Archive for the ‘நைட்ரேட்’ Category

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

ஜனவரி 17, 2016

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

The arms seized by Malda police being displayed outside the Englishbazar all-womens station on Sunday. Picture by Surajit Roy- Jan.2015

மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (ஜனவரி.2015): மேற்கு வங்க மாநிலம், மால்டா மாபவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கித் தொழிற்சாலை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. மர்ம நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பதந்துலி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கிராமத்திற்கு அருகே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்குவதை கண்டுபிடித்தனர்[1].  அந்த இடத்தை சுற்றி வளைத்து தொழிற்சாலையில் இருந்த மொஹம்மது நஜ்ருல் [Md Nazrul] என்பவரை போலீசார் கைது செய்தனர்[2]. விசாரணையின் போது பீகார் மாநிலத்தில் உள்ள முங்கரில் இருந்து வந்த நஜ்ருல், அங்கு துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது[3]. அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன[4]. போலீஸார் தெரிவித்தது: “மால்டா மாவட்டத்தில் உள்ள காலியாசக் கிராமத்தில் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் அந்த ஆலை சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்யறியப்பட்டது. அங்கிருந்து 30 சிறு கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உற்பத்தில் நிலையில் இருந்த 150 துப்பாக்கிகளும், துப்பாக்கி செய்யத் தேவையான மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன மேலும், இதில் தொடர்புடைய காலியாசக் கல்லூரி மாணவன் காதிர், என்பவனிடமும் விசாரணை நடைபெற்றது”, என்று போலீஸார் தெரிவித்தனர்[5]. மால்டா கல்லூரி மாணவர்களின் தொடர்பு நோக்கத்தக்கது.

தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை

மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[6]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்[7]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் இந்தியாவில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[8]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[9]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

மால்டா துப்பாக்கி தொழிர்சாலை 2015

மார்ச்.14, 2015: எல்லைத்தாண்டிய ஜிஹாதி தொடர்புகள் பர்துவான் குண்டுவெடிப்பில் தெரிய வந்தது. இதனால், எல்லைப்புற ஊர்களில் பி.எஸ்.எப் மற்றும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எல்லாதுறைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி மார்க்சிஸ்ட்டுகளில் தலையீடுகள் இருப்பதினால், சில விசயங்கள் வெளிவருகின்றன, பல மறைக்கப்படுகின்றன. அத்தகைய சோதனையில் பர்த்வான் மாவட்டத்தில், பெல்சோர் கிராமத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டன். அக்டோபர்.2, 2014 குண்டுவெடுப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரணை நடக்கிறது[10].

மால்டா - முங்கர், பீஹார் தொடர்புகள்

மார்ச்.14, 2015:  போங்கௌன் பேருந்து நிலையம், 24-பர்கானாவில் அப்துல் ரௌப் மண்டல் மற்றும் ரஹிமா மண்டல் என்ற இருவர் 10 கைத்துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ரசாயபொருட்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இதில் ரஹீமா ஒரு பெண். பீஹாரில் முங்கர் மாவட்டத்தில் ஜமால்பூரிலிருந்து அவற்றைப் பெற்றதாக ரஹீமா தெரிவித்தாள். ஜனவரியில் கைது செய்யப்பட்ட மொஹம்மது நஜ்ருல் என்பவனும் இதே இடத்தில் இருந்து வந்தவன் என்று குறிப்பிடத்தக்கது[11]. முங்கர் மாவோயிஸ்டுகளின் இடமாகவும் இருக்கிறது, அங்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன[12]. இங்கு ரகசியமாக உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கிகள் இந்தியாவில் உள்ள பல தீவிரவாத கோஷ்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது[13]. இங்குள்ள அத்தகைய துப்பாக்கி தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதலியோர் மெத்தனமாகவே இருந்து வருகிறார்கள்[14]. இவ்வாறு பிஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் மற்றும் பங்காளதேசம் முதலிய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள், தீவிரவாத செயல்களுக்கு உதவுவது தெரிகிறது.

Munger arms manufacturers, who are adept at churning out all sorts of sophisticated firearms, pictured at an illegal factory

ஏப்ரல்.20, 2015: ரடௌ பஜார் (மால்டா) பகுதியில், போலீஸார் சொதனையிட்டதில் ஒருவனிடத்தில் கள்ளநோட்டுகளும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது[15]. அதாவது, கள்ளநோட்டு விநியோகம் மற்றும் ஆயுத விநியோகம், பரிமாற்றம் முதலியன சேர்ந்தே நடைபெறுகின்றன என்று தெரிகிறது.

Munger has evolved to make modern firearms now

மே.9.2015 – பர்துவான்: பெகுன்கோலா கிராமத்தில் (பர்துவான்) ஒரு வீட்டில் திடீரென்று குண்டுவெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தன. சோதனையிட்டதில், அவ்வீட்டில் வ்ர்டிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது[16]. இவ்வாறு தொடர்ந்து பெண்களின் தொடர்பு குற்றங்களை மறைக்க என்று தெரிகிறது. முஸ்லிம் பெண்களை முன்னிருத்தி, இத்தகைய தேசவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. முச்லிம் பெண்கள் வீட்டில் இருந்தால், சோதனை செய்ய கலாட்டா செய்வர் என்பது அறிந்த விசயமே. இப்படி பெண்கள் அதிக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால், அவர்கள் எப்படி குழந்தைகளை கவனிக்க முடியும். இதனால் தான், ஒருவேளை குழந்தைகளை மற்றவர்களிடம் விட்டு விடுகின்றனர் போலும். அவ்வாறு சரியான அன்பு, பராமரிப்பு, ஆரோக்கியம் முதலியவை கிடைக்காததால் தான் குழந்தைகள் இறக்கின்றன போலும். அல்லது அவை தங்களது ஜிஹாடி வேலைகளுக்குத் தொந்தரவாக இருக்கின்றனவா?

Reach of MUNGER_WEAPONS_

அக்டோபர்.14, 2015 – பர்துவான்: ஒரு வீட்டில் சோதனையிட்டபோது, வெடிகுண்டு மருந்து, குண்டு தயாரிக்க உதவும் ஜெல், பிக்ரிக் அமிலம், காரீய அஸைட், மெக்னீயம் பொடி, யுரீயா நைட்ரேட், இரும்பு ஆக்ஸைட், அம்மோனியம் நட்ரேட், பொட்டாசியம் நைரேட், கந்தகம், மீதைல் ஆல்கஹால், எத்னால், நைட்ரோ பென்ஸீன், பேரியம் பெராக்ஸைட், காரீய நைட்ரேட், வெடிக்க உதவும் கருவிகள் (டீடோனேடர்கள்), வயர், டைமர் என்று சகல பொருட்களும் பரிமுதல் செய்யப்பட்டன[17]. போலீஸாருக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. “இப்படி எல்லா வெடிமருந்து ரசாயனங்கள், வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இதுதான் முதல் முறை”, என்று கூறினர்.

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] மாலைமலர், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமான துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 4:44 PM IST.

[2] http://www.indiatvnews.com/crime/news/illegal-mini-gun-factory-found-7421.html

[3] http://www.maalaimalar.com/2015/01/11164420/Illegal-mini-gun-factory-found.html

[4] தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை, First Published: Jan 12, 2015 2:24 AM Last Updated: Jan 12, 2015 2:24 AM.

[5]http://www.dinamani.com/india/2015/01/12/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/article2615537.ece?service=print

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[7] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[8] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[9] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[10] Bardhaman District. Two people were arrested and a huge cache of crude bombs and some firearms seized in Bardhaman District of West Bengal. During a combing operation Police made the seizures from a hideout in Belsore village. “We have seized around 200 crude bombs and a few country-made guns. Two people have been arrested,” a Police Officer said. The Police are examining if the incident has any links to the October 2, 2014 Bardhaman blast incident.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[11] Bongaon bus stand / North 24-Parganas District. A joint operation by the BSF and West Bengal Police led to the arrest of two persons, identified as Abdul Rauf Mandal and Rahima Mandal, and seizure of 10 country-made pistols, ammunition and a suspicious looking chemical from their possession at the Bongaon bus stand of North 24-Parganas District in West Bengal. The suspects have been arrested and a search is on for the man who was to collect the consignment from them. The white chemical found with the guns and ammunition has been sent for analysis. Officers suspect that it is some variety of low-grade explosive that was to be used to make crude bombs. Later during interrogation, Rahima told interrogators that she had received the consignment from a person in Jamalpur area of Munger District in the State of Bihar and was returning to Patkilpota to hand it over to one Taleb Mondal. A search has been launched for Taleb as he could tell authorities to who he planned to hand over the weapons and suspected explosive.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[12] http://www.deccanherald.com/content/444165/naxal-arms-factory-busted-bihar.html

[13] Illegal weapons manufactured in Munger in Bihar have found their way to various terror groups and criminal gangs in several parts of the country as well as to Bangladesh, officials have said.http://www.thehindu.com/news/national/munger-pistols-a-headache-for-police/article4775278.ece

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2374215/Need-loan-gun-factory-Just-ask-Government-Police-reveal-illegal-pistol-makers-Munger-financed-PMRY-grants.html

[15] Malda District. Acting on a tip off Police raided Ratua Bazaar area in Malda District of West Bengal and arrested a man on charge of carrying FICN. A Police official said FICN with face value INR 50,000 and a country made hand gun was confiscated from that man.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[16] May.9,2015 Bardhaman District Two women were injured in an explosion inside a house in Bardhaman District of West Bengal. According to the Police, the house was used to stock crude bombs. “The house is located in Begunkhola village. It collapsed from the impact of the blast, leaving two women injured,” Bardhaman SP Kunal Agarwal said. A senior police official said the house belonged to one Sanjoy Ghosh who was arrested from Katwa in the same District in connection to a criminal case a few days ago.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[17] October.14. BURDWAN . The NIA officials were surprised by the variety of explosives and chemicals found at the blast site in Burdwan leading them to suspect a foreign link with the accused. The list of explosives seized includes gun powder, power gel, picric acid, lead azide, magnesium powder, urea nitrate, potassium nitrate, sulphur, ammonium nitrate, iron oxide, methyl alcohol, ethanol, nitrobenzene, barium peroxide, sodium hydroxide and lead nitrate purified. Besides, detonators, wires and timer devices were also seized. An officer said “This is the first time such a variety of chemicals and explosives were found at a single place related to blast suspects.”

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

மே 6, 2013

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும் பிளவு பட்டுள்ளன. இந்த வேலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளே செய்துள்ளன. இதனால், சில இந்து இயக்கங்கள், இந்து போர்வையில் செக்யூலரிஸ பாணியில் வேலை செய்து வருகின்றன.  குறிப்பிட்ட விஷயங்களில் சும்மா இருந்துவிடலாம், அல்லது கருத்தைக் கூட வெளியிடாமல் இருக்கலாம், ஆனால், ஊடகங்களின் ஆதரவு, விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக, கொள்கையை விடுத்து, இந்து நலன்கள் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி மாறும் போது, அத்தகைய திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள், குறிப்பிட்ட கோணத்திலேயே வேலை செய்து வருகின்றன.

முஸ்லீம் இயக்கங்கள் பிரிந்துள்ளவை போன்று இருந்தாலும் இஸ்லாமில் ஒன்றாக இருக்கின்றன: முஸ்லீம் இயக்கங்களும் திராவிடக் கட்சிகளினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறாக தோன்றினாலும், தங்களது மதநலன்களை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்து, சாதித்து வருகின்றார்கள். இணைதளங்களில், தனிப்பட்ட முறையில், மண்டபங்களில் எதிர்த்துப் பேசி, அறிக்கைகள் விட்டுக் கொண்டு எதிர்கள் போலிருப்பார்களே தவிர, இஸ்லாம் என்று வரும்போது, ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர். இதை திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.

ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது: தமிழ்நாடு, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்சிகளைக் கூர்ந்து கவனித்தால், பிஜேபிக்கு எதிராக நடத்தப் படும் செயல்கள், கங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதைக் காணலாம். மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதா முதலமைச்சாரக உள்ளார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேசியும், நடந்து கொண்டும் வருகின்றனர். ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இல்லாத பட்சத்தில் அதிமுக வரவேண்டும் என்ற ஆசை, அதே நேரத்தில் பிஜேபி கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்ற தீவிரம். இதில் இந்து அமைப்பினரைத் தாக்கினால், ஜெயலலிதாவின் மீது பிஜேபிக்கு கோபம் வரும், கர்நாடகா-தமிழகம் இணைப்பை ஏற்படுத்தினால், மத்தியிலிருந்தும் அழுத்தம் வரும், அதே நேரத்தில் கர்நாடக தேர்தலில், பிஜேபியை தூக்கி விடலாம் என்ற திட்டத்தில் செயல்படுவது போலத்தான் தெரிகிறது. மேலும், குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், செய்த குற்றத்தை மறுபடியும் செய்யும் போக்கு, பல இடங்களில் இருப்பது போல அலிபி உண்டாக்கும் தந்திரம் முதலியவை இவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆக ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது என்பது தெளிவாகிறது.

கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்: கர்நாடகத்தில் மதப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் ஜாதிப் பிரசினையை எடுத்துக் கொண்டு விளையாடி உள்ளது. இதனால், ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார். எடியூரப்பாவின் நண்பரான கருணாநிதியும் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் இதில் மிக்க கவனமாக செயல்படுவதை காணலாம். ஆகவே, ஒருவேளை கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற யேஷ்யத்தில் காங்கிரஸ் உள்ளது. எடியூரப்பாவை சரி கட்டினது மாதிரி, பெங்களூரில் நடக்கும் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்தால், பதிலுக்கு கூடணிக்கு வந்து விடலாம் என்ற கணக்கிலும் காங்கிரஸ் உள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013

முஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்!

ஓகஸ்ட் 6, 2012

முஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்!

இந்திய ஜிஹாதியும், உள்துறை அமைச்சகமும்: மத்திய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்ற முதல் நாளிலேயே – அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியன்றே – அவரை ஜிஹாதி தீவிரவாதம் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் ஐந்து குண்டுகளை வெடிக்க வைத்து வரவேற்றுள்ளது மற்றும் மத்திய அரசை அதிர வைத்துள்ளது[1]. தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது என்று அவர் கருதுவாரா அல்லது சிதம்பரம் போலவே பேசிவிட்டு மௌனமாகிவிடுவாரா என்று பார்க்கப் போகிறோம். சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு-ஐந்து வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.

 

காங்கிரஸும் முஸ்லீம்களும், ஓட்டுவங்கியும்: உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் சாதாரணமாக நடந்தன. முஸ்லீம்களிடம் எருக்கமாக இருந்து, ஓட்டுவங்கியைக் காப்பாற்றி வந்ததல், தீவிரவாதத்தைப் பற்றி ஒன்றும் பெரிதாகக் கவலைப்படவில்லை[2]. மகன் கார்த்திக் வெளிப்படையாக முஸ்லீம்கள் எல்லோரும் காங்கிரஸில் வந்து சேர வேண்டும் என்று அழைப்பு வேறு விடுத்துக் கொண்டிருந்தார்[3]. ஆகையால் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாளிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

 

மத்திய உள்துறை அமைச்சர் தான், பயந்து திரும்பச் சென்று விட்டார் என்றால், மாநில உள்துறை அமைச்சர் ஜாலியாக இப்தர் பார்ட்டியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

(From left) Minister of state Smt. Fauzia Khan, Home Minister R.R. Patil and Hasan Mushrif during the Iftar Party organised by Labour Minister Hasan Mushrif  at Islam Gymkhana (1.8.2012)
(Courtesy : Department of Information and Public Relations, Maharahstra Government)

 

குண்டு வைத்தது இந்துக்களா, மாவோடிஸ்டுகளா, முஸ்லீம்களா: ஊடகங்கள்வழக்கம் போல திசைத்திருப்ப குண்டுகள் வைத்தது, இந்துக்கள், மாவோயிஸ்ட்டுகள் என்று கேள்விக் குறியோடு செய்திகள் வெளியிட்டன.

 

புனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா?

Inneram.com – ‎2 ஆக., 2012‎

புனே: புனேயில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர். புனே குண்டுவெடிப்பு பற்றிக் கருத்து தெரிவித்த மத்திய அரசு, இதில் தீவிரவாதச் செயல் இல்லை என்று கூறியிருந்தது.

புனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவா …

Oneindia Tamil – ‎2 ஆக., 2012‎

 புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் மகாராஷ்டிரா 

 

 

ஆனால், இந்திய முஜாஹித்தீன் தான் பின்னணியில் இருக்கிறது[4] என்றவுடன் வழக்கம் போல அமைதியாகி விட்டன[5]. திஹார் ஜெயிலில் இருக்கும் ஜிஹாதிகளிடம்[6] விசாரணை செய்தபோது கிடைத்த விவரங்களை[7]  வைத்துக் கொண்டு, ஆராய்ந்ததில், புதிய சைக்கிள்கள் உபயோகப்படுத்தியது, வெடிக்காக குண்டுக்சளை ஆராய்ந்தது முதலிவற்றில் தெரிய வந்தது.

 Anti-Terrorism Squad (ATS) on Saturday raided the houses of suspected Indian Mujahideen activists Shaikh Altaf and Shaikh Ramzan in Bijapur in connection to the Pune blasts[8].  Preliminary investigations into the blasts indicate that the modus operandi used in the blasts is similar to that of the Indian Mujahideen. Sources said the IEDs contained shrapnel in a metal container, a paste of ammonium nitrate in oil, a nine-volt battery and a wrist watch as timer. Initial reports suggest they didn’t work properly because of dampness[9].No arrest or detention has been made in the Pune blasts so far. Four low-intensity explosions took place in the busy J M Road area in Pune on August 1. Union Home Secretary RK Singh had earlier said there was definitely a plan behind the low-intensity blasts, and added that the unexploded IEDs are being investigated thoroughly.

 

இந்திய முஜாஹித்தீன் உறுப்பினர்களான செயிக் அட்லப் மற்றும் செயிக் ரம்ஜான் வீடுகளில் ATS சோதனையிட்டனர். IEDயின் உபயோகம் – உலோக பாத்திரம், அம்மோனியம் நைரேட் பேஸ்ட், பேட்டரி, டைமர் முதலியவை இந்திய முஜாஹித்தீனின் வேலையைக் காட்டுகிறது என்று போலீஸார் எடுத்துக் காட்டுகிறார்கள். வெடிக்காத இரண்டு குண்டுகளைக் கைப்பற்றி, ஆராய்ந்ததில் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பாலிஹுட் நடிகர்கள் சல்மான்கான், சஞ்சய்தத் முதலியோரும் இப்தர் பார்ட்டிகளைக் கொண்டாடியுள்ளனர். சோனியா காந்தியும் தனது தொகுதியில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

 

வேதபிரகாஷ்

06-08-2012


[5] The investigators have ruled out the possibility of Maoists or Hindu fringe groups being responsible for the four blasts and two unexploded IEDs, sources said.