Archive for the ‘தலித்துஸ்தான்’ Category

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம்என்ன? (1)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? (1)

உள்ஒதுக்கீட்டிலும்உள்ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –

  1. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  2. 1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்து கூறியது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட முடிவு செய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] நக்கீரன், தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” – செபி பேராய தலைவர்!, நக்கீரன் செய்திப்பிரிவு  பி.அசோக்குமார், Published on 09/05/2022 (16:28) | Edited on 09/05/2022 (16:39)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-need-repeal-law-denies-permission-build-church-and-gather-people

[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.

[4] தினத்தந்தி, தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம்தமிழக அரசு அரசாணை, Jun 1, 7:24 pm.

[5] https://www.dailythanthi.com/News/State/welfare-board-for-church-employees-government-of-tamil-nadu-712597

[6] தமிழ்.இந்து,  கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கு நலவாரியம், செய்திப்பிரிவு, Published : 02 Jun 2022 06:39 AM, Last Updated : 02 Jun 2022 06:39 AM

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/808626-welfare-for-christian-church-preachers-1.html

[8] தினகரன், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல், 2021-09-09@ 00:11:32

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=703789

சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

ஜூலை 26, 2016

சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும்,  துவேஷிப்பதும் ஏன்?

Swami Vivekananda and Ingersoll -

திராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன?” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..

Jaya invited by the RKM mutt Swamijis

திக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது?: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2].  ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.

  1. விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம்அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].
  2. விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.
  3. “சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது?”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது! பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.
  4. அதிலென்ன வீரத்துறவி விவேகானந்தர்? வீரம் இருந்தால் துறவியாக முடியாது! துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது!. விவேகானந்தர் டுபாக்கூரோ?” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].

இதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.

Karu participating Xian function

விவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா? இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].

Jayalalita inagurated 150th Swami Vivekananda celebration 2013

“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்?: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.

Swami Vivekananda is a “Paraiah” – Shudra from Kayasth community. When he became a Sanyasi, some social reformers challenged him as to how a Shudra could become a Sanyasi. He gave them suitable reply with supporting evidences from scriptures proving that Shudras were nothing but Kshatriyas: “I am not all hurt if they call me a Shudra. It will be a little reparation for the tyranny of my ancestors over the poor. If I am a Paraiah, I will be more glad, for I am the disciple of a man, who – the Brahmn of Brahmins – wanted to cleanse the house of a Paraiah[9].

M. Karunanidhi inaugurating -Vivekananda Cultural Heritage of India exhibition at the renovated Vivekananda Illam 20-12-1999 .PTI

சூத்திரன் யார்? – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.

He started Sri Ramakrishna Mission only to liberate oppressed and suppressed: “From the Math will go out men of character who will deluge the world with spirituality…………The Shudra caste will exist no longer – their work being done by machinery[10]. He defines “Shurahood” as the status of people “engaged in serving another for pay”. Then, perhaps most of the higher castes are “Shudras” and the real shudras are not, as they work for themselves and not for others to get any pay.

© வேதபிரகாஷ்

26-07-2016

Jayalalita inagurated 150th Swami Vivekananda celebration 2013.RKM

[1] http://www.viduthalai.in/home/viduthalai/medical/106888-2015-08-14-10-24-34.html

[2]  http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/55121-2013-02-19-10-57-21.html

[3] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/54384-2013-02-08-12-25-25.html

[4] http://www.viduthalai.in/component/content/article/137-2012-03-26-08-36-14/54655-2013-02-12-10-54-45.html

[5] http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/54093-2013-02-04-10-14-14.html

[6] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/52692–150.html

[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00  IST

[8] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=1106&ncat=TN&archive=1&showfrom=4/25/2008

[9] Swami Vivekananda, Complete Works, Vol. III, p.211.

[10] Ibid, Vol. V, p.316

நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்தி வராத பெரியார் பித்துகள்!

ஜூன் 28, 2013

நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்தி வராத பெரியார் பித்துகள்!

பெரியாருக்குப் பாடம் புகட்டியும் பாடம் கற்காக திராவிட பிஞ்சுகள்: ஜின்னா பெரியாரை நன்றகவே கடிந்து கொண்டார், தான் முஸ்லிம்களுக்காகத் தான் பாடுபட முடியும், திராவிடர்களுக்காக பாடுப்பட முடியாது. பெரியாருக்கு ஸ்திரமான மனது இல்லை என்றெல்லாம் கடிதங்களில் சாடியுள்ளார். இருப்பினும் உண்மைகளை மறைத்து, மறந்து திராவிடக் கட்சிக்கள் முஸ்லிம்களை தாஜா செய்து கொண்டே தான் இருக்கின்றன. “ஏய் வராதே போ” என்றாலும் போய்-போய் ஒட்டிக்கொள்ளும் புத்தி என்னவென்று தெரியவில்லை. காபிர்களை அவர்கள் அப்பட்டித்தான் நடத்துவார்கள் என்பதனை எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை[1].

தமிழர்களை ஏமாற்றி இரண்டு வீடுகளை அபகரிக்கும் முஸ்லிம்கள்: சமீபத்தில், இலங்கைத் தமிழர்களே எப்படி இந்திய அரசாங்கம் ஒதுக்கும் வீடுகளை முஸ்லிம்கள் இருமுறை அபகரிக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே நோட்டீசுகள் விநியோகித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[2]. ஏழைநாடான இந்தியா அப்பொழுது ஏன் இலங்கைக்கு உதவுகிறது என்றும் கேட்கவில்லை[3]. ஆனால், வெல்லிங்டனில் இலங்கையினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்க்கின்றனர். அப்பொழுது, தமிழகத் தலைவர்கள், இனமான போராளிகள், திராவிட கத்திகள், போர்வாள்கள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை.

இஸ்லாமியநிதாகத்சட்டத்தை ஏன் கருணாநிதி எதிர்க்கவில்லை?:  அரபு நாடுகளில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “சவூதி அரேபியாவில் நிதாகத் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  அந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைக்கு வரும் போது , அந்த நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பத்து சதவிகித இடங்களை சவுதி அரேபியர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் இதன் அடிப்படையில், இப்போதே அதனை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டைச் சேர்ந்த பத்து சதவிகிதத்தினரை பணிக்கு அமர்த்துகின்ற காரணத்தால், அந்த இடங்களிலே இதுவரை பணியாற்றி வந்த வெளிநாட்டினரையெல்லாம் திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துவங்கி விட்டது[5].

 வரும் ஜூலை 3-ஆம் தேதிக்குள் 60 ஆயிரம் இந்தியர்கள், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். அதைப் போலவே குவைத் நாட்டில் பணிபுரியும் 1.20 லட்சம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது. அந்த நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பல்லாண்டு காலமாக தங்கள் குடும்பத்தோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள். அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தியுள்ளார்[6].

தேசிய அளவில் கொள்லையடிக்கும் போது கூடஇந்தியர்கள்என்ற உணர்வு வராதது: இப்பொழுதுகூட 50,000 இந்தியர்களைப் பற்றிக் கவலைப்படாமல், 10,000 தமிழர்கள் என்று பேசுகிறார்கள்.  “திராவிட நாடு” கனவு கண்டு, அண்ணாதுரை காலத்திலேயே, எதிர்ப்பை கைவிட்டு அரசியல் நிர்ணயச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, முதலமைச்சாராகி, சுயமரியாதை திருமணங்கள் மரியாதை இல்லாமல் ஆகிப்போன போது, இந்து திருமணச் சட்டத்தில் ஐக்கியம் ஆகி மானத்தைக் காப்பாற்றிக் கொண்ட பிறகும், “மாநில சுயயாட்சி” பேசி ஏமாற்றி, இந்திய ஜனாதிபதி ஆகிவிடவேண்டும் என்று கனவு காணும் கருணாநிதிக்கு இன்னும் தேசிய மனப்பாங்கு, நாட்டுச்சிந்தனை, பரந்த குணம் வரவில்லை என்பர்து வேடிக்கையாக இருக்கிறது.

பிரச்சாரரீதியில் முன் வைக்கப் படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருந்தார்கள்[7]. இப்பொழுது கருணாநிதி குட்டையைக் குழப்ப வந்திருக்கிறார்:

  • ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[8].

என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:

  • சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[9].
  • அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[10]
  • வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[11]
  • கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[12]
  • சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.

என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்

கேரளக்காரர்கள் முன்பு தங்களது பிரச்சினைப் போலக் காட்டிக் கொண்டார்கள்[13]. அப்பொழுது நன்றாக தூங்கி விட்டு, இரண்டு மாதங்கள் கழித்து அறிக்கை விட்டிருக்கிறார் நமட்த்ஊ வீரர், தலைவர், மூதறிஞர்……………சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தாலே 50,000 வெளிநாட்டு ஆட்களை அனுப்பிவிடலாம் என்று சவுதி இளவரச்ரே வெளிப்படையாக சொன்னார்[14]. உத்தரகாண்ட மாநிலத்தில் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று இவர் அறிக்கைவிடவில்லை. அப்பொழுதெல்லாம், சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது இவர் அறிக்கை விடுவதன் மர்மம் என்ன?

வேதபிரகாஷ்

© 28-06-2-13

சட்ட மீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவோ சவுதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் , 2013 தேதிக்குள் (அரபு புது வருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு திரும்பவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=747882

02-07-2013 அன்று சேர்க்கப்பட்டது.


[8] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.

[11] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=681845

[12] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.