Archive for the ‘பசுவதை’ Category

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

Bharat sakti, Aurobindo 1904-08

வீக்என்டை ஜாலியாகக் கழித்த விதம்என்றாகியது: இவர்கள் முன்னமே  எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:

  1. இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
  2. ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
  3. “பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
  4. 130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
  5. “பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
  6. 1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
  7. “பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
  8. “பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
  9. தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
  10. கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!

Suddhananda Bharati

ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.

Pondy Lit Fest - S G Suraya

தமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?

PondyLitFest 2019-a lady lecturing standing on a table

தமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது.  வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.

PondyLitFest 2019- Hindi song

தூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.

© வேதபிரகாஷ்

07-10-2019Shenbaga convention centre, Puducherry

[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST

[2] Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.

Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece

[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST

[4] https://theprint.in/opinion/india-right-wing-mind-different-voices-within-left-wing/301461/

[5] DD, Pondy Lit Fest: A two day literature festival in Puducherry, Oct 4, 2019

[6] https://www.youtube.com/watch?v=atGA_Vl8hFE

[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம்வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

Pondy Lit Fest -Tavleen singh, RAW, Kiran Bedi inaguration

சித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within-photo

வலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.

Pondy Lit Fest - left, right ideological struggle

வலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர்,  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.

Pondy Lit Fest -Tavleen singh, and others

சித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம்  முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.

Empty chairs, but no mind toaccommodate

தேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள்! இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா? அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within

வலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:

  1. சமூகத்தில் முற்போக்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  2. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  3. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.

சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது! காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது! நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது!

© வேதபிரகாஷ்

07-10-2019

Pondy Lit Fest -audience

[1] The Print, Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within, Abhijit Iyer-Mitra

Updated: 29 September, 2019 4:01 pm IST

[2] https://theprint.in/opinion/pondy-lit-fest-shows-indias-right-wing-has-more-disagreements-within/298483/

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்: உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

ஏப்ரல் 4, 2017

பசு மாமிசமும், மாட்டிறைச்சியும்:  உசுப்பி விடும் ஊடகங்கள், ஓவைசி போன்ற கலவரக்காரர்கள், குளிர்காயும் எதிர்கட்சிகள், அரசியலில் மாட்டிக் கொண்ட பிஜேபி!

Congress - calf and cow symbol

பசுவின் முக்கியத்துவம்: பாரதத்தில் பசுவைப் போற்றும் பழக்கம் பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது. பசுவதை பெரும்பாவம் என்று கல்வெட்டுகளில் அதிகமாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. “இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும், ” போன்றவை மிகப்பிரபலம். பிராமணர்கள் தாம் தாவர உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் எல்லாவகையான உணவுகளையும் உண்டு வந்தனர். பிறகு ஜைனர் மற்றும் பௌத்தர்கள் புலால் மறுத்தல், புலால் உண்ணாமை, ஜீவகாருண்யம் முதலியவை போதித்தாலும், அவர்களும் அவற்றைப் பின்பற்றவில்லை. ஏனெனில், சத்திரிய ஜைனர்கள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தரே பன்றி இறைச்சி தின்று வயிற்றுப் போக்கு, ரத்தம் வெளியேறியதால் இறந்தார். மேலும், பௌத்தர்கள் மாமிசம் உண்பவர்களாக இருக்கின்றனர். சங்க இலக்கியங்களிலிருந்து, திருக்குறல் வரையிலுள்ளவற்றை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இக்காலத்தில் இதைப் பற்றி பிரச்சார ரீதியில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. ஜீவகாருண்யம் பேசுபவன், எப்படி புலால் உண்ணுவான் என்று கூட யோசிக்காமல், கண்டவன் எல்லாம் சித்தாந்தம் பேச ஆரம்பித்து விட்டான்.

Get sinned if one kills cow

முகமதியஐரோப்பிய காலங்களில் பசுவதை: முகமதியர் இந்தியாவில் நுழைந்து, கொள்ளையடுத்து, பிறகு ஆட்சி செய்த காலங்களில், இவ்வுணர்வு அதிகமாகியது. ஏனெனில், அவர்கள் மாமிசம் உண்பவர்கள் மட்டுமல்லாது, பசுமாமிசம் உண்பவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்கள் அப்பழக்கத்தைக் கொண்டிருந்ததால், அவ்வாறே சித்தரிக்கப் பட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் [1839-1898] புலால் உணவுக்காக உயிர் வதை செய்வதை மிகக் கடுமையாகக்    கண்டித்தவர். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் பசுக் கொலை செய்து ஊன் தின்னும் கொடுமையை வெறுத்துத் தாக்கி 100 பாடல்கள் கொண்ட ‘ஆங்கிலேயர் அந்தாதி’ என்னும் சமுதாய சிந்தனை நூலை இயற்றியவர். பாரதத்தைப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருந்தாலும், பசு மாமிசம் உண்பதில்லை. அதே போல, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்ற பண்டிகை-விரத காலங்களில் மாமிசம் உண்பதில்லை. அத்தகைய ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், மக்களிடையே எந்த பிரச்சினையோ, விவாதமோ வந்ததில்லை. ஆகவே, இத்தகைய உணவு உண்ணும் பழக்க-வழக்கங்களில், மாமிசம் அறவே உண்ணாக்கூடாது என்று சொல்லவே, அமூல் படுத்தவோ முடியாது. பசுவதை மூலம் கலவரங்களை உண்டாக்கலாம் என்றறிந்து, பரிசோதனை செய்தவன் வெள்ளைக் காரன். அச்சதியில் ஒத்துழைத்தவர்கள் முகமதியர். இக்கலை இப்பொழுதும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

Anti-Gandhi pro-beef campaign

மாட்டிறைச்சியும், பசு மாமிசமும்: மாட்டிறைச்சி எனும்போது, எருது, எறுமை முதலியவற்றின் மாமிசங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள், கிருத்துவர்கள், மேனாட்டவர் போன்றோர் தாம் பசுமாமிசமும் உண்கின்றனர். இந்துக்களில் 90% பசுமாமிசம் உண்பதில்லை. எனவே, பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும். மாட்டிறைச்சியை உண்பதை யாரும் தடுக்க முடியாது. இப்பொழுது கூட சட்டம், தண்டனை முதலியவை “பசுவதை” பற்றி தான் உள்ளதே தவிர மற்ற மாட்டிறைச்சி பற்றியில்லை. ஆனால், ஊடகங்கள், இதனை ஊதி பெரிதாக்கி, செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்து வருகின்றன. ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படைவாத முஸ்லிம்களும் திமிராக, நான் அப்படித்தான் பேசுவேன், முடிந்தால் வழக்குத் தொடுத்துக் கொள் என்று அகங்காகரமாக பேசி வருகின்றனர். இதிலிருந்தே, ஊடகங்களும், மற்றவர்களும், இதை வைத்து கலவரம் உண்டாக்க எத்தனித்திருப்பது தெரிகிறது.     முன்னரே குறிப்பிட்டப் படி, “பசு மாமிசம் உண்ண மாட்டோம், பசுவதை செய்யமாட்டோம் என்று மற்றவர்கள் சொன்னாலே”, இப்பிரச்சினை இல்லாமல் போய்விடும்.

Anti-Gandhi pro-beef campaign-gandhi against beef

பிஜேபிக்காரர்கள் குழப்புகின்றனரா, குழம்பியுள்ளனரா?: கேரள மாநிலம் மல்லப்புரம் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 03-04-2017 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். குறிப்பாக, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ‘பசுவதை புரிவோரை தூக்கிலிடுவேன்’ எனக் கூறியிருந்தார்[1]. இதையடுத்து, நாடு முழுவதும் பா.ஜ.க-வின் பசு பாதுகாப்பு கொள்கைகள் விவாதங்களைக் கிளம்பியுள்ளன[2]. பிற மாநிலங்களில் உ.பி, ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[3]. கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது[4]. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறியுள்ளார்.

Gandhi againat cow slaughter

பசுவதை மற்றும் மாட்டிறைச்சி சித்தந்தங்களை குழப்பும் ஊடகங்கள், அரசியல்வாதிகள்: “இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்தால் உயர் தரமான மாட்டிறைச்சிகள் கிடைக்க செய்வேன், இறைச்சி கூடங்களை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன், தடையின்றி மாட்டிறைச்சி கிடைக்க வழி செய்வேன்,” என அவர் தெரிவித்திருந்தார்[5]. பசுவதை மற்றும் மாட்டிறைச்சிக்கு எதிரான சித்தாந்தங்களை உடைய பா.ஜ.க.வில் இருக்கும் அவர் இத்தகைய கருத்து கூறியிருந்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது[6]. இந்நிலையில், இன்று தன்னுடைய கருத்தில் இருந்து பல்டியடித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஸ்ரீபிரகாஷ், “நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பசுவதைக்கு முழுவதும் எதிரானவனே, உத்தரப்பிரதேசத்தில் செய்தது போல சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கடைகளை கேரளாவிலும் மூடுவோம் என சொல்லி, மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வோம் என கூறியிருந்தேன்,” என தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி குறித்து பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் இருவேறு கருத்துக்கள் தெரிவித்தது குறித்து அம்மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜேந்திரனிடம் கேள்வியெழுப்பியபோது, அவருடைய பேட்டிகளை நான் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.

Gandhi againat cow slaughter-MODI

பசுவதை தண்டனைப் பற்றிய குழப்பங்கள், சட்டங்கள்: குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது[7]. இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர்களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன[8].

Cow slaughter-Act-implementation-violation

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 2015 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

© வேதபிரகாஷ்

04-04-2017

Cow slaughter-Act-implementation-violation-in states

[1] விகடன், அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச் செய்வேன்’ : பா.. வேட்பாளரின் வாக்குறுதி!, Posted Date : 15:26 (02/04/2017); Last updated : 10:00 (03/04/2017

[2] http://www.vikatan.com/news/india/85204-bjp-candidate-campaign-against-beef-ban.html

[3] தினத்தந்தி, எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி, ஏப்ரல் 02, 05:00 PM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/02170000/Give-me-your-vote-I-will-give-you-good-quality-beef.vpf

[5] மாலைமலர், ’பசுவதைக்கு நான் எதிரானவனேதரமான மாட்டுக்கறி வழங்கப்படும் எனக் கூறிய கேரள பா.. வேட்பாளர் பல்டி , பதிவு: ஏப்ரல் 03, 2017 22:57

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/03225742/1077888/Am-against-cow-slaughter-says-BJP-candidate.vpf

[7] தி.இந்து, பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம், Published: March 31, 2017 14:45 ISTUpdated: April 1, 2017 09:12 IST

[8]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9609759.ece

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)!

நவம்பர் 18, 2015

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடிஎதிர்ப்பு, இந்தியவிரோதம்இந்தியர்களுக்கு ஆபத்தானது (3)!

Samantha Cameron opted for an elegant sari as she joined her husband and Prime Minister Narendra Modi backstage at Wembley

Samantha Cameron opted for an elegant sari as she joined her husband and Prime Minister Narendra Modi backstage at Wembley

மோடி வரவேற்க்கப்பட்டது, மூன்று நாள் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது: இனி மோடியை வரவேற்றவர்களைப் பற்றிப் பார்ப்போம். பொருளாதார முதலீடு மற்றும் அந்நிய நாட்டு நட்புற மேன்பாடு என்ற ரீதியில் வந்த மோடியை வரவேற்க ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து முடிந்தன. இதற்கான பிரத்யேக இணைதளத்தில் எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டன[1]. தீபாவளி நேரத்தில் வருவதால், சிறந்த வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற விதத்தில் ஏற்பாடுகள் நடந்தன[2]. இரு நாட்டு நல்லுறவு மேன்பட அவை உறுதியாக இருந்தன. “ஐரோப்பிய இந்திய போரம்” என்ற அமைப்பால், “யு.கே வெல்கம்ஸ் மோடி” நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன[3]. எண்ணிக்கையில் 414 என்று பல்வேறு நிறுவனங்கள், இயக்கங்கள் வரவேற்கும் குழுக்களில் இருந்தனர்[4]. இங்கிலாந்தில் உள்ள 1.6 மில்லியன் இந்தியா வம்சாவளியினர், இந்நிகழ்ச்சியை கொண்டாட ஆவலாக இருந்தனர். அவ்வாறே வெற்றிகரமாக செய்து முடித்தனர். துரதிருஷ்ட வசமாக, அதே 13-11-2015 அன்று மாலையில், பாரிஸில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால், இவை அமைதியாக நடந்து முடிந்தன. 15-11-2015 அன்று மோடி துருக்கிற்கு ஜி-20 கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

Samantha Cameron dazzled in a patterned sari as she joined her husband and prime minister Modi to greet performers backstage

Samantha Cameron dazzled in a patterned sari as she joined her husband and prime minister Modi to greet performers backstage

பிஹார் தோல்விக்குப் பிறகும் இப்பிரச்சாரம் தொடர வேண்டிய அவசியம் என்ன?: மோடியின் லண்டன் விஜயம் முன்னரே தெரிந்த விசயம். மோடி-எதிர்ப்பு குழுக்களை சட்டப்படிக் கட்டுப்படுத்த, லண்டனில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்பாட்டம் நடத்த உரிமையுள்ளது என்பதனால், குறிபிட்ட இடத்தில் நின்று கொண்டு ஆர்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படியே, அவர்கள் நடத்தி முடித்தனர். ஆனால், மோடி-ஆதரவு கூட்டம் என்பதை விட, உண்மையிலேயே, மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். கேமரூனின் மனைவி சமந்தா, இந்திய பெண்மணியைப் போன்று நெற்றியில் பொட்டு, ஜாக்கெட்-புடவை கட்டிக் கொண்டு வந்தார். இந்திய-இந்து பெண்களே அசந்து போகும் வரையில் வந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 60,000 இந்திய வம்சாவழியினர் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தனர். வாணவேடிக்கைக்குப் பிறகு கலைநிகழ்ச்சி நடந்தது. கேமரூன் சமந்தா தம்பதியர் கலைஞர்களை பாராட்டினார். பிறகு, மோடி வழக்கம் போல பேசி, அனைவரையும் கவர்ந்தார். நிச்சயமாக அந்த அவாஸ் கோஷ்டிகளே வெட்கப்படும் அளவிற்கு நடந்தது. இருப்பினும், நவம்பர் முதல் வாரம் நடந்த விருது திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தைப் பற்றியும் அலச வேண்டியுள்ளது.

Bihar elections - September to October 2015

Bihar elections – September to October 2015

விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரம்செப்டம்பரில் ஆரம்பித்து அக்டோபர் உச்சத்தை அடைந்து, நவம்பரில் முடிந்தது: செப்டம்பர் 4, 2015 அன்று உதய் பிரகாஷ் [Uday Prakash], என்ற இந்தி எழுத்தாளர், தனது சாகித்திய விருதைத் திருப்பியளித்தார்[5]. பிறகு நயந்தாரா ஷெகால் [Nayantara Sahgal], அஷோக் வாஜ்பேயி [Ashok Vajpeyi] விருதைத் திருப்பிக் கொடுத்தனர். கிருஷ்ண சோப்தி, [Krishna Sobti], சஷி தேஷ்பாண்டே [Shashi Deshpande]. இவ்வாறு அக்டோபர் மாதம் வரை 33 பேர் திருப்பிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன[6]. இதில் வார்யம் சிங் சந்து [Waryam Singh Sandhu] என்பவர் அவசரநிலை பிரகடன காலத்தில் காங்கிரஸ் அரசால் சிறையிடைக்கப்பட்டவர். அக்டோபரில் இந்த “திரும்பக் கொடுக்கும் சடங்கு” உச்சத்தை அடைந்தது. நவம்பரில், திடீரென்று அடங்கி விட்டது. அவசரநிலை பிரகடனம், 1984 சீக்கியப் படுகொலைகள், 1989 பகல்பூர் கலவரங்கள், யு.பி.ஏ கோடானு கோடி ஊழல்கள் முதலிவை நடந்த போது இவர்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை.  இத்தகைய முரண்பாடுகளை பலரும் எடுத்துக் காட்டினர்.

Introducing Mr Modi to the thousands of people packed into the stadium, Mr Cameron described the night as a -truly historic moment

Introducing Mr Modi to the thousands of people packed into the stadium, Mr Cameron described the night as a -truly historic moment

எதிர்-கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது: அனுபம் கேர் தலைமையில், விருதுகள் திருப்பிக் கொடுக்கும் பிரச்சாரத்தை எதிர்த்து, அதாவது அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி கூட்டம்-ஊர்வலத்தை நடத்தினார். அதில் நூற்றுக்கணக்கில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். அரசிடம் விருது வாங்குவது என்பது ஒரு “திரும்ப செய்யும் முறை அல்லாத விசயம்மாகும். ஏனெனில், விருதை திரும்ப கொடுத்து விடுவதால் அதன் மூலம் பெற்ற பெயரையும், புகழையும் திரும்பக் கொடுப்பதாகாது[7]. பலனை அனுப்பவித்தது அனுபவித்தது தானே? சாகித்ய அகடாமி, தன்னாட்சி பெற்ற தனி அமைப்பு. அதன் செயல்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை அதே போல் அரசின் செயல்பாடுகளில், சாகித்ய அகடாமியும் தலையிடுவதில்லை. இதற்கு முன் எத்தனையோ பிரச்னைகள் நடத்திருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளர் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் ஆதரவு இருக்கும் எழுத்தாளர்கள், பரிந்துரைகளின் மீது விருது கொடுக்கப்படுகிறது என்பதும் உண்மைதான்.

A woman proudly shows off her ticket to the event, which saw crowds of supporters descending on Wembley this evening

A woman proudly shows off her ticket to the event, which saw crowds of supporters descending on Wembley this evening

பிஹார் தேர்தல் செப்டம்பரில் ஆரம்பித்து, நவம்பரில் முடிந்தது: பீஹாரில் தேர்தல் நடக்கவிருந்தது, தெரிந்த விசயமே. முதல் கட்டத்திற்கு செப்டம்பர் 16 அன்று அறிவிப்பு வெளியானது. கடைசி கட்ட ஓட்டளிப்பு நவம்பர் 5ம் தேதி முடிந்தது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் கல்பர்கி கொலை எதிர்ப்பு போராட்டம் (ஆகஸ்ட் 30 கொலை), சாகித்திய விருதுகள் திருப்பிக் கொடுத்தது, மாட்டிறைச்சி பிரச்சினை, தாத்ரி விவகாரம் என அனைத்தும் நடந்துள்ளன. இந்நிகழ்ச்சிகளும் காங்கிரஸ் மற்றும் சமஜ்வாடி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தன. அதனால், அவை எப்படி நடந்தன, கொலையாளிகளை ஏன் பிடிக்கவில்லை, சட்டம்-ஒழுங்கு நிலை என்னவாயிற்று என்றெல்லாம் யாரும் கேட்பதாக இல்லை. ஆனால், இவற்றிற்கெல்லாம் “இந்துத்துவ” சக்திகள் தாம் காரணம், குறிப்பாக மோடிதான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

David Cameron and his wife, Samantha

David Cameron and his wife, Samantha

ஆகஸ்ட்.2013லிருந்து, செப்டம்பர் 2015 வரை சாகித்திய விருது பெற்றவர்களுக்கு எந்த உணர்வும் வரவில்லை: ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார். அப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருந்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது சந்தேகம் வரவில்லை. காங்கிரஸ் தான் காரணம் அல்லது அதன் தலைவி சோனியா தான் மூலகாரணம் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது சோனியா தான் காரணம் என்று யாரும் அடையாளம் காணவில்லை. ஆக, ஆகஸ்ட்.2013 முதல் பிப்ரவரி 2015 வரைக்கூட, சாகித்திய விருது பெற்றவர்களுக்கு திரும்பகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

Dr Kalburgi was a leading scholar and a well-known rationalist thinker - BBC photo

Dr Kalburgi was a leading scholar and a well-known rationalist thinker – BBC photo

செப்டம்பர் 2015லிருந்து உணர்ச்சிகள் பீரிட்டது எப்படி, ஏன், எதற்காக?: கல்பர்கி பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார். இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது கருத்தூரிமை உள்ளவர்களுக்கும், அக்கருத்துரிமையால் பாதிக்கப்படும் மக்களுக்கும், வெவேறு சட்டங்கள் உள்ளன போலும்! ஆகஸ்ட்.30, 2015 அன்று கல்பர்கி கொல்லப்படுகிறார். இப்பொழுதுதான் உணர்ச்சி திடீரென்று பீரிடுகின்றது.

© வேதபிரகாஷ்

18-11-2015

[1] https://www.ukwelcomesmodi.org/

[2] With the Prime Minister of India, Shri Narendra Modi, due to visit the United Kingdom later this year, the largest Indian diaspora in the world is eagerly waiting in anticipation to deliver the loudest, greatest and most vibrant welcome he has seen outside of India. UKWelcomesModi will bring together individuals from the 1.6 million-strong Indian community in Britain- from all backgrounds, generations and regions – to celebrate two great nations with one glorious future. It is the Diwali event for the family this year- with a cultural showcase featuring the best of Indian and British talent; a landmark speech to be delivered by Prime Minister Modi and a grand finale featuring the biggest fireworks display in the whole country.

[3] UKWelcomesModi pays tribute to the deep ties between India and the UK, highlighting the formidable contribution made by members of the Indian diaspora in all walks of British life. Prime Minister Modi’s already iconic leadership has made waves across the world. UKWeclomesModi is honoured to host this new global visionary who will give us a glimpse of India in years to come as it forges new paradigm of growth and success for not just Asia, but the rest of the world too. Organised by the Europe India Forum and in partnership with Indian cultural and community organisations across the country, the event is set to be the highlight of 2015. The Europe India Forum is a not for profit organisation promoting Europe-India relations for communities, by communities.

[4] https://www.ukwelcomesmodi.org/partners

[5] http://indianexpress.com/article/explained/writers-protest-what-returning-sahitya-akademi-honour-means/

[6] http://indianexpress.com/photo-news/india/here-are-the-33-writers-who-returned-their-sahitya-akademi-awards/

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1375770

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

Beef politics - Kerala, WB and Delhi CMs

Beef politics – Kerala, WB and Delhi CMs

என்ன சொல்கிறது டெல்லி போலீஸ்?: இந்த சோதனை குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, “இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா ஒரு புகார் அளித்தார். அதில், டெல்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதால் கேரளா இல்லத்துக்கு போலீஸ் படை விரைந்தது. இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீஸ் படைகள் அங்கு சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது” என்றார். போலீஸாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையினை செய்தார்கள் என்றுதான் ஆகிறது. கேரளா பவனில் போலீஸ் கூட அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய வேண்டும் போன்ற வாதங்கள் அபத்தமாக உள்ளன.

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து இருக்கிறார்களா?: கேரளாவில் பிஜேபி மற்றும் ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தையும் நெருங்கி வர முயற்சியில் ஈடுபட்டுள்ள விஸ்வநாத் என்பவர் தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது[1]. ஆனால், அவரோ “சில நண்பர்கள் ஒரு படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதனை நான் என் பேஸ்புக்கில் போட்டேன். அது இந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. சிபிஎம் தலைவர் பினாராய் விஜயன் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான் எனக்குத் தெரியும். எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை”, என்கிறார்[2].  இப்பொழுது மார்க்சிஸ்ட் ஏம்.பிக்களும் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிகிறது.

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

மூன்று மாநில முதல்வர்கள் பீப் பிரைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்[3]: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதற்கு கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்[4].  இம்மாநிலங்களில் தடையில்லை (கேசரிவால் தவிர) என்பதினால் இவர்கள் அவ்வாறு பேசியுள்ளனர் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில், போலீசார் முறையான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்றும் கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கேரளா பவனில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  “டெல்லியில் உள்ள கேரளா பவனில் நடைபெற்ற சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமையை கைப்பற்றுவதற்கான விவேகமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற முயற்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றையே இந்த நடவடிக்கை உணர்த்துகின்றது” என்று டுவிட்டரில் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் இதுதொடர்பாக கூறுகையில், பாரதிய ஜனதாவின் அழுத்தம் காரணமாக கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர். டெல்லியில் மாட்டிறைச்சிக்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கேரளா பவனில் போலீசார் சோதனை செய்த சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். கேரளா பவன் அரசால் கொண்டுவரப்பட்டது, ஓட்டல் கிடையாது என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். டெல்லி போலீஸ் கேரளா பவனுக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். டெல்லி போலீசும் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா போன்று நடந்துக்கொள்கிறது. டெல்லி அரசு பவனில், கேரள மாநில முதல்-மந்திரி, மோடிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் பிடிக்காத பொருளை சாப்பிட்டார் என்றால், போலீசார் அவரை கைது செய்துவிடுவார்களா? என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை முதல் டெல்லி கேரளா பவனில் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது[5].

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம்[6]:  தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்து வருகின்றன. இந்த தடைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றன. இருப்பினும், இது பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், அரசியலாக்கப்பட்டும் வருகிறது. மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம் எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்த தடையை காரணமாக வைத்து சிவசேனாவும், வழக்கம் போல் பா.ஜ.,வை விமர்சித்ததுடன், இறைச்சி தடையை அரசியலாக்கியது. இந்நிலையில், ஜெயின் மதத்தவர்களின் திருவிழா காலத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஆட்டிறைச்சி, கோழி விற்பனைக்கும் மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. குஜராத்தும் தடை விதித்தது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையை இது மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Beef eating party politics - Jammu-kashmir

Beef eating party politics – Jammu-kashmir

புலால் உண்பவர்களின் நிலை[7]: காஷ்மீர் அரசும் இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினரும், பிரிவினைவாத இயக்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் செப்., 11. 2015 அன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். சத்தீஸ்கர் அரசும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டதால் செப்டம்பர் 11 ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் சத்தீஸ்கர் அரசு தெரிவித்தது. இந்த தடை அசைவ பிரியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த தடையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுவழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சைவத்தையும் திணித்து வருவதாக அரசியல் கட்சிகள் புதிய தாக்குதலை துவக்கி உள்ளன.

Beef eating party politics- good or bad

Beef eating party politics- good or bad

மிருகவதை, ஜீவகாருண்யம், அஹிம்சை பற்றி பொய்யான விளக்கங்களைக் கொடுப்பது: பீப், பசுமாமிசம் உண்ணுவது பற்றி, அளவுக்கு அதிகமாக, அதன் உரிமை கோருபவர்கள், வெளிப்படையாக செய்து வருகிறார்கள். அதைப்பற்றி திரித்தும் எழுதி வருகிறார்கள்[8]. அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு, என்று அத்தகைய திரிபுவாதங்கள் கூருகின்றன. பௌத்தம் உயிர்க்கொலையை மறுக்கவில்லை, தடுக்கவில்லை. புத்தரே 81 வயதில் பன்றி கறி சாப்பிட்டதால் தான் உயிழக்க நேர்ந்தது[9]. பௌத்தர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்களே. விவசாயம் இல்லாமல் இருந்திருந்தால், யாருக்கும் உணவு கிடைத்திருக்காது. இந்தியர்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவர்கள் என்ற சரித்திரத்தை மறைத்து இவர்கள்வைத்தகைய கதைகளைக் கட்டி வருகிறார்கள். டி. என். ஜா போன்றவர்களும் சரித்திர உண்மைகளை பாதியாக, அரைகுறையாக வெளியிட்டு குழப்பி வருகிறார்கள். அதனைத்தான் மற்ற சித்தாந்திகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்[10]. அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களின் உயிர்க்கொலைகளைப் பற்றி, அத்தகைய சடங்குகளைப் பற்றி பேசுவது-விவாதிப்பது-எழுதுவது கிடையாது.

© வேதபிரகாஷ்

31-10-2015

[1]  The New Indian Express, Friends sent me photo of Kerala House menu, I put it on Facebook Man who played role in BJP-SNDP tie-up now finds himself at centre of row, Written by Liz Mathew, Delhi,  Updated: October 28, 2015 5:18 am.

[2] http://indianexpress.com/article/cities/delhi/friends-sent-me-photo-of-kerala-house-menu-i-put-it-on-facebook/

[3] http://www.telegraphindia.com/1151028/jsp/frontpage/story_50068.jsp#.VjAtptIrJdg

[4] மாலைமலர், மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனைஉம்மன் சாண்டி, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம், பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 4:24 PM IST

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டெல்லி கேரளா பவனில் நாளை முதல் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும்..., Posted by: Mathi Updated: Tuesday, October 27, 2015, 19:34 [IST]
Read more at: http://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.htmlhttp://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.html

[6] தினமலர், இறைச்சி அரசியல்‘: பல மாநிலங்களில் தொடரும் தடை, செப்டம்பர்.11, 2015: 12.06. [IST].

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1339869

[8] http://www.vinavu.com/2015/04/15/beef-ban-brahminical-double-speak/

[9] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s
image
, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.
343-354.

[10] http://www.vinavu.com/2012/05/12/myth-of-the-holy-cow/