Archive for the ‘பீப் பிரை’ Category

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)!

நவம்பர் 18, 2015

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடிஎதிர்ப்பு, இந்தியவிரோதம்இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)!

Samantha Cameron opted for an elegant sari as she joined her husband and Prime Minister Narendra Modi backstage at Wembley

Samantha Cameron opted for an elegant sari as she joined her husband and Prime Minister Narendra Modi backstage at Wembley

மோடி வரவேற்க்கப்பட்டது, மூன்று நாள் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது: இனி மோடியை வரவேற்றவர்களைப் பற்றிப் பார்ப்போம். பொருளாதார முதலீடு மற்றும் அந்நிய நாட்டு நட்புற மேன்பாடு என்ற ரீதியில் வந்த மோடியை வரவேற்க ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து முடிந்தன. இதற்கான பிரத்யேக இணைதளத்தில் எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டன[1]. தீபாவளி நேரத்தில் வருவதால், சிறந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற விதத்தில் ஏற்பாடுகள் நடந்தன[2]. இரு நாட்டு நல்லுறவு மேன்பட அவை உறுதியாக இருந்தன. “ஐரோப்பிய இந்திய போரம்” என்ற அமைப்பால், “யு.கே வெல்கம்ஸ் மோடி” நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன[3]. எண்ணிக்கையில் 414 என்று பல்வேறு நிறுவனங்கள், இயக்கங்கள் வரவேற்கும் குழுக்களில் இருந்தனர்[4]. இங்கிலாந்தில் உள்ள 1.6 மில்லியன் இந்தியா வம்சாவளியினர், இந்நிகழ்ச்சியை கொண்டாட ஆவலாக இருந்தனர். அவ்வாறே வெற்றிகரமாக செய்து முடித்தனர். துரதிருஷ்ட வசமாக, அதே 13-11-2015 அன்று மாலையில், பாரிஸில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால், இவை அமைதியாக நடந்து முடிந்தன. 15-11-2015 அன்று மோடி துருக்கிற்கு ஜி-20 கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

Samantha Cameron dazzled in a patterned sari as she joined her husband and prime minister Modi to greet performers backstage

Samantha Cameron dazzled in a patterned sari as she joined her husband and prime minister Modi to greet performers backstage

பிஹார் தோல்விக்குப் பிறகும் இப்பிரச்சாரம் தொடர வேண்டிய அவசியம் என்ன?: மோடியின் லண்டன் விஜயம் முன்னரே தெரிந்த விசயம். மோடி-எதிர்ப்பு குழுக்களை சட்டப்படிக் கட்டுப்படுத்த, லண்டனில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்பாட்டம் நடத்த உரிமையுள்ளது என்பதனால், குறிபிட்ட இடத்தில் நின்று கொண்டு ஆர்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படியே, அவர்கள் நடத்தி முடித்தனர். ஆனால், மோடி-ஆதரவு கூட்டம் என்பதை விட, உண்மையிலேயே, மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். கேமரூனின் மனைவி சமந்தா, இந்திய பெண்மணியைப் போன்று நெற்றியில் பொட்டு, ஜாக்கெட்-புடவை கட்டிக் கொண்டு வந்தார். இந்திய-இந்து பெண்களே அசந்து போகும் வரையில் வந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 60,000 இந்திய வம்சாவழியினர் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தனர். வாணவேடிக்கைக்குப் பிறகு கலைநிகழ்ச்சி நடந்தது. கேமரூன் சமந்தா தம்பதியர் கலைஞர்களை பாராட்டினார். பிறகு, மோடி வழக்கம் போல பேசி, அனைவரையும் கவர்ந்தார். நிச்சயமாக அந்த அவாஸ் கோஷ்டிகளே வெட்கப்படும் அளவிற்கு நடந்தது. இருப்பினும், நவம்பர் முதல் வாரம் நடந்த விருது திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தைப் பற்றியும் அலச வேண்டியுள்ளது.

Bihar elections - September to October 2015

Bihar elections – September to October 2015

விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரம்செப்டம்பரில் ஆரம்பித்து அக்டோபர் உச்சத்தை அடைந்து, நவம்பரில் முடிந்தது: செப்டம்பர் 4, 2015 அன்று உதய் பிரகாஷ் [Uday Prakash], என்ற இந்தி எழுத்தாளர், தனது சாகித்திய விருதைத் திருப்பியளித்தார்[5]. பிறகு நயந்தாரா ஷெகால் [Nayantara Sahgal], அஷோக் வாஜ்பேயி [Ashok Vajpeyi] விருதைத் திருப்பிக் கொடுத்தனர். கிருஷ்ண சோப்தி, [Krishna Sobti], சஷி தேஷ்பாண்டே [Shashi Deshpande]. இவ்வாறு அக்டோபர் மாதம் வரை 33 பேர் திருப்பிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன[6]. இதில் வார்யம் சிங் சந்து [Waryam Singh Sandhu] என்பவர் அவசரநிலை பிரகடன காலத்தில் காங்கிரஸ் அரசால் சிறையிடைக்கப்பட்டவர். அக்டோபரில் இந்த “திரும்பக் கொடுக்கும் சடங்கு” உச்சத்தை அடைந்தது. நவம்பரில், திடீரென்று அடங்கி விட்டது. அவசரநிலை பிரகடனம், 1984 சீக்கியப் படுகொலைகள், 1989 பகல்பூர் கலவரங்கள், யு.பி.ஏ கோடானு கோடி ஊழல்கள் முதலிவை நடந்த போது இவர்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை.  இத்தகைய முரண்பாடுகளை பலரும் எடுத்துக் காட்டினர்.

Introducing Mr Modi to the thousands of people packed into the stadium, Mr Cameron described the night as a -truly historic moment

Introducing Mr Modi to the thousands of people packed into the stadium, Mr Cameron described the night as a -truly historic moment

எதிர்-கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது: அனுபம் கேர் தலைமையில், விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தை எதிர்த்து, அதாவது அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி கூட்டம்-ஊர்வலத்தை நடத்தினார். அதில் நூற்றுக்கணக்கில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். அரசிடம் விருது வாங்குவது என்பது ஒரு “திரும்ப செய்யும் முறை அல்லாத விசயம்மாகும். ஏனெனில், விருதை திரும்ப கொடுத்து விடுவதால் அதன் மூலம் பெற்ற பெயரையும், புகழையும் திரும்பக் கொடுப்பதாகாது[7]. பலனை அனுப்பவித்தது அனுபவித்தது தானே? சாகித்ய அகடாமி, தன்னாட்சி பெற்ற தனி அமைப்பு. அதன் செயல்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை அதே போல் அரசின் செயல்பாடுகளில், சாகித்ய அகடாமியும் தலையிடுவதில்லை. இதற்கு முன் எத்தனையோ பிரச்னைகள் நடத்திருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளர் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் ஆதரவு இருக்கும் எழுத்தாளர்கள், பரிந்துரைகளின் மீது விருது கொடுக்கப்படுகிறது என்பதும் உண்மைதான்.

A woman proudly shows off her ticket to the event, which saw crowds of supporters descending on Wembley this evening

A woman proudly shows off her ticket to the event, which saw crowds of supporters descending on Wembley this evening

பிஹார் தேர்தல் செப்டம்பரில் ஆரம்பித்து, நவம்பரில் முடிந்தது: பீஹாரில் தேர்தல் நடக்கவிருந்தது, தெரிந்த விசயமே. முதல் கட்டத்திற்கு செப்டம்பர் 16 அன்று அறிவிப்பு வெளியானது. கடைசி கட்ட ஓட்டளிப்பு நவம்பர் 5ம் தேதி முடிந்தது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் கல்பர்கி கொலை எதிர்ப்பு போராட்டம் (ஆகஸ்ட் 30 கொலை), சாகித்திய விருதுகள் திருப்பிக் கொடுத்தது, மாட்டிறைச்சி பிரச்சினை, தாத்ரி விவகாரம் என அனைத்தும் நடந்துள்ளன. இந்நிகழ்ச்சிகளும் காங்கிரஸ் மற்றும் சமஜ்வாடி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தன. அதனால், அவை எப்படி நடந்தன, கொலையாளிகளை ஏன் பிடிக்கவில்லை, சட்டம்-ஒழுங்கு நிலை என்னவாயிற்று என்றெல்லாம் யாரும் கேட்பதாக இல்லை. ஆனால், இவற்றிற்கெல்லாம் “இந்துத்துவ” சக்திகள் தாம் காரணம், குறிப்பாக மோடிதான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

David Cameron and his wife, Samantha

David Cameron and his wife, Samantha

ஆகஸ்ட்.2013லிருந்து, செப்டம்பர் 2015 வரை சாகித்திய விருது பெற்றவர்களுக்கு எந்த உணர்வும் வரவில்லை: ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார். அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருந்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது சந்தேகம் வரவில்லை. காங்கிரஸ் தான் காரணம் அல்லது அதன் தலைவி சோனியா தான் மூலகாரணம் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது சோனியா தான் காரணம் என்று யாரும் அடையாளம் காணவில்லை. ஆக, ஆகஸ்ட்.2013 முதல் பிப்ரவரி 2015 வரைக்கூட, சாகித்திய விருது பெற்றவர்களுக்கு திரும்பகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

Dr Kalburgi was a leading scholar and a well-known rationalist thinker - BBC photo

Dr Kalburgi was a leading scholar and a well-known rationalist thinker – BBC photo

செப்டம்பர் 2015லிருந்து உணர்ச்சிகள் பீரிட்டது எப்படி, ஏன், எதற்காக?: கல்பர்கி பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார். இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது கருத்தூரிமை உள்ளவர்களுக்கும், அக்கருத்துரிமையால் பாதிக்கப்படும் மக்களுக்கும், வெவேறு சட்டங்கள் உள்ளன போலும்! ஆகஸ்ட்.30, 2015 அன்று கல்பர்கி கொல்லப்படுகிறார். இப்பொழுதுதான் உணர்ச்சி திடீரென்று பீரிடுகின்றது.

© வேதபிரகாஷ்

18-11-2015

[1] https://www.ukwelcomesmodi.org/

[2] With the Prime Minister of India, Shri Narendra Modi, due to visit the United Kingdom later this year, the largest Indian diaspora in the world is eagerly waiting in anticipation to deliver the loudest, greatest and most vibrant welcome he has seen outside of India. UKWelcomesModi will bring together individuals from the 1.6 million-strong Indian community in Britain- from all backgrounds, generations and regions – to celebrate two great nations with one glorious future. It is the Diwali event for the family this year- with a cultural showcase featuring the best of Indian and British talent; a landmark speech to be delivered by Prime Minister Modi and a grand finale featuring the biggest fireworks display in the whole country.

[3] UKWelcomesModi pays tribute to the deep ties between India and the UK, highlighting the formidable contribution made by members of the Indian diaspora in all walks of British life. Prime Minister Modi’s already iconic leadership has made waves across the world. UKWeclomesModi is honoured to host this new global visionary who will give us a glimpse of India in years to come as it forges new paradigm of growth and success for not just Asia, but the rest of the world too. Organised by the Europe India Forum and in partnership with Indian cultural and community organisations across the country, the event is set to be the highlight of 2015. The Europe India Forum is a not for profit organisation promoting Europe-India relations for communities, by communities.

[4] https://www.ukwelcomesmodi.org/partners

[5] http://indianexpress.com/article/explained/writers-protest-what-returning-sahitya-akademi-honour-means/

[6] http://indianexpress.com/photo-news/india/here-are-the-33-writers-who-returned-their-sahitya-akademi-awards/

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1375770

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

ஒக்ரோபர் 28, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே  சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரை போடும் போலி வேடங்கள்: புளூ கிராஸ் சொசைடி போன்ற நிறுவனங்களும் இவ்விவகாரங்களில் இரட்டைவேடம் போட்டு வருகின்றன. ஏதோ மிருகங்கள் கஷ்டப்படுவதைப் பற்றி, இவர்கள் கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள், மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோலத்தான் மற்ற ஜீவகாருண்ய சங்கங்கள், அஹிம்சை போதிக்கும் இயக்கங்கள் முதலியன இத்தகைய ஜீகாருண்யம் மற்றும் இம்சைகளை ஆதரிப்பது போல மௌனம் சாதித்து வருகின்றன. “மாமிசம் இல்லாமல் ஒரு நாள்”, என்று போலித்தனமாக, சாது வாஸ்வானி என்ற இயக்கம் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, வருடத்தில் ஒரு நாள், மிருகங்களைக் கொல்லாமல், மற்ற 364 நாட்களிலும் கொன்று சந்தோஷமாக இருக்கலாம் போலிருக்கிறது. பௌத்தர்கள் அஹிம்சை போதித்தாலும், மாமிசம் உண்டுகொண்டுதான் வாழ்கிறார்கள்.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

பக்ரீத் மிருகவதை கண்டுக்கொள்ளப்படாது: நன்றாக எல்லாவித மாமிசங்களையும் உண்டு வாழும் முகமதியர்களும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுவதும், வல்லாளார் பெயரில் கூட்டங்களில் கலந்து கொள்வதும் வினோதமாகத்தான் இருந்து வருகின்றன. இவ்வாறுதான் அஹிம்சை மற்றும் மிருகவதை எதிர்ப்பு போன்றவை உள்ளன. இந்த புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரையுள்ள கோஷ்டிகள் மற்ற மிருகவதைகள் நடக்கும் போது கண்டுகொள்ளமாட்டார்கள். பக்ரீத் போது, ஒட்டகம், பசு, ஆடு-மாடு என்று வெளிப்படையாகவே அறுத்து பலியிட்டு, தோலை உரித்து, ரத்தம் ஓடவைத்து பலி கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவ்வப்போது, சில இரக்கமுள்ளவர்கள், நடிகைகள் முதலியோர், ஏதோ பறவைகள் எல்லாம் துன்பப்படுகின்றன, என்று அவற்றை கூண்டுகளிலிருந்து வெளியே சுதந்திரமாக பறக்கவிட்டோம் என்றும் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இதைப்பற்றி தெரியாதது மாதிரி இருப்பார்கள்.

Beef sale in J and K state - Court ti decide DM

Beef sale in J and K state – Court ti decide DM

பீப் ஈட்டிங் – பசுமாமிசம் உண்ணுதல் பிரச்சினை: சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம் பலவிதங்களில் வெளிப்பட்டு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஊடங்களின் உசுப்பிவிடும் வேலைகள் தான் இதில் அதிகமாக இருக்கின்றன. இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். இதுவரை, இந்த சேனா எங்கிருந்தது என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  பிறகு, கொல்லப்பட்டவரின் மகன் “லவ்-ஜிஹாதில்” ஈடுபட்டான், அதாவது, ஒரு இந்து பெண்ணை காதல் புரிந்ததால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ. ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது[1]. சாப்பிடுகிறேன் என்றால் சாப்பிட்டு விட்டு போகலாம், பிரச்சினையே இல்லை, ஆனால், அதனை, விளம்பரப்படுத்தி, ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதெல்லாம், தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டன. ஊடகங்கள் இவைத்தான் முக்கியமான செய்திகள் போன்று “மாட்டிறைச்சி அரசியல்” என்று தலைப்பிட்டு தினம்-தினம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா?: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது? எதற்காக மாடுகளை வைத்திருக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதனை யார், எதற்காக தீர்மானிக்க வேண்டும் என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது[2]. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்[3]. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர். இப்புகாரை அடுத்து, அங்கு டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்[4]. ஆனால் அங்கு பரிமாறப்பட்டது எருமை மாட்டு இறைச்சி என்று பின்னர் தெரியவந்தது[5]. டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

ban-on-beef-in-maharashtra-cartoon

ban-on-beef-in-maharashtra-cartoon

மலையாளத்தில் கிறுக்கியதும், ஆங்கிலத்தில் எழுதியதும்: கேரள தலைமைச் செயலாளர் ஜி.ஜி. தாமஸ் டெல்லியில் கூறும்போது, “கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது” என்றார். “கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார் ஜி.ஜி. தாமஸ்[6]. ஆனால், இல்லை, நாங்கள் விற்போம் என்று அறிவித்து விட்டது[7]. என்.டி-டிவி தனது செய்தியில், ஒரு மாதிரியாக சொல்வதிலிருந்தே இதில் விவகாரம் இருக்கிறது என்று தெரிகிறது[8]. “Three men who visited the Kerala House canteen yesterday noticed “beef fry” on a handwritten menu on the whiteboard. It was the only dish scribbled in Malayalam, and they wasted no time in calling the police.” நேற்று மூன்று ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். மெனுவில் “பீப் பிரை” என்று கையினால் எழுதிவைத்ததைப் பார்த்து, நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தனர். மலையாளத்தில் அது கிறுக்கலாக இருந்தது, என்று நக்கலாக விளக்கும் போதே தெரிகிறது. போர்டில் உள்ளது அழகாகத்தான் உள்ளது, கிறுக்கல் ஒன்றும் இல்லை. மீன் கறி, மீன் வருவல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுபோது, அடுத்ததை ஏன் மலையாளத்தில் இருக்க வேண்டும்? அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது! ஆக, இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-10-2015

[1] http://www.ndtv.com/india-news/j-k-lawmaker-engineer-rashid-attacked-with-black-ink-in-delhi-1233954

[2] தினமலர், கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம் ,பதிவு செய்த நாள் அக் 27,2015 12:56; மஅற்றம் செய்ய்த நாள். அக் 27,2015 15:56;

[3] http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7809438.ece

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1373708

[5] http://www.maalaimalar.com/2015/10/27162437/Oomen-chandy-Mamata-Kejriwal-c.html

[6] தி.இந்து, கேரளா பவன்மாட்டிறைச்சிவிவகாரம்: டெல்லி போலீஸ்சோதனையும் 10 முக்கிய தகவல்களும், Published: October 27, 2015 13:21 ISTUpdated: October 27, 2015 19:39 IST.

[7] http://www.deccanherald.com/content/508682/beef-back-kerala-house-menu.html

[8] http://www.ndtv.com/india-news/cops-rush-to-kerala-house-after-call-alleging-beef-on-menu-1236740