Archive for the ‘ஆப்கானிஸ்தான்’ Category

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?

நவம்பர் 14, 2015

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?

Hasan Suroor caught in pedophile case, arrested

Hasan Suroor caught in pedophile case, arrested

 ஹசன் சுரூர் லண்டனில்பிடோபைல்குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய்துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.

As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu

As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu

14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானேபிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது?: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5].  இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது.  பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Marx, Lenin, Mao- trinity of Communism

Marx, Lenin, Mao- trinity of Communism

பிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.

Hasan Suroor - Muslim apologetic columnist supporting IS

Hasan Suroor – Muslim apologetic columnist supporting IS

பிடோபைல்கள் மேனாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.

Hasan Suroor - Muslim apologetic columnist

Hasan Suroor – Muslim apologetic columnist

செய்தியாளர்கள் செய்யும்ஸ்டிங் ஆபரேஷனில்பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.

Beef eating party politics- good or bad

Beef eating party politics- good or bad

இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it? புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்?’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேறுவிதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

ஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்?: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில்,செக்யூலரத்துவம்என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

14-11-2015

[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1385051

[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.

[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST

[5] http://in4india.in/news/Other-News/2015/11/indian-journalist-arrested-in-london

[6] http://www.huffingtonpost.in/2015/11/11/hasan-suroor-video_n_8529978.html

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7869057.ece

[8] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Indian-origin-journalist-Hasan-Suroor-arrested-in-UK-on-paedophilia-charges/articleshow/49756604.cms

[9] http://marudhang.blogspot.in/2014/03/blog-post.html

[10] Hasan Suroor, Modi, fauxsecularists and Muslims, September 22, 2014 Last Updated at 21:46 IST.

[11] http://www.business-standard.com/article/opinion/hasan-suroor-modi-faux-secularists-and-muslims-114092201238_1.html

[12] http://www.thehindu.com/opinion/op-ed/narendra-modi-and-ties-with-muslims/article7114109.ece

[13] http://www.thehindu.com/opinion/op-ed/comment-article-islamic-difference-and-radicalisation/article6760854.ece?ref=relatedNews

[14] http://www.ibnlive.com/news/india/narendra-modi-not-welcome-image-on-uk-parliament-photoshopped-1162875.html

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

திசெம்பர் 7, 2014

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

முஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2].  திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

வழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்?: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7].  இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

தி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

ரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 - The Hindu

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 – The Hindu

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].

Babri-5th

Babri-5th

டிசம்பர் 6ம் தேதிபீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].

© வேதபிரகாஷ்

07-12-2014

[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST

[2] On Tuesday (02-12-2014), the judge passed orders on two petitions filed by S Elumalai and K Balu, office bearers of Hindu Munnani. The Madras high court has rejected a petition which sought denial of permission for Muslim organisations to stage protests against demolition of Babri Masjid on Saturday (06-12-2014). Muslim organisations have been holding anniversary meetings and rallies across the country ever since the masjid was brought down on December 6, 1992.

[3] They challenged the police refusing them permission to hold demos at Thiruvennai Nallur and Villupuram on December 6 demanding a Ram temple at the disputed site in Ayodhya. The Villupuram police submitted that the places where the petitioners want to hold demonstration are highly congested. But the petitioners said that they were prepared to shift the time and venue if needed. Disposing of the petitions, the Judge said that the first petitioner may shift the venue of demonstration at Thiruvennai Nallur to the place suggested by the police, who shall permit to hold a demonstration at the new venue, subject to reasonable restrictions.

[4] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Muslim-Outfits-Can-Stage-Demo-on-Dec-6/2014/12/04/article2554298.ece

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/Cant-deny-nod-for-Babri-protest-HC/articleshow/45367930.cms

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121307

[7] தமிள் ஒன் இந்தியா, பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், Posted by: Mayura Akilan Updated: Saturday, December 6, 2014, 17:53 [IST], Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[8]http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/12/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF/article2558998.ece

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[10] http://www.thehindu.com/news/cities/Hyderabad/babri-masjid-demolition-anniversary-passes-off-peacefully-in-hyderabad/article6668051.ece

[11] Thousands of citizens under the banner of Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) party took out a rally through major streets of Raichur and staged demonstration outside the office of the Deputy Commissioner, to observe the 22nd anniversary of Babri Masjid demolition as Black Day. They raised slogans against Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure. They also raised questions about the then Prime Minister P.V. Narasimha Rao for allowing the “historical crime” to take place.

http://www.thehindu.com/news/national/karnataka/citizens-in-raichur-observe-black-day-on-anniversary-of-babri-masjid-demolition/article6668083.ece

[12] http://www.jansatta.com/photos/entertainment-gallery/22nd-anniversary-of-babri-masjid-demolition-demonstration-in-india/7876-3/

[13] http://twocircles.net/2014dec06/1417885117.html#.VIObYPmSynU

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131898

[15] https://islamindia.wordpress.com/2013/12/07/december-6-a-day-of-remembrance-or-terror-induement/

[16] https://islamindia.wordpress.com/2013/12/09/december-6-fake-calls-of-bombing-temples-cannot-be-brushed-aside/

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை!

செப்ரெம்பர் 6, 2013

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை!

Indian diarist Sushmita Banerjee shot dead in Afghanistan

இந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[2].

Escape from Taliban-novel-film

சுஷ்மிதா பானர்ஜி, என்ற சையது பானர்ஜி கொலை செய்யப்பட்ட விதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[3]:

  • கணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.
  • தலைமுடியை பிடுங்கியது[4] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.
  • 20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் காட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.
  • இத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி கொலை செய்யப்பது ஏன்?: கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா பானர்ஜி, 49. சையது பானர்ஜி என்கின்ற இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் ஜான்பாஸ் கானை, 1989ல், திருமணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். இந்திய பெண் என்பதால், இவர் பர்தா எதையும் அணியாமல் நடமாடி வந்தார். இதனால், தலிபான்கள் இவரை மிரட்டினர். இவர் தன் வீட்டில் சுகாதார மையம் ஆரம்பித்து, சேவையாற்றி வந்தார். இதையும் மூடும் படி தலிபான்கள் எச்சரித்தனர். தலிபான்களின் உத்தரவை இவர் மதிக்காததால், ஒழுக்கம் தவறிய பெண்ணாக இவரைச் சித்தரிக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் அவரை, நாட்டை விட்டுத் துரத்த முயன்றனர். இதற்காக ஒரு முறை இவரைச் சிறை பிடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர்[5]. இதையெல்லாம் சுஷ்மிதா, கட்டுரையாக எழுதியுள்ளார்.

Susmita Banerjee (seated left) and actress Manisha Koirala in Ladakh when the film Escape from Taliban was shot.

தலிபானிடமிருந்து எந்த பெண்ணும் தப்ப முடியாது: “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[6]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[7]. இவருடைய அனுபவங்கள், 2003ல், “எஸ்கேப் பிரம் தலிபான்’ என்ற, இந்திப் படமாகத் தயாரிக்கப்பட்டது. இவருடைய வேடத்தில், நடிகை மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். தலிபான்களின் கெடுபிடிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் வழியாக இவர் தாயகம் தப்பி வந்தார். தலிபான் ஆட்சி முடிந்ததால், மீண்டும் ஆப்கான் சென்று கணவருடன் வசித்து வந்தார். இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[8].இருப்பினும், தலிபான்கள் இவரை மறைமுகமாக மிரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இவர் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள், சுஷ்மிதாவின் கணவரைக் கட்டிப் போட்டு விட்டு, இவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாகச் சுட்டனர். பின், அங்கிருந்த இஸ்லாமியப் பள்ளியில் இவரது சடலத்தைப் போட்டு விட்டு ஓடி விட்டனர்[9].

Taliban executed Sayeed Banerjee

முஸ்லிம் கணவன் தன்னை ஏமாற்றியது: கல்கத்தாவில் ஜான்பாஸ் கானை சந்தித்து பிறகு கல்யாணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, சையது பானர்ஜி ஆனார். ஆனால், ஆப்கானிஸ்தானிற்குச் சென்றபோது தான் கணவருக்கு ஏற்கெனவே குல்குடி என்ற ஒரு மனைவி, குழந்தைகள் எல்லோரும் இருக்கின்றனர் என்ற விவரங்கள் தெரியவந்தன. அவரது பெற்றோர்கள் எப்படியாவது, விவாக ரத்து செய்து கொண்டு மகளை மீட்கவேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால், சுஷ்மிதா பானர்ஜி, கணவரின் மீது இரக்கம் கொண்டது மட்டுமல்லாது, அக்குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். பிறகு டின்னி என்ற தனது மைத்துனரின் மகளை தத்து எடுத்துக் கொண்டார்[10]. மாறக கணவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. கர்ஸாய் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும், தலிபான்கள் “பெண்கள் இருக்கும் இடம் பாவங்களின் உறைவிடம்” என்று தான் பறைச்சாற்றிக் கொண்டு வருகின்றனர், அவர்களுக்கு தண்டனை என்று கொன்றும் வருகின்றனர்[11].

Ms Banerjee wrote a best-selling memoir about her life in Afghanistan

முஸ்லிமை கல்யாணம் செய்து கொண்டு, முஸ்லிம் ஆனாலும், பெண்கள் அடிமைகள் தாம்: இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருப்பதினால் தான், முஸ்லிம்கள் மற்றவர்களை ஏமாற்றி வருகின்றனர். பயந்து கொண்டுதான், முஸ்லிம்களைப் பற்றி உண்மையை சொல்லாமல் இருக்கின்றனர். இஸ்லத்தைப் பொறுத்த வரையில், பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக வர முடியாது. அவ்வாறு நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்பொழுதைய நவீன காலத்தில், மேனாட்டு சித்தாந்திகள், அறிவுஜீவிகள் முதலியோரை ஏமாற்றுவதற்காக, சில பெண்களை, ஏதோ முனேற்றம் அடைந்து எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்டதைப் போல காட்டிக் கொள்வர், பிறகு கொல்வர். ஆமாம், இறப்பு தான் பெண்ணிற்கு சிறந்த, உன்னதனமான நிலை, முடிவு. இதனால் தான், பெண்-ஜிஹாதிகள் உக்கிரமாக, தீவிரமாக, பயங்கரமாக செய்ல்பட்டிருக்கிறார்கள். இது முஸ்லிம் பெண்களைப் பற்றிய இரண்டு நிலைகள். முஸ்லிம் அல்லாத பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவள் அடிமையைவிட கீழ்த்தரமாக நடத்தப் படுவாள். அதுதான் வளைகுடா நாடுகளில் நடந்து வருகிறது. இடைக்காலத்து ஹேரம் என்ற முறை, இப்பொழுது இவ்விதமாக செயல்பட்டு வருகிறது. காபிர்களான பெண்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் முஸ்லிம்களுக்கு அர்பணித்துவிட வேண்டியது தான். சாவுதான் அவளுக்கு அத்தகைய குரூரங்களினின்று விடுதலை கொடுக்கும்.

execution of women by Taliban

இவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.

© வேதபிரகாஷ்

06-09-2013


[3] “We found her bullet-riddled body near a madrassa on the outskirts of Sharan city this morning,” provincial police chief Dawlat Khan Zadran said, confirming earlier reports from Indian media. “She had been shot 20 times and some of her hair had been ripped off by the militants,” he said, adding that masked men had tied up the writer and her Afghan husband, local businessman Jaanbaz Khan, before executing her.

http://www.abc.net.au/news/2013-09-06/taliban-sushmita-banerjee-afghanistan-indian-authors/4939634

[6] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-diarist-Sushmita-Banerjee-shot-dead-in-Afghanistan/Article1-1117939.aspx

[11] Banerjee’s execution does not bode well for Afghanistan’s women, especially when their empowerment under the Hamid Karzai regime was held up as one of the greatest successes of the Nato coalition forces. Human rights groups operating in Afghanistan and abroad say that a string of laws passed by the parliament will expose women to extreme forms of abuse. The Islamists have been demanding shutting down of women’s shelters which they describe as “dens of immorality”.

http://timesofindia.indiatimes.com/india/Indian-author-Sushmita-Banerjee-executed-in-Afghanistan-by-Taliban/articleshow/22349517.cms

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

ஏப்ரல் 24, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

Bangalore blast - graphical figure

அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர்.  ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:

 

PM condemns Boston bombings

The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.

The text of PM’s message is as follows:

“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.

The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.

The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.

Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack.

 

17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:

PM condoles the loss of lives in the earthquake in Pakistan

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.

Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”

 

 

அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:

PM condoles the loss of lives in Iran earthquake

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.

Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.

The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.

We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.”

 

அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:

 

PM greets people on the occasion of Ram Navami

The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.

In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.

We should  renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
 

 

ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.

Manmohan-tweets-not-for-India

இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.

Rahul in party mood during Mumbai attack2

வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Rahul in party mood during Mumbai attack

எப்.பி..யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில்  சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும்.  எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?

ied-cutout01

மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

IED - cycle bombs placed - locations

மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12].  இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.

manmohan-singh-scam

சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

23-04-2013


[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.

[10] Chiding the BJP government for its alleged role in illegal export of iron ore, Gandhi said, “your iron ore is being sold to China and they (BJP government) are earning crores of Rupees.” ….”But this (resource) is yours. Steel factories should be established here. It is steel which should go to China. Instead they are looting this (iron ore) to sit in Vidhan Sabha”.

http://timesofindia.indiatimes.com/india/BJP-has-looted-Karnataka-Rahul-Gandhi/articleshow/19694585.cms

[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஏப்ரல் 23, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

boston-marathon-suspects

குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.

Boston bomber - a believer of Islam

தேசபக்திநாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tamerlan Tsarnaev as a boxer

பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.

Boston-Marathon-bombing-suspect-No.-2-in-crowd

வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

boston-marathon-bombing-injuries-hard-to-treat-shrapnel

கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Location of boston_marathon bombings

தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.

Boston bomber - hiding in a boat aerial view

சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.

Boston-marathon-bombing-suspect-dzhokhar-tsarnaev-captured

விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

boston blast victim a woman

குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

1)       April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2)   April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.

3)   April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.

4)   April 18, shortly thereafter – SUV driver released unharmed.

5)   April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.

6)   April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.

7)   April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;

Dzhokhar is found hiding in a stored boat and taken into custody.

இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும்  பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

வேதபிரகாஷ்

22-04-2013


[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html

[5] தினமலர், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2013,07:49 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2013,08:55 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694915

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

மார்ச் 3, 2013

பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப்முகர்ஜி மாமாமச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

நமது இந்திய அரசியல்வாதிகளின் போக்கே அலாதியாக இருக்கிறது. முன்பு, டிசம்பரில் சுனாமி வந்தபோது, ஐந்து நசத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். 26/11 அன்று ராஹுல் காந்தியே ஏதோ பார்ட்டியில் இருந்து, அடுத்த நாளில் பாராளுமன்றத்தில் வந்து உளறியிருக்கிறார்.

இப்பொழுது, பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப் முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

Pranab visits Bangladesh 2013

பிரணாப் வரவை எதிர்பார்த்து சதார் உபசிலா மாவட்டத்தில் இருக்கும் பத்ரபிலா கிராமமே விழாகோலத்தில் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடைய மாமனா அமரேந்துரு கோஷுடைய வீடே 1971 கலவரத்தில் இடித்து விட்டார்களாம்!

பக்கத்தில் இருந்த கோவிலும் அதோகதி!

ஆனால், இப்பொழுது இவர் வருகிறார் என்பதால், அவ்வீடு புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாம்!

இங்கு சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருப்பாராம்!

Pranab visits Bangladesh 03-03-2013

21 துப்பாக்கி குண்டு முழக்கம் !

சிவப்புக்கம்பள விரிப்பு !!

ஆர்பாட்டமான வரவேற்பு !!!

டாக்டர் பட்டம் வேறு கொடுக்கிறார்களாம்!

பிறகென்ன இருதரப்புப் பேச்சு?

உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு மதமோ, எல்லையோ இல்லை என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், பிரணாப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை, வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தன.

அங்கு வங்கதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் அளித்த பேட்டியில், “பயங்கரவாதத்துக்கு மதமோ, எல்லையோ இல்லை. ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதும் மனிதகுலம் மீதும் தாக்குதல் நடத்துவதுதான் பயங்கரவாதத்தின் குறிக்கோள்“, என்று பேசியுள்ளது வேடிக்கைதான். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்“, என்றார் பிரணாப். ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இதர இஸ்லாமிய அடிப்படைவாதம்-தீவிரவாதப் பிடிகளில், இஸ்லாமிய நாடாக இருந்து வரும் பங்களாதேசம் எப்படி பங்களிக்கும் என்று தெரியவில்லை.

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

ஓகஸ்ட் 20, 2012

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].

The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[2]
The country belonged to all and people are free to live in any part of the country[3]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[4]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[5]

அதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்?

அவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?

இருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே?

ஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை?

சோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்?


கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

ஓகஸ்ட் 17, 2012

கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

காங்கிரஸின் மெத்தனப் போக்கு: குஜராத் அல்லது கர்நாடகம் இப்படி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், தேசிய தலைப்புச் செய்திகளாக மாறி வருவது வழக்கமாகி விட்டது. இப்பொழுது, அதனுடன், மின்னணு வதந்தியும் சேர்ந்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் முதலிய இணைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற போக்கில் கண்டபடி பொறுப்பில்லமல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்து வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர். அரசு, அதிகாரிகள், புலனாய்வுத் துறை முதலியோர் அத்தகைய விஷமிகளைக் கண்டுபித்து தண்டிக்காமல் அல்லது அவர்களுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். அதிலும் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலம், அதிலும் பி.ஜே.பி என்றால் சொல்லவே வேண்டும், காங்கிரஸ் சந்தோஷமாகத்தான் இருக்கும்.

மின்னணு கலவரத்தைத் தூண்டும் அமைதியைச் சீர்குலைக்கும் பொய்மைப் பிரச்சாரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் வதந்திகளை வைத்துக் கொண்டு, ஆனால் திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்கள் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இப்பொழுது மஹாராஷ்டிரத்தை

வடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்,  கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்து கர்நாடகம் என்ற முறையில், இன்னொரு பிரச்சாரத் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காரணம் செல்போன்களில் வதந்திகளைப் பரப்பி விட்டதுதானாம்! வழக்கம் போல, அரசு எந்திரங்களுக்கு, இதைப் பற்றி தெரியும்-தெரியாது என்று முரண்பாடாகச் சொல்ல ஆரம்பிப்பர். ஆனால் உண்மையென்னவென்றால், அத்தகைய விடியோவை பரப்ப விட்டது யார் என்பதனை அரசு தெரியப்படுத்த வேண்டும்.

கலவரங்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் மற்ற மாநிலங்களை ஏன் குறைகூற வேண்டும்: கர்நாடகத்தில் பீதியைக் கிளப்பி மாணவர்களை அசாமிற்கு அனுப்பத்தூண்டியவர்கள், அங்குள்ள நிலைமையினையும் அறிந்து கொள்ளவேண்டும். நேற்றுவரை அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மத்திய அல்லது மாநில அரசுகள் ஒன்றும் தடுத்துவிடவில்லை. மாறாக முழு செய்திகள் வரவிடாமல் தடுத்து வருகின்றன.

ஆகஸ்ட் 15/16, 2012: அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.  வன்முறையை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். கலகக்காரர்கள், பஸ் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப் படுத்தும் வண்ணம், தமுல்பூர் மற்றும் பக்ஷா பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப் பட்டுள்ளனர். முன்னதாக நடந்த வன்முறையில் சி்க்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலத்தோர் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் நேற்று திடீரென பரவ ஆரம்பித்தது. மும்பைப்போலவே பொய்யான வீடியோக்களும் பரப்பப் பட்டன. ஆனால் போலீஸார் எந்த விவரங்களையும் கொடுக்காமல் இருக்கின்றனர்.

பெங்களூரில் தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அப்படி சொல்வதை விட நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்கள் மனங்களில் நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்குமே?

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து. இதையெல்லாம் அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலம் தாழ்த்துவது ஏன் என்று மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

அரசியல் செய்து வரும் மத்திய அரசு: தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.  இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார். இப்படியெல்லாம் மும்பை கலவரத்தின் போது பேசிக் கொண்தார்களா? ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள்? முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே? கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே? அதேநிலைதான் இங்கும் உள்ளது. எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு, இருப்பினும் பரபரப்பு அடங்கவில்லை என்று தெரிகிறது என ஊடகங்கள் சந்தோஷிக்கின்றன.