Archive for the ‘சவிகுர் ரஹ்மான் பர்க்’ Category

1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)!

மே 29, 2016

1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றிதோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)!

BJP prospects in Tamilnadu 2016

1996 முதல் 2016 வரை பிஜேபியின் வெற்றிதோல்விகள்: 1996-2016, இருபது ஆண்டு காலத்தில், தமிழக பிஜேபி கோஷ்டி-அரசியலில் ஈடுபட்டது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சி தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற இயலவில்லை. கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அக்கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா கட்சி. எனினும் போதிய பெரும்பான்மை இல்லாததால் 13 நாள்களில் பதவியை ராஜிமாநா செய்தார் அக்கட்சியின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அதற்கு காரணம் ஜெயலலிதா என்று தெரிந்த விசயமே.

  1. அதே ஆண்டில்-1996ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தமிழக சட்டப் பேரவைக்குள் முதல் முதலாக நுழைந்தது. அந்தகட்சியின் சார்பில் பத்மனாபபுரத்தில் போட்டியிட்ட வேலாயுதம், பாஜகவின் உறுப்பினராக தமிழக பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். இவர்தான் பிஜேபியின் முதல் எம்.எல்,ஏ என்ற சிறப்பைப் பெற்றார். இந்த தேர்தலில் 225 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக02 சதவீதம் வாக்குகள் பெற்றது.
  1. 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பா.ஜ.க. 3 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதியிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும் வெற்றி பெற்றார்கள்.
  1. இதையடுத்து 2001 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 21 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில்
  2. கே.என்.லட்சுமணன் (மயிலாப்பூர்),
  3. கே.வி.முரளிதரன் (தளி),
  4. ஜெக. வீரபாண்டியன் (மயிலாடுதுறை),
  5. எச்.ராஜா (காரைக்குடி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[1].

இத்தேர்தலில் பாஜக 3.19 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2006, 2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

2006 Tamilnadu assembly result

  1. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., மொத்தமாக 1,455,899 வாக்குகளைப் பெற்றாலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. இத்தேர்தலில் இதன் வாக்கு சதவிகிதம்1.
  1. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பா.ஜ.க.வை புறக்கணித்ததால் 225 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.
  1. 2009 நாடாளுமன்றத் தேர்தலில்3 சதவிகித வாக்குகளையே (711,790) பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. 2004 பொதுத் தேர்தலில் 5.1 சதவிகித வாக்குகளை வைத்திருந்து தற்போது 2.8 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது பா.ஜ.க.

அண்மையில் முடிவடைந்த தேர்தலில் பாஜக கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. எனினும், அக்கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் பாஜகவின் கனவு கானல் நீராகவே தொடர்கிறது[2].

தினமலர் - பிஜேபி கோஷ்டி பூசல் - படம்

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[3]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[4], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[5].

எஸ்.வி.சேகர் Vs கே.டி. ராகவன்.. தமிழக பாஜக அடிதடி2016லும் தொடர்ந்த கோஷ்டி பூசல் சமூகவலைதளங்களிலும் பரவியது: தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் உச்சத்தை அடைந்தன. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, கேசவ விநாயகம், ஆர்.கே.ராகவன் என கோஷ்டிகளின் எண்ணிக்கை நீண்டதுடன் வேட்பாளர்களுடன் ஐக்கியமானது. ஆனால், இவர்கள் தான் கட்சிக்கே பிரச்னை என்று எடுத்துக் காட்டப்பட்டது. எல்லாருமே மோடியை விட, கூடுதலாக, தாங்கள் தகுதி படைத்துக் கொண்டு விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஒன்றும் இல்லாவிட்டாலும், மத்தியில் இருக்கும் ஆட்சியை வைத்து, நாலு காசாவது சம்பாதிக்கலாம் என, கட்சி பக்கம் ஆர்வமாக ஓடோடி வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட, ‘ஐயையோ… தெரியாத்தனமா முடிவெடுத்துட்டோமோ’ என, அஞ்சி ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவரை பார்க்க வேண்டும் என்றால், இன்னொரு தலைவர் கோபித்துக் கொள்வார் என, பயந்து, போகக் கூடாத இடத்துக்கு சென்று, பார்க்க கூடாதவரை பார்த்ததைப் போல, பதுங்கி பம்மும் நிலை, ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்பட்டுள்ளது, என்றெல்லாம் ஊடகங்கள் விவரித்தன.

thamilisai-விமர்சித்து-முகிலன் - cartoon-விமர்சங்களை தவிர்க்காத பிஜேபி: திராவிட கட்சிகள் பிஜேபியை மதவாதி கட்சி என்ற முத்திரையக் குத்தியே பிரச்சாரம் செய்து வருகின்றன. திமுக கூட்டு வைத்துக் கொண்டாலும், தமிழகத்தைப் பொறுத்த வரையில், கருணாநிதி தனது விமர்சனத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 2016ல் நாஞ்சில் சம்பத். ‘தமிழகத்தில் கால் ஊன்ற போகின்றனராம்; கால் இருந்தால் தானே ஊன்ற முடியும்; கால் இல்லாத சப்பாணி அமைச்சர்களால் என்ன செய்ய முடியும்’ என்ற அவரின் நக்கலான பேச்சு, அ.தி.மு.க., நாளிதழில் பிரதான இடத்தை பிடித்தது[6]. அவர் சப்பாணி அமைச்சர்கள் என விளித்திருப்பது, நம்ம ஊரு பொன்னாரை மட்டுமல்ல; தமிழக பா.ஜ.,வை கரையேற்ற, மேலிடம் அனுப்பிய பியுஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் போன்றோரையும் தான், என்று தினமலர் விளக்கமும் கொடுத்தது[7].

© வேதபிரகாஷ்

 28-05-2016

<aref=”#_ftnref1″ name=”_ftn1″>[1] தினமணி, கானல் நீராகும் பாஜகவின் எம்.எல்.. கனவு: தொடர்ந்து 3 பேரவைகளில் இடமில்லை, By சா.பெர்லின் மோசஸ் First Published : 21 May 2016 05:21 PM IST

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/05/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D./article3444609.ece

[3] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்: அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[5] http://sathiyamweekly.com/?p=5416

[6] தினமலர், சப்பாணி கட்சியா தமிழக பா..? , பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2016,21:16 IST.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1506593

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms