திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது?
வி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா! முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்!
முத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர்! நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!
திருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.
இந்துத்துவவாதிகள் செய்யவேண்டியது என்ன?: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.
© வேதபிரகாஷ்
19-06-2016
[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.
[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.
[3] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/
[4] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/ – இங்குள்ள பதில்களில் காணவும்.
[5] https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/
[6] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/
[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்!
[8] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? ……. I find it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India – Gita ramaswamy.
http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815
[9] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/
[10] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/