Posts Tagged ‘லிங்காயத்தார்’

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

நவம்பர் 1, 2022

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலையில் மூவர் கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.

கன்னூர் மடாதிபதி வீடியோவை வைத்து காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –

  1. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
  2. கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
  3. மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்

ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].

போன்களை கைப்பற்றி உரையாடல்களையும் கேட்டு வபுலன் விசாரணை நடத்தப் பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம்  மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] தினமலர், கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம்: கைதான கல்லூரி மாணவி குறித்துதிடுக், Updated : நவ 01, 2022  09:24 |  Added : நவ 01, 2022  09:21.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3159346

[3] தினத்தந்தி, மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது, தினத்தந்தி அக்டோபர் 31, 2:59 am.

[4] https://www.dailythanthi.com/News/India/abbot-suicide-case3-people-including-a-college-student-were-arrested-826146

[5] தினத்தந்தி, ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம்இளம்பெண் பகீர் வாக்குமூலம், By தந்தி டிவி 31 அக்டோபர் 2022 2:16 PM

[6] https://www.thanthitv.com/latest-news/karnataka-bandemutt-swamiji-sucide-145746

[7] தினத்தந்தி கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல், நவம்பர் 2, 1:23 am (Updated: நவம்பர் 1, 10:18 am)

[8] https://www.dailythanthi.com/News/India/including-the-arrested-college-student3-people-in-police-custody-for-6-days-826808

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல், By Nantha Kumar R, Published: Sunday, October 30, 2022, 0:21 [IST].

[10] https://tamil.oneindia.com/news/bangalore/honeytrap-karnataka-lingayat-seer-suicide-case-bangalore-woman-and-2-others-arrested-by-police-482828.html

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

ஒக்ரோபர் 26, 2022

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு முதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].

பாலியல் புகார்போக்சோவில் வழக்குப்பதிவுகைதான மடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடாதிபதியை சந்தித்த ராகுல் காந்திஅடுத்த பிரதமராக ஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார்.  அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்கு வந்த இந்திரா காந்தி பிரதமரானார்; அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமரானார். தற்போது ராகுல் காந்தியும் வந்திருப்பதால் அவரும் நிச்சயம் பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.

05-09-2022 அன்று பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக‌ பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதுமதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2022.


[1] தினமலர், மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை மூன்று பக்க கடிதத்தில் பரபரப்பு, பதிவு செய்த நாள்: அக் 25,2022 00:02

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3153752

[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில் சாமியார் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணி என்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST

[4] https://tamil.news18.com/news/national/karnataka-lingayath-mutt-seer-basava-siddalinga-swami-dies-by-suicide-note-found-796801.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ரொம்ப மிரட்டுறாங்க.. கடிதம் எழுதி தூக்கிட்டு மடாதிபதி தற்கொலை.. கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி, By Nantha Kumar R, Updated: Tuesday, October 25, 2022, 15:30 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-kanchugal-bande-mutt-pontiff-basavalinga-swamy-suicide-after-writes-death-note-482143.html

[7] மாலை முரசு, ராகுல்காந்தி சந்தித்த மடாதிபதி போக்சோவில் கைது: மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் !!, Ramadevi, Sep 2, 2022 – 07:22; Updated: Sep 2, 2022 – 07:24

[8] https://www.malaimurasu.com/posts/india/Unidentified-person-entered-Indian-border

[9]  புதிய தலைமுறை, கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார்– 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, 01-09-2022 01.29 PM

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/146435/Karnataka-Sex-complaint-against-abbot-7-days-to-file-report

[11] தமிழ்.இந்து, கர்நாடகாவின் இளம் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2022 07:59 AM, Last Updated : 06 Sep 2022 07:59 AM

[12] https://www.hindutamil.in/news/india/861893-basavalinga-swamy-a-young-abbot-of-karnataka-commits-suicide.html

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (1)

ஒக்ரோபர் 26, 2022

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (1)

முற்றும் துறந்த துறவிகள் தற்கொலை செய்து கொள்ளலாமா?: இந்துமடாதிபதிகள் கொலை செய்யப் படுவது, தற்கொலை செய்து கொள்வது, புதிய செயல்பாடு, நிகழ்வு மற்றும் போக்காக தென்படுகிறது. கர்நாடகாவில் அடிக்கடி நடப்பது திகைப்பாக இருக்கிறது. 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். இவ்வாறு நடப்பது, மடாதிபதி பதவிக்கு வரவா, சொத்தா, அரசியலா போன்ற கேள்விகள் எழத்தான் செய்தன, செய்கின்றன. ஆனால், உடனே, அப்பிரச்சினை அமுங்கி விடுகிறது. துறந்தவர் என்ற நிலையில், துறவியாகி, சந்நியாசியாகி, மடாதிபதியாகி விட்டப் பிறகு, உலக ஆசைகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு, இத்தகைய நிலையை அடைவது, துறவிக்கு, துறவறத்திற்கு, மடத்திற்கு, இந்துமதத்திற்கே இழிவைத் தேடித் தரும் காரியமாகும். இதெல்லாம் திட்டமிட்டு நடத்தப் படுகின்றனவா, அவ்வாறான இழுக்கை உண்டாக்க நடத்தப் படுகின்றனவா அல்லது மனித ஆசைகளால் நிகழ்கின்றனவா என்று பாரபட்சம் இல்லாமல், நடுநிலையோடு பிரச்சினையை அலச வேண்டியுள்ளது.

லிங்காயத்து சைவ நம்பிக்கையும், வேத மறுப்பும்: கர்நாடகாவில் ஒரு பிரிவினர் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்[1]. லிங்காயத் பிரிவை 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் நடைமுறையில் கொண்டு வந்தார்[2], ”வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. லிங்காயத்தை பின்பற்றுபவர்கள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வர். இவர்கள் தங்களோடு எப்போதும் லிங்கத்தை உடன் வைத்திருக்க வேண்டும், லிங்கத்தை கைகளில் வைத்து பூஜிக்க வேண்டும், குழந்தை பிறந்ததும் லிங்கத்தை கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பது பசவண்ணா உருவாக்கிய கோட்பாடுகள். அதோடு அசைவம் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது போன்றவை பசவண்ணா உருவாக்கிய கொள்கைகள். சாதிகளை வைத்து மக்கள் பிரிக்கக்கூடாது என்றார். விதவை திருமணத்தை ஆதாரித்தார், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்,” என்றார்.

லிங்காயத் தனிமதம், இந்து மதமல்ல போன்ற கோரிக்கைகள், ஆர்பாட்டங்கள்: உண்மையில், இடைக்கால ஜைன-பௌத்த போராட்டங்கள், மோதல்கள், வாத-விவாதங்கள் வன்முறையில் முடிந்துள்ளன. இடைகாலத்தில் சைவவிரோத, ஜைனத்திலிருந்து விடுபட, பசவேஸ்வரர் இத்தகைய கொள்கைகளை முன்வைத்து, ஜைனத்தை தோற்கடித்தார். இந்த முற்போக்கு கருத்துக்களால் பசவண்ணா பின்னால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இவர்களே லிங்காயத்தார் என அழைக்கப்படுகின்றனர். லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் 2018 கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் சுமார் 17% பேர் லிங்காயத் மதத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து லிங்காயத்தை தனிமதமாக அறிவித்தனர். இதை வைத்துக் கொண்டு, தமிழகத்திலும் சில கோஷ்டிகள் கலாட்டா செய்து வருகின்றன[3]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை, வகை-வகையாக தங்களது சித்தாந்தங்களை வெளிப்படுத்தி, திரிபு விளக்கங்களுடன் கலாட்டா செய்வர். திமுக இவர்களுக்கு மேடை கொடுப்பதால், ஊடக விளம்பரமும் தாராளமாகக் கிடைக்கிறது[4]. கர்நாடகாவில், அதே வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது.

திங்கள்கிழமை 24-10-2022 அன்று குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது: கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டத்தில் உள்ள குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை செய்து கொண்டார்[5]. ராமநகரம் மாவட்டம், மாகடி வட்டத்தில் கெம்பாபுராவில் அமைந்துள்ளது குஞ்சகல் பண்டே மடம்[6]. இதன் தலைமை மடாதிபதியாக பசவலிங்கேஷ்வரா சுவாமி கடந்த 1997 முதல் பொறுப்பு வகித்து வந்தார்[7]. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக உள்ள பசவலிங்கேஸ்வர சுவாமிகள், தனது மடத்தின் பூஜையறையின் கண்ணாடிக் கம்பியில் திங்கள்கிழமை 24-10-2022 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்[8]. 1997ஆம் ஆண்டு மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பசவலிங்கேஸ்வர சுவாமிகள், அண்மையில் வெள்ளி விழாவைக் கொண்டாடியிருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மடத்தின் பணியாளர்களுடன் நிதி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தன் அறைக்கு உறங்க சென்றவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

பூஜைக்குப் பிறகு எடுத்த முடிவு: தினமும் அவா் காலை 4 மணிக்கு எழுந்து பூஜை செய்வது வழக்கம். அந்த சமயத்தில் பூஜையறையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக திங்கள்கிழமை காலை 6 மணிக்குப் பிறகும் பூஜையறையின் கதவுகள் மூடியிருந்ததைக் கண்ட மடத்தின் ஊழியா்கள், கதவைத் தட்டினா்.  கார் டிரைவர் தான் முதலில் கவனித்தார் என்று சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அவரது கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தனா். ஆனாலும், கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த மடத்தின் ஊழியா்கள், பின்புறமாகச் சென்று அறைக்குள் பார்த்த போது பீடாதிபதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மடத்தில் இருப்பவர்கள், இதனை நம்பவில்லை. நிச்சயமாக, ஏதோ ஒரு காரணத்திற்காக, குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக, அவர் மிரட்டப் பட்டிருக்க வேண்டும், அதனால், அத்தகைய முடிவுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப் படுகிறது.

பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டியுள்ளது: இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் எழுதி வைத்திருந்த மரணக் குறிப்பை போலீஸார் கைப்பற்றினா். அதில், ஒருசிலா் தனது செல்வாக்கை குறைக்கும் வகையிலான தகவல்களை வெளியிடுவதாக மிரட்டியதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அக் கடிதத்தில் தன்னை யார் மிரட்டினார்கள் என்பதையும் பீடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் கூறினா். அவா்களின் பெயரைத் தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனா். இந்த நிலையில் மடாதிபதிக்கு யாரோ அடிக்கடி வீடியோ கால் பேசியதும் தெரியவந்து உள்ளது[9]. இதனால் அவர் பயன்படுத்திய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்[10]. மேலும் மடாதிபதி பசவலிங்க சாமியின் டைரியையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்[11]. மேலும் ஹனிடிராப் முறையில் மடாதிபதி மிரட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[12]. பிறகு, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் அடையாளம் காணப் பட்டு, அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப் படுமா என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-10-2022.


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Lingayat Seer : லிங்காயத் மடாதிபதி பசவலிங்க ஸ்வாமி தற்கொலை என தகவல்.. 2 பக்க கடிதத்தில் இருந்தது என்ன?, By: ஆர்த்தி | Updated at : 25 Oct 2022 01:33 PM (IST),Published at : 25 Oct 2022 01:33 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/india/karnataka-lingayat-seer-found-hanging-cops-find-blackmail-angle-in-2-page-suicide-note-80901

[3]  சைவசித்தாந்த மாநாடு நடத்திய சரவணன் கோஷ்டி, ஸ்டாலின் மேடையில் பேசிய சைவர்கள் முதலியோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

[4]  சைவர் வேறு, இந்து வேறு போன்று விசமத்தனமான வாத-விவாதங்களையும் குறிப்பிடலாம்.

[5] தமிழ்.இந்து, கர்நாடகாவில் மடாதிபதி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 05:40 AM, Last Updated : 26 Oct 2022 05:40 AM

[6] https://www.hindutamil.in/news/india/887689-abbot-commits-suicide-in-karnataka.html

[7] தினமணி, குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை, By DIN  |   Published On : 26th October 2022 01:23 AM  |   Last Updated : 26th October 2022 01:23 AM

[8] https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2022/oct/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3938168.html

[9] தினத்தந்தி, வீடியோவை காட்டி மிரட்டியதால் ஜன்னல் கம்பியில் மடாதிபதி தற்கொலை?” – சிக்கிய கடிதத்தால் பரபரப்பு, By தந்தி டிவி, 25 அக்டோபர் 2022 10:43 PM

[10] https://www.thanthitv.com/latest-news/abbot-suicide-karnataka-144627

[11] தினத்தந்தி, தற்கொலை செய்த மடாபதியின் செல்போன்கள் பறிமுதல், தினத்தந்தி அக்டோபர் 26, 12:15 am (Updated: அக்டோபர் 26, 12:15 am)

[12] https://www.dailythanthi.com/News/India/the-cell-phones-of-the-abbot-who-committed-suicide-were-seized-822140

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013


தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

மே 6, 2013

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும் பிளவு பட்டுள்ளன. இந்த வேலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளே செய்துள்ளன. இதனால், சில இந்து இயக்கங்கள், இந்து போர்வையில் செக்யூலரிஸ பாணியில் வேலை செய்து வருகின்றன.  குறிப்பிட்ட விஷயங்களில் சும்மா இருந்துவிடலாம், அல்லது கருத்தைக் கூட வெளியிடாமல் இருக்கலாம், ஆனால், ஊடகங்களின் ஆதரவு, விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக, கொள்கையை விடுத்து, இந்து நலன்கள் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி மாறும் போது, அத்தகைய திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள், குறிப்பிட்ட கோணத்திலேயே வேலை செய்து வருகின்றன.

முஸ்லீம் இயக்கங்கள் பிரிந்துள்ளவை போன்று இருந்தாலும் இஸ்லாமில் ஒன்றாக இருக்கின்றன: முஸ்லீம் இயக்கங்களும் திராவிடக் கட்சிகளினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறாக தோன்றினாலும், தங்களது மதநலன்களை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்து, சாதித்து வருகின்றார்கள். இணைதளங்களில், தனிப்பட்ட முறையில், மண்டபங்களில் எதிர்த்துப் பேசி, அறிக்கைகள் விட்டுக் கொண்டு எதிர்கள் போலிருப்பார்களே தவிர, இஸ்லாம் என்று வரும்போது, ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர். இதை திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.

ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது: தமிழ்நாடு, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்சிகளைக் கூர்ந்து கவனித்தால், பிஜேபிக்கு எதிராக நடத்தப் படும் செயல்கள், கங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதைக் காணலாம். மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதா முதலமைச்சாரக உள்ளார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேசியும், நடந்து கொண்டும் வருகின்றனர். ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இல்லாத பட்சத்தில் அதிமுக வரவேண்டும் என்ற ஆசை, அதே நேரத்தில் பிஜேபி கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்ற தீவிரம். இதில் இந்து அமைப்பினரைத் தாக்கினால், ஜெயலலிதாவின் மீது பிஜேபிக்கு கோபம் வரும், கர்நாடகா-தமிழகம் இணைப்பை ஏற்படுத்தினால், மத்தியிலிருந்தும் அழுத்தம் வரும், அதே நேரத்தில் கர்நாடக தேர்தலில், பிஜேபியை தூக்கி விடலாம் என்ற திட்டத்தில் செயல்படுவது போலத்தான் தெரிகிறது. மேலும், குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், செய்த குற்றத்தை மறுபடியும் செய்யும் போக்கு, பல இடங்களில் இருப்பது போல அலிபி உண்டாக்கும் தந்திரம் முதலியவை இவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆக ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது என்பது தெளிவாகிறது.

கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்: கர்நாடகத்தில் மதப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் ஜாதிப் பிரசினையை எடுத்துக் கொண்டு விளையாடி உள்ளது. இதனால், ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார். எடியூரப்பாவின் நண்பரான கருணாநிதியும் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் இதில் மிக்க கவனமாக செயல்படுவதை காணலாம். ஆகவே, ஒருவேளை கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற யேஷ்யத்தில் காங்கிரஸ் உள்ளது. எடியூரப்பாவை சரி கட்டினது மாதிரி, பெங்களூரில் நடக்கும் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்தால், பதிலுக்கு கூடணிக்கு வந்து விடலாம் என்ற கணக்கிலும் காங்கிரஸ் உள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

மே 4, 2013

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

கர்நாடகதேதல் – 2013: தென்னிந்தியாவில், முதன் முதலாக பீஜேபி அரசு அமைந்த மாநிலமாக கர்நாடகனம் உள்ளது. ஆரம்பத்தில் நன்றாக நடந்து கொண்டிருந்த அரசு, பிறகு ரெட்டி சகோதரர்கள் மற்றும் எடியூரப்பா முதலியோர்களது ஊழல் விவகாரங்களினால், கக்கள் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தனர். எடியூரப்பா பிஜேபியை விட்டு விலகி, தனி கட்சி ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. பிரியபட்டணா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 223 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி கடந்த 15 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்[1].

பிஜேபிசார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: பா.ஜனதா சார்பில் ராஜ் நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, உமா பாரதி, வருண்காந்தி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்மந்திரிகளும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். முக்கியமாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் பிரசாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  பா.ஜனதா தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலை பற்றி அதிகம் பேசினர். காங்கிரசை இலக்காக வைத்து கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரசால் நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ்சார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: காங்கிரஸ் சார்பில் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் மத்திய மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நட்சத்திரம் ராகுல் காந்தி பா.ஜனதா அரசு மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். பா.ஜனதாவை குறி வைத்தே அவரது பேச்சு இருந்தது. பா.ஜனதாவின் ஊழல், சுரங்க முறைகேடுகள் குறித்தும், கர்நாடகத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். இறுதியாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று குல்பர்கா மற்றும் பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

மோடியின்வித்தைபலிக்குமா?: அதேபோல் பா.ஜனதாவின் முன்னணி தலைவர் நரேந்திமோடி நேற்று மங்களூர் மற்றும் பெல்காமில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். ஜனதா தளம் (எஸ்), கர்நாடக ஜனதா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறந்த பிரசாரம் 04-05-2013 அன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

சுயேச்சைகளின்உதவியில் 2008ல்ஆட்சிஅமைத்தபிஜேபி: கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்று 33.86 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.59 சதவீத ஓட்டுகளையும், ஜனதா தளம் (எஸ்) 28 இடங்களில் வெற்றி பெற்று 19.13 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

எஸ்.எம். கிருஷ்ணாஅதிருப்தி: கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா, தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்திருக்கிறார்[2]. அதிருப்தியில் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார், ஸ்ரீரங்கபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் ரவீந்திர ஸ்ரீகண்டய்யாவை மாற்றிவிட்டு தமது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகர் அம்பரீஷ் திடீரென்று போர்கொடி உயர்த்தினார். அவரது நெருக்கடிக்கு பணிந்து கட்சி மேலிடம் அவரை மாற்றிவிட்டு அம்பரீசின் ஆதரவாளர் லிங்கராஜுக்கு சீட் வழங்கியது. தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். வீரப்ப மொய்லி, கிருஷ்ணாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்[3]. 25 வருடங்களுக்கு முன்பு, இவரே காரில் லட்சங்களை லஞ்சமாக வாங்கியபோது, அகப்பட்டார். ஆனால், இன்று உத்தமர் போல அமைச்சர் பதவியில் இருக்கிறார்.

The first major hitch in his career came in 1984, when as leader of the opposition, he was accused by an independent MLA of trying to bribe Janata Party MLAs to defect to the Congress. The infamous Moily tapes surfaced soon, with then chief minister Ramakrishna Hegde having a field day, coining such sobriquets for Moily as “oily Moily”.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

லிங்காயத், ஒக்கலிகாவாக்குகளாகஏங்கும்கட்சிகள்[4]: கர்நாடகத்தில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா கவுடாக்களின் வாக்குகள் தான் மாநில அரசியலை தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சேர்த்த எதியூரப்பா இப்போது தனிக் கட்சி தொடங்கிவிட்டார். மேலும் கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவையும் பாஜக முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இதனால் சிதறும் லிங்காயத்து சமூக வாக்குகள் மற்றும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடைய செய்ய கவுடா சமூகத்த்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. இதனால் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். ஆனாலும் தாம் நினைத்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் செயல்படவில்லை என்ற அதிருப்தியில் கிருஷ்ணா இருக்கிறார். இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள் என்னவாகும் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது[5]. ஜனதா தளமும் இதை நம்பியுள்ளது[6]. லிங்காயத், ஒக்கலிகா ஓட்டுகள் சிதறுமா, அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்பது புதன்கிழமை தெரிந்து விடும்[7].
ராகுலால்அடக்கமுடியாதமேடைசண்டை: கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (01-05–2013) 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார்.  மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார். இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்: ராகுல், “காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்”, என்று ஒருமுறை சொன்னாராம்[8]. ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார்[9]. பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார். ‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள்: ஜாதியத்தில் ஜனநாயகம் ஊறிப்போனப் பிறகு, மதமும் சேர்கிறது. ஆமாம், தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பிஜேபி மதவாத கட்சி என்று காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் சொல்லிவரும் நிலையில், அவர்களே மதவாத கட்சிளுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலில் போடியிடுவது, வாக்குறுதி கொடுத்து ஓட்டுகள் வாங்குவது, முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்தி, மற்றவர்களைப் பிரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோருமே செக்யூலார்ப் பழங்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வர்.

வேதபிரகாஷ்

04-05-2013


[8] When Rahul Gandhi said, “Congress can get defeated only by the Congress”, his partymen had seemed surprised. Today, senior Congress leaders are ruing that their colleagues and party workers are on the verge of proving their leader right.

http://governancenow.com/news/regular-story/congress-so-near-yet-so-far-battle-karnataka-assembly

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

ஏப்ரல் 12, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html