Archive for the ‘கஜேந்திர சௌகான்’ Category

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

U R Ananathmurthy and his christian wife Esther

U R Ananathmurthy and his christian wife Esther

யு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம்  முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.

Saeed-Akhtar-Mirza

Saeed-Akhtar-Mirza

சயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

Saeed aktar mirza, babar and masjid

Saeed aktar mirza, babar and masjid

கஜேந்திர சௌஹான் ஒருபுரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

தகுதிதராதரம்பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும்  இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] He married a Christian lady, Esther, and faced many problems for his inter-religious wedding. http://www.firstpost.com/living/ur-ananthamurthy-pioneer-kannada-literatures-navya-movement-1677817.html

[2] http://scroll.in/article/675713/kannada-writer-ananthamurthy-loved-whiskey-and-a-good-argument

[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.

Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81.,  Aug 23, 2014 · 07:46 am

[4] http://parallelcinema.blogspot.in/2005/08/salim-langde-pe-mat-rodont-cry-for.html

[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.

[6]In a debate moderated by TIMES NOW’s Editor-in-Chief Arnab Goswami, panelists — Gajendra Chauhan, Chairman, FTII, Paintal, Actor; Uday Shankar Pani, Filmmaker & Alumni FTII; Narendra Pathak, Member, FTII; Anupam Kher, Actor; Vinay Shukla, Filmmaker and Writer; Aruna Raje Patil, Filmmaker; Prateek Vats, Alumni, FTII; Saurabh Shukla, Actor; and Vikas Urs, Student, FTII (Cinematography).

 http://www.timesnow.tv/Debate-FTIIMahabharat-Bollywood-fights-Yudhisthira/videoshow/4478061.cms

[7] http://www.firstpost.com/politics/gajendra-chauhan-to-pahlaj-nihalani-the-unstoppable-rise-of-the-anti-intellectuals-under-modi-govt-2376458.html

[8] Rishi Majumder, Gajendra Chauhan to Pahlaj Nihalani: The unstoppable rise of the anti-intellectuals under Modi govt, Aug 3, 2015 15:44 IST.

[9] http://www.thehindu.com/features/magazine/bishwanath-ghosh-gajendra-chauhans-appointment-as-ftii-chairman/article7460395.ece

[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST

[11] Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue,   Updated: July 16, 2015 12:26 am.

[12] http://indianexpress.com/article/opinion/columns/the-problem-with-gajendra-chauhan/

[13] Mohua Chatterjee & Himanshi Dhawan, Chauhan was RSS pick for top job at FTII, TNN | Jul 11, 2015, 12.08 AM IST

[14] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Chauhan-was-RSS-pick-for-top-job-at-FTII/articleshow/48025610.cms

[15] Deeptiman Tiwary, Gajendra Chauhan: A 34-year veteran of C-grade exploits, TNN | Jul 11, 2015, 01.19 AM IST

[16]  http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Gajendra-Chauhan-A-34-year-veteran-of-C-grade-exploits/articleshow/48026077.cms

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)

Gajendra Chauhan

Gajendra Chauhan

கஜேந்திர சௌஹான் நியமனமும், இடதுசாரி மாணவர்களின் ஆர்பாட்டமும்: ஜூன்.5, 2015 அன்று கஜேந்திர சௌஹான் என்ற இந்தி நடிகர் புனே திரைப்படக் கல்லூரி [Chairman of the Film and Television Institute of India (FTII)] சேர்மன் பதவி நியமிக்கப்பட்டார். ஆனால், அங்கிருக்கும் சில இடதுசாரி மாணவ அமைப்புகள், இது நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சிகளில் ஒன்று என்று விமர்சித்து போராட்டத்தை ஆரமித்தனர். ஆனால், தனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுங்கள், தான் மற்றவர்களைவிட திறமைசாலியாக செயல்பட்டுக் காட்டுவேன் என்று கேட்டுக் கொண்டார்[1]. முகேஷ் கன்னா, சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, ராஸா மூரத், ராஜ்வர்தன் சிங் ராத்தோர், பைன்டல் போன்றோர் இவரது நியமனத்தை ஆதரிட்த்துள்ளனர். ஆனால், பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றவர்கள் இதை எதிர்த்துள்ளனர். சௌஹான் சினிமா மற்றும் டெலிவிஷன் சங்கத்தில் 20 வர்டங்களாக பணியாற்றி வந்துள்ளார் மற்றும் ஒரு வருடம் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ல் பிஜேபியில் சேர்ந்தார், அதன் கலாச்சாரப் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, இடதுசாரி மாணவக் குழுக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

ftii-protest-759

ftii-protest-759

முந்தைய தலைவர்களும், அவர்களது பின்னணியும்: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம், ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இச்சங்கத்தின் தலைவர், மற்ற சங்கக்குழுக்களின் தலைவராகவும் செயல்படுகிறார். இதுவரை, இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள்[2]:

எண் முந்தைய சேர்மென் பொறுப்பு வகித்த காலம்
இருந்து வரை
1 அன்வர் ஜமால் கித்வாய் November 1, 1974 September 30, 1977
2 எஸ்.எம்.எச்.பர்னி November 25, 1975 September 30, 1977
3 ஆர்.கே. லக்ஷ்மண் November 1, 1977 September 30, 1980
7 ஸ்யாம் பெனகல் February 5, 1981 September 30,1983
8 ஸ்யாம் பெனகல் September 1989 September 30, 1992
9 மிரினால் சென் April 9, 1984 September 30, 1986
10 அடூர் கோபாலகிருஷ்ணன் September 1, 1987 September 1989
11 அடூர் கோபாலகிருஷ்ணன் November 21, 1992 September 30,1995
12 மஹேஷ் பட் November 20, 1995 September 30, 1998
13 கிரிஸ் கார்னாட் February 16, 1999 October 10, 2001
14 வினோத் கன்னா October 12, 2001 February 2002
15 வினோத் கன்னா March 4, 2002 March 3, 2005
16 யு.ஆர்.அனந்தமூர்த்தி March 4, 2005 March 3, 2008
17 யு.ஆர்.அனந்தமூர்த்தி March 4, 2008 March 3, 2011
18 சயீத் அக்தர் மீர்ஜா  March 4, 2011 March 3, 2014

இவையெல்லாமே அரசியல் சார்பு நியமங்களே, ஆனால், அப்பொழுதெல்லாம் யாரும் இவர்கள் இந்தந்த சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் என்று யாரும் அடையாளம் காணப்படவில்லை, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதில் சிலர் இரண்டு முறையும் பதவி வகித்திருக்கின்றனர், அப்படியென்றால்ணிவரைவிட வேறு யாரும் தகுதியானவர்கள், சிறந்தவர்கள் இல்லையா அல்லது கிடைக்கவில்லையா, அவர்கள் மற்றவர்களை விட மிகச்சிறந்த திறமைசாலிகளா அல்லது அதிக தகுதியுடையவர்களா என்றும் யாரும் கேட்கவில்லை. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையினைக் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் எல்லோரும் தத்தமக்கு என்று சித்தாந்தங்களை கடைபிடித்து வந்தார்கள், அவ்வாறே அங்கு வேலைசெய்தபோது, ஆதரவு கொடுத்தார்கள். இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை[3].  இனி அவர்களின் பின்னணியைப் பார்ப்போம்.

Adoor Gopalakrishnan

Adoor Gopalakrishnan

அடூர் கோபாலகிருஷ்ணன் (1987-1995): FTII தலைவராக பணியாற்றிய இவர் ஒரு மறைவு-கம்யூனிஸவாதி (crypto-communist). இவரது படங்களில் கம்யூனிஸ வாத-விவாதங்கள் இருக்கும். ஆனால், இவரது சித்தாந்த சார்பை யாரும் தட்டிக் கேட்கவில்லை, அப்பொழுது, நிறுவனங்கள் கம்யூனிஸமயமாக்கப்படுகிறது என்று யாடும் அலறவில்லை. உண்மையில் கடந்த 70 வருடங்களாக “சோசியலிஸம்” போர்வையில், கம்யூனிஸ்டுகள் நிறைய அரசு நிறுவனங்களில் பதவிகளைப் பெற்று, அவற்றை சித்தாந்தமயமாக்கி இருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால், இப்பொழுது, “பாஜக அரசின் பாசிசச் செயல்: சமீபத்தில் ராஜேந்தர் சௌஜஹான் நியமனத்தை எதிர்த்துப் பேசியுள்ளார்[4]. இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கண்டனம்”, என்றெல்லாம் பேசியுள்ளார்[5]. ஆக, இவரது எதிர்ப்பில் கம்யூனிஸ பிரியோகங்கள், சொல்லாடங்கள் முதலியவை இருப்பதை கவனிக்கலாம்.

Janab Mahesh Bhatt and his daughter Puja and actress

Janab Mahesh Bhatt and his daughter Puja and actress

மஹேஷ் பட் (1995-1998): மஹேஷ் பட் ஒரு முஸ்லிம், லோரைன் பிரைட் (Lorraine Bright ) என்ற கிருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பூஜா பட் மற்றும் ராஹுல் பட் பிறந்தனர். பூஜா பட் நிர்வாணமாக போட்டோக்கு போஸ் எல்லாம் கொடுத்துள்ளார், ஆபாசமாக பலபடங்களில் நடித்துள்ளார். ராஹுல் பட்டுக்கும், 26/11 தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. 1970ல் பர்வீன் பாபி என்ற நடிகைக்கூட தொடர்பு வைத்திருந்தார், திருமணம் செய்து கொண்டார். 1986ல் சோனி ரஜ்தான் என்ற இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறுஈவரது வாழ்க்கையில் “தார்மீகமாக” எதையும் பேச முட் இயாது, ஆனால், “நவீனத்துவத்தில்” இவையெல்லாம் சாதாரணமானது என்று வாதிக்கப்படும், நியாயப்படுத்தப்படும். ஷஹீன் பட், அலியா பட் இவர்களுக்குப் பிறந்தனர். இவரது பெண்கள் திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து வருகின்றனர். இவரே பல நடிகைகளுடன் ஆபாசமாக இருந்துள்ளார். மகளுக்கு “லிப்-டு-லிப்” முத்தமமெல்லாம் கொடுத்துள்ளார். எம்ரான் ஹாஸ்மி இவருடைய மைத்துனர். காங்கிரஸ்காரர், 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டபடி பேசியுள்ளார். ஆனால், இவரது தகுதி, திறமை, நிலை முதலியவற்றைப் பற்றி 1995-98ல் யார்ம் பேசவில்லை. இவர் மாணவ-மாணவியர்களுக்கு ஏற்றவரா என்றேல்லாம் ஊடகங்கள் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. அவரது புகைப்படங்கள், போஸ்டர்களை எல்லாம் ஆதாரங்களாக போட்டு, அவர் ஒரு சி கிரேட், டி கிரேட் என்றெல்லாம் தூஷிக்கவில்லை.

Girish Karnad

Girish Karnad

கிரிஸ் கார்னாட் (1999-2001): இவர் தமிழ் மற்ற மொழி படங்களில் சிறிய வேடக்களில் தான் நடித்துள்ளார். அவற்றை எந்த கிரேட்டில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். கிரிஸ் கார்னாட், வி.எஸ். நைபால் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதற்கு 2012ல் டாடா இலக்கிய விழாவில் கண்டபடி பேசின்னார். அதாவது தன்னுடைய செக்யூலரிஸ நிலைப்பாட்டை எடுத்துக் காட்டினார். ரவீந்தரநாத் தாகூர் இரண்டம் தரமான நாடக எழுத்தாளர், அவருடைய நாடகங்கள் எல்லாம் பார்க்கவே சகிக்காது என்றெல்லாம் 2012ல் பேசியுள்ளார். ஆனால், மாணவர்கள் இவர் மீது கொதித்தெழவில்லை, ஆர்பாட்டம் செய்யவில்லை. 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியுள்ளார். இத்தகைய பேச்சுகள் முதலியன அவவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] http://www.thehindu.com/features/friday-review/i-am-a-self-made-man/article7329869.ece

[2] http://www.ftiindia.com/management.html

[3] http://www.ndtv.com/india-news/with-one-para-cv-gajendra-chauhan-was-selected-film-institute-ftii-chief-1202989

[4] http://cinema.dinamalar.com/tamil-news/34522/cinema/Kollywood/Gajendra-Chouhan–must-quit-:-Adoor-Gopalakrishnan.htm

[5]  http://www.headlines4u.com/2015/07/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/.