பிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை!
காங்கிரஸ்ஆட்சியைபடிக்கிறதுகருத்துகணிப்புகளில்தகவல் (05-05-2013): கர்நாடகாவில், தேர்தலுக்கு பன் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், “காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 223 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. சில தனியார், “டிவி’ சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பல், தேர்தலுக்கு முந்தைய, கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பா செய்து காட்டி விட்டார் – காங்கிரஸ் திட்டம் வெற்றி பெற்று விட்டது, ஊழல் வென்று விட்டது: ஊழல் கட்சியின் தலைவி மற்றும் மகன் முதலியோர் கர்நாடகத்திற்கு வந்து, பிஜேபி கொள்ளையடுத்து விட்டது, கோடிகளை அள்ளிவிட்டது, ஊழலை ஊக்குவித்தது என்று பாட்டுப் பாடியது தெரிந்த விஷயமே. ஆனால், அவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பெங்களூரு அறிவுஜீவிகள் என்று கேட்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எடியூரப்பா பிறகு எப்படி பிஜேபி ஓட்டுகளைப் பெற்றுள்ளார். ஊழலில் திளைத்திருந்தால், அவரும், காங்கிரசூம் வெற்றியே பெறக்கூடாது. ஆனால், கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளனவே? அப்ப்டியென்றால், கர்நாடக மக்கள் ஊழல் காங்கிரஸுக்கு ஓட்டளித்த மர்மம் என்ன?
நாராயணசாமியும், கூடங்குளம்எதிர்ப்பும்: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின்கழகம் ஆகியவை இணைந்து இயக்குகின்றன. இந்த அணுமின்நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, ‘இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
கிருத்துவக்கூட்டங்களின்போலிஎதிர்ப்பும், காங்கிரசும், வழக்குநடத்தும்விதமும் (13-09-2012): சுப்ரீம் கோர்ட்டில் அணு மின்திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம், ‘சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்’ என கோர்ட்டு கூறியது.
கூடங்குளம்அணுவுலைஇயங்கதடைநீக்கம் (06-05-2013): தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது, இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகிற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு 06-05-2013 (திங்கள்கிழமை) அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
கூடங்குளம்அணுமின்நிலையம்பாதுகாப்பாகஉள்ளது (06-05-2013): பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.
மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது (06-06-2013): கர்நாடகத்திற்குப் பிறகு மத்திய பிரதேசம் – கபில் சிபல் மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று போபாலில் பேசியுள்ளார்[1]. அதுமட்டுமல்லாது, ஊடகங்களும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று கோபித்தார். “உங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கப்படுகிறது”, என்று கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சீறி விழுந்தார். சட்டப் பண்டிதரான இவருக்கு எப்படி தனது கட்சியின் கோடி-கோடி ஊழல்கள் எல்லாம் மறந்து போயிற்று என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
06-05-2013