Archive for the ‘சர்ச்’ Category

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

ஜூன் 28, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களாஇல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

Voltaire appreciated Vedas

போலிஏஸுர் வேதம்உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி?: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன? அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[2].

Ezourvedam - Ludo Rocher

யஜுர் வேதம்மற்றும் யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda]: “யஜுர் வேதம்” [Yajur Vedam] நான்கு வேதங்களில் ஒன்று என்பது அறிந்த விசயமே, இருப்பினும், கிருத்துவர்கள், தங்களது “ஏசு கட்டுக்கதை”யின் படி, 18 [12 முதல் 30 வரை] வருடங்கள் காணாமல் போயிருந்த போது, இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையினை உருவாக்கினர். அந்நிலையில் அவர் போதித்தது தான் “யஸூர் வேதம்” [Yasur Veda] என்று சொல்லி, அதனை பலவாறாக, ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிட்டனர். “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda] என்றெல்லாம் குறிப்பிட்டு குழப்பினர். எல்லீஸும் இதில் குழம்பிபோனதில் ஆச்சரியம் இல்லை. மச்சிலிப்பட்டனத்தில் நீதிபதியாக இருக்கும் போது, ஒருவேளை, அத்தகைய யஸுர் வேதத்தைத் தயாரித்திருக்கலாம். சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். இங்கு, “பாதிரி எல்லிஸ்” [“Fr. Ellis”] என்றிருப்பதால், இவர் பாதிரியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது, என்றதும் ஏற்கெனவே சுட்டிக்கட்டப்பட்டது.

How Ezour Vedam was manufactured by the Christian missionaries

போலி வேதங்கள் எத்தனை இருந்தன?: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா? எல்லீஸ் அதை பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தார் என்றுள்ளது. ஆனால், 1822 வரை அது வெளியிடப்படவில்லை, எச்.எச்.வில்சன் அறிக்கையிலும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது, இன்னொரு குறிப்பில், எல்லீஸ் தென்னிந்திய மற்றும் ஈப்ரூ மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை ஆய்ந்ததாக உள்ளது. மேலும், இலங்கையின் தலைமை நீதிபதி சர். அலெக்சாந்தர் ஜான்சன், எல்லீஸிடம் பாரிஸில் அச்சடிக்கப் பட்ட ஏசுர் வேதம் புத்தகத்தைக் கொடுத்தார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளில், ஒன்றல்ல, மற்ற மூன்று போலி வேதங்களின் பிரதிகளும் இருந்தன என்றுள்ளது[3]. அதாவது, இத்தகைய போலி வேதங்களை அதிகமாகவே உருவாக்கியுள்ளனர் என்றாகிறது.

ezoure-Vedam - Jean Calmette and Ludo Rocher

போலிஏஸுர் வேதம்மிஷினரிகளை உலுக்கியது ஏன்?: லுடோ ரோச்சர் “ஏஸுர் வேதம்” உருவாக்கப்பட்டத்தில், மூன்று நிலைகள் / காலங்கள் உள்ளதாக விளக்குகிறார்[4].

போலிஏஸுர் வேதம்உண்டாக்கப் பட்ட காலம் யார் உருவாக்கியிருக்க முடியும்?
முதல் கட்டம் – 1760-1782

இரண்டாம் கட்டம் – 1782 – 1822

மூன்றாம் கட்டம் – 1822லிருந்து

ராபர்டோ டி நொபிலி Roberto de Nobili
ஜீன் கால்மெட் Jean Calmette
அன்டோய்ன் மொசாக் Antoine Mosac
மற்ற மிஷினரிகள் Other Missionaries
மெர்ரி மார்டீன் Pierre Martin
மதம் மாறியவர் New converts

ezoure-Vedam published in French-vol.I and II

சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். ராபர்ட் டி நொபிலைப் பற்றி முதன் முதலில் 1822ல் குறிப்பிட்டவர் எல்லீஸ் தான். பொதுவாக அவர்தான், முதன் முதலில் அத்தகைய மோசடி வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால், எல்லீஸ்ஸின் கட்டுரையே, பல போலி கையெழுத்துப் பிரதிகள் இருந்ததை வெளிக்காட்டியது[5]. லௌவினன் [Lauuenan] என்பவர், “ஏஸுர் வேதத்தின்” மூலம் [சமஸ்கிருத ஓலைச்சுவடி] காணாமல் போனதற்கு காரணம் எல்லீஸ் தான் காரணம் என்றார். 1816ல் பாண்டிச்சேரி நூலகத்திலிருந்து, அப்பிரதி எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது திரும்பக் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கேஸ்டெட்ஸ் [Castets] மறுத்தார். எல்லீஸ் தனது கட்டுரையில், அந்த போலி ஏஸுர் வேதம் கையெழுத்துப் பிரதி சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இருந்தது. மொழி பெயர்த்தவர் மற்றும் மூலத்தை எழுதியவர் ஒன்றே என்றும் கூறினார்[6].  அதாவது கத்தோலிக்க  ஜெசுவைட் மிஷினரிகளை குற்றஞ்சாட்டினார்[7]. இதனால், ஹோஸ்டன் [Hosten, 1921: 499] ஜெசுவைட்டுகளைப் பற்றி அவதூறு பேசியதில் எல்லீஸ் தான், முக்கியமான ஆளாக இருந்தார், என்று கோபத்துடன் கூறினார். எல்லீஸ் ஒரு புரொடெஸ்டென்ட் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், தமது வித்தியாசத்தை, சண்டையை மறைக்க, இவ்விசயத்தில் ஜாதிப்பிரச்சினையை நுழைத்தனர். அதுதான், போப்பை ஐயராக்கியது, ஆனால், வள்ளுவரை  பறையன் ஆக்கியது.

Pope Iyer - usage by Tamil writers

போப் ஐயர்என்று சொல்லும் போது, “போப் பறையர்ஏன்று ஏன் சொல்வதில்லை?: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை! ஆனால், அவனை கொல்வதற்கு ஒரு ஐயர் வேண்டும், ஆனால், மோசடியில் வல்லவர்களான அவர்கள், நாமத்தைப் போட்டு மாட்டிக் கொண்டனர். இதெல்லாம் தெரிந்தும்-தெரியாத தமிழ் வல்லுனர்கள், “போப் ஐயர்” என்று இன்று வரை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி வருகின்றனர்[8]. ஆனால், “போப் பறையர்” என்று ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று யாரும் கேட்பதில்லை. மேலும் “ஐயர்” எனும்போது, ஐயங்கார், முதலியார், பிள்ளை, வேளாளர் என்றெல்லாம் கூட உபயோகப் படுத்தியிருக்கலாம். இது “பார்ப்பனீயம்” என்று கூட யாரும் எதிர்க்கவில்லை. இது பார்ப்பன ஆதரவா, எதிர்ப்பா என்றும் புரியவில்லை. அதாவது, ஜாதிப்பிரிவினை உண்டாக்கவும் அத்தகைய முயற்ச்சிகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றாகிறது. அந்நிலையில், தாமஸ் ட்ரௌட்மேன், எல்லீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் ஆரிய-திராவிட பிளவுதான், பிறகு, 20ம் நூற்றாண்டில் பிராமணர்-பிராமண விரோத போக்காக மாறியது என்று எடுத்துக் காட்டுகிறார்[9]. பிராமண விரோத போக்கு, பிராமண-எதிப்பாக இருப்பதற்கான வழிமுறை, கால்டுவெல்லின் சித்தாந்தம் மூலம் பெறப்பட்டது என்று, வி.ரவீந்திரன்[10], நிக்கோலஸ் டிக்ஸ்[11] போன்றோர் விளக்கம் கொடுக்கின்றனர். இவ்வளவு விவகாரங்கள் இருக்கின்ற நிலையில் தான், பித்தம் பிடித்த, இந்துத்துவவாதிகள், அறக்கட்டளை உருவாக்கி, போலி புத்தகங்களை உண்டாக்கிய எல்லீஸைப் போற்றி, விழா எடுத்து, வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்துள்ளனர். பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்ட மோசடி பேர்வழி, எல்லீஸ் பெயரில், வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்த இந்துத்துவவாதிகளை என்ன செய்வது?

© வேதபிரகாஷ்

27-06-2017

Nobili Lost Veda fraud

[1] Ezour Védam arrives in France in 1731. It is sent by the Abbot Bazin and is destined to the library of the king. The Knight of Maudave, returning from India, visits Voltaire in 1760 and offers him his copy of the Ezour Vedam . The text is presented to Voltaire as an excerpt from the Veda translated into French by Father Martin, a former Jesuit missionary from Pondicherry. Maudave expresses doubts as to the quality of Father Martin’s translation. In 1761, Voltaire read the manuscript handed over by Maudave and prepares a new chapter entitled “Bracmanes, Vedam, and Ezourvedam” for the second edition of the Essay on Morals .

[2]  Peter R. Bachmann, Fr. Ellis: Account of a Discovery of a modern imitation of the Vedas with Remarks on the genuine works, Asiatic Rsearches, Vol.14, 1882, pp.1-59.

[3] Prodosh Aich, Lies with Long Legs: Discoveries, Scholars, Science, Enlighent Documentary, Samskriti, New Delhi, 2004

[4] Ludo Rocher (Ed.), Ezourvedam: A French Veda of the Eighteenth Century, John Benjamins Publishing Company, Philadelphia, 1984.

[5] In this dissertation, Ellis describes eight manuscripts of the same type as the Ezour Vedam , called “pseudo-Vedas,” found in the library of the Jesuit missionaries of Pondicherry, and having in the conversion business by accomodatio .

[6] Ellis, Francis Whyte, “Account of a Discovery of a Modern Imitation of the Vedas“, in Asiatic Researches , vol. 14, London, printed for J. Sewell et al., 1822, p. 1-49.

[7] The posthumous publication of the article by Francis Whyte Ellis on the manuscripts in deposit in the library of the Jesuit missionaries of Pondicherry. Ellis proves in this article that it is not a Vedic text but the work of Jesuit missionary Roberto de Nobili written in 1621 for conversion purposes. Ellis visits the library of the Capuchins and discovers the “pseudo-Vedas”. He considers the Ezour Vedam and the other pseudo-Vedas as dangerous counterfeits which were intended to shake the Hindu religion without succeeding in substituting it for Christianity.

[8] http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=306&pno=116

[9] In his book, Tom Trautmann suggests that the Aryan-Dravidian contrast `revealed’ by F. W. Ellis and his Tamil assistants in the early nineteenth-century was later resignfied as a Brahmin/non-Brahmin opposition, and in that form contributed to the non-Brahmin movement in the early twentieth-century.

Trautmann, Thomas R.. Aryans and British India. Berkeley: University of California Press, 1997, pp.221-222

[10] Ravindran, V. 1996. `The unanticipated legacy of Robert Caldwell and the Dravidian movement‘. In South Indian Studies, Vol. 1, pp.83-110.

[11] Dirks, Nicholas. 1995. The conversion of caste: location, translation and appropriation. In Conversion to Modernity, ed. Peter van der Veer, pp. 115-136. London: Routledge

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச்சி!

ஜூன் 21, 2013

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு  – தொடர்ச்சி!

Two anti-Hindus together Karu-Ramமவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டலடித்த ஆளிடமே காட்டிப் பெருமைக் கொள்ளும் ராம்!

இந்துவிரோத திராவிட சித்தாந்தம்: “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது, என்று முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது[1]. ஜூலை 2010ல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது சட்டமுன்மாதிரியான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதற்கான நிலையை கருணாநிதியே உருவாக்கிக் கொண்டாரா என்பது வாதத்திற்குரியது, ஆனால், சாத்தியமானதுதான். திராவிட பரம்பரையில் சட்டத்தை வளைப்பது என்பதெல்லாம் வாடிக்கையான கலைதான். ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[2].

Periyar statue in front of Sri Rangam Gopuramகோவிலுக்கு முன்னால் சிலைவைத்தால், சாதிப்பதாக ஆகிவிடுமா? திகவினரின் சிறுமைத்தனம் – ஏனெனில் அவர்களுக்கு ஒரு மசூதி அல்லது சர்ச் முன்பு அவாறூ வைக்க வக்கில்லை, துப்பில்லை!

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.
  10. ஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………
  11. சில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..
  12. கருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….

இப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள்[3]. ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்[4].

Two anti-Hindus together Karu-Ram- Raja also“மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” ஆசிவேண்டி நிற்கிறது போலும்! அருகில் விஷ்ணு ஸ்டாலின் நிற்பதும், ஊழல் ராஜா நிற்பதும் காலத்தின் கோலமே!

தேர்தலின் மீது கருணாநிதியின் தன் மீது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அவரே தனது தன்னிலை விளக்க சமர்ப்பண மனுவில், கீழ்கண்டவாறு பட்டியல் போட்டு காண்பிரித்திருந்தார்[5]:

No. Of Cases pending

Case No

Name of the Court

Date of the court for ordering enquiry

The details of offence, Sections violated

Details of the volations, for which the cases filed

1 CC.No. 29/2003 Additional magistrate III 16-06-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
2 CC.No. 91/2003 Additional magistrate III 01-12-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
3 CC.No. 5/2004 Additional magistrate VII 27-01-2004 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
4 CC.No.12/2005 Additional magistrate V 10-06-2005 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
5 CC.No. 1/2006 Additional magistrate VII 06-01-2006 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
6 CC.No. 3156/2006 Additional magistrate XIV 03-03-2006 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings
7 CC.No. 15522/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
8 CC.No. 15523/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
9 CC.No. 4495/2005 XVII Criminl Court, Saidapet 16-06-2005 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings

அரசியல் ரீதியில், அரசியல் கட்சிவாரியாக, நீதித்துறையில் நியமனங்கள் பங்கிடப் படுகின்றன. சட்டம் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட துறைகளில் கட்சிகளிலன் சார்பாகத்தான் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று நியமிக்கப்படுகிறார்கள்[6]. அவ்வாறிருக்கும் போது, தமது எஜமானன், நண்பர், வேண்டியவர் …………………..என்று வரும் போது அவர்கள் எப்படி நடுநிலையோடு, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள். போலீஸ் துறையும் அவ்வாறே உள்ளது[7] அதாவது அங்கும் நியமனங்கள் கட்சிவாரியாகத்தான் உள்ளது.

Hindu thief - dinamani23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன என்று இருந்து விடுவார்களா என்று பார்ப்போம், என்று 20-04-2013 அன்று பதிவு செய்திருந்தேன்[8].

Hindu thief - dinamani- Headingகௌதமனின் புகாரும், கருணாநிதி பதில் அளிக்க எடுத்துக் கொண்ட நேரமும்: தமிழக அரசு கடந்த 2002-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை தொடர்ந்து எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் சிறுபான்மை அமைப்பு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.  இதில், கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி மீது சென்னை மாம்பலம் போலீசில் கவுதமன் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2002ம் ஆண்டு மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதமன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

Hindu thief - Indian expressஇரண்டு மாதங்கள் கழித்து கொடுக்கப்பட்டுள்ள பதில்: இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது[9]: “நான் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளேன்[10]. பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையில் கவுதமன் என் மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளார்[11]. நான் பேசியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்[12] சுயவிளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்தோடும் என் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

Karunanidhi with Christiansபாவம் இந்துக்கள் – நிலைமையை அறியாமல் வெற்றிவிழா கொண்டாடினார்கள்: நிலைமை அறியாமல், கௌதம் ஒரு கூட்டம் போட்டு, விளக்கினாரம். அவரது நண்பர்களும், “வெற்றி” என்று இணைதளத்தில் மகிழ்சியை பரிமாறிக்கொண்டனர். ஆனால், சட்டத்தின் நிலையை அவர்கள் அறியவில்லை. இந்துக்கள் இதனால்தான், நல்ல வழக்குகளை இழக்கின்றனர். சட்டப்பிரிவில் சொல்லியிருக்கின்றபடி, சட்டமீறல்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, அவற்றை விளக்க வேண்டும். அதை விடுத்து, நாளிதழ்கள் இப்படி அறிவித்தன என்று அவற்றின்மீது ஆதாரமாக வழக்குத் தொடர்ந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் என்று காட்டி வாதிக்க வேண்டும்.

Karunanidhi with Muslims

வேதபிரகாஷ்

© 21-06-2-13


[1] வேதபிரகாஷ், “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறுபேசியவழக்கு தள்ளுபடியானது,

http://lawisanass.wordpress.com/2010/07/14/case-hindu-thief-karunanidhi-dismissed/

[6] மாஜிஸ்ட்ரேட் கோர்ட், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் முதலியவை; சாலிசிடர் ஜேன்ரல், ஸ்டேன்டிங் கவுன்சில், செயலாளர் என்ற அனைத்து பதவிகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பி.எல் என்ற பட்டம் வைத்துக் கொண்டிருந்தால் போதும், சட்டத்தைப் பற்றிய அறிவுகூட வேண்டாம். பதவிகள் வந்து கொண்டிருக்கும், குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வசதி, வாழ்வு எல்லாம் பெருகிக்கொண்டே போகும். நிலைமையே மாறிவிடும்.

[7] வேதபிரகாஷ், கருணாநிதியின்மீதுநிலுவையில்உள்ளவழக்குகளும், அவைநடத்தப்படும் விதமும்!,

http://lawisanass.wordpress.com/2010/07/14/the-cases-pending-against-karunanidhi-and-the-courts-judges/

[10] அதாவது எனக்குத் தெரியாத சட்டத்தையா, நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிறாய் என்பது போல சொல்லொயிருக்கிறார்.

[11] அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

[12] “உள்ளங்கவரும் கள்வன்” என்று வேறு விளக்கம் கொடுத்துள்ளேன் என்று சுட்டிக் காட்டுகிறார்.