Archive for the ‘தொழுகை’ Category

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

ஓகஸ்ட் 13, 2013

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

J and K divided map

ஜம்முவில் நடவடிக்கை எடுக்கும் உமருக்கு,  ஏன் காஷ்மீரில் எடுக்கத் தெரியவில்லை: ரம்ஜானை சாக்காக வைத்துக் கொண்டு, கிஷ்த்வாரில் முஸ்லிம்கள் கலவரத்தை ஏற்படுத்தினால், காஷ்மீரில் உள்ள ஊக்குவிக்கும் தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஜம்முவில் எட்டு மாவட்டங்களில் [Jammu, Kathua, Samba, Udhampur, Reasi, Rajouri, Doda and Kishtwar districts] ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்[1]. அதாவது இந்துக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு. இந்து யாத்ரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வழக்கம் போல கலவரத்தை ஆராய உத்தரவிட்டு, அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்[2]. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்குமாம். பிறகு, பிஜேபி 2008ல் எப்படி அமர்நாத் யாத்திரையை அரசியலாக்கியதோ, அதே போல செய்ய முயல்கிறது என்கிறார்[3]. குரஜராத் கலவரத்தைப் பற்றியும் இழுத்துள்ளார்[4]. இவ்வளவும் பேசிய நிலையில், அந்த சஜன் அஹமது கிச்சுலூ ராஜினாமா செய்து விட்டார் என்ற செய்தியும் வருகிறது[5]. ஆனால், ஒவ்வொருவருடமும், இவர்கள் தாம் அமர்நாத் யாத்திரிகர்களை மிரட்டி வருகிறார்கள்[6].

Kishtwa riot - perpetrators and actors

சஜன் அஹமது கிச்சுலூவின் வேடங்கள்: முன்னமே கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப் பட்டது. மேலும் குறிப்பிட்ட 0.12 குழல் கொண்ட துப்பாக்கி தனியார் வைத்துள்ள துப்பாக்கியாகும். அதன் மூலமாகத்தான் ஒரு இந்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஷாஹன் வணிக வளாகத்தின் ஒரு கடையிலிருந்து 40 துப்பாக்கிகள், 1500 முறை சுடக்கூடிய துப்பாக்கிக் குண்டுகள் முதலியன கைப்பற்றப் பட்டன. அந்த வளாகம் சஜன் அஹமது கிச்சுலூவின் மகனுக்கு சொந்தமானது[7].  மேலும் கிச்சுலூவின் பாதுகாப்பு அதிகாரிகளுள் ஒருவனும்[8] இந்த கலவரம் ஆரம்பிக்க தூண்டுதலாக இருந்தான் என்று செய்திகள் சொல்கின்றன. இதிலிருந்து கிச்சுலூவின் தொடர்பு அறியப்படுகிறது. எதிர்கட்சியினர், இவற்றையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டிஉள்ளனர்.

Kishtwa riot - police vehicle burnt

காணாமல் போன உள்துறை அமைச்சரும்,  இரட்டை வேடம் போடும் நிதியமைச்சரும்: இந்தியாவிற்கு உபயோகமான, பிரயோஜனமான, துணிவுள்ள, திராணியுள்ள யாதாவது, ஒரு உள்துறை அமைச்சர் சோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறாரா என்று பார்த்தால், இல்லை. இந்த கேடுகெட்ட சுசில் குமார் சிண்டே காணாமல் போய்விட்டார். பாவம், உடம்பு சரியில்லையாம். நல்லவேளை, சிவராஜ் பாட்டில் மாதரி வேடம் போடவில்லை. உடனே, சிதம்பரம் வநது விட்டார். பிரச்சினை வரக்கூடாது என்பதால், எழுதிவைத்ததை படித்தார், “1990 மாதிரி நடக்காது. இந்துக்கள் விரட்டப்படமாட்டார்கள்”, என்றெல்லாம் படித்துக் காட்டினார்[9]. அப்படியென்றால், இந்துக்கள் விரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தகவல் வந்துள்ளதா? பிறகு எப்படி மெத்தனமாக இருக்கலாம்?

Hizbul Mujahidin surrender in Kishtwar

கிஷ்த்வார் தீவிரவாதிகளின் இடமாகக் கருதப் பட்டது: முன்பு ஹிஜ்புல் தீவிரவாதி இங்கு சரணடைந்துள்ளான். தில்லி குண்டுவெடிப்பின் போது (செப்டம்பர் 2011) அனுப்பப்பட்ட இ-மெயில் இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது[10]. ஆக்டோபர் 2012ல் தீவிரவாதிகளின் இடமும் கண்டுபிடிக்கப்படது[11]. சையது அலி ஜிலானி என்ற ஹுரியத் பிரிவினைவாதி ஆகஸ்ட் 14 மற்றும் 15 முழு ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறான். இவையெல்லாம் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்குவது தான் தெரிகிறது. 60% இருக்கும் முஸ்லிம் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றுதான், முந்தைய முறைகளை கையாளுகிறார்கள்.

Kishtwa riot - shops burnt

சையது அலி ஜிலானியின் மிரட்டல்கள்: சொல்லி வைத்தால் போல, சையது அலி ஜிலானி, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் பிரச்சினை வந்தவுடன், உடனடியாக அவற்றைக் கலைத்துவிட வேண்டும் என்று சொல்கிறான். ஏனென்றால், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஜம்முவில் போர் தொடுக்கிறார்களாம், அவர்களை அழித்து “சுத்தப்படுத்துகிறார்களாம்”, அவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறான். உமர் அப்துல்லா தன்னுடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கின்றார் மற்றும் தீவைத்தல், கற்பழிப்பு, கொலைசெய்தல் முதலியோர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார், என்றெல்லாம் பேசுகிறார். அதாவது, இந்துக்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்கிறான்[12]. வயதாகியும், மரியாதையாக இருக்க வேண்டிய நிலையில், இவ்வாறெல்லாம், வெறித்தனமாக பேசுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது. வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளும் உடனே இதே பாட்டை பாட ஆரம்பித்துள்ளார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rights.2

திக் விஜய சிங் ரோகம் பிடித்துள்ள கம்யூனிஸ்டுகள்: “உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், உயிர்பலியையும், பொருட்சேதத்தையும் தடுத்திருக்கலாம்”, ஏன்று சொல்லிவிட்டு, “பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தாம் தூண்டிவிட்டு, சிறுபான்மையினரின் வீடுகள்-கடைகளை தாக்குமாறு செய்கிறார்கள்”, என்று வேறு அறிக்கை விட்டிருக்கிறார்கள்[13]. வேடிக்கை என்னவென்றால், கிஷ்த்வாரில் இந்துக்கள்தாம் சிறுபான்மையினர். ஆகவே, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களூக்கே தெரியவில்லை போலும். பாகிஸ்தான் கொடிகளை எடுத்டுச் சென்றது அவர்களுக்குத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுபியதும் தெரியவில்லை. ஆனால், முரணாக இப்படி பேசுவதற்கு தெரிந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளும் திக்விஜய் மாதிரியே பேச ஆரம்பித்திருப்பது வேடிக்கையே.

kashmiri-pandit-cries-for-human-rights.3

செக்யூலரிஸத்தால் வஞ்சிக்கப் படும் இந்துக்கள்: இந்துக்கள் தாக்கபடுகின்றனர் எனும் போது, அதனை வகுப்புவாதப் பிரச்சினை என்று செக்யூலார் ரீதியில் விட்டுவிட முடியாது. கடந்த 60-70 ஆண்டுகள் நிகழ்சிகளே, அவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைவு, ஜிஹாதிகளின் உச்சக்கட்ட நடவடிக்கைகள், முஸ்லிம்களின் இந்துவொரோத செயல்கள் என்று தான் மெய்ப்பிக்கின்றன. பற்பல நேரங்களில்  ஆங்கில-இந்தி செனல்களில் பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகள் இந்த உண்மைகளை  வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட் பட்டு வாழ்வதாக இருந்தால், பண்டிட்டுகள், அதாவது இந்துக்கள் காஷ்மீரத்திற்கு திரும்ப வரலாம் என்று தைரியமாக பேசியுள்ளனர். செக்யூலரிஸவாதிகள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அதே பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து கொண்டுதாவர்களது “மனித உரிமைகளை”ப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rightsஇந்துக்களின் உரிமைகளைப் பற்ரி ஏன் பேசுவதில்லை?

Kishtwar shops burnt.5தெருக்களில் நடக்கும் கலவரம், கடைகள் தாக்கப்படுதல்.

Stone-pelting young warriorsசிறிய ஜிஹாதிகளா, சிறுவர் ஜிஹாதிகளா – கல்லடிக்கும் ஜிஹாதிகள்!

The way Indian police has to work with the jihadisபதிலுக்கு கல்லடிக்கும் போலீஸ்!

Wandhma massacre21998ல் ஜிஹாதிகளால் ஈவு-இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகள்

Wandhma massacre.31998ல் ஜிஹாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துக்கள்

Wandhma massacre4

© வேதபிரகாஷ்

13-08-2013


[3] “Their entire aim seems to be to recreate the conditions of 2008 (Amarnath land row agitation) so that they can exploit it in the subsequent parliament (polls) and then the assembly election. So, rather than appeal to political parties, which I know will fall on deaf ears, I am using the channels of the media to appeal to the people of Jammu and Kashmir not to fall prey to rumours,” Mr. Omar said.

[7] Some of the Opposition leaders also alleged that the unlicensed .12 bore guns used in the riots by some arsonists from one community were looted by unruly crowds from the shop of a Hindu inside the Shahan Complex, a commercial property registered in the name of Mr Kichloo’s son. Forty guns with 1500 rounds of ammunition were allegedly looted from the shop.

http://www.thehindu.com/news/national/jk-minister-quits-over-kishtwar-violence/article5015347.ece?ref=relatedNews

[8]  Kichloo’s personal security officer’s role in triggering violence would be one of the subjects of a judicial probe announced by the CM.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[9] “The central government will extend all support to the state government to maintain law and order and ensure peace and harmony in the state,” he said. He sought to dismiss apprehensions that the situation could go out of hand and lead to a repeat of 1990 when the entire Kashmir Pandit community was forced to leave the Valley. “We will not allow repetition of 1990. We will not allow forced migration. We will not allow forced resettlement,” he asserted.

http://www.thehindu.com/news/national/will-not-allow-repeat-of-1990-in-jk-chidambaram/article5015421.ece?ref=relatedNews

[12] Hurriyat hardliner Syed Ali Geelani called for a complete shutdown on August 15 and 16 demanding immediate dissolution of village defence committees (VDC). Geelani said RSS and VDC have virtually waged a war against Muslims in Jammu and planned “ethnic cleaning” in the area. “Omar Abdullah is pleading for his wrongdoings and providing a clean chit to culprits involved in arson, rape and killing,” Geelani said in a statement.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[13]  “In the meanwhile, the rioters had a free run. If the authorities had acted in time lives and property could have been saved and situation could have been brought under control. There are reports that activists of the BJP, RSS (and) VHP are fanning out and inciting people to attack houses and shops owned by the minority community,” a statement from the Communist Party of India-Marxist said.

http://www.firstpost.com/india/kishtwar-live-relief-for-thousands-of-pilgrims-as-amarnath-yatra-resumes-1024775.html