Archive for the ‘எல்லீசர்’ Category

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

ஜூன் 28, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களாஇல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

Voltaire appreciated Vedas

போலிஏஸுர் வேதம்உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி?: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன? அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[2].

Ezourvedam - Ludo Rocher

யஜுர் வேதம்மற்றும் யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda]: “யஜுர் வேதம்” [Yajur Vedam] நான்கு வேதங்களில் ஒன்று என்பது அறிந்த விசயமே, இருப்பினும், கிருத்துவர்கள், தங்களது “ஏசு கட்டுக்கதை”யின் படி, 18 [12 முதல் 30 வரை] வருடங்கள் காணாமல் போயிருந்த போது, இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையினை உருவாக்கினர். அந்நிலையில் அவர் போதித்தது தான் “யஸூர் வேதம்” [Yasur Veda] என்று சொல்லி, அதனை பலவாறாக, ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிட்டனர். “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda] என்றெல்லாம் குறிப்பிட்டு குழப்பினர். எல்லீஸும் இதில் குழம்பிபோனதில் ஆச்சரியம் இல்லை. மச்சிலிப்பட்டனத்தில் நீதிபதியாக இருக்கும் போது, ஒருவேளை, அத்தகைய யஸுர் வேதத்தைத் தயாரித்திருக்கலாம். சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். இங்கு, “பாதிரி எல்லிஸ்” [“Fr. Ellis”] என்றிருப்பதால், இவர் பாதிரியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது, என்றதும் ஏற்கெனவே சுட்டிக்கட்டப்பட்டது.

How Ezour Vedam was manufactured by the Christian missionaries

போலி வேதங்கள் எத்தனை இருந்தன?: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா? எல்லீஸ் அதை பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தார் என்றுள்ளது. ஆனால், 1822 வரை அது வெளியிடப்படவில்லை, எச்.எச்.வில்சன் அறிக்கையிலும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது, இன்னொரு குறிப்பில், எல்லீஸ் தென்னிந்திய மற்றும் ஈப்ரூ மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை ஆய்ந்ததாக உள்ளது. மேலும், இலங்கையின் தலைமை நீதிபதி சர். அலெக்சாந்தர் ஜான்சன், எல்லீஸிடம் பாரிஸில் அச்சடிக்கப் பட்ட ஏசுர் வேதம் புத்தகத்தைக் கொடுத்தார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளில், ஒன்றல்ல, மற்ற மூன்று போலி வேதங்களின் பிரதிகளும் இருந்தன என்றுள்ளது[3]. அதாவது, இத்தகைய போலி வேதங்களை அதிகமாகவே உருவாக்கியுள்ளனர் என்றாகிறது.

ezoure-Vedam - Jean Calmette and Ludo Rocher

போலிஏஸுர் வேதம்மிஷினரிகளை உலுக்கியது ஏன்?: லுடோ ரோச்சர் “ஏஸுர் வேதம்” உருவாக்கப்பட்டத்தில், மூன்று நிலைகள் / காலங்கள் உள்ளதாக விளக்குகிறார்[4].

போலிஏஸுர் வேதம்உண்டாக்கப் பட்ட காலம் யார் உருவாக்கியிருக்க முடியும்?
முதல் கட்டம் – 1760-1782

இரண்டாம் கட்டம் – 1782 – 1822

மூன்றாம் கட்டம் – 1822லிருந்து

ராபர்டோ டி நொபிலி Roberto de Nobili
ஜீன் கால்மெட் Jean Calmette
அன்டோய்ன் மொசாக் Antoine Mosac
மற்ற மிஷினரிகள் Other Missionaries
மெர்ரி மார்டீன் Pierre Martin
மதம் மாறியவர் New converts

ezoure-Vedam published in French-vol.I and II

சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். ராபர்ட் டி நொபிலைப் பற்றி முதன் முதலில் 1822ல் குறிப்பிட்டவர் எல்லீஸ் தான். பொதுவாக அவர்தான், முதன் முதலில் அத்தகைய மோசடி வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால், எல்லீஸ்ஸின் கட்டுரையே, பல போலி கையெழுத்துப் பிரதிகள் இருந்ததை வெளிக்காட்டியது[5]. லௌவினன் [Lauuenan] என்பவர், “ஏஸுர் வேதத்தின்” மூலம் [சமஸ்கிருத ஓலைச்சுவடி] காணாமல் போனதற்கு காரணம் எல்லீஸ் தான் காரணம் என்றார். 1816ல் பாண்டிச்சேரி நூலகத்திலிருந்து, அப்பிரதி எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது திரும்பக் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கேஸ்டெட்ஸ் [Castets] மறுத்தார். எல்லீஸ் தனது கட்டுரையில், அந்த போலி ஏஸுர் வேதம் கையெழுத்துப் பிரதி சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இருந்தது. மொழி பெயர்த்தவர் மற்றும் மூலத்தை எழுதியவர் ஒன்றே என்றும் கூறினார்[6].  அதாவது கத்தோலிக்க  ஜெசுவைட் மிஷினரிகளை குற்றஞ்சாட்டினார்[7]. இதனால், ஹோஸ்டன் [Hosten, 1921: 499] ஜெசுவைட்டுகளைப் பற்றி அவதூறு பேசியதில் எல்லீஸ் தான், முக்கியமான ஆளாக இருந்தார், என்று கோபத்துடன் கூறினார். எல்லீஸ் ஒரு புரொடெஸ்டென்ட் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், தமது வித்தியாசத்தை, சண்டையை மறைக்க, இவ்விசயத்தில் ஜாதிப்பிரச்சினையை நுழைத்தனர். அதுதான், போப்பை ஐயராக்கியது, ஆனால், வள்ளுவரை  பறையன் ஆக்கியது.

Pope Iyer - usage by Tamil writers

போப் ஐயர்என்று சொல்லும் போது, “போப் பறையர்ஏன்று ஏன் சொல்வதில்லை?: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை! ஆனால், அவனை கொல்வதற்கு ஒரு ஐயர் வேண்டும், ஆனால், மோசடியில் வல்லவர்களான அவர்கள், நாமத்தைப் போட்டு மாட்டிக் கொண்டனர். இதெல்லாம் தெரிந்தும்-தெரியாத தமிழ் வல்லுனர்கள், “போப் ஐயர்” என்று இன்று வரை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி வருகின்றனர்[8]. ஆனால், “போப் பறையர்” என்று ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று யாரும் கேட்பதில்லை. மேலும் “ஐயர்” எனும்போது, ஐயங்கார், முதலியார், பிள்ளை, வேளாளர் என்றெல்லாம் கூட உபயோகப் படுத்தியிருக்கலாம். இது “பார்ப்பனீயம்” என்று கூட யாரும் எதிர்க்கவில்லை. இது பார்ப்பன ஆதரவா, எதிர்ப்பா என்றும் புரியவில்லை. அதாவது, ஜாதிப்பிரிவினை உண்டாக்கவும் அத்தகைய முயற்ச்சிகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றாகிறது. அந்நிலையில், தாமஸ் ட்ரௌட்மேன், எல்லீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் ஆரிய-திராவிட பிளவுதான், பிறகு, 20ம் நூற்றாண்டில் பிராமணர்-பிராமண விரோத போக்காக மாறியது என்று எடுத்துக் காட்டுகிறார்[9]. பிராமண விரோத போக்கு, பிராமண-எதிப்பாக இருப்பதற்கான வழிமுறை, கால்டுவெல்லின் சித்தாந்தம் மூலம் பெறப்பட்டது என்று, வி.ரவீந்திரன்[10], நிக்கோலஸ் டிக்ஸ்[11] போன்றோர் விளக்கம் கொடுக்கின்றனர். இவ்வளவு விவகாரங்கள் இருக்கின்ற நிலையில் தான், பித்தம் பிடித்த, இந்துத்துவவாதிகள், அறக்கட்டளை உருவாக்கி, போலி புத்தகங்களை உண்டாக்கிய எல்லீஸைப் போற்றி, விழா எடுத்து, வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்துள்ளனர். பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்ட மோசடி பேர்வழி, எல்லீஸ் பெயரில், வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்த இந்துத்துவவாதிகளை என்ன செய்வது?

© வேதபிரகாஷ்

27-06-2017

Nobili Lost Veda fraud

[1] Ezour Védam arrives in France in 1731. It is sent by the Abbot Bazin and is destined to the library of the king. The Knight of Maudave, returning from India, visits Voltaire in 1760 and offers him his copy of the Ezour Vedam . The text is presented to Voltaire as an excerpt from the Veda translated into French by Father Martin, a former Jesuit missionary from Pondicherry. Maudave expresses doubts as to the quality of Father Martin’s translation. In 1761, Voltaire read the manuscript handed over by Maudave and prepares a new chapter entitled “Bracmanes, Vedam, and Ezourvedam” for the second edition of the Essay on Morals .

[2]  Peter R. Bachmann, Fr. Ellis: Account of a Discovery of a modern imitation of the Vedas with Remarks on the genuine works, Asiatic Rsearches, Vol.14, 1882, pp.1-59.

[3] Prodosh Aich, Lies with Long Legs: Discoveries, Scholars, Science, Enlighent Documentary, Samskriti, New Delhi, 2004

[4] Ludo Rocher (Ed.), Ezourvedam: A French Veda of the Eighteenth Century, John Benjamins Publishing Company, Philadelphia, 1984.

[5] In this dissertation, Ellis describes eight manuscripts of the same type as the Ezour Vedam , called “pseudo-Vedas,” found in the library of the Jesuit missionaries of Pondicherry, and having in the conversion business by accomodatio .

[6] Ellis, Francis Whyte, “Account of a Discovery of a Modern Imitation of the Vedas“, in Asiatic Researches , vol. 14, London, printed for J. Sewell et al., 1822, p. 1-49.

[7] The posthumous publication of the article by Francis Whyte Ellis on the manuscripts in deposit in the library of the Jesuit missionaries of Pondicherry. Ellis proves in this article that it is not a Vedic text but the work of Jesuit missionary Roberto de Nobili written in 1621 for conversion purposes. Ellis visits the library of the Capuchins and discovers the “pseudo-Vedas”. He considers the Ezour Vedam and the other pseudo-Vedas as dangerous counterfeits which were intended to shake the Hindu religion without succeeding in substituting it for Christianity.

[8] http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=306&pno=116

[9] In his book, Tom Trautmann suggests that the Aryan-Dravidian contrast `revealed’ by F. W. Ellis and his Tamil assistants in the early nineteenth-century was later resignfied as a Brahmin/non-Brahmin opposition, and in that form contributed to the non-Brahmin movement in the early twentieth-century.

Trautmann, Thomas R.. Aryans and British India. Berkeley: University of California Press, 1997, pp.221-222

[10] Ravindran, V. 1996. `The unanticipated legacy of Robert Caldwell and the Dravidian movement‘. In South Indian Studies, Vol. 1, pp.83-110.

[11] Dirks, Nicholas. 1995. The conversion of caste: location, translation and appropriation. In Conversion to Modernity, ed. Peter van der Veer, pp. 115-136. London: Routledge

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

ஜூன் 27, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

Temple parts kept in thomas museum, Mylapore

ஜி.யூ.போப்பும், தாமஸ் கட்டுக்கதையும்: போப்பின் புத்தகத்தின் முன்னுரையைப் படித்துப் பார்த்தால், கிருத்துவ மிஷினரிகளின் எண்ணம் புலப்படும். அவர்கள் வள்ளுவர் மற்றும் குறள் மீது ஏன் அத்தகைய ஆர்வம் கொண்டார்கள் என்பதும் வெளிப்படும். ஆனால், தமிழ் பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், தமிழ் ஆசிரியர் முதலியோர், போப்பின் புத்தகத்தை ஒருமுறையாவது படித்தார்களா இல்லையா, குறைந்த பட்சம் முன்னுரையையாவது வாசித்து, விசயங்களை அறிந்தார்களா இல்லையா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லை, படித்தறிந்து தான், இவ்வாறு நடந்து கொள்கிறார்கள், என்றால், அவர்கள் கிருத்துவர்களின் ஏஜென்டுகளாக, இத்தனை ஆண்டுகளாக, செயல்பட்டுக் கொண்டு வந்துள்ளனர், வருகிறார்கள் என்று தெரிகிறது. இனி, போப் சொல்வதைப் பார்ப்போம். “வள்ளுவர் ஒரு பறையர் மற்றும் நெசவாளி. அவர் இன்றைய மெட்ராஸின் புறப்பகுதியான சாந்தோம் அல்லது மயிலாப்பூரில் வாழ்ந்தார். ஏலேல சிங்கன் அவரது நெருங்கிய நண்பர் அல்லது அவரை ஆதரித்தவன். அவன் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தான்,” என்று முன்னுரையில் ஆரம்பித்து[1], அவ்விடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் கிருத்துவர்களுக்கு மிகுந்த அக்கரைக் கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில், அங்குதான் செயின்ட் தாமஸ் போதித்தார், வேலினால் குத்தப்பட்டு, இறந்து, புதைக்கப்பட்டுள்ளார்[2]. இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது,” என்று தாமஸ் கட்டுக்கதையை நுழைத்தார்[3].  இதை அந்த மெத்தப் படித்த தமிழ் வல்லுனர்களுக்கு தெரியாதா?

Bleeding cross- planted by the Portuguese im 1537 CE

ஜி.யூ.போப் தாமஸ் வந்து போதித்து, கிருத்துவ நூல்களை வைத்துதான் திருக்குறள் எழுதினார் என்றது: பிறகு, போப் / போப் ஐயர்[4], திருக்குறள் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது, “மயிலாப்பூர் நமக்கு சாந்தோம் என்றுதான் அறியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்து, இங்கு கிருத்துவ சமூகம் வாழ்ந்து வந்துள்ளது. இங்கு ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றை நாம் காண்கிறோம். இங்குதான் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த பன்டானியஸ் என்பவர் போதித்தார். வள்ளுவர் எல்லா தத்துவங்களையும் தன்னுள் ஈர்த்த கவியாக இருந்திருந்திருந்ததால், அவருக்க்கு ஜைன மதம் பற்றித் தெரிந்திருந்தது, ஜாதிபேதங்களைப் பார்க்காதவராக இருந்தவரதலால் அந்நியவர்களுடன் பழகினார். ஏலேல சிங்கன் நண்பராக இருந்ததால், வெளிநாட்டுக்காரர்கள் வரவு பற்றியும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தனது தோனியிலேயே கூட்டி வந்திருக்கலாம். ஆகையால், நான் சொல்வது என்னவென்றால், கடற்கரையில் இருந்த கிருத்துவ போதனையாளர்களுடன் அவர் இருந்ததை காண்கிறேன்; அவர்களது அலெக்சாந்திரிய தத்துவங்களை போதித்ததையும், வள்ளுவர் உள்வாங்கிக் கொண்டதையும் கவனிக்கிறேன். இவ்வாறு நாளுக்கு நாள் அந்த தாக்கத்தினால், அவற்றை திருக்குறளில் சேர்த்துக் கொண்டார் என்று முடிவுக்கு வருகிறேன்”, என்று முடிக்கிறார்[5]. அதுமட்டும் அல்லாது, உணர்ச்சிப் பூர்வமாக விசுவாசத்தோடு, “இந்த புனித ஸ்தலத்தில், அப்போஸ்தலரின் தியாகப்பணி தங்கியிருக்கிறது. “மலைமீது போதித்த கருத்துகள்” அந்த கிழக்கத்தைய புத்தகத்தில் அடங்கியுள்ளது……..அதனால், நான் குறள் உண்டாவதற்கு கிருத்துவ நூல்களும் மூலங்களாக இருந்தன, என்பதை தயங்காமல் கூறுவேன்,” என்று முடிக்கிறார்[6]. இதைத்தான் எல்லீஸும் சொன்னார். அந்த சந்தோசம்-சாமுவேல்-தெய்வநாயகம் கூட்டமும் சொல்கிறது! இனி வேதங்கள், வேதாங்கமங்கள் இவையெல்லாம் தேவையாயிற்றே?

Plaque put up in 20th cent- Saidapet - Little mount

போப் குறிப்பிடும்தாமஸ் கட்டுக்கதைபற்றிய ஆதாரங்களின் போலித்தனம்: 19ம் நூற்றாண்டில், போப் குறிப்பிடும் “ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றைப்” பற்றி பார்ப்போம்:

1.       ஆர்மீனியன் தெருவில் இருக்கும் ஆர்மீனியன் சர்ச் 1712ல் கட்டப்பட்டது, 1772ல் மாற்றிக் கட்டப்பட்டது.

2.       சைதாபேட்டையில் உள்ள “சின்னமலை” கோவில், 18-19ம் நூற்றாண்டுகளில் ஆக்கிரமித்துக் கொண்டு கட்டப்பட்டது.

3.       பரங்கிமலையில் உள்ள சர்ச், அங்கிருக்கும்பெருமாள் / விஷ்ணு கோவிலை இடித்து 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை அருளாப்பா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4.       மயிலாப்பூர் / சாந்தோம் சர்ச்சும் 1523ல் அங்கிருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

5.       அதேபோல, “லஸ் சர்ச்” என்று அழைப்படுகின்ற சர்ச் 1516ல், அங்கிருக்கும் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

6.       சின்னமலை மற்றும் பெரியமலையில் இருக்கும், கற்சிலுவைகள், போர்ச்சுகீசியரால், 16ம் நூற்றாண்டில் அங்கு வைக்கப் பட்டன.

7.       அந்த “ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு” பற்றி கிருத்துவர்களிடையே ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன, ஏனெனில், அவை 16-17ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. “ரத்தம் சொரிந்த சிலுவை” சுற்றிலும் எழுத்துகள் இருந்தன, இல்லை, பிறகு எழுதப்பட்டது என்று பலவாறான சர்ச்சைகள் உள்ளன. மேலும் ஒன்றிற்கு மேலாக பல சிலுவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதால், அவையெல்லாம் போலி என்று அப்பட்டமாக தெரிந்து விட்டது.

8.      தாமஸால் வரையப் பட்ட சித்திரம், முதலியவற்றை கார்பன் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டால் தேதி தெரிந்து விடும். அதேபோல, ரத்தம் படிந்திருப்பதாக சொல்லப் படும் மாதிரியை, “டி.எச்.ஏ” பரிசோதனைக்கு உட்படுத்தினால், “குளோனிங்” செய்தால், குட்டு வெளிப்பட்டுவிடும். ஆனால், அதை அவர்கள் செய்வதற்கு பயப்படுகிறார்கள். போப் ஏற்கெனவே, இந்த கட்டுக்கதையினை மறுத்து விட்டார்.

How thomas was killed in different countries-myth making

போப் போலித்னமான “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களைக் குறிப்பிட்டதன் பின்னணி: ஆகவே, போப் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே, 1886வது வருடத்தில் வெளிவந்த புத்தகத்தில், இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடவேண்டும் என்று நோக்கத்தக்கது. அதாவது, எல்லீஸ், மகன்ஸி, பச்சனன் முதலியோர் போலி நூல்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். அந்நிலையில், எல்லீஸ், போப் முதலியோர் இத்தகைய போலி அத்தாட்சிகள் உருவாக்குவதில் ஈடுபட்டனர் போலும். அவ்விதத்தில் தான் “திருவள்ளுவர்” நாணயம் வெளிவந்துள்ளது. ஆனால், பிரச்சினையாகும் என்றபோது, அமுக்கி விட்டனர்.  போப் சொன்னதை கவனிக்க வேண்டும், “இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது”, அதாவது, அப்பொழுது, “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடியும் வளர்க்கத் தீர்மானித்தத்து வெளிப்படுகிறது. இந்த எல்லீஸ் கூட்டம் அதில் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.

  1. இங்கு, மேலே நிக்கோலஸ் டிர்க் என்பவர்[7] குறிப்பிட்டதை மறுபடியும், நோக்கத்தது, – “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது.
  2. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன.
  3. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”.
  4. லெஸ்லி ஓர்[8], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது.
  5. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன.
  6. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

ஆகவே, இவர்கள் மிகப்பெரிய அகழ்வாய்வு மோசடி, போலி நூல்கள் உருவாக்கம், கள்ள-ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர திரிபு, புரட்டு மற்றும் மோசடி முதலியவற்றில் ஈடுப்பட்டனர் என்றாகிறது.

Many crosses found prove the forged-manufactured ones

கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் சண்டையில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது: இந்த ஆராய்ச்சிகளில் கிருத்துவ மிஷனரிகளின் [Christian Missionaries] பங்கும் நோக்கத்தக்கது.  இடைக்கால ஆரம்ப காலங்களில் (போர்ச்சுகீசிய வரவுகளில்) ஜெஸுவைட்டுகளின் மூலம் கத்தோலிக்க [Catholic] கிருத்துவ ஆதிக்கம் தான் இந்திய-ஆராய்ச்சிகளில் வெளிப்பட்டது. ஆங்கிலேயர் புரொடெஸ்டென்ட் [Protestant] கிருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.  இதனால், அவர்கள் கத்தோலிக்கர்களை நம்பவில்லை. 1857 முதல் சுதந்திர போர் அல்லது எழுச்சியைக் கூட அவர்களது சதி தான் என்றும் கிருத்துவத்தின் வீழ்ச்சி என்றும் நம்பினர்[9]. புரொடெஸ்டென்ட் கிருத்துவர் “தாமஸ் கட்டுக்கதை”யினை நம்பாதவர் மேலும் எதிர்ப்பவர். அந்நிலையில் எல்லீஸ், கால்டுவெல் முதலிய புரொடெஸ்டென்ட் கிருத்துவர், “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடி எடுத்துக் கொண்டு, பரப்ப ஆரம்பித்ததின் நோக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை”யினை, ஐரோப்பிய-அமெரிக்க கிருத்துவ வல்லுனர்கள் நிரூபித்து, ஒதுக்கித் தள்ளினர்[10].  கிருத்துவத்தின் மீதான பௌத்தத்தின் தாக்கத்தை மறைக்க இந்த கட்டுக்கதையை உருவாக்கியதும் புலப்பட்டது. எல்லீஸ் கும்பலும் அதை ஜைனத்தைத் தூக்கிப் பிடித்தலில் செய்துள்ளது தெரிகிறது. ஆனால், அவர்களது மததுவேஷ, சிக்கல்-சன்டைகளில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது. தமிழ் வல்லுனர்களும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “எல்லீசர்” புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.

© வேதபிரகாஷ்

26-06-2017

Chinna malai forgeries- encroached temple and destroyed

[1] G. U. Pope, The Sacred Kural of Thiruvalluva-Nayanar with Introduction, Grammar, Translation, Notes, W. H. Allen & Co., London, 1886, Introduction,

[2] Then, he mentioned about Thomas getting killed at Mylapore, “A higher interest is imparted to the spot and its neighbourhood, at least to Christians, by the tradition (so long and lightly discredited, but now generally acknowledged to be authentic) that here S. Thomas preached, and here met his death by a spear (vel) such as the poet often speaks of, and was here buried”.

For this, G. U. Pope gives a note as follows – The reader may find a full discussion of this subject in Dr. German’s learned and instructive work, Die Kirche der Thomas Christen.

[3] Incidentally, the writings of the G. U. Pope have been full of “Thomas myth”, as could be noted from his “Introduction” of his book . pp. ii-iii.

[4] “போப் ஐயர்” என்று சாதாரணமாக சொல்லும் போது, “போப் ஐயங்கார்” என்று ஏன் சொல்வதில்லை என்று தெரியவில்லை. இல்லை, “போப் பறையர்” என்று கூட சொல்லலாமே?

[5]we may fairly, I say, picture him pacing along the sea-shore with the Christian teachers, and imbibing Christian ideas, tinged with the peculiarities of the Alexandrian school, and day by day working them into his own wonderful Kurral”.

[6] Then , finally he confirmed the myth as “authentic”, “It is undoubtedly a noteworthy fact that from this Mayilapur, on which the eyes of Christendom have ever rested as the one sacred spot in India of Apostolic labour, comes the one Oriental book, much of whose teaching is an echo of the ‘Sermon on the Mount’”, adding, “….I cannot feel any hesitation in saying that the Christian Scriptures were among the sources from which the poet derived his inspiration.”

[7] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[8] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

[9] Metcalf, Thomas R. Aftermath of Revolt: India 1857-1970. Princeton University Press, 2015.

[10] Garbe, Richard. “St. Thomas in India.” The Monist (1915): 1-27.

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

ஜூன் 26, 2017

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

Tamil writers, speakers, researchers have been rhetoric

ல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர்.  எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1].  ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.

Malar Mannan - 2013

இந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.

Thiruvalluvar coin minted by F W Ellis. front and observe- British museum

வள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம்.  இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.

Tiruvalluvamalai- 11-12th cent CE, interpolated

மதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

Ellis forged works

திருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy]  முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

26-06-2017

Tiruvalluvamalai- works forged in his name

[1] மலர் மன்னன்,  , http://puthu.thinnai.com/?p=11110

[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

[3]  ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524

[4] Sir Walter Elliot came to Madras in 1821 and worked till 1860, as a Member of the Council of the Governor of Madras. He was a life long and devoted student of Oriental Studies inBotany, Zoology, Indian languages, Numismatics and Archeology. He rescued the Amaravathi Marbles, which are now housed in the British Museum along with his coin collection and collection of other artifacts.. His work, ‘Coins of Southern India’, formed part of the famous series ‘Numismata Orientalia’, published in 1884

[5] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[6] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

ஜூன் 25, 2017

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைனபௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

C.F.C. Volney - Christos from Krishna

ஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனபௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்?: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.

Constantaine Joseph Beschi and Sivaprakasa Munivar

கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.

Zigenbalg, Dubois, Pope, Colebrooke, Wilson, Beschi

ஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்கபுரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:

  1. பார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.
  2. ஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.
  3. கோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.
  4. மெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].
  5. பிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].
  6. எல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].
  7. கால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.

Co. Tod - Annals and Antiquities of Rajasthan

கல்கத்தாமதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].

© வேதபிரகாஷ்

25-06-2017

Madras school of orientalism

[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது! 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்! 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது!

[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.

[3] Mackenzie’s story of the presentation of Tirukkural to the Tamil Cankam depicts its author, Tiruvalluvar, as a Saiva. Upon the occasion when the superiority of this literary work was demonstrated, the whole of the Tamil Cankam of Madurai, composed of Jains, was forced to commit suicide (Cotton et al. 1992, 1.14; Wilson 1828, 180ff, VII and XVIII; Taylor 1857–62, III, 163).

[4] Mackenzie’s account of the struggle at Kanchipuram between the Buddhists and the Jains, with Akalanka at their head, tells us that the Buddhists were defeated. The Jains, in keeping with the spirit of ahimsa, refrained from grinding up the Buddhists in an oil press and instead banished them to Sri Lanka (Mahalingam 1972–6, 14.3 and 68; cf. Taylor 1857–62, 3, 368, 423–5, 436–7).

[5]  Buchanan, Francis. 1999 [1807]. A Journey from Madras through the Countries of Mysore, Canara, and Malabar, 3 vols, New Delhi: Asian Educational Services.

[6] Mahadevan, Iravatham. 1995. ‘A Unique Gold Coin with Tiruvalluvar’s Portrait’, Studies in South Indian Coins, 5, pp. 139–45.

[7] Caldwell, R., A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages, 3rd edn, revised by J.L. Wyatt and T. Ramakrishna Pillai (eds), New Delhi: Oriental Books Reprint Corporation. 1974 [1913]. pp. 83-84.

[8] Wilson has nothing to say about Jain contributions to Tamil literature, in part because he rejects the Madras School of Orientalism’s ideas about the antiquity, originality, and quality of this literature, maintaining that the earliest Tamil works are simply translations of Sanskrit texts (1828, xxxii–xxxiv).

[9] Major James Delamaine, Of the Sra’wacs or Jains, published in 1827, 426–7, 433.

திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி? சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)

ஜூன் 24, 2017

திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி? சமஸ்கிருததமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்புதிர் கருதுகோள்கள் (8)

Catholics and protestants call other serpant

ஓலைச்சுவடி புத்தகங்களின் அழிவும், நகல்கள் உருவாக்கமும், ஐரோப்பியர்களின் சேகரிப்பும்: காலின் மெகன்சி, டெயிலர், பிரௌன், கால்டுவெல் முதலியோர் சேகரிப்பில் பல தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருந்தன. அவற்றில் மருத்துவ நூல்களைப் பற்றி அதிகம் கவனம் செல்லுத்தினர். முகலாயர் / முகமதியர், அதாவது முஸ்லிம்கள் வடவிந்தியாவின் மீது படையெடுத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மடாலய பள்ளிகள், குருகுலங்கள் முதலியவற்றைத் தாக்கி, ஓலைச்சுவடி புத்தகங்களை சூரையாடினர், எரிக்கவும் செய்தனர். அப்பொழுது, ஓலைச்சுவடிகளுடன் திபெத், பர்மா, சயாம் முதலிய தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்னிந்தியா என்று எழுத்தாளர்கள், ஓலைச்சுவடி நகல் எடுப்பவர்கள் பரவினர். திபெத்தில் திபெத்தியம், தென்கிழக்காசிய நாடுகளில் சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில், மொழி பெயர்த்து எழுத ஆரம்பித்தனர். இதனை அறிந்து கொண்டு, ஐரோப்பியர் [பெரும்பாலோர் மிஷினரிகள்], அப்பகுதிகளுக்குச் சென்று ஒலைச்சுவடி புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அவற்றில் ஆயுர்வேத புத்தகங்கள் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்தனர்.  அவசரமாக அபகரித்து கொண்டது, வாரிக்கொண்டு வந்தது, விலை கொடுத்து அல்லது மிரட்டி வாங்கியது போன்ற காரியங்களால், அவற்றில், கிடைக்காத அரைகுறை ஓலைச்சுவடி கட்டுகள் அதிகமாக இருந்தன[1].

F. W. Ellis, produced such literature, to encourage vaccination

மருத்துவ ஆராய்ச்சியில் போலி நூல்கள் உருவாக்கம், ஆயுர்வேத-சித்த மோதல்கள்: குறிப்பாக, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர், கிடைத்தவற்றையெல்லாம் வாரிக் கொண்டு வந்தனர். இதனால் தான் ஓலைச்சுவடிகள் தாறுமாறாகின. பல புத்தகங்களில், முன்பு-பின்பு என்று ஓலைச்சுவடிகள் காணாமல் இருந்தன / போயின. உதாரணத்திற்கு “கப்பற்சாத்திரம்” என்ற நூலின் இறுதியில் “சிற்பசாத்திரம்” பற்றி சில சுவரடிகள் இருந்தன. அதாவது, இரண்டு ஓலைச்சுவடி புத்தகங்களின் சுவடிகள் கலந்திருந்தன. திராவிட மொழிகள் தனி, சமஸ்கிருதத்திலிருந்து அவை வேறுபட்டவை என்று எடுத்துக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்து, திட்டமிட்டு செயல்பட்டபோது, சில படிப்புத்துறை நூல்கள் வேறு என்று எடுத்துக் காட்ட முயன்றனர். அந்நிலையில் தான் போலி சித்தர் நூல்கள் உருவாகின. முதலில், கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் எதிர்ப்பு அந்நூல்களில் இருந்தது. “கருநாக பாம்பின் விசக்கடிக்கு மருந்து” என்ற நூல் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்[2]. உண்மையில், இது மருத்துவ நூல் கிடையாது. கத்தோலிக்க மிஷனரிகள், தரங்கம்பாடியில் உள்ள புரொடெஸ்டென்ட் மிஷனரிகளை திட்டி, வசைபாடி எழுதிய குறும்புத்தகம் ஆகும். அதாவது, உள்ளூர் தமிழ் தெரிந்தவர்கள், தமிழாசிரியர்கள் முதலியவர்களை வைத்து இத்தகைய நூல்களை தயாரித்தனர். “பசு அம்மை” அவ்வாறுத்தான் உருவாக்கப்பட்டது[3]. அதனால் தான், சித்தர் பாடல்களில் விசயம் குறைவாக இருந்து, அதிகமாக சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்வது, அதிகமான தேவையில்லாத வர்ண்ணனை, பாடல்வரிகள், பாடல்கள் திரும்ப வருவது, முதலியவற்றைக் காணலாம். மேலும் 19-20ம் நூற்றாண்டு வழக்குச் சொற்கள், சொற்பிரயோகம் முதலியவை, அவற்றின் போலித்தன்மையினை எடுத்துக் காட்டுகின்றது.

Colin Mackanzies reserch on Jainism

“ஜைன” திட்டம் உருவானது எப்படி?: வள்ளுவரை வேற்று மதத்தினராகக் காட்டுவது என்ற குறிக்கோளில் செயல்பட்டபோது, இத்தகைய மோசடி ஆராய்ச்சிகள் எல்லீஸ் கூட்டம் மேற்கொண்டது. எல்லீஸ் மற்றும் போப் முதலியோருக்கு தாமஸ் கட்டுக்கதை நன்றாகவே தெரிந்திருப்பது, அவர்களின் குறிப்புகளிலிருந்து அறியலாம். அதனை, இதில் சேர்த்துக் கொள்ள முயன்றனர். அதனால் தான், வள்ளுவரைப் பற்றிய போலி நூல்களை / ஆவணங்களை உருவாக்கினர். அவர் நெசவாளி, பறையர் போன்ற கட்டுக்கதைகள் சேர்க்கப்பட்டன. “பதினன்கீழ்கணக்கு” நூல்களில் ஜைன தாக்கம் இருந்ததால், வள்ளுவரை ஜைனராக்கும் திட்டம் உண்டானது. அந்த ஜைன சங்கத்தை, “தமிழ் சங்கம்” என்றதும், உசுப்பிட்டது போலாயிற்று. ஜைனமத அகாலங்கன், முதலியோரை ஏலேல சிங்கன் என்றெல்லாம் மாற்றினர். தீபவம்சத்தின்படி, ஏலேர அல்லது ஏலேரன் 205-161 BCE [Elelar / Elalan] என்பவன் இலங்கையை ஆண்டதாகவுள்ளது. ஆனால், இவர்களே வள்ளுவர் காலத்தை 400 முதல் 1000 CE வரைத்தான் வைக்கிறார்கள். பிறகு, அக்கதை எப்படி பொறுந்தும்? பறையன் என்ற திரிபுவாதத்தை வைத்துக் கொண்டு, அவரை, ஆரியருக்கு எதிராகவும் சித்தரிக்க முயன்றனர். ஆனால், இத்தகைய விவகாரங்களில், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் ஏற்பட்டன.

Akalanka and kundakunda

எல்லீஸின் மிராசுதார், பள்ளர்பறையன் ஆராய்ச்சிகள்[4]: பள்ளர், பறையோர் போன்றோர் வேளாளர், பிள்ளை முதலியோர்களுக்கு அடிமையாக வேலை செய்து வந்தனர் என்று எல்லீஸ் அரசு ஆவணங்களில் குறிப்பிட்டார்[5]. அப்படியென்றால், அவர்கள் வேளாளர், பிள்ளைமார்கள் முதலியவர்களை எதிர்த்து தான் போராடியிருக்க வேண்டும். “அந்தணருக்கும்”, “புலைச்சிக்கும்” பிறந்தவர் என்பதற்குப் பதிலாக, வேளாளார் / பிள்ளைமார் தந்தைக்கும், புலைச்சிற்கும் பிறந்தவர் என்று கதையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், “பார்ப்பனரை”ப் பிடித்துக் கொண்டனர்! இன்னொரு பக்கம் இத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது. காலுடுவெல்லுக்கு முன்னரே, “திராவிட” பிரயோகத்தை எல்லீஸ் உபயோகப் படுத்தினார். தமிழ் உக்ரோ-பீனிஸ் மொழிக்குடும்பத்திலிருந்து பிறந்தது என்று வில்லியம்ஸ் கருதுகோளுக்கு எதிராக, தனது வாதத்தை வைத்தார். சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது, எந்த விதத்திலும், தமிழ் சமஸ்கிருதத்துடன் தொடர்பு கொண்டிருக்க வில்லை என்று, வில்சனின் சித்தாந்தத்தையும் எதிர்த்தார். பிறகு, கால்டுவெல், திருக்குறள் மற்றும் சிந்தாமணி நூல்கள்களுக்கு சமஸ்கிருதத்திற்கும் (ஏன் லத்தீனுக்கும்) சம்பந்தமே இல்லை என்றார்[6].

Jaina Valluvar also changes face

திருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன் முதலியோர் ஈடுபட்டனர். சிரவணபெலகோலாவிற்கு சென்று, அங்கிருந்த ஜைனதுறவியை வைத்துக் கொண்டு, தமது ஆராய்ச்சியை செய்தனர். வேதாந்திகளுக்கு முன்னர் ஜைனம் தென்னிந்தியாவில் இருந்தது என்பதை எல்லீஸ் மறுத்தார். சங்கரர், ராமானுஜர் முதலியோர்களால் தான், ஜைனம் தேய்ந்தது. முதல் நூற்றாண்டிலிருந்து, பழங்கால தமிழ் இலக்கிய புலவர்கள் எல்லோருமே ஜைனர்கள் தாம். பௌத்தம், ஜைனத்தின் ஒரு சாகை. ஜைனம் தாம், தென்னிந்தியாவின் மதமாக இருந்தது, ஆனால், பிராமணர்களால் அது குறைக்கப் பட்டது. எல்லீஸ் இவ்வாறு பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்[7].  மேலும், அதற்கேற்றப்படி, எழுத வைத்து ஆவணங்களை உருவாக்கினர். திருவள்ளுவரின் காலத்தைக் குறைக்க, குறளின் மீதான வேத-உபநிஷத தாக்கத்தை மறுக்க, வேதாந்தத்தின் முக்கியத்துவத்தை நீர்க்க, போலி நூல்களை உருவாக்கினர். திருவள்ளுவர் பெயரில், சித்தர் நூல்களை எழுதவித்தனர். கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiosyncrasy]  முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

24-06-2017

18-kizh kanakku - Jaina influence

[1] மேலும் அவர்களுக்குப் படிக்கத் தெரியாதலால், அவ்வாறு நேர்ந்தது. ஒருநிலையில், உள்ளூர்காரர்களை வைத்து நகல்களையும் எடுக்க ஆரம்பித்தனர். ஏனெனில், ஐரோப்பாவில், அவற்றை அதிக விலைக் கொடுத்து வாங்குவதற்கு நிறைய பேர் இருந்தனர்.

[2] டி. என். ராமச்சந்திரன், தஞ்சாவூர் [சேக்கிழார் அடிப்பொடி] இதனை கண்டுபிடித்து, குறும்புத்தகமாக வெளியிட்டார்.

[3] http://rcsi.hypotheses.org/488

[4] Ellis, Francis Whyte. Replies to Seventeen Questions, Proposed by the Government of Fort St. George, Relative to Mírasí Right: With Two Appendices, Elucidatory of the Subject. Printed at the Government Gazette Office, 1818.

[5] Ahuja, Ravi. “Labour relations in an early colonial context: Madras, c. 1750–1800.” Modern Asian Studies 36.04 (2002): 793-826.

[6] The term Dravidian was not coined by Caldwell, but, it was F.W. Ellis, who invented the phraseology. Ellis tried to expound a new theory that Tamil was born of the Ugro – Finnish group of languages, to disapprove the theory of the linguist Sir William. He also tried to disprove the theory of Prof. Wilson that South Indian languages followed Sanskrit and the prominent literary treasures are either a translation or adoption of Sanskrit. Later, Caldwell identifies in his own way that Tirukkural and Cinthamani as having no connections with Sanskrit. Caldwell tried to establish that Tamil is not indebted to Sanskrit as English to Latin, this is refuted by Kamil Zvelebil.

[7] In his unpublished ‘Observations on Parswa Natha’, Ellis maintained that  Buddhism was a sect of Jainism (n.d.), although elsewhere it is clear that he was open to various possibilities with respect to the relationship between  Jainism  and  Buddhism. Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains.”, p.272.

திருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது? (7)

ஜூன் 23, 2017

திருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது? (7)

C P brown, Caldwell, Alexander Duncan Campbell

வடக்கு-தெற்கு, மொழிகள் ரீதியிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது: கிழக்கத்தைய சென்னை பள்ளி, கல்லூரி [Madras School of Orientalism / The College of Fort St. George], ராயல் ஏசியாடிக் சொசைடிக்கு [Royal Asiatic Society] மாற்றாக இந்தியாவைப்பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப் பட்டது, குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. எல்லீஸ், கேம்ப் பெல், அலெக்சாந்தர் ஹாமில்டன், சார்லஸ் வில்கின்ஸ், சி.பி.பிரௌன் போன்றோர் அதில் முக்கிய பங்கு வகித்தனர். ஒருநிலையில், சமஸ்கிருதத்தின் தொன்மையினை மறுத்து, அதே நேரத்தில் சமஸ்கிருதம் சாராத மற்ற மொழிகள் உள்ளன என்று எடுத்துக் காட்ட அவர்கள் முயன்றனர். அவர்களது பிரிவினை கொள்கைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், அது வேறு – இது வேறு …..என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், எந்த கம்பனி ஊழியனும், கம்பனி விதிகள், வரைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு, விருப்பங்களுக்கும் விரோதமாக வேலை செய்ய முடியாது என்பது அறிந்த விசயமே. மேலும் கம்பெனி அதிகாரிகள், ஊழியர் மற்ற வேலை செய்யும் நிபுணர்களுக்கு, இந்தியர்களைப் பற்றி அறிந்து கொள்ள பயிற்சியளிக்கும் கூடமாகவும் இருந்தது.

Ellis manufactured Cowpox book - Thomas Trautmann book

எல்லிஸ், எல்லிஸ் துரை, எல்லீசர் யார்?: பிரான்சிஸ் விட் எல்லிஸ் [Francis Whyte Ellis (1777–1819)] 1796ல் கிழக்கிந்திய கம்பெனியின் 17-18 வயதிலேயே எழுத்தராக [Clerk] இருந்து, இணை செயலாளர், என்று உயர்ந்து, செயலாளர் ஆனார். 1802ல் வருவாய்துறை கணக்காளர் ஆனார். 1806ல் மச்சிலிப்பட்டனத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 1809ல் சென்னை ராஜதானியில் சுங்கத்துறை கலெக்ட்ராகவும், 1810ல் சென்னைக்கு கலெக்ட்ராகவும், இருந்து 1810ல் ராமநாடில் காலரா நோயினால் மாண்டார் அல்லது தற்செயலாக கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தார் எனவும் உள்ளது[1]. கால்டுவெல்லுக்கு முன்னரே திராவிட மொழிகள் தனி என்று, 1816ல் அலெக்சாந்தர் டன்கேன் காம்பெல் [Alexandar Duncan Campbell] எழுதிய தெலுகு இலக்கணம் என்ற புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது[2]. 1811ல் சிவில்துறை அதிகாரிகளின் கமிட்டியின் தலைவராக இருந்தபோது எடுத்துக் காட்டினார்.  இதே கருத்தை அதே ஆண்டில் வில்லியம் பிரௌன் என்பாரும் எடுத்துக் காட்டினார்[3]. ஆனால், வில்லியம் கேரி, சார்லஸ் வில்கின்ஸ், ஹென்றி தாமஸ் கோல்புரோக் முதலியோர் சமஸ்கிருதம் தான் என்ற கருதுகோளைக் கொண்டிருந்தனர். 17-18 வயதில் எல்லீஸ் என்ற இப்பிள்ளைக்கு எப்படி சமஸ்கிருத ஞானம் வந்தது என்று யாரும் கேட்கவில்லை போலும். ஏசுர்வேதம்  என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கினார். 1609ம் ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு கள்ளபுத்தகத்தை இவர் ஏன் தயாரிக்க வேண்டும் என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்டதும் கவனிக்க வேண்டும். இந்த ஆள் 1819ல் செத்தப் பிறகுதான், பாண்டிச்சேரியில், இவர் எழுதியதாக கையெழுத்துப் பிரதிகள், 1822ல் கண்டெடுக்கப்பட்டன.

சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் – எது தொன்மையான நூல்?: சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் சம்பந்தம் இல்லை அல்லது தெலுங்கு சமஸ்கிருதம் ஆதாரமே இல்லாமல் தோன்றியது என்று காட்ட முயற்சித்தார்[4]. பிறகு, தமிழ் தொன்மையானதா அல்லது தெலுங்கு தொன்மையானதா என்ற விவாதம் கூட ஏற்பட்டது. இந்த விவாதம் பிரௌன் மற்றும் கால்டுவெல் இடையே ஏற்பட்டது[5]. தெலுங்கு இலக்கணம் எழுதிய கண்வர் என்ற முனிவர், ஆந்திர ராயர் அரசவையில் இருந்தார், அவரது காலம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது[6]. ஆனால், அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பிறகு, நன்னைய பட்டர் அல்லது நன்னப்பா என்பவர் [மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்] எழுதியதாக உள்ளது. அவரது காலம் 12ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. கேம்ப்பெல் இதனை எடுத்துக் காட்டுகிறார். இதே வேலையை லூயிஸ் டொமினில் ஸ்வாமிகண்ணு பிள்ளை தமிழ் இலக்கியத்தில் செய்தார்[7]. அதாவது, திராவிடக் குடும்ப மொழிகளில் தெலுங்கு முன்னதாக செல்வது, அவர்களுக்கு உதைத்தது. மேலும், கடற்கடந்த முதல் நூற்றாண்டு தொடர்புகள் தமிழகத்தை விட, ஆந்திர தொடர்புகள் அதிகமாக இருந்தன. கம்பெனி வல்லுனர்களுக்கு இந்திய பண்டிதர்களின் உதவி இல்லாமல், ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருந்தது. இதிலும், அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.

Charles Brown with Indian Pundits

உள்ளூர் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நூல்களை உருவாக்கியது: மதராஸ் ராஜதானியில் உள்ள ஆசிரியர்கள், பண்டிதர்கள், முதலியோரை வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து, விசயங்களை அறிந்து கொண்டுதான், அவர்களின் ஆராய்ச்சி நடந்தது. எல்லிஸை எடுத்துக் கொண்டால், பட்டாபிராம சாஸ்திரி என்பவரை தலைமையாசிரியாகக் கொண்டிருந்தார். சங்கரைய்யா என்பவர், அங்கிருந்த   அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஸ்ரேஸ்தாதார் என்ற பதவியில் இருந்தார். அதாவது, பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் பட்ட இந்தியர்கள் தாம் அடிப்படை வேலையை செய்து வந்தனர். ஆங்கிலேய-ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், அவ்விசயங்களைப் பெற்றுக் கொண்டு, தத்தம் மொழிகளில், தாம் புரிந்து கொண்ட முறையில், அல்லது தங்களுக்கு ஏற்ற சித்தாந்த முறையில் எழுதி வைத்தனர். அதனால் தான், ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டேனிஷ், ஜெர்மானிய எழுத்துகளில் அத்தகைய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், அவற்றில், கிருத்துவ-புரொடெஸ்டென்ட், ஆங்கிலேய-ஐரிஸ், உயர்ந்த-மிகவுயர்ந்த இனம் போன்ற வேறுபாடுகளும் கலந்திருக்கும். இவற்றில் அகப்பட்டுக் கொண்டு, இந்திய சரித்திர காரணிகள் சீரழிந்தன. பகலில் தனது வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் எல்லிஸ் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காலின் மெகன்ஸி [Colin Mackanzie], வில்லியம்ஸ் எர்ஸ்கைன் [William Erskine[8]], ஜான் லேடன் [John Leyden[9]], கேம்ப்பெல் [A. D. Campbell[10]] முதலியோர் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். மெட்ராஸ் இலக்கிய சங்கம் [Madras Literary Society] இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஜான் லேடன் ஜாவாவில் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கேயே இறந்தார்.

Buchanan, Ellis, Mackanzie

திருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஓரியன்டலிஸ்டுகளிடையே எற்பட்ட சித்தாந்த போரில் தான், தென்னிந்திய இலக்கியங்கள் சிக்கின. மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை, ஆராய்ச்சியில் போய், கால நிர்ணயம் என்று வரும்போது, கிருத்துவத் தொன்மையினை பாதிக்கும் நிலையில், அதனை குறைக்க முயன்றனர். அந்த ஆராய்ச்சியில், ஜைன-பௌத்த தொன்மைகள் அவர்களை அதிகமாகவே பாதித்தன. இலங்கை அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகத் தொன்மையினை எடுத்துக் காட்டின. அந்நிலையில் தான், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள் தொகுக்கப்பட்டு, அதனை வைத்து, பௌத்த மதத்தின் தொன்மையினை குறைக்க முயன்றனர். அந்நிலையில், ஜைன-பௌத்த தத்துவ மோதல்களை திரித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, தத்துவ நூல்களையும் ஆராய ஆரம்பித்தனர். அங்கு தான் சங்கரர் பிரச்சினை வந்தது. புத்தர் காலம் முன்னால் செல்லும் போது, சங்கரர் காலமுன் அவ்வாறே சென்றது, அதனை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் காலம் பின்னால் நகர்த்திய போது, ஜைனத்தையும் பின்னால் நகர்த்த வேண்டியதாயிற்று. இடையில் முகலாயர் பிரச்சினை வந்ததால், ஜைன-பௌத்த தத்துவ சண்டைகளுக்கு இடையே சங்கரரை வைக்க முயன்றனர். இதில், தான் வள்ளுவர் மாட்டிக் கொள்ள, சங்க இலக்கிய காலம் மற்றும் நீதிநூல்கள் காலம் பிரச்சினை வந்தது. இதனால் தான், திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் 6-7ம் நூற்றாண்டுகள், முர்டோக் 9ம் நூற்றாண்டு, 800-100 ஜி.யூ.போப் என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர்.

© வேதபிரகாஷ்

23-06-2017

Valluvar coin reportedly minted by Ellis, Ayodhi Dasar

[1] Trautmann, Thomas R.,  Aryans and British India,  University of California Press,  Berkeley, 1997.

[2]  Blackburn, Stuart (2006). Print, folklore, and nationalism in colonial South India. Orient Blackswan,  pp. 92–95.

[3] William Brown, A Grammar of the Gentoo Language, 1917.

[4] Thomas R. Trautmann 2006, Languages and NationsThe Dravidian Proof in Colonial Madras, Yoda Press, New Delhi,  pp. 151–170

[5] Robert Caldwell, Christianity explained to a Hindu or Christianity and Hinduism Compared, The Christian Literature society, Madras, 1893 published under “papers on Indkian Reform”!.

[6] Robert Caldwell, A comparative arammar of the Dravidian Languages, 1856 edition, p.82, can be accessed at: http://www.archive.org/stream/cu31924023009966/cu31924023009966_djvu.txt

[7] L. D. Swamikannu Pillai, An Indian ephemeris, A.D. 700 to A.D. 1799, showing the daily solar and lunar reckoning according to the principal systems current in India, with their English equivalents, also the ending moments of tithis and nakshatras and the years in different eras, A.D., Hijra, Saka, Vikrama, Kaliyuga, Kollam etc., with a perpetual planetary almanac and other auxiliary tables, Madras, 1922 (AES reprint available).

………………………………, Indian Chronology (Solar, Lunar And Planetary), Asian Educational Services, New Delhi, 2003.

[8] William Erskine (8 November 1773 – 28 May 1852) was a Scottish orientalist and historian. The son of David Erskine and his wife Jean Melvin, he was born in Edinburgh. He attended the Royal High School, received a doctorate in law from Edinburgh University. He went to Bombay (now Mumbai) in 1804 where he was master in equity in the recorder’s court. He married Maitland Mackintosh, daughter of Sir James Mackintosh by his first wife Katherine Stuart in 1809 in Madras (now Chennai) and they had fourteen children, one of whom, Frances, married the statistician and civil servant Thomas Farrer, 1st Baron Farrer. Another daughter, Mary, was head nurse in the Naval Hospital at Therapia during the Crimean War, and looked after Florence Nightingale while she recovered from illness. Erskine’s sister-in-law, Mary Mackintosh, married the eminent orientalist Claudius James Rich. Erskine wrote principally on mediaeval India, but he also completed John Malcolm’s biography of Clive of India after Malcolm’s death and translated the Baburnama, the memoirs of Zehir-Ed-Din Muhammed Babur, Emperor of Hindustan. He was removed from office in 1823 after being accused of defalcation and for many of his later years resided in Edinburgh, as well as Pau in South West France. He was Provost of St Andrews, 1836–1839.

[9] John Leyden (8 September 1775 – 28 August 1811) was a Scottish orientalist. He was sent to study theology to become a priest. At last his friends got him an appointment in India on the medical staff, for which he qualified by a year’s hard work. In 1803, he sailed for Madras, and took his place in the general hospital there. He was promoted to be naturalist to the commissioners going to survey Mysore, and in 1807, his knowledge of the languages of India procured him an appointment as professor of Hindustani at Calcutta; this he soon after resigned for a judgeship, and that again to be a commissioner in the court of requests in 1805, a post which required a familiarity with several Eastern languages. In 1811, Leyden joined Lord Minto in the expedition to Java. Having entered a library which was said to contain many Eastern manuscripts, without having the place aired, he was seized with Batavian fever (possibly malaria or dengue) and died, after three days’ illness, on 28 August 1811. He was buried on the island, underneath a small firefly colony, which remains as his tombstone to this day.

[10] Alexander Duncan Campbell wrote the Telugu grammar and tried to prove the antiquity of Telugu over other languages that affected the other orientalists.

தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5)

ஜூன் 20, 2017

தெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதைதிருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்! (5)

John Samuel - thomas myth

கிருத்துவர்களின் ஆராய்ச்சிகள் எல்லைகளைக் கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.

Shu Hikosaka, John Samuel, V R Krishna Iyer

ஜான் ஜி. சாமுவேல் யார்? [1998 முதல் 2001 வரை நடந்த பிரச்சினைகள்]:  ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmystical­­and subtly anti­Hindu­­view that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணித்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார்.  பதிலுக்கு கொடுமுடி சண்முகம்[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].

Hotel Monisa, Mauritius, where the delegates of second International conference on Skanda-Muruka stayed in April 2001

அனைத்துலக ஸ்கந்தாமுருகா மாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.

J.G.Kannappan, I.Ramachandran, S,P.Sabharatnam

ஸ்கந்தமுருக இயக்குனர்கள் அதிர்ந்தது, நண்பர்கள் ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர்  எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம்! இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.

john-samuel-colluding-with-deivanayagam

2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.  இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே தாமஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].

Pattanam, Hari shankar, P J Cherian, thomas myth

2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

20-06-2017

First early Christianity in India held 2005 - Santhosam, Deivanayagam, John Samuel

[1] http://www.hinduismtoday.com/modules/smartsection/print.php?itemid=4380

[2] The Institute of Asian Studies is non-profit research centre was registered as an autonomous Society in 1982 and it is governed by a team of members in the capacity of the Board of Governors. Eminent personalities from various walk of life – judiciary, education, government, culture – who evince a keen interest in Asian culture, language, and literature form the Boar d of Governors which is headed by Justice V.R. Krishna Iyer.

[3] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419   E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, காலமகிவிட்டார் என்று தெரிகிறது.

[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.

[5] http://www.newindianexpress.com/states/kerala/2017/jun/05/questioning-efforts-to-connect-myth-with-history-1612964–1.html

[6] Second International Conference Seminar on the History of early Christianity in India (14th to 17th January 2007, http://www.xlweb.com/heritage/asian/christianity-conference2.htm

[7] Third International Conference on the History of Early Christianity in India and the Middle East (September 2008)

[8] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

ஜூன் 19, 2017

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

V. G. Santhosm awarded - life time achievement

வி.ஜி.சந்தோசம் யார்?: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.

V. G. Santhosam was awarded Doctorate Degree by Jerusalem university

அனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.

First early Christianity in India held 2005 - Santhosam, Deivanayagam, John Samuel

சுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுகிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].

VGP Evangelixal nexus

 

முருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:

1.        ஜி. ஜான் சாமுவேல்.

2.       டி. தயானந்த பிரான்சிஸ்[9].

3.       ஜார்ஜ் மெனசேரி

4.       வி. தெய்வசிகாமணி.

5.        மோசஸ் மைக்கேல் பாரடே[10].

6.       பி. தியாகராஜன்.

7.        ஜி. ஜே. பாண்டித்துரை

8.       பி. லாசரஸ் சாம்ராஜ்

9.       தன்ராஜ்.

10.     ஜே. டி. பாஸ்கர தாஸ்.

11.      வொய். ஞான சந்திர ஜான்ஸான்.

12.     ஜாலி செபாஸ்டியன்.

13.     டி. யேசுதாஸ்.

14.     ஜொனாதன் சான்டியாகோ

15.     லாரன்ஸ் வின்சென்ட்.

16.     எர்னெஸ்ட் பிரதீப் குமார்.

இப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம்,  இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.

The covention was held at VGP grounds, Vandalur on 26-01-2015

விஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.

V. G. Sathosam awarded Doctorate etc

கிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்?: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.

© வேதபிரகாஷ்

19-06-2017

Tamil christuva koil, New York-2

[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.

[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.

[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.

[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.

[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.

[6] http://www.instituteofasianstudies.com/board_governors.html

[7] For further details on the Conference, please contact: Dr. G. John Samuel, Founder-Director, Institute of Asian Studies, Chemmancherry, Sholinganallur P.O.

http://www.instituteofasianstudies.com/christianity_conference.html

[8] G. John Samuel (General Editor),  Early Christianity in India : (with parallel developments in other parts of Asia), editors, J.B. Santiago, P. Thiagarajan, International Centre for the Study of Christianity in India, Institute of Asian Studies, 2008, Chennai.

[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.

[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

[11]  கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)

Ellis is praised without knowing his baxkground

எல்லீசர்பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார்எல்லீசர்பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:

  1. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.
  2. ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு?]
  3. “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.
  4. “எல்லீசர்” அறக்கட்டளை விருது.

அப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா? செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:

Tiruvalluvar Invitation- appreciating ELLIS

நிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

  • இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
  • திரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking.2

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது? தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி. போன்றோரும், அண்ணாதுரை, .வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா? திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.

Mylapore function 08-06-2017-5

  • VHP R.B.V.S. மணியன்ஜி,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,
  • G.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்

அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”.  இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.

B R Haran, Tamil Selvan, Myth of Christian cont.to Tamil and my reply

 

2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்?: பி.ஆர். ஹரண், தமிழுக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிஅ பங்கு என்ற கட்டுக்கதை, என்ற கட்டுரையில், Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes,” என்று எழுதினார்.

“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.

“Ironically, A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages cannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wrote Dravidian Language Hypotheses.. To understand why Caldwell resorted to “research” South Indian languages, one should read Dr. K. Muthaia’s articleCaldwell Oppilakkanaththin Arasiyal Pinnani (“The Politics Behind Caldwell’s Comparative Grammar), published in the April 1997 issue of the Tamil monthly magazine Kanaiyaazhi.
“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.

Tiruvalluvar according to ELLIS

ஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்?: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்?

  1. எல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன?
  2. “எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்?
  3. திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்?
  4. எல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்?
  5. யார் பணம் கொடுத்தது?

இதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.speaking

[1] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil, Posted on August 2, 2010.

 https://bharatabharati.wordpress.com/2010/08/02/myth-of-christian-contribution-to-tamil-%E2%80%93thamizhchelvan/

[2] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 1, Posted on July 21, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1324

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 2, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1325

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 3, Posted on July 23, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1326

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 4, Posted on July 22, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1327

Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 5, Posted on July 25, 2010.

http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1328

[3] https://www.facebook.com/jayaraman.v.o/posts/10154585311106709?hc_location=ufi

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

Tiruvalluvar Invitation-1

திருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.  இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

Tiruvalluvar Invitation-2

சாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர்! வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.

“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.

தாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.

Mylapore function 08-06-2017-13

நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:

காலை: 9.15 மணி வழிபாடு

காலை: 10.30 மணி விருது வழங்கும் விழா

இறைவணக்கம்

வரவேற்பு

விழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.

முன்னிலை:

திரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.

முனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்

திரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.

திருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக

விருது பெறுபவர்

கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

ஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக

விருது பெறுபவர்

அ. சுபாஷ் அவர்கள்

விருது வழங்கி வாழ்த்துரை

திரு. இல. கணேசன் அவர்கள்.

தலைவர் ஆசியுரை

நன்று நவிலல்

நாட்டு வாழ்த்து.

தலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்

மதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.3 -twitter

செயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:

  1. திரு பால. கௌதமன்.
  2. வழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.
  3. மா. மணிவாசகம்.
  4. சிவாலயம் ஜெ. மோகன்.
  5. கவிஞர் முத்துலிங்கம்
  6. திரு எஸ். இராமச்சந்திரன்.
  7. வழக்கறிஞர் ஜி. முருகவேல்.
  8. வழக்கறிஞர் பால சீனிவாசன்
  9. திரு பி. ஆர். ஹரன்.
  10. டால்பின் திரு ஶ்ரீதர்
  11. திரு ஆர் சீனிவாசன்
  12. திரு ஆர். பரிதிமால்கலைஞர்.
  13. செங்கோட்டை ஶ்ரீராம்

பொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.

தொடர்புக்கு: 044 – 4201 6242; +91 95518 70296

Muthulingam-poet, Nambi Narayanan,......, .....

அறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:

  1. அதிபர், காசித்திருமடம், திருப்பனந்தாள்.
  2. டாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,
  3. திரு செகந்நாதன். புதுச்சேரி.
  4. திரு சியாம் சுந்தர், புதுச்சேரி.
  5. திரு சௌந்தரராசன், சென்னை.
  6. திரு முருகவேள் சென்னை.
  7. திரு இராதாகிருஷ்ணன், குடந்தை.
  8. முனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.
  9. திரு. கணேசன், குடந்தை.
  10. திரு திருநாவுக்கரசு குடந்தை.
  11. திரு கண்ணன் குடந்தை.

இப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2017

திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

[1] Dr M.Santhoshkumar, MSc PhD, Founder Associate Director, Center for Creativity & Innovation in Education, Sri Lathangi Vidhya Mandir Hr Sec School, Coimbatore. (Formerly Assistant Professor in Biochemistry in RVS College and PSG College- 2011-2016). ABVP activist.

https://www.facebook.com/drmsanthosh/; https://twitter.com/SanthoshMuthu16

[2]  பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

16 Department for Party Journals and Publications Sami Thyagarajan State Convenor , Tamil Literature Cell

95518 70296