Archive for the ‘பேச்சாற்றல்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

PondyLitFest-participants-program

இந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

  1. காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
  2. இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
  3. அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
  4. பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
  5. புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
  6. இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
  7. தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
  8. புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
  9. இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
  10. அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.

PondyLitFest-participants-program-2

இன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].

  1. ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
  2. கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
  3. அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
  4. இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
  5. காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!

இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.

PondyLitFest-participants-program-3

மாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].

PondyLitFest-participants-program-4

முடிவுரைஇலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:

  1. பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
  2. சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
  3. ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
  4. பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
  5. சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
  6. 1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
  7. பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
  8. சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
  9. நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
  10. அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.

© வேதபிரகாஷ்

09-09-2018

PondyLitFest-dates.folder

[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.

[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.

[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.

[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.

[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.

[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.

[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)!

மே 29, 2016

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்னபிஜேபி தோல்வி ஏன் (6)!

மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்

தமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன?: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].

  1. திராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.
  1. அரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.
  1. மக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].
  1. பெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்

  1. இடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.
  1. எப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].
  1. தமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.
  1. வலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.
  1. இருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

சேறை வாறி இறைத்தாலும் தாமரை மலரும்

  1. முதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.
  1. வீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.
  1. சமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.
  1. குறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்
  1. தீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.

மோடி ம்முன்னேற்றம், வளர்ச்சி

  1. குறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.
  1. இந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.
  1. “இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்- மேடைப் பேச்சு கலை-மோடி

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

[2]  தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.

[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.

[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.

[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.