சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!
இந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:
இந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:
- ஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா?
- இந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா?
- இறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?
உண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.
செக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.
அரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும்! ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.
திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.
© வேதபிரகாஷ்
19-06-2016
[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!, பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.
[2]http://www.dhinasari.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9353-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html
[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST
[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article7556712.ece
[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 133 மாணவ–மாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST
[6] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf
[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..
[8]http://www.dinamani.com/india/2015/08/23/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5/article2988276.ece?service=print
[9] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf
[10]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.
கண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.