Archive for the ‘போலீசார்’ Category

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)

ஏப்ரல் 27, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)

Muslims protest against the arrest of the suspects.2

போலீஸாருக்கு எதிராக முஸ்லீம்களின் சுவரொட்டிகள், ஆர்பாட்டங்கள்: போலீஸார் சந்தேகிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை உறுதி செய்த பிறகுதான் கைது செய்துள்ளனர் மற்றும் விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் ஒரு பக்கம், தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளிப்படையாக, சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது, வழக்கம் போல, இணைதளத்திலும், பிரச்சார வேலையில் இறங்கியுள்ளனர்.

Muslims protest against the arrest of the suspects.3

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக சுவரொட்டிக் கூறுவது, “”வன்மையாக கண்டிக்கிறோம்! சட்டவிரோதமாக கடத்திச் சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்!” காவல்துறையே! கிச்சான் புகாரி உள்ளீட்ட முஸ்லிம் இளைஞர்களை உடனே விடுதலை செய்! தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை பலிகடாவாக்காதே!”.

Muslims protest against the arrest of the suspects

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)யின் சுவரொட்டிக் கூறுவது, “பெங்களூரு குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புகாரி உட்பட 5 முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கு பதிவுசெய்து கைதுசெய்ததையும், கோவை மற்றும் மதுரையில் தொடரும் காவல்தூரையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் ஆர்பாட்டம்”.

இதெல்லாம் சரி, ஆனால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் நிலையென்ன?

அவர்களுடைய மனைவிமார்களின் கதி என்ன?

அவர்களது பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

அவர்களுக்கெல்லாம் யார் ஆதரவு கொடுப்பார்கள்?

  • இதுதான் மனித நேயமா?
  • மனிதத்தன்மையா?
  • மனித உணர்வா?
  • மனித எண்ணமா?

ஆட்கொணர்வுமனுதாக்கல், மனித உரிமைகள் முதலியன:  இதே மாதிரி இன்னொரு அறிப்பும் காணப்படுகிறது[1] – “பெங்களூரு குண்டு வெடிப்பை மையபடுத்தி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்யும் போக்கு சில நாட்களாக அரங்கேறி வருகிறது…. “கிச்சான் புகாரி”யை இரண்டு நாட்களுக்கு முன்பே காவல்துறை கடத்தி சென்றதாகவும், அவரது மனைவி மதுரை உயர்நீதி மன்றத்தில் “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்ததையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாக ஊடங்களில் செய்தி வெளியானது என்றும், “மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்” கூறியுள்ளது. கோவை சிறைவாசிகளுக்காக சட்ட ரீதியாக போராடி வரும் CTM அமைப்பை சேர்ந்த கிச்சான் புகாரி வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைக்க பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற இளைஞர்களும் அப்பாவிகள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஊடங்கள், காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுத்து வருகின்றன. காவல் துறையின் இதுபோன்ற போக்கு தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளும் செயலாகவே அமையும், என கவலை தெரிவித்தது, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம். நேற்று நடந்த அணைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் உடனே இவ்விசயத்தில் தலையிட வேண்டும்.சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்ப பட வேண்டும், என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது”.

Bangalore blast - tracing the bike used

25-04-2013ல்நடந்தகூட்டம், ஆர்பாட்டம்: நெல்லை: பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததையும், கோவை, மதுரை மற்றும் நெல்லையில் தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் இன்று 25.04.2013 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[2]. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி, ம.ம.மு.க மாநிலத்தலைவர் பாளை.எஸ்.ரஃபீக், ஜமாத்துல் உலமா சபைசலாஹுதீன் ரியாஜி, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக்,மதிமுக அரசியல் மையக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், ஐ.என்.டி.ஜே மாநிலச்செயலாளர் அப்துல் காதர் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் துரை அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்[3]. இறுதியாக எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான் நன்றிகூறினார். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்[4].

Bangalore blast victims 2013

பாஸ்டனும், பெங்களூரும், போலீஸாரும், முஸ்லீம்களும்: பாஸ்டனில் குண்டுகள் வெடித்தபோது, மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். சந்தேகத்தின் மீதுதான், சொர்னேவ் சகோதரர்கள் சுற்றிவளைக்கப் பட்டார்கள், பிடிக்கப் பட்டார்கள். அவர்கள் முஸ்லீம்கள் தாம், என்றறிந்தும், முன்னரே அவர்கள் எப்.பி.ஐ.யினால் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிந்தும் மக்கள் விசாரணையில் தலையிடவில்லை. அங்கும் முஸ்லீம்கள் இருந்தாலும், இதுபோல சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கவில்லை,  கலாட்டா செய்யவில்லை, மாறாக பிடிபட்டபோது, மக்கள் மகிழ்சியோடு கொண்டாட்டத்தில் இறங்கினார்கள். 22-04-2013 அன்று குற்றாவாளி என்று கோர்ட்டில் நிறுத்தவும் செய்தனர். ஆனால், இங்கோ போலீஸார் விசாரணை செய்து வரும் வேளையிலே தமதிச்சைக்கேற்றவாறு பதவிகளில் இருப்பவர்கள், மற்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள், பேசுகிறார்கள். முயன்ற வரையில் இடைஞ்சல்களை செய்து வருகின்றனர்.

Bangalore blast victim2

சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது: இந்தியாவில், அரசியல்வாதிகள் எப்படி குண்டுவெடிப்பிற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, ஊடகங்களும், சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது என்ற ரீதியில் செயல்படுவதைப் போலிருக்கிறது. இங்கு தமிழகத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர் எனும்போது, பொறுப்புள்ள முஸ்லீம்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டனர், செல்போனில் ஏன் அப்படி ஒருவரொக்கு ஒருவர் தொடர்பு கொண்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எப்படி, ஏன் உபயோகிக்கப்பட்டது, தீவிரவாத இயக்கத்துடன் ஏன் தொடர்பு வைத்திருந்தனர், என்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை[5]. ஊடகங்களும் தங்களது புலன் விசாரிக்கும் யுக்திகளை கையாண்டு எதையும் எடுத்துக் காட்டவில்லை[6]. மாறாக, இதற்குள் பீர் மொஹித்தீனின் மனைவி சையத் அலி பாத்திமா மற்றும் பஸீரின் மனைவி சம்சுன் நிஸா ஊடகங்களுக்கு முன்னர், தங்களது கணவர்கள் அப்பாவிகள் என்று பேட்டி அளித்துள்ளனர்[7];

Wives of the suspects - BB before media

போலீஸ் கமிஷனர் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை; போலீஸரும், அமைச்சரும் கைதானவர்களின் எண்ணிக்கைப் பற்றி தவறாகக் கூறுகின்றனர், என்றெல்லாம் செய்திகளை வெளியிடுகின்றனர்[8].

Bangalore blast victim Rakshita

சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார்?: சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார், என்ற சிறிய விஷயம்தான் புரியவில்லை. கை-கால்கள் போனவர்களின் மனைவி, மகன், மகள், உறவினர்கள் ஏன் அவ்வாறு பேட்டிக் கொடுப்பதில்லை, இல்ல ஊடகங்கள் அவர்களிடம் ஏன் அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை, இல்லை அவர்கள் அவ்வாறு பேட்டி கொடுக்கப் பயப்படுகிறர்களா, அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? ஏன் மனித உரிமையாளர்கள், ஊடகக் காரர்கள், மற்ற விளம்பரக்காரர்கள் இதைப்பற்றி ஒன்றும் செய்திகள் வெளியிடுவதில்லை. ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களைச் சென்று பார்க்க எல்லா அரசியல்வாதிகளும் வருவது வழக்கம்[9]. ஆனால், இப்பொழுது ,முதலமைச்சரைத் தவிர, யாரும் வரவில்லை – ஏன்? ஒருவேளை காயமடைந்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லையா, இல்லை, பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலத்தில் உள்ளார்கள் என்பதால் கண்டு கொள்ளப்படவில்லையா, இல்லை, அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கண்டுகொள்ளவில்லையா. இத்தகைய வாதம் “கம்யூனிலிஸம்” என்ற நோக்கில் வைக்கவில்லை, ஆனால், காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் விதத்தௌ வைத்து வைக்கப் படுகிறது. தேர்தல் என்பதால், ஓட்டு வருமா, வராதா என்று யோசிக்கிறார்கள் போலும்.

Wives of suspects file petition - bangalore blast

காயமடைந்தவர்களில் 8 பேர் போலீஸ்காரர்கள்: மொத்தம் 16 பேர் காயமடைந்து, கே.சி. மற்றும் இதர ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்[10]. இதில் எட்டு போலிஸ்காரர்களும் அடங்கும். லீசா மற்றும் ரக்சிதா சுஜாய் என்ற இரு மாணவிகளைப் பற்றிதான் விவரங்கள் வருகின்றனவே தவிர மற்றவர்களில் நிலைப் பற்றி ஊடகங்கள் மூலம் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே பரீட்சை எழுத அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்றுதான் செய்திகள் வந்துள்ளன[11].

Bbangalore-bomb-blast-victim-recalls-the-horror Bangalore blast victim

பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம்: பலவழிகளில், அதிகமாக பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம் எனலாம். ஏனெனில், 16 பேரில், எட்டு பேர் போலீஸார் என்பது மட்டுமல்லாது, அவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளையும் செய்யவிடாமல், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சந்தேகிக்கப்பபவர்களில் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர்; குறை கூறுகின்றனர்; ஏன் தூஷணமும் செய்து வருகின்றனர். இதனையும் பாஸ்டன் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறார்கள்  என்பதனை அறிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

27-04-2013


[6] டெஹல்கா-tehelka- போன்று புறப்பட்டு கொட்டும் விளையாட்டுகளை (sting operations) நடத்தவில்லை, ஆசைக்காட்டி-காசு கொடுத்து பேட்டி எடுக்கவில்லை, வீடியோ எடுக்கவில்லை, ……………….