சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!
சிவப்பு கலர் புடவை புத்தகத்திற்கு காங்கிரஸார் எதிர்ப்பு: “தி ரெட் சாரி” [The Red Sari] என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜாவியர் மாரோ [Javier Moro] எழுதியுள்ள சோனியாவின் வரலாற்று நூலுக்கு எதிராக காங்கிரஸ் பயங்கர பிரசார யுத்தத்தை [terror campaign] துவக்கி இருப்பதாக நூலாசிரியர் மாரோ குற்றம் சாட்டியுள்ளார்[1]. வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சோனியாவின் குழந்தை பருவம், காதல் வாழ்க்கை, இந்திரா காந்தி குடும்பத்தின் மருமகளாக ஆனது, அரசியல் தலைவராக உருவெடுத்தது, பிரதமர் பதவியை உதறியது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன[2]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “சோனியா தொடர்பான இந்த புத்தகம் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் இந்தியாவிற்குள் வராமல் தடுக்க காங்கிரசார் பெரும் பகீரத பிரயத்தனம் செய்தனர். ஆங்கில
காங்கிரஸ் எதிர்ப்பு 2010 முதல் 2015 வரை: புத்தக வெளியீட்டாளர்களை, ஒரு காங்கிரஸ் தலைவர் பகிரங்கமாகவே மிரட்டினார். கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் சட்ட நோட்டீஸும் அனுப்பியது[3]. அப்புத்தகம் அயல்நாடுகளில் கூட விற்கக்கூடாது என்று காங்கிரஸார் கூக்குரல் இடுகின்றனர்[4]. அபிஷேக் மனு சிங்வி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்போம் என்று நோட்டீஸ் தான் அனுப்பியிருக்கிறார், அது நாங்கள் அப்புத்தகத்தம் வெளியிடுவதைத் தடுக்க முடியாது, என்று ரோலி பதிப்பகத்தினர் கூரியுள்ளனர். மேலும், ஜாவியர் மாரோ தான் 2014 நடந்த விவரங்களை சேர்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்[5]. அதன்படியே 15-01-2015 அன்று அப்புத்தகம் வெளியிடப்பட்டது[6].
காங்கிரஸ் இ–மெயில் மூலம் ஸ்பெயின் பதிப்பகத்தாருக்கு மிரட்டல்[7]: கருத்துரிமை, பேச்சுரிமை என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நேரத்தில், இப்புத்தகத்தை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், பிறகு அமைதியாகி விட்டதும், வியப்பாக இருக்கிறது. அந்த புத்தகத்தை அனைத்து கடைக்காரர்களிடமிருந்தும் உடனடியாக திரும்ப பெறுமாறு, ஸ்பெயின் நாட்டு வெளியீட்டாளர்களுக்கு இ-மெயில் மூலம் காங்கிரசார் மிரட்டல் கடிதம் அனுப்பினர். இவ்வளவுக்கும் அப்போது இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை; ஸ்பேனிஷ் (2008), இத்தாலி மற்றும் இதர மொழிகளில்தான் வெளியிடப்பட்டிருந்தது. இத்தகைய மிரட்டல் இ-மெயில்களால், 6 மாத காலத்திற்கு நான் இ-மெயில் பார்ப்பதையே நிறுத்தியிருந்தேன். சோனியாவின் இமேஜைப் பாதுகாக்க காங்கிரசார் இத்தகைய பயங்கர நடவடிக்யையில் இறங்கினர். தேவையில்லாமல், இவ்விசயத்தை காங்கிரஸ்காரர்கள் ஊதிபெரிதாகி விட்டனர், என்று கூறியுள்ளார்[8].
சோனியா பிஸ்ஸா சாப்பிடுவது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை: ஜாவியர் மாரோ தொடர்கிறார், “அவர்கள் சோனியாவை ஒரு ரோபோவாக மாற்றியிருந்தனர். சோனியாவை ஒரு இந்தியர் என்று நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினர். உண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். உண்மையில் சோனியா இந்தியராக மாற முயற்சி செய்திருக்கக்கூடும். ஆனால் ஒருமுறை நீங்கள் பிஸ்ஸா சாப்பிட ஆரம்பித்தால், எப்போதும் பிஸ்ஸாவையே சாப்பிடுவீர்கள். நான் ஒருமுறை டில்லியில் உள்ள “லா பிஸ்ஸா” என்ற உணவகத்திற்குச் சென்றபோது, அங்கு சோனியாவும் அவருடைய குடும்பத்தினரும் இத்தாலிய உணவை விரும்பி உண்டு கொண்டிருந்ததைப் பார்த்தேன். இது இயற்கையான ஒன்று. இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கலாம்; ஆனால் அவர் அப்போதும் இத்தாலியர்தான். ஆனால் காங்கிரஸ்தான் அவருடைய இத்தாலிய தன்மைகளை மாற்ற முயற்சி செய்தது. அவரை கடவுளாக சித்தரிக்கும் முட்டாள்தனமான முயற்சியில், அவரைச் சுற்றியிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். அது சரி இந்த புத்தகத்தில் காங்கிரசாருக்கு பிடிக்காத விஷயங்கள் என்னதான் இருக்கிறது?”.
விமான பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பிய சோனியா விமானவோட்டியை மணந்து கொண்டது: ஜாவியர் மாரோ விளக்குகிறார், “இத்தாலிய நகரான டோரினோ அருகே ஒரு விவசாயியாக இருந்து பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறிய ஒருவரின் மகளாக பிறந்த சோனியா, அலிடாலியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பினார். இத்தகைய ஒருசாதாரண இத்தாலிய பெண்ணான அவர் எப்படி இந்தியாவின் ஆட்சியாளராக, உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக மாறினார் என்பதையே “தி ரெட் சாரி” என்ற இந்த புத்தகம் விவரிக்கிறது. சோனியாவை ராஜிவ் திருமணம் செய்து கொண்டபோது, சோனியாவை இந்தியர்கள் புலிகளுக்கு இரையாக்கி விடுவார்களோ என்று சோனியாவின் தந்தையான ஸ்டெபனோ மெய்னோ அஞ்சினார். சோனியா உயர்குடியில் [ aristocrat] பிறந்தவரல்ல; ஆனால் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக காட்ட காங்கிரசார் முயற்சி செய்தனர். என்னுடைய உறவினரான டொமினிக் லேப்பியர் (“இரவில் கிடைத்த சுதந்திரம்” என்ற நூலை எழுதியவர்) பத்ம பூஷன் விருது பெற்றபோது, காங்கிரஸ் தலைவரை (சோனியா) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சோனியாவிடம் சொன்னதாவது, “நான் உங்களுடன் 4 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்”, என்றார். அதாவது அவர் தொடர்பான இந்த புத்தகத்தை எழுதுவதிலரந்த அளவிற்கு ஆழ்ந்து மூழ்கி போயிருந்தார் என்ற கருத்தில் அவ்வாறு கூறினார். அதைக் கேட்டதும் சோனியா அதிர்ந்து போனார்[9]; பின்னர் சமாளித்துக் கொண்டு சிரித்தார். என்னிடம் அவர் கூறிய ஒரே தகவல்: “நான் எப்போதுமே என்னைப் பற்றி எழுதப்படும் எதையுமே படிப்பதில்லை”.
ஜாவியர் மாரோ காங்கிரஸ் என்னை ஏன் எதிர்க்கிறர்கள் என்று தெரியவில்லை: சோனியா எப்போதுமே ஊடகங்களிலிருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார்; தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை வெறுத்தார்; அவரைச் சந்திக்க நான் முயன்றபோதெல்லாம், அவருடைய அலுவலக, வீட்டுக் கதவுகள் மூடியே இருந்தன. “இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது, சோனியா தனது குழந்தைகளுடன் இத்தாலிக்கு திரும்ப விரும்பினார் ” என்று நான் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான், காங்கிரசார் கடுமையாக எதிர்த்தனர். கோடிக்கணக்கான இந்தியர்களை ஆட்சி செய்யும் தான் ஒரு இத்தாலியர் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இதைத்தான் காங்கிரஸ் மறைக்க முயற்சி செய்தது. சோனியாவை சாதாரண ஒரு பெண்ணாக பார்த்து எனக்கு தெரிந்த விவரத்தை அனைத்தும் உண்மை மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் அவதூறாக ஏதும் சொல்லப்படவில்லை[10]. சோனியா பற்றி நல்லவிதமாகத்தான் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும், இதனை காங்கிரசார் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை[11]. இவ்வாறு அவர் கூறியுள்ளார்[12].
மோடியும், சோனியாவும்: ஒரு ஆங்கில டிவி (ஐ.பி.என்.லைவ்) செனலுக்குக் கொடுத்த பேட்டியில் கூட, தானாக, சோனியாவைப் பற்றி எந்தவித விசயத்தையும் தவறாகக் கூறவில்லை, மற்றும் சர்ச்சைக்குரியது என்று சொல்லப்படுகின்ற விசயங்கள் எல்லாம், ஏற்னவே எல்லொருக்கும் தெரிந்தவை மற்றும் புபுல் ஜெயகர் போன்றோரின் புத்தகங்களிலும் அவ்விவரங்கள் அடங்கியுள்ளன. நிருபர்வ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மறுக்க்லாமல், நேரிடையாகவே பதிலளித்தார். “மோடி தனது கீழிருந்து மேலே வந்தநிலையை மறைக்காமல், தான் ரெயில்வே நிலையத்தில், டீ விற்றுக் கொண்டிருந்ததை தெரிவித்தார், ஆனால், காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் ஆரம்பத்தை மறைக்க முயல்வது ஏன்”, என்று பதிலளித்தார். “மோடியைப் பற்றி புத்தகம் எழுதுவீர்களா?”, என்று கேட்டதற்கு, எழுதுவேன் என்றார்!
ஜாவியர் மாரோவும், பெருமாள் முருகனும்: ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்கள் எதிர்க்கப் பட்டிருக்கின்றன, ஆனால், சோனியா புத்தக எதிர்ப்பு நமது நாட்டிலேயே சிறியதாக்கி, அமுக்கி வாசி, அமுக்கியே விட்டனர். ஆனால், பெருமாள் முருகன் புத்தக விவகாரமோ, பெரியதாக்கி, அனைத்துலக விசயமாக்கப்பட்டுள்ளது. “தி ஹிந்து”வின் இரட்டை வேடமும் வெளிப்படுகிறது. சென்னையில், ஏதோ இலக்கிய விழா நடத்துகிறோம் என்று, தினம்-தினம், “மாதொருபாகன்” புத்தகத்தைப் பற்றி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. ஆனால், “சிவப்புப் புடவையை”ப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இருவேளை சிவப்பு நிறம் என்பதனால், அப்படி அனுதாபத்துடன் (கம்யூனிஸ சார்பு என்பதால்) நடந்து கொண்டதா என்று தெரியவில்லை. அவ்விழாவில் பங்கு கொண்ட பிரபலங்களுக்கு இதைப் பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. இருப்பினும் மிகசாமர்த்தியமாக அமைதி காத்தனர், ஆனால், பெருமாளைப் பற்றி இன்று வரை “தி ஹிந்து” செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
[1] தினமலர், சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் ; காங்., பயங்கர எதிர்ப்பு “யுத்தம்”: எழுத்தாளர் வேதனை, ஜபனவரி.19, 2015.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127575
[3] http://tamil.oneindia.com/news/india/controversial-sonia-gandhi-book-now-in-india-219023.html
[4] http://www.india.com/news/india/the-red-sari-the-story-behind-the-controversial-book-on-sonia-gandhi-251335/
[5] http://www.thehindu.com/news/national/did-not-obstruct-book-on-sonia-congress/article6794558.ece
[6] http://timesofindia.indiatimes.com/india/Moros-controversial-book-on-Sonia-hits-stands-in-India/articleshow/45904070.cms
[7] http://timesofindia.indiatimes.com/india/Cong-launched-a-terror-campaign-against-my-book-on-Sonia-Gandhi/articleshow/45918539.cms
[8] http://indianexpress.com/article/india/india-others/sonia-book-blown-out-of-proportion-by-congs-poor-pr-people-moro/
[9] “She is no aristocrat, but Congress wants to make her royalty .” Moro says he’s met the Congress president once when his uncle, Domnique Lapierre (author of `Freedom at Midnight’), was receiving the Padma Bhushan. He walked up to her and said “I’ve been sleeping with you for four years.” He meant he’d been obsessed with her while writing the book. “She was shocked, then managed to laugh. The only line she ever said to me was: ‘We never read anything that’s published about us.'” She abhors the press, hates being talked about and every time he tried to meet her, she was always totally “closed”.
[10] தினகரன், சோனியா புத்தகம் காங். எதிர்ப்பு ஏன் ஆசிரியர் புலம்பல், 18-01-2015,05.56.04, சனிக்கிழமை