Archive for the ‘தாடி’ Category
ஏப்ரல் 23, 2013
பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)
பாஸ்டன்முதல்பெங்களூருவரை–தீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:
- 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
- இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
- இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
- 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
- 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
- அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.
தேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.
வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.
சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.
விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.
குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
1) April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2) April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.
3) April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.
4) April 18, shortly thereafter – SUV driver released unharmed.
5) April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.
6) April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.
7) April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;
Dzhokhar is found hiding in a stored boat and taken into custody. |
இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
வேதபிரகாஷ்
22-04-2013
குறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்
அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »
ஓகஸ்ட் 19, 2012
பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்!
இதுவரை வான்வெளி-மின்னணு காதல், மோசடிகள், ஏமாற்றுவேலைகள், பிரச்சாரம், மதமாற்றம் என்றெல்லாம் சிலர் கேள்விப்பட்டிருப்பர்.
ஆனால் இப்பொழுது அவற்றுடன் வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், அவற்றின்மூலம் வீதிகளி கலவரம், நகரங்களில் பீதி, மக்கள் ஓட்டம் முதலியவற்றையும் செய்யலாம் என்று ஜிஹாதிகள் கண்டுபிடித்து அமூல் படுத்தியுள்ளார்கள்.
ஆக இம்முறை 65வது சுதந்திர தினம் இவ்விதமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.
வழக்கம் போல நம்முடைய புலனாய்வுத் துறையினர், பாகிஸ்தானிலிருந்து தான் அத்தகைய விஷமத்தனமான விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பப்பட்டன என்று ஊல்துறை செயளர் கூறுகிறார்.
பங்களூரில் அத்தகைய விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பியதற்காக அனீஸ் பாஷா (Anees Pasha, 26, a resident of BTM Layout), அவனுடைய சகோதரன் தஸீன் நவாஜ் (Thaseen Nawaz, 32) மற்றும் அவனுடைய இன்னொமொரு கூட்டாளி சஹீத் சல்மான் கான் (accomplice Shahid Salman Khan) முதலியோர் கைது செய்யப்பட்டுள்ளார்களாம்!
வடக்கிழக்கு மாணவகளை, “நீங்கள் ஏன் இன்னும் செல்லவில்லை”, என்று கேட்டு மிரட்டியதற்காக “உருது பேசும்” கும்பலையும் கைது செய்துள்ளார்களாம்!
ஆகையால் இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது!
யாரோ, எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள், அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் – ஜிஹாதிகள், இந்திய முஜாஹித்தீன்கள் முதலியோரும் கூட!
குறிச்சொற்கள்:உண்மை, ஏமாற்றுவேலைகள், குறுஞ்செய்தி, நிஜம், பிரச்சாரம், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், மதமாற்றம், மாயை, மின்னணு, மின்னணு மாயை, மோசடிகள், வான்வெளி-மின்னணு காதல், வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல்
அரசியல், அரசியல் விபச்சாரம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதிகள், இந்துக்கள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஓட்டு, ஓட்டு வங்கி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், குண்டு வெடிப்பு, கைப்பேசி, சதிகார கும்பல், சல்மான், சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாடி, தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், மதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் காதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், வங்காளதேசம், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஓகஸ்ட் 7, 2012
முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?
சோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.
சோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.
நவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.
சந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.
ஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.
சொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ?
பிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்!
குறிச்சொற்கள்:அன்சாரி, ஆடும் பொம்மை, உதவி ஜனாதிபதி, சாவி, சோனியா மெய்னோ, ஜனாதிபதி, தலையாட்டி, தலையாட்டி பொம்மை, தேர்தல், பிரனாப், பொம்மை, மாயா, மாயாவதி, மாயை, முகர்ஜி, முல்லாயம், முஸ்லீம், ராகுல், ராஹுல், ஹமீத்
அன்சாரி, அரசியல் அனாதை, அவதூறு, இத்தாலி, இத்தாலி மொழி, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒழுக்கம், கட்டுப்பாடு, காங்கிரஸ்காரர்கள், சமத்துவம், சல்மான், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், தந்திரம், தாடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நேரு, பிஜேபி, மதம், மன்மோஹன், முஸ்லீம் ஓட்டு, ராகுல், ராபர்டோ காந்தி, வாக்களிப்பு, வாக்கு, ஹமீத் அன்சாரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
நவம்பர் 7, 2011
தீபாவளியை மறந்தவர்கள், பக்ரீதுக்கு வாழ்த்து சொல்கிறார்களாம்!
தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்தால் –
- Ø மதவாதி – communalist,
- Ø ஆரியன் – Aryan,
- Ø பார்ப்பனன் – Brahmin,
- Ø இஸ்லாம்-விரோதி – enemy of Islam / Kafir,
- Ø கிருத்துவ-துரோகி – enemy of Christianity / gentile,
- Ø செக்யூலரஸம்-தெரியாதவன் non-secular,
- Ø நாகரிகம் இல்லாதவன் – barabarian,
- Ø இடைக்காலத்தவன் – mideavalist,
- Ø சமூக-விரோதி – anti-social,
- Ø பின்நோக்கிப் பார்ப்பவன் – Backward looking
- Ø பகுத்தறிவு இல்லாதவன் – Non-rationalist
என்று அடுக்கு மொழிகள் தொடர்கின்றன.
ஆனால், மற்ற பண்டிகைகளுக்கு, குறிப்பாக இந்துக்கள் அல்லாத முஸ்லீம்-கிருத்துவர் பண்டிகைகள் என்றால், போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பார்.
உடனே, அவர்கள் –
- Ø செக்யூலரிஸ்ட் – secularist,
- Ø இஸ்லாம்-நண்பன் – friend of Islam,
- Ø கிருத்துவ-சிநேகிதன் – friend of Christianity,
- Ø சிறுபன்மையோர் நலம் விரும்பி – pro-minority,
- Ø நாகரிகம் மிக்கவன் – civilized / elite,
- Ø முன்னோக்கு உடையவன் – Forward looking,
- Ø பகுத்தறிவு உள்ளவன் – rationalist
- Ø அறிவுஜீவி – intelligent / elite,
என்றாகி விட்டதைப் போல, அவர்களே தம்பட்டம் அடித்துக் கொள்வர்!
“எம்மதமும் சம்மதம்” என்றால், எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தால் அது செக்யூலரிஸம் ஆகுமா?
அப்படியென்றால், “இந்த கடவுள் உண்டு அந்த கடவுள் இல்லை” என்றாகுமே, அப்படியென்றால் பல கடவுளர்கள் உண்டு என்றாகிறதே, பிறகு எப்படி முஸ்லிம்கள், கிருத்துவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?
- Ø ஒன்று அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்
- Ø அல்லது நீங்கள் அவர்களுக்கு ஏதுவாக முட்டாள் / மடையன் போல பேசி, இந்துக்களை ஏமாற்றுகிறார்கள்
- Ø அல்லது எல்லோருமே சேர்ந்து கொண்டு இந்துக்களை தூஷிக்கிறார்கள் போலும்!
இதுதான் பகுத்தறிவா, செக்யூலரிஸாமா, படித்தப் படிப்பின் முதிர்ச்சியா இல்லை அனுபவத்தின் பக்குவமா என்று ஆராய்ச்சி தான் நடத்த வேண்டும்!
குறிச்சொற்கள்:அடிப்படைவாதி, அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், ஈத், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, செக்யூலரிஸம், ஜிஹாத், தீபாவளி, தீவிரவாதம், தூஷணம், பக்ரீத், பழமைவாதி, மதவாதி, வாழ்த்து, Indian secularism, secularism
அயோத்யா, அரசியல், அரசியல் விபச்சாரம், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, ஈத், உண்மை, கஞ்சி, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கலாச்சாரம், காழ்ப்பு, கொழுக்கட்டை, சதுர்த்தி, சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், செக்யூலரிஸம், ஜிஹாத், தாடி, தீபாவளி, தூஷணம், பக்ரீத், மதம், வாழ்த்து, வெறுப்ப இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
மே 18, 2010
நியூயார்க் : உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.
‘கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிச்சொற்கள்:ஆப்கானிஸ்தான், இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், உலகின் குற்றவாளிகள், உலகின் குற்றவாளிகள் பட்டியலில், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, குற்றவாளிகள் பட்டியல், ஜிஹாத், தாவூத் இப்ராகிம், தீவிரவாதம், தேடப்படும் குற்றவாளிகள்
அல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, சிதம்பரம், சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தாலிபான், தாவூத் ஜிலானி, தூக்குத் தண்டனை, நூருல் ஹூடா, பத்மஸ்ரீ, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வஸிரிஸ்தான் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மே 15, 2010
முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!
தாடி வைத்த ஆணும், அரபு நாட்டிலிருந்து வந்த பெண்ணும்: நூருல் ஹூடா என்ற தியோபந்த் இஸ்லாமிய பண்டிதர் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள விமானத்தில் உட்கார்ந்து கொண்டராம். செல்-தொலைப்பேசியில் யாருடனோ பேசினாராம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு, இத்தனைக்கும் அவர் எமிரைட்டிலிருந்து வந்துள்ள ஒரு பயணி, அதுவும் பெண், அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளும் [ஜிஹாத், முஜாஹித்தீன், மதரஸா…………], அவரது உருவத்தையும் கண்டு பயந்து போய், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகசியமாக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டாராம்.
மௌலானா பெண்ணின் பக்கத்தில் உட்காரலாமா? பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள்? பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார்? அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே? உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும்? அதுவும் அந்த அமீரகப் பெண்ணிற்கே சந்தேகம் வரும் வகையில், அதுவும், இந்த ஆள் நிச்சயமாக ஒரு தீவிரவாதியாக இருக்கக் கூடிய நிலையில் உள்ளார் (potential terrorist) என்ற அளவில், ஏன் நினைக்க வைக்க வேண்டும்?
A fellow passenger on the flight felt Huda, who is bearded and was wearing a skull cap was a potential terrorist after he made, what she felt was a suspicious cell phone call.
போலீஸாரிடம் சரியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? போலீஸார் விசாரித்த போதும் அவர் அவ்வாறே ஏதோ கூறியதால், சந்தேகப் பட்டு, விசாரித்து, வழக்குப் போட்டு திஹார் ஜெயிலில் அடைத்து விட்டார்களாம். ஜாமீனில் வெளியில் விட முடியாதபடி வழக்கு பதிவும் செய்து விட்டார்களாம்.
Maulana-creates-potential-terrorist
இது ஏதோ செக்யுலார் பிரச்சினை என்று நினைத்தால், இப்பொழுது இதை மதரீதியிலான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிடிபட்ட மௌலானாவே சொல்வது,
“தாடி வைத்துக் கொண்டு, முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டாலே சந்தேகம் படுகிறார்கள். நான் மதரஸாவில் பணி புரிகிறேன், மதரஸா வைத்துள்ளேன்……………..என்றால் போச்சு……………….உடனே தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள்“!
உடனே ஊடகக்காரர்கள் சொல்லிவைத்தால் போல, ஒரு ஓய்வு பெற்ற ஒரு துணைவேந்தரைப் பிடித்துக் கொண்டு வந்து, அவரது கருத்தைக் கேட்கிறர்கள். ரூப்ரேகா வர்மா என்றவர் சொல்கிறார். ஏன் ஸபானா ஆஸ்மியிடமோ, அந்த செதல்வாதிடமோ கேட்வில்லை என்று தெரியவில்லை:
“மத-உணர்வுகள் மற்றும் “இப்படித்தான் இருப்பார்கள்” (stereotypes) என்ற எண்ணமும் மனங்களில் பதிந்திருக்கும்போது, அத்தகைய சின்னங்களுடன் வரும் நபரைப் பார்த்தால், அவ்வாறே எண்ணத் தோன்றுவது (தோன்றாதது) அந்த நபருடைய எதிர்கால அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் உள்ளது. ஒருவேளை நீங்கள் கைது செய்யப் படலாம், அவ்வாறே நடத்தப் படலாம்” என்றெல்லாம் விளக்கமும் அளித்தார்!
கம்யூனிஸ்ட்காரர்களும் சேர்ந்து வக்காலத்து வாங்க வந்து விட்டார்கள். “இந்த கைதானது சட்டங்களை அமூல் படுத்தும் அதிகார வர்க்கத்தினரிடம், சிறுபான்மையினற்கு மீதான தப்பெண்ணம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது“, இன்று விளக்கம் அளித்துள்ளனர்!
குல்லா போட்டவர்களை எல்லாம் சந்தேகப் பட்டதில்லையே? சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும்? இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையே?ஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையே? இந்த தடவை அன்பழனுக்காக, அந்த கிருத்துவ பாதிரி, விஷேஷமாக ஒரு குல்லா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாரே, அதைத்தானே “இனமான பேராசிசியர்” போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து, ஆனால் போட்டொ எடுக்கும் போது எடுத்துவிட்டார் [அப்பொழுது பயந்து விட்டார் போலும்]
குல்லா போட்ட கருணாநிதியின் படங்கள் மறையும் ரகசியம் இதுதானோ: சாதாரணமாக, குல்லா போட்ட அரசியல்வாதிகளின் படங்கள், இணைதளங்களினின்று எடுத்துவிடலாம், ஆனால், கருணாநிதி குல்லா போட்ட படங்கள் எல்லாம் மறைந்து விட்டன? இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை! உண்மையில் கருணநிதியின் “குல்லா போட்ட” படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இன்று ஒன்றுகூட கிடைப்பதில்லை.
குல்லா போட்டு கஞ்சி குடித்தால் பிரச்சினை இல்லை, ஜிஹாத் பேசினால் தான் பிரச்சினை: ஏனெனில், குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்து மதத்தைப் பற்றி அவதூறு பேசி சென்று விடுவதால், முஸ்லீம்களுக்கு பிரச்சினையே இல்லை போலும், ஊடகக் காரர்களுக்கும் செமத்தியான விருந்துதான், ஆகையால், அவர்களும் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை போலும். அப்பொழுது அந்த “ஸ்ட்ரியோ-டைப்” வசனங்கள் எல்லாம் வரவில்லை, எந்த துணைவேந்தரும் வந்து இத்தகைய விளக்கம் கொடுக்கவில்லை! ஆகவே, இங்கே அந்த மௌலானா, ஜிஹாத் பேசியதால் தான் அந்த பிரச்சினையே வந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.
எல்லோரும் சிதம்பரங்கள் அல்ல, ஜிஹாதிற்கு விளங்கங்கள் பெற்று கருத்தை மாற்றிக் கொள்ள: முன்பு முஸ்லீம்கள் மிரட்டியவுடன், உள்துறை அமைச்சு-சிதம்பரம் பயந்து போய், ஓஹோ அப்படியா, ஜிஹாதிற்கு, அப்படியொரு விளாக்கம் உள்ளதா, எனக்க்குத் தெரியவில்லையே, அதையும் தெரிந்து கொள்கிறேன் என்றது, இங்கு நினைவு படுத்துப் பார்க்க வேண்டும். அரபு நாட்டிலிருந்து வரும் பெண்ணிற்கு ஜிஹாத் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது, ஆனால் சிதம்பரத்திற்குத் தெரியவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸம், இங்குதான் அந்த ஜிஹாதி-தீவிரவாதம் வளர்க்கப் படுகிறது.
குறிச்சொற்கள்:இந்தியாவி மீது தாக்குதல், இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, சிதம்பரம், ஜிஹாத், தாடி, நூருல் ஹூடா, முகத்திரை, Indian secularism
இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, சிதம்பரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாடி, நூருல் ஹூடா, முகத்திரை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »