Archive for the ‘கவர்ச்சி’ Category

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

மே 29, 2016

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

தமிழக பிஜேபி கூட்டணி தோல்விதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.

சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன்

எஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.

சேலம்பொது கூட்டம் கர்நாடக்கா அமைச்சர் பிரச்சாரம்பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.

தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும்மோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].

maniarasanavd-அரிசி அர்சியல்நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 அம்மா அர்சி - 2016 தேர்தல்

விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி எஸ் டி வரி - மசோதா - ரசியல்ஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி!!, By: Mathi, Published: Thursday, November 26, 2015, 15:35 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-napolean-made-vice-president-tn-bjp-240819.html

[3] https://www.patrikai.com/sv-shekhar-tease-bjp-party/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்?, By: Veera Kumar, Published: Friday, May 27, 2016, 15:36 [IST].

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/s-v-shekar-showing-anger-toward-tamilnadu-bjp-254686.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-sitharaman-prakash-javadekar-will-campaign-on-friday-intamil-nadu-252433.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-wave-powerless-amma-s-state-254054.html

[9] தினமலர், நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1450802

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

Rahul Gandhi-with actress, girl friend etc

ராகுல் தனது  “கேர்ல் பிரன்ட்”  பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cuttingஅதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Rahul with actress, women etc.2

 

Was Rahul Gandhi detained by FBI?

By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001

http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm

NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.

According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.

Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.

Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.

`Envoy did not intercede’

Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”

The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.

In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.

Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies.

Rahul with actress, women etc.3

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

Rahul with actress, women etc.4

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Rahul with actress, women etc.5

ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின,  தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Rahul with actress, woen etc.1

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

The alleged matter appearing in a foreign website

அயல்  நாட்டு  சதி  உள்ளது  என்று  சிபிஐ  கூறியதால்  விசாரித்து  அறிக்கை  வெளியிட  சுப்ரீம்  கோர்ட்  ஆணை   (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

 

சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

Rahul with women workers

வேதபிரகாஷ்

© 09-08-2013

 


[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.

[2] He hasn’t been seen publicly with any woman after being pictured with his Spanish ex-girlfriend Veronique, an architect, at the cricket World Cup in 1999. “She is my girlfriend and best friend too,” Rahul had said about her when he spoke about the subject for the first time in 2004, when he was touring Amethi.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[3] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[4] Cricketer Atul Wassan says, “Rahul will in all probability marry someone who isn’t in the public eye as much as he is – someone who is intelligent, will be loved by people, and maintains a low profile.” A possible Diana-inthe- making would obviously be a potential disaster as the Congress scion’s wife.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[7] The apex court on October 1 had reserved its order on the plea challenging the March 7, 2011 order of the Allahabad High Court. – See more at: http://www.indianexpress.com/news/rahul-gandhi-absolved-of-rape-charge-but-sc-slashes-fine-on-exsp-mla-kishore-samrite/1018515/#sthash.gbVIxiUs.dpuf

[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E  C O U R T O F  I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.

http://www.indiankanoon.org/doc/75923839/

[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.

[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees.  The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.

Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html

 

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

Ragul Gandhi absolved of rape case IE Photo

பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Rahul in Bhopal

காங்கிரஸ்  செயலாளர்  சியோராஜ்  ஜீவன்  வால்மீகியின்  புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].

Rahul Gandhi meets potential Youth Congress candidates

குடும்ப  அரசியல்  மற்றும்  பரம்பரை  ஆட்சிமுறையைத்  தவிர்ப்பதற்காகவே  காங்கிரஸ்  துணைத்தலைவர்  ராகுல்  திருமணம்  செய்து  கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5].  பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].

Meenakshi Natarajan.3

वाल्मीकि ने प्रेस कॉन्फ्रेंस में राहुल गांधी को लेकर दावा किया, ‘वह महान आदमी हैं और उन्होंने काफी बलिदान दिया है। यही वजह है कि उन्होंने शादी न करने का फैसला किया है। यहां तक कि अटल बिहारी वाजपेयी ने भी शादी नहीं की थी।’ हालांकि, जब उनसे पूछा गया कि क्या खुद राहुल गांधी ने शादी न करने की बात उनसे कही है तो वाल्मीकि ने यू-टर्न ले लिया। वाल्मीकि ने कहा, ‘मैं राहुल गांधी से नहीं मिला हूं। मैंने ये बातें अखबारों में पढ़ी हैं। यह बात गलत भी हो सकती है।’

Meenakshi Natarajan with Rahul.2

மோடியும் பிரமச்சாரி தானே?: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ? இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. Rahul Gandhi-with Nandita Das-2009-TOI photoநிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். rahul-gandhi-girlfriend-veroniqueஇந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.

Rahul Gandhi-with Nandita Das-2009-another angle

கடந்த  மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும்  ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

வேதபிரகாஷ்

© 09-08-2013


[2] Walmiki praised Gandhi as a “great person” who has made a lot of sacrifices. He also cited the example of Atal Bihari Vajpayee, the former BJP prime minister, who did not marry.

http://news.oneindia.in/2013/08/08/pm-poverty-marriage-whats-rahul-gandhis-state-of-mind-1278663.html

[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு,  பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST

[6] Talking to reporters here, Valmiki first said that Rahul had vowed that he would not marry in order to prevent “vanshwad” (dynastic rule).  However, when asked to repeat his statement, he refused to do so and instead apologized. “I read it somewhere that he (Rahul) had said that he will not marry so as to prevent dynastic rule,” Valmiki said. He later apologized and said, “I may be wrong and therefore want to apologize.”

http://timesofindia.indiatimes.com/india/Congress-leader-courts-controversy-over-Rahuls-marriage-regrets/articleshow/21683376.cms

[8] Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[9]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[11] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)

ஜூலை 14, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)

Solar scam details - The Hindu - Graphics

படித்தவர்கள் நிறைந்த கேரளாவில் சூரிய ஒளி ஊழல்: சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று அரசாங்கம் கோடிகளைக் கொட்டி திட்டங்களை வகுத்துள்ளது. இதில் ஊக்கத்தொகை, வரிவிலக்கு, சுங்கவரி விலக்குபோன்ற சலுகைகள் முதலியனவும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டங்களைப் பற்றி சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன[1]. ஏனெனில், முதலில் அதிகமாக முதலீடு செய்தால், குறைவாகவே பலன் கிடைக்கும். அதாவது ஒரு வாட் மின்சாரத்தின் விலை மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், நெடுங்கால வைப்பு நிதிபோல பணத்தைப் போட்டு வைத்தால் பலன் கிடைக்கும் என்று, பணம் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், கேரளாவில் இதை வைத்துக் கொண்டு கோடிகளில் ஊழல் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Chandys two aides arrested

அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் ஊழல் ஈடுப்பட்டுள்ளது: கேரளாவின் அரசியல்வாதிகள் மத்திய அதிகமான தாக்கம் கொண்டிருப்பவர்கள். சோனியா சர்வ வல்லமை படைத்த தலைவராக இருப்பதனால், கிருத்துவர்கள் பெரிய பகுதிகளில் இருக்கின்றனர். இதனால், சாதாரணமான விஷயத்திற்கு கூட தமது அதிகாரத்தை, அரசியல் நெருக்கத்தைக் காட்டிக் கொண்டு வருவர். இந்நிலையில் பிஜு ராதாகிருஷ்ணன் என்பவர், சரிதா நாயர் என்ற பெண்மணியுடன் சேர்ந்து கொண்டு சூரிய ஒளி பெனல் திட்டம் மூலமாக கோடிகளை ஏமாற்றியுள்ளதாக விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு கவர்ச்சிகரமான நடிகைகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அந்நடிகைகளுடன் மத்திய அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களின் தொடர்புகள்ளும் உள்ளன.

Saritha-S-Nair - IE photo- Solar scam

சரிதா நாயரின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள்: பிஜு ராதாகிருஷ்ணன் டீம் சோலார் ரெநியூபல் எனர்ஜி சிஸ்டம்ஸ் [Team Solar Renewable Energy Systems] என்ற கம்பெனியை தடபுடலாக ஆரம்பித்தார்[2]. அக்கம்பெனியின் கிளைகளும் மந்திரிகள், நடிகைகள் என்று வைத்து ஆரம்பிக்க வைக்கப் பட்டன. ஊடகங்களில் பிரமாதமாக விளம்பரமும் செய்யப்பட்டது. அரசில் தொடர்புள்ள சரிதா நாயர், லட்சுமி நாயர், நந்தினி நாயர் என்று ஆறு பெயர்களை உபயோகப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக மும்தாஜ் என்ற பெயரை உபயோகப் படுத்தி, டீம் சோலார் கருவிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டு வியாபாரப் பேச்சுகளை நடத்தியுள்ளார். வெற்றிகரமாக பணத்தையும் பெற்றுள்ளார். சரிதா அமைச்சர்களை “மாமா” என்றுதான் அழைப்பாராம். அந்த அளவிற்கு நெருக்கம் இருந்தது[3]. யாரிடம் பணம் உள்ளது என்று அறிந்து அவர்களிடம் சென்று சோலார் பெனல் திட்டதில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்வாராம். சிலரிடம் தனது யுக்திகளைப் பயன்படுத்தி மயக்கவும் செய்வாராம். அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்பொழுது ரகசிய கேமரா மூலம் அக்காட்சிகளை படமெடுத்து, அவற்றைக் காட்டி, அவர்களை மிரட்டியும் பணமுதலீடு செய்ய வைத்திருக்கிறார். நிறையபேர் புகார் கொடுக்காமல் இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் தங்களுடைய கருப்புப் பணத்தை இவ்வாறு முதலீடு செய்து வெள்ளையாக்கலாம் என்று நினைத்தனர்[4]. ஆனால், இப்பொழுது பிரச்சினை பெரிதானவுடன் மைனமாகி விட்டனர். பாதிக்கப்பட்ட சிலரே புகார் அளித்துள்ளனர்[5].

Salu with Biju - Solar scam-before arrest

ஷாலு மேனன் – கவர்ச்சிகர வியாபாரம் பெருகியது: ஷாலு மேனன் ஒரு நடிகை, நாட்டியம் ஆடுபவர், கோரியோகிராபர் ஆவர். இவர் பல அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். இதனால் சென்சார் போர்டின் உறுப்பினர் பதவியினையும் பெற்றார். ஜெய கேரளா நடனப் பள்ளி[6] என்ற நாட்டியப்பள்ளியை பதனம்திட்ட மாவட்டம் முழுவதும் பல கிளைகள் வைத்து நடத்தி வந்தார். அங்கு நடனம், பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டது[7]. டீம் சோலார் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர் என்று பிஜுவால் அறிமுகப்படுத்தி வைக்கப் பட்டார். சரிதா நாயருடன் பிஜு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும், ஷாலுவுடன் இருந்தது மற்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன[8].

Solar scam - more names of actresses

உத்திரா உன்னி டீம் சோலாரின் பிராண்ட் அம்பாசிடரா?[9]: உத்திரா உன்னி என்ற இன்னொரு நடிகையின் பெயரும் இவ்விவகாரத்தில் அடிபடுகிறது. சென்னை-தில்லி சென்றுவர விமான டிக்கெட்டுகள் பிஜு-சரிதாவினரால் ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் வாங்கப் பட்டுள்ளன. அவை உத்திரா உன்னி செல்வதற்காக வாங்கப் பட்டுள்ளன. ஆனால், கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதால், அந்த டிராவல் ஏஜென்சி உத்திரா உன்னி மேல் புகார் கொடுத்துள்ளது. மேலும் பேஸ்புக்கில் உத்திரா உன்னி, டீம் சோலார் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்திரா உன்னி தான் பிராண்ட் அம்பாசிடர் இல்லை, ஆனால், அக்கம்பெனியின் விளம்பரத்தில் நடித்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். முக்தா என்ற இன்னொரு நடிகையும் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் கொடுத்தார்[10]. இதில் வேடிக்கையென்னவென்றால், ஷாலு மேனனே தன்னை பிஜு ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளது தான்!

Saritha has contacts with ministers and Chennitala

அரசியல் தொடர்புகள் விரியும் மர்மங்கள்: டீம் சோலார் ஊழல் வழக்கில் ரஷீக் அலி, மனாகாட், திருவனந்தபுரம் என்ற நபர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது[11]. இதனையடுத்து ஷாலு மேனன் என்ற அந்த நர்த்தகி மற்றும் நடிகை வெள்ளிக்கிழமை 05-07-2013 கோட்டயத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டிலிருந்து தம்பனூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்[12]. திருவனந்தபுரம் மேஜிஸ்ட்ரேட் ஷாலு மேனனுக்கு ஜாமின் கொடுத்தால் தனக்குள்ள அரசியல் சக்தியினால் சாட்சிகளை களைத்துவிடுவார் என்று அவரது ஜாமினும் நிராகரிக்கப்பட்டது[13]. இடதுசாரிகள் உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த நடிகைக்கும் தொடர்பு உள்ளது என்று கூறிவருகிறது. திரிசூரில் ஒரு பெரிய வீடு கட்டி, கிருகபிரவேஷம் செய்தபோது, அமைச்சர் வந்திருக்கிறார்[14], அதனால், அவர் இந்நடிகையை இவ்வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவி வருகிறார் என்று குற்றஞ்சாட்டி வருகின்றன[15]. ஷாலு மேனன் மற்றும் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் டீம் சோலார் கூட்டத்தில் பங்கு கொண்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன[16]. கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி, எர்ணாகுளத்தில் உள்ள பிஜுவின் வீடு, டீம் சோலார் அலுவலகங்களில் (திருபுனித்துரா, ஆலப்புழா, திரிசூர்) சோதனை நடத்தப் பட்டது. பல ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன[17].

The office of Team Solar on Chittoor Road in Kochi raided on Sunday 16-06-2013

நடிகைகளுடான தொடர்புகள், சேர்ந்து வாழ்தல், கொலை முதலியன: பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயருடன் சேர்ந்து வாழ்வதை அவரது மனைவி ரேஷ்மி எதிர்த்ததால், 2006ல் கொலை செய்தான். சென்ற மாதம் ஜூன் 17 அன்று அதற்காக கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டான்[18]. இப்பொழுது இந்த சோலார் ஊழலில் பிஜு, சரிதா மற்றும் கே.பி. கணேஷ்குமார் என்ற நடிகர்களை இழுத்துள்ளான். கைது செய்யப்பட்டபோது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சொல்லிக் கொண்டான்[19]. ஏற்கெனவே கணேஷ்குமாரின் மனைவி மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சரிதா நாயரே கணேஷ்குமாரின் முந்தைய மனைவி அல்லது சேர்ந்து வாழ்ந்திருக்கிறார் என்று கேரள ஊடகங்கள் கூறுகின்றன[20]. கே.பி. கணேஷ்குமார் முந்தைய மந்திரியும் கூட. பெண்களைக் கொடுமைப் படுத்தினார் என்பதனால் பதவி விலக நேர்ந்தது. கே. சி. வேணுகோபால், மத்திய அமைச்சரின் தொடர்பும் இதில் காணப்படுகிறது[21]. அவர் தான் என்றுமே உதவியதில்லை என்று மறுத்தாலும், நடுராத்திரி வேளைகளில் சரிதாவுக்கு போன் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[22]. முன்பு கே. சி. ஜோசப் சரிதாவின் கோட்டயம் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார்[23]. இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்பு கொண்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன. சரிதா குறைந்த பட்சம் ஆறு கேரள மந்திரிகளுடன்[24] போனில் பேசியுள்ளதற்கு[25] ஆதாரங்கள் உள்ளன[26].

Saritha has contacts with ministers and Chennitala2

சரிதா பற்றி முதலமைச்சரிடம் பேச வேண்டிய அளவிற்கு என்ன விஷயம் இருக்கிறது?: இன்றைக்கு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் என்பது சிலரின் வழக்கத்தில் வந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே “மனைவி-துணைவி” என்ற சித்தாந்தங்கள் உள்ளன. இவற்றை தமிழகத்தில் நாத்திகம் என்று சொல்லிக் கொண்டு நடிகர்-முதலமைச்சர் என்று பின்பற்றப் பட்டு வருகிறது. இதெல்லாம் புரட்சி என்று சொல்லிக் கொண்டாலும், சமூகசீரழிவிற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்தகைய கூடா தாம்பத்திய உறவுமுறைகள் கேரளாவிலும் உள்ளது போலிருக்கிறது. இங்கு பிஜு, கே.பி. கணேஷ்குமார், சரிதாவுடன் கொண்டுள்ள உறவு பற்றி சாண்டியுடன் ஒரு மணி நேரம் பேசியதாக கூறியுள்ளான்[27]. தான் குற்மற்றவன் என்றும் சரிதாவின் கணேஷ்குமாருடைய தொடர்புகளால் தான் இப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று பிஜு கூறியுள்ளான்[28]. சாண்டி இதைப் பற்றி ஒன்றும் கூறாவிட்டாலும், காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் பிஜுவை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததை ஒப்புக் கொள்கிறார்[29]. இதனால் உம்மன் சாண்டி, சரிதா-கணேஷ்குமார் இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது[30]. என்ன இருந்தாலும், தன்னுடன் வாழும் பெண்னைப் பற்றி உம்மன் சாண்டியுடன் பேச வேண்டிய அவசியம் என்ன? மேலும் தனது மனைவியை 2006லேயே கொலை செய்துள்ளான் என்ற பிஜுவுடன் என்ன பேச்சு வேண்டியுள்ளது?

வேதபிரகாஷ்

© 13-07-2013


[3] Allegedly Saritha’s clout in power circles was such that she even used to address one of the LDF ministers as ‘Uncle’

[4] ஶ்ரீஜன் என்ற டைம்ஸ்-நௌ நிருபர் இவ்விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளார். அந்த டிவி செனலும் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. “Sleaze, scam and scandal” என்ற நிகழ்ச்சி திரும்ப—திரும்பக் காட்டப்பட்டுகிறது.

[5] CNN-IBN, NDTV, Headlines Today, News-X முதலிய செனல்களில் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவையும் இங்கு எட்டுத்தாளப்பட்டுள்ளன.

[6] JAYAKERALA SCHOOL OF PERFORMING ARTS, OPP.N.S.S COLLEGE, PUZHAVATHU ROAD, CHANGANNACHERRY, PH: +91 481 2421487, 3205111; Mob: + 91 9387611137
jayakeralachry@gmail.com; http://jayakerala.org/

[7] She owns her own dancing school named Jaya Kerala School Of Performing Arts. It has branches almost in every part of Pathanamthitta District, Kerala. It also taught music, both vocal and non-vocal apart from all types of dancing. Read more at: http://entertainment.oneindia.in/malayalam/news/2013/shalu-menon-was-to-marry-biju-radhakrishnan-113922.html#slide234889

[14] ccording to the latest reports, Home Minister Thiruvanchoor Radhakrishnan is said to have visited the residence of serial actress Shalu Menon. But the visit is said to have been made on an occasion other than the house warming.  According to Thiruvanchoor Radhakrishnan, he paid a visit to Shalu Menon’s house, “not on the occasion of her housewarming, but on route to a visit to Amritanandamayi Mutt.” “Party activists who were in the area called me over. Also I know Shalu Menon’s grandfather Tripunithura Aravindaksha Menon. Otherwise there is no way that I know her,” said Thiruvanchoor Radhakrishnan. “When you are a minister, there are occasions like housewarming and marriages, which cannot be avoided. We cannot find out if those persons are involved in any case, before we set out for these functions,” he said. “All I did was spend around two minutes in Shalu’s home. Otherwise there is no other connection. I am not related to her by blood or any other way. In fact there have been other political leaders from other parties too, that day,” he said.

http://www.janamtv.com/news/Thiruvanchoor_Radhakrishnan_has_visited_Shalu_Meno_116274.php

[16] Images of Menon and Radhakrishnan attending a meeting of the solar panel company also appeared in the media. Reports also surfaced that Radhakrishnan had given a good amount of the money to Menon, and also purchased expensive gifts for her.

http://indialocalnews.in/2013/07/06/actress-shalu-menon-produced-in-court/

[20] இதைத் தவிர சரிதா நாயருக்கு 10 பேர் கணவர்கள் இருந்தனர் என்றெல்லாம் மலையாள ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

http://www.marunadanmalayali.com/index.php?page=newsDetail&id=16221

[21] “Con woman” Saritha S Nair’s estranged husband Biju Radhakrishnan on Saturday dropped a bombshell saying former minister K B Ganesh Kumar and Union minister K C Venugopal had illicit relationships with his wife and that it was Ganesh who destroyed his  family and their solar power business.

http://newindianexpress.com/states/kerala/Callgate-Saritha-hubby-targets-Ganesh-Venugopal/2013/06/16/article1637437.ece

[22] Union minister of state for Civil Aviation and Energy K C Venugopal claims he never helped her, though records of late calls from Saritha to him have been found.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

[23]  K C Joseph, Kerala’s culture minister inaugurated Saritha’s Kottayam office.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

[24] Phone call list of solar cheating scam accused Sarita S Nair made available is sure to give sleepless nights to many ministers. The phone list which first mentioned calls made to the chief minister and the home minister has now extended to some more ministers and KPCC president Ramesh Chennithala. On Thursday, when the phone call list was made available to the media, Ramesh Chennithala and union minister K C Venugopal, state ministers Aryadan Muhammed, K C Joseph, Adoor Prakash, M P Anilkumar, Shibu Baby John and MLAs P C Vishnunath, Benny Behan, Hiby Edin, former minister Moncy Joseph, congress leaders Shanimol Usman, T Sidhique among others figured in the list. The calls were made ranging from a few minutes to a longer duration, according to available documents.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137684

[28] The prime accused in the solar cheating case Biju Radhakrishnan had revealed to a private TV channel on Saturday that he is innocent and that his wife Sarita S Nair had illegal links with former minister K B Ganesh Kumar and that was the reason for all the present issues. Biju revealed that after the inauguration of his office in Coimbatore, Ganesh and Sarita had stayed together in a hotel. It was the managers who had revealed to him about their relationship. Records revealing the teleconversations between Sarita and Ganesh would be given to P C George later, Biju said.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137050

[29] Causing further trouble for the CM, Biju claimed he had met the chief minister once for an hour-long discussion on Ganesh’s affair with Saritha. Chandy is yet to reveal the details. However, he said that Biju was referred to him by Congress MP M I Shanavas.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

மே 4, 2013

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

கர்நாடகதேதல் – 2013: தென்னிந்தியாவில், முதன் முதலாக பீஜேபி அரசு அமைந்த மாநிலமாக கர்நாடகனம் உள்ளது. ஆரம்பத்தில் நன்றாக நடந்து கொண்டிருந்த அரசு, பிறகு ரெட்டி சகோதரர்கள் மற்றும் எடியூரப்பா முதலியோர்களது ஊழல் விவகாரங்களினால், கக்கள் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தனர். எடியூரப்பா பிஜேபியை விட்டு விலகி, தனி கட்சி ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. பிரியபட்டணா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 223 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி கடந்த 15 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்[1].

பிஜேபிசார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: பா.ஜனதா சார்பில் ராஜ் நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, உமா பாரதி, வருண்காந்தி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்மந்திரிகளும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். முக்கியமாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் பிரசாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  பா.ஜனதா தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலை பற்றி அதிகம் பேசினர். காங்கிரசை இலக்காக வைத்து கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரசால் நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ்சார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: காங்கிரஸ் சார்பில் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் மத்திய மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நட்சத்திரம் ராகுல் காந்தி பா.ஜனதா அரசு மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். பா.ஜனதாவை குறி வைத்தே அவரது பேச்சு இருந்தது. பா.ஜனதாவின் ஊழல், சுரங்க முறைகேடுகள் குறித்தும், கர்நாடகத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். இறுதியாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று குல்பர்கா மற்றும் பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

மோடியின்வித்தைபலிக்குமா?: அதேபோல் பா.ஜனதாவின் முன்னணி தலைவர் நரேந்திமோடி நேற்று மங்களூர் மற்றும் பெல்காமில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். ஜனதா தளம் (எஸ்), கர்நாடக ஜனதா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறந்த பிரசாரம் 04-05-2013 அன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

சுயேச்சைகளின்உதவியில் 2008ல்ஆட்சிஅமைத்தபிஜேபி: கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்று 33.86 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.59 சதவீத ஓட்டுகளையும், ஜனதா தளம் (எஸ்) 28 இடங்களில் வெற்றி பெற்று 19.13 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

எஸ்.எம். கிருஷ்ணாஅதிருப்தி: கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா, தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்திருக்கிறார்[2]. அதிருப்தியில் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார், ஸ்ரீரங்கபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் ரவீந்திர ஸ்ரீகண்டய்யாவை மாற்றிவிட்டு தமது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகர் அம்பரீஷ் திடீரென்று போர்கொடி உயர்த்தினார். அவரது நெருக்கடிக்கு பணிந்து கட்சி மேலிடம் அவரை மாற்றிவிட்டு அம்பரீசின் ஆதரவாளர் லிங்கராஜுக்கு சீட் வழங்கியது. தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். வீரப்ப மொய்லி, கிருஷ்ணாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்[3]. 25 வருடங்களுக்கு முன்பு, இவரே காரில் லட்சங்களை லஞ்சமாக வாங்கியபோது, அகப்பட்டார். ஆனால், இன்று உத்தமர் போல அமைச்சர் பதவியில் இருக்கிறார்.

The first major hitch in his career came in 1984, when as leader of the opposition, he was accused by an independent MLA of trying to bribe Janata Party MLAs to defect to the Congress. The infamous Moily tapes surfaced soon, with then chief minister Ramakrishna Hegde having a field day, coining such sobriquets for Moily as “oily Moily”.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

லிங்காயத், ஒக்கலிகாவாக்குகளாகஏங்கும்கட்சிகள்[4]: கர்நாடகத்தில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா கவுடாக்களின் வாக்குகள் தான் மாநில அரசியலை தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சேர்த்த எதியூரப்பா இப்போது தனிக் கட்சி தொடங்கிவிட்டார். மேலும் கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவையும் பாஜக முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இதனால் சிதறும் லிங்காயத்து சமூக வாக்குகள் மற்றும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடைய செய்ய கவுடா சமூகத்த்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. இதனால் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். ஆனாலும் தாம் நினைத்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் செயல்படவில்லை என்ற அதிருப்தியில் கிருஷ்ணா இருக்கிறார். இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள் என்னவாகும் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது[5]. ஜனதா தளமும் இதை நம்பியுள்ளது[6]. லிங்காயத், ஒக்கலிகா ஓட்டுகள் சிதறுமா, அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்பது புதன்கிழமை தெரிந்து விடும்[7].
ராகுலால்அடக்கமுடியாதமேடைசண்டை: கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (01-05–2013) 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார்.  மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார். இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்: ராகுல், “காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்”, என்று ஒருமுறை சொன்னாராம்[8]. ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார்[9]. பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார். ‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள்: ஜாதியத்தில் ஜனநாயகம் ஊறிப்போனப் பிறகு, மதமும் சேர்கிறது. ஆமாம், தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பிஜேபி மதவாத கட்சி என்று காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் சொல்லிவரும் நிலையில், அவர்களே மதவாத கட்சிளுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலில் போடியிடுவது, வாக்குறுதி கொடுத்து ஓட்டுகள் வாங்குவது, முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்தி, மற்றவர்களைப் பிரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோருமே செக்யூலார்ப் பழங்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வர்.

வேதபிரகாஷ்

04-05-2013


[8] When Rahul Gandhi said, “Congress can get defeated only by the Congress”, his partymen had seemed surprised. Today, senior Congress leaders are ruing that their colleagues and party workers are on the verge of proving their leader right.

http://governancenow.com/news/regular-story/congress-so-near-yet-so-far-battle-karnataka-assembly