ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)?
இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்: “படேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்[1]; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பிடித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்[2]. நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி ‘பெரும்புலி’கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்!”, இப்படி இக்கட்டுரையில் இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களது திரிபு வரலாற்றை ஆதரிப்பதில் அச்சந்தேகம், இன்னும் வளர்கிறது.
இஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை: ஹசன் சுரூர் எழுத்துகள் இவ்விதமாகத்தான் இஸ்லாம் சார்புடையதாக, இடதுசாரி ஆதரவாக ஆனால் மோடி-எதிர்ர்ப்பாக பீரிட்டு எழுந்துள்ளது. இவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, வலதுசாரிகளை விமர்சனம் செய்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, எல்லாமே கருத்துரிமை, எழுத்துரிமை என்று ஆர்பாட்டமாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மோடி-எதிர்ப்பு விமர்சனம் மட்டும், அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இவருக்குத்தான் எல்லாமே தெரியும் என்ற தோரணையில் வசைப்பாடியிருப்பதுடன், தூஷணத்தை அள்ளி வீசியிருக்கிறார். இஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை என்ற ரீதியில் ஐ.எஸ். ஜிஹாதிகளை ஆதரித்துள்ளார்[3]. பெண்கள் குழந்தைகளை விடுத்து,, குடும்ப்பத்தை விடுத்து, “இஸ்லாமிக் ஸ்டேட்” என்ற ஐ.எஸ்.ஜிஹாதி கூட்டத்திற்காக சேவை செய்வதை கடமையாகக் கொண்டதைக் குறிப்பிட்டுப் புரிக்கிறார்[4]. ஆக, இப்படி, கூட்டுக் கலவையாகத் தான் சுரூர் இருக்கிறார்.
ஹசன் சுரூர் யார், அவரது சித்தாந்தம் என்ன?: இஸ்லாம் பற்றிய பெரிய கட்டுரையில், இஸ்லாம், ஜிஹாத்…….போன்றவை என்ன என்று நீளத்தில் எழுதினால், அது அப்படியே “தி ஹிந்துவில்” பதிப்பிடப்படுகிறது[5]. இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவரது விளக்கங்களும் புதியதல்ல. பிறகு, எதற்காக “தி ஹிந்து”, இவரது எழுத்துகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து பதிபிக்க வேண்டும்? குழந்தைகள் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்கள், அதிலும் இங்கிலாந்தில் பிறந்து, பாகிஸ்தானிய ஆண்களை மணந்து கொண்டதால், அந்த “சகோதரிகள்” ஏன், கணவன்களை விட்டு “ஜிஹாதி சகோதரர்கள்”களுடன் சேர்ந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும்? தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார், இடதுசாரி என்கிறார், முஸ்லிம் என்கிறார், ஜிஹாதிகளை, குறிப்பாக ஐ.எஸ்.சகோதரர்களை ஆதரிக்கிறார், ஆனால், மோடியை, பிஜேபியை, இந்துத்துவத்தை, இந்துக்களை வசைபாடுகிறார். இத்தகைய கலப்பு சித்தாந்தம் என்ன்னவோ? என். ராமுடனான நெருக்கம் பலவித கோணங்களில் வெளிப்படுகிறது. ஏப்ரல்.8, 2011ல் ஜூலியன் அஸாஞ்சை சந்திக்கும் போது, ஹசன் சுரூருடன் சென்றிருந்தார்[6]. அதில் தான், ஹசன் சுரூர், “தி ஹிந்து”வின் இங்கிலாந்தின் “கரஸ்பான்டென்ட்” என்று குறிப்பிடப்படுகிறார்.
ஹசன் சுரூரின் டுவிட்டுகள் சில: இன்று டுவிட்டரில் வருகின்றவை தான் செய்திகளாக வெளியிடப்படுகின்றன. டிவிசெனல்களில் விவாதிக்கபடுகின்றன. உடனே, அல்லது அடுத்த நாளில், அப்பதிவை எடுத்து விட்டால் கூட, அல்லது மறுத்தால் கூட விடாப்பிடியாக விவாதங்கள் தொடர்கின்றன. இனி, இவரது டுவிட்டுகளப் பார்ப்போம்:
- தில்லி, பிஹார் முதலியவற்றிற்கு பிறகு, மோடி, அவருடைய “இந்தியா” பற்றிய எண்ணத்தை மறுபடியும் பரிசீலினை செய்ய வேண்டும்.
- ஷர்ம் அல் ஷைக் விமான வீழ்ச்சி பற்றி சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளது. இனியும், அதில் பீதியளிக்கும் வகையில் எதுவுமே இல்லையா?
- பௌத்தர்கள் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த மக்களாக நம்பப்படுகின்றனர். ஆனால், அவர்கள் பர்மாவில் ஹோஹிங்ய முஸ்லிம்களை அழிக்கும் வகையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.
- பிஜேபி-விரோத வெறியைத் தூண்டிவிடுவதாக ஜைட்லி இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸைக் குற்றஞ்சாட்டுகிறார். தல்வீன் சிங் இடதுசாரியைச் சேர்ந்தவா? நாராயண மூர்த்தியும் அவ்வாறா? ஷோரியும் கம்யூனிஸ்டா? ரகுராம் ராஜனும் இடதுசாரியா?
- லண்டன் விஜயம் போது, மோடி ராணியுடன் மதிய உணவு உண்ணவேண்டியுள்ளது. அவரது பாதுகாப்பு வீரர்கள், பக்கிங்ஹாம் அரண்மனையின் சமையலறை பிரிட்ஜில் பசுமாமிசம் எதுவும் இல்லை என்பதனை சோதித்து விட்டனரா?
- சுதந்திரமான பேச்சா? என்ன அது? “தி ஹிந்து”வில், எனது கட்டுரையைப் பாருங்கள்.
இப்படி சமீபத்தில் வந்துள்ள சில டுவிட்டுகளிலிருந்தே, இவரது போக்கு நன்றாகவே வெளிப்படுகிறது.
© வேதபிரகாஷ்
14-11-2015
[1] தமிழ்.இந்து, ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்!, Published: November 10, 2013 15:38 ISTUpdated: November 11, 2013 16:44 IST.
[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5335293.ece
[3] He has subtly supported Islamic State (IS). He doesn’t see any harm in IS ruthlessly killing children just for the sake of saving such a great religion. Then, how can you expect a moron like Hasan Suroor to not become a sex predator.
http://indicivil.blogspot.in/2015/11/hasan-suroor-family-profile-and.html
[4] As I write this, Britain is rocked by the strange case of three housewives (sisters born and brought up in Britain and married to men of Pakistani origin) who have fled to Syria (along with their nine children aged between 3 and 15) to team up with IS militants…………………. the power of propaganda and persuasion that can make people believe in the righteousness of a ‘cause’ and that urges them to perform certain acts as part of their “Islamic duty”.
http://www.thehindu.com/opinion/op-ed/the-siren-call-of-pure-islam/article7347254.ece
[5] http://www.thehindu.com/opinion/lead/islam-and-its-interpretations/article6455101.ece
[6] On April 8, Julian Assange, the brilliant and articulate Editor-in-Chief of WikiLeaks, gave a one-hour interview at Ellingham Hall in the county of Norfolk to N. Ram, The Hindu’s Editor-in-Chief, who was accompanied by Hasan Suroor, the newspaper’s U.K. Correspondent.