Archive for the ‘சி.பி.ராதாகிருஷ்ணன்’ Category

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

ஜூலை 13, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

Modi tackling Dravidianism

அமித் ஷாவின் தமிழக விஜயம் – 2014: கடந்த 2014-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குச் சாவடி களிலும் குறைந்தது 100 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தார். இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்தப் பயணத்தின்போது அமித் ஷா ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 20-12-2014 அன்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்[1]. டிசம்பர் 24, 2014 அன்று முதன்முதலாக சென்னையில், பிஜேபி தொண்டர்களின் முன்பாக பேசினார்[2]. ஆனால், கட்சி உட்பூசல்களுடன் செயல்படுவதை கவனித்தார். அதனால், ஒருவேளை, ஜாதியத்துவத்தை வைத்தே, அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் போலும். இதன் தொடர்ச்சி தான், ஜாதி சங்கத் தலைவர்களுடன் நடத்தும் பேச்சு, முதலியன, ஆனால், அங்கும் 2019ற்குள் என்ன பலன் பெற்றுவிடலாம் என்ற ரீதியில் புதியதான ஆட்கள் [ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவர் என்றாலும் பரவாயில்லை, தேசவிரோத, இந்துவிரோத, இந்துக்கள் அல்லாதவர்கள்] சேர்க்கப்பட்டார்கள். “குழுக்கள்” அதிகமாகின. இவையெல்லாம், பதவி [அரசு நியமனங்கள்], பணம், அதிகாரம் என்ற பலன்களை எதிர்பார்த்து சேர்ந்த கூட்டமாகின. இதனால், 50-70 வருடங்களாக பணியாற்றி வந்தவர்கள் ஒதுக்கப் பட்டார்கள். நியாயம்-தர்மம் போன்ற கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அமைதியாக இருந்தனர். மற்றவர், போட்டி-கோஷ்டியரின் மீது சேற்றை வாறி இறைத்தனர். ஊடகங்களுக்கு தீனி போட்டு, தம்மை பிரபலப் படுத்திக் கொண்டனர்.

BJP Faction leaders, nominated, joined etc

ஆகஸ்ட் 2015ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்[3]: தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா 06-08-2015 அன்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  1. நாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல்,
  2. ரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம்,
  3. யாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன்,
  4. நாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார்,
  5. தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்,
  6. மருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன்,
  7. அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம்,
  8. சவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால்,
  9. செட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன்

உட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்[4]. இவர்களிடையே அமித்ஷா பேசியதாவது: ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம். பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகும் என்றார்.

Balasubramanian Adity, Vanathi Ladai

ஆகஸ்ட் 2017ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்: 25-12-2016 அன்று ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியல்வாதிகள், குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க தீவிரமாகி விட்டனர். கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்ட பிறகு, திமுக கடுமையாக அரசியல் குழப்பத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மே 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டாலும், வரமுடியவில்லை. பிறகு, ஆகஸ்டில் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என பல 25க்கு மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக  உரையாடினார். இதன் மூலம் பாஜக சாதி சங்களின் ஆதரவை பெற முயற்சி நடத்துகிறது.  டிசம்பர் 2017ல், 2ஜி வழக்கில் திமுக தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதாவது, திமுக ஊழல் கட்சி அல்ல என்று பிரச்சாரம் செய்யும். அதனால், என்டிஏவில் திமுக நுழைவதற்கும் பிரச்சினை இல்லை. மோடி ஜெயலலிதாவை சந்தித்தது போக, கருணாநிதியையும் பார்த்து வருகிறார். திமுக உள்ளே வந்தால், பிஜேபி விசுவாசிகளுக்கு “சான்ஸ்” குறையும், அதனால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அழகிரியை வைத்து, திமுகவை உடைத்து, அதிமுகவையும் உடைத்து, ர்ஜினியை வைத்தும் புதிய கூட்டணியை உண்டாக்கலாம்.

Faction MBJP - no takers 2016

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[5]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[6], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[7]. இவையெல்லாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட விவகாரங்கள்[8].

© வேதபிரகாஷ்

13-07-2018

 

Balasubramanian Adity, Sankara narayanan - Vanathi Ladai

[1] Shri Amit Shah address public meeting at Maraimalai Nagar,Chennai,Tamil Nadu: 20.12.2014

https://www.youtube.com/watch?v=ZyilYpqQKuA

[2] In his first ever speech made in Chennai on December 20, 2014, Shah exhorted party cadre in Tamil Nadu to end the cyclical ‘misrule’ of Dravidian parties and to take Tamil Nadu on board with Prime Minister Modi’s Mission for Growth. However, the party could not open its account in the State Assembly in the 2016 elections.

Indian Expess, Amit Shah to visit Tamil Nadu from August 22, to meet OBC leaders, Published: 30th July 2017 08:04 AM | Last Updated: 30th July 2017 08:04 AM

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/jul/30/amit-shah-to-visit-tamil-nadu-from-august-22-to-meet-obc-leaders-1635580.html

[3] தி.தமிழ்.இந்து, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்: ஜாதி சங்க தலைவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள், Published : 07 Aug 2015 09:18 IST; Updated : 09 Jun 2017 17:30 IST.

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7511314.ece

[5] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am.

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[7]  http://sathiyamweekly.com/?p=5416

[8] https://secularsim.wordpress.com/2016/05/29/from-1996-to-2016-how-bjp-faired-in-tamilnadu-elections/

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]

ஜூலை 12, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபிகாரர்கள் [4]

Amith ShaH tramslated by H Raja 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: அமித் ஷா தொடர்ந்து பேசினார், “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம்[1]. ஊழலை எதிர்த்து, சட்டம்-ஒழுங்குநிலை பேணும் கட்சிகளுடன் கூட்டு வைக்கப்படும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்[2]. பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார். கூட்டம் முடிந்து, வளாகத்தை விட்டு வெளியே வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்தது. தமிழிசை, அமித் ஷா வந்ததால் தான் மழை பெய்தது, என்றதெல்லாம் சொன்னது தமாஷாக இருந்தது. அமித் ஷா பேச்சு, தமிழக அரசியல்வாதிகளை சுசுப்பி விடத்தான் செயத்து. இருப்பினும் திராவிட கட்சிகள் அமைதியைக் காத்தன.

Angry Raja, looking Tamilisai

பிஜேபியில் உள்ள பிரிவுகளும், கோஷங்கள் மூலம் வெளிப்பட்டன: முன்பே எடுத்துக் காட்டிய படி, தமிழிசை, இக்கூட்டத்தை, இங்கு ஏற்பாடு செய்ததில் தனிப்பட்ட அக்கரை எடுத்துக் கொண்டார். அமித் ஷா வரவேற்பு, தங்கும் அறை, உரையாடல் கூட்டம் என்று அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். அமைப்பு ரீதியில் மற்றும் கட்சி ரீதியில் என்று இரு முறை பேச வாய்ப்பு பெற்றார். இருப்பினும் எச். ராஜா பேச அழைத்த போது, பேசி முடித்தபோது, அமித் ஷா, ராஜா பெயர் சொன்னபோது, தொண்டர் கூட்டம் ஆர்பரித்தது, ராஜாவின் ஆதரவு தெரிந்தது. ”இனி தமிழகத்து நிலையில் பார்த்தா, ராஜா, என்னத்தான் இருக்கிறதோ தெரியல, உன் பெயரைக் கேட்டாலே அதிருதே, ராஜா! இளசுகள் துடிக்குது” என்பது கூட்டத்தில் தெரிந்தது, அமித் ஷா என்றாலே, முகத்தை இருக்கி வைத்துக் கொண்டு, கேள்விக்கு கூர்மையாக பதில் சொல்பவர் என்று தான் பார்த்துள்ளோம்! ஆனால், ராஜா பெயர் சொன்னபோது, இரண்டு முறை புன்னகைத்தார், பாரு ராஜா, அது அலாதியானது! கனகோஷத்தில் பூத்தது. வானதி, அமித் ஷா கூட வந்தார், அவர் தான் தன் முகத்தை இருக்கத்துடன் வைத்துக் கொண்டார். இதெல்லாம், கட்சியில் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டியது. இது மற்ற ஆதரவாளர்களை நெருட செய்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மட்டும் கமென்ட் அடித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல பிஜேபி-எதிர்ப்பு செய்திகள் வெளியிட்டன.

Angry Raja, looking Tamilisai smiling

பேனர்கள், கொடிகள் வைத்ததற்கு விமர்சனம்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன[3]. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமித்ஷா 09-07-2018 அன்று சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். அமித்ஷா வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தனர். அவரை வரவேற்பதற்காக சென்னை நகரின் பல இடங்களில் வண்ண வண்ண வரவேற்பு பேனர்கள் களைகட்டின. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தூர தூக்கிப்போட்டுவிட்டு பாஜக சென்னையின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேனர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. இப்படி புலம்பி தள்ளினாலும், பிறகு அமைதியாகி விட்டன.

BJP internal problems

அமித் ஷா பேச்சிற்கு உஷாராக இருந்த திராவிட கட்சிகள்: திமுக ஏற்கெனவே பிஜேபியுடன் கூட்டிருந்தது, ஆகவே, ஸ்டாலின் அமைதியாக இருந்தது புரிந்தது. மறுபடியும் கூட்டு வைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையும் உள்ளது. இந்திராவை கொலை செய்ய முயன்று, அப்படியே கால்களில் விழுந்து சரணாகதி ஆன, குரூர கருணாநிதி கூட்டம் தான் இன்று அமித் ஷாவை எதிர்க்கிறது. ஆனால், கூட்டணி என்றால், “அந்தர்-பல்டி” அடிக்கும். அமித்ஷா எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு என்பதை விட, இந்து-எதிர்ப்பு கொண்டு, திராவிட-துலுக்கப்-கிருத்துவ-கம்யூனிஸ்ட் கூட்டம் செயல்பட்டதும் தெரிந்தது. ஏனெனில், பிஜேபி கூட்டணியில், அவர்களுக்கு சீட் கிடைக்காது. அடையாளம் கேட்டதால் தான், கொதித்த ஊடக செக்யூலரிஸ்டுகள், பொங்கி, அடங்கி விட்டன, ஆனால், செய்தி-வெளியீடு காட்டிவிட்டது. அமித்ஷாவின் பேச்சின் ஆழத்தை உணர்ந்த செக்யூலரிஸ்ட்-இந்து-விரோத ஊடகங்கள் கதிகலங்கி விட்டன. பேசியதை அப்படியே போட துணிவில்லை. சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை என்று புலம்புகிறது பிபிசி. சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக என்று ஒப்பாரி வைக்கிறது இன்னொரு ஊடகம்.  70 ஆண்டுகளாக “அதே குட்டையில் ஊறி, நாறிவரும் கொழுத்த மட்டைகள்” வெட்கமில்லாமல் உண்மை மறைத்து நாடகம் ஆடுகின்றன! தமிழகத்தில் பிஜேபி காலூன்ற முடியாது என்றெல்லாம் இனி பேச முடியாது. ஆக “தமிழகத்தில் பிஜேபி” என்பது உண்மையாகி விட்டது, இனி ஜால்ரா போட வந்து விடுவார்கள், கூட்டம் பெரிதாகும், கூட்டணிக்கு பேரமும் வரும். கருணாநிதி மற்றும் நடந்தால், மெரினாவில் கூட்டம் போட்டு, “தமிழர் தலைவா வருக, நிலையான ஆட்சி தருக,” என்று மோடியை வரவேற்றுப் பேசுவார். கெட்ட கட்சியில் நல்ல தலைவர் என்றோம், இன்று உலக தலைவர் என்போம், “பாராள வந்தாய் நீ, பார்லிமென்டை அல்ல” என்று தூக்கிப்பிடிப்போம்! லேடியை அடக்கிய மோடி, உலக மாடிகளை கடந்த மோடி, அன்று மெரினா பக்கம் வாடி என்றாள், அண்ணன் மோடி வந்தே விட்டார், நீ போடி! என்றெல்லாம் பேசுவர்.

Stalin, Mrs-Mr Raja, Durai murugan

தமிழக பிஜேபி முதலில் உட்பூசல்களிலிருந்து விடுபட்டு ஒற்றுமைக்கு வர வேண்டும்: பிஜேபியில் இருக்கும் உட்பூசல்கள், பிரிவினைகள் 2014லிருந்து மாறவே இல்லை[5]. மேடைகளில் எதிரும்-புதிருமாக உட்கார்ந்து கொள்வது மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களில் கோஷ்டிகளை உருவாக்கி பிரச்சினையைப் பெருக்கி வருகிறார்கள்[6]. ஒரு ஆதிக்க ஜாதியினர், இன்னொரு ஜாதியினரை தாக்கி வருகின்றனர். தனி நபர் தாக்குதல் அளவிலும் இறங்கி விட்டனர். திராவிட பாணியில், பலமுறை “பார்ப்பன எதிர்ப்பிலும்” இறங்குகிறார்கள். இதனால், மேலும் பிஜேபி ஆதரவாளர்கள் பிளவுபட்டு கிடக்கிறர்கள். கன்னியாகுமரி பலத்தை வைத்துக் கொண்டு, பிஜேபி பலத்தை வளர்ப்பதை விட, மத்திய திட்டங்கள் அங்கு வர திட்டம் போட்டுள்ளதால், போலியான ஆதரவு-எதிர்ப்பளார்பாட்டங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு முறைகளை சீரழித்து வருகின்றன. வேண்டாம் என்றாலும், இல்லை என்றெல்லாம் பேசினாலும், குறிப்பிட்ட ஜாதி-மதம் ஆதிக்கம் வெளிப்படுகிறது. அரசியல் நியமனங்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களுக்கே செல்கின்றன. கோடிகளில் துறைமுகம், 8-வழி சாலை போன்ற திட்டங்கள் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட கான்ட்ராக்டர்கள், முதலியோர் குஷியாகி உள்ளனர். இதில் எதிர்ப்பவர்கள் “கமிஷன்” கிடைக்காதவர்கள் தாம். ஆக, ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் வாரிசு அரசியலை இவர்கள் எவ்வாறு போக்கி, ஒற்றுமையை வளர்க்கப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-07-2018

CPR, Lakhsmanan, Raja, Murali, Tamilisai, POn.Radha

[1] தினமணி, தமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம், By DIN | Published on : 09th July 2018 08:33 PM

[2]http://www.dinamani.com/tamilnadu/2018/jul/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2956499.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக!, Posted By: Kalai Mathi Updated: Monday, July 9, 2018, 18:01 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-workers-keeps-so-many-banners-welcome-amitshah-324483.html

[5] இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது – Daily Pioneer, CARTEL LEADING TN BJP, ALLEGES SENIOR LEADER, Thursday, 05 May 2016 | Kumar Chellappan | CHENNAI.

[6] https://www.dailypioneer.com/nation/cartel-leading-tn-bjp-alleges-senior-leader.html