Archive for the ‘கேரளா’ Category

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

நவம்பர் 6, 2015

மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி  சகிப்புத்தன்மையும்குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)!

Marxist beef eating propaganda

Marxist beef eating propaganda

கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம்: பிளவுபட்டு வேலைசெய்ய ஆரம்பித்த காம்ரேடுகள் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள, வரும் வரும்படியைப் பிரித்துக் கொள்ள, சங்கங்களை, சங்க உறுப்பினர்களை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள பலவித சித்தாந்தங்களை உருவாக்க ஆரமித்தனர். இவையெல்லாம், பொதுவாக ஒரு அல்லது பலவித எதிரியை / எதிரிகளை உருவாக்கி, அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது, நடக்க முடியாததை நடத்திக் காட்டுவேன் என்பது[1], போன்ற வாய்ஜாலங்களில் ஈடுபட்டே காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்தனர். நடக்காதவற்றிற்கும், தோல்விகளுக்கும், அந்த கற்பனை எதிரிகள் தாம் என்று குற்றஞ்சாட்டி வந்தனர். லெனின் கூறிய “சுயநிர்ணய உரிமை” என்றதை[2] குழப்பி, இந்திய மாநிலங்களில் பிரிவினைவாதத்தை வளர்த்து வருவது, அதே நேரத்தில் இந்திய தேசியத்தைப் பேசிவருவது முதலிவை அவர்களை வெளிக்காட்டியது. இதனால் கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம் போன்ற வாதங்களும் வழக்கில் தாராளமாக வந்தன.  இப்பொழுதும், அவர்கள் தங்களுக்குள் நடக்கும் சித்தாந்த மோதல்களுக்கு இத்தகைய பிரயோகத்தை செய்து வருகிறார்கள்[3].

COMMUNIST BEEF

COMMUNIST BEEF

பிரிவினைவாதங்களினால் வளர்ந்து, நீர்த்துப் போன கம்யுனிஸ்ட் குழுமங்கள்: சிப்தாஸ் கோஷ் போன்றோர், சிபிஐ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. ஜோஷி, ரணதேவ், ராஜேஸ்வர ராவ், அஜய் கோஷ் இவர்களிடையே இருந்த முரண்பாடுகளும் விவாதிக்கப்பட்டன. மார்க்ஸ் மற்றும் மாவோ சித்தாந்த மோதல்கள் பலவிதங்களில் வெளிப்பட்டன. மார்க்சிஸம்-லெனினிஸம் தான் சரியான தீர்வு என்றும் பேசப்பட்டது. 1969 [CPM (ML)] கல்கத்தாவில் உருவானது. கனு சன்யால் [ Kanu Sanyal] ஏப்ரல்.22, 1969 அன்று, அதாவது, லெனினின் பிறந்த நாள் அன்று, அக்கட்சியின் ஆரம்பத்தை அறிவித்தார். ஆனால், 1948ல் தொடங்கப்பட்ட எஸ்.யு.சி.ஐ தான்தான் இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று பறைச்சாட்டிக் கொண்டு வருகிறது[5]. அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கும் போது 1950 முதல் அவர்களது ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, 1970 – 80 ஆண்டுகளில் 10 சதவீத ஓட்டுகளை வைத்திருந்தது. அது 2004ல் 8 சதவீதமாக குறைந்தது. தற்போது 5 சதவீதம் மட்டுமே பெறும் என தெரிகிறது.
பத்தாண்டுகளுக்கு முன், லோக்சபாவில் மூன்றில் ஒரு பங்காக 59 சீட்களை பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில். இந்தியா முழுவதும் 14-20 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 2014 பொதுத்தேர்தலில், 282 இடங்களை பிடித்து, பா.ஜ., ஆட்சி அமைத்த போது, கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது[6] எனலாம். இருப்பினும்ப் மூன்றாவது அணி என்றெல்லாம் கலாட்ட செய்து வருவார்கள். ஆனால், இப்பொழுது பிஹார் தேர்தலில் அவர்களை காணவில்லை, மாறாக, பசு-மாமிச விருந்து கலாட்டாகளை மற்ற மாநிலங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

FEMEN-ized communist propaganda posters-cow and milk

FEMEN-ized communist propaganda posters-cow and milk

தேசியமா, கூட்டாட்சியா, சுய-நிர்ணயமா – எடுபடாத சித்தாந்தங்கள்: யு.எஸ்.எஸ்.ஆர் பிளந்த பிறகு, அவர்களது சித்தாந்தம் உலக அளவில் நீர்த்துப் போய் விட்டது. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவிலும் அவர்களது ஆட்சி வீழ்ந்து விட்டன. இந்திய தேசீயம் என்று வந்தபோது, அவர்களது “பிரிந்து போகும் உரிமை” போன்ற வாதங்கள் எடுபடாமல் போய்விட்டன. திராவிடத் தலைவர்கள் பிரிவினையிலிருந்து, “மாநில சுயயாட்சி”க்கு வந்து, பிறகு, ஆரிய கட்சிகளுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, தேசிய நீரோட்டத்துடன் கலந்து விட்ட பிறகு, தமிழகத்திலேயே இவர்களது சித்தாந்தம் தேய்ந்து விட்டது. ராமமூர்த்தி எழுதிய ’’ஆரிய மாயையாதிராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’, திராவிடத்தால் வீழ்ந்தோம், முதலிய புத்தகங்கள், திராவிட சித்தாந்திகளை விட, காம்ரேடுகளைத்தான் அதிகம் பாதித்தன. இதனால், காஷ்மீர் மற்றும் தமீழீழம் பிரச்சினைகளை உசுப்பிக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிரபாகரன் கொலையுண்டு, திராவிடத் தலைவர்களின் நிலைப்பாடு வெளியானவுடன், “இந்துத்துவா”வை எதிர்த்து பிழைத்து வருகின்றன[7].

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

FEMEN-ized communist propaganda posters-cow-woman and milk yield

கம்யூனிஸ சித்தாந்தம் எப்படி இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் வேறுபடுகின்றன?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் [Communist Party of India[8]] பரிவாரத்தில் [AITUC, AIKS, AIYF, AISF, NFIW, BKMU] என்று பல அவதாரங்கள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)டின் Communist Party of India (Marxist) அங்கங்கள் [CITU, AIKS, DYFI, SFI, AIDWA, GMP] என்று பலவாறு செயல்பட்டு வருகின்றன. எஸ்.யு.சி.ஐ [Socialist Unity Centre of India (Communist), மற்றும் அதன் பாகங்களான [AIUTUC, AIMSS, AIDYO, AIDSO] முதலியவையும் சித்தாந்த ரீதியில் போராடி வருகின்றன. இதுதவிர, கத்தார் கட்சி (Communist Ghadar Party of India), நக்ஸல்பாரி எழுச்சி (Naxalbari uprising), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) [Communist Party of India (M-L)[9]], Liberation, புதிய ஜனநாயகக் கட்சி [New Democracy], ஜனசக்தி [Janashakti], மற்றும் PCC, 2nd CC, Red Flag, Class Struggle, Communist Party of India (Maoist), போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், இவை மொழி, இனம், சாதி போன்ற பிர்ச்சினைகளை உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்ற சித்தாந்திகளை ஆட்டிப் படைத்து வருகின்றன. தமிழ், தமிழினம், தமிழ்வெறி, தமிழகம், தமிழ்நாடு-தனி நாடு, தமிழ் ஆட்சிமொழி, தமிழீழம், ஆரிய-திராவிட இனவாதங்கள், பார்ப்பன, சமஸ்கிருத, இந்து-விரோத, நாத்திக வாதங்கள் என்று பலவற்றை வைத்துக் கொண்டு குழப்பி காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

DYFI beef eating Kerala

DYFI beef eating Kerala

என். ராம் மற்றும் தி இந்து மேல் திரும்பியது ஏன்?: தமிழகத்தில் இவர்கள், இதனால், இந்தியப் புரட்சி, தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சி, குடிநாயகம்-ஜனநாயகம், இந்தியதேசம்-தமிழ்தேசம், பார்ப்பனீயம், பார்ப்பன பயங்கரவாதம், கள்ளச்சாராயம்-நல்ல சாராயம், தனியார் கல்வி- அரசு கல்வி, இந்தி-தமிழ், தேர்தல் பாதை-திருடர் பாதை, புரட்சி பாதை – மக்கள் பாதை, கருவி போராட்டம், தமிழ் பாதுகாப்பு போராட்டம், தமிழ் ஆட்சி மொழி, வர்க்கம்-வர்க்க போராட்டம், என்றெல்லாம் பேசிக்கொண்டு தமக்குள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் இடதுசாரி சித்தாந்தங்கள் பொய்த்த பிறகு, மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கேற்றபடி திரிபுவாதக்கள் செய்து கொண்டிருப்பதால், எங்கும் எடுபடாமல், குழப்பவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலாளிகளை, வியாபாரிகளை, தொழிலதிபர்களை, நிலதிபர்களை, பண்ணையார்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டு பிழைத்து வரும் இவர்கள், எதையெதையோ பேச ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு மேலேயே சேற்றை இறைத்து வாரி, தங்களது பலவீனங்களை, சித்தாந்த வரட்சியை, போலிப் புரட்சித் தனத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

CPI-ML- activists consuming beef outside the Tahsildar office in Sindhanur on Thursday -05-11-2015- Photo-SANTOSH SAGAR.

பீப்-ஈடிங் – பசு-மாமிசக்கறி தின்னும் ஆர்பாட்டம், போராட்டம் முதலியன: கம்யூனிஸ்ட் எந்த கறி சாப்பிடவேண்டும் என்று மார்க்ஸ், லெனின், மாவோ முதலியோர் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே, அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில், அவர்கள் இதைத்தான் சாப்பிடுவோம் என்று ஆர்பாட்டம் செய்யலாம் போராட்டம் நடத்தலாம், பீப்-உண்ணும் விழா நடத்தலாம். ஆனால், அதில் சமத்துவம், சமதர்மம், செக்யூலரிஸம் முதலியவைப் பின்பற்றப்படுகிறதா என்று காம்ரேடுகள் கவனிக்கவேண்டும். இப்பொழுது எல்லா மாநிலங்களிலும் அத்தகைய விருந்துகளை – பீப்-ஈடிங்-பசு மாமிசக்கறி தின்னும் – நடத்தி வருகிறார்கள்[10]. அதாவது, பிஜேபியை எதிக்கிறேன் என்று, இந்துக்களைத் தான் அவமதித்து வருகின்றனர்[11]. அதனால்தான், இந்துமதத்தலைவர், இது போல, நீங்கள் பன்றி மாமிசம் தின்னும் விழா நடத்துவீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆக, பிரச்சினையைத் தூண்டி விட்டு, கலவரமாக்கும் போக்கு, இவர்களிடம் தான் காணப்படுகிறது.

ommunism-political-ideologies-

Communism-political-ideologies-

© வேதபிரகாஷ்

06-11-2015

[1] ஏழ்மையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், சுரண்டலை ஒழிப்போம், விபச்சாரத்தை ஒழிப்போம் போன்றவை; அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை (வேலை கிடைக்கிறாதோ இல்லையோ)……

[2] Lenin, The Right of Nations to Self-Determination, Progress Publishers, Moscow, 1974.

[3] போலி கம்யூனிஸ்டுகள்: பாசிச ஜெயாவின் அடிமைகள்! – இவ்வளவு கேவலமான நிலைக்குப் போய் போலி கம்யூனிஸ்டுகள் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கான காரணம், இக்கட்சிகள் தமது வர்க்க அடித்தளத்தை இழந்து பிழைப்புவாதப் புதைசேற்றில் விழுந்து கிடப்பதுதான். புரட்சிகர அரசியலையும் சித்தாந்தத்தையும் கைவிட்டு நாடாளுமன்ற – சட்டமன்ற சாக்கடையில் விழுந்து புரள்வதற்குத் தீர்மானித்த காலத்திலிருந்தே இந்தப் பிழைப்புவாத நோய் அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது. பின்னர் படிப்படியாக அது முற்றத் தொடங்கி, வரலாற்றைப் படைக்கும் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வர்க்கப் போராட்டத்தையே கைகழுவிட்டு ஓட்டுக்கும் சீட்டுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காலை நக்கி ஆதாயமடைவதே அவர்களது இலட்சியமாகிப் போனது. http://www.vinavu.com/2014/04/08/cpi-cpm-slaves-of-jayalalithaa/

[4]  Shibdas Ghosh, Selected Works, Vol.II, Central committee – Socialist Unity Centre of India, Calcutta, 1992, p.220-221.

[5]  சிப்தாஸ் கோஷ், எஸ்.யு.சி..யே இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை, 1987.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=961946

[7]  இது உதாரணத்திற்காகக் கொடுக்கப்படுகிறது – இது தவிர பலவுள்ளன –  http://theekkathir.in/2015/11/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

[8] http://www.communistparty.in/

[9] http://www.cpiml.org/

[10] http://www.thehindu.com/news/national/karnataka/backing-cms-stance-left-activists-eat-beef-in-public/article7848635.ece

[11] http://www.thehindu.com/news/national/karnataka/left-activists-eat-beef-in-public-to-support-cm/article7846296.ece

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

ஒக்ரோபர் 28, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே  சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரை போடும் போலி வேடங்கள்: புளூ கிராஸ் சொசைடி போன்ற நிறுவனங்களும் இவ்விவகாரங்களில் இரட்டைவேடம் போட்டு வருகின்றன. ஏதோ மிருகங்கள் கஷ்டப்படுவதைப் பற்றி, இவர்கள் கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள், மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோலத்தான் மற்ற ஜீவகாருண்ய சங்கங்கள், அஹிம்சை போதிக்கும் இயக்கங்கள் முதலியன இத்தகைய ஜீகாருண்யம் மற்றும் இம்சைகளை ஆதரிப்பது போல மௌனம் சாதித்து வருகின்றன. “மாமிசம் இல்லாமல் ஒரு நாள்”, என்று போலித்தனமாக, சாது வாஸ்வானி என்ற இயக்கம் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, வருடத்தில் ஒரு நாள், மிருகங்களைக் கொல்லாமல், மற்ற 364 நாட்களிலும் கொன்று சந்தோஷமாக இருக்கலாம் போலிருக்கிறது. பௌத்தர்கள் அஹிம்சை போதித்தாலும், மாமிசம் உண்டுகொண்டுதான் வாழ்கிறார்கள்.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

பக்ரீத் மிருகவதை கண்டுக்கொள்ளப்படாது: நன்றாக எல்லாவித மாமிசங்களையும் உண்டு வாழும் முகமதியர்களும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுவதும், வல்லாளார் பெயரில் கூட்டங்களில் கலந்து கொள்வதும் வினோதமாகத்தான் இருந்து வருகின்றன. இவ்வாறுதான் அஹிம்சை மற்றும் மிருகவதை எதிர்ப்பு போன்றவை உள்ளன. இந்த புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரையுள்ள கோஷ்டிகள் மற்ற மிருகவதைகள் நடக்கும் போது கண்டுகொள்ளமாட்டார்கள். பக்ரீத் போது, ஒட்டகம், பசு, ஆடு-மாடு என்று வெளிப்படையாகவே அறுத்து பலியிட்டு, தோலை உரித்து, ரத்தம் ஓடவைத்து பலி கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவ்வப்போது, சில இரக்கமுள்ளவர்கள், நடிகைகள் முதலியோர், ஏதோ பறவைகள் எல்லாம் துன்பப்படுகின்றன, என்று அவற்றை கூண்டுகளிலிருந்து வெளியே சுதந்திரமாக பறக்கவிட்டோம் என்றும் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இதைப்பற்றி தெரியாதது மாதிரி இருப்பார்கள்.

Beef sale in J and K state - Court ti decide DM

Beef sale in J and K state – Court ti decide DM

பீப் ஈட்டிங் – பசுமாமிசம் உண்ணுதல் பிரச்சினை: சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம் பலவிதங்களில் வெளிப்பட்டு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஊடங்களின் உசுப்பிவிடும் வேலைகள் தான் இதில் அதிகமாக இருக்கின்றன. இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். இதுவரை, இந்த சேனா எங்கிருந்தது என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  பிறகு, கொல்லப்பட்டவரின் மகன் “லவ்-ஜிஹாதில்” ஈடுபட்டான், அதாவது, ஒரு இந்து பெண்ணை காதல் புரிந்ததால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ. ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது[1]. சாப்பிடுகிறேன் என்றால் சாப்பிட்டு விட்டு போகலாம், பிரச்சினையே இல்லை, ஆனால், அதனை, விளம்பரப்படுத்தி, ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதெல்லாம், தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டன. ஊடகங்கள் இவைத்தான் முக்கியமான செய்திகள் போன்று “மாட்டிறைச்சி அரசியல்” என்று தலைப்பிட்டு தினம்-தினம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா?: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது? எதற்காக மாடுகளை வைத்திருக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதனை யார், எதற்காக தீர்மானிக்க வேண்டும் என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது[2]. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்[3]. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர். இப்புகாரை அடுத்து, அங்கு டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்[4]. ஆனால் அங்கு பரிமாறப்பட்டது எருமை மாட்டு இறைச்சி என்று பின்னர் தெரியவந்தது[5]. டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

ban-on-beef-in-maharashtra-cartoon

ban-on-beef-in-maharashtra-cartoon

மலையாளத்தில் கிறுக்கியதும், ஆங்கிலத்தில் எழுதியதும்: கேரள தலைமைச் செயலாளர் ஜி.ஜி. தாமஸ் டெல்லியில் கூறும்போது, “கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது” என்றார். “கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார் ஜி.ஜி. தாமஸ்[6]. ஆனால், இல்லை, நாங்கள் விற்போம் என்று அறிவித்து விட்டது[7]. என்.டி-டிவி தனது செய்தியில், ஒரு மாதிரியாக சொல்வதிலிருந்தே இதில் விவகாரம் இருக்கிறது என்று தெரிகிறது[8]. “Three men who visited the Kerala House canteen yesterday noticed “beef fry” on a handwritten menu on the whiteboard. It was the only dish scribbled in Malayalam, and they wasted no time in calling the police.” நேற்று மூன்று ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். மெனுவில் “பீப் பிரை” என்று கையினால் எழுதிவைத்ததைப் பார்த்து, நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தனர். மலையாளத்தில் அது கிறுக்கலாக இருந்தது, என்று நக்கலாக விளக்கும் போதே தெரிகிறது. போர்டில் உள்ளது அழகாகத்தான் உள்ளது, கிறுக்கல் ஒன்றும் இல்லை. மீன் கறி, மீன் வருவல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுபோது, அடுத்ததை ஏன் மலையாளத்தில் இருக்க வேண்டும்? அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது! ஆக, இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-10-2015

[1] http://www.ndtv.com/india-news/j-k-lawmaker-engineer-rashid-attacked-with-black-ink-in-delhi-1233954

[2] தினமலர், கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம் ,பதிவு செய்த நாள் அக் 27,2015 12:56; மஅற்றம் செய்ய்த நாள். அக் 27,2015 15:56;

[3] http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7809438.ece

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1373708

[5] http://www.maalaimalar.com/2015/10/27162437/Oomen-chandy-Mamata-Kejriwal-c.html

[6] தி.இந்து, கேரளா பவன்மாட்டிறைச்சிவிவகாரம்: டெல்லி போலீஸ்சோதனையும் 10 முக்கிய தகவல்களும், Published: October 27, 2015 13:21 ISTUpdated: October 27, 2015 19:39 IST.

[7] http://www.deccanherald.com/content/508682/beef-back-kerala-house-menu.html

[8] http://www.ndtv.com/india-news/cops-rush-to-kerala-house-after-call-alleging-beef-on-menu-1236740

சோலார் பெனர் வழக்கில் தீர்ப்பு, வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு, தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் என்று சாதிக்கும் சரிதா நாயர்!

ஜூன் 20, 2015

சோலார் பெனர் வழக்கில் தீர்ப்பு, வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு, தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் என்று சாதிக்கும் சரிதா நாயர்!

biju_தி ஹிந்து போட்டோ

biju_தி ஹிந்து போட்டோ

கேரள மாநிலத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் ரூ. 7 கோடி பணம் வாங்கி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா எஸ். நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இவர்கள் “டீம் சோலார்” [The Team Solar Energy Company (Team Solar) ] என்ற கம்பெனி வைத்து நடத்தி அத்தகைய மோசடியை செய்தனர். சில ஆவணங்களில் அக்கம்பெனியின் பெயர் “Team Solar Renewable Energy Solutions Private Limited” என்று குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இந்த மோசடியில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். முதல்–மந்திரி அலுவலக ஊழியர்கள் டென்னி ஜோசப் உட்பட சிலரும் 2013ல் கைதானார்கள். அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்[3].

  1. சரிதா எஸ் நாயர் – குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்.
  2. பிஜு ராதாகிருஷ்ணன் – சரிதாவின் கணவன்.
  3. டெனி ஜோப்பன் – உமன் சாண்டியின் முக்கியமான உதவியாளர்.
  4. ஏ. பிரோஸ் – அரசு ஊழியன், தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டான்.
  5. ஷாலு மேனன் – நடிகை.

அதன் பின்பு நடந்த விசாரணையில், புற்றீசல் போல பல்வேறு மோசடி புகார்கள் வெளியானது. இது தொடர்பாக சரிதாநாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 31 வழக்குகள் பதிவு செய்தனர். உம்மன் சாண்டி, தீர்ப்பு விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்துள்ளதையும், தனது நிலையினையும் எடுத்துக் காட்டுகிறது என்றார்[4].

Solar scandal link - India Today graphicsவிசாரணை கமிஷனை உன்னன் சாண்டியும், அதனை எதிர்த்த சரிதா நாயரும்: முன்னர் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, எதிர்கட்சிகளின் அழுத்தத்திற்காக, ஜஸ்டிஸ் கி. சதாசிவன் கீழ் அக்டோபர் 28, 2013 அன்று ஒரு விசாரணை கமிஷனை உம்மன் சாண்டி அமைத்தார். அக்கமிஷன் சரிதாவிடம் உபயோகத்தில் உள்ள செல்போன், கம்ப்யூட்டர் போன்ற எல்லா உபகரணங்களையும் ஒப்படைக்குமாறு ஆணையிட்டது. சரிதா ஒருமுறை உம்மன் சாண்டியைச் சந்தித்ததாக உள்ளது, ஆனால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாக கேமராக்களில் உள்ள பதிவுகளை அழித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால், சரிதா நாயர், இதனை எதிர்த்து கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்க தொடர்ந்தார். ஏற்கெனவே போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய விசாரணை தேவையில்லை மேலும் இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது[5].

The office of Team Solar on Chittoor Road in Kochi raided on Sunday 16-06-2013பாபுராஜ் புகாரின் வழக்கு விசாரணையில் தீர்ப்பு: வெளிநாடு வாழ் இந்தியரான ஆரன் முளாவைச் சேர்ந்த பாபுராஜ் என்பவர் தன்னை சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் சேர்ந்து சோலார் பேனல் நிறுவனத்தில் இயக்குனர் பதவி தருவதாக கூறி ரூ.1 கோடியே 19 லட்சம் பணம் மோசடி செய்ததாக புகார் கூறி இருந்தார்[6]. இது தொடர்பாக பத்தினம் திட்டா கோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது பாபுராஜ் தரப்பில் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் 8 தவணைகளாக பணம் வாங்கி இருப்பதற்கான ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் பாபுராஜை நம்ப வைக்க சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் முதல்–மந்திரி அலுவலக ஆவணங்களை போலியாக தயாரித்து அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு அளித்தார்[7]. பிஜு ராதாகிருஷ்ணனுக்கும், சரிதாநாயருக்கும் தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததோடு, சரிதாநாயருக்கு ரூ.45 லட்சம் அபராதமும், பிஜு ராதாகிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்[8]. மேலும் தண்டனை பெற்றவர்கள் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் எனவும் தீர்ப்பில் கூறி இருந்தார்[9].

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தில் கலட்டா தொந்தரவு செய்தனர் 2015.

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தில் கலட்டா தொந்தரவு செய்தனர் 2015.

தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன்சரிதா நாயர்: தீர்ப்பை கேட்க பிஜு ராதாகிருஷ்ணனும், சரிதாநாயரும் பத்தினம் திட்டா கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பிஜு ராதாகிருஷ்ணன் அவரது முதல் மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருப்பதால்[10] போலீசார் அவரை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவர், கோர்ட்டு முன்பு நிருபர்களிடம் கூறியதாவது[11]: பத்தினம்திட்டா கோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது. எனது தரப்பு நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கருதுகிறேன். என்றாலும் நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தீர்ப்பில் மேல் முறையீடு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தண்டனையை எதிர்த்து ஒரு வாரத்துக்குள் மேல் முறையீடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். சரிதாநாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 28 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. அதில், பாபுராஜ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதுவே சோலார் பேனல் மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் வெளியான முதல் தீர்ப்பாகும். இன்னும் 27 வழக்குகளில் தீர்ப்புகள் அடுத்தடுத்து வெளியாகுமென தெரிகிறது.

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தை தொந்தரவு செய்தனர் 2015

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தை தொந்தரவு செய்தனர் 2015

சோலார் பேனல் மோசடி வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு: சோலார் பேனல் மோசடி வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், அவர்களது பெயர்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் சரிதா நாயர் கூறினார்[12], “சோலார் பேனல் வழக்கில் பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக கூறினர். ஆனால் என் மீது தொடரப்பட்ட வழக்குகளில் யாரும் எனக்கு உதவவில்லை. மற்ற சில விசயங்களில்தான் எனக்கு அவர்கள் உதவினார்கள். சோலார் பேனல் ஊழல் வழக்கில் நிதியமைச்சர் கே.எம்.மாணியின் மகன் ஜோஸ் கே.மாணி தவிர மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு. அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இந்த மோசடியில் பங்கு உண்டுசோலார் ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரின் பெயர்களையும் நான் 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். அருவிக்கார தேர்தலை பாதிக்கும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை[13], இவ்வாறு அவர் கூறினார்[14].

Solar scam details - The Hindu - Graphicsஆடூர் பிரகாஷ் சரிதாவுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்: ஆடூர் பிரகாஷ், மாநில நிதுத்துறை அமைச்சர், தனக்கும் சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை, DYFI ஆட்கள் வேண்டுமென்றே, இதனை அரசியல் ஆக்கப்பார்க்கிறார்கள், என்று கூறியுள்ளார். DYFI ஆட்கள் அமைச்சர் விழா நடக்கும் இடத்தில் வந்து கருப்புக் கொடிகளைக் காட்டி ஆர்பாட்டம் செய்தனர். பெனி ராதாகிருஷ்ணன், சரிதா நாயரின் வழக்கறிஞர், தம்பன்னூர் ரவி மூலம் உம்மன் சாண்டி மற்றும் ஆடூர் பிரகாஷ் சரிதா நாயருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்து அனுப்பினார் என்றார்[15]. இது ரகசியமாக பதிவான ஒரு விடியோவில் பதிவாகியுள்ளது. இதை வைத்துக் கொண்டு DYFI ஆட்கள் கலாட்டா செய்தனர்[16].

வேதபிரகாஷ்

© 20-06-2015

[1] http://www.dailythanthi.com/News/India/2015/06/18162533/Saritha-Nair-Biju-Radhakrishnan-sentenced-to-3-years.vpf

[2] Kerala High Court – Joy Kiatharath vs Unknown on 7 August, 2013 – Crl.MC.No. 3536 of 2013 (D); http://indiankanoon.org/doc/16838222/

[3]  தினத்தந்தி, சோலார் பேனல் வழக்கு சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் கோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்:

வியாழன் , ஜூன் 18,2015, 4:25 PM IST

[4] http://www.business-standard.com/article/pti-stories/solar-case-verdict-vindication-of-govt-stand-on-probe-chandy-115061901078_1.html

[5] Saritha S. Nair, an accused in the solar scam, has approached the Kerala High Court to quash the appointment of a judicial commission that is probing into the case. Saritha, in her petition, said there was no need to appoint a judicial panel since the case did not involve the public. She said the case should be probed only by the vigilance department or a Central agency. She said police was already investigating the case and there is no need for a parallel probe. The United Democratic Front government set up the commission due to pressure from the Opposition. The panel was set up under the Commission of Inquiry Act on October 28, 2013 headed by Justice G. Sivarajan. Saritha submitted before the court that the appointment of the commission was politically motivated it was not needed in a cheating case involving a dispute between her company, Team Solar Renewable Energy Solutions Private Limited, and some aggrieved private individuals. The commission also asked her to submit details of her electronic devices including her computer. She argued that it would amount to violation of the protection guaranteed in the Constitution under Article 20 (3) which prohibits compelling an accused to be a witness against herself.

http://indiatoday.intoday.in/story/kerala-solar-scam-saritha-nair-united-democratic-front-oommen-chandy/1/369511.html

[6]  தமிழ் இந்து, சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை, Published: June 19, 2015 08:31 ISTUpdated: June 19, 2015 08:32 IST

[7]  தினமலர், சரிதா நாயருக்கு கிடைத்தது 3 ஆண்டு சிறை தண்டனை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 00:19 .

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1277859

[9] மாலைமலர், சோலார் மோசடி வழக்கு: 3 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுசரிதா நாயர் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 11:21 AM IST

[10] http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/article7332357.ece

[11] http://www.maalaimalar.com/2015/06/19112149/solar-panel-scam-3-year-senten.html

[12]  தினகரன், சோலார் பேனல் மோசடியில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது: சரிதா நாயர் பாபரப்பு குற்றச்சாட்டு, சனிக்கிழமை, 20-06-2015: 01:49:12.

[13] http://english.manoramaonline.com/news/just-in/kerala-mlas-ministers-involved-in-solar-scam-saritha-s-nair.html

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=151557

[15] http://www.thehindu.com/news/national/kerala/dyfi-men-disrupt-ministers-meet/article7335666.ece

[16] The agitation was triggered by a leaked statement, allegedly made by Saritha’s lawyer Feni Balakrishnan, that Chief minister Oommen Chandy and Adoor Prakash had sent money to Saritha through Thampannoor Ravi. The statement was heard in the backdrop of a video footage, shot by a hidden camera, that showed Saritha Nair raising fresh allegations that ministers and MLAs were involved in the solar scam.

http://english.manoramaonline.com/news/kerala/adoor-prakash-links-with-saritha-nair-solar-scam.html

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

ஜூலை 6, 2010

முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

கேரளாவில் இப்படி கலாட்டாவா? கேரளாவில் படிப்பாளிகள் அதிகம், பல மதத்தவர்கள் இருக்கும், அதிலும் “கடவுளுக்கே சொந்தமான இடம்” என்றெல்லாம் கூறப்படுகின்ற நாடு, ஆனால், அந்த கடவுளுக்கு சொந்தமான மாநிலத்தில், கடவுளின் பெயரால், இத்தகைய கைவெட்டும் படலங்கள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? கேட்டுக் கொண்டிருக்கிறாரா? என்ன பதில் சொல்வார்?

பி.காம் வினாத்தாள் பிரச்சினையக் கிளப்பியது: டீ. ஜே. ஜோஸப் தொடுபுழா (இடுக்கி மாவட்டம்) என்ற இடத்தில் உள்ள நியூமேன் காலேஜில் மலையாள மொழி விரிவுரையாளராக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் வருட பி.காம் வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி முகமது நபியை இழிவுப் படுத்துவதாக உள்ளது என்று முஸ்லீம்கள் ஆட்சேபணைத் தெரிவித்தனர்.

ஜோஸப்-தாக்கப்பட்டது

ஜோஸப்-தாக்கப்பட்டது

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்பட்டக் கற்பனை உரையாடல் சித்தரிக்கப் பட்டபோது ஏற்பட்டப் பிரச்சினை: பி. டி. குஞ்சு முஹமது (இவர் பல பரிசுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சி,பி.எம் மின் எம்.எல்,ஏ) என்பரது ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, ஒரு வினா இருந்தது போலும். குஞ்சு முஹமது “கர்ஸோம்” என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நம்பிக்கையில்லாதவன் (protagonist) கடவுளிடம் பேசுவது மாதிரி சித்தரிக்கப் பட்டிருந்தது. ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது மாதிரி உரையாடல் இருக்கும். அந்த கட்டுரையிலிருந்து, ஒரு பத்தியை கமா, புள்ளிகள் முதலியவறை வைத்து, வகைப்படுத்த எடுத்துக் கொண்டார் ஜோஸப். அவ்வாறு செய்யும் போது, அவ்வுரையாடல் கடவுளுக்கும் முகமது நபிக்கும் இடையில் உள்ளது மாதிரி மாற்றியமைதிருந்தார் என்று குற்றஞ்சாட்டப் படுகிறது (While reproducing the conversation as a passage for punctuation, Joseph replaced the mad man with Muhammed, thus making it seem like a dialogue between God and Muhammed)[1]. கடவுளுக்கும் முஹமதுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கற்பனையான உரையாடல் என்பதில் “முஹமத்” என்பதன “முஹமது நபி” என்றே எடுத்துக் கொண்டு முஸ்லீம்கள் செயல்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன (In the question paper, he had used a passage about an imaginary dialogue between God and Muhammad, and the students were asked to comment. Certain Muslim organisations, assuming that ‘Muhammad’ in the passage was Prophet Muhammad, took offence and staged protest rallies and clamoured for action against the professor)[2].

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

கல்லூரி தாக்கப்பட்டது: அந்தகல்லுரியின் மீது கற்கள் எரியப் பட்டன. ஜோஸப்பின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினர். அதன்படி, ஜோஸப் கைது செய்யப் பட்டார். பிறகு அந்த கல்லூரியிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி அதிகாரம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. ஆனால் கடந்த ஜூலை 4ம் தேதி, ஜோஸப், சர்ச்சிற்குச் சென்று தாய்-சகோதரி இவர்களுடன் திரும்பி வரும்போது, காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு, கத்திகளால் தாக்கப்பட்டார். கால்-கைகளில் வெட்டு விழுந்தன[3].

Joseph-attacked-by-jihadis

Joseph-attacked-by-jihadis

கையை வெட்டியதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது 05-07-2010 அன்று செய்யப் பட்டனர். இதைத்தவிர, தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்ற 12 நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முண்டெத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் (37) மற்றும் எரமலூரைச் சேர்ந்த ஜாஃபர் (28) கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துவரப்பட்டடு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் ஜோஸப்பின் கையை ஞாயிற்றுக் கிழமை அன்று வெட்டினர் என்று அடையாளங்கணப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய வேதிகை என்ற அமைப்பு போலீஸாரிடம் தமது இயக்க ஆட்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர் மற்றும் தாக்கிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கேட்டுக் கொண்டுள்ளனர்[4].


Ashraf and Jaffar, who were arrested in connection with the attack on Professor T.J. Joseph at Muvattupuzha, coming out of a court after being remanded to judicial custody.

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கடவுளர்கள் விமர்சிக்கப் படக்கூடாது என்றால், அது எல்லொருக்கும் பொறுந்தக் குடியதாக இருக்க வேண்டும்: இந்தியாவில், இந்து மதம், இந்துமதக் கடவுளர்கள், ஏன் பெண் கடவுளர்களே, மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக தூஷிக்கப் பட்டுள்ளனர்[5]; விமசர்னம் செய்யப் பட்டுள்ளனர்; ஏன் ஹுஸைன் போன்றவஎகளல் படங்களாகவும் வரைந்துக் காட்டப் பட்டுள்ளன[6]; கருணாநிதி போன்ற கஞ்சிக் குடிக்கும் ஆட்கள் இந்துக்களை “திருடர்கள்” என்றெல்லாம் திட்டியிருக்கின்றனர்[7]. வழக்குகள் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை. சட்டம் தூங்கிக் கொண்டே இருக்கிறது[8]. நீதிபதிகள் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்[9]. ஆனால், முஸ்லீம்களோ, சட்டத்தை நேராக கையில் எடுத்துக் கொண்டு விடுவார்கள். சிறிது காலத்தில் விஷயத்தை மறந்து விடுவார்கள். ஆக, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்றால், இந்தியாவில், ஒரே மாதிரியான குற்றங்கள் செய்யும் போது, அனைவரும் அதே மாதிரித்தான் தண்டிக்கப் பட வேண்டும்[10]. வழக்குகளை நடத்தாமல், கருணாநிதி போன்ற கோழைகள் அமுக்கி வைத்தாலும், அது மாபெரும் குற்றம்தான். அத்தகைய சமத்துவம் இந்தியாவில் வரவில்லையென்றால், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசிக் கொண்டு மக்களைத் தொடர்ந்து பேசி ஏமாற்றி வரமுடியாது[11]. மக்களும் கொதித்தெழுந்து விட்டால், தங்களது உணர்ச்சிகள், நினைவுகள், மனங்கள் பாதிக்கப் பட்டால், அவர்களும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவர்.


[1] Indian Express, Controversial question paper: Lecturer’s hand chopped off,  http://www.indianexpress.com/news/controversial-question-paper-lecturers-hand-chopped-off/642261/0

[2] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[3] Economics Times, Alleging blasphemy, fanatics hack lecturer’s hand, 5 Jul 2010, 0351 hrs IST,ET Bureau & Agencies

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Taliban-writ-in-Gods-own-country/articleshow/6129310.cms

[4] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[5] நாத்திகம் போர்வையில் எப்படி பலத்ரப்பட்ட சித்தாந்திவாதிகள் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர், பாங்களை எடுத்துள்ளனர், வரைந்துள்ளனர்………..என்பவற்றைப் பட்டியல் போட்டுக் காண்பித்தால், பெரியதாக நீண்டுக் கொண்டேயிருக்கும்

[6] இந்த கொடிய காமக்குரூரக் காரனும் இந்திய சட்டங்களினின்று தப்பித்து, துபாயில், தீவிரவாதி போல வாழ்ந்து வரௌவது நோக்கத்தக்கது.

[7] நீதியை, நீதித்தாயை நேராக பார்க்கக் கூட பயந்து சாகும் கோழைகள் இவர்கள், ஆனால், நீதி தேவன் என்றெல்லாம் பேசுவார்கள்.

[8] மது வேறு தாராளமாக ஊற்றிக் கொடுப்பதனால், தமிழகத்தில் கேட்கவே வேண்டாம், மயகத்தில் தான் உள்ளனர். செம்மொழி மாநாடே அத்தகைய மயக்கத்தில் நடத்டப் பட்டது.

[9] நீதிபதிகள் எல்லோரும் அரசியல் கட்சிகள் சார்பில், பரிந்துரை செய்யப் பட்டு அமர்த்தப் படுவதால், நீதிதுறையின் மதிப்பே போய்விட்டது. உதாரணத்திற்கு கே. ஜி. பாலகிருஷ்ணன் ராமர் பாலம் விஷயத்தில் கேட்ட கேள்விகள் முதலியவற்றை நினைவில் கொள்ளலாம். அத்தகைய கேள்விகளை பாலகிருஷ்ணன் முகமதியர்கள் விஷயத்தில் கேட்டிருப்பாரா? இதுதான் நீதியின் லட்சணமா?

[10] ஆனால், இவை நடப்பதில்லை. காஷ்மீரத்திலேயே, இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்த்குப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; அவர்களது கோடானுகோடி சொத்துகள் அபகரிக்கப் படுகின்றன. ஆனால், சட்டம் தூங்கிறது.

[11] உண்மையிலேயே இந்துக்கள் தாம், அவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் பட்டு வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட காக்கப்படுவதில்லை.