Archive for the ‘இம்சை’ Category

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

நவம்பர் 6, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

Marxist beef eating propaganda

Marxist beef eating propaganda

கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம்: பிளவுபட்டு வேலைசெய்ய ஆரம்பித்த காம்ரேடுகள் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள, வரும் வரும்படியைப் பிரித்துக் கொள்ள, சங்கங்களை, சங்க உறுப்பினர்களை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள பலவித சித்தாந்தங்களை உருவாக்க ஆரமித்தனர். இவையெல்லாம், பொதுவாக ஒரு அல்லது பலவித எதிரியை / எதிரிகளை உருவாக்கி, அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது, நடக்க முடியாததை நடத்திக் காட்டுவேன் என்பது[1], போன்ற வாய்ஜாலங்களில் ஈடுபட்டே காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்தனர். நடக்காதவற்றிற்கும், தோல்விகளுக்கும், அந்த கற்பனை எதிரிகள் தாம் என்று குற்றஞ்சாட்டி வந்தனர். லெனின் கூறிய “சுயநிர்ணய உரிமை” என்றதை[2] குழப்பி, இந்திய மாநிலங்களில் பிரிவினைவாதத்தை வளர்த்து வருவது, அதே நேரத்தில் இந்திய தேசியத்தைப் பேசிவருவது முதலிவை அவர்களை வெளிக்காட்டியது. இதனால் கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம் போன்ற வாதங்களும் வழக்கில் தாராளமாக வந்தன.  இப்பொழுதும், அவர்கள் தங்களுக்குள் நடக்கும் சித்தாந்த மோதல்களுக்கு இத்தகைய பிரயோகத்தை செய்து வருகிறார்கள்[3].

COMMUNIST BEEF

COMMUNIST BEEF

பிரிவினைவாதங்களினால் வளர்ந்து, நீர்த்துப் போன கம்யுனிஸ்ட் குழுமங்கள்: சிப்தாஸ் கோஷ் போன்றோர், சிபிஐ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. ஜோஷி, ரணதேவ், ராஜேஸ்வர ராவ், அஜய் கோஷ் இவர்களிடையே இருந்த முரண்பாடுகளும் விவாதிக்கப்பட்டன. மார்க்ஸ் மற்றும் மாவோ சித்தாந்த மோதல்கள் பலவிதங்களில் வெளிப்பட்டன. மார்க்சிஸம்-லெனினிஸம் தான் சரியான தீர்வு என்றும் பேசப்பட்டது. 1969 [CPM (ML)] கல்கத்தாவில் உருவானது. கனு சன்யால் [ Kanu Sanyal] ஏப்ரல்.22, 1969 அன்று, அதாவது, லெனினின் பிறந்த நாள் அன்று, அக்கட்சியின் ஆரம்பத்தை அறிவித்தார். ஆனால், 1948ல் தொடங்கப்பட்ட எஸ்.யு.சி.ஐ தான்தான் இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று பறைச்சாட்டிக் கொண்டு வருகிறது[5]. அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கும் போது 1950 முதல் அவர்களது ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, 1970 – 80 ஆண்டுகளில் 10 சதவீத ஓட்டுகளை வைத்திருந்தது. அது 2004ல் 8 சதவீதமாக குறைந்தது. தற்போது 5 சதவீதம் மட்டுமே பெறும் என தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன், லோக்சபாவில் மூன்றில் ஒரு பங்காக 59 சீட்களை பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில். இந்தியா முழுவதும் 14-20 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 2014 பொதுத்தேர்தலில், 282 இடங்களை பிடித்து, பா.ஜ., ஆட்சி அமைத்த போது, கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது[6] எனலாம். இருப்பினும்ப் மூன்றாவது அணி என்றெல்லாம் கலாட்ட செய்து வருவார்கள். ஆனால், இப்பொழுது பிஹார் தேர்தலில் அவர்களை காணவில்லை, மாறாக, பசு-மாமிச விருந்து கலாட்டாகளை மற்ற மாநிலங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

FEMEN-ized communist propaganda posters-cow and milk

FEMEN-ized communist propaganda posters-cow and milk

தேசியமா, கூட்டாட்சியா, சுய-நிர்ணயமா – எடுபடாத சித்தாந்தங்கள்: யு.எஸ்.எஸ்.ஆர் பிளந்த பிறகு, அவர்களது சித்தாந்தம் உலக அளவில் நீர்த்துப் போய் விட்டது. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவிலும் அவர்களது ஆட்சி வீழ்ந்து விட்டன. இந்திய தேசீயம் என்று வந்தபோது, அவர்களது “பிரிந்து போகும் உரிமை” போன்ற வாதங்கள் எடுபடாமல் போய்விட்டன. திராவிடத் தலைவர்கள் பிரிவினையிலிருந்து, “மாநில சுயயாட்சி”க்கு வந்து, பிறகு, ஆரிய கட்சிகளுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, தேசிய நீரோட்டத்துடன் கலந்து விட்ட பிறகு, தமிழகத்திலேயே இவர்களது சித்தாந்தம் தேய்ந்து விட்டது. ராமமூர்த்தி எழுதிய ’’ஆரிய மாயையாதிராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’, திராவிடத்தால் வீழ்ந்தோம், முதலிய புத்தகங்கள், திராவிட சித்தாந்திகளை விட, காம்ரேடுகளைத்தான் அதிகம் பாதித்தன. இதனால், காஷ்மீர் மற்றும் தமீழீழம் பிரச்சினைகளை உசுப்பிக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிரபாகரன் கொலையுண்டு, திராவிடத் தலைவர்களின் நிலைப்பாடு வெளியானவுடன், “இந்துத்துவா”வை எதிர்த்து பிழைத்து வருகின்றன[7].

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

கம்யூனிஸ சித்தாந்தம் எப்படி இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் வேறுபடுகின்றன?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் [Communist Party of India[8]] பரிவாரத்தில் [AITUC, AIKS, AIYF, AISF, NFIW, BKMU] என்று பல அவதாரங்கள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)டின் Communist Party of India (Marxist) அங்கங்கள் [CITU, AIKS, DYFI, SFI, AIDWA, GMP] என்று பலவாறு செயல்பட்டு வருகின்றன. எஸ்.யு.சி.ஐ [Socialist Unity Centre of India (Communist), மற்றும் அதன் பாகங்களான [AIUTUC, AIMSS, AIDYO, AIDSO] முதலியவையும் சித்தாந்த ரீதியில் போராடி வருகின்றன. இதுதவிர, கத்தார் கட்சி (Communist Ghadar Party of India), நக்ஸல்பாரி எழுச்சி (Naxalbari uprising), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) [Communist Party of India (M-L)[9]], Liberation, புதிய ஜனநாயகக் கட்சி [New Democracy], ஜனசக்தி [Janashakti], மற்றும் PCC, 2nd CC, Red Flag, Class Struggle, Communist Party of India (Maoist), போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், இவை மொழி, இனம், சாதி போன்ற பிர்ச்சினைகளை உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்ற சித்தாந்திகளை ஆட்டிப் படைத்து வருகின்றன. தமிழ், தமிழினம், தமிழ்வெறி, தமிழகம், தமிழ்நாடு-தனி நாடு, தமிழ் ஆட்சிமொழி, தமிழீழம், ஆரிய-திராவிட இனவாதங்கள், பார்ப்பன, சமஸ்கிருத, இந்து-விரோத, நாத்திக வாதங்கள் என்று பலவற்றை வைத்துக் கொண்டு குழப்பி காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

DYFI beef eating Kerala

DYFI beef eating Kerala

என். ராம் மற்றும் தி இந்து மேல் திரும்பியது ஏன்?: தமிழகத்தில் இவர்கள், இதனால், இந்தியப் புரட்சி, தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சி, குடிநாயகம்-ஜனநாயகம், இந்தியதேசம்-தமிழ்தேசம், பார்ப்பனீயம், பார்ப்பன பயங்கரவாதம், கள்ளச்சாராயம்-நல்ல சாராயம், தனியார் கல்வி- அரசு கல்வி, இந்தி-தமிழ், தேர்தல் பாதை-திருடர் பாதை, புரட்சி பாதை – மக்கள் பாதை, கருவி போராட்டம், தமிழ் பாதுகாப்பு போராட்டம், தமிழ் ஆட்சி மொழி, வர்க்கம்-வர்க்க போராட்டம், என்றெல்லாம் பேசிக்கொண்டு தமக்குள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் இடதுசாரி சித்தாந்தங்கள் பொய்த்த பிறகு, மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கேற்றபடி திரிபுவாதக்கள் செய்து கொண்டிருப்பதால், எங்கும் எடுபடாமல், குழப்பவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலாளிகளை, வியாபாரிகளை, தொழிலதிபர்களை, நிலதிபர்களை, பண்ணையார்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டு பிழைத்து வரும் இவர்கள், எதையெதையோ பேச ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு மேலேயே சேற்றை இறைத்து வாரி, தங்களது பலவீனங்களை, சித்தாந்த வரட்சியை, போலிப் புரட்சித் தனத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

பீப்-ஈடிங் – பசு-மாமிசக்கறி தின்னும் ஆர்பாட்டம், போராட்டம் முதலியன: கம்யூனிஸ்ட் எந்த கறி சாப்பிடவேண்டும் என்று மார்க்ஸ், லெனின், மாவோ முதலியோர் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே, அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில், அவர்கள் இதைத்தான் சாப்பிடுவோம் என்று ஆர்பாட்டம் செய்யலாம் போராட்டம் நடத்தலாம், பீப்-உண்ணும் விழா நடத்தலாம். ஆனால், அதில் சமத்துவம், சமதர்மம், செக்யூலரிஸம் முதலியவைப் பின்பற்றப்படுகிறதா என்று காம்ரேடுகள் கவனிக்கவேண்டும். இப்பொழுது எல்லா மாநிலங்களிலும் அத்தகைய விருந்துகளை – பீப்-ஈடிங்-பசு மாமிசக்கறி தின்னும் – நடத்தி வருகிறார்கள்[10]. அதாவது, பிஜேபியை எதிக்கிறேன் என்று, இந்துக்களைத் தான் அவமதித்து வருகின்றனர்[11]. அதனால்தான், இந்துமதத்தலைவர், இது போல, நீங்கள் பன்றி மாமிசம் தின்னும் விழா நடத்துவீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆக, பிரச்சினையைத் தூண்டி விட்டு, கலவரமாக்கும் போக்கு, இவர்களிடம் தான் காணப்படுகிறது.

ommunism-political-ideologies-

Communism-political-ideologies-

© வேதபிரகாஷ்

06-11-2015

[1] ஏழ்மையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், சுரண்டலை ஒழிப்போம், விபச்சாரத்தை ஒழிப்போம் போன்றவை; அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை (வேலை கிடைக்கிறாதோ இல்லையோ)……

[2] Lenin, The Right of Nations to Self-Determination, Progress Publishers, Moscow, 1974.

[3] போலி கம்யூனிஸ்டுகள்: பாசிச ஜெயாவின் அடிமைகள்! – இவ்வளவு கேவலமான நிலைக்குப் போய் போலி கம்யூனிஸ்டுகள் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கான காரணம், இக்கட்சிகள் தமது வர்க்க அடித்தளத்தை இழந்து பிழைப்புவாதப் புதைசேற்றில் விழுந்து கிடப்பதுதான். புரட்சிகர அரசியலையும் சித்தாந்தத்தையும் கைவிட்டு நாடாளுமன்ற – சட்டமன்ற சாக்கடையில் விழுந்து புரள்வதற்குத் தீர்மானித்த காலத்திலிருந்தே இந்தப் பிழைப்புவாத நோய் அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது. பின்னர் படிப்படியாக அது முற்றத் தொடங்கி, வரலாற்றைப் படைக்கும் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வர்க்கப் போராட்டத்தையே கைகழுவிட்டு ஓட்டுக்கும் சீட்டுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காலை நக்கி ஆதாயமடைவதே அவர்களது இலட்சியமாகிப் போனது. http://www.vinavu.com/2014/04/08/cpi-cpm-slaves-of-jayalalithaa/

[4]  Shibdas Ghosh, Selected Works, Vol.II, Central committee – Socialist Unity Centre of India, Calcutta, 1992, p.220-221.

[5]  சிப்தாஸ் கோஷ், எஸ்.யு.சி..யே இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை, 1987.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=961946

[7]  இது உதாரணத்திற்காகக் கொடுக்கப்படுகிறது – இது தவிர பலவுள்ளன –  http://theekkathir.in/2015/11/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

[8] http://www.communistparty.in/

[9] http://www.cpiml.org/

[10] http://www.thehindu.com/news/national/karnataka/backing-cms-stance-left-activists-eat-beef-in-public/article7848635.ece

[11] http://www.thehindu.com/news/national/karnataka/left-activists-eat-beef-in-public-to-support-cm/article7846296.ece

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

நவம்பர் 5, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)!

N Ram opposed - for food untouchability - 04-11-2015

N Ram opposed – for food untouchability – 04-11-2015

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்![1]: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை [03-11-2015] முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர். ஈழத்தில் 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம். மேலும், பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம். இவர்கள் இணைந்து நடத்தும் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை எதிர்க்கும் வகையில் இன்று மாலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

N Ram opposed - participating parties - 04-11-2015

N Ram opposed – participating parties – 04-11-2015

போராட்டத்தின் போது எம்.கே.நாராயணன், என்.ராமின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Beef politics enters The Hindu.1

Beef politics enters The Hindu.1

 

பார்ப்பன வெறியன் இந்து ராம்”, “மோடியின் கைகூலிஎன்றெல்லாம் கத்திய காம்ரேடுகள்: தமிழகத்திலிருந்து வெளியாகும் தி ஹிந்து பத்திரிகையினையும் என். ராமையும் கண்டித்து, ஹிந்து பத்திரிகை அலுவலகத்தினை முற்றுகையிட்டு “மே பதினெழு இயக்கம்” போராட்டம் நடத்தியது[2]. இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் உள்ளிட்ட தோழர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.  மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[3] என்று சிலர் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்திக்கொண்டிருந்தனர்.

  • “அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • “பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  • ஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,
  • “உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,
  •  “பார்ப்பன வெறியன் இந்து ராம்”,
  • “பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,
  • “பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”
  • “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.

காம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை.

Beef politics enters The Hindu.2

Beef politics enters The Hindu.2

தனது முற்போக்கு முகமூடியை வைத்து ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனியத் தன்மை: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ‘மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது[4]. பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால், அசைவ உணவினை அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறது. மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல், மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிகையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை, தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது. இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.

Beef politics enters The Hindu.3

Beef politics enters The Hindu.3

இந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும், அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீதான தி ஹிந்து நிர்வாகத்தின் சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி தோழர்களால் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும், ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை” நாளை மாலை சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்துகிறார்கள். இந்த கருத்தரங்கத்தினை எதிர்த்து நாளை மியூசிக் அகாடமி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்[5].

Beef politics enters The Hindu.4

Beef politics enters The Hindu.4

மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடம் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை: 2009 யுத்தம் முடிவுற்றவுடன் “ஈழத்தமிழர்களை சித்திரவதை முஸ்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்”, என்று ராம் இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டார்களை கொடிப்படைய வைத்தது….என்றெல்லாம் “பதிவு” என்ற தளம் குறிப்பிடுகின்றது[6]. பாலச்சந்தன் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை போராளி என்றெல்லாம் பொய் செய்திகளை வெளியிட்ட ராம் என்றும் சாடியுள்ளது, இந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனைத்து தோழர்களும் கைகோர்ப்போம், – கட்சி, சாதி, மத இல்லை கடந்து ஒன்று கூடுவோம்”, என்கின்றது[7]. ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்களிடம், ஏன் இத்தகைய வேறுபாடுள்ளது என்பது புதிராக உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதும்; திராவிட சித்தாந்திகள், திராவிட சித்தாந்திகளை குறை சொல்வதும்; பெரியார் பெயரில் இயக்கங்கள் நடத்துபவர்கள் அடித்துக் கொள்வதும்; தமிழ்-தமிழ் என்பவர்களும் மாறுபட்டிருப்பதும் வேடிக்கையான விசயம் தான். மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடன் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை.

Beef politics enters The Hindu.5

Beef politics enters The Hindu.5

மாட்டிறைச்சி அரசியல் இந்துவில் நுழைந்து விட்டது!

Beef politics enters The Hindu.6

Beef politics enters The Hindu.6

காம்ரேடுகள் மோதிக் கொள்ளும் வினோதம்.

Beef politics enters The Hindu.7

Beef politics enters The Hindu.7

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] http://tamilsnow.com/?p=64166

[2] தமிழ்.வின், தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் முற்றுகை!, புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 04:27.33 PM GMT.

[3] http://www.tamilwin.com/show-RUmtzBTYSVfx2B.html

[4] http://tamilsnow.com/?p=63949

[5] http://tamilsnow.com/?p=63949

[6] பதிவு, எம்.கே.நாராயணன், தி இந்துவின் என். ராமிற்கு எதிராகப் போரட்டம், ஆர்த்தி, சென்னை, புதன், நவம்பர் 4, 2015: 02.52,தமிழீழம்.

[7] http://www.pathivu.com/?p=48964

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)?

நவம்பர் 3, 2015

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா,எனது உணவு எனது உரிமைஎன்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)?

Tiruvannamalai - beef eating progressive writers.7

Tiruvannamalai – beef eating progressive writers.7

கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்: இதுதான் போராட்டத்தின் லட்சணம், மற்றும் போலீஸாரின் நடவடிக்கை என்று தெரிகிறது. இதனிடையே தள்ளுமுள்ளு சம்பவத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களின் செல்போன், கேமராவையும் போலீசார் பறித்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், நியூஸ்-7 வீடியோவில் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தென்படுகிறது[1]. ஊடகக்கரர்களிடையே இடதுசாரி மற்றும் சித்தாந்தக்காரர்கள், அபிமானிகள் இருப்பதினால் தான், இத்தகைய முரண்பட்ட செய்திகள் வெளிவருகின்றன. போலீஸாருக்கும் ஊடகக்காரர்களுக்கும் நட்புள்ளது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ், அதாவது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை நிறுத்தி மொபைல் போனை திரும்ப கொடுக்க உதவினராம்[2]. இதனிடையே, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்து கைதான 55 பேர், உணவுத் திருவிழாக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தலைமையிலான 15 பேர் உள்பட மொத்தம் 70 பேரும் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

Tiruvannamalai - beef eating progressive writers.4

Tiruvannamalai – beef eating progressive writers.4

அனுமதி ரத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்[3]: மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்ச்சிக்கான அனுமதியை காவல் துறை ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே நிகழ்ச்சி நடத்த கூடியிருந்தவர்களிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர்.   தமிழ்நாட்டில் விரும்பியதைச் சாப்பிடுவதற்குக் கூட உரிமையில்லையா? மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.  அதை ஏற்க மறுத்த காவல் துறையினர், நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினர். பின்னர் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நரேந்திர மோடி ஆட்சியில் கருத்துரிமையும், உணவு உரிமையும் பறிக்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த போக்கு தலைதூக்குவது ஆபத்தான அறிகுறி. எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”, என்றார். இந்த அறிக்கையும் போலித்தனமானது என்று தெரிகிறது. கைதாகும் முன்னரே, கைது என்று “வால்போஸ்டர்” ஒட்டும் நிலைப்பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக, இதெல்லாம் திட்டமிட்ட செயல் என்றாகிறது.

thiruvannamalai beef-fest news cutting tamil

thiruvannamalai beef-fest news cutting tamil

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, திருவிழாவா, எனது உணவு எனது உரிமைஎன்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன?: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின? நடத்தப்பட்டது –

  1. விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழா
  2. ஊர்வலமா
  3. மாட்டிறைச்சி / பீப் சாப்பிடும் போராட்டமா,
  4. “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா

மேலே எடுத்துக் காட்டியுள்ளபடி, இது “முற்போக்கு”ப் போர்வையில், இடதுசாரி, தீவிரவாத கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் முதலிய சிசவப்புப் பரிவாரின் வேலைதான் என்றாகிறது. மேலும் “தி இந்து” இந்நிகழ்ச்சியைப் பற்றி அக்டோபர் 15, 2015 அன்றே செய்தி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது[5]. “பீப் விழா திருவண்ணாமலையில், நவம்பர்1ம் தேதி” [Beef fest in Tiruvannamalai on November 1] என்று தலைப்பிட்டு விவரங்களைக் கொடுத்துள்ளது[6]. சமைக்கப்பட்ட பீப்-மாமிசத்தைக் கொண்டு வந்து, அங்கு வருபவர்களுக்கு கொடுப்போம். மேடைமேலெ இருப்பவர்களுக்கும், மேடையில் இல்லாதவர்களுக்கு பரிமாறுவோம். கசாப்புக்காரர்களுக்கு விருது அளித்து பாராட்டி பேசுவோம், பாடுவோம் என்றெல்லாம் கர்ணா என்பவர் அறிவித்துள்ளதாக செய்தி தெரிவித்தது. அதாவது, காம்ரேடுகளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே தெரியும். “தி இந்து” ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழ். அதிலும், என். ராம், மிரியன் சாண்டி என்கின்ற கத்தோலிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ ஆதரவு செய்திகளும் இந்து குழும இதழ்களில் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன[7]. இப்பொழுது அவ்வாறே நிறைவேறியுள்ளது[8]. ஆனால், அதே “தி இந்து”, போலீஸார் பீப்-பிரியானி விழாவைத் தடுத்தனர் [] என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9].

மகஇக - மதிமாறன் போட்டோக்கள்.1

மகஇக – மதிமாறன் போட்டோக்கள்.1

கார்த்திகை மாதம் வருகின்ற நேரத்தில் ஏன்?: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன? முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா? எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள்? பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்பாடா? இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத்துவார்களா? மாட்டார்களே, அதனால் தான், இது இந்து-விரோத செயல், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செய்யப்படும் குரூர காரியம் என்று தான், திட்டவட்டமகத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

03-11-2015

[1] https://www.youtube.com/watch?v=VGdR-eey5jE

[2] After the intervention of a few members of the Tiruvannamalai sub-division police, who were familiar with the journalists, intervened the altercation ended with policemen returning the mobile phone of the reporter.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Rough-Up-Beef-Fest-Organisers/2015/11/02/article3109237.ece

[3] தமிழ்.வெப்.துனியா, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது: ஜி.ஆர்.கண்டனம், Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (01:34 IST)

[4]http://www.dinamani.com/tamilnadu/2015/11/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/article3109666.ece

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/beef-fest-in-tiruvannamalai-on-november-1/article7764260.ece

[6] Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) and Untouchability Eradication Front will be jointly organising a Beef Festival in Tiruvannamalai on November 1 to assert the right of citizens to choose their food. This event is organised in response to Dadri Killings in which a mob attacked a Muslim family in Dadri in the state of UP on 28 September on the suspicion that the family consumed beef and Mohammad Akhlaq of the family was killed in the attack. The Beef fest is to be organised in front of Anna Statue in Tiruvannamalai town, said S.Karuna, State Deputy General Secretary of the TNPWAA. He said that they would bring in cooked beef briyani and distribute it to participants on and off the dais and also eat there. Apart from serving the beef briyani, there would be poet reciting, cultural events and honouring of butchers, Mr.Karuna added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/beef-fest-in-tiruvannamalai-on-november-1/article7764260.ece

[7] The participation of N. Ram in a CBCI conference, presentation of paper there, the contonuous propagation of “thomas myth in India” by S. Muthaiah etc., have been pointed put many times. Yet, they contonue to spread such manufactured news with design to fool the gullible, naïve and meek Indians.

[8] A ‘beef biriyani’ festival organised by the Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) here on Sunday triggered tension with the police arresting around 50 participants.Defying police orders, the organisers had conducted the festival near Anna Statue in the town to register their protest against the growing intolerance towards the minorities and the oppressed in the country and the Dadri lynching incident. According to a TNPWAA office-bearer, the festival organisers wanted to assert the right of the people to choose their food. A poetry reading session was conducted at the venue where butchers were honoured and participants served beef biriyani.However, the police denied permission for the event and pasted notices on the doors of the TNPWAA office here intimating them of the same. But the organisers continued to request the police to get some sort of relief viz. permission to hold festival without serving the beef there or conduct the festival at an alternative venue. With the police not budging, the organisers decided to defy the ban.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cops-prevent-beef-biriyani-festival-in-tiruvannamalai/article7831369.ece

[9]  The Hindu, Cops prevent beef biriyani festival in Tiruvannamalai, A. D. Balasubramaniyam, Tiruvannamalai, November.2, 2015;  Updated: November 2, 2015 08:35 IST.

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)?

நவம்பர் 3, 2015

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா,எனது உணவு எனது உரிமைஎன்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)?

Tiruvannamalai - beef eating progressive writers.1

Tiruvannamalai – beef eating progressive writers.1

திருவண்ணாமலை என்றாலே, பிரம்மாண்டமான அண்ணாமலையார் கோவில், தீபம், கிரிவலம், ரமண மகரிஷி, ரமணாஸ்ரம், சேஷாத்ரிநாத ஆஸ்ரம், விசிரி சாமியார், ராம்சூரத்குமார் ஆஸ்ரம் என்றெல்லாம் தான் நினைவில் வரும். ஆனால், “முற்போக்கு” என்று பறைச்சாற்றிக் கொண்டு ஒரு கூட்டம் கலவரநிலையை உண்டாக்கி இருப்பது, அதிலும் நடுரோடில் உட்கார்ந்து கொண்டு மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாடுகிறோம் என்று செய்திருப்பது, அந்த புண்ணிய ஸ்தலத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியதாக உள்ளது. மேலும், திருவண்ணாமலை மற்றும் மாவட்டம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. சுமார் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது. அதாவது, அத்தனை கறவை மாடுகள் இங்குள்ளன. இந்நிலையில், அவ்விடத்தைத் தேர்த்ந்டுத்து, மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாட திட்டமிட்டடு ஏன் என்று தெரியவில்லை. விளம்பரம் வேண்டும் என்றால், சென்னையிலேயே செய்திருக்கலாம். ஆனால், திருவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால், இதன் பின்னணியை அலச வேண்டியுள்ளது. தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட, முரண்பட்ட செய்திகளைக் கொடுத்துள்ளன.

Tiruvannamalai - beef eating progressive writers.2

Tiruvannamalai – beef eating progressive writers.2

போலீஸார் அனுமதி மறுத்தது, சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தது: திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் [Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) ] சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது[1] என்கிறது மாலைமலர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் நவம்பர் முதல் தேதி அன்று கருத்தரங்கத்தை நடத்த இருந்தனர்[2] என்கிறது தமிழ்.வெப்.துனியா. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்[3] என்கிறது மாலைமலர். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது[4] என்கிறது புதிய தலைமுறை.  பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது[5] என்கிறது நியூஸ்.7. போலீஸார் அனுமதி மறுத்ததுடன், அதனை வாங்காமல் இருந்ததால் அதனை அவர்களது அலுவலகத்தின் கதவுகளில் ஒட்டப்பட்டது[6]. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்[7].  இதனால் நேற்று அண்ணா சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்க வந்திருந்தனர். ஆக அவர்களது பங்கு இதில் என்னவாக இருக்க முடியும்?

Tiruvannamalai - beef eating progressive writers.3

Tiruvannamalai – beef eating progressive writers.3

உள்ளே கருத்தரங்கம் என்று வெளியே மாட்டிறைச்சி சாப்பிட்டது: 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப் போவது “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா”, திருவிழாவா, அல்லது “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கமா என்பதனை ஊடகங்கள் குறிப்பிட முடியவில்லை. இதனால், ஏற்பாடு செய்தவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றாகிறது. முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது, முறைப்படி அனுமதியளிக்கப் பட்டது, பிறகு மறுக்கப் பட்டது, என்பதெல்லாம் அதனை உறுதி செய்கிறது. மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்துகிறோம் என்று அனுமதி வாங்கி விட்டு, பிறகு தெருவில் வந்து “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்” என்று மாறியதால் தான், இந்நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, முதலில் போலீசார் சாதாரணமாக இருந்ததும், பிறகு, தெருவில் மாட்டிறைச்சி பொட்டலங்கள் கொடுத்து சாப்பிடும் போது தான், உண்மை அறிந்து பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, “கேரளா பவன்” போன்றதை, இங்கும் நடத்தி பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது தெரிகிறது.

Tiruvannamalai - beef eating progressive writers.5

Tiruvannamalai – beef eating progressive writers.5

திருவிழாவா, ஊர்வலமா?: கருத்தரங்கம் நடத்த வேண்டியவர்கள் தெருவிற்கு வந்தனர். திருவண்ணாமலையில், பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலை சந்திப்புகள் எப்பொழுதும் போக்குவரத்துடன் இருக்கும் என்பது தெரிந்த விசயமே. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட வேண்டும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், இதனால், விளம்பரம் பெறவேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாகிறது. அதனால் தான், தடையை மீறி திருவிழா நடத்த முடிவு செய்த நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு பெரியார் சிலை எதிரே திரண்டனர். அங்கிருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். அதாவது, ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஏற்கெனவே விண்ணப்பதிற்கேணானுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  எனவே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].

Tiruvannamalai - beef eating progressive writers.6

Tiruvannamalai – beef eating progressive writers.6

மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக……!: இப்படி சொல்லும் போதே, தெரிந்து விடுகிறதே. மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக பெரியார் சிலை அருகே வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து மாட்டிறைச்சியை சாப்பிட தொடங்கினர். உடனே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைதாகாமல் இருப்பதற்காக அங்கிருந்து சென்றனர்[9]. இவ்வாறெல்லாம் இவர்களுக்கு பயற்சி அளிப்பது யார்? அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாரால் சிலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கருணா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்கிறது இந்நேரம்[11]. இப்படி 50, 55, 70, 100 என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே? எண்னுவதற்குக் கூடவா இவர்களுக்குத் தெரியாதா என்ன?

© வேதபிரகாஷ்

03-11-2015

[1]மாலைமலர், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: 50 பேர் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 02, 11:03 AM IST.

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-sudden-cancel-of-beef-eating-program-cpm-officials-arrested-115110100038_1.html

[3] http://www.maalaimalar.com/2015/11/02110352/Struggle-in-Tiruvannamalai-eat.html

[4]  புதிய தலைமுறை, மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்கு அனுமதியளித்துவிட்டு பின்னர் நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை, பதிவு செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:43 AM; மாற்றம் செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:59 AM.

[5] http://ns7.tv/ta/beef-eating-festival-tabloid-tiruvannamalai.html

[6] However, the police denied permission for the event and pasted notices on the doors of the TNPWAA office here intimating them of the same. But the organisers continued to request the police to get some sort of relief viz. permission to hold festival without serving the beef there or conduct the festival at an alternative venue. With the police not budging, the organisers decided to defy the ban.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cops-prevent-beef-biriyani-festival-in-tiruvannamalai/article7831369.ece

[7] http://www.puthiyathalaimurai.tv/tn-police-blocked-the-beef-eating-ceremony-246642.html

[8]  தினமணி, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல், By  திருவண்ணாமலை, First Published : 02 November 2015 02:57 AM IST.

[9] http://www.dailythanthi.com/News/Districts/Tiruvannamalai/2015/11/01230708/50-people-arrested-in-the-struggle-to-eat-beef-Tiruvannamalai.vpf

[10]  தினத்தந்தி, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST; பதிவு செய்த நாள்:ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST.

[11] http://www.inneram.com/news/tamilnadu/5008-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

திக படம் - பசுவதையா, மனித வதையா

திக படம் – பசுவதையா, மனித வதையா

அக்டோபர் 26ம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இவ்விவகாரம் திட்டமிட்டதா?: அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. பத்தாண்டுகள் கழித்து அதே அக்டோபர் 26 அன்று இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக, இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக, இதெல்லாம் பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்று மற்றவர்கள் கணிப்பார்கள். ஆனால், உண்மையில் இதனால் யார் லாபமடைகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி என்று முன்னர் பிரச்சினை செய்தவர்கள் யார் என்று பார்த்தால், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்கள் மற்ற இவர்களுடன் தொடர்பு கொண்ட குழுக்கள், இயக்கங்கள் என்பதனை கவனிக்கலாம். மாணவர்களிடையே, பிரிவு, வெறுப்பு, துவாசங்களை உருவாக்கவே, அவர்கள் செய்து வருகிறார்கள். ஏ.பி.வி.பி வருகிறது, வளர்ச்சியடைகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், சரஸ்வதியை எதிர்ப்பது, பசுமாமிசம் உண்ணுவதை ஆதரிப்பது என்ற முறைகளில் தடுத்துவிட முடியாது.

கோமாதா படம்

கோமாதா படம்

எதை வேண்டுமானாலும் உண்ணுவோம், அதை கேட்க நீ யார்?: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார்? என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா? கருத்தரங்கங்கள் நடத்துவார்களா?

கோமாதா - தெய்வமாக மதித்தல்

கோமாதா – தெய்வமாக மதித்தல்

தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு பொறுத்தவரையில் மாடு என்பது தான் சகலமும்: சங்காலத்திலிருந்தே ஆநிரை, மாடுகள் முதலியன தெய்வீகமாக, செல்வமாக, சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. “கோ” என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் மற்றும் அதிலிருந்து பல வார்த்தைகளும் உருவாகின. கோ என்றால் தலைவன், அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. பசுக்களை வளர்ப்பவர்கள், காப்பவர்கள் என்று ஆயர், கோவலர். இடையர், பூழியர், குடவர் என்று பல பக்கள் குழுமங்கள் இருந்தன. பசுக்கள் செல்வமாகக் கருதப் பட்டதால், அப்பொழுது அவற்றைக் கவர்வது, திருடுவது என்ற பழக்கம் இருந்தது. இதனால், ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பறு புலவர்கள் தங்களது பாடல்களில் அவற்றை விவரித்துள்ளனர். பசுக்களை காக்கும் ஆயர்களுக்கும், அவற்றைக் கவரும் மழவர், மறவர், எயினர், வேடர் போன்றோருக்கும் சண்டை, போர் நடந்ததை சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்.  “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”, என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து அதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம். இடைக்காலத்தைய இலக்கியங்களும் அவ்வாறே மதித்து வந்தன.

ஆநிரை கவர்தல் - காத்தல்

ஆநிரை கவர்தல் – காத்தல்

இடைக்காலத்தில் ஆநிரை காப்பது: ‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைப்பட்டனர், பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கப்பட்டன. செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர், அதாவது, ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் / செரு புரியும் கோவலர்கள், கோ-காவலர்கள், கோரகக்ஷ்கர்கள் ஆனார்கள். ஆகவே, ஆநிரை காத்தல் என்பது தமிழரின் அறம் மட்டுமல்லாது கடமையும் ஆகும். குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி என்னும் ஊரின் மிக அருகில் உள்ள வங்கட்டூர் என்ற ஊரில் நடுகற்கள் துரைசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து நான்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.. இந்த நடுகற்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரனும், சுந்தரசோழனின் மூத்த மகனுமான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனால் படைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு நடுகற்களில் இரண்டு பழங்கால போர் பற்றிய செய்தியினை தருகின்றது. அதாவது ‘ஆநிரை காக்கும் பூசலில்’ இறந்துபோன தந்தை தின்மச்செட்டி மற்றும் அவரது மகன் சாத்தையன் பற்றி குறிக்கின்றது[1].

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு[2]: 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் “ஆநிரை மீட்ட வீரக்கல்.’ இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது[3].

ஆநிரை காத்தல் - தெய்வமாக மதித்தல்

ஆநிரை காத்தல் – தெய்வமாக மதித்தல்

இக்காலத்தைய நிலைமை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 – 1898 ஜூலை 5) 19 ஆம் நூற்றாண்டில் புலால் உணவுக்காக பசுக்கொலை செய்து மாமிசம் உண்ணும் ஆங்கிலேயர்களின் கொடுமையை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நூறு பாடல்கள் கொண்ட, “ஆங்கிலியர் அந்தாதி” என்று பாடினார். இவ்வாறிருக்கும் போது, “தமிழர்கள்” என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், இவற்றையெல்லாம் மறைத்து, மறந்து ஏதேதோ பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், தங்களை கவிக்கோ, பெருங்கவிக்கோ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுமாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள், பிறகு எப்படி, ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்?

1966 anti-cow slaughter rally Delhi.6

1966 anti-cow slaughter rally Delhi.6

1966ல் தில்லியில் நடைப்பெற்ற பசுவதை எதிர்ப்பு பேரணியும், சாதுக்கள் கொல்லப்பட்டதும்: இந்தியாவில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டி இந்துக்கள் பல காலமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 7, 1966 அன்று “கோபாஸ்டமி” என்று கொண்டாடப்படும் தினத்தன்று சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும் பசுவதையை தடை செய்யக் கோரி குரல் எழுப்பினார், இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார்[4]. சாதுக்களின் பேரணி பாராளுமன்றைத்தை நோக்கிச் சென்றபோது, பேரணி மீது அப்போதைய இந்திரா காந்தி அரசின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எட்டு சாதுக்கள் பலியானார்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், தில்லியில் இருந்த காமராஜர் வீடு தாக்கப்பட்டது. இதற்காக சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தீர்த்தர், சுவாமி பர்பத்திரி, மஹாத்மா ராமசந்திர வீர் முதலியோர் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டர். மஹாத்மா ராமசந்திர வீர் 166 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா இதற்காக பொறுபேற்று ராஜினாமா செய்தார். ஆனால், தமிழகத்தில் இவ்வுண்மைகளைச் சொல்வது கிடையாது. மாறாக, நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் (ஏனெனில் அவர்கள் எழுதும் விதத்திலேயே அதனை வெளிப்படுத்துக் கொள்கின்றனர்[5]) இதைக்கூடத் திரித்து எழுதுகிறர்கள் என்பதை கவனிக்க வேண்டும்[6].

1966 anti-cow slaughter rally Delhi.1

1966 anti-cow slaughter rally Delhi.1

சென்னையில் நடைப்பெற்ற போராட்டங்கள்: ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது. சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

1966 anti-cow slaughter rally Delhi.3

1966 anti-cow slaughter rally Delhi.3

© வேதபிரகாஷ்

31-10-2015

[1] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/03/22223735/Planting-defense-appeal-to-remain-in-a-state-of-near.vpf

[2] தினமலர், ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு, செப்டம்பர்.5, 2014.02.34.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1062756&Print=1

[4] In his letter, written in 1966 to the then Prime Minister, Mrs. Indira Gandhi of 1966, Lok Nayak Shri Jaya Prakash Narayan wrote that “ For myself, I cannot understand why, in a Hindu majority country like India, where rightly or wrongly, there is such a strong feeling about cow-slaughter, there cannot be a legal ban”. A copy of the letter is annexed and marked as Annex I (4). http://dahd.nic.in/ch1/chap1.htm#item13

[5] http://www.unmaionline.com/new/2486-euthanasia-cow-human-euthanasia.html

[6] http://subavee-blog.blogspot.in/2015/03/2.html

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

Beef politics - Kerala, WB and Delhi CMs

Beef politics – Kerala, WB and Delhi CMs

என்ன சொல்கிறது டெல்லி போலீஸ்?: இந்த சோதனை குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, “இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா ஒரு புகார் அளித்தார். அதில், டெல்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதால் கேரளா இல்லத்துக்கு போலீஸ் படை விரைந்தது. இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீஸ் படைகள் அங்கு சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது” என்றார். போலீஸாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையினை செய்தார்கள் என்றுதான் ஆகிறது. கேரளா பவனில் போலீஸ் கூட அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய வேண்டும் போன்ற வாதங்கள் அபத்தமாக உள்ளன.

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து இருக்கிறார்களா?: கேரளாவில் பிஜேபி மற்றும் ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தையும் நெருங்கி வர முயற்சியில் ஈடுபட்டுள்ள விஸ்வநாத் என்பவர் தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது[1]. ஆனால், அவரோ “சில நண்பர்கள் ஒரு படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதனை நான் என் பேஸ்புக்கில் போட்டேன். அது இந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. சிபிஎம் தலைவர் பினாராய் விஜயன் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான் எனக்குத் தெரியும். எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை”, என்கிறார்[2].  இப்பொழுது மார்க்சிஸ்ட் ஏம்.பிக்களும் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிகிறது.

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

மூன்று மாநில முதல்வர்கள் பீப் பிரைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்[3]: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதற்கு கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்[4].  இம்மாநிலங்களில் தடையில்லை (கேசரிவால் தவிர) என்பதினால் இவர்கள் அவ்வாறு பேசியுள்ளனர் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில், போலீசார் முறையான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்றும் கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கேரளா பவனில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  “டெல்லியில் உள்ள கேரளா பவனில் நடைபெற்ற சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமையை கைப்பற்றுவதற்கான விவேகமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற முயற்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றையே இந்த நடவடிக்கை உணர்த்துகின்றது” என்று டுவிட்டரில் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் இதுதொடர்பாக கூறுகையில், பாரதிய ஜனதாவின் அழுத்தம் காரணமாக கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர். டெல்லியில் மாட்டிறைச்சிக்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கேரளா பவனில் போலீசார் சோதனை செய்த சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். கேரளா பவன் அரசால் கொண்டுவரப்பட்டது, ஓட்டல் கிடையாது என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். டெல்லி போலீஸ் கேரளா பவனுக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். டெல்லி போலீசும் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா போன்று நடந்துக்கொள்கிறது. டெல்லி அரசு பவனில், கேரள மாநில முதல்-மந்திரி, மோடிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் பிடிக்காத பொருளை சாப்பிட்டார் என்றால், போலீசார் அவரை கைது செய்துவிடுவார்களா? என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை முதல் டெல்லி கேரளா பவனில் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது[5].

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம்[6]:  தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்து வருகின்றன. இந்த தடைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றன. இருப்பினும், இது பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், அரசியலாக்கப்பட்டும் வருகிறது. மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம் எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்த தடையை காரணமாக வைத்து சிவசேனாவும், வழக்கம் போல் பா.ஜ.,வை விமர்சித்ததுடன், இறைச்சி தடையை அரசியலாக்கியது. இந்நிலையில், ஜெயின் மதத்தவர்களின் திருவிழா காலத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஆட்டிறைச்சி, கோழி விற்பனைக்கும் மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. குஜராத்தும் தடை விதித்தது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையை இது மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Beef eating party politics - Jammu-kashmir

Beef eating party politics – Jammu-kashmir

புலால் உண்பவர்களின் நிலை[7]: காஷ்மீர் அரசும் இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினரும், பிரிவினைவாத இயக்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் செப்., 11. 2015 அன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். சத்தீஸ்கர் அரசும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டதால் செப்டம்பர் 11 ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் சத்தீஸ்கர் அரசு தெரிவித்தது. இந்த தடை அசைவ பிரியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த தடையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுவழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சைவத்தையும் திணித்து வருவதாக அரசியல் கட்சிகள் புதிய தாக்குதலை துவக்கி உள்ளன.

Beef eating party politics- good or bad

Beef eating party politics- good or bad

மிருகவதை, ஜீவகாருண்யம், அஹிம்சை பற்றி பொய்யான விளக்கங்களைக் கொடுப்பது: பீப், பசுமாமிசம் உண்ணுவது பற்றி, அளவுக்கு அதிகமாக, அதன் உரிமை கோருபவர்கள், வெளிப்படையாக செய்து வருகிறார்கள். அதைப்பற்றி திரித்தும் எழுதி வருகிறார்கள்[8]. அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு, என்று அத்தகைய திரிபுவாதங்கள் கூருகின்றன. பௌத்தம் உயிர்க்கொலையை மறுக்கவில்லை, தடுக்கவில்லை. புத்தரே 81 வயதில் பன்றி கறி சாப்பிட்டதால் தான் உயிழக்க நேர்ந்தது[9]. பௌத்தர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்களே. விவசாயம் இல்லாமல் இருந்திருந்தால், யாருக்கும் உணவு கிடைத்திருக்காது. இந்தியர்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவர்கள் என்ற சரித்திரத்தை மறைத்து இவர்கள்வைத்தகைய கதைகளைக் கட்டி வருகிறார்கள். டி. என். ஜா போன்றவர்களும் சரித்திர உண்மைகளை பாதியாக, அரைகுறையாக வெளியிட்டு குழப்பி வருகிறார்கள். அதனைத்தான் மற்ற சித்தாந்திகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்[10]. அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களின் உயிர்க்கொலைகளைப் பற்றி, அத்தகைய சடங்குகளைப் பற்றி பேசுவது-விவாதிப்பது-எழுதுவது கிடையாது.

© வேதபிரகாஷ்

31-10-2015

[1]  The New Indian Express, Friends sent me photo of Kerala House menu, I put it on Facebook Man who played role in BJP-SNDP tie-up now finds himself at centre of row, Written by Liz Mathew, Delhi,  Updated: October 28, 2015 5:18 am.

[2] http://indianexpress.com/article/cities/delhi/friends-sent-me-photo-of-kerala-house-menu-i-put-it-on-facebook/

[3] http://www.telegraphindia.com/1151028/jsp/frontpage/story_50068.jsp#.VjAtptIrJdg

[4] மாலைமலர், மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனைஉம்மன் சாண்டி, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம், பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 4:24 PM IST

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டெல்லி கேரளா பவனில் நாளை முதல் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும்..., Posted by: Mathi Updated: Tuesday, October 27, 2015, 19:34 [IST]
Read more at: http://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.htmlhttp://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.html

[6] தினமலர், இறைச்சி அரசியல்‘: பல மாநிலங்களில் தொடரும் தடை, செப்டம்பர்.11, 2015: 12.06. [IST].

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1339869

[8] http://www.vinavu.com/2015/04/15/beef-ban-brahminical-double-speak/

[9] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s
image
, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.
343-354.

[10] http://www.vinavu.com/2012/05/12/myth-of-the-holy-cow/