Posts Tagged ‘இந்துக்களின் உரிமைகள்’
ஜூலை 26, 2016
சுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?
8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
தமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:
இந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.
- இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?
- ஏற்கத் தகுந்ததுதானா?
- மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
- இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?
- மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?
- தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா?
- விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா?
எங்கே பார்ப்போம்!”, இவ்வாறு கூறியுள்ளார்[2].
பி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.
எஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].
வீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:
1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா? |
1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. |
2. ஏற்கத் தகுந்ததுதானா? |
2. ஆமாம். |
3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா? |
3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன? |
4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா? |
4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே? |
5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? |
5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு. |
6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா? |
6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. |
7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? |
7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். |
8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா? |
8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே? |
© வேதபிரகாஷ்
26-07-2016
[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா?, திங்கள், 25 ஜூலை 2016 15:49.
[2] http://viduthalai.in/e-paper/126567.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/spritual-school-is-it-against-secular-government-asks-k-veeramani-258776.html
[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா? –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)
[6] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=169746
[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST
[8]http://www.dinamani.com/tamilnadu/2016/07/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/article3547501.ece
[9] New Indian Express, DK president gets it for opposing Ratha Yatras, By Express News Service, Published: 26th July 2016 06:39 AM, Last Updated: 26th July 2016 06:39 AM
[10] http://www.newindianexpress.com/cities/chennai/DK-president-gets-it-for-opposing-Ratha-Yatras/2016/07/26/article3547109.ece
[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா? – கி.வீரமணி கண்டனம், Published: July 26, 2016 08:05 ISTUpdated: July 26, 2016 08:06 IST
[12]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8900224.ece
குறிச்சொற்கள்:அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி
அடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பிப்ரவரி 12, 2016
சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?
“சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].
கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.
அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.
நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?
ஆழ்வார்கள்–நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
சமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.
© வேதபிரகாஷ்
12-02-12016
[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more
[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!
[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.
[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?
[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?
[6] இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?
[7] பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?
குறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமத்துவம், சமஸ், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜீன்ஸ், தீவிரவாதம், பேன்ட், மார்பகம், முஸ்லீம், மோடி, லெக்கிங், ஸ்டைல்
அடையாளம், அதிகாரம், அமைதி, ஆகமம், ஆகமவிதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இஸ்லாம், உரிமை, ஊக்குவிப்பு, எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டதிட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சமரசம், சமஸ், சம்மதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
நவம்பர் 18, 2015
பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி–எதிர்ப்பு, இந்திய–விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)!
Anti-Modi demonstration -UK
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார்? மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.
Gujaratis, Kashmiris, Tamils united against Modi
நூற்றுக்கணக்கோனோர் இந்தியாவின் பெயரைக் கெடுத்துவிட முடியுமா?: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது? முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா? பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம்? சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன? அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா?
Awaaaz propaganda against Modi
“அவாஸ் நெட்வொர்க்”கும், அதன் பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம்பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிருந்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலும், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொடுத்துள்ளது[9]:
Supporting organizations of Awaaz – South Asia Watch include:
|
Aaj Kay Naam
Asian Women’s Refuge
Friends of India / All-India Christian Council (UK)
Campaign Against Racism and Fascism (CARF)
Cambridge South Asia Forum
Dalit Forum for Social Justice (UK)
Dalit Solidarity Network (UK)
India Forum
Indian Muslim Federation (UK) |
Indian Workers Association (GB)
Muslim Parliament
National Civil Rights Movement (NCRM)
Oxford South Asia Forum
People’s Empowerment Alliance
People’s Unity
Southall Black Sisters
Southall Monitoring Group
Sutton for Peace and Justice
Voice of Dalit International |
இவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான்! ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.
Protestors demonstrating against Indian Prime Minister Narendra Modi hold placards and chant outside Downing Street in central London on November 12, 2015. India’s Prime Minister Narendra Modi today began a three-day visit to London focused on trade deals and connecting with the diaspora as critics warned of a “rising climate of fear” under his rule. AFP PHOTO / LEON NEAL
சித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை?: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:
- சுரேஷ் குரோவர் – Suresh Grover, Director, The Monitoring Group,
- பிரஞ்னா படேல் – Pragna Patel, Director, Southall Black Sisters,
- கௌதம் அப்பா – Professor Gautam Appa, Academic and Human Rights activist,
- இருந்தா குரோவர் – Vrinda Grover, Lawyer, Researcher and Human Rights activist,
- அனீஸ் கபூர் – Sir Anish Kapoor, CBE RA Sculptor
- சேதன் பகத் – Chetan Bhatt, Director of the Centre for the Study of Human Rights at the London School of Economics,
- மைக் வுட் – Mike Wood MP and
- ஹெலினா கென்னடி – Baroness Helena Kennedy, QC FRSA Barrister, human rights defender and peer
பிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா எதிர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது?
Leslee Udwin, Nirmala Rajasingam, Vrinda Grover, Teesta Setalvad, Kavita Krishnan, Indira Jaising
© வேதபிரகாஷ்
18-11-2015
[1] மாலைமலர், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.
[2] தமிழ்.ஒன்.இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்!, Posted by: Mathi, Updated: Friday, November 13, 2015, 12:25 [IST].
[3] http://www.inneram.com/news/india/5288-protest-against-modi-in-england.html
[4] இந்நேரம்.காம், மோடி திரும்பிப் போ: இங்கிலாந்தில் மோடிக்கு கடும் எதிர்ப்பு!, வெள்ளிக்கிழமை, 13 November 2015 16:54.
[5] http://www.ibtimes.co.uk/narendra-modi-uk-visit-indian-prime-minister-faces-protests-during-meeting-downing-street-1528449
http://www.ibtimes.co.uk/modi-uk-visit-british-indians-protest-indian-prime-minister-projection-onto-parliament-1527815
[6] http://www.dailymail.co.uk/news/article-3317137/Modi-s-come-Wembley-Tens-thousands-Indians-arrive-prime-minister-s-big-speech-fireworks-extravaganza.html
[7] You can contact us at AWAAZ, the London Civil Rights and Art Centre, Upper Floors, 37 Museum Street, London WC1A 1LQ, Alternatively you can email –admin@awaaz-uk.org at editor@awaaz-uk.org for more information about this website –
http://awaaz-uk.org/wp-content/uploads/2014/04/awaaz_in_bad_faith.pdf
[8] http://www.sacw.net/
[9] http://awaaz-uk.org/supporting-organisations/
[10] http://www.southallblacksisters.org.uk/campaigns/campaign-against-narendra-modi-hindutva-politics/
[11] http://www.southallblacksisters.org.uk/reports/Narendra-Modi-Exposed-Report/
[12] http://www.southallblacksisters.org.uk/narendra-modi-rise-hindu-fascism/
[13] http://muslimmirror.com/eng/woman-activists-flay-bjps-campaign-on-so-called-love-jihad-warn-of-serious-consequences/
[14] http://www.milligazette.com/news/10508-narendra-modi-threat-to-human-rights
[15] http://www.prokerala.com/news/photos/new-delhi-additional-solicitor-general-indira-271156.html
குறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், கவிதா கிருஷ்ணன், காங்கிரஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், நிர்மலா ராஜசிங்கம், முஸ்லீம், மோடி, லெஸ்லி உட்வின், விருந்தா குரோவர்
அதிகாரம், அத்துமீறல், அம்பேத்கர், அயோத்யா, அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆதரவு, ஆர்பாட்டம், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, ஊக்குவிப்பு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்துரிமை, கவிதா கிருஷ்ணன், நரேந்திர மோடி, மோடி, லண்டன், விரிந்தா குரோவர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 14, 2015
ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?
Hasan Suroor caught in pedophile case, arrested
ஹசன் சுரூர் லண்டனில் “பிடோபைல்” குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய்துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.
As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu
14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானே – பிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது?: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Marx, Lenin, Mao- trinity of Communism
பிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.
Hasan Suroor – Muslim apologetic columnist supporting IS
பிடோபைல்கள் மேனாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.
Hasan Suroor – Muslim apologetic columnist
செய்தியாளர்கள் செய்யும் “ஸ்டிங் ஆபரேஷனில்” பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.
Beef eating party politics- good or bad
‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it? புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்?’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேறுவிதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.
உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்
ஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்?: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில், “செக்யூலரத்துவம்” என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.
© வேதபிரகாஷ்
14-11-2015
[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1385051
[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.
[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST
[5] http://in4india.in/news/Other-News/2015/11/indian-journalist-arrested-in-london
[6] http://www.huffingtonpost.in/2015/11/11/hasan-suroor-video_n_8529978.html
[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7869057.ece
[8] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Indian-origin-journalist-Hasan-Suroor-arrested-in-UK-on-paedophilia-charges/articleshow/49756604.cms
[9] http://marudhang.blogspot.in/2014/03/blog-post.html
[10] Hasan Suroor, Modi, fauxsecularists and Muslims, September 22, 2014 Last Updated at 21:46 IST.
[11] http://www.business-standard.com/article/opinion/hasan-suroor-modi-faux-secularists-and-muslims-114092201238_1.html
[12] http://www.thehindu.com/opinion/op-ed/narendra-modi-and-ties-with-muslims/article7114109.ece
[13] http://www.thehindu.com/opinion/op-ed/comment-article-islamic-difference-and-radicalisation/article6760854.ece?ref=relatedNews
[14] http://www.ibnlive.com/news/india/narendra-modi-not-welcome-image-on-uk-parliament-photoshopped-1162875.html
குறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்து ராம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துத்துவம், கைது, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம்
அல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து ராம், இந்துக்கள், இந்துத்துவம், உண்மை, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 22, 2015
புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)
Gajendra Chauhan – Vaasanaa- afilm acted by him
பிட்டு பட ஹீரோவை / செக்ஸ் நடிகரை கல்லூரி சேர்மனாக நியமித்த பாஜக : போராட்டத்தில் மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.
Mahesh Bhatt muslim kissing woman
சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.
Gajendra Chauhan – Khuli khidki – afilm acted by him
கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு, 5 பேர் கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Janab Mahesh Bhatt and his second wife Parveen Babi
ஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].
Gajendra Chauhan – Jaungal ki rani – afilm acted by him
கைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].
Janab Mahesh Bhatt and his three wives
அரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.
Janab Bhatt, Dig – conspiracy-theory- book agaibst RSS
“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் முதலியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.
© வேதபிரகாஷ்
22-08-2015
[1] http://www.tutyonline.net/view/28_97394/20150722193753.html
[2] h5ttps://www.youtube.com/watch?v=f4v7Pw_ajc8
[3] htt6p://www.vinavu.com/2015/07/08/interview-with-ajayan-adat-ftii/
[4] தினகரன், புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது: கல்லூரிவளாகத்தில் பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1321584
[6] தினமலர், புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது, ஆகஸ்ட்.19, 2015; 03.27.
[7]மாலைமலர், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 5 புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 11:34 PM IST
[8] http://www.maalaimalar.com/2015/08/19233425/5-arrested-FTII-students-get-b.html
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=162276
குறிச்சொற்கள்:அடூர், அயோத்யா, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்களின் உரிமைகள், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், கல்லூரி, கிரிஸ் கார்னாட், கைது, செக்ஸ், சௌகான், சௌஹான், ஜாமீன், திரைப்படம், பாபர், பாபர் மசூதி, புனா, புனே, புருனோகிராபி, மஹேஷ் பட், மாணவர், மாணவியர், மீர்ஜா, மோடி, Bedroom
அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இடதுசாரி, இந்து மக்கள், இந்துக்கள், இந்துத்துவா, இலக்கு, உண்மை, ஊக்குவிப்பு, காவி, கைது, சவுகான், சவுஹான், சௌகான், சௌஹான், ஜாமீன், நரேந்திர சௌகான், புனா, புனே, போராட்டம், மோடி, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 22, 2015
புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)
U R Ananathmurthy and his christian wife Esther
யு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம் முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.
Saeed-Akhtar-Mirza
சயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.
Saeed aktar mirza, babar and masjid
கஜேந்திர சௌஹான் ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.
Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments
தகுதி–தராதரம்–பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].
Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro
ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும் இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.
© வேதபிரகாஷ்
22-08-2015
[1] He married a Christian lady, Esther, and faced many problems for his inter-religious wedding. http://www.firstpost.com/living/ur-ananthamurthy-pioneer-kannada-literatures-navya-movement-1677817.html
[2] http://scroll.in/article/675713/kannada-writer-ananthamurthy-loved-whiskey-and-a-good-argument
[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.
Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81., Aug 23, 2014 · 07:46 am
[4] http://parallelcinema.blogspot.in/2005/08/salim-langde-pe-mat-rodont-cry-for.html
[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.
[6]In a debate moderated by TIMES NOW’s Editor-in-Chief Arnab Goswami, panelists — Gajendra Chauhan, Chairman, FTII, Paintal, Actor; Uday Shankar Pani, Filmmaker & Alumni FTII; Narendra Pathak, Member, FTII; Anupam Kher, Actor; Vinay Shukla, Filmmaker and Writer; Aruna Raje Patil, Filmmaker; Prateek Vats, Alumni, FTII; Saurabh Shukla, Actor; and Vikas Urs, Student, FTII (Cinematography).
http://www.timesnow.tv/Debate-FTIIMahabharat-Bollywood-fights-Yudhisthira/videoshow/4478061.cms
[7] http://www.firstpost.com/politics/gajendra-chauhan-to-pahlaj-nihalani-the-unstoppable-rise-of-the-anti-intellectuals-under-modi-govt-2376458.html
[8] Rishi Majumder, Gajendra Chauhan to Pahlaj Nihalani: The unstoppable rise of the anti-intellectuals under Modi govt, Aug 3, 2015 15:44 IST.
[9] http://www.thehindu.com/features/magazine/bishwanath-ghosh-gajendra-chauhans-appointment-as-ftii-chairman/article7460395.ece
[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST
[11] Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue, Updated: July 16, 2015 12:26 am.
[12] http://indianexpress.com/article/opinion/columns/the-problem-with-gajendra-chauhan/
[13] Mohua Chatterjee & Himanshi Dhawan, Chauhan was RSS pick for top job at FTII, TNN | Jul 11, 2015, 12.08 AM IST
[14] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Chauhan-was-RSS-pick-for-top-job-at-FTII/articleshow/48025610.cms
[15] Deeptiman Tiwary, Gajendra Chauhan: A 34-year veteran of C-grade exploits, TNN | Jul 11, 2015, 01.19 AM IST
[16] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Gajendra-Chauhan-A-34-year-veteran-of-C-grade-exploits/articleshow/48026077.cms
குறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, அனுபம் கேர், அயோத்யா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சயீத் மீர்ஜா, திக் விஜய சிங், திரைப்படம், நசீம், நஸீம், நுக்கட், புனா, புனே, புருனோகிராபி, புரோன், மீர்ஜா
அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆர்பாட்டம், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்து மக்கள், இந்துக்கள், இலக்கு, உண்மை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், சௌகான், சௌஹான், புனா, புனே, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 9, 2015
பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (1)
புதிய தலைமுறை விளம்பரம்
இந்து அமைப்பினர் தாக்குதல்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பிரபல டி.வி., சேனலான புதிய தலைமுறையில், ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சியை கண்டித்து, ஒளிப்பதிவாளரைத் தாக்கியதுடன் கேமிராவையும் அடித்து உடைத்துள்ளதுள்ளனர் இந்து அமைபினர்[1] என்று பொதுவாகவும், இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[2], “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[3] முதலியன ‘குறிப்பிட்டுள்ளன. ஆனால், இந்து அமைப்பினர் ஏன் அந்நிகழ்ச்சியை எதிர்த்திருக்க வேண்டும் என்பது பற்றி மூச்சுக்கூட விடவில்லை. ”பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா” என்பது அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் தலைப்பு, உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே விஜய்-டிவியில் இத்தகைய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் பெண்மையினை அவமதிப்பதாக இருந்தது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. எந்த அமைப்பும், அந்த அமைப்பு சார்ந்தவர்களும் அவர்களுடைய உணர்வுகள் பாதித்திந்திருந்தால் ஒழிய, இத்தகைய எதிர்ப்புகள் ஏற்படாது.
My rights and the rights of others
”பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா”: சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா என்ற கருத்தை வைத்து உரக்கச் சொல்லுங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது[4]. இதற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வந்தன. இந்நிலையில், இது தாலியை இழிவு படுத்துவதாக அமைந்துள்ளது என்பதால், நிகழ்ச்சியை எடுக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி எடுத்தால் தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர், என்று ஊடகத்தினர் வெளியிட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இவ்விசயத்தில் இவ்விரு பிரிவினரிடையே உரையாடல்கள் அடந்துள்ளன என்றாகிறது. அதையும் மீறி ஒப்புக்கொள்ளாத காரணங்களுக்காக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அச்சுருத்தல் ஆரணமாக புகார் கொடுக்கப்பட்டது. எனவே, இது குறித்து காவல்துறைக்கு தகவலளித்து டி.வி., சேனல் நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்கும் படி புதிய தலைமுறை கேட்டுக் கொண்டது. இதற்கமைய புதியதலைமுறை கட்டிடடத்திற்கு பாதுகாப்பும் போடப்பட்டது. கட்டிடத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்: இந்நிலையில், ஞாயிறு காலை (09-03-2015), புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் தேநீர் கடையில், நின்று கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் பெண் நிருபர் இருவரை சிலர் தாக்கியுள்ளனர். சிலர் தாக்கியுள்ளனர் என்றது, இந்து அமைபினர்[5] என்று பொதுவாகவும், இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[6], “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[7] முறையே வெளியிட்டன. பிறகு .அலுவலகம் அருகே நின்ற தன்னை பேச இடமளிக்காமல் இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்[8]. இப்படி செய்திகள் மாற்றி-மாற்றி எளியிட்டிருப்பதும் புதிராக உள்ளது. அப்படியென்றால், குறிப்பிட்டக் கருத்தைத் தடுக்க வேண்டும் என்ற போக்கு ஏன் இருந்தது என்பதை மற்றவர்கள் தாம் விளக்கியிருந்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.
இந்து முன்னணி சார்பில் பரமேஸ்வரன் தெரிவித்த பதில்: தாலி பற்றிய விவாத நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை இந்து முன்னணியினர் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுவதற்கு அவ்வமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் தெரிவிக்கும் பதில்[9] என்று பிபிசி வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினரே இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற புதிய தலைமுறையின் குற்றச்சாட்டுக்கு இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் பரமேஸ்வரன் தமிழோசையில் பதிலளித்தார். புனிதமான தாலியைக் கொச்சைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று அவர் கூறினார்[10]. இதைக் காவலர்கள் பார்த்து கொண்டு இருந்தும், தாக்கியவர்கள் மீது நவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. இதனால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களில் இச்செய்தி தீயாகப் பரவியதை அடுத்தே, போலீசார், இது சம்பந்தமாக 5 பேரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு, கட்சித் தலைவர்களும், மற்ற ஊடகங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன, என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது: புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது, நிறுவனத்தின் அலுவலகம் அருகே காவல் துறையினர் முன்னிலையில் மத அடிப்படைவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன[11] என்று புதியதலைமுறையே வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வன்முறை மூலம் பறிக்க முயன்று தாக்குதல் நடத்திய கும்பலையும், அதற்குத் துணை நின்ற தமிழகக் காவல்துறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டோர் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமா அத் மாநில செயலாளர் முஹமது ஷிப்லி, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது வேதனையாக உள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தாக்குதல் நிகழ்த்தியவர்களை கைது செய்து கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணவம், அகம்பாவத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே போல் சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆப் தமிழ்நாடு, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், திருச்சி மீடியா கிளப் உள்ளிட்ட அமைப்புகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன[12]. இப்படி கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது வித்தியாசமாகத்தான் உள்ளது.
வேதபிரகாஷ்
© 10-03-2015
[1] தமிழ் உலகம், ’தாலி’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..!!, Monday, 09 March 2015 10:07.
[2] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139198
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/tv-cameraman-attacked-chennai-222343.html
[4]http://www.tamizhulagam.com/index.php?option=com_k2&view=item&id=23934:%E2%80%99%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E2%80%99-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=10;
[5] தமிழ் உலகம், ’தாலி’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..!!, Monday, 09 March 2015 10:07.
[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139198
[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/tv-cameraman-attacked-chennai-222343.html
[8] http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150308_puthiyathalaimuraiattack
[9] http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150308_parameswaran
[10]http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6972068.ece
[11]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5-2-204262.html
[12] புதியதலைமுறை, புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர், பெண் செய்தியாளர் மீது தாக்குதல்: பல்வேறு அமைப்புகள் கண்டனம், பதிவு செய்த நாள் – மார்ச் 08, 2015, 1:46:12 PM; மாற்றம் செய்த நாள் – மார்ச் 08, 2015, 10:38:57 PM.
குறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், சர்வதேச மகளிர் தினம், செக்யூலரிஸம், பிஜேபி, புதிய தலைமுறை, புதியதலைமுறை
அடையாளம், அத்தாட்சி, அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், இந்துக்கள், இந்துவிரோதி, உண்மை, ஒளிப்பதிவாளர், சர்வதேச மகளிர் தினம், தாலி, புதிய தலைமுறை, புதியதலைமுறை, பெண், விவாதம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
ஏப்ரல் 20, 2013
பகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.
ஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்!
பகுத்தறிவு தீவிரவாதம்
பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!
ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்: ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!
Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211 Bench: Sinha, B P. PETITIONER: S. VEERABADRAN CHETTIAR Vs. RESPONDENT: E. V. RAMASWAMI NAICKER & OTHERS DATE OF JUDGMENT: 25/08/1958 BENCH: SINHA, BHUVNESHWAR P. BENCH: SINHA, BHUVNESHWAR P. IMAM, SYED JAFFER WANCHOO, K.N. CITATION: 1958 AIR 1032 1959 SCR 1211 ACT: Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295. |
ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…
View original post 778 more words
குறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருத்து, கள்வன், காங்கிரஸின் துரோகம், கோர்ட், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திருடன், தேசத் துரோகம், நீதித்துறை, மன உளைச்சல், முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், ஹிந்து, ஹிந்துக்கள்
அடையாளம், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இந்திய விரோதிகள், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சம்மதம், சாட்சி, சாது, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திருடன், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பிரதிவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம்கள், ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 20, 2013
சட்டத்தை மீறும் நீதிகள்
“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.
இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].
ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…
View original post 576 more words
குறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism
அடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்திரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஏப்ரல் 14, 2013
சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?
சவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.
“நிதாகத்‘ என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
முஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:
- நீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
- மஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
- சிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
- பச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.
படிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.
- எண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].
- 2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].
- 2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு! இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.
- 2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].
- பிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.
- இப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.
சவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்
ஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].
இரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்!
5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்
இந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].
சவுதியில் குப்பை அள்ளும் பணி
மலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்?: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.
சவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்
செக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.
சவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்
முஸ்லீம்களின் விஷமத்தனம் – சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்! பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.
வேதபிரகாஷ்
14-04-2013
[2] Nitaqat classifies all private Saudi firms into four categories-Blue, Yellow, Green and Red-based on their size and the number of Saudi nationals they have recruited.
[4] From the early Eighties, all Gulf Cooperation Council (GCC) countries have been talking about localisation, in terms of employment opportunities.
[5] In 2003, government had said it would reduce the numbers of expat workers to 20 per cent of its total population in 10 years.
[6] As long ago as 2004, Saudi’s Shura Council stipulated that by 2007, 70 per cent of the country’s workforce would have to be locals to reduce dependence on foreign workers, recapture remittances that would otherwise flow out of the country, and reinvest.
[14] The press is full of figures of how Saudi Arabia over the last four months has deported more than 200,000 foreigners staying illegally, how they are stamping exit visas post haste in a manner that will deny those being turned away a chance to work in any other Gulf country, how foreigners are locking themselves up in rooms without water and food fearing arrest or worse.
http://newindianexpress.com/opinion/article1533803.ece
குறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இலங்கை, இஸ்லாம், கக்கூஸ், குப்பை, சட்டம், சிங்களம், சிவப்பு, சுத்தப்படுத்துதல், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தாகத், தீவிரவாதம், துணைவி, தேசத் துரோகம், நிகாதத், நிடாகத், நிறம், நீளம், பச்சை, பர்மா, பாத்ரூம், பிரிப்பு, பெண்டாட்டி, மஞ்சள், மனைவி, மறுப்பு, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், விபச்சாரம், விபச்சாரி, வைப்பாட்டி, ஷரீயத், ஷரீயத் கோர்ட், ஷேக், ஹக், Indian secularism, secularism
அகதி, அடையாளம், அந்நிய நாட்டவன், அந்நியன், அமைதி, அரபி, அரபு, அரேபியா, இட ஒதுக்கீடு, இஸ்லாம், கூலி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவுதி, செய்க், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, நிகாதத், நிறம், நீதி, பகுப்பு, பிரிவு, பில்லியனர், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், மார்க்சிஸம், மில்லியனர், முகத்திரை, மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மிரட்டுதல், முஹமது நபி, மேற்கு வங்காளம், வங்காளம், வளைகுடா, வாக்களிப்பு, வாக்கு, வாழ்வு, விளம்பரம், வெறுப்ப, வெளிநாடு, வெளியாள், வேலை, ஷியா, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »