பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)
திருமாவளவனின் அதிகப்பிரசிங்கத் தனமான பேட்டி: இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘தாலி பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா அல்லது பெருமைப்படுத்துகிறதா?’ என்ற தலைப்பில் ‘உரக்கச் சொல்லுங்கள்’ என்ற நிகழ்ச்சி உலக மகளிர் தினத்தில் ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி நேற்று அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்துக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர். இவர்கள் இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு இருக்கும்போதே இன்று (08.03.2015) புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்துக்கு எதிரில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை நான்கைந்து லாரிகளில் வந்து இறங்கிய ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. அவரது காமிராவும் உடைக்கப்பட்டிருக்கிறது. பெண் நிருபரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் போலிஸ் அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே நடத்தப்பட்டும் அவர்கள் தடுக்கவில்லை. தாக்கியவர்களை இதுவரை கைதுசெய்யவும் இல்லை என அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, என்று சொல்லியிருக்கிறார்.
தாலி மறுப்புத் திருமணங்கள் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன: திருமாவளவன் தொடர்கிறார், தாலி மறுப்புத் திருமணங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் நடந்துவருவதை நாம் அறிவோம். திருமணமானவர் என்பதன் அடையாளமாகப் பெண் மட்டும் தாலி அணிந்துகொள்ளவேண்டும் ஆனால் ஆணுக்கு எந்த சின்னமும் தேவையில்லை என்பது ஆணாதிக்க அணுகுமுறை தவிர வேறில்லை. இதைப்பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் என்ன கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்பது தெரியாமலேயே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணங்கள் சட்டரீதியில் எந்தநிலையை அடைந்து, பிறகு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர் என்பதெல்லாம் அறிந்த விசயமே.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்: திருமாவளவன் தொடர்கிறார், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மதவாத வன்முறைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது. அரசியல் தளத்தில் செல்வாக்கு இல்லாத மதவெறி சக்திகள், பண்பாட்டுத் தளத்தில் வன்முறையை ஏவி தமது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. இத்தகைய மதவெறி வன்முறைக்கு ஜனநாயக அமைப்பில் இடம் கொடுக்கக்கூடாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும். கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்[2].
இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது உண்மையா, பொய்யா? செய்திகள் வெளியிடப்பட்டுள்ள விதம், இந்து அமைப்பினர் என்று குறிப்பிட்ட அமைப்பினரை குற்றஞ்சாட்டுதல், விவாதத்தின் தலைப்பு, கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது முதலியன, பாரபட்சத்துடன் இருக்கின்றன என்பதனை, ஒரு சாதாரணமான வழிபோக்கன், பார்வையாளன் அல்லது யாருக்கும் புரிந்த விசயமாகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு, போக்கு, திட்டம் உள்ளது என்றும் கூறலாம். அதாவது, இந்துக்களை எதிர்ப்பதாக உள்ளது என்று தெரிகிறது. இந்துக்களைத் தாக்கும் போக்கு ஏன் என்பதை யாரும் விளக்குவதாக இல்லை. அதுதான் செக்யூலரிஸம் ஆகும் என்று இரச்சாரம் செய்து ஏற்புடைய கருத்தாக வைத்திருப்பது முதலியனவும் சரியாகாது. இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது இவர்களுக்கு தெரிந்திருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இரண்டும் ஒன்றே என்பது போல தாக்குதலில் உட்படுத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல.
மற்ற மதங்களிலிருந்து உதாரணங்களை விவாதத்திற்கு உட்படுத்துவதில்லை: இதே மாதிரி, மற்ற உதாரணங்களை, மற்ற மதங்களிலிருந்து எடுத்து விவாதித்ததில்லை என்பதிலிருந்து, இந்துக்களைத் தாக்கவேண்டும் என்ற திட்டம் தெரிகிறது. தாலி போன்ற அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மோதிரம், பர்தா, முத்தம் என்ற பலவிசயங்கள் உள்ளன, ஆனால், அவை விவாதிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி எந்த டிவியிலும் பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மேலும், இந்து அமைப்பினர் தாக்கினர் என்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எல்லோருமே கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் சித்தாந்திகளாக இருப்பதும், இந்து-விரோத போக்கை எடுத்துக் காட்டுகிறது. தொடர்ந்து இவ்வாறு இந்து-எதிர்ப்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, ஒருதலைப்பட்சமான கருத்து திணிப்பு, அதற்கேற்றாற்போல, ஆட்களைக்கூட்டி வந்து பேச வைப்பது, காட்டிய நிகழ்ச்சியை திரும்ப-திரும்ப காட்டுவது, இதனை மறுத்தால், மறுப்புக் கருத்து தெரிவித்தால், அதனை தடுப்பது, மறைப்பது, மேலும் அவை கம்யூனலிஸம் என்பது என்ற போக்கு நடந்த வருகின்றது.
கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் ஷா பானு வழக்கு, சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது, சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை, உஸைன் சித்திரங்கள், பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேசிய கீதம் பாடுவது, அதற்கு மரியாதை கொடுப்பது, மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்) என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
வேதபிரகாஷ்
© 10-03-2015
[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139195
[2] நக்கீரன், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தாக்குதல்: தொல்.திருமாவளவன் கண்டனம் , 10-03-2015.