Archive for the ‘தந்திரம்’ Category

திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?

மார்ச் 22, 2013

திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?

2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.

சிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன?: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு..வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.

முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பேரன்வீட்டில்ரெய்ட்குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.

அர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.

விவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].

தி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் .அன்பழகன், பொருளாளர் மு..ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் .மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.

திஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணுசொல்வது என்ன?: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.

“Mr. Stalin prevailed on his father to take a final decision on the night of March 18. By announcing withdrawal of support in the forenoon of Tuesday, Mr. Karunanidhi also pre-empted any attempt by the Congress leadership to come up with a compromise formula to convince him into staying with the UPA,” party sources said.“Mr. Stalin’s insistence was the final straw. He convinced our leader that reconsidering our position will be political suicide and that we will lose our credibility among the people,” said a senior leader.

Party sources said that after the three Union Ministers — P. Chidambaram, A.K. Antony and Ghulam Nabi Azad — held parleys with Mr. Karunanidhi and left for Delhi, Mr. Stalin stayed back with his father and persuaded him to snap ties without any delay.

“At one point, he even threatened to quit his position in the party since as a future leader he has to shoulder more responsibility than anyone else,” said leaders who were close to Mr. Stalin.

உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.

Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi has disputed a report published in The Hindu that said party treasurer M.K. Stalin threatened to quithis position if the DMK did not snap ties with the United Progressive Alliance.In a statement here on Thursday, Mr. Karunanidhi said the DMK functioned on the basis of democratic principles and major decisions were not made by individuals.

He said that after Union Ministers P. Chidambaram, Ghulam Nabi Azad and A.K. Antony had met him on the Sri Lankan issue, he held discussions with senior party leaders, including K. Anbazhagan and Durai Murugan, before taking a decision on leaving the UPA.

இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.

கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா?: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன? அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

22-03-2013


[2] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[6] Sources say the searches are being conducted after the Directorate of Revenue Intelligence complained that the DMK leader hadn’t paid the duty for some of the cars owned by him.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[11] Mr Radhakrishnan, Spokesperson of the DMK, told NDTV, “Mr Stalin has always played an important role. He even went to the Unite Nations with our MP Mr. TR Baalu and met Mr Naveneethan Pillai to present resolutions passed by the Tamil Eelam Supporters Organisation. He represented our Thalaivar’s memorandum there”.

http://www.ndtv.com/article/south/how-stalin-shaped-the-dmk-s-exit-from-government-345010

[13] Karunanidhi, sarcastically has said he believes a central minister (Chidambaram) when the central minister says the government didn’t know what was going on. Yes ! so do we !

http://www.business-standard.com/article/current-affairs/cbi-raid-at-stalin-s-house-who-s-calling-the-shots-113032100292_1.html

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 21, 2013

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group

இலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன?

DK attacked Ayodhya mantap with petrol bombs

ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:

“Our Party supports the cause of the Tamil brothers and sisters. We are deeply concerned about the atrocities meted out to a section of Tamil population in a foreign country.Local sentiments and their causes sometimes become very critical. We are supporting their cause. At the same time, our Party follows a policy that we should not interfere into issues involving external relations with foreign countries. We leave it for the Central Government to decide on such issues. However, the concerns of the state and the sentiments of the people must be kept in view by the Centre, before taking any decision pertaining to foreign country.”

மாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].

புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Salem Kanchi mutt attacked

எளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்?: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.

Raghavendra Brindavan attacked - Rama idol uprooted and thrown

© வேதபிரகாஷ்

21-03-2013


[5] A group of pro-Tamil activists today barged into the Aurobindo Ashram, damaged furniture and smashed glass panes after reportedly attacking and injuring the watchman. Police said activists of the Periyar Dravidar Kazhagam (PDK) also smashed flower pots and damaged the notice board, a clock and the ashram emblem atop the main gate. They also raised pro-Tamil slogans, police said, adding that the reason for the attack was not known.

http://www.thehindu.com/news/national/protamil-activists-attack-aurobindo-ashram/article4534302.ece

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

ஓகஸ்ட் 7, 2012

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

சோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.

சோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.

நவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.

சந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.

ஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.

சொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ?

பிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்!

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

ஓகஸ்ட் 4, 2012

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

 

முஸ்லீகள் காளியின் பெயரால் நரபலி கொடுத்தார்களாம்: இரண்டாண்டுகளுக்கு முன்பு, ஜூலை மாத வாக்கில் (ஜூலை 2010) இந்த குரூர நிகழ்சி நடந்தது. முதலில் தர்காவில் குழந்தையை நரபலிக் கொடுத்து பூஜை முடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. சன்-டிவி போன்ற செனல்கள் கூட விவரமாக வீடியொ-செய்திகளை வெளியிட்டது. ஆனால், திடீரென்று “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று கொலையாளி சொன்னதாக செய்தி வந்தது[1]. ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது[2]. நூற்றுக்கணக்கான குழந்தைகள் மறைவதற்கு நரபலி காரணமா என்ற சந்தேகமும் எழுந்தது[3]. மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டும் குழந்தைகள் கொலைசெய்யப் படுகின்றன[4]. அவ்விதத்தில் காணாமல் போன குழந்தைகள் விஷயத்திலும் மற்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன[5].

 

மனைவியின் நோயையை நீக்க நரபலி கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை: மதுரையில் ஒருவயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில் கணவன், மனைவிபோல் வாழ்ந்த இருவருக்கு மதுரை கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தூத்துக்குடி, காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கபூர் (30). அவர் மனைவியை விவாகரத்து செய்தவர். ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி, சமையல் வேலை செய்து வந்த இவருக்கும், அங்கிருந்த ரமீலாபீவிக்கும் (28), பழக்கம் ஏற்பட்டது. ரமீலாபீவி கணவரை விவாகரத்து செய்தவர். இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்தனர்.

 

நரபலி கொடுத்தது, ரத்தம் குடித்தது: தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், செல்வந்தராகலாம் எனக்கருதி, அத்தகைய குழந்தையை தேடி மதுரை வந்தனர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் 21 நாட்கள் தங்குவதற்கு இருவரும் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.  மதுரை எஸ்.ஆலங்குளம் கோவலன் தெருவை சேர்ந்த கவுகர் பாட்ஷாவின் மனைவி சிரின் பாத்திமா. இவர் தனது ஒரு வயது குழந்தை காதர்யூசுப், தாய் சுல்தான் பீவியுடன், 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்கினர். அங்கு மறுநாள் இரவு, தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, காதர்யூசுப்பை அப்துல்கபூரும், ரமீலாபீவியும் கடத்தி, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் கழுத்தை அப்துல்கபூர் அறுத்து ரத்தத்தை வாளியில் பிடித்தனர். ரத்தத்தையும் குடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன[6]. தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். ஏர்வாடி சோமன் நகரில் 2 நாட்கள் பூஜை செய்து, அங்கு குழந்தையின் உடலையும், திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரையில் தலையையும் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியுள்ளனர்[7].

 

குழந்தையை பெற்றொர் புகார், குற்றவாளிகள் கைது: சிரின் பாத்திமா புகாரின் பேரில், மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்குவதற்கு பெயர் பதிவு செய்துவிட்டு மாயமான அப்துல் கபூர், ரமீலா பீவியை தேடினர். அவர்கள் கொடுத்த காயல்பட்டினம் முகவரியில் விசாரித்த போலீசார், ஏர்வாடியில் இருப்பதை அறிந்து இருவரையும் கைது செய்தனர்[8].  இவ்வழக்கு மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி எம்.சுரேஷ் விஸ்வநாத் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவமுருகன் ஆஜரானார்.

 

தண்டனைக் கொடுக்கப் பட்டது: குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர், அவர்கள் விளக்கியபடி குறிப்பீட்ட இடங்களுக்குச் சென்று, ஆதாரங்களை போலீஸார் திரட்டினர். குழந்தையை கடத்தியதற்காக அப்துல், கபூர், ரமீலாவிற்கு ஆயுள் தண்டனை, கொலை செய்ததற்காக இருவருக்கும் மற்றொரு ஆயுள்தண்டனை[9], தடயங்களை மறைத்ததற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா 2000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்[10].

 

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் ஏனிப்படி நரபலிகள் தொடர்கின்றன: கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட கழகம் மற்றும் திமுக, அதிமுக முதலிய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய சித்தாந்தக் கூட்டாளிகள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற இந்து-எதிர்ப்பு கோஷ்டிகள் அத்தகைய பகுத்தறிவோடுதான் நடந்து கொண்டு வருகிறார்கள் ஊடகங்களில் ஊலையிட்டு வருகிறார்கள். பிறகெப்படி அத்தகைய ஞானப் பிழம்புகள் நரபலி கொடுக்க முடியும்? பெரியாரின் வாரிசான கலைஞரின் மூத்த வாரிசின் மண்ணான மதுரையில் எப்படி நரபலிகள் கொடுக்கப்படமுடியும்? திமுகவினரே[11] அதில் எப்படி துணைப் போக முடியும்? “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று ஒரு முஸ்லீம் சொன்னது போல, ஒரு பெரியாரிச, பகுத்தறிவாளனும் அவ்வாறே சொன்னால் என்னாவது? இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜலட்சுமி என்ற குழந்தையைக் கொன்று ரத்தம் தூவியவனின் அயூப் கான்[12]. இங்கு மதச்சாயம் பூச விரும்பவில்லையென்றாலும், எப்படி முஸ்லீம்கள் இக்காரியங்களில், அதிலும் பகுத்தறிவாளனாக, பெரியார் பாதையில் செல்லும், திமுகவின் அதிகாரியாக, மேலாக ஒரு முஸ்லீமாக இருந்து அத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்? ஒருவேளை ஆதிசங்கரர் எதிர்த்துப் போராடிய நரப்ச்லிக் கூட்டத்தார் இவர்கள்தாம் போலும்[13].

 

வேதபிரகாஷ்

04-08-2012


[6] Times of India, Fakir ‘beheads’ toddler, ‘drinks’ his blood in Tamil Nadu, TNN Jul 26, 2010, 12.33am IST

http://articles.timesofindia.indiatimes.com/2010-07-26/india/28315709_1_dargah-child-sacrifice-exhumed

[7] “Gafoor and Ramala Beevi took the child to a lodge in Ramanathapuram. When the child started crying, Gafoor slit his throat. He then beheaded the boy and buried the head at Kattupallivasal near the Erwadi dargah. The couple then took the head to Thoothukudi where they buried it near the Kallamozhi dargah,” Chidambaram Murugesan, inspector and head of the special team investigating the case said.

[12] According to the police, A. Ayub Khan of Katchakatti, the DMK functionary, sprinkled the child’s blood around a newly constructed building as part of fulfilling a vow………….Ayub Khan, who was then the deputy chairperson of the Madurai district panchayat, was constructing a new building for a women’s college. As he could not complete construction even after two years, he was advised to sprinkle the blood of a girl child around the campus. Ayub Khan offered Rs.8.5 lakh to carry out the task. Mahamuni and Karuppu, the butchers, were lured by broker A. Murugesan (54) of Vadipatti and Ponnusami (22) and Lakshmi……….Ayub Khan had confessed to sprinkling the blood on the college campus, the SP said.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3364973.ece

[13] ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அரேபியர்களுக்கு போதித்தார் என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. காளாமுகர்கள், நரபலி கூட்டத்தார் முதலிரோரையும் எதிர்த்ததாக கூறுகின்றன.

காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!

ஜூலை 28, 2010

காளிஉத்தரவுப்படிதான்நரபலிகொடுத்தோம், கொலைக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!

கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்: “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாறி வருகின்றன.

  • மந்திரவாதி, தாந்திரிக்[1], ஃபகிர்[2] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[3].
  • அசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;
  • மனைவி, காதலியாகி, கள்ளக்காதலியாகிவிட்டாள்;
  • திடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்!
  • பலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………
  • காளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.
  • 15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
  • தர்கா லாட்ஜாகிறது, வீடாகிறது;
  • குரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்!

கள்ளக் காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி காளி கனவில் வந்து சொன்னதால் கள்ளக்காதலியின் நோய் தீர்க்க குழந்தையை நரபலி கொடுத்தேன் என்று “சைக்கோ” மந்திரவாதி பேட்டியளித்துள்ளார். மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் செரின்பாத்திமா. இவரது கணவர் கவுஸ்பாஷா சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது 1 1/2 வயது ஆண் குழந்தை காதர்யூசுப் என்பவனை “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் கடத்தி சென்று துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்தான். நேற்று அந்தகுழந்தையின் தலை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி பகுதியிலும், உடல் பாகங்கள் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசல் பகுதியிலும் தோண்டி எடுக்கப்பட்டன. குழந்தையை நரபலி கொடுத்ததாக “சைக்கோ” மந்திரவாதி அப்துல்கபூரும், அவனது கள்ளக்காதலி ரமலாபீவியும் கைது செய்யப்பட்டனர்.

“ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்?”: முஸ்லீம் என்று இந்தியாவில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது, அப்படியென்றால், அவர்கள் பேசுவதும், எழுதுவதும், கலாட்டா-ஆர்பாட்டம்-போராட்டம் என்றெல்லாம் செய்து மிரட்டுவதும், ஆனால் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறிவருவதற்கும் சம்பந்தமேயிலாது இருக்கிறதே? அதாவது, இருப்பதை மறைத்து அப்படி நாடகம் மாடுகிறார்களா, தமது குற்றங்களை மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா? இப்பிரச்சினை இப்படி ஊடகங்களில் அல்சப்படும்போதுதான், முஸ்லீம்களும் “ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்?”, என  ஜூலை[4] 24 மற்றும் 25 தேடிகளில் 2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில்[5] வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஏற்பட்டதாம்! ஆனால், இப்பிரச்சினைப் பற்றி விவாதித்தார்களா என்று தெரியவில்லை!

சமதர்ம பூஜையா, செக்யூலார் தந்திரமா? குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள், லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், பாக்கெட் அளவிலான குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு போன்ற பொருட்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர்[6]. நள்ளிரவு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் “சைக்கோ” மந்திராவதி அப்துல் கபூர் பூஜை செய்ததாக தெரிவித்தான். குழந்தை தலை மற்றும் உடல் பகுதி எலும்புகள் சேர்க்கப்பட்டு சூப்பர் இம்போசிங் செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முஸ்லீம் மந்திரவாதி பேட்டி: ஏர்வாடி தர்காவிலே காதல் ஆரம்பம்: குழந்தை உடலை தோண்டி எடுத்தபோது “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் அவனது கள்ளக்காதலி ரமலாபீவி ஆகியோரையும் போலீசார் அங்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் கடந்த 1993-ம் ஆண்டு ஏர்வாடி தர்காவில் தங்கினேன். அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்து விட்டேன். பின்னர் காயல்பட்டினம் சென்றேன். அங்கு ரமலாபீவியை சந்தித்தேன். ரமலாபீவியும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரித்து விட்டதால் நாங்கள் 2 பேரும் கணவன்-மனைவிபோல வாழ்ந்தோம். ரமலாபீபிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அவரது நோயை குணமாக்குவதாக கூறினேன். இனரென்ன டாக்டரா-மருத்துவரா என்று கேட்கவில்லை போலும்!

காளி உத்தரவுப் படி தான் நரபலி கொடுத்தோம், கொலைக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்குல் கொடுங்கள்: பின்னர் மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு வந்து தங்கினோம். அங்கு தங்கி இருந்தபோது அதிகாலையில் வந்தகனவில் காளி தோன்றினார்[7]. தலைப்பிள்ளையாக பிறந்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தால் ரமலாபீவியின் நோய் குணமாகும் என்று காளி கூறினார். இதனை நம்பிய நான் ரமலாபீவியை எழுப்பி சொன்னேன். பிறகு 2 பேரும் சேர்ந்து 1 1/2 வயது குழந்தை காதர் யூசுப்பை கடத்தி கொண்டு வந்தோம்.  காளி உத்தரவுப்படிதான் குழந்தையை நரபலி கொடுத்தோம். கொலைக்கும், எனக்கு சம்பந்தம் இல்லை. தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள். இவ்வாறு “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் கூறினான்.  இதனை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அவன் வெறிபிடித்தவன் போல கூச்சலிட்டான். பின்னர் பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அவனை அழைத்து சென்றனர்.

முத்துப்பேட்டை  அலியார் என்ன அறிவுரைகளை அளித்தார்?: விசாரணையில் அப்துல்கஃபூர், கடந்த 2009ல் முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் ஊரில் அலியார் (60) என்பவரை சந்தித்ததாகவும், அவரது அறிவுரைகளைக் கேட்டப் பிறகு[8], மாந்திரீக வலிமையில் குழந்தைகளை நரபலி கொடுக்கும் உணர்வும், கனவுகளும் வந்தன என்று போலீஸாரிடம் தெரிவித்திருந்தான். இதன்பேரில், அலியாரிடல் விசாரணை நடத்த தனிப்படை போலீசர் நேற்று முத்துப்பேட்டை விரைந்தனர். ஆக இந்த அலியார் என்ன சொன்னார் என்றும் பார்க்கவேண்டியதுள்ளது. ஏர்கெனவே முஸ்லீம் நண்பர்களே, தர்காக்களில் பல காமக்களியாட்டங்கள் நடந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளார்கள்[9].

15 நாள் பூஜை நடத்திய மந்திரவாதி: குழந்தையை நரபலி கொடுத்த பின்னர் 15 நாட்கள் பூஜை நடத்தியுள்ளார் அப்துல் கபூர் என்பது தெரிய வந்துள்ளது[10]. திருச்செந்தூர்-குலசேகரம் ரோட்டில் கல்லாமொழி நாயகம் ஹிலுருநபி தர்கா உள்ளது. இதனை சுற்றி 6 வீடுகள் உள்ளன. இவற்றில் 3 வீட்டில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். வெளியூரில் இருந்து தொழுகை நடத்த வருபவர்களுக்கு இங்குள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் உதவி செய்வார்கள். கடந்த 4-ம் தேதி அப்துல் கபூர், ரமலா பீவியுடன் இங்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் கையி்ல் சில்வர் தூக்குவாளி வைத்திருந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் அப்துல் கபூர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

கள்ளக்காதலியுடன் அர்தஜாம-நடுஇரவு பூஜைகள்: பின்னர் இரவு 9 மணி அளவில் தர்கா அருகே உள்ள உடைந்த ஓட்டு வீட்டில் வைத்து பூஜைகள் நடந்துள்ளது. இந்த பூஜை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதன்பிறகு மறுநாள் காலை தாங்கள் கொண்டு வந்த தூக்கு வாளியுடன் அருகில் உள்ள காட்டு பகுதியில் சென்று பூஜை நடத்தியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் வரை பூஜை நடந்துள்ளது. இந்த பூஜை மூலம் அதீத மாந்திரீக சக்தி கிடைக்கும் என்று நம்பி இவ்வாறு செய்துள்ளனர். காதர் யூசுப்பை கடந்த 2-ம் தேதி மதுரையில் இருந்து கடத்தி 4-ம் தேதி கல்லாமொழிக்கு வந்துள்ளனர். இங்கு வந்து 2 நாட்கள் கழித்து குழந்தையைக் கொன்றுள்ளனர். அதாவது ஆறாம் தேதி நரபலியிட்டிருக்கிறான்.

நரபலி ஏரல் லாட்ஜில்தான் நடந்திருக்கிறது[11]: மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.

குழந்தைத் தலையை தர்காவில் புதைத்தால் விஷேசமா? எனது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதலி ரமீலாவும் உடந்தையாக இருந்ததை ஒப்புக்கொண்டாள்: இவருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

முஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது, பரப்புவது முதலியன: ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்:, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்.


[1] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது!

[2] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது.

[3] ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.

[4] ஜூலை என்று அவர்கள் குறிப்பிடவில்லை, இல்லையென்றால் மாற்றிக்கொள்ளப்படும்.

[5] http://kky30100.wordpress.com/2010/07/27/ஷிர்க்-மற்றும்-பித்அத்-ச/

[6] கள்ளக்காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி , திங்கட்கிழமை, 26 ஜுலை 2010,

http://www.newindianews.com/view.php?2b3e0AA22eeYYDN30ecI4OXR2cddQQAKccd3AmM064b44xlmmaa43ffmA3d0e2y46600

[7] ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

[8] தினகரன் 27-07-2010, http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=11419&id1=4

[9] http://hrmanson.blogspot.com/2010/06/blog-post_1375.html

http://tmpolitics.wordpress.com/

[10] http://thatstamil.oneindia.in/news/2010/07/26/human-sacrifice-head-exhume.html

[11] தினமலர், குழந்தையை கொன்று ரத்தத்தை மண்சட்டியில் வறுத்தேன், ஜூலை 27, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=47984

[12] http://kadayanalluraqsha.com/?p=3187

[13] http://www.coimbatore.tn.nic.in/tamilversion/tourism_t.html

[14] http://siddhayogicscience.com/tamil/books.html