Archive for the ‘குளிப்பது’ Category

“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

திசெம்பர் 17, 2017

பெண் குளிப்பதை பார்த்தார்என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

The Hindu-tamil-reports- gov.convoy killed

கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா? இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2].  பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

Ungal news-15-12-2017

கற்பனை செய்தியின் வர்ணனைகருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].

Governor visit to Caddalore- 15-12-2017-Troll trousers

கற்பனை செய்தியின் வர்ணனைநடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].

Ungal news-15-12-2017-2

கற்பனை செய்தியின் வர்ணனைகண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].

Anti Gov, ant-modi to anti-hindu attitude

இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.

© வேதபிரகாஷ்

16-12-2017

Governor visit to Caddalore- 15-12-2017-webduniya

[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published :  15 Dec 2017  21:24 IST; Updated :  15 Dec 2017  21:24 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article21715911.ece

[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[4] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[6] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[8] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (1)

திசெம்பர் 17, 2017

பெண் குளிப்பதை பார்த்தார்என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (1)

Molesting a woman, taking bath etc

என் கையைப் பிடித்து இழுத்தான்என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது: தமிழக கவர்னர்களில், இப்பொழுது நியமனம் செய்து பதவியில் உள்ளவர், உண்மையில் “கவர்னர்” போல செயல்படுகிறார். ஆனால், பிஜேபி-நாமினி மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர் என்று தமிழக ஊடகங்கள் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழக ஊடகங்களில் உள்ளோர் பெரும்பாலோனோர் இடதுசாரி, ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்த வாதிகள் என்பது தெரிந்த விசயம். அவர்களில் கிருத்துவர்-முஸ்லிம்களும் கனிசமாக இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது என்பது தவறில்லை, ஆனால், செய்தி சேகரிப்பு, தொகுப்பு, வெளியிடுதல், புலன்-விசாரணை ஜார்னலிஸம் [Investigation Journalism] போன்றவற்றில் உள்ள பாரபட்சம் அதிகமாகவே இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு, மோடி-தாக்குதல், பார்ப்பனீய-வெறுப்பு என்ற ரீதியில் இறுதியில் இலக்காக அமைந்துள்ளது இந்துமதம், இந்து நம்பிக்கைகள், இந்துக்கள் என்று முடிவதுதான் நிதர்சனமாக உள்ளது. இப்பொழுது, கவர்னர் விசயத்தில், “என் கையைப் பிடித்து இழுத்தான்” என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Molesting a woman, taking bath etc-police action

தாக்கப்படுவது கவர்னரா, சித்தாந்தமா, பெண்மையா?: தினம்-தினம் தமிழகத்தில் கற்பழிப்பு, தாலியறுப்பு, பாலியல் வன்மங்கள், கொடூரங்கள் என்று நடத்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பாதிக்கப்படுவது பெண்கள், பெண்மை. பெண் எல்லாவிதங்களிலும் பாதிக்கப் படுகிறாள். ஆனால், ஊடகக்காரர்கள், அவற்றை செய்திகளாகப் போடும் போது, ஏதோ பரபரப்பு, ஜனரஞ்சகமான ரீதியில் தான் போட்டு வருகிறார்கள். அவற்றை எப்படி, எவ்வாறு, ஏன் தடுக்கப்பட வேண்டும் போன்றவற்றை அலசுவதில்லை. திராவிட சித்தாந்தம் முதலியவற்றால், அவை கொச்சைப்படுத்தப்படுகின்றன. “விஜய்” போன்ற டிவிக்கள் தாலி போன்ற சமூக-பாரம்பரிய விசயங்களைக் கேவலப்படுத்தியதாலும், திராவிட சித்தாந்திகள் தாலியறுப்பு போன்ற நிகழ்ச்சிகளினாலும், தாலியறுப்பு திருடர் கூட்டங்கள் வலுப்பெற்று, தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். இன்ற்றைக்கு கம்மலை திருடுபவன், காதோடு அறுத்துச் சென்றுள்ளான். இத்தகைய ஆபாசமான, கேவலமான, தூஷிக்கும் போக்குள்ள செய்திகளால் சட்டமீறல்கள் அதிகமாகின்றன. ஆனால், வக்கிர சித்தாந்தவாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊடகத்துறையில் இத்தகைய போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பெண்மை பாதிக்கப் படுகின்ற விசயங்களில், எல்லோரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Governor visit to Caddalore- 15-12-2017-Vikatan

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல!,”: “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல!,” என்று விகடன் கதை ஆரம்பித்துள்ள்தே, ஏற்லெனவே தீர்மானித்து எழுதிய நிலையைக் காட்டுகிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்றவருக்கு சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது,” என்று மேலும் வர்ணிப்பது தமாஷுதான், ஆனால், விவகாரமானது. விகடன் தொடர்கிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குச் சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது. துாய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்யவும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு அதிகாரிகளுடன் கடலூருக்கு 15-12-2017 அன்று பயணமானார் ஆளுநர். அப்போது, அவருக்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். தமிழக ஆளுநர் சொன்னா ரெட்டிக்குப் பிறகு, பன்வாரிலால் புரோஹித்துக்குதான் கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதுவும் “பெண்ணின் கை பிடித்து இழுத கதை போன்றது” என்பதை அறிந்து கொள்ளலாம். போகும் வழியில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய வண்டிப்பாளையம் என்ற கிராமத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியுள்ளார் ஆளுநர்.

Governor before bathroom-

பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்”  போன்றது செய்தியா, கதையா?:  அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில்  கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்[1]. “தடாலடியாக” திறந்தார் என்றால், என்ன என்பதை அந்த மெத்தப்படித்த, நவநாகரிமுள்ள நிருபர் தான் விளக்க வேண்டும். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்[2]. ஆனால், படத்தில் போட்டிருப்பது கற்களால், சிமென்டால் கட்டப்பட்ட கட்டிடம் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. “திடீரென…………கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்” இதிலுள்ள சொற்பிரயோகமே, நடந்ததநறிவிப்பதை விட, ஏதோ உசுப்பிவிடும் போக்கில் எழுதியது தெரிகிறது. ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தால், அல்லது கவர்னருடன் ஒரு கூட்டமே வந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணிற்கு எப்படி தெரியாமல் போகும்? இல்லை வேண்டுமென்றே அப்பெண்ணை அங்கு இருக்க செய்தனரா? இந்தச் சம்பவத்தால் ஆளுநர் உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்[3].

Governor before bathroom-Gowri clarifies

இச்செய்தியை எழுதியவர் யார், அவரது மனப்பாங்கு என்ன?: சரி இதை எழுதியுள்ளவர் யார் என்று பார்த்தால், “அ. சையது அபுதாஹிர்” என்றுள்ளது. இவர் முஸ்லிம் என்று கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்றாலும், எழுதியுள்ள தோரணை விசமத்தை எடுத்துக் காட்டுகிறது. அதிலும் முஸ்லிமாக இருந்து, செக்யூலரிஸ முகமூடி போட்டுக் கொண்டு, இந்துவிரோதியாக செயல்படுவது, தமிழகத்தில் காணலாம். “பெரியாரிஸம்” பேசி, இந்துக்களை திட்டலாம், ஆனால், அதே பகுத்தறிவுடன், எந்த துலுக்கனும், கிருத்துவனும், இஸ்லாம் அல்லது கிருத்துவத்தை விமர்சிப்பதில்லை. இந்த பாரபட்ச செக்யூலரிஸத்தைத்தான் போலித்தனம் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. நடுநிலமையில் இருந்திருந்தால், அந்த விசமமும் வக்கிரமாக மாறியிருக்காது. எனவே, கவர்னர் விசயத்தில், இவ்வாறு கேவலமாக செய்திகளை வெளியிடும் எண்ணமே அவர்களுடைய வக்கிரத்தைக் காட்டுகிறது. “தமிழ்.வெப்துனியா,” தனக்கேயுரிய பாணியில், “governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom” என்று லிங்கில், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதும் அவர்களின் அசிங்கமான மனங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

Suba veerapandi-twitter on governor visit

பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்: சமூக வலைதளங்களில் ஆளுநருக்கு கடுமையான கண்டங்கள் குவிந்துவருகின்றன[4]. உண்மையா-பொய்யா என்று பார்க்கும் போக்கில்லாத பெரும்பாலோருக்கு, இது கையான கலையாகி விட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘பெண் குளிக்கும்போது, ஆளுநர் பாத்ரூம் கதவை திறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது இழிவானது மற்றும் தவறானது[5]. கடலூர் மாவட்டத்தில், ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை பார்வையிட ஆளுநர் சென்றிருந்தார். திருமதி.கௌரி என்பவரது வீட்டின் கழிவறையை முதலில், பெண் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர், கழிவறையை பார்வையிட்டார். அதன்பிறகுதான், காலியாக இருந்த கழிவறையை ஆளுநர் பார்வையிட்டார்[6]. ஆனால், தொலைக்காட்சிகளில் இதுதொடர்பாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடலூரில் இருந்து சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே ஆளுநரின் கான்வாய் வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் மாவட்ட காவல் துறை வாகனமே விபத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளது[7]. வரும் காலங்களில், ஆளுநர் தொடர்பான விவகாரங்களை, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த பிறகே வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

16-12-2017

IE-Governor, bathroom, caddalore

[1] விகடன், சோகத்தில் முடிந்த ஆளுநரின் ஆய்வு!, அ. சையது அபுதாஹிர், Posted Date : 18:20 (15/12/2017); Last updated : 18:39 (15/12/2017)

[2] https://www.vikatan.com/news/tamilnadu/110903-tragedy-of-governor-visit.html

[3] தமிழ்.வெப்துனியா, பெண் குளிப்பதை பார்க்கவில்லையாம்ஆளுநர் தரப்பு விளக்கம்!!, வெள்ளி, 15 டிசம்பர் 2017.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom-117121500060_1.html

 

[5] விகடன், கடலூரில் ஆளுநர் ஆய்வு சர்ச்சை விவகாரம்..! ஆளுநர் மாளிகை விளக்கம், கார்த்திக்.சி, Posted Date : 01:22 (16/12/2017); Last updated : 01:22 (16/12/2017)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/110931-governor-house-denies-cuddalore-incident.html

[7] பத்திரிக்கை.காம், பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம், Posted on December 15, 2017 at 9:26 pm by சுகுமார்.

[8] https://patrikai.com/news-that-the-governor-had-seen-women-bathing-in-the-bathroom-was-not-true-additional-chief-secretary-explained/