Archive for the ‘ராமகிருஷ்ண ராவ்’ Category

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

Tiruvalluvar Invitation-1

திருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.  இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

Tiruvalluvar Invitation-2

சாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர்! வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.

“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.

தாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.

Mylapore function 08-06-2017-13

நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:

காலை: 9.15 மணி வழிபாடு

காலை: 10.30 மணி விருது வழங்கும் விழா

இறைவணக்கம்

வரவேற்பு

விழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.

முன்னிலை:

திரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.

முனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்

திரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.

திருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக

விருது பெறுபவர்

கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

ஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக

விருது பெறுபவர்

அ. சுபாஷ் அவர்கள்

விருது வழங்கி வாழ்த்துரை

திரு. இல. கணேசன் அவர்கள்.

தலைவர் ஆசியுரை

நன்று நவிலல்

நாட்டு வாழ்த்து.

தலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்

மதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.3 -twitter

செயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:

  1. திரு பால. கௌதமன்.
  2. வழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.
  3. மா. மணிவாசகம்.
  4. சிவாலயம் ஜெ. மோகன்.
  5. கவிஞர் முத்துலிங்கம்
  6. திரு எஸ். இராமச்சந்திரன்.
  7. வழக்கறிஞர் ஜி. முருகவேல்.
  8. வழக்கறிஞர் பால சீனிவாசன்
  9. திரு பி. ஆர். ஹரன்.
  10. டால்பின் திரு ஶ்ரீதர்
  11. திரு ஆர் சீனிவாசன்
  12. திரு ஆர். பரிதிமால்கலைஞர்.
  13. செங்கோட்டை ஶ்ரீராம்

பொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.

தொடர்புக்கு: 044 – 4201 6242; +91 95518 70296

Muthulingam-poet, Nambi Narayanan,......, .....

அறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:

  1. அதிபர், காசித்திருமடம், திருப்பனந்தாள்.
  2. டாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,
  3. திரு செகந்நாதன். புதுச்சேரி.
  4. திரு சியாம் சுந்தர், புதுச்சேரி.
  5. திரு சௌந்தரராசன், சென்னை.
  6. திரு முருகவேள் சென்னை.
  7. திரு இராதாகிருஷ்ணன், குடந்தை.
  8. முனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.
  9. திரு. கணேசன், குடந்தை.
  10. திரு திருநாவுக்கரசு குடந்தை.
  11. திரு கண்ணன் குடந்தை.

இப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2017

திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

[1] Dr M.Santhoshkumar, MSc PhD, Founder Associate Director, Center for Creativity & Innovation in Education, Sri Lathangi Vidhya Mandir Hr Sec School, Coimbatore. (Formerly Assistant Professor in Biochemistry in RVS College and PSG College- 2011-2016). ABVP activist.

https://www.facebook.com/drmsanthosh/; https://twitter.com/SanthoshMuthu16

[2]  பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

16 Department for Party Journals and Publications Sami Thyagarajan State Convenor , Tamil Literature Cell

95518 70296