Archive for the ‘கிரிக்கெட்’ Category

தாவூத் இப்ராஹிமின் நண்பர், 2ஜி மற்றும் கிரிக்கெட் ஊழலில் சிக்கியுள்ளவர், ஷிண்டேயாவால் தப்பிச் செல்ல விடப்பட்டாரா?

ஜனவரி 16, 2014
தாவூத் இப்ராஹிமின் நண்பர், 2ஜி மற்றும் கிரிக்கெட் ஊழலில் சிக்கியுள்ளவர், ஷிண்டேயாவால் தப்பிச் செல்ல விடப்பட்டாரா?தாவூத்இப்ராகிமைபிடிக்கஅமெரிக்கஉளவுஅமைப்புடன்இணைந்துநடவடிக்கைமேற்கொள்ளப்படும்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷிண்டே, கடந்த வாரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, “பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்[1]. இது குறித்து, ஆர்.கே.சிங்கிடம் கருத்து கேட்ட போது,  “டில்லி  போலீஸ்  வசம்  சிக்கிய,  தாவூத்  இப்ராகிம்  கூட்டாளியை  தப்ப வைத்ததே,  ஷிண்டே தான்.  கிரிக்கெட்  சூதாட்ட  புகாரில்  சிக்கிய  அந்த  நபரிடம்,  விசாரணை  நடத்த  விடாமல்,  டில்லி  போலீசை தடுத்த ஷிண்டே, இப்போது, தாவூத் இப்ராகிமை பிடிக்கப் போகிறாரா?’ என்றார். மேலும் அவர் கூறும் போது, “டில்லி  போலீஸ்  செயல்பாட்டில்,  அடிக்கடி  தலையிடும்  ஷிண்டேயின்  வீட்டிலிருந்து,  துண்டுச்சீட்டு,  மத்திய  உள்துறைக்கு  அனுப்பி  வைக்கப்படும்.  அதில்,  அதிகாரிகள்  பணியிட  மாற்றம்  போன்ற, பல கோரிக்கைகள் இடம்பெற்றிருக்கும்’ என்றார். மேலும் அமெரிக்க உதவியுடன் தாவூத் இப்ராஹிமைப் பிடிப்போம் என்று சொல்வதும் பொய், ஏனென்றால், அமெரிக்கா அத்தகைய     சம்மதத்தைக் கொடுக்கவில்லை, ஷிண்டே பொய் சொல்கிறார் என்றும் கூறியுள்ளார்[2]. இதை அறிந்த, பா.ஜ., தலைவர்கள், அமைச்சர் ஷிண்டேவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, 15-01-2014 அன்று வலியுறுத்தினர்[3].ஷிண்டேவிற்கு சவால் விடுத்த சோடா ஷகீல்: சென்ற புதன் கிழமை 09-01-2014 அன்று சோலாப்பூரில், ஷிண்டே  இவ்வாறு கூறியபோது, சோடா ஷகீல், “அவருக்கு எங்களது வாழ்த்துகள்! முன்னா பாயைப் பிடியுங்கள் பார்ப்போம் என்றுதான் சொல்கிறோம்”, என்று சவால் விடுத்ததாக செய்திகள் வந்தன. ஷகீலே ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது[4]. தாவூத்  இருக்கும் இடமும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், ஷிண்டே, அவன் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லிவருகிறார். இத்னால் தான் சோடா ஷகீல் கிண்டல் அடித்துள்ளான். மேலும் மஹாராஷ்ட்ர அமைச்சர்களுக்கும் தாவூத் கூட்டத்திற்கும் தொடர்பு இருந்து கொண்டுதான் வந்துள்ளது. சினிமா-அரசியல்-கிரிக்கேட்-சூதாட்டம் என்ற வலையில் அநேக பிரபலங்கள் சிக்க்யுள்ளன.

சாஹித்பல்வா, கருணாநிதி குடும்ப விவகாரம், 2ஜி தொடர்பு: ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய தொழில் அதிபரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே காவல்துறை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியதாக முன்னாள் உள்துறை செயலாளரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவருமான ஆர்.கே.சிங் குற்றம் சாட்டி இருந்தார். அவருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5]. பிரபல தொழிலதிபரிடம், ஐபிஎல் சூதாட்டம் குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தவிருந்த நிலையில் அதை ஷிண்டே நேரடியாக தலையிட்டு தடுத்ததார் என்பது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அவரது இந்த புகார் டெல்லி அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அந்த தொழில் அதிபர், 3ஜி ஊழலில் சிக்கியுள்ள  சாஹித் பல்வா என்றும் சொல்லப் படுகிறதுசீவருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள தொடர்பை சுப்ரமணிய சுவாமி தனது வழக்கில் எடுத்துக் காட்டியுள்ளார். இதைத் தவிர குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இங்கிங்கு “போஸ்டிங்” தரவேண்டும் என்று சிட்டுக்சளைக் கொடுத்து, சிபாரிசு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கும் ஷிண்டேவிற்கும் வேறுபாடு இருந்தது தெரிந்த விஷயமே என்றும், இது பற்றி தான் ஷிண்டே அமைச்சகம், பிரதமமந்திரி முதலியோரிடம் தெரிவித்துள்ளாதாகவும் கூறியுள்ளார்.

ஷிண்டே மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்: ஆர். கே. சிங், ஷிண்டேவின் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்கள்:

HERE IS YOUR 10-POINT CHEAT-SHEET FOR THIS BIG STORY[7]:

  1. The former Home Secretary claims Mr Shinde’s alleged malpractices included encouraging and facilitating corruption in the assigning of important police posts.
  2. Mr Singh says that contrary to what Mr Shinde said last week, the US has offered no help in tracking down terrorist Dawood Ibrahim and bring him back to India from Pakistan.
  3. “Even if an agency belonging to another country agrees to help us in a mission on a third country’s soil, this should not be made public. The FBI has made no such commitment, at least as long as I was there. Dawood is in Pakistan, under ISI’s protection and to say he will be arrested with the help of FBI is ridiculous,” he said on Tuesday. (Dawood Ibrahim in Pakistan, joint efforts with US to nab him: Sushil Kumar Shinde)
  4. Mr Singh, who retired as Home Secretary in June, has also accused the Home Minister of shielding a Mumbai-based businessman close to Dawood Ibrahim and preventing the Delhi Police from interrogating him in connection with match-fixing in the Indian Premier League.
  5. He claims that the same businessman is linked to the telecom or 2G scam, and that Mr Shinde tried to protect him in that scandal as well.
  6. Mr Singh joined the BJP last week and is allegedly interested in running for parliament from Bihar.
  7. “If Mr Shinde is found to have intervened in the match-fixing probe, he needs to be sacked immediately,” said the party’s Ravi Shankar Prasad.
  8. But the Congress and others have asked why Mr Singh chose to keep his silence when he was in office if he was aware that his boss was violating rules.
  9. Why did he not put it on record when he was in service? Why did he not meet the Cabinet Secretary and PM?” asked union minister Manish Tewari.
  10. Former top cop and anti-corruption activist Kiran Bedi made a similar point, “What did you do as the Home Secretary? Did you tell the PM of the unlawful instructions? If not then you’re at fault. If you get any unlawful orders complain to the higher officials. Don’t say things after retiring.”

 

சிறுபான்மைசமூதாயவாலிபர்களைகைதுசெய்யும்போதுகவணமாகஇருங்கள்முதல்மந்திரிகளுக்குஷிண்டேஎச்சரிக்கை[8]: 2014ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மை சமூதாயத்தினரை இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி  சுஷில்குமார் ஷிண்டே, சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்த வாலிபர்களை கைது செய்யும் போது மிகவும் கவணமாக இருங்கள் என்று மாநில முதல் -மந்திரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறுபான்மையினர் என்பவர்கள் குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை. குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் உடனடியாக விடுவித்து விடுங்கள் என்று நாங்கள் அனைத்து மாநில முதல் மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று ஷிண்டே கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களில் உள்ள ஒரு ஆலோசனை குழுவை நியமிக்க ஆராய்ந்து வருவதாக ஷிண்டே கூறியுள்ளார். இந்த குழு பயங்கரவாத தடுப்பு சட்ட வழிகாட்டுதல் படி அமைக்கப்படும் என்று ஷிண்டே கூறியுள்ளார்.

ஷிண்டேவிற்கு எதிராக பிரதமமந்திரிக்கு மோடியின் கடிதம்: மாநிலங்களுக்கு, இத்தகைய அறிவுரைக் கடிதத்தை அனுப்பியுள்ள ஷிண்டேவிற்கு எதிராக பிரதமமந்திரிக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், குற்றவாளிகளை மதரீதியில் காண்பது என்பது தவறு. கிரிமினல் சட்டம் என்பது அனைவருக்கும் பொது, அதில் பாரபடசம் காண்பது என்பது இயலாது, தவறும் ஆகும் என்று எடுத்துக் காட்டியுள்ளார். “மத்திய  உள்துறை  அமைச்சரும்,  காங்.,  மூத்த  தலைவருமான,  சுஷில் குமார் ஷிண்டே,  கடந்த வாரம்,  ஒரு  அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்.  அதில், நாடு  முழுவதும்  உள்ள  சிறை களில்,  சிறுபான்மை  சமூகத்தை  சேர்ந்த இளைஞர்கள்,  எந்தவித விசாரணையும்  இல்லாமல்,  பல ஆண்டுகளாக  வாடுவதாகவும்,  அவர்கள்  பிரச்னைக்கு  தீர்வு காண,  ஒரு குழுவை  அமைக்க வேண்டும்  என்றும், மாநில  அரசுகளை  வலியுறுத்தியுள்ளார்.  அவர்,  சிறுபான்மை  சமூகத்துக்கு மட்டும்,  உள்துறை அமைச்சரல்ல;  நாட்டில் உள்ள அனைத்து  பிரிவினருக்கும்,  உள்துறை அமைச்சர்.  எனவே, சிறுபான்மையினர்  நலனை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் நலனிலும்,  அவரை கவனம் செலுத்தும்படி  அறிவுறுத்துங்கள். தேர்தலில்,  சிறுபான்மை  சமூகத்தின்  ஓட்டுகளை  பெறுவதற்காக,  இப்படி அரசியல்  நாடகம் நடத்துகிறார்.  அவரின் கருத்துக்களும், ஆலோசனைகளும், இதற்கு முன், எந்த ஒரு அமைச்சராலும் கூறப்படாதவை. அவரின் கருத்துக்கள் விசித்திரமாக உள்ளன. இது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.குற்றத்தை யார் செய்தாலும், குற்றம் குற்றமே. இதில், மதம், எங்கு வந்தது? மதத்தை அடிப்படையாக வைத்தா, ஒருவரை குற்றவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வது? நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக, சுஷில் குமார் ஷிண்டே, கருத்து தெரிவித்துள்ளார்”, இவ்வாறு, அதில், நரேந்திர மோடி எழுதியுள்ளார்[9].

உளறுவாயரா அல்லது அவ்வாறு நடிக்கிறாரா?: ஷிண்டே உஷாராண உள்துறை அமைச்சராக இல்லாமல், தூங்குமூஞ்சி – உளறுவாய் அமைச்சராகத்தான் இருந்துள்ளார்:

  1. கான்பூரில் குண்டு வெடிப்பு நடந்தபோது, கங்கணாவுடன் சேர்ந்து கொண்டு சிடி வெளியீட்டு விழாவில் இருந்தார்.
  2. ஜெயாபச்சன், அசாம் வன்முறை, கலவரம் பற்றி கேள்வி எழுப்பியபோது, அதெல்லாம் சினிமா விசயமல்ல என்று எஅக்கல் அடித்தார்.
  3. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து தீவிரவாத இயக்கங்கள் என்று சொல்லி, வாபஸ் வாங்கினார்.
  4. சரத் பவார் பிரதமராக வந்தால் மகிழ்ச்சி என்றார், பிறகு நான் அவ்வாறு சொல்லவில்லை என்று ஜகா வாங்கினார்.

எது எப்படியாகிலும் காங்கிரஸில் ஏகப்பட்ட “ஜோக்கர்கள்” (திக் விஜய் சிங், ஷகீல் அஹமது, பேனி பிரசாத் வர்மா) போல விஷமிகள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன வேண்டுமானாலும்  பேசுவார்கள், ஆனால், தமது பதவிக்குக் கூட மரியாதை கொடுக்க மாட்டார்கள் என்ற தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 16-01-2014


[4] Chhota Shakeel, the chief lieutenant of Dawood, told dna: “Let him (Shinde) try his best. I will only tell him Lage Raho Munnabhai.” Shakeel himself is believed to be based in Pakistan, but away from his boss, who is suspected to be hiding in the Swat Valley which is under the Taliban’s control. The Inter-Services Intelligence (ISI) is believed to be taking extra precautions to keep Dawood’s location a top secret.

http://www.dnaindia.com/mumbai/report-sushilkumar-shinde-knows-where-dawood-ibrahim-is-lage-raho-munnabhai-scoffs-chhota-shakeel-1947632

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி!

மார்ச் 18, 2012

யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி!

 

தில்லியில் இந்தியா-டுடே 2012 நிகழ்ச்சி: சனிக்கிழமை (17-02-2012) இந்தியா-டுடே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டதால் பல அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவில்லை அல்லது எதிர்ப்பு தெரிவிக்க அம்மாதிரி செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அந்த பட்டியிலில் – பிரணாப் குமார் முகர்ஜி, அகிலேஷ் யாதவ், ஒமர் அப்துல்லா முதலியோர் அடங்குவோர்[1]. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் ருஷ்டியை விட்டு விலகியே இருப்பது முஸ்லீம் ஓட்டு வங்கி குறையக் கூடாது என்ற எண்ணம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ருஷ்டியின் வரவு பற்றி ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.

 

எனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்: ருஷ்டி[2]: அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்னை ராஜஸ்தான் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் காங்கிரஸ் கட்சி சதி செய்துள்ளது என பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறினார். டில்லி வந்திருந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி, டில்லியில் நடக்கவுள்ள எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கூறினார். கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ருஷ்டி கலந்து கொள்ள முஸ்லிம் மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என ராஜ்தான் அரசு கூறியதால், அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. தற்போது டில்லியின் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அவர் பேட்டியளிக்கையில், இந்திய மண்ணில் கால் வைக்க இத்தனை எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. எனது வருகையினை எதிர்ப்பதில் அரசியல் காரணங்கள் உள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்த நிலையில் முஸ்லிம்களில் ஒட்டுவங்கிக்காக, எனது வருகையினை தடை செய்துவிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்குள்ளது என்றார். முன்னதாக டில்லியில் நடந்த கருத்தரங்கில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர்அப்துல்லா உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சல்மான் ருஷ்டி இம்ரான் கானை சாடினார்: அதில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி, பாகிஸ்தானின் முந்தைய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்பொழுதைய அரசியல்வாதியான இம்ரான் கானை சாடினார்.  இம்ரான் கான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ள மறுத்ததுடன், சல்மான் கானின் எழுத்துகளால் முஸ்லீம்கள் அளவிட முடியாத பாதிப்படைந்துள்ளார்கள் என்று தனது பேட்டியில் கூறினர். அதற்கு சல்மான் ருஷ்டி, இம்ரான் எனது பௌன்ஸர்களுக்கு பயந்துததன் ஒதுங்கிக் கொண்டார்போலும்[3]; இஸ்லாம் பெயரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளால் தான் பாகிஸ்தான் மக்கள் அளவிட முடியாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளார்கள். ஒசாமா பின் லாடனை 80% பாகிஸ்தனிய மக்கள் ஹீரோ என்று மதிக்கின்றனர். ஆனால், முல்லாக்களால் நடத்தப் பட்டு வரும் அரசியலில் மக்கள் பொருளாதார ரீதியில் முனேற்றாம் அடையவில்லை, படிப்பறிவையும் பெறவில்லை என்று அடுக்கிக் கொண்டு போனார். இம்ரான் கான், முகமது கடாபியைப் போலவே தோற்றமளிக்கிறார் என்று கிண்டலடித்தார்[4]. முகமது கடாபி படம் ஏதாவது எடுப்பதாக இருந்தால், அந்த வேடத்திற்கு சரியான ஆள் இம்ரான் தான், ஏனெனில் அவர் அப்படியே காட்சியளிக்கிறார்[5].

ராஹுலையும் மற்ற இளைய அரசியல்வாதிகளையும் கிண்டலடித்தார்: காங்கிரஸ் தரப்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லையென்றாலும், தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, தன்னை தடை செய்ததால், ராஹுல் எந்த பலனையும் பெறவில்லை என்று கிண்டலடித்து பேசினார்[6]. வழக்கம் போல திக்விஜய் சிங் இதற்கு எதிர்பாட்டு பாடியுள்ளார்[7].

இந்திய அரசியல்வாதிகளை விமர்சித்ததற்கு பி.ஜே.பி எதிர்ப்பு: இந்திய அரசியலில் திறமையான தலைவர்கள் இல்லை என்றும், அரசியல் சிரிப்புற்குள்ளாகி வரும் நிலையில் உள்ளது என்றும் குற்றாஞ்சாட்டினார். இந்த கருத்தை பி.ஜே.பி எதிர்த்துள்ளது[8]. இருக்கும் நிலைமைக்கு காங்கிரஸ்ததன் காரணம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்[9]. அவரிடமிருந்து யாரும் சான்றிதழைப் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று வாதிட்டார்.

கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு, அடக்குமுறை: கருத்து சுதந்திரம் காக்கப்படவேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்தைய நாடுகளிலும் அத்தலைய “சென்சார்” செய்யும் வழக்கம் உள்ளது[10]. மற்ற மக்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்று எப்பொழுதும், கட்டுப்பாடு கொண்டு வந்தால், கருத்து சுதந்திரம் இருக்காது. அதனால் அது பாதுகாக்கப் படவேண்டும் என்று பேசினார்.


[2] தினமலர், எனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்: ருஷ்டி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=429100

[5] “Have you noticed the physical resemblance between Imran Khan and Gaddafi?” the author went on, with a grin. “If you were making a movie of the life of Gaddafi and you wanted a slightly better-looking version of Gaddafi you might cast Imran Khan.”

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

ஏப்ரல் 1, 2011

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

 

காஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான்! பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது? அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா?

 

இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.

 

சுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம்! உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

 

வேதபிரகாஷ்,

01-04-2011

 

மோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்!

ஏப்ரல் 16, 2010

மோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்!

இப்படி காங்கிரஸ் கமன்ட் அடித்து, செய்தியாக்கியது.

மக்கள் சரியாக கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

உண்மையில் எல்லா அரசியல்வாதிக்கும் கிரிக்கெட்டில் பங்கு உள்ளது, எப்படி சினிமா, மற்ற தொழில்லளில் பங்கீடு உள்ளதோ, அதுபோல!

மோடியைக் கண்டால் இன்று எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவது தெரிகிறது!

மோடியைப் பற்றி பேசினால், விமர்சனம் செய்தால் இப்பொழுதெல்லாம் ஜாக்கிரதையாகவே செய்கிறார்கள். ஏனெனில், பதிலுக்கு அவர் ஏதாவது சொல்லிவிட்டால், மற்றவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுகிறது.

இப்படிதான், சோனியா ஏதோ சொல்ல, இனிமேல் நான் இத்தாலியிலேயே கடிதம் எழுதிகிறேன் என்றாராம்!

பிரச்னையின் பின்னணியில் நரேந்திர மோடி?

First Published : 16 Apr 2010 12:00:00 AM IST

Last Updated :

புது தில்லி, ஏப்.15: கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் நாளுக்கு நாள் வெவ்வேறு திசையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பிரச்னையின் மையம் மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூரை விட்டு அகலவில்லை. இருந்தாலும் தற்போது இந்த விவகாரத்துக்கு முழு முதற் காரணம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களின் பங்கு விவரம் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலை வெளியிட வேண்டாம் என சசி தரூர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக ஐபிஎல் ஆணையர் லலித் மோடி குறிப்பிட்டார். ஆனால் போட்டிகள் மற்றும் ஏல முறைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக பட்டியலை வெளியிட்டதாகக் கூறினார்.

கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களில் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கருக்கு உள்ள 25 சதவீத பங்குகளில் 19 சதவீதம் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 70 கோடியாகும்.

கொச்சி அணி உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் சத்யஜித் கெய்க்வாட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎல் ஆணையர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருக்குதலில் செயல்படுவது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. எங்களை எந்த பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதானி குழுமத்திற்கும் நரேந்திர மோடிக்கும் குஜராத் ஐபிஎல் அணியில் பங்கு உள்ளது. கொச்சி ஐபிஎல் அணி ஏலத்தில் வெற்றி பெற்றவுடன் இந்நிறுவன உரிமையாளர் பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவாரிடம் பேசி எந்த நகரை தேர்வு செய்யலாம் என்று கேட்டார். உடனே அவர் நீங்கள் எந்த நகரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், அது உங்கள் விருப்பம் என்றார். இதையடுத்தே கொச்சியைத் தேர்வு செய்தோம்.

ஐபிஎல் தொடக்க ஏலத்தின் போது ராஜஸ்தான் முதல்வராக இருந்தார் வசுந்தரா ராஜே. அப்போது வசுந்தரா ராஜேவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும்ஆமதாபாத் அணியைக் கொண்டுவருமாறு லலித் மோடியை நிர்பந்தித்தனர். இதில் முழுக்க முழுக்க அரசியல் உள்ளது.

கொச்சி அணி உரிமையாளர்கள் பட்டியலையும் அவர்களுக்குள்ள பங்கு விவரத்தையும் வெளியிட்ட லலித் மோடி, பிற அணிகளின் உரிமையாளர்கள் விவரத்தை வெளியிடாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். கொச்சி அணியைப் பொறுத்தவரை வெளிப்படையாக உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கெய்க்வாட் கூறினார்.

குஜராத் அரசு மறுப்பு: கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டை குஜராத் மாநில அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மேம்பாட்டாளர்கள் சிலர் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். ஆனால் அது ஏல தொகையை தீர்மானிப்பது தொடர்பான கூட்டம் அல்ல. எந்த நிறுவனம் குஜராத் பெயரில் ஏலம் எடுத்து விளையாடினாலும் அதை மாநில அரசு வரவேற்கும் என்று மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கிடப்பில் சசி தரூர் விவகாரம் : கருத்து தெரிவிக்காமல் காங்., மவுனம்
ஏப்ரல் 16,2010,00:00  IST
Front page news and headlines today
ஐ.பி.எல். கொச்சி விவகாரம்: ‘ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஏலம் தொடர்பான புகாரில், மத்திய அமைச்சர் சசி தரூருக்கு எதிராக ஆதாரம் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், அது பற்றி வேறு எதுவும் கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பில், அடுத்த ஆண்டு முதல் கொச்சி அணியும் இடம் பெறுகிறது. இந்த கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை, மத்திய அமைச்சர் சசி தரூரின் தோழியான சுனந்தா புஷ்கர் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அமைச்சர் சசி தரூர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என புகார் கூறப்பட்டது. சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘நான் டில்லி திரும்பியதும், சசி தரூர் மீதான புகார்கள் குறித்த உண்மை நிலவரங்களை விசாரிப்பேன். அவற்றில் உண்மை இருந்தால், சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


உண்மையை மறைத்து நடிக்கும் காங்கிரச்காரர்கள்: இந்நிலையில், நேற்று பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”சசி தரூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதனால், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சசி தரூரும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் அளித்துள்ளார்; நாங்கள் எதையும் கூற முடியாது,” என்றார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியை நேற்று சசி தரூர் சந்தித்துப் பேசினார். முப்பது நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சசி தரூர், ”கிரிக்கெட் அணி விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் கேட்டுக் கொண்டால், பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கும்படி யாரும் எனக்கு உத்தரவிடவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் நான் தெளிவாக உள்ளேன்,” என்றார். நேற்று முன்தினம் இரவும் அந்தோணி மற்றும் பிரணாப் முகர்ஜியை சசி தரூர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி மீது புகார்: ‘ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்பந்தத்தின் பேரில், கொச்சி அணி மீது அடுக்கடுக்காக புகார்களை கூறி வருகிறார்’ என, கொச்சி அணியின் தகவல் தொடர் பாளர் சத்தியஜித் கெய்க்வாட் கூறியுள் ளார். அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அணியின் பங்குதாரர்கள் பெயர்களை வெளியிட்டதைப் போல, மற்ற அணியின் பங்குதாரர்கள் பெயர்களையும் லலித் மோடி வெளியிட வேண்டும். கம்பெனி சட்டப்படி, இதர ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்கள் விவரங்களையும் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் தெளிவாக உள்ளோம். எதையும் மறைக்கவில்லை. எங்கள் அணியைப் பற்றி லலித் மோடி தொடர்ந்து புகார் தெரிவித்தால், அவரைப் பற்றிய பல விவரங்களை நாங்கள் வெளியிட நேரிடும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில், கொச்சி அணியின் உரிமையாளர்களை லலித் மோடி துன்புறுத்துகிறார். கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆதாரம் பற்றி விசாரணை நடத்தினால், மற்ற அணிகளின் நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆமதாபாத் ஐ.பி.எல்., அணிக்கு ஆதரவாக வெளியேற வேண்டும் என, குஜராத் முதல்வர் மோடியும், லலித் மோடியும் அடானி குரூப்புடன் இணைந்து எங்களை நிர்பந்தம் செய்தனர். போட்டியிலிருந்து விலக எங்களுக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு கெய்க்வாட் கூறினார்.

சோனியாவுடன் ஆலோசனை: ஐ.பி.எல்., கொச்சி அணி ஊழல் புகாரில் சிக்கிய, மத்திய இணையமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நடந்த சம்பவங்களை விவரித்தார். அதனால், அவரின் பதவி இப்போதைக்கு பறிக்கப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்க மறுத்து விட்டாலும், தன் தரப்பு நியாயங்களை சசி தரூர் எடுத்துக் கூறியிருக்கலாம் என, நம்பப்படுகிறது. சசி தரூர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி இடையே உடன்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து தரூருக்கு எதிராக செயல்படுவதாகவும் சில தரப்பில் கூறப்படுவதால், இப்போதைக்கு தரூரின் பதவிக்கு ஆபத்தில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் கூறின.