Archive for the ‘மசூதி’ Category

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

திசெம்பர் 7, 2014

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

முஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2].  திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

வழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்?: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7].  இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

தி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

ரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 - The Hindu

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 – The Hindu

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].

Babri-5th

Babri-5th

டிசம்பர் 6ம் தேதிபீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].

© வேதபிரகாஷ்

07-12-2014

[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST

[2] On Tuesday (02-12-2014), the judge passed orders on two petitions filed by S Elumalai and K Balu, office bearers of Hindu Munnani. The Madras high court has rejected a petition which sought denial of permission for Muslim organisations to stage protests against demolition of Babri Masjid on Saturday (06-12-2014). Muslim organisations have been holding anniversary meetings and rallies across the country ever since the masjid was brought down on December 6, 1992.

[3] They challenged the police refusing them permission to hold demos at Thiruvennai Nallur and Villupuram on December 6 demanding a Ram temple at the disputed site in Ayodhya. The Villupuram police submitted that the places where the petitioners want to hold demonstration are highly congested. But the petitioners said that they were prepared to shift the time and venue if needed. Disposing of the petitions, the Judge said that the first petitioner may shift the venue of demonstration at Thiruvennai Nallur to the place suggested by the police, who shall permit to hold a demonstration at the new venue, subject to reasonable restrictions.

[4] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Muslim-Outfits-Can-Stage-Demo-on-Dec-6/2014/12/04/article2554298.ece

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/Cant-deny-nod-for-Babri-protest-HC/articleshow/45367930.cms

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121307

[7] தமிள் ஒன் இந்தியா, பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், Posted by: Mayura Akilan Updated: Saturday, December 6, 2014, 17:53 [IST], Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[8]http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/12/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF/article2558998.ece

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[10] http://www.thehindu.com/news/cities/Hyderabad/babri-masjid-demolition-anniversary-passes-off-peacefully-in-hyderabad/article6668051.ece

[11] Thousands of citizens under the banner of Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) party took out a rally through major streets of Raichur and staged demonstration outside the office of the Deputy Commissioner, to observe the 22nd anniversary of Babri Masjid demolition as Black Day. They raised slogans against Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure. They also raised questions about the then Prime Minister P.V. Narasimha Rao for allowing the “historical crime” to take place.

http://www.thehindu.com/news/national/karnataka/citizens-in-raichur-observe-black-day-on-anniversary-of-babri-masjid-demolition/article6668083.ece

[12] http://www.jansatta.com/photos/entertainment-gallery/22nd-anniversary-of-babri-masjid-demolition-demonstration-in-india/7876-3/

[13] http://twocircles.net/2014dec06/1417885117.html#.VIObYPmSynU

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131898

[15] https://islamindia.wordpress.com/2013/12/07/december-6-a-day-of-remembrance-or-terror-induement/

[16] https://islamindia.wordpress.com/2013/12/09/december-6-fake-calls-of-bombing-temples-cannot-be-brushed-aside/

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்?

செப்ரெம்பர் 16, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்?

தேசிய  பாதுகாப்புச்  சட்டத்தின்  கீழ்  வழக்குப்  பதிவு  செய்யப் பட்டு   நடவடிக்கை எடுக்கப் படும்: நேற்றுவரை, ஊடல் கொண்ட ஆசம் கானுடன் குல்லா போட்டுக் கொண்டு சுற்றி வந்த மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. முல்லாயமின் மகன் மௌலானா என்று ஊடகங்களே விமர்சிக்கும் வகையில் வேடமிட்டு அலையும் இந்த செக்யூலரிஸ பழங்களைக் கண்டு, மெய் சிலிர்க்கிறது எனலாம். இப்பொழுது 17 நாட்களுக்குப் பிறகு கலவரம் நடந்த பகுதிகளுக்கு விஜயம் செய்து[1], குற்றம் புரிந்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று சூளுரைத்துள்ளாராம்[2]. ஏன் அந்த வீரம் ஆகஸ்ட் 27ம் தேதியே வந்திருக்கலாமே?

முதலில்  முஸ்லிம்களை  சந்தித்து,   பிறகு   “ஜட்”களை  சந்தித்து  ஆறுதல்   கூறினாராம்: முதலில் கவால் என்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். அப்பொழுது கோபமடைந்த மக்கள் கருப்புக் கொடி காட்டி, கோஷங்கள் போட்டனர்[3]. முன்பு வராமல், இப்பொழுது ஏன் வருகிறீர்கள் என்று கத்தினர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதிலும் வேடிக்கை என்னவென்றால், மானபங்கம் செய்யப் பட்ட பெண் மற்றும் அவளது கொல்லப்பட்ட சகோதரர் முதலிய இழப்புகளுக்காக அவளையோ அல்லது அவளது பெற்றோர்களையோ சென்று பார்க்கவில்லை. மாறாக, “முதலில் ஜட் மக்களால் கொல்லப்பட்ட பையனின் தந்தையைச் சென்று பார்த்துள்ளாராம்[4].  பிறகு சச்சின் மற்றும் கௌரவ் பெற்றோர்களைச் சென்று பார்த்துள்ளாராம்[5]. இப்படியே ஷாபூர், மலக்பூர், மீர்பூர், கண்லா ஈத்கா மற்றும் கொத்வாலி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளுக்கும் செறு பார்த்துள்ளார். பிரத்யேகமாக கொல்லப்பட்ட ராஜேஷ் வர்மாவின் இல்லத்திற்குச் சென்று விசாரித்துள்ளார். ரூ. 15 லட்சம் நிதி அளித்துள்ளார். மற்ர கொல்லப்பட்டவர்களு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குகூட “ஜட் / ஜட் பாய்ஸ் / ஜட் மக்கள்” என்றும் “முஸ்லிம்கள்” என்றுதான் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, முஸ்லிம்கள் முதல், பிறகு தான் இந்துக்கள். இங்கும் அப்பெண்ணின் நிலை பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஊடகக்காரர்களின் புகைப்படங்கள் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள் போன்று காண்பிக்கப் படுகிறார்கள், இந்துக்களின் பாதிப்புகளைக் காட்டவில்லை. இதுவும் செக்யூலரிஸத்தின் கொள்கை போலும்!

முசபர்பூரின்  உயர்  போலீஸ்  அதிகாரி  சஸ்பென்ட்: சுபாஷ் சந்திர தூபே என்ற சீனியர் சூப்ப்ரென்டென்ட் ஆப் போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் செய்துள்ளாராம்[6]. முன்னர் இவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீதுள்ள குற்றத்தை விசாரணை கமிஷன் நியமிக்கப் பட்டு அறியப்படும் என்று கூறியுள்ளாராம்[7]. என்.டி.டிவியும் இத்தனை நாட்களுக்குப் பிறகு, கலவரம் எப்படி ஆரம்பித்தது என்று ஆராய்ச்சி செய்துள்ளது[8]. எப்.ஐ.ஆர். போட்டதில் கூட குழப்பம் இருக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறது, அதாவது இரண்டு[9] போடப்பட்டிருக்கிறதாம்! அப்படியென்றால், அவ்வாறு செய்த போலீசாரை சஸ்பென்ட் செய்வது தானே? செய்யவில்லையே? சுபாஷ் சந்திர தூபேவைத் தானே இடம் மாற்றம் செய்யப்பட்டு, பிறகு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

குல்லா  மாட்டி – கழட்டி  அரசியல்  செய்யும்  “இளைஞரான  முதலமைச்சர்”: சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்திருந்தால், ஆரம்பத்திலேயே, அப்பெண் போலீசாரிடம் புகார் கொடுத்தபோதே, எடுத்திருந்தால், எல்லாமே நடந்திருக்காது. ஆனால், கொன்றது முஸ்லீம்கள் என்று பார்த்து, போக்கிலேயே விட்டு குளிர் காய்ந்ததால், கலவரத்தில் முடிந்திட்டு விட்டது. இனி அரசியல் செய்வது என்று தீர்மானமாக உள்ள நில்லையில் தான் “இளைஞரான முதலமைச்சர்” என்று வர்ணிக்கப்படும் இந்த மௌலானா இப்படி பேசுகிறார். ஆசம் கானுடன் வரவில்லை என்பதும் நோக்கத்தக்கது. அதாவது இந்துக்களை தாஜா செய்யலாம் என்ற எண்ணத்தில் குல்லாவைக் கழட்டி வைத்து விட்டு முல்லாயமின் மகன் மௌலானா வரமுடியும். ஆனால், ஆசம் கான் வரமாட்டார். இதுதான் உண்மை.

சமாஜ்வாடிகாங்கிரஸ்  கலவரத்தால்  ஆதாயம்  தேடு ம்  போக்கு: கலவரம் ஏற்படுத்தி, உயிர்ச்சேதம், பொருட்சேததம் உண்டாக்கி, பிறகு பாதுகாப்புக் கொடுக்கிறோம், சலுகைகள் கொடுக்கிறோம் என்று வழக்கமான சடங்கை செய்து வந்தால், மக்கள் எவ்வளவு நாள் பொருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும்.  ஏற்கெனவே, மன்மோஹன் சிங் பிரதம மந்திரி நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்க அறிவித்து விட்டார். இனி பணத்தைக் கொடுக்கும் சாக்கில் நாளைக்கே கூட்டம் போடுவார்கள், கூட்டணியோடு வருவார்கள், விழாவும் நடத்துவார்கள்.

சமாஜ்வாடி கட்சி  வெளிப்படையாக  ஜாதிமதவேற்று  பாராட்டும்  அரசியல்,  ஓட்டுவங்கி  வியாபாரம்: மேலும் சமாஜ்வாடி கட்சி வெளிப்படையாக இத்தகைய இந்து-முஸ்லிம் பிரிவுகள், வேறுபாடுகள், குழப்பங்கள், கலவரங்களை வைத்துக் கொண்டே அரசியல் வியாபாரம் செய்து வருகிறது. முஸ்லிம்களை குல்லாப் போடு, சங்கப்பரிவார் ஆட்களை அடக்கி, கைது செய்து, பிரச்சினை வளர்த்து, மறுபக்கம் ஜாதிய ரீதியில் ஓட்டுகளைப் பெற்று வருகிறது. வேண்டும் போது, பிராமணர்களையும் தாஜா செய்வதில் இக்கட்சிகள் தயங்குவதில்லை. இதனால், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டுகள் சிதறி வருகின்றன. அதனால் தான், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முறை கூட்டு வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்தும் மாயாவதி ஏமாற்றியதால் ஆட்சி கவிழ்ந்து, முல்லாயம் திரும்ப ஆட்சிக்கு வந்தார்.

முல்லாயம் சிங் யாதவின் பிரதமர் ஆகும் கனவு: இப்பொழுது, காங்கிரஸ்-பிஜேபி ஓட்டுகளை உடைத்து, உபியில் கணிசமான எம்பிக்களைப் பெற்றுவிட்டால், மூன்றாவது கூட்டணி உருவாக சாத்தியமாகும், அப்பொழுது தான் பிரதம மந்திரி ஆகிவிடலாம் என்ற கனவு முல்லாயம் சிங் யாதவுக்கு இருக்கிறது. 2012லிருந்தே அவர் அதனை வெளிப்படையாகவும் சொல்லி வருகிறார். நான் ஒன்றும் முற்ரும் துறந்த முனிவன் அல்ல என்று சென்ற வருடம் செப்டம்பர் 2012ல் கூறியுள்ளார்[10]. உபி தவிர, மத்தியபிரதேசம், ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் போட்டியிடுவோம். எண்ணிக்கையை வைத்துக் கொண்ட்டு திட்டமிடுவோம், என்றார். இந்த ஆகஸ்டில் (2013) மாயாவதி கட்சிக்காரர் ஒருவர், இவர் வி.எச்.பியுடன் சேர்ந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய திட்டமிடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்[11]. காங்கிரஸும் இதனைத் தெரிந்து வைத்துக் கொண்டே இவருடன் ஜாக்கிரதையாக அணுகி வருகிறது. ஒரு வருடகாலத்தில் பதவியில் நீடித்தால் தான், அரசு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி விளம்பரம் சம்பஆதித்துக் கொள்ளலாம், தங்களது செலவும் மிச்சமாகும் என்ற எண்ணத்துடன் தான், காங்கிரஸ் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை குறைந்த இடங்கள் கிடைத்தாலும், பிஜேபியைப் பதவிக்கு வரவிடாமல், முல்லாயத்தை வைத்து, வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து ஒரு-இடண்டு ஆண்டுகள் இழுத்தடிக்கலாம் என்ற மாற்று எண்ணமும் காங்கிரஸின் திட்டத்தில் உள்ளது.

வேதபிரகாஷ்

© 14-09-2013


[4] Yadav first visited Kawal village, where three persons were killed on August 27 over an eveteasing incident after which tension has been running high in the district.  The CM met the father of the boy who was killed by Jat men from the neighbouring Malikpura village.

http://zeenews.india.com/news/uttar-pradesh/akhilesh-yadav-to-visit-violence-hit-muzaffarnagar-amid-tight-security_876585.html

[5] Later, the Chief Minister left for Malikpura and Kandhla to meet family members of victims.  “I went to both the villages and met the families of Shahnawaz as well as Sachin and Gaurav. There is grief and we understand that… I appeal for calm,” the 40-year-old CM said.

http://zeenews.india.com/news/uttar-pradesh/akhilesh-yadav-to-visit-violence-hit-muzaffarnagar-amid-tight-security_876585.html

[9] Two separate FIRs were registered. According to the FIR for Sachin and Gaurav’s death, registered by Gaurav’s father, Ravinder Kumar, he says his son had a bike accident with someone called Mujassim, which led to the altercation. The other accused, apart from Mujassim, are Mujibulla, Furqan, Jehangir, Afzal, Nadeem and Kalua. The FIR for Shahnawaz’s death names Gaurav, Sachin, Prahlad, Vishan, Tendu, Devendra, Yogender and Jitendra. It says all the accused came to Kawwal, forcibly entered Shahnawaz’s house and took him out. They were armed with knives and swords. They injured him and left him half-dead. He died later on the way to the hospital.

[11] BSP today charged Mulayam Singh Yadav with playing “cheap politics” over the VHP’s yatra, and alleged that the SP chief was not averse to vitiate atmosphere of UP to fulfil his ambition of becoming prime minister.

http://articles.economictimes.indiatimes.com/2013-08-26/news/41455444_1_bsp-leader-sp-chief-swami-prasad-maurya

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச்சி!

ஜூன் 21, 2013

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு  – தொடர்ச்சி!

Two anti-Hindus together Karu-Ramமவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டலடித்த ஆளிடமே காட்டிப் பெருமைக் கொள்ளும் ராம்!

இந்துவிரோத திராவிட சித்தாந்தம்: “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது, என்று முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது[1]. ஜூலை 2010ல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது சட்டமுன்மாதிரியான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதற்கான நிலையை கருணாநிதியே உருவாக்கிக் கொண்டாரா என்பது வாதத்திற்குரியது, ஆனால், சாத்தியமானதுதான். திராவிட பரம்பரையில் சட்டத்தை வளைப்பது என்பதெல்லாம் வாடிக்கையான கலைதான். ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[2].

Periyar statue in front of Sri Rangam Gopuramகோவிலுக்கு முன்னால் சிலைவைத்தால், சாதிப்பதாக ஆகிவிடுமா? திகவினரின் சிறுமைத்தனம் – ஏனெனில் அவர்களுக்கு ஒரு மசூதி அல்லது சர்ச் முன்பு அவாறூ வைக்க வக்கில்லை, துப்பில்லை!

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.
  10. ஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………
  11. சில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..
  12. கருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….

இப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள்[3]. ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்[4].

Two anti-Hindus together Karu-Ram- Raja also“மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” ஆசிவேண்டி நிற்கிறது போலும்! அருகில் விஷ்ணு ஸ்டாலின் நிற்பதும், ஊழல் ராஜா நிற்பதும் காலத்தின் கோலமே!

தேர்தலின் மீது கருணாநிதியின் தன் மீது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அவரே தனது தன்னிலை விளக்க சமர்ப்பண மனுவில், கீழ்கண்டவாறு பட்டியல் போட்டு காண்பிரித்திருந்தார்[5]:

No. Of Cases pending

Case No

Name of the Court

Date of the court for ordering enquiry

The details of offence, Sections violated

Details of the volations, for which the cases filed

1 CC.No. 29/2003 Additional magistrate III 16-06-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
2 CC.No. 91/2003 Additional magistrate III 01-12-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
3 CC.No. 5/2004 Additional magistrate VII 27-01-2004 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
4 CC.No.12/2005 Additional magistrate V 10-06-2005 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
5 CC.No. 1/2006 Additional magistrate VII 06-01-2006 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
6 CC.No. 3156/2006 Additional magistrate XIV 03-03-2006 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings
7 CC.No. 15522/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
8 CC.No. 15523/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
9 CC.No. 4495/2005 XVII Criminl Court, Saidapet 16-06-2005 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings

அரசியல் ரீதியில், அரசியல் கட்சிவாரியாக, நீதித்துறையில் நியமனங்கள் பங்கிடப் படுகின்றன. சட்டம் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட துறைகளில் கட்சிகளிலன் சார்பாகத்தான் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று நியமிக்கப்படுகிறார்கள்[6]. அவ்வாறிருக்கும் போது, தமது எஜமானன், நண்பர், வேண்டியவர் …………………..என்று வரும் போது அவர்கள் எப்படி நடுநிலையோடு, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள். போலீஸ் துறையும் அவ்வாறே உள்ளது[7] அதாவது அங்கும் நியமனங்கள் கட்சிவாரியாகத்தான் உள்ளது.

Hindu thief - dinamani23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன என்று இருந்து விடுவார்களா என்று பார்ப்போம், என்று 20-04-2013 அன்று பதிவு செய்திருந்தேன்[8].

Hindu thief - dinamani- Headingகௌதமனின் புகாரும், கருணாநிதி பதில் அளிக்க எடுத்துக் கொண்ட நேரமும்: தமிழக அரசு கடந்த 2002-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை தொடர்ந்து எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் சிறுபான்மை அமைப்பு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.  இதில், கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி மீது சென்னை மாம்பலம் போலீசில் கவுதமன் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2002ம் ஆண்டு மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதமன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

Hindu thief - Indian expressஇரண்டு மாதங்கள் கழித்து கொடுக்கப்பட்டுள்ள பதில்: இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது[9]: “நான் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளேன்[10]. பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையில் கவுதமன் என் மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளார்[11]. நான் பேசியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்[12] சுயவிளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்தோடும் என் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

Karunanidhi with Christiansபாவம் இந்துக்கள் – நிலைமையை அறியாமல் வெற்றிவிழா கொண்டாடினார்கள்: நிலைமை அறியாமல், கௌதம் ஒரு கூட்டம் போட்டு, விளக்கினாரம். அவரது நண்பர்களும், “வெற்றி” என்று இணைதளத்தில் மகிழ்சியை பரிமாறிக்கொண்டனர். ஆனால், சட்டத்தின் நிலையை அவர்கள் அறியவில்லை. இந்துக்கள் இதனால்தான், நல்ல வழக்குகளை இழக்கின்றனர். சட்டப்பிரிவில் சொல்லியிருக்கின்றபடி, சட்டமீறல்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, அவற்றை விளக்க வேண்டும். அதை விடுத்து, நாளிதழ்கள் இப்படி அறிவித்தன என்று அவற்றின்மீது ஆதாரமாக வழக்குத் தொடர்ந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் என்று காட்டி வாதிக்க வேண்டும்.

Karunanidhi with Muslims

வேதபிரகாஷ்

© 21-06-2-13


[1] வேதபிரகாஷ், “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறுபேசியவழக்கு தள்ளுபடியானது,

http://lawisanass.wordpress.com/2010/07/14/case-hindu-thief-karunanidhi-dismissed/

[6] மாஜிஸ்ட்ரேட் கோர்ட், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் முதலியவை; சாலிசிடர் ஜேன்ரல், ஸ்டேன்டிங் கவுன்சில், செயலாளர் என்ற அனைத்து பதவிகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பி.எல் என்ற பட்டம் வைத்துக் கொண்டிருந்தால் போதும், சட்டத்தைப் பற்றிய அறிவுகூட வேண்டாம். பதவிகள் வந்து கொண்டிருக்கும், குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வசதி, வாழ்வு எல்லாம் பெருகிக்கொண்டே போகும். நிலைமையே மாறிவிடும்.

[7] வேதபிரகாஷ், கருணாநிதியின்மீதுநிலுவையில்உள்ளவழக்குகளும், அவைநடத்தப்படும் விதமும்!,

http://lawisanass.wordpress.com/2010/07/14/the-cases-pending-against-karunanidhi-and-the-courts-judges/

[10] அதாவது எனக்குத் தெரியாத சட்டத்தையா, நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிறாய் என்பது போல சொல்லொயிருக்கிறார்.

[11] அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

[12] “உள்ளங்கவரும் கள்வன்” என்று வேறு விளக்கம் கொடுத்துள்ளேன் என்று சுட்டிக் காட்டுகிறார்.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

ஓகஸ்ட் 4, 2012

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

 

முஸ்லீகள் காளியின் பெயரால் நரபலி கொடுத்தார்களாம்: இரண்டாண்டுகளுக்கு முன்பு, ஜூலை மாத வாக்கில் (ஜூலை 2010) இந்த குரூர நிகழ்சி நடந்தது. முதலில் தர்காவில் குழந்தையை நரபலிக் கொடுத்து பூஜை முடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. சன்-டிவி போன்ற செனல்கள் கூட விவரமாக வீடியொ-செய்திகளை வெளியிட்டது. ஆனால், திடீரென்று “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று கொலையாளி சொன்னதாக செய்தி வந்தது[1]. ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது[2]. நூற்றுக்கணக்கான குழந்தைகள் மறைவதற்கு நரபலி காரணமா என்ற சந்தேகமும் எழுந்தது[3]. மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டும் குழந்தைகள் கொலைசெய்யப் படுகின்றன[4]. அவ்விதத்தில் காணாமல் போன குழந்தைகள் விஷயத்திலும் மற்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன[5].

 

மனைவியின் நோயையை நீக்க நரபலி கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை: மதுரையில் ஒருவயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில் கணவன், மனைவிபோல் வாழ்ந்த இருவருக்கு மதுரை கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தூத்துக்குடி, காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கபூர் (30). அவர் மனைவியை விவாகரத்து செய்தவர். ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி, சமையல் வேலை செய்து வந்த இவருக்கும், அங்கிருந்த ரமீலாபீவிக்கும் (28), பழக்கம் ஏற்பட்டது. ரமீலாபீவி கணவரை விவாகரத்து செய்தவர். இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்தனர்.

 

நரபலி கொடுத்தது, ரத்தம் குடித்தது: தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், செல்வந்தராகலாம் எனக்கருதி, அத்தகைய குழந்தையை தேடி மதுரை வந்தனர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் 21 நாட்கள் தங்குவதற்கு இருவரும் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.  மதுரை எஸ்.ஆலங்குளம் கோவலன் தெருவை சேர்ந்த கவுகர் பாட்ஷாவின் மனைவி சிரின் பாத்திமா. இவர் தனது ஒரு வயது குழந்தை காதர்யூசுப், தாய் சுல்தான் பீவியுடன், 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்கினர். அங்கு மறுநாள் இரவு, தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, காதர்யூசுப்பை அப்துல்கபூரும், ரமீலாபீவியும் கடத்தி, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் கழுத்தை அப்துல்கபூர் அறுத்து ரத்தத்தை வாளியில் பிடித்தனர். ரத்தத்தையும் குடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன[6]. தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். ஏர்வாடி சோமன் நகரில் 2 நாட்கள் பூஜை செய்து, அங்கு குழந்தையின் உடலையும், திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரையில் தலையையும் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியுள்ளனர்[7].

 

குழந்தையை பெற்றொர் புகார், குற்றவாளிகள் கைது: சிரின் பாத்திமா புகாரின் பேரில், மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்குவதற்கு பெயர் பதிவு செய்துவிட்டு மாயமான அப்துல் கபூர், ரமீலா பீவியை தேடினர். அவர்கள் கொடுத்த காயல்பட்டினம் முகவரியில் விசாரித்த போலீசார், ஏர்வாடியில் இருப்பதை அறிந்து இருவரையும் கைது செய்தனர்[8].  இவ்வழக்கு மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி எம்.சுரேஷ் விஸ்வநாத் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவமுருகன் ஆஜரானார்.

 

தண்டனைக் கொடுக்கப் பட்டது: குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர், அவர்கள் விளக்கியபடி குறிப்பீட்ட இடங்களுக்குச் சென்று, ஆதாரங்களை போலீஸார் திரட்டினர். குழந்தையை கடத்தியதற்காக அப்துல், கபூர், ரமீலாவிற்கு ஆயுள் தண்டனை, கொலை செய்ததற்காக இருவருக்கும் மற்றொரு ஆயுள்தண்டனை[9], தடயங்களை மறைத்ததற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா 2000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்[10].

 

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் ஏனிப்படி நரபலிகள் தொடர்கின்றன: கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட கழகம் மற்றும் திமுக, அதிமுக முதலிய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய சித்தாந்தக் கூட்டாளிகள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற இந்து-எதிர்ப்பு கோஷ்டிகள் அத்தகைய பகுத்தறிவோடுதான் நடந்து கொண்டு வருகிறார்கள் ஊடகங்களில் ஊலையிட்டு வருகிறார்கள். பிறகெப்படி அத்தகைய ஞானப் பிழம்புகள் நரபலி கொடுக்க முடியும்? பெரியாரின் வாரிசான கலைஞரின் மூத்த வாரிசின் மண்ணான மதுரையில் எப்படி நரபலிகள் கொடுக்கப்படமுடியும்? திமுகவினரே[11] அதில் எப்படி துணைப் போக முடியும்? “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று ஒரு முஸ்லீம் சொன்னது போல, ஒரு பெரியாரிச, பகுத்தறிவாளனும் அவ்வாறே சொன்னால் என்னாவது? இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜலட்சுமி என்ற குழந்தையைக் கொன்று ரத்தம் தூவியவனின் அயூப் கான்[12]. இங்கு மதச்சாயம் பூச விரும்பவில்லையென்றாலும், எப்படி முஸ்லீம்கள் இக்காரியங்களில், அதிலும் பகுத்தறிவாளனாக, பெரியார் பாதையில் செல்லும், திமுகவின் அதிகாரியாக, மேலாக ஒரு முஸ்லீமாக இருந்து அத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்? ஒருவேளை ஆதிசங்கரர் எதிர்த்துப் போராடிய நரப்ச்லிக் கூட்டத்தார் இவர்கள்தாம் போலும்[13].

 

வேதபிரகாஷ்

04-08-2012


[6] Times of India, Fakir ‘beheads’ toddler, ‘drinks’ his blood in Tamil Nadu, TNN Jul 26, 2010, 12.33am IST

http://articles.timesofindia.indiatimes.com/2010-07-26/india/28315709_1_dargah-child-sacrifice-exhumed

[7] “Gafoor and Ramala Beevi took the child to a lodge in Ramanathapuram. When the child started crying, Gafoor slit his throat. He then beheaded the boy and buried the head at Kattupallivasal near the Erwadi dargah. The couple then took the head to Thoothukudi where they buried it near the Kallamozhi dargah,” Chidambaram Murugesan, inspector and head of the special team investigating the case said.

[12] According to the police, A. Ayub Khan of Katchakatti, the DMK functionary, sprinkled the child’s blood around a newly constructed building as part of fulfilling a vow………….Ayub Khan, who was then the deputy chairperson of the Madurai district panchayat, was constructing a new building for a women’s college. As he could not complete construction even after two years, he was advised to sprinkle the blood of a girl child around the campus. Ayub Khan offered Rs.8.5 lakh to carry out the task. Mahamuni and Karuppu, the butchers, were lured by broker A. Murugesan (54) of Vadipatti and Ponnusami (22) and Lakshmi……….Ayub Khan had confessed to sprinkling the blood on the college campus, the SP said.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3364973.ece

[13] ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அரேபியர்களுக்கு போதித்தார் என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. காளாமுகர்கள், நரபலி கூட்டத்தார் முதலிரோரையும் எதிர்த்ததாக கூறுகின்றன.

அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்!

செப்ரெம்பர் 23, 2010

அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல: உள்துறை சிதம்பரத்தின் குசும்புகளும், காங்கிரஸின் மறுமுகமும்!

சிதம்பரத்தின் பொறுப்பற்ற பேச்சு, செயல்பாடுகள்: நிதித்துறையைக் கெடுத்து, இப்பொழுது சம்பந்தமே இல்லாத உள்துறைக்கு வந்து, முஸ்லீம்கள் என்றாலே பேதியோடு அலையும் சிதம்பரம்[1], அயோத்தியா விஷயத்தில் தேவையற்ற பொறுப்பற்ற முறையில் பேசி மறைமுகமாக வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருவது தெரிகிறது[2]. திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் என்று ஒப்பாரி வைத்து மிரட்டியுள்ளார்[3].

நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த தேதியில் வெளியாகும் என்று ஏன் காங்கிரஸ் கலாட்டா செய்கிறது? நீதிமன்றத்தில் தினம்-தினம் பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதை விட முக்கியமான பல தீர்ப்புகள் உச்சநிதி மன்றத்தில் தீர்மானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனல், அப்பொழுதெல்லாம், இம்மாதிரியாக யாரும் விளம்பரப்படுத்தியதில்லை. மக்களை பீதிக்கு உண்டாக்கி, கலவரத்தைத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் சென்றதில்லை. பிறகு, ஏன் இப்பொழுதுள்ள அரசு செய்து வருகிறது? xசம்பந்தப்பட்ட்ட வாதி-பிரதிவாதிகளே அமைதியாக இருக்கும் போது, காங்கிரஸ், கருணாநிதி, சிதம்பரம் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் ஏன் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

மசூதிக்காக வழக்காடும் காங்கிரஸ் வக்கீல்: காங்கிரஸ் இந்த உண்மை வெளிவந்து விடும் என்று பயப்படுகிறாதா? மசூதிக்காக வழக்காடும் பிரதிவாதி எண்.17 – ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் முன்னால் காங்கிரஸ் முதல் மந்திரி ஸ்ரீபதி மிஸ்ராவின் மறுமகன்[4]. இவர்தான், உச்சநீதி மன்றத்தில், இவழ்ழகின் தீர்ப்பை ஒத்திப் போடவேண்டும் என்று வழக்குப் போட்டவர், ஆனால், நேற்றே (புதன் கிழமை) தள்ளுபடி செய்யப் பட்டது. உடனே சிதம்பரம் கூட்டம் போட்டு இப்படி பேசுகிறார். அலஹாபாத் நீதிமன்றம் ஏற்கெனெவே, இவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இப்படி முஸ்லீம்களுக்காக வாதிடும் வக்கீல் நீதிமன்றத்திற்கு ஓடும் / ஓடுகின்ற வக்கீல்[5], “இப்பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என்றும் சொல்லியுள்ளாராம்!

திக் விஜய சிங்கின் பொறுப்பற்ற பேச்சு[6]: திக் விஜய சிங் என்ற காங்கிரஸ் தரப்பு பேச்சாளர், மறுபடியும் மத கலவரங்கள் வெடிக்கும் இதனால் நாட்டின் பொருளாதார நிலை சீரடையும் என்று ஒப்பாரி வைத்துள்ளார். நமக்கு முக்கியமானது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியே அன்றி, இத்தகைய பிரச்சினைகள் அல்ல. இதற்காக நாடி ஏற்கெனவே அதிக விலையைக் கொடுத்தாகி விட்டது (Congress on Wednesday warned against another spell of communal violence and strife undermining the country’s current economic boom. “The focus at this point should be entirely on economic growth and not on controversies like this,” said party general secretary Digvijay Singh. He said the country had already paid a heavy price as a consequence of the Ayodhya demolition).

அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல[7]: இந்த சாதாரண விஷயம் எல்லோரிக்கும் தெரியும், இது சிதம்பரம் சொல்லித்தான் தெரிவதில்லை. பிறகு எதற்காக இந்த கலாட்டா?  இதில் வாதிடுபவர்கள் சட்டம் தெரிந்தவர்கள், சரித்திரம் அறிந்தவர்கள். சிதம்பரத்தைப் போல ஜிஹாதிகளுக்கு பயப்படும், பரிந்து பேசும் கோழைகள் அல்ல. முஸ்லீம் கூட்டத்தில் பங்கு கொண்டு, ஃபத்வா போடும் போது[8], “ஐயையோ, நான் அப்பொது அங்கு இல்லவே இல்லை”, என்று ஓடிப் போகும் பயந்தாகொள்ளிகள் அல்ல[9].

அதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது: தாலியறுத்த கசாப்புக்காரன் கசாப் கூட அப்பீலுக்குத் தான் செல்கிறான். பாதிக்கப் பட்டவர் கோடிக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவனுக்குதானே கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அவனைப் போன்ற ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரத்தில்  பெண்களை வேறு கூட்டிக் கொடுக்கிறர்கள். இந்த அளவிற்கு கேவலமாக உள்ளவர்கள் தாம் “இறைவனின் மீது” என்று மனிதர்களைக் கொன்றுக் குவிக்கிறர்கள்.

எனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் .சிதம்பரம் கூறியுள்ளார்: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம். எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது.

கோவிலுக்குத் தீர்ப்பு சாதகமாக இருந்தால்: கோவிலுக்காக தீர்ப்பு சாதகமாக இருந்தால், உடனே கோவில் கட்டுவதற்கு அனுமதி கேட்பார்கள். ஆனால், அந்த 67 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கையில் உள்ளது கோவிலை ஆதரிப்பவர்கள் அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால், நிச்சயமாக முஸ்லீம்கள் இதை எதிர்ப்பார்கள்[10]. (In the event of the verdict going in favour of those favouring a mandir, they would immediately demand permission to construct the Ram temple. A major impediment in this will be the fact that 67 acres around the disputed site is in the possession of the Union government. The temple advocates could pile up pressure on the government to enact a law to hand over the acquired land to the temple trust. But this is certain to be contested by Muslims).

மசூதிக்குத் தீர்ப்பு சாதகமாக இருந்தால்: மசூதிக்காக போராடுபர்களுக்கு சாதகமாக இருந்தால், உடனடியாக ஒரு “சரித்திர தவறு”. நடந்ததை சரி செய்யவேண்டும் என்று பாபரி கமிட்டிக்கு கொடு என்று குரல்கள் எழும்.  (In the event of the verdict favouring the masjid votaries, there would be calls to immediately correct a ‘historic wrong’ and hand over the site to the Babri committee. As the next legal step is available to the losing party, the latter is sure to approach the higher judiciary for relief).
கையகப்படுத்தியுள்ள நிலத்தை மாற்றிக் கொடுக்க தாமதம் ஏற்பட்டால்: அந்நிலையிலும் தோற்கும் குழு மேல்முறையீடு செய்யும். அந்நிலையில் நிலத்தை மாற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்கு சமந்தப்பட்டக் குழுக்கள் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்தப் பிறகுக்கூட, தாங்கள் பாதிக்கப் படுகிறோம், பலனை அனுபவிக்காமல் அரசு செய்கிறது என்பார்கள். (Any intervention that would delay the transfer of the land is certain to provide an opening to community members to invoke ‘victimhood politics’ — despite the court’s order, justice was being denied to them).

அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும். தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம். தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மறுபடியும் கோவில்-மசூதி என்று பிரச்சினையை மாற்றியுள்ளது: காங்கிரஸ் இப்படி தொடரெந்து நீதித் துறையில் புகுந்து சட்டத்தை அசிங்கமாக்குவது நல்லதல்ல என்பதை மக்கள் பிறகுதான் உணர்வர். ஏற்கெனவே, ஒய்வு பெற்ற காங்கிரஸ் ஆதரவான நீதிபதிகளை வைத்துக் கொண்டு, தொடர்ந்து முக்கியமான பிரச்சினைகளையெல்லாம் ஏதோ கமிஷன் வைத்து[11], அறிக்கைத் தாக்கல் செய்து[12], பிரச்சினைகளைத் தீர்ப்பது போல, சட்டரீதியாக, மேன்மேலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதேபோல, இந்த ராமஜன்மபூமி-பாபரி மஸ்ஜித் வழக்கிலும் குளறுபடி செய்ய காங்கிரஸ் தீர்மானமாக உள்ளது என்பது தெரிகிறது. கோடிக்கணக்கில் ஊழலில் நாறி, பாலம், கூரைகளே தினம்-தினம் விழும் போது, ஒருவேளை, இப்படி காங்கிரஸ் செய்கிறது என்றும் ஊடகங்கள் விளக்கம் அளிக்கலம், ஆனால், முன்பு இது உள்ளூர் பிரச்சினை, வாதி-பிரதிவாதி விரச்சினை, மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றெல்லாம் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.


[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[2] வேதபிரகாஷ், ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!, http://islamindia.wordpress.com

[3] http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms

[4] http://www.indianexpress.com/news/petitioner-kin-of-excong-cm-and-defendant-in-title-suit/686407/

[5] http://www.thehindu.com/news/national/article777442.ece

[6] http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms

Read more: High court may ‘decide not to decide’ title suits, feel netas – The Times of India http://timesofindia.indiatimes.com/india/High-court-may-decide-not-to-decide-title-suits-feel-netas/articleshow/6610104.cms#ixzz10JAUR2GW

[7] In fact, Article 134A of the Constitution of India allows a party aggrieved to make an oral application in this regard immediately after the passing of the judgment.

[8] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

[9] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/

[10] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Ayodhya-verdict-Chidambaram-advises-caution/articleshow/6610340.cms

[11] ராஜிந்தர் சச்சார், ரங்கநாத் மிஸ்ரா, லிபரான், சகீர் அகமது என்று பல கமிஷன் / கமிட்டிகள் வைத்து விளம்பரப்படுத்தி, கவர்ச்சிகர அறிக்கைகளை சமர்ப்பிக்க செய்து தமாஷக்கள் செய்துள்ளது.

[12] சச்சார் கமிஷனை உடனடியாக அமூக்ல் படுத்து என்ரு முஸ்லீம்கள் கோழமிட்டனர், ஆனால், கிருத்துவர்கள் எதிர்த்தவுடன் அமைதியாகி விட்டர்து. இதே நிலைதான் தமிழகத்திலும் ஏற்பட்டது – கருணாநிதி முஸ்லீம்கள்-கிருத்துவர்களுக்கு உள்-ஒதுக்கீடு என்று செய்தபோது, கிருத்துவர்கள் தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

பல்லாவரத்தில் மசூதியில் உண்டியலை உடைத்து கொள்ளை!

மார்ச் 3, 2010
பல்லாவரத்தில் மசூதியில் உண்டியலை உடைத்து கொள்ளை
Chennai செவ்வாய்க்கிழமை, மார்ச் 02, 3:15 PM IST

http://www.maalaimalar.com/2010/03/02151522/robbery.html

பல்லாவரத்தில்     மசூதியில் உண்டியலை     உடைத்து கொள்ளை

தாம்பரம்,மார்ச்.2- 2010:பல்லாவரம் பஜார் ரோட்டில் ஜாமியா மசூதி உள்ளது. இங்கு கட்டிட நிதிக்காக உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு நயினா அகமது என்பவர் மசூதியை பூட்டி விட்டு சென்றார். இன்று காலையில் பார்த்த போது மசூதிகதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

mosque-hundi-cash-stolen

mosque-hundi-cash-stolen

அதில் சுமார் 15 ஆயிரம் பணம் இருக்கலாம். என்று கூறப்படுகிறது. தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து சென்று கை ரேகைகளை பதிவு செய்து விசாரனை நடத்தினார்கள். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

mosque-hundi-broken

mosque-hundi-broken

இவர்கள் செக்யூலார் திருடர்களா அல்லது கம்யூனல் திருடர்களா?

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்!

நவம்பர் 7, 2009

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்தது என்ற வதந்தியைப் பரப்ப ஆரம்பித்தது இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress) என்ற மார்க்ஸிஸ்ட்-முஸ்லீம் கூட்டத்தின் திட்டமிட்ட செயல்[1] ஆகும். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் (Aligarh Muslim University) ஒரு முஸ்லீமை வைத்து அத்தகைய “ஆய்வு கட்டுரை” படிக்கப் பட்டது. ஆனால், எல்லோராலும் அக்கட்டுரை நிராகரிக்கப் பட்டதில்லாமல், கேலிக்குண்டானது.

முன்பு கல்கத்தாவில் நடந்த 51வது மாநாட்டில் 1990 சமரேந்திர நாராயண் ஆர்யா என்பவர் “அயோத்யாவின் சரித்திரத் தன்மை” என்ற கட்டுரை அயோத்யாவை உத்திரபிரதேசத்தில்தான் வைத்து ஆதாரங்களை எடுத்துக் கட்டினார்[2]. அப்பொது அமைதியாக அக்கட்டுரை ஏற்றுக் கொள்லப் பட்டது அல்லாமல், பதிப்பிக்கவும் பட்டது. ஆனால், எந்த ஊடகமும் அதைப் பற்றி சொல்லவில்லை!

“சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு: இதனால், 1997ல் ஸ்யாம் நாராயண் பாண்டே என்பவரை வைத்து 58வது கூட்டத்தில் “சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு (“Historical Rama distinguished from God Rama”) என்று எடுத்துக் காட்டி கட்டுரை வாசிக்க வைக்கப்பட்டது. சரித்திர ராமர் என்று பார்த்தால், இப்பொழுதுள்ள அயோத்தி 800 B.C. காலத்திற்கு முன்பு செல்லாது. ஆனால் சரித்திர ராமரின் அயோத்யா, ஆப்கானிஸ்தானிலுள்ள ஹீரத் என்ற நகரத்திற்கு அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில் இருந்தது. “ஹரி ருத்” என்பதுதான் ஹரயு > சரயு என்றாகியது. ராமர் இறந்தபிறகு அந்நகரம் அழிக்கப்பட்டது. பிறகு காஸி அல்லது குஸிலவஸ் இன மக்களால் குஸக் என்ற பெயரில் ஒரு நகரம் கட்டப்பட்டது. அதுதான் பிறகு குஸ என்று ராமரின் மகனின் பெயரில் விளங்கியது. அந்த காலங்களில் காஸி மற்றும் அயோத்யா என்பது ஒரே இடத்தைக் குறிக்கும்.

ஆகவே பாணினி மற்றும் ரிக்வேதம், மற்ற ஆசிரியர்களின் கருத்தின் [பி. சி. லா, ஏ. எஸ். அட்லேகர், ஏ. எல். பாஷம், கே. எஸ். குலிஸ் முதலியவர்கள்] படி சரித்திர ரீதியில் ராமர் என்பவர் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தார். ஆகவே சரித்திர ராமரைத் தேடவேண்டுமானால் இந்தியாவின் வடகிழக்கே அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய கருத்தை ஆமோதித்த ஆர். எஸ். சர்மா என்ற பிரபல சரித்திர ஆசிரியர், “ராமர் அயோத்யாவில் பிறக்கவில்லை என்று சொல்லமுடியாது”., என்றும் நக்கலாகச் சொன்னார்!

பாண்டே பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் நிருபரிடத்தில் பேசுகையில்[3], “மனத்தளவில் நினைக்கின்ற ராமர் காலத்தால் மிகவும் முந்தையவர். எப்படி புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்களோ, நாமும் அந்த உன்மைகளை கவனிக்கும்போது, ராமர் உத்திரபிரதேசத்தில் அயோத்யாவில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது”, என்றார்!

1999ல் ராஜேஸ் கொச்சார்[4] என்ற நட்சத்திர-பௌதிகவியல் விஞ்ஞானி (Astro-physicist), ஆனால் மார்க்ஸீய சித்தாந்தவாதியும், பாப்ரி முஸ்லீம்களை ஆதரிக்கும் கூட்டத்தில் இருப்பதால், மறைமுகமாக ரிக்வேதம் ஆப்கானிஸ்தானில்தான் இயற்றப்பட்டது. வேதகாலத்திற்கு முற்பட்ட மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, அது ஏன் அவ்வளவு தொலைவில் இருந்தது என்றும் கேட்கவில்லை? அதாவது அயோத்யா ஆப்கானிஸ்தானத்திலேயே இருந்திருந்தால், அவன் ஏன் அங்கிருந்தே அங்கு செல்லவேண்டும்?  ஆனால் கொச்சார் கேட்பது, வேறுவழியில் அதாவது வடமேற்கில் இருந்ததால், கங்கைக்கரையின்மீது தேடவேண்டியதில்லை[5]. மேலும் லாஹூர் என்ற லவ்-பூர், ராமனுடைய மகனைக் குறிக்கிறது[6]. அதுவும் வடமேற்கில்தான் உள்ளது!

இதிலிருந்து அறியப்படும் / பெறப்படும் விஷயங்கள்:

    அயோத்யா ஆப்கானிஸ்தானத்தில் தான் இருந்தது என்றால் பிரச்சினையே இல்லையே. பிறகு எதற்கு “”சர்ச்சையில் இருந்த கட்டிடம்” / “பாப்ரி மஸ்ஜித்” இடிக்கப்பட்டது என்றெல்லாம் கலாட்டா செய்யவேண்டும்.
    இது கூடவா பாபருக்குத் தெரியவில்லை. தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ளதை விட்டு விட்டு பிறகு எதற்கு அவ்வளவு தூரம் வந்து உத்திரபிரதேசத்தில் உள்ள “அயோத்யாவிலுள்ள” ராமர் கோவிலை இடிக்கவேண்டும்? அதாவது மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, எப்படி அவன் அதிக தூரம் செல்லவேண்டியடில்லையோ, அதுபோல! ஆனால், பாபர் வந்தது இந்தியாவிற்குதான். கோவிலை இடித்தது உபியில் – அயோத்யாவில் இருந்த கோவிலைத்தான்!
    மொஹ்ஹம்மது கஜ்னிவிற்கு அல்-லத் சோமநாதபுரத்தில்தான் உள்ளது என்றறிந்து, அங்கு வந்து அதை இடித்து, தானும் முந்தைய முஹ்ஹம்மதுவை (PBCH) போன்றவனே[7] என்று நிரூபித்தான்! அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்பவை (Al-Lat Al-Manat, and Al-Uzzaa) “அல்லாவின் மகள்கள்” என்று குரான் குறிப்பிடுகின்றது[8].
    ஆகவே பாபரைவிட சிறந்த சாட்சி உலகத்தில் இருக்கமுடியாது! பாபர்நாமாவே அதனை ஒப்புக் கொள்கின்றது. அதனால்தான் முஸ்லீம்கள் குறிப்பாக அந்த பக்கங்கள் காணவில்லை என்கின்றனர் போலும்! ஆகவே கருணாநிதியோ, கமலஹாஸனோ பாபரை மிஞ்சமுடியாது!
    பாப்ரி மஸ்ஜித் கமிட்டி உச்சநீதி மன்றத்திற்கு முன்பு கொடுத்த அத்தாட்சிகளிலோ, ஆவணங்களிலேயோ இந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதாவது, அவர்களுக்கு அப்படி அந்த உண்மை தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.
    ஆர். எஸ். சர்மா இங்கு 1997ல் அமோதிக்கிறார். ஆனால், மற்றொரு இடத்தில்[9] 2001ல் எழுதும்போது, “அகழ்வாய்வு ரீதியில் 500 BCE வரை அயோத்யாவில் எந்த அத்தாட்சியும் கிடைக்காததால், அதனை ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான் மற்றும் பலியா, முங்கர் முதலிய மாவட்டங்களில் இருக்கும் என்று தேடுகின்றனர்” ஆகவே, இவர்கள் எப்படியெல்லாம் மாற்றி-மாற்றி பேசுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும்.
    அதாவது சித்தாந்தரீதியில் இந்துக்களுக்கு எதிராக பேசினால் தங்களுக்கு “செக்யூலரிஸ”ப் பட்டம் கிடைக்கும் என்று இங்கு இப்படி பேசுவது, மேலைநாட்டு புத்தகத்தில் தமது கட்டுரை வரவேண்டும் என்றால், அகழ்வாய்வைப் பிடித்துக் கொள்வது. இதில் என்னவேடிக்கை என்றால், அதே புத்தகத்தில் பி.பி.லால் தனது கட்டுரையில் அயோத்யாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பற்றிக் குறிப்பிடுகிறார்[10]. ஆனால் அவரது கட்டுரை, இவர்களுக்கு சாதகமாக இல்லாததனால், அதைப் பற்றி சொல்வதில்லை. ASIயின் 2003 அறிக்கையின்படி அகழ்வாய்வு அத்தாட்சிகள் 1000 BCE வரை செல்கின்றன.
    ஆகவே, முன்பு ஸ்யாம் நாராயண் பாண்டே, கொச்சார், முதலியோர் அயோத்யா அத்தாட்சிகள் 800 B.C. முன்பாகச் செல்லாது என்ற கருத்த மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களும் தமது தவறை உணர்ந்து மௌனிகளாக இருக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் கிளப்பிய பொய் பிரச்சாரம், அரசியல்வாதிகள் உளறியது அப்படியே உள்ளன. ஆகையால்தான், கமலஹாஸன் இன்றும் உளறுகிறார், பிதற்றுகிறார் முகமதியர் முன்பு!
    பிரபலமான கமலஹாஸன் அவ்வாறு உளருவதாலும், முதல்வர் கருணாநிதி பிதற்றுவதாலும் ஊதகங்கள் தாராளமாக அசற்றை பரப்புகின்றன. ஆனால், அவை தவறு என்று எடுத்துக் காட்டும்போது, அவ்வாறான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, மறுபடியும் கமலஹாஸன் சொன்னார், கருணாநிதி சொன்னார் என்று கிளம்பிவிடுவர்!

10. 10. “புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்கள்”, என்கிறாரே, இதை சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

11. 11. கௌசல்யாவைப் போல அவர்களது அம்மாக்களையும் அவ்வாறே அனுப்பிவைத்தார்களா, என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா?

சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்: முன்பு எம்ஜியாரை கூத்தாடி, கூத்தாடிக்காரன் என்றே கருணாநிது செல்லமாக சொல்லுவார். அதாவது சினிமாகாரர்களை அப்போது அவ்வாறு சொல்வது வழக்கம். ஆகையால், இப்போதும் அவ்வாறு சொல்வது பொருந்தும் போல இருக்கிறது. சினிமா / அரசியல் என்றால் அதோடு இருக்கவேண்டும், ஆனால், அதிகபிரசங்கித் தனமாக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு, குறிப்பாக இந்துக்களை தாக்குவது, தூஷிப்பது என்றால் முன்னே வந்து செய்வது, அதுவும், முகமதியர் முன்பு செய்வது என்றெல்லாம் ஏதோ தமக்கே உரிய லட்சணங்கள் என்பது போல இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, இந்த கூத்தாடிகள், இனிமேல், முழுவதுமாக படித்து விட்டு உளரவேண்டும் அல்லது யாராவது முழுவதும் தெரிந்தவர்களிடம் உரு வார்த்தைக் கேட்டுக் கொண்டு உளரவேண்டும். இல்லையென்றால், நிச்சயம், ஒரு நாள் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பொய்-மேல்-பொய் சொல்லி ஆடுகின்ற ஆட்டமில்லை கோசலையைப் பற்றி அவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால், எந்த ராஜலட்சுமியும், அஞ்சுகமும் பொறுக்கமாட்டார்கள்.


[1] 1987லிருந்து தொடர்ச்சியாக மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசிக்கும் ஆயுட்கால அங்கத்தினர்களிடமிருந்து சேகரித்த தகவல்கள் மற்றும் Proceedings of the Indian History Congress புத்தகங்களை பார்த்து தொகுத்த விவரங்கள்.

 

2 Samarendra Narain Arya, Historicity of Ayodhya, Proceedings of the Indian History Congress, 51st session, Calcutta, 1990, pp. 44-49.

[3] http://www.indianexpress.com/ie/daily/19971120/32450403.html

[4] Rajesh Kochhar, The Vedic People, Their History and Geography, Orient Longman, Delhi 1999.

[5] Ibid, p.209.

[6] Ibid, p.210.

[7] அதாவது முஹ்ஹம்மத் காபாவைத் தவிர, சுற்றியிருந்த 360 விக்கிரங்களை இடித்து போட்டார். பிறகு அரேபியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காபா விக்கிரத்தை விட்டுவைத்தார்!

[8] Koran, Surah:53.19

[9] Robert Layton, Julian Thomas, Peter G. Stone (Eds.), Destruction and conservation of cultural property, Routleg Taylor & Francis group, 2001, USA, p.127.

இதில் மற்ற கட்டுரைகளும் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கின்றன. எல்லோருமே அயோத்யாவை உபியில்தான் வைக்கின்றனர்.

[10] B. B. Lal, A note on the excavations at Ayodhya with reference to the Mandir-masjid issue, in Destruction and conservation of cultural property, as mentioned above, pp.117-120.