முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)
சாதாரண “ஈவ்-டீசிங்” சண்டையில் (பெட்டி மேட்டர்) இருவர் / மூவர் கொல்லப்பட்டனர் என்று ஆங்கில ஏடுகள் விவரிக்கின்றன: ஒருபக்கம் பாலியல் பலாத்காரம் செய்தவனை தூக்கில் போடுங்கள் என்று பெண்கள் முழக்கம் இடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள். மறுபக்கம் இப்படி (அதாவது, முசபர்நகர் விசயத்தில்) “ஈவ்-டீசிங்” என்பது சாதாரண விசயம் என்கிறார்கள். ஆனால், எந்த பெண்ணியக்கமும், வீராங்கனைகளும், தேசிய பெண்கள் ஆணையம் முதலியன தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றும் புரியவில்லையே? தில்லியில், மும்பையில் நடந்தால் அத்தகைய பெரிய குற்றமாகிறது, ஆனால், முசபர்நகரில் நடந்தால் சாதாரணமாகி விடுகிறாதா? பிறகு மூவர் கொல்லப்படுவதும் சாதாரணமான விசயமா? படிப்பவர்களுக்கு புத்தியில்லையா அல்லது சொல்பவர்களுக்கு அறிவில்லையா? உண்மையினை, உண்மையாக சொல்வதற்கு ஊடகங்கள் ஏன் பாரபட்சம் காட்டுகின்றன?
முசபர்நகர் கவரத்தில் இரு பெண்கள் பலாத்காரம் / மானபங்கம்: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்ப்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.
ஜாதிகலவரமா, மதக்கலவரமா – இப்படி கேட்கிறார்கள்: வழக்கம் போல, மத்திய-மாநில அரசுகள், ஊடகங்கள் உண்மை நிலையை மறைக்க முயற்ச்சி செய்வது தெரிகிறது. தமிழ் ஊடகங்கள் உண்மை என்ன என்பது கூட அறியாமல், முசபர்நகரில் ஜாதி கலவரம் நடக்கின்றது[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஜாதி கலவரம் என்றால், ஏன் அகிலேஷ் முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டு அலைகிறார்? திடீரென்று அப்பா முல்லாயம் வந்து வக்காலத்து வாங்குகிறார்? ஆனால், வழக்கம் போல இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று குறிப்பிடாமல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களை ஊக்குவித்து வருபவர்கள் அவற்றைக் குற்றஞ்சாட்டுவது: உதாரணத்திற்கு, “தி ஹிந்து” எப்படி “சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை இவ்விசயத்தில் பிரத்யேகமாக விளக்கியிருக்கிறது[2]. ஆனால், புத்தகயா குண்டுவெடிப்பின் போது அவ்வாறு செய்யவில்லை. இங்குதான் அந்த ஊடக பாரபட்சம் வெளிப்படுகிறது. என்.டி.டிவி-தி ஹிந்து, இவ்விசயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தினமும் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பி வருகின்றன. ஆகவே, இவை அத்தகைய சார்புடைய கொள்கையைப் பின்பற்றுவது, வாசகர்களை ஏமாற்றுவதாகும். கீழ்கண்ட தலைப்புகளினின்றே, அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்க்கிறது மற்றும் ஆதரிக்கின்றது என்று தெரிகிறது. இது ஏன்?
New media presents scope for misuse: Tewari SEPTEMBER 10, 2013Similarities in communal violence in Akhilesh regimeSEPTEMBER 11, 2013FIR against several BJP leaders; death toll up to 33 SEPTEMBER 9, 2013Where Sangh spins narratives of victimhood, belligerenceSEPTEMBER 11, 2013Riot victims recount tales of terrorSEPTEMBER 9, 2013MHA calls for more forces to be deployedSEPTEMBER 9, 2013Manmohan calls up Akhilesh, conveys concernSEPTEMBER 9, 2013SC declines to entertain plea on Muzaffarnagar riotSEPTEMBER 9, 2013Mayawati sees SP-BJP conspiracySEPTEMBER 9, 2013Centre offers to send more forces to Uttar PradeshSEPTEMBER 9, 2013SP, BJP behind Muzaffarnagar violence: TiwariSEPTEMBER 9, 2013Left parties accuse UP government of ‘lax’ attitudeSEPTEMBER 9, 2013 |
காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கே டுவிட்டரில் கண்டபடி பொய்களை பரப்பி வருகிறார், என்பது படிப்பவர்களுக்கு நன்றகவே தெரியும். ஆனால், இந்நேரத்தில் மணீஸ் திவாரி ““சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” என்று சொல்கிறார் என்று “தி ஹிந்து” செய்தி போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3]. பிறகு, இவர் ஏன் திக்விஜய் சிங்கைக் கட்டுப்படுத்துவது இல்லை? பெங்களூரு குண்டுவெடிப்பு பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த காங்கிரஸ்-முஸ்லிம்-தலைவர்- முகமது ஷகீல் டுவிட்டரில் போட்டபோதும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், காங்கிரஸ் திட்டமிட்டே இப்படி செய்து வருகின்றது என்றாகிறது. ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன.
வேதபிரகாஷ்
© 12-09-2013