Archive for the ‘சமத்துவம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் கூட்டம் நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  1. பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, Sarkaryavah Shri Dattatreya Hosabale
  2. கிருஷ்ண கோபால், Sah sarkaryavah Krishna Gopal
  3. மன்மொஹன் வைத்யா, Sah sarkaryavah Manmohan Vaidya 
  4. சி.ஆர்.முகுந்த் Sah sarkaryavah CR Mukund
  5. அருண்குமார், Sah sarkaryavah Arun Kumar
  6. ராம்தத் Sah sarkaryavah Ramdutt 

முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”

ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3].  நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4].  ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5].  இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.

கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] Rashtriya Swayamsevak Sangh, RSS Akhil Bharatiya Prant Pracharak Meet, 2023, at Ooty, on July 13-15, ., 11-Jul-2023, press statement

[2] https://www.rss.org/Encyc/2023/7/11/RSS-Akhil-Bharatiya-Prant-Pracharak-Meet-2023-at-Ooty-on-July-13-15.html

[3] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது , தினத்தந்தி ஜூலை 12, 12:23 am.

[4] https://www.dailythanthi.com/News/India/2611-like-attack-if-threat-call-over-pak-woman-who-came-to-india-for-lover-1007682?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான், By Nantha Kumar R Published: Friday, July 14, 2023, 9:43 [IST]

[6] https://tamil.oneindia.com/news/coimbatore/3-day-rss-conclave-begins-in-ooty-mohan-bhagwat-expected-to-give-advices-tomorrow-521049.html?story=1

[7] குமுதம், கோயம்புத்தூர்: பெண் போலீசை தாக்கியதாக நந்தினி, நிரஞ்சனா கைதுஎன்ன நடந்தது?, ஜூலை 15, 2023.

[8] https://www.kumudam.com/news/tamilnadu/nandini-was-arrested-in-coimbatore

[9] மீடியான்.காம், ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சிதடுத்த போலீஸுக்கு பளார்மதுரை நந்தினி கைது!, Karthikeyan Mediyaan News, 04.00 மாலை, 14-07-2023.

[10] https://mediyaan.com/covai-police-arrested-social-activists-madurai-nandhini-niranjana/

[11] இ.டிவி.பாரத், Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!, Published: 14-07-2023. 12.00 hours

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/two-social-activists-arrested-for-assaulting-female-police-officer-in-coimbatore/tamil-nadu20230714125845520520247

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

ஜூலை 10, 2016

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

BJP Villuppuram meeting clash 08-07-2016

வியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.

பாஜக சண்டை விழுப்புரம்

தங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4].  கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின.  மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.

BJP Villuppuram - Dinathanthi photo- 08-07-2016

வாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.

BJP Villuppuram - backdrop torn - 08-07-2016

பாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

BJP Villuppuram - torn backdrop - 08-07-2016

வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.

BJP Villuppuram - chairs broken - 08-07-2016

பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.

பாஜக மோத-ல்1

செயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].

பாஜக மோத-1

அரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)

[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41

[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016

[4] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/37530/clash-in-bjp-executive-council-meeting-15-arrested

[5] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=168768

[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST

[7] தினத்தந்தி, பா... செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559721

[9] தினமலர், பா.., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559715

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/07/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/article3519127.ece

[12] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=229607

[13] http://www.dailythanthi.com/News/India/2016/07/08012724/BJP-Committee-meeting-of-the-factional-conflict.vpf

சமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)!

பிப்ரவரி 12, 2016

சமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)!

ஆதாம் ஏவாள், ஏசு நிர்வாண சித்திரம்

“ஷூ” போட்டுதான் ஓட்டலில் நுழைய வேண்டும் எனும் போது, கோவில் பற்றி கேள்வி எழுப்புவது ஏன்?: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை? அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே? உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா? கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும்? ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே? அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை? கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா? இம்மாதிரி கேள்விகளையும் கேட்கலாம்! “இடம், பொருள், ஏவல்” என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அவற்றை ஏன் எதிர்ப்பதில்லை?

Christian eroticaஎதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாமா?[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா? “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா? தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா? குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும்? “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே! அது-அது அங்கங்கு இருக்க வேண்டும்முட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்ற நியதி தேவையில்லையே?

commandment God gives Adam and Eve in the Garden is to have sex- Pru vehravu, be fruitful and multiply.சமத்துவம் இல்லாத சமோசா கட்டுரை: சமநிலை, சமத்துவம் பற்றி சமசித்தால் (பரிசோதித்தால்) தால் தான் சமசி (நிறைவு) உண்டாகும். அம்மணத்தால் சமணமாகியவர்களை இன்று நிர்வாணத்தை ஆதரிக்கும் திகவினரே கற்களால் அடிக்கிறார்கள். சமத்துவப் போராளிகள் அதனை தடுக்கவில்லை. சமதை, சமானம், சமத்காரம் பார்க்க அவர்களால் முடியவில்லை. சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை. சமர்த்தாக, சமதரிசிகள் வேடத்தில், சமபேதங்களை உண்டாக்கித் தான் வைத்திருக்கிறார்கள். சிந்தாந்தச் சிதறல்களை, மோதல்களை தடுத்து சமன்படுத்தவோ, சமரசம் செய்யவோ இயலாமல் தான், புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறர்கள். இப்பினும் இவர்கள் வர்க்கம், கர்க்க பேதங்கள், வர்க்க போராட்டங்கள் என்று கூட விவாதிப்பார்கள். இனி இந்த பழைய சொற்விளையாட்டை விட்டு, நவீனகாலத்திற்கு வந்தால் கூட, “சமோசா” என்றால், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, இருக்கிறதோ அவற்றை கலந்து, “மசாலா”வாக்கி, உள்ளே திணித்து சமைப்பது தான் என்றுள்ளது. “சம்சாக்கள்” என்றால், “ஆமாம் சாமி” என்று சமர்த்தாக சரிந்துவிடும் சமரசங்களைக் காட்டுகிறது.

Erotic Roman Bas Relief Sculpture of a man and woman having sex Pompeii. 1st Centசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?[2]: இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்[3].

Pan and Goat- Roman Mythical erotic sculpture from Pompeii.ஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.

ஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்?

Semi nude Joseph and Maryதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே!”, “அமைதியாக வரிசையில் வரலாமே!” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே!” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை!

என்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா? பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா!). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்? கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை[4].

இந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்’.

எந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.

எனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்!

© வேதபிரகாஷ்

12-02-12016

[1]  வீடுகளில் பெட் ரூம், கக்கூஸ், பாத்ரூம் முதலிய தேவையில்லையே, பிறகு வீடு கூட வேண்டாம் என்ற நிலைக்குக் கூட வந்து விடலாமே?

[2] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?, Published: December 29, 2015 09:13 ISTUpdated: December 29, 2015 09:14 IST.

[3]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80/article8040900.ece

[4] சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

பிப்ரவரி 12, 2016

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

சமஸ் எழுத்தாளர் - சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன்.  “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].

sami - சமஸின் படம்

கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.

sami_தி இந்துவில் சமஸ் படம்

அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.

A semi-nude winged Roman Victory holding a victors wreath in her right hand and victors palm-branch in her left.நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதைஎவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?

a close-up of the halos about the heads of Amphitrite and Neptune.ஆழ்வார்கள்நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

Bare-breasted goddesses on the Augustan Altar of Peaceசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-12016

[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more

[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!

[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?

[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?

[6]  இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?

[7]  பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

ஏப்ரல் 20, 2013

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

Karu at IUML conference receiving momento

11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.

Karu-Arjun and Lenin-Krishna

கௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:

Hindu a thief of sorts: KarunanidhiTNN | Oct 25, 2002, 10.04 PM IST – Times of India.

CHENNAI: It was the DMK chief’s strongest pitch against Hindutva. Talking at a public meeting on Thursday evening, organised by minority communities to protest the religious conversion ordinance, M Karunanidhi said, “Who is a Hindu? You must ask Periyar EVR. A good man would say the word Hindu means a thief[8]. I don’t think of the Hindu in such demeaning terms. I’d prefer to say the term means someone who steals the heart.” He, however, did not explain the source of his claim. What is pertinent to note is that DMK is a key constituent of NDA.

OLYMPUS DIGITAL CAMERA

கௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].

Karu temple - later removedகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்!

19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].

karunanidhi-with-kulla-eating-kanjiகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.

23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்!

வேதபிரகாஷ்

20-04-2013


[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST

http://dinamani.com/tamilnadu/2013/04/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1552913.ece

[9] On October 24, 2002, newspapers carried Karunanidhi’s statements that said the term ‘Hindu’ meant ‘thief’. A criminal complaint was lodged by B R Gouthaman with the Mambalam police, stating that these statements bashing Hindus had hurt their sentiments and created unrest in society.

http://timesofindia.indiatimes.com/city/chennai/11-year-old-case-comes-back-to-haunt-Karunanidhi/articleshow/19632749.cms

http://www.thinaboomi.com/2013/04/19/21309.html

[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694490

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

ஏப்ரல் 20, 2013

இப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.

சட்டத்தை மீறும் நீதிகள்

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.

குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.

அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.

மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.

அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.

ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…

View original post 285 more words

செக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு!

ஏப்ரல் 18, 2013

செக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு!

ஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார்.  இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].

“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது?”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.

பேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.

Mr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,

என்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].

இந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6].  “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா?” [26/11 RSS Ki Saazish? -26/11, An RSS Conspiracy? ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].

குண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.

4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].

“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:

  • “இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.
  • தேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
  • அருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.
  • மேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.

மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].
பெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.

வேதபிரகாஷ்

18-04-2013


[4]  ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.

[8] It was at this book’s launch on December 6 where Singh had said that Mumbai ATS chief Hemant Karkare had called him, hours before he was killed in the terror attacks, to tell him about threats he had received for probing Hindu extremists and their terror links. Burney, however, tendered an apology on January 29, saying that he would like to “clarify and apologise if he has hurt anyone by the title of his book and is happy to change the title” if that would assuage feelings.

http://www.dnaindia.com/india/1501809/report-rss-rejects-aziz-burney-apology-to-pursue-case-against-him

[9] The Chief Judicial Magistrate Court in Allahabad on Friday ordered registration of a case against Congress leader Digvijay Singh for this statement in Ujjain on July 18 calling RSS a bomb making factory. Singh had said the “RSS was spreading terrorism in the country and it has been making bomb factories.” The Congress general secretary had earlier courted controversy when he said that he did not rule out the involvement of Sangh in Mumbai serial blasts.While the RSS and the BJP had slammed him, the Congress had washed its hands off the comments. Read more at:http://indiatoday.intoday.in/story/digvijay-singh-booked-for-remarks-against-rss/1/149268.html

[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.

[12]Congress Legislature Party leader Siddaramaiah blamed the BJP and the Sangh Parivar saying that they end up committing such acts for political gains. Another Congress leader, H Vishwanath, MP from Mysore, alleged that RSS is a suspect in the incident. “RSS has a history of indulging in acts of terrorism. They have done it in Malegaon. The Central investigation agencies should crack the case and expose those behind the blasts before the elections are over,” he stated.

http://www.deccanherald.com/content/326750/cong-suspects-rss-hand-bjp.html

[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.

[16] The MHA sources said that the office ofKarnataka BJP, near which the blast took place in the morning, was bustling with till Tuesday when ticket distribution process concluded. However, since the process had ended, there was not much crowd at the party office on Wednesday.Sources also said that a temple located about 100 metre from the blast site, could also be the target. “The bombers wanted higher casualties so they chose the spot carefully,” a source said.The incident comes a day before the third anniversary of the blast outside the Chinnaswamy Stadium. Sources said it was too early to name any suspect, but confirmed that improvised explosive device (IED) was used in the explosion. The Ministry of Home Affairs (MHA) on Wednesday confirmed that the latest Bangalore blast was a terror attack. Union Home Secretary R.K. Singh confirmed that it was indeed a terror attack, but refrained from naming any organisation as the investigation was still on. Earlier, Union Home Minister Sushilkumar Shinde said, “We are enquiring the matter and will let you know about the details soon.”

Read more at: http://indiatoday.intoday.in/story/bangalore-blast-bjp-terror-attack-home-ministry-sushilkumar-shinde/1/262709.html

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

ஏப்ரல் 17, 2013

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

 

இளைஞர்காங்கிரஸ்அடிதடி, வன்முறை: ஏப்ரல் 16, 2013 அன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திருச்சூருக்குச் செல்ல கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டுள்ளது, உள்ளுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது[1]. போதாகுறைக்கு காங்கிரஸ்காரர்களே ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்[2]. இளைஞர் காங்கிரஸில் உள்ள உள்பூசல்கள் தாம் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது இளைஞர் ராகுலுக்கு வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்று தெரியவில்லை.

 

கேரளாவில்பஞ்சாயத்துமுறைஎப்படிசெயல்படுகிறதுஎன்பதைப்பார்க்கவந்தாராம்: கேரளாவில் அதத் என்ற பஞ்சாயத்து இந்தியாவிலேயே தலைச்சிறந்ததாக செயல்படுகிறது என்ற பரிசைப் பெற்றுள்ளது. இதனால், ராகுல் அங்கு சென்றது மட்டுமல்லாது, உபியிலிருந்து, ஒரு காங்கிரஸ் குழு வந்து அவர்களுடன் உரையாடும் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் என்றார். இப்படி இத்தனை வருடங்கள் ஆகியும் கற்றுக் கொண்டே இருந்தால் எப்பொழுதுதான் கூட்டங்களில் பேப்பரைப் பார்க்காமல் பேசுவது?

 

கருத்தரங்கத்தில்கலந்துகொள்ளவந்தராகுல்: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் டில்லியிலிருந்து, கொச்சி விமான நிலையத்தில், நேற்று காலை (16-04-2013) வந்திறங்கினார். திருச்சூரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோகல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பஞ்சாயத்து ராஜ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், பங்கேற்க, அங்கிருந்து காரில், திருச்சூர் சென்றார். குடியாட்சி முறையில் அதிகாரப்பகிர்வு மற்றும் திட்டமிடும் தன்மையில் பங்குகொள்ளல் (Democratic Decentralisation of Power and Participatory Planning) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

 

ராகுல்கேள்விகேட்டது: அங்கு பஞ்சாயத் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கு பங்கு கொண்ட பஞ்சாயத்து அங்கத்தினர்களை, “தேர்தலுக்கு முன்னர் உங்களை அரசியல் கட்சிகள் கலந்தோலோசித்தனவா?”, என்று கேட்டபோது, இல்லை என்று கூறியதும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலையட்டியது வேடிக்கையாக இருந்தது. உள்ளூர் அபிவிருத்தி நிதியை எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களை கலந்தாலோசித்துதான் செலவழிக்க்க்க வேண்டும் ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்று எடுத்துக் காட்டினாராம்[3]. மாலையில், மாநில இளைஞர் காங்கிரசாரை சந்தித்த அவர், பின் டில்லி புறப்ப[4]ட்டுச் சென்றார்.

 

உட்சண்டைப்பற்றிகவலைப்படாமல்பறந்துசென்றது: காங்கிரஸில் உள்சண்டை இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்[5]. ஆனால், இது கம்யூனிஸ்டுகளைப் போல அடித்துக் கொள்கின்ற அளவில் மாறிவிட்டது, அந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுகிறது எனலாம்.  இதைப்பற்றியல்லாம் அலசாமல் சென்றது வேடிக்கைதான்.

 

கேரள அமைச்சர் மனைவியைத் துன்புறுத்திய விஷயம்: மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் கே.பி.கணேஷ்குமார் என்ற காங்கிரஸ் அமைச்சர், தனது மனைவி யாமினி தங்கச்சியை வீட்டில் அடித்துத் துன்புறுத்துகிறார் என்ற புகாரினால் ராஜினாமா செய்துள்ளார்[6]. இதற்குள் கட்சியின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இருவர் மீது ஒருவர் புகார் அளித்து, பிரிந்து செல்ல கேரளா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்[7]. இது ராகுல் வருவதற்கு முந்தைய நாள் நடந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இல்லாமல் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா-பி காங்கிரஸ் பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கும் என்ற நிலை வந்தபோது[8], உமன் சாண்டி இப்படி “அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட்”டிற்கு உதவியுள்ளார் போலிருக்கிறது[9].

 

பி.சி.ஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடமன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 

அசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சி.ஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார்[10] என்று பல செய்திகள் வந்துள்ளன[11]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[12]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[13]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[14], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[15]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[16].

 

வேதபிரகாஷ்

16-04-2013


[2] Interestingly, Rahul Gandhi’s visit coincided with the escalation of violence in the district after Premlal, a Youth Congress worker, was attacked by armed men. Group fighting within the Youth Congress has been cited as the reason behind the attack. Minor instances of violence were also reported from other parts of the state

[3] Further, he said MPs and MLAs should spend their Local Area Development fund for regional development in consultation with the panchayat members. Currently, it was not being done in accordance with the spirit of decentralisation of power, he added. Gandhi agreed with the members that some central schemes were not suited for all states.

[4] Sitting through an interactive session on ‘Democratic Decentralisation of Power and Participatory Planning’, Gandhi asked panchayat members if political parties consulted them before choosing candidates for elections. Interestingly, both Congress and CPM members answered in the negative.

[9] It’s turning out to be an affair to remember for Kerala Chief Minister Oommen Chandy, but for all the wrong reasons. His United Democratic Front government, which is clinging on to power by a slender majority, has suffered several setbacks in the last two years. But the latest blow has probably been the most lethal of all. An extra-marital affair and allegations of domestic violence littered the exit route of K B Ganesh Kumar, the lone MLA of Kerala Congress B from his Cabinet. Now, the challenge before Chandy is chooosing the right person to fill Ganesh’s shoes

[11] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.

http://www.indianexpress.com/news/keralas-p-c-george-uncut-and-uncensored/1097825/

[12] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests. http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY

[15] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career

http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html

[16] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.

http://www.firstpost.com/politics/after-kurien-yet-another-sex-scandal-catches-up-with-congress-in-kerala-618856.html