Archive for the ‘பாண்டிச்சேரி’ Category

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

Bharat sakti, Aurobindo 1904-08

வீக்என்டை ஜாலியாகக் கழித்த விதம்என்றாகியது: இவர்கள் முன்னமே  எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:

  1. இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
  2. ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
  3. “பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
  4. 130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
  5. “பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
  6. 1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
  7. “பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
  8. “பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
  9. தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
  10. கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!

Suddhananda Bharati

ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.

Pondy Lit Fest - S G Suraya

தமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?

PondyLitFest 2019-a lady lecturing standing on a table

தமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது.  வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.

PondyLitFest 2019- Hindi song

தூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.

© வேதபிரகாஷ்

07-10-2019Shenbaga convention centre, Puducherry

[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST

[2] Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.

Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece

[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST

[4] https://theprint.in/opinion/india-right-wing-mind-different-voices-within-left-wing/301461/

[5] DD, Pondy Lit Fest: A two day literature festival in Puducherry, Oct 4, 2019

[6] https://www.youtube.com/watch?v=atGA_Vl8hFE

[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம்வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

Pondy Lit Fest -Tavleen singh, RAW, Kiran Bedi inaguration

சித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within-photo

வலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.

Pondy Lit Fest - left, right ideological struggle

வலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர்,  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.

Pondy Lit Fest -Tavleen singh, and others

சித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம்  முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.

Empty chairs, but no mind toaccommodate

தேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள்! இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா? அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within

வலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:

  1. சமூகத்தில் முற்போக்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  2. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  3. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.

சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது! காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது! நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது!

© வேதபிரகாஷ்

07-10-2019

Pondy Lit Fest -audience

[1] The Print, Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within, Abhijit Iyer-Mitra

Updated: 29 September, 2019 4:01 pm IST

[2] https://theprint.in/opinion/pondy-lit-fest-shows-indias-right-wing-has-more-disagreements-within/298483/

பாண்டி லிட் பெஸ்ட்  2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]PondyLitFest 2019 - brochure front page

பாண்டி லிட் பெஸ்ட் 2018 முதல் 2019 வரை: சென்ற வருடம் போல[1], இவ்வருடமும், “புதுச்சேரி இலக்கிய விழா” என்ற போர்வையில், நவநாகரிகமான-உயரடுக்கு, தாராளமாக சலுகைகள் கொடுக்கப் பட்ட, தேர்ந்தெடுத்த, நியோ [Elite, privileged, selected, chosen one categories] வகைறாக்கள் பங்கு கொண்ட ஜாலியான விழா போன்று நடத்தப் பட்டது. அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசி, சிரித்து, முடித்துக் கொண்டது போலிருக்கிறது. பெரும்பாலும், ஆங்கிலம், ஹிந்தி தான் பேசப் பட்டன. சிலரால், சில நேரங்களில் பேசப் பட்ட தமிழ் வார்த்தைகளும் கேட்கப் பட்டன. “பாரத சக்தி” என்ற தலைப்பில், என்னென்னமோ பேசினர்.

  1. தேசியம்: யார் தேச-விரோதி? -“Nationalism: Just who is an anti-national,”
  2. ஜம்மு-காஷ்மீர்: சரித்திர பிழையை நீக்குவது – Jammu and Kashmir: Erasing a blot on history,”
  3. இந்த்துத்துவ: வாழும் வழியா அல்லது புதியதாக விற்கப்படும் சித்தாந்தமா? – Hindutva: Way of Life or rebranded Hinduism,
  4. உலகத்தில் இந்தியா – “India in the world,”
  5. பொருளாதாரம்: $ 5 ட்ரில்லியன் = 3,52,52,250 கோடிகள் அடைவது கனவா – “Economy: Is $5trillion a mirage and
  6. பொய்யான செய்தி: திட்டமா அல்லது தொழிற்நுட்பத்தை குறை சொல்வதா? – “Fake News: Agenda or Technology to blame.”

பல லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டுள்ள இதனால், யாருக்கு வருமானம், லாபம், மற்றும் பலன் என்று நடத்தியவர்கள் தாம் அலசிப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும். வியாபார ரீதியில் பார்த்தால், பணம் கொடுத்தவர்-வாங்கியவர்களுக்கு பலன் தான். மூன்று நாட்கள் கலந்து கொண்டவர்களுக்கும் சந்தோஷம் தான்.

PondyLitFest 2019 - Local literary experts oppose
சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது[2]: சென்ற வருடம் போல, இவ்வருடமும், இதன் மீது குற்றச்சாட்டுகள் முதலிய இருந்தன. இணைதளத்தில் பார்க்கும் போது, பலர் பதிவு செய்தாலும், அவர்களை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்தவர்கள் கண்டுகொள்ளப் படவில்லை. ஆக, இது, அவர்களுக்குள் நடத்தப் பட்ட கொண்டாட்டம் என்றாகியது. “சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது” இவ்வாறு, புதுவை எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையெப்பம் இட்டு அளித்த கோரிக்கை மனு விவரம்: “புதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் ஒரு குழு வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விதைக்க முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது.

PondyLitFest 2019 - brochure front page-sponsors.jpg

போட்டி விழா நடந்ததா, இல்லையா?: போட்டியாளர் தொடர்ந்து சொன்னது,  நிகழாண்டு மீண்டும் அதே குழு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. அதில், வகுப்புவாத இயக்கங்களின் தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, புதுவை முதல்வர் இந்த விழாவில் பங்கேற்கபதைத் தவிர்க்க வேண்டும்,” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது[3]. மனுவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலர் பாலகங்காதரன், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் க.தமிழமல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

PondyLitFest 2019 - Bedi governor

தமிழ் மொழி உலக மொழியாகத் திகழ்ந்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெருமிதத்துடன் தெரிவித்தார்[4]: புதுச்சேரியில் 27-09-2019, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புதுவை இலக்கியத் திருவிழா 2019 என்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது: “புதுச்சேரி நகரம் பழங்காலத்தில் வேதபுரம் அல்லது வேதபுரி என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேதம், பண்பாடு ஆகியவற்றைக் கற்கும் இடமாக இந்த நகரம் விளங்கியது. புதுச்சேரியில் இருந்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பாகூர் மூலநாதர் கோயில், 21 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்டார் கோயில் ஆகியவை புதுச்சேரியின் வேத பண்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. இங்கு, பழங்காலத்திலேயே சிவனை மக்கள் வழிபட்டுள்ளனர். வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகே கிடைத்த ஒரு கல்வெட்டின்படி, அகஸ்தீஸ்வரர் இங்குதான் வேதங்களைக் கற்றுக் கொண்டார் என்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர்தான் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு வந்த போர்ச்சுகீசியர்களால் இந்த நகரம் புதுச்சேரியா என அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் கடலோர நகரம் என தங்களது மொழியில் அழைத்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி என்று அழைத்தனர்இதற்கு தமிழில் புதிய கிராமம் என்று பொருள். அதன் பிறகு புதுச்சேரி என்ற வார்த்தை பாண்டிச்சேரியாக பிரபலமானது.

PondyLitFest 2019 - brochure front page-Social media sponsors

2,400 ஆண்டுகள் புதுச்சேரி இலக்கிய வரலாறு சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது: கிரண் பேடி தொடர்ந்து பேசியது, “புதுச்சேரி இலக்கிய வரலாறு என்பது 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது. இந்தியாவின் பண்டைய செம்மொழியான தமிழ் சமுதாயம், மதம் குறித்த மிகவும் மதிப்புமிக்க, நுண்ணறிவு மிக்க பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு பெரிய கருவூலத்தைக் கொண்டுள்ளது. திருக்குறள், கம்ப ராமாயணம் உள்ளிட்டவை உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளாகும். இவை இந்திய இலக்கிய கிரீடத்தை அலங்கரிக்கும் வைரத்தை போன்றவை. மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்த இல்லங்கள் இங்குள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த புதுச்சேரி மண்ணில் உருவானவர்தான். அவரது படைப்புகளில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுச்சேரியின் வரலாறு, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. புதுவையின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டுமெனில், இங்குள்ள கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் அவர்[5]. விழாவில் புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ராஜா, வெங்கட்ட ரகோதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

© வேதபிரகாஷ்

07-10-2019

PondyLitFest 2019 -Nationalist, anti-nationalist discussion

[1] சென்ற வருட விழா நடப்புகளைப் பற்றிய விவரங்களை, என்னுடைய கட்டுரையில் வாசிக்கலாம்:

https://secularsim.wordpress.com/2018/09/11/pondy-litfest-right-versus-left-but-right-failed-with-closed-doors/ மற்றும்

https://secularsim.wordpress.com/2018/09/11/pondy-litfest-marrded-by-selective-hindutwavadis-dominating-neglecting-others/

[2] தினமணி, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்கக் கூடாது: எழுத்தாளர்கள் கோரிக்கை, By DIN | Published on : 24th September 2019 10:20 AM |

[3] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/24/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3241153.html

[4] தினமணி, தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது: புதுவை ஆளுநர் கிரண் பேடி பெருமிதம், By DIN | Published on : 28th September 2019 05:03 AM |

[5] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3243980.html

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

PondyLitFest-participants-program

இந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

  1. காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
  2. இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
  3. அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
  4. பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
  5. புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
  6. இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
  7. தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
  8. புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
  9. இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
  10. அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.

PondyLitFest-participants-program-2

இன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].

  1. ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
  2. கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
  3. அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
  4. இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
  5. காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!

இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.

PondyLitFest-participants-program-3

மாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].

PondyLitFest-participants-program-4

முடிவுரைஇலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:

  1. பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
  2. சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
  3. ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
  4. பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
  5. சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
  6. 1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
  7. பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
  8. சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
  9. நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
  10. அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.

© வேதபிரகாஷ்

09-09-2018

PondyLitFest-dates.folder

[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.

[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.

[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.

[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.

[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.

[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.

[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

மென்மையான இலக்காக உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்மத்துடன் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 22, 2013

மென்மையான இலக்காக உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்மத்துடன் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group1

சுநீத்தின் திராவிடனும், இப்பொழுதைய திராவிடனும்: சுநீத் குமார் சட்டர்ஜி “திரவிடியன்” என்ற புத்தகத்தை எழுதியபோது, புலகாங்கிதம் அடைந்து, “திராவிடர்கள்” பூரித்துப் போயினர். ஆஹா, ஒரு வங்காளக்காரர் (அப்பொழுது ஆரியர் என்று அவரை அடையாளங் காணவில்லை போலும்) தமிழனை “திராவிடன்” என்று அடையாளம் காட்டி விட்டானே என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறை அமைப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குவதற்காக 1963ல் வந்திருந்த போது, “திராவிடர்” என தலைப்பில் மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனை 1965ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சிறுபுத்தகமாக வெளியிட்டது.

Aurobindu Ashram attacked by Dravidian group3

1963 திராவிடன் 2013ல் மாறியது ஏன்?: மடலேறும் அடலேறுகள், பெருஞ்சித்தரனார், சாலை இளந்திரையமன், க. ப. அறவாணன் போன்ற கோஷ்டியினர் அதை வைத்துக் கொண்டு நன்றாகவே அறிவுஜீவி வியாபாரம் செய்தனர். “சட்டர்சியின் திராவிடர் வரலாற்று மானுட மொழியியல் நோக்கில் இனவியலாய்வு” என்று பெரிய தலைப்பைக் கொடுத்து, அந்நூலை பொழிபெயர்த்து சம்பாதிக்கவும் செய்தனர். வங்காளிகளும் திராவிடரே என்றெல்லாம் துதி பாடினர்! பாரி நிலையம் 1990ல் தமிழ் பதிப்பை வெளியிட்டது.

Aurobindu Ashram attacked by Dravidian group2

அழகான பூக்களை மிதித்து சிதைப்பரோ?பூத்துக் குலுங்கும் மலர்களை கசக்கிப் பிழிவரோ?

மொட்டுக்களை குத்தி நாசம் செய்வரோ?

இதழ்களை கூறு போடுவரோ?

செடிகளை வேரோடு பிடுங்குவரோ?

ஆமாம், நாங்கள் செய்வோம், தமிழ்-தமிழ் என்று சொல்லிக் கொண்டே துணிந்து செய்வோம்!

தமிழர்-தமிழர் என்று பறைச்சாற்றிக் கொண்டு, பதைபதைக்க செய்வோம்!

தமிழகம்-தமிழகம் என்று பகர்ந்து கொண்டு தலைநிமிர்ந்து செய்வோம்!

Aurobindu Ashram attacked by Dravidian group

வேறொருவர் சமாதி, நினைவிடங்களில் இப்படி கூரூர வன்மத்தைக் காட்டுவார்களா?: சென்னையிலேயே பெங்காளி சங்கம், பள்ளி, கலாச்சாரத் துறை, மேற்கு வங்காள அலுவலம், என்றெல்லாம் பிரபலமாக உள்ளனவே, அவற்றையெல்லாம் விடுத்து, அமைதியாக இருக்கும், அதிலும் அரவிந்தர் சமாதி இருக்கும் இடத்தில் இப்படி வன்முறை நிகழ்ச்சிகளை திராவிடர்கள், தமிழர்கள் எப்படி செய்துள்ளார்கள்? இதே மாதிரி, வேறொருவர் சமாதி, நினைவிடங்களில் இப்படி கூரூர வன்மத்தைக் காட்டுவார்களா?

Aurobindu Ashram attacked by Dravidian group4

மென்மையான இலக்கை வன்மம் தாக்கலாமா?: அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group5

பீதியை, பயத்தை, கலவரத்தை, திகிலை, பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன?: நியூட்டன் விதி தமிழ் சினிமாக்களில் எடுத்தாள்வது போல, திராவிட நாட்டில் எதிர்-எதிராக இரண்டு நியூட்டன் விதி போல இம்முறையைக் கையாளுகிறார்களா? தாக்கினால், திரும்பத் தாக்கப்படும்; திட்டினால், திரும்பவும் திட்டுகள் கிடைக்கும்; அடித்தால் பதிலுக்கு அடி கிடைக்கும்; இல்லை ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும், பீதியை, பயத்தை, கலவரத்தை, திகிலை, பரபரப்பை ஏற்படுத்த இத்தகைய போக்கைக் கடை பிடிக்கிறர்கள் என்றால் அதற்கு பெயர் என்ன, விளக்கம் என்ன? அந்த மனப்பாங்கை என்னவென்பது?

Aurobindu Ashram attacked by Dravidian group6

© வேதபிரகாஷ்

22-03-2013