனர்.

  • “அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • “பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • ஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,
  • “உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  •  “பார்ப்பன வெறியன் இந்து ராம்”,
  • “பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,
  • “பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”
  • “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.

காம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை.

Beef politics enters The Hindu.2

Beef politics enters The Hindu.2

தனது முற்போக்கு முகமூடியை வைத்து ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனியத் தன்மை: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ‘மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது[4]. பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால், அசைவ உணவினை அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறது. மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல், மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிகையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை, தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது. இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.

Beef politics enters The Hindu.3

Beef politics enters The Hindu.3

இந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும், அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீதான தி ஹிந்து நிர்வாகத்தின் சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி தோழர்களால் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும், ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை” நாளை மாலை சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்துகிறார்கள். இந்த கருத்தரங்கத்தினை எதிர்த்து நாளை மியூசிக் அகாடமி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்[5].

Beef politics enters The Hindu.4

Beef politics enters The Hindu.4

மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடம் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை: 2009 யுத்தம் முடிவுற்றவுடன் “ஈழத்தமிழர்களை சித்திரவதை முஸ்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்”, என்று ராம் இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டார்களை கொடிப்படைய வைத்தது….என்றெல்லாம் “பதிவு” என்ற தளம் குறிப்பிடுகின்றது[6]. பாலச்சந்தன் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை போராளி என்றெல்லாம் பொய் செய்திகளை வெளியிட்ட ராம் என்றும் சாடியுள்ளது, இந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனைத்து தோழர்களும் கைகோர்ப்போம், – கட்சி, சாதி, மத இல்லை கடந்து ஒன்று கூடுவோம்”, என்கின்றது[7]. ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்களிடம், ஏன் இத்தகைய வேறுபாடுள்ளது என்பது புதிராக உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதும்; திராவிட சித்தாந்திகள், திராவிட சித்தாந்திகளை குறை சொல்வதும்; பெரியார் பெயரில் இயக்கங்கள் நடத்துபவர்கள் அடித்துக் கொள்வதும்; தமிழ்-தமிழ் என்பவர்களும் மாறுபட்டிருப்பதும் வேடிக்கையான விசயம் தான். மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடன் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை.

Beef politics enters The Hindu.5

Beef politics enters The Hindu.5

மாட்டிறைச்சி அரசியல் இந்துவில் நுழைந்து விட்டது!

Beef politics enters The Hindu.6

Beef politics enters The Hindu.6

காம்ரேடுகள் மோதிக் கொள்ளும் வினோதம்.

Beef politics enters The Hindu.7

Beef politics enters The Hindu.7

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] http://tamilsnow.com/?p=64166

[2] தமிழ்.வின், தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் முற்றுகை!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 04:27.33 PM GMT.

[3] http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2B.html

[4] http://tamilsnow.com/?p=63949

[5] http://tamilsnow.com/?p=63949

[6] பதிவு, எம்.கே.நாராயணன், தி இந்துவின் என். ராமிற்கு எதிராகப் போரட்டம், ஆர்த்தி, சென்னை, புதன், நவம்பர் 4, 2015: 02.52,தமிழீழம்.

[7] http://www.pathivu.com/?p=48964