Archive for the ‘சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு’ Category

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஏப்ரல் 23, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

boston-marathon-suspects

குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.

Boston bomber - a believer of Islam

தேசபக்திநாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tamerlan Tsarnaev as a boxer

பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.

Boston-Marathon-bombing-suspect-No.-2-in-crowd

வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

boston-marathon-bombing-injuries-hard-to-treat-shrapnel

கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Location of boston_marathon bombings

தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.

Boston bomber - hiding in a boat aerial view

சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.

Boston-marathon-bombing-suspect-dzhokhar-tsarnaev-captured

விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

boston blast victim a woman

குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

1)       April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2)   April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.

3)   April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.

4)   April 18, shortly thereafter – SUV driver released unharmed.

5)   April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.

6)   April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.

7)   April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;

Dzhokhar is found hiding in a stored boat and taken into custody.

இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும்  பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

வேதபிரகாஷ்

22-04-2013


[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html

[5] தினமலர், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2013,07:49 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2013,08:55 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694915

இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!

மே 18, 2010
இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!
முதலிடம் பின்லாடன், மூன்றாமிடம் தாவூத் இப்ராகிம்
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7568

Front page news and headlines today

நியூயார்க் :  உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.

‘கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’  பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்

மே 4, 2010

கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம்!” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும்? ஏதோ செத்துவிட்டார்கள் என்று மெழுகு வர்த்தி எரித்து, ஊர்வலம் வந்து, டிவிக்களில் காட்டி, விவாதங்கள் நடத்தில் நேரத்தைக் கழித்து விடலாமே?

கோட்ஸேவும், கசாப்பும், இந்திய சித்தாந்தவாதிகளும்: மஹாத்மாவைக் கொன்றவன் கோட்ஸே, அவன் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது, நேரு போன்ற செக்யூலரிஸவாதிகள் கூட, “அவனைத் தூக்கில் போடவேண்டாம், அவனை தூக்கில் போடுவதால், போன உயிர் திரும்ப வந்துவிடுமா“, என்றெல்லாம் அறிவிஜீவித்தனமான தத்துவங்கள் பேசவில்லை. ஆனால், இந்த கசாப்புக்கடைக்காரனைவிட குரூரமான கசாப்பின் விஷயத்திக்ல் இப்படி பேசுவது ஏன்? எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது? ஊடகங்களிலும் பெருமையாக தலைப்புச் செய்திகளாகப் போட்டு, விவாதிக்கப் படுகிறது?

ஃபஹிம் அன்சாரியின் மனைவி, மகிழ்ச்சியில் திளைத்தாள்!: ஃபஹிம் அன்சாரி மற்றும் சஹாப்புத்தீன் அஹமத் மீதான கூற்றங்கள் நிரூபிக்கப் படும் வகையில் போலீஸாரால், பலமான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை, ஆகையால்அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது, என்று தஹல்யானி நீதிபதி கூறினாராம். கேட்டவுடன், தன் காதுகளையே நம்ப முடியவில்லையாம், ஃபஹிம் அன்சாரியின் மனைவி யாஸ்மி[2], மகிழ்ச்சியில் திளைத்தாளாம், கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியதாம்!

பிறகு அந்த உயிரிழந்த 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர்,. காயமடைந்த 304 பேர்களுடைய மனை-மக்கள் ஏன் சந்தோஷப்படவில்லை? அந்த செத்தவர்கள் எல்லாம் யார்? அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன? அவர்கள் சொல்வது என்ன? ஏன் அவர்களுடைய படங்கள், பேச்சுகள் முதலியவை இடம் பெறவில்லை?

இப்படி திசைத் திருப்பும் நோக்கம் என்ன? “மைனாரிட்டி”, “மைனாரிட்டு வோட் பேங்க்” …………….என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர்[3]. என்.டி.டி.வி போன்ற கேடு கெட்ட ஐந்தாம் படைகள், கசாப் ஒரு வீரன் போன்று காட்டி வருகிறது. அவன் ஆடுவது, பாடுவது போன்று சித்தரிக்கப் படுகிறது. முன்பே, “அவன் பால் கொடுக்கும் சிறுவனல்லாவோ, அவன் அம்மாதிரியெல்லாம் செய்திருக்க முடியுமோ“, என்பது போல, அவன் ஒரு சிறுவன் என்றெல்லாம் நாடகமாடினர். ஆனால், அவனோ எனக்கு சென்ட் வேண்டும், உலாவ வேண்டும் என்று சொகுசாக வாழ்க்கை நடத்தினான். கோடிகள் கொட்டி அரசாங்கமும் வசதி செய்து கொடுத்தது.

கசாப்பின் தாயார் இந்தியாவிற்கு வர அனுமதிப்பார்களா? இப்படியும் இனி விவாதங்கள் வரப்போகின்றன. என் மகனை பார்க்க வேண்டும் என்றால், அரசு அனுமதித்து தான் வேண்டும் என்று வாதிட கிளம்பி விடுவர். இல்லை, சில தாராள பேர்வழிகள், கட்சிகள், அவர் இந்தியா வந்து செல்ல ஆகும் செலவையெல்லாம் நாங்களே செய்து தருகிறோம் என்றெல்லாம் கூப்பாடுப் போடுவர்.


[1] http://timesofindia.indiatimes.com/NEWS/City/Hyderabad/Kasab-should-not-be-hanged/articleshow/5887870.cms

[2] http://www.deccanherald.com/content/67380/tears-joy-fahims-wife.html

[3] Do you think Ajmal Kasab will get death penalty? , http://www.merinews.com/article/do-you-think-ajmal-kasab-will-get-death-penalty/15805892.shtml

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்!

மே 3, 2010

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்

வளர்ந்ந்து வந்த குரூர – முகமதிய-தாலிபான் -இஸ்லாமிய – அல்-உம்மா-ஜிஹாதி தீவிரவாதம், பயங்கரவாதம், கொலைவாதம் முதலியவற்றைச்சட்டப்படி தண்டிக்க வேண்டுமானாலும், நீதித்துறை தனது “செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம்” என்பதனை நிரூபித்துவிட்டுதான் செய்யவேண்டும் என்று யாரோ கட்டளையிட்டது போல நீதித்துறை, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, போலீஸார், என எல்லோரும் வேலை செய்வது தெரிகின்றது. ஊடகங்களும் அதற்கேற்றாற்போல செய்திகள் அள்ளிக் கொடுக்கின்றன.

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்: நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்த கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் மற்றும் மேலும் எட்டு தீவிரவாதிகள் மும்பையின் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர். ரத்தத்தில் மிதந்த மும்பை, மீண்டுவர பல நாட்கள் ஆகின. உயிகளை இழந்த தாய்கள், தந்தையர், முதலியோர் அந்த கொடூரனைத் தூக்கில் போடவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதில் மாற்றுக் கருத்துக் கூடாது என்று உறுதியாக உள்ளனர்.

இதனிடையே அக்கொடூர சம்பவத்தை நினைவுகூர்ந்த ஜமுனாவகேலா என்ற 50 வயது பெண்மணி, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த பிறகு தன்னுடைய 32 வயது மகனை தீவிரவாதி அஜ்மல் கசாப் சுட்டுக் கொன்றதை குறிப்பிட்டு அவனை இனியும் தாமதமின்றி தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், கசாப்புக்கு எவ்வித கருணையும் காட்டப்படக்கூடாது என்று தெரிவித்தார். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று ஜார்கண்ட் பிரச்சினை: கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும் என்ற சித்தாந்தம் இங்கு வைக்கப் படுகிறது. ஜார்கண்டில் ஏற்கெனவே காங்கிரஸ், பிஜேபிஐ ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கிறது. கருணாநிதி போல அங்கு பல கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள சிபு சோரன் காங்கிரஸ் சொல்லியபடி அல்லது காங்கிரஸை மிரட்டி அதிகாரம் செல்லுத்தி வருகிறார். ஆகவே, அம்மாநிலத்தையும் தொடர்பு படுத்தி கைதுகள் நடக்கின்றன. ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா (36) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்[1]. ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள தர்காவில், கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாயினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவேந்திர குப்தா(36) என்பவரை போலீசார் தேடி வந்தனர். ‘அபிநவ பாரத் சங்கதன்’ என்ற அமைப்போடு குப்தா தொடர்புடையவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த தேவேந்திர குப்தா, தனது தாயை பார்ப்பதற்காக ஆஜ்மீர் வந்த போது நேற்று முன்தினம் போலீசாரிடம் பிடிபட்டார். மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள பெண்சாமியார் பிரக்யா தாக்குருக்கும், குப்தாவுக்கும் தொடர்பு உண்டு என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆஜ்மீர் செக்ஸ், பங்களூர் செக்ஸ் என்று ஊடகங்கள் ஆரம்பித்து விட்டன: திடீரென்று முஸ்லீம் பாபாக்களின் செக்ஸ் விவகாரங்கள் அங்கும் இங்குமாக காலந்தாழ்த்தி வெளிவருகின்றன. இதன் மர்மம், நேரம் முதலியவை ஆச்சரியமாக உள்ளது. ஆனால், அந்நேரத்தில் ஏன், ஆஜ்மீர் பாபா செய்யும் காமலீலைகள் கண்டுக்கொள்ள மாட்டோம், ஆதாரங்களைத் தேடி மாட்டியே விடுவோம் என்ற ரீதியில் ஆஜ்மீர் குண்டு வெடிப்பிற்காக ஆட்களைப் பிடிப்போம் என்று வேகமாக வேலை செய்கின்றனர்? பங்காரப்பா தன்னுடைய மைத்துனர், சபலமுள்ளவர் என்று திடீரென்று போட்டுத்தரவேண்டும்? நவம்பர் 2009லேயே புகார் கொடுக்காமல், இப்பொழுது ஏன் புகார் கொடுக்கவேண்டும்?


[1] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18232