இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!
இந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘இந்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.
செக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
மதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்திகளாக வந்திருக்கின்றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.
19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].
சமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும்? என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
செக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்?: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.
© வேதபிரகாஷ்
27-10-2019.
[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2397791&Print=1
[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019
[4] https://www.bbc.com/tamil/india-49013910
[5] The Hindu, Court ordeers Teenager to donate Quran over offensive Facebook post, PTI, RANCHI, JULY 16, 2019 21:20 IST, UPDATED: JULY 17, 2019 14:49 IST
[6] https://www.thehindu.com/news/national/other-states/donate-quran-courts-bail-condition-to-woman-arrested-for-offensive-post/article28491887.ece
[7] Indian Express, Donate Quran, court’s bail condition to Jharkhand woman arrested for offensive Facebook post targeting Muslims, Published: 16th July 2019 11:46 PM | Last Updated: 17th July 2019 12:51 AM.
[8] http://www.newindianexpress.com/nation/2019/jul/16/donate-quran-courts-bail-condition-to-jharkhand-woman-arrested-for-offensive-facebook-post-targeti-2004857.html
[9] Times of India, Ranchi court withdraws order to distribute Quran for bail over ‘communal’ FB post, Jaideep Deogharia | TNN | Updated: Jul 19, 2019, 13:29 IST.
[10] https://timesofindia.indiatimes.com/city/ranchi/ranchi-court-withdraws-order-to-distribute-quran-for-bail-over-communal-fb-post/articleshow/70267057.cms