Archive for the ‘சாண்டி’ Category

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (3)

ஜூலை 21, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (3)

Solar scandal link - India Today graphics

சோலார்  பெனல் மோசடியில் தாவூத் இப்ராஹிம் கோஷ்டியின் தொடர்பு:  கவர்ச்சி நடிகைகள், அரசியல்வாதிகள் முதலியோருக்குப் பிறகு[1], இப்பொழுது தாவூத் இப்ராஹிம் கோஷ்டியும் இந்த சோலார் பெனல் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. எம். கே. குருவில்லா என்பவர் காபித்தோட்ட பெரிய எஸ்டேட் சொந்தகாரர். பெங்களூரில் கோரமங்களாவில் வசித்துவரும் பெரிய க்கொஓடீஸ்வரர். சென்ற அக்டோபர் 2012லேயே தனக்கு ரவி பூஜாரி உட்பட தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளிடமிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக புகார் கொடுத்துள்ளார்[2]. சோலார் பெனல் முதலீட்டில் ஒரு கோடி ஏமாந்து விட்டதால், அவர் புகார் கொடுத்தார்.

கேரளாவிற்கும்,  வளைகுடா நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் தெரிந்ததே: கேரளாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் பலவிதங்களில் உள்ளன. செயிக்குகள் சட்டங்களை மீறி, கேரளாவில் வந்து தங்கியதிலிருந்து, தீவிரவாதிகள் தொடர்பு வரை விவரங்கள் வெளிவந்துள்ளன. ஒரு பெரிய போலீஸ் அதிகாரியே அடிக்கடி சென்று வந்ததும், அவர் மனைவி மற்றும் மதானியின் மனைவியும் சேர்ந்து வைத்துள்ள கம்பெனி போலி சிடி-டிவிடிகள் தயாரிப்பில் ஈடுபட்டது முதலிய விஷயங்களும் கேரள அரசியல்-அதிகார-சினிமா பிரிக்கமுடியாத வலைகளை எடுத்துக் காட்டுகிறது. தாவூத் இப்ராஹிமின் விருப்பங்களும் கேரளாவில் இருந்து வருகின்றன. இப்பொழுது கிரிக்கெட் ஊழலிலும் கேரளாவின் ஶ்ரீசாந்த் மட்டுமல்ல, தாவூத் இப்ராஹிமும் சம்பந்தப் பட்டுள்ளனர். அதனால், பெரிய பதவிகளில் இருப்பவர்கள், வியாபாரத்தில் கோடிகள் சம்பாதிப்பவர்கள், தாவூத் இப்ராஹிமுக்கு கப்பம் கட்டவேண்டிய அவசியம் உள்ளது. இல்லையென்றால், டி-சீரீஸ் முதலாளிக்கு நடந்த கதிதான் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், 2ஜியில் எப்படி அவனது சம்பந்தம் உள்ளதோ, அதேபோல, இந்த சோலார் பெனல் மோசடியிலும் சம்பந்தம் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. மேலும், பங்களூரு தொடர்ப்பு, அவற்றை (புரிந்து கொள்ள) எளிமையாக்குகிறது.

Solar panel scam1

உம்மன் சாண்டி மகனின் பெயரைச் சொல்லி மோசடி: பினு நாயர் என்பவர் தான் (பிஜு தான் இப்படி பெயர் மாற்றம் செய்துள்ளான்) ஒரு கம்பனியின் [SCOSSA Educational Consultant Private Ltd at Koch] டைரக்டர், கல்வி ஆலோசனையாளர் என்றெல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டு[3], தன்னிடம் வந்து இங்கிலாந்து பண உதவியுடன், கொரியன் தொழிற்நுட்பம் ஊபயோகப்படுத்தி, கேரளாவில் பல பகுதிகளில் சோலார் பெனல் திட்டம் அறிமுகப்படுத்தப் போவதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் வரும் என்றும் மேலும் அது முதலமைச்சருக்கு சொந்தக்காரரின் கம்பெனி என்று அறிமுகப்படுத்தியதால் தான், தான் அவ்வாறு முதலீடு செய்ததாக ஒப்புக் கொண்டார்[4]. உம்மன் சாண்டியின் மறுமகன் ஆன்ட்ரூஸ் [‘nephew’ Andrews] மற்றும் அவரது அந்தரங்க செயலாளர் தெலிஜித் [‘personal secretary’ Deljith] அக்கம்பனியின் பார்ட்னர்கள் / டைரக்டர்கள் என்றும் சொன்னார்[5]. ஆன்ட்ரூஸ் அபு தாபியிலிருந்து வேலை செய்வதாகவும், அவர்தாம் இங்கிலாந்து பண உதவியையும், கொரியன் தொழிற்நுட்பத்தையும் பெற்றுத் தருகிறார் என்று விளக்கினார்[6]. இதனால், ஜூன் 2011லிருந்தே ஒரு கோடி பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர் சொல்லியபடி போட்டுள்ளதாக புகாரில் தெரிவித்தார்[7].

Solar panel scam2

எம். கே. குருவில்லா உம்மன்சாண்டியிடம் கொடுத்த புகார் மனு: பணம் கொடுத்து ஒரு வருடம் ஆகியும், சோலார் பெனல் திட்டம் அறிவித்தபடி, தொடங்கப்படவில்லை. கேட்டபோது, சரியான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த, குருவில்லா, உம்மன் சாண்டியை அக்டோபர் 17, 2012 அன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்ததார். முதலமைச்சர், டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசுக்கு [Director General of Police] ஆணையிட்டு, அந்த விவகாரத்தைக் கவனிக்கச் சொன்னார். FIR போட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கும் என்றாலும், அதில் முதலமைச்சர் சம்பந்தத்தை விடுத்து, பதிவு செய்துள்ளது பிறகு தெரிய வந்துள்ளது. முதலமைச்சரிடம் புகார் கொடுத்து, பெங்களுருக்குத் திரும்பியவுடன், தனக்கு தொலைபேசியில் “உன் குடும்பத்தையே ஒழித்து விடுவோம்என்று மிரட்டல்கள் வந்தன என்கிறார்[8]. மேலும், கோரமங்களாவில் உள்ள தனது பங்களாவின் அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் உலாவி வருவதாகவும் அறிந்தார். இதனால், போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளார். இதை விசாரித்து வரும் மத்திய குற்றவியல் பிரிவும், இதைப் பற்றி உறுதியாகச் சொல்ல மறுக்கிறார்கள். “நாங்கள் பாதுகாப்பு மட்டும் தான் கொடுத்துள்ளோம். விசாரணை கேரள போலீஸார் செய்து வருகிறார்கள்”, என்று ஒரு மூத்த அதிகாரி ஆறிவித்தாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன[9]. மதானி விஷயத்தில் கூட இப்படித்தான் இரு மாநில போலீஸாரும் நடந்து கொண்டார்கள்.

Solar panel scam3

உம்மன் சாண்டி,  குருவில்லாவின் புகார் பற்றி கூறுவது: உம்மன் சாண்டி “குருவில்லா உண்மையில் புகார் கொடுப்பது போல, என்னை திசைத் திருப்பியுள்ளார். என்னுடைய பெயர் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதனால், நான் அப்பொழுது நடவடிக்கை எடுக்க சொன்னேன். போலீஸார் சிலரை கைது செய்து விசாரித்தபோது, அவர்கள் வேறு கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆதாவது அவர்கள் ஏமாந்து விட்டதால், புகார் கொடுக்கக் கூடாது என்பதற்காக, அவ்வாறு குருவில்லா புகார் கொடுத்துள்ளதாக கூறினர். அவர்கள் கொடுத்த சாட்சியத்தின் பேரில் குருவில்லா கைது செய்யப்பட்டார்[10]. பெங்களூரில் ஒரு பணப்பட்டுவாடா விவ்வகாரத்தில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்”, என்றெல்லாம் உம்மன் சாண்டி கூறியுள்ளார்[11]. ஆனால், அச்சுதானந்தன் இதனை தட்டிக் கேட்டுள்ளார்[12]. குருவில்லா குறிப்பிட்ட ஆதர்ஸ மற்றும் ரஞ்சிதா என்பவர்களை விசாரிக்காமல், வழக்குப் பதிவு செய்யாமல், குருவில்லாவை கைது செய்தது ஏன் என்று கேட்டுள்ளார்[13].

M. K. Kuruvilla arrested

முந்தைய முதலமைச்சர் அச்சுதானந்தம் இது விசயமாகக் கேட்கும் கேள்விகள்: சுரானா வென்சூர்ஸ் லிமிடெட், ஆதித்யா சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ், பவர் ஒன்  மைக்ரோ சிஸ்டம்ம்ஸ் என்று பல கம்பனிகள் அரசின் பட்டியலில் இருந்தன. ஆனால், பிறகு அவை நீக்கப்பட்டன. இது ஏன் என்று அச்சுதானந்தனும் கேட்டுள்ளார். தாமஸ் குருவில்லா என்ற உம்மன் சாண்டியின் உதவியாளருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது என்பதனை விசாரிக்க வேண்டும் என்றார். உம்மன் சாண்டி தில்லியில் இருக்கும் போது, ஏழுமுறை தாமஸ் குருவில்லா “கேரளா ஹவுசில்” தங்கியிருக்கிறார். சரிதா நாயருக்கும் மாநில அமைச்சர்கள் – ஆர்யதன் மொஹம்மது, கே.சி.ஜோசப், கே.பி.மோகன், முன்னாள் அமைச்சர் கே,பி.கணேஷ்குமார், மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் முதலியோருக்கும் தொடர்பு உள்ளது என்றும் அச்சுதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்[14].

M K Kuruvilla and Thomas Kuruvilla

தாமஸ் குருவில்லா, எம். கே.  குருவில்லா குழப்பம் ஏன்?: இதில் வேடிக்கை என்னவென்றால், மேலே குறிப்பிட்ட உம்மன் சாண்டியின் உதவியாளர் தாமஸ் குருவில்லாவும் சரிதா நாயருடன் ஒரு கோடிக்கு சோலார் முதலீடு செய்வது பேசியிருக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இவர் சரிதா நாயர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரும் உம்மன் சாண்டியும் விக்யான் பவனில் டிசம்பர் 27, 2012 அன்று நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார் என்றும் ஒரு டிவி செனல் பேட்டியில் கூறியுள்ளார்[15]. ஆனால், சாண்டி அதனை மறுத்துள்ளார்[16]. ஆனால், தான் சரிதா, ஆன்ட்ரூ, திலிஜித் என்று யாரையும் சந்தித்தது கிடையாது என்கிறார்[17]. சென்ற ஜூன் மாதத்திலேயே, சோலார் பெனல் மோசடியில் முதலமைச்சர் அலுவலகம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற புகார் கொடுத்த எம். கே. குருவில்லாவை பண மோசடி வழக்கில் கேரள போலீஸார் கைது செய்தனர். அம்பலூர் என்ற ஊரில் தன்னை குருவில்லா ரூ 52.35 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். தன்னுடைய பேன் ஏசியா [Pan Asia Brokers and Consultancy Pvt Ltd] கம்பெனியில்[18] முதலீடு செய்தவர்களை ஏமாற்றிவிட்டதாக புகாரின் மீது இந்த நடவடிக்கை. அந்நிய வர்த்தகத்தில் பணத்தைப் போட்டு, இரட்டிப்பாக்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றினாராம்[19]. ஆனால், குருவில்லா கொடுத்த புகாரின் மேல், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[20].  இது ஏதோ புகார் கொடுத்தவரை பழி வாங்கும் போக்கு போன்று காணப்படுகிறது. சூரிநெல்லி பெண்ணின் விவகாரத்திலும், அவள் மீது பணம் கையாடல் என்ற பெயரில் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்துள்ளனர்.

Solar panel scam5

கேரள அரசு நிறுவனம் இம்மோசடியில் பங்கு கொண்டுள்ளதா?: மாற்று வழிகளில் மின்சாரம் உற்பத்தி மற்றும் நகர்புற தொழிற்நுட்பக் கழகம் [the State Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT)] என்ற மாநில அரசின் கீழ் இந்த சோலார் பெனல் திட்டம் வருகின்றது[21]. சூரிய சக்தி திட்டங்களும் என்று இதில் வருகின்றன[22]. இதனால் பலனடைந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு மத்திய அரசு மானியம் எவ்வளவு கொடுத்தது என்ற விவரங்களும் உள்ளன[23]. இதன் கீழ் கேரளாவில் “10,000 கூரைகளில் சோலார் பெனல் திட்டம் என்று ஆரம்பித்தது. ஆனால், இதை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் போலி கம்பனிகளை உருவாக்கி, அத்தகைய சோலார் பெனல்கள் நிறுவப்பட்டது போல காட்டி, “இன்ஸ்டலெஷன் சர்டிபிகேட்டுகளை” கொடுத்து மானியத்தையும் பெற்றுவந்தது தெரிகிறது. ஒரு பக்கம், பணம் உள்ளவர்களை, இதில் முதலீடு செய்யுமாறு கவர்ச்சிகர முறையில் வேலை செய்வது, மறுபக்கம் அரசாங்கத்தையும் ஏமாற்றுவது என்று செய்து வந்துள்ளது தெரிகிறது. இதனால், புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் சக்தி அமைச்சக செயலாளர், எச்சரிக்கை விடுத்துள்ளார்[24].

Thomas Kuruvilla New Delhi

30%  மானியத்தைப் பெறவே இந்த அரசு சார்பான மோசடி: தொழில், விஞ்ஞானம், நகர்புற வளர்ச்சி என்று பலதுறைகள் இதில் வருவதால், அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க முடியாது. உம்மன் சாண்டி போல, எனது அந்தரங்க செயலாளர்கள் போனில் ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள், எனக்கு போனே கிடையாது, இதனால், நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இந்த அமைச்சர்களும் அதே பாணியைப் பின்பற்றுகிறார்கள். இதில் ஒன்று வியாபாரத்தில் அதாவது இப்படி 30% மானியத்தை கொள்ளையடுக்கும் பணப்பகிர்வு விஷயத்தில் சம்பந்தப் பட்டவர்களுக்கிடையே தகராறு  வந்திருக்கலாம் மற்றும் ஆட்சி மாறியதால், அரசு சார்பு அதிகாரிகள், இடைத்தரகர்கள், மற்றவர்கள் மாறுவதால் காட்டிக் கொடுக்க முயற்சித்திருக்கலாம். அதன் விளைவுதான் பிஜு-சரிதா-ஷாலு மாட்டிக் கொண்டது[25]. ஆனால், இன்னும் இதில் மோசடி செய்தவர்கள் சிக்காமல் இருக்கின்றனர். உசாரான மத்திய அரசு செயலாளர், உண்மையிலேயே எத்தனை சோலார் பெனல்கள் நிறுவப்பட்டுள்ளன என்ற அறிக்கையினைக் கேட்டுள்ளது. அவ்விவரங்கள் கிடைக்கும் வரை 30% மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது[26].

வேதபிரகாஷ்

© 21-07-2013


[6] Mr Nair claimed that one of his directors named Andrews was the first cousin of the Kerala CM. He operated from Abu Dhabi and would arrange the technology as well as the project funding from UK, Mr Kuruvilla was told. http://archive.asianage.com/node/203025

[7] Since June 2011, Kuruvilla had transferred parts of Rs. 1 crore into different accounts and had also given cash to investors who approached him claiming to be from a company run by Kerala chief minister’s relatives.  Deccan Chronicle reported November 16, 2012 that Kuruvilla was getting threat calls from underworld operatives, including Ravi Poojary and associates of Dawood Ibrahim, after he complained to the Kerala police that he had been cheated of Rs. 1 crore by a Kerala-based solar panel company.

[11] He said the Bangalore-based businessman M.K. Kuruvilla who had complained to him had, in fact, misled him also. The Chief Minister said he had ordered action because Mr. Kuruvilla had alleged that the Chief Minister’s name was used to cheat him. When the police arrested a few people and questioned them for three days, they had a different story to tell. They said that they had been cheated and the petition was filed to prevent them from taking action. They had also approached him and the businessman was arrested on the basis of evidence produced by them. He was behind a Bangalore-based money chain operation.

http://www.thehindu.com/news/national/kerala/truth-will-be-out-soon-says-chandy/article4902567.ece

[12] Mr. Achuthanandan also sought an explanation as to why companies such as Surana, Adithya, and Power One were initially empanelled by the State Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT) and why they were excluded later. There must be an explanation why no case was registered against persons named Adarsha and Ranjith, whom the Bangalore-based businessman M.K. Kuruvilla had accused of financial fraud. Instead of arresting them or questioning them, Mr. Kuruvilla was arrested and his financial sources investigated, the Opposition leader pointed out.

http://www.thehindu.com/news/national/kerala/the-entire-cabinet-must-go-vs/article4881496.ece

[14] Mr. Achuthanandan demanded that the source of income of Thomas Kuruvila, aide of the Chief Minister in Delhi, should also be probed. He had stayed at Kerala House in Delhi on seven occasions when the Chief Minister was there. He alleged that Ministers Arayadan Mohammed, K.C. Joseph, K.P. Mohahan, and M.K. Muneer and former Minister K.B. Ganesh Kumar had links with Saritha and her company besides Union Minister of State K.C. Venugopal.

http://www.keralanext.com/news/2013/06/24/article141.asp

[16] On June 16, one of Chandy’s close associates, Delhi-based Thomas Kuruvilla, dropped another bombshell. He told a TV channel that at Saritha’s request, on December 27, 2012, he had arranged a meeting between her and Chandy at a Vigyan Bhavan conference. Chandy denies having met her.

[19] M K Kuruvila, native of Uzhavoor in Kottayam and an industrialist settled in Bangaloreswindled `45 lakh from Bijeesh during several occasions in the pretext of returning it after doubling the amount through foreign exchange trade and commodity trading.

http://newindianexpress.com/states/kerala/Man-arrested-for-fraud-in-Thrissur/2013/06/25/article1651606.ece

[20] Police on Monday (June 24, 2013) held industrialist MK Kuruvilla who alleged that CMO is connected with solar scam. He was arrested on financial fraud where it is alleged that he had cheated on Rs 52.35 lakh from a person in Amaballor. Permanagalm police arrested him. Earlier Kurvilla alleged involvement of CM’s staff in solar scam and also stated that though he filed complaint with CM, no action was taken.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137336

[24] Red-hot solar controversy has prompted the Union Ministry of New and Renewable Energy to sound the warning bell. The ministry is alarmed over reports of fraudulent companies swindling public in the name of installing solar power systems, and said it will put under microscope the implementation of the ambitious ‘10,000 solar roof-top programme’ in Kerala. Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT) is implementing the programme in the State.

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)

ஜூலை 14, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)

Biju-Radhakrishnan-IE-photo-Solar scam

மோசடிகளில் கையாண்ட முறைகள்[1]: இருவருமே 2005லிருந்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு, கைது செய்யப் பட்டு, சிறைவாசம் அனுபவித்து, மறுபடி-மறுபடி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளையுடை அணிந்த டிரைவர்கள் ஓட்டிவரும் கார்களில் பிரயாணம் செய்தல், தங்கள் கூட வரும் ஆட்களும் டிப்-டாப்பாக உடை அணிந்து கொண்டு வருதல், பெரிய கார்புரேட் கம்பெனிகாரர்கள் போல பந்தா காட்டுதல், போன்ற முறையில் செயல்பட்டு வந்தார்கள். ரூ.2 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று ரூ.40 லட்சங்கள் பெற்றுக் கொண்டு மாயமானது, காற்றாலை மோசடியில் கோயம்புத்தூரில் கைது, அரசியல்வாதிகள், நடிகைகள் என்று வைத்துக் கொண்டு 2011ல் கொச்சியில் சோலார் முதலீடு அலுவலகங்களை திறந்து வைத்தல் என்று தான் பளபளப்புடன் வியாபாரம் செய்துள்ளனர்.

Saritha-S-Nair - arrested

ஸ்விஸ் சோலார் கம்பெனியும், சிதம்பரம் பெயர் சொல்லி செய்த மோசடிகளும்: பொலீஸாரின் தகவல்கள் படி, பிஜு தன்னை மின்சாரம் உற்பத்தி துறையை சேர்ந்த அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு ஒரு பெரிய நடிகரை சந்தித்துள்ளான். மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் தனக்கு பரிச்சயம் உள்ளது என்றும், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் தொடங்க இலவசமாக நிலம் கிடைக்கும் என்றும், அதனால் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமுள்ள, அதே நேரத்தில் அரசு திட்டங்களில் பங்குகொள்ள முதலீட்டார்களை எதிர்பார்ப்பதகாவும் சொல்லிக் கொண்டான்[2]. அரசு வாகனம் போல கூம்பு வைத்த காரில் வந்து, மந்திரி சிதம்பரந்தின் ஊழியர்களுடன் போனில் பேசுவது போல காட்டிக் கொண்டுள்ளான். இவ்வாறு புகார் அளித்தவர்கள் கூறியுள்ளனர்[3].

Shalu Menon arrested Kottayam Friday 05-07-2013 solar panels -PTI

பிஜுவின் நடிகை தொடர்புகள்,  உம்மன் சாண்டியின் நிலை: சோலார் வசதி செய்து தருவதாக மக்களை ஏமாற்றிய வழக்கில் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சரிதா எஸ். நாயர் [Saritha S. Nair and her live-in partner Biju Radhakrishnan] ஏற்கனவே சென்ற மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாலு மேனன் ஒரு நடிகை, நாட்டியம் ஆடுபவர், கோரியோகிராபர் ஆவர். இவர் பல அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். டீம் சோலார் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர் என்று பிஜுவால் அறிமுகப்படுத்தி வைக்கப் பட்டார். இப்பிரச்சினை எழுந்ததும், ஷாலு மேனன் தப்பி செல்வதற்கு ராதாகிருஷ்ணன் தனது காரை அளித்ததாக கூறப்படுகிறது. கேரள போலீஸார் ஏற்கெனவே ஷாலு-பிஜு திரிசூரில் தொடர்புகளை கண்டறிந்துள்ளனர்[4]. திரிசூரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது, ஷாலுவுடன் பிஜுவை மக்கள் பார்த்திருக்கின்றனர். பின்னர், தப்பித்து மறைந்தபோது, கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டான். அவன் தான் சாண்டியை சந்தித்து பேசினேன், சரிதாவிற்கு தொடர்புள்ளது, சாண்டியின் உதவியாளர்கள் எப்பொழுதும் போனில் பேசியுள்ளனர் என்ற விவரங்கள் வெளிவந்தவுடன், கேரளாவில் சோலார் ஊழல் விவகாரத்தை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பி முதல்வர் உம்மன் சாண்டியை ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் இரண்டு நாட்களாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

Jeya kerala  function - Ummen Chandy and others

சோலார் ஊழலில் உம்மன் சாண்டிக்கும் உள்ள தொடர்பு: கேரளாவில் சோலார் கருவிகள் பொருத்துவதில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இந்த ஊழல் குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயரை முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இதனால் சோலார் ஊழலில் உம்மன்சாண்டிக்கும் தொடர்பு உள்ளது என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  சோலார் ஊழலையொட்டி முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞர் பிரிவினர் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்[5]. உம்மன் சாண்டியின் அலுவலகம் தாக்கப்பட்டது. அப்பொழுது சசிதரூர் ஊழலைப் பற்றி கவலைப்படாமல், தாக்குதல் ஜனநாயகம் அல்ல என்று பேசியுள்ளார்.

Biju, Chandy, George

எதிர் கட்சிகள் பதவி விலக கேட்டது: அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்து சபையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவரக்கோரி நோட்டீசு கொடுத்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி.திவாகரன் பேசும்போது சோலார் ஊழலுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்வர் பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். சோலார் ஊழல் புகார் விஷயத்தில் எதிர்க்கட்சிகளை ஆளும் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து சந்திப்பதோடு எதிர்க்கட்சிகளின் சதித்திட்டத்திற்கு நாங்கள் ஆளாகமாட்டோம் என்றும் கூறிய உம்மன்சாண்டி, பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன் என்றார். இதனையொட்டி சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதில் சட்டசபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. டென்னி ஜோப்பன் மற்றும் ஜிக்குமோன் ஜேகப் என்ற சாண்டியின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[6]. இருப்பினும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.

Shalu with Jeyaram in a function

உம்மன் சாண்டி – சரிதா தொடர்புகள்: சோலார் திட்டம் தொடர்பாக சரிதா நாயருடன் முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து பேசினேன் என்று ஸ்ரீதரன் நாயர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி நடந்தது என்று மலையாளம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் ஸ்ரீதரன் நாயர் கூறியுள்ளார்[7]. இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, ஸ்ரீதரன் நாயரை சோலார் சம்பந்தமாக நான் சந்திக்கவில்லை கல்குவாரி விஷயமாக பிரதிநிதிகளுடன் வந்த ஸ்ரீதரன் நாயரை சந்திதித்தேன் என்றார். உண்மையில் இவரும் பிஜுவால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். அதனால், முதலமைச்சரிடம் சென்றபோது, அதைப் பற்றி பேசாமல் இருந்திருப்பார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இதேபோலத்தான் பிஜுவும் முதலமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளான். அப்பொழுது தான் சரிதா-கணேஷ்குமார் உறவு பற்றி பேசியதாகச் சொல்லப்பட்டது. இப்படி சம்பந்தம் இல்லை என்று பேசினாலும், இவர்கள் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள். உம்மன்சாண்டிற்கு மொபைல் இல்லை. அவரது செயளர்களின் போன்களைத் தான் உபயோகப்படுத்தி வருகிறார். அந்த எண்களுக்கு சரிதா நடு இரவு என்றுகூட பார்க்காமல் பலதடவை பேசியுள்ளார். என்ன முக்கியமான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு நடு இரவில் பேசுவார்களா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

Salu - T Radhakrishnan visit to her - clarified

சரிதாவுடன் காங்கிரஸ் கட்சிக்கார்களுடைய நெருக்கம்: சரிதா நாயர் யார்-யாருடன் மொமைல் மூலம் தொடர்பு கொண்டுள்ளார், பேசியுள்ளார் என்று போலீஸார் நம்பர்களைப் பெற்று சோதனை செய்தனர். அதில் கீழ்கண்டவர்களின் எண்கள் உள்ளன[8]:

Saritha has contacts with ministers and Chennitala

  1. ரமேஷ் சென்னிதாலா, கேரள பிரதேச காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்
  2. கே. சி. வேணுகோபால், மத்திய அமைச்சர்.
  3. ஆர்யதன் முஹம்மது, மாநில அமைச்சர்
  4. கே. சி. ஜோசப், மாநில அமைச்சர்
  5. ஆடூர் பிரகாஷ், மாநில அமைச்சர்
  6. எம். பி. அனில்குமார், மாநில அமைச்சர்.
  7. ஷிபு பேபி ஜான், மாநில அமைச்சர்.
  8. பி. சி. விஷ்ணுநாத், எம்.எல்.ஏ
  9. பென்னி பேஹன், எம்.எல்.ஏ
  10. ஹிபி எடின், எம்.எல்.ஏ
  11. மோன்சி ஜோசப், முந்தைய அமைச்சர்
  12. ஷனிமோல் உஸ்மான், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்
  13. டி. சித்திக், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்.

Saritha has contacts with ministers and Chennitala2

சரிதா நாயரின் செல்போனில் உள்ள எண்கள் காங்கிரஸ் கட்சிக்கார்களுடைய நெருக்கத்தைக் காட்டுகிறது. உண்மையிலேயே காங்கிரஸின் செக்யூலரிஸமும்  இதில் அதிகமாகவே வெளிப்பட்டுக்கிறது. இந்து, முஸ்லிம், கிருத்துவர் என்று இருப்பதை காணலாம். திக் விஜய சிங் கிருக்கர்கள் இந்த “செக்யூலரிஸ / சமதர்ம” ஊழலை ஆதரித்துப் பேசினாலும் ஆச்சரியப் பட்டுவதற்கு இல்லை. இவர்கள் என்னத்தான் மறுத்தாலும், இந்த தொடர்புகளைப் பற்றி விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும்.

Solar scam - Radhakrishnan, Saritha, Ganesh

பி. சி. ஜார்ஜ் தெரிவிக்கும் விவரங்கள்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் கேரளாவில் ஆபாசமாக பேசுவதில் வல்லவராக இருந்து வருகிறார். இப்பொழுது அவர் சில விவரங்களை வெளியிட்டுள்ளார்: “அச்சுதானந்தன் முதலமைச்சராக இருந்தபோதே இந்த ஊழல் நடந்து கொண்டிருந்தது. சிஜு என்ற போலீஸ்துறையை சேர்ந்தவரும் இந்த ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறார். ஒரு ADGPயே இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொடியேரி பாலகிருஷ்ணன் அலுவலகத்திற்கு சரிதா பலமுறை வந்துள்ளார். ஆனால் சந்தித்தாரா என்று சொல்ல முடியாது”, என்றாராம்[9].

Jeya kerala  - group

பி.சிஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். கணேஷ்குமார் இதனால் பதவி விலக நேர்ந்தது. ஆனால், இங்கு சரிதாவின் தொடர்பு வருகிறது.

Jeya kerala  - group photo2

அசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சிஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார் என்று பல செய்திகள் வந்துள்ளன[10]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[11]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[12]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[13], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[14]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[15].

Jeya kerala  - group photo3

சோலார் பெனலுடன் காற்றாலை மோசடியும் இணைந்தது: சூரிய ஒளியுடன் காற்றும் சேந்துள்ள கொடுமை இந்த ஊழலில் காணலாம். இக்கூட்டம் தாங்கள் காற்றாலைகள் வைத்திருக்கிறோம், அதனால் அவற்றிலும் முதலீடு செய்யலாம் என்று வியாபார ஆசைக் காட்டியுள்ளனர். அந்த காற்றாலைகளில் பல அமைச்சர்களும் முதலீடு செய்துள்ளார்கள் என்றும் சொன்னார்கள். அவர்களை நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் “உல்லாச உல்லாவாக” கூட்டி வந்து மயக்கியுள்ளனர். அதையும் நம்பி, சிலர் பணத்தை கொடுத்துள்ளனர்.

Saritha house raided-Solar scam

கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டு: திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் இடதுசாரி குடியாட்சி முன்னணியை [Left Democratic Front (LDF)] இந்த ஊழலை உக்குவித்ததற்கு குற்றஞ்சாட்டியுள்ளார். பிஜு முன்னர் தான் கொடியேரி பாலகிஷ்ணனுக்கு நெருக்கமானவன் என்று சொல்லிக் கொண்டான். தேவராஜன் என்பவர் புகார் கொடுத்தபோது, அவரை சமாதானப் படுத்த மந்திரியின் செயலருடன் பேச அழைத்துச் சென்றான். இந்த மோசடி அவர்கள் காலத்திலேயே ஏற்பட்டது, ஆனால், தகுந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து விட்டனர், என்றெல்லாம் குறைகூறினார்[16]. பி.சி.ஜார்ஜ் தன்னிடம் சரிதாவிடம் ஏமாந்த  54 பெயர்கள் கொண்ட ஓரு பட்டியல் இருப்பதாகச்ச் சொல்லிக்கொள்கிறார்[17]. அதில் காங்கிரஸ்காரர்களின் பெயர்களும் உள்ளனவாம்!

Shalu Menon arrested3

ஏ. பிரோஸ் என்ற பொதுமக்கள் நலத்துறை இயக்குனர் இந்த ஊழல் விவகாரமாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இவரது முன்-ஜாமின் மனு 12-07—2013 அன்று கேரள உயர்நீதி மன்றம் நிராகரித்தது[18]. உமன் சாண்டியின் செலர் டென்னி ஜோப்பன் என்பவரும் முன்-ஜாமின் மனு கொடுத்துள்ளார். பிஜுவின் தாயார் ராஜம்மாள் என்பவரும் ரேஸ்மி கொலை விஷயத்தில் முன்-ஜாமின் மனு கொடுத்துள்ளார். பின்னது இரண்டை கோர்ட் தள்ளி வைத்தது[19].

Shalu with VIPs in a function

சோனியாவுடன் பேசும் அளவிற்கு இப்பிரச்சினை அந்த அளவிற்கு பெரியதா?: உம்மன் சாண்டி இது விஷயமாக சோனியாவை சந்தித்து பேசியது ஏன் என்று தெரியவில்லை[20]. சோனியா ஆட்சியில் ஊழல் நடக்கவில்லைய என்ன? பிறகு எதற்கு இந்த அவசியம், அவசரம்? தான் ராஜினாமா செய்யப் போவதில்லை மற்றும் மந்திரிகள் மாற்றம் இல்லை என்று வேறு அறிவித்தது இதற்கு மேலும் வேடிக்கையான விஷயம் தான்.சாண்டி தொடர்ந்து பதவி வகித்தால் வரும் 2014 தேர்தலில் தமது வெற்றி பாதிக்கப்படும் என்று காங்கிரஸ்காரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்[21]. இருப்பினும் ஏ. கே. ஆன்டனியின் சிபாரிசு மூலம் சாண்டி தப்பித்துக் கொண்டதாக தெரிகிறது[22]. சோனியாவுடன் பேசும் அளவிற்கு இப்பிரச்சினை அந்த அளவிற்கு பெரியதாக இருக்கும் என்றால், இதன் பின்னணியில் வேறு ஏதோ உள்ளது என்றுதான் தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 14-07-2013


[2] Quoting their statements, the police said that Biju had approached one of them along with a television serial actor. He allegedly introduced himself as a bureaucrat working in the Central government’s power department. He claimed that he had the mandate of the then Union Home Minister P. Chidambaram to seek out “public-spirited” businessmen to invest in government-backed (by providing free land) solar and wind energy projects scheduled to come up in Tamil Nadu.

http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/singed-by-the-solar-trap/article4826226.ece?ref=relatedNews

[3] The complainant also told the police that the accused had arrived in a car with a roof-top beacon to lend legitimacy to his claim that he was a civil servant of standing in the Union government. Investigators said the suspect had also made calls from the businessman’s house, some of them purportedly to Mr. Chidambaram’s personal staff.

http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/singed-by-the-solar-trap/article4826226.ece?ref=relatedNews

[8] Phone call list of solar cheating scam accused Sarita S Nair made available is sure to give sleepless nights to many ministers. The phone list which first mentioned calls made to the chief minister and the home minister has now extended to some more ministers and KPCC president Ramesh Chennithala. On Thursday, when the phone call list was made available to the media, Ramesh Chennithala and union minister K C Venugopal, state ministers Aryadan Muhammed, K C Joseph, Adoor Prakash, M P Anilkumar, Shibu Baby John and MLAs P C Vishnunath, Benny Behan, Hiby Edin, former minister Moncy Joseph, congress leaders Shanimol Usman, T Sidhique among others figured in the list. The calls were made ranging from a few minutes to a longer duration, according to available documents.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137684

[10] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.

http://www.indianexpress.com/news/keralas-p-c-george-uncut-and-uncensored/1097825/

[11] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests. http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY

[14] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career

http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html

[15] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.

http://www.firstpost.com/politics/after-kurien-yet-another-sex-scandal-catches-up-with-congress-in-kerala-618856.html

[17] The solar panel scam has got murkier with Government Chief Whip P.C. George coming out with a list, purportedly maintained by Sarita S. Nair, containing the names of those who had given money to the accused. Home Minister Thiruvanchoor Radhakrishnan, on his part, refused to accept this as a valid document. George said that he has in his possession a list, believed to be kept by Sarita, which has 54 names, including that of a KPCC functionary.

http://www.thehindu.com/news/cities/Kochi/george-claims-to-have-list-of-solar-scam-victims/article4912650.ece

[19] Firoz was suspended for his alleged involvement in a financial cheating case along with Saritha S Nair and Biju Radhakrishnan, main accused in the solar scam case. The bail plea of Tenny Joppen, former private secretary to chief minister, Oommen Chandy, also came up. Joppen was arrested in connection with the solar scam case. When the petition came up, Advocate General K P Dandapani sought for adjournment, saying he needed more time to study the case diary. It has been posted to Tuesday next. The anticipatory bail plea of Rajammal, mother of Biju Radhakrishnan, in connection with the death of Biju’s first wife Rashmi, also came up before the court. The petition was adjourned for next week.

[21] Despite the fact that the state unit led by PCC chief Ramesh Chennithala has backed Chandy, there has been unease in the state Congress with a section having reservations over Chandy’s continuance as they argue that it will hurt the party’s prospects in the upcoming Lok Sabha polls.

http://www.dnaindia.com/india/1860508/report-solar-panel-scam-demand-for-kerala-chief-minister-oommen-chandy-resignation-gathers-momentum

[22] Sources said Sonia was convinced about the probe and the corrective measures initiated by Chandy, but conveyed her displeasure to him over lack of coordination in the state government on the issue. She also told Chandy to launch more people-friendly measures and to go in for a cabinet rejig to placate certain disgruntled communal organizations. Apparently A K Antony’s stand that there was no need for a leadership change at this stage helped Chandy’s cause.

http://timesofindia.indiatimes.com/india/Solar-panel-scam-Oommen-Chandy-meets-Sonia-Gandhi-is-safe-for-the-time-being/articleshow/21062073.cms

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)

ஜூலை 14, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)

Solar scam details - The Hindu - Graphics

படித்தவர்கள் நிறைந்த கேரளாவில் சூரிய ஒளி ஊழல்: சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று அரசாங்கம் கோடிகளைக் கொட்டி திட்டங்களை வகுத்துள்ளது. இதில் ஊக்கத்தொகை, வரிவிலக்கு, சுங்கவரி விலக்குபோன்ற சலுகைகள் முதலியனவும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டங்களைப் பற்றி சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளன[1]. ஏனெனில், முதலில் அதிகமாக முதலீடு செய்தால், குறைவாகவே பலன் கிடைக்கும். அதாவது ஒரு வாட் மின்சாரத்தின் விலை மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், நெடுங்கால வைப்பு நிதிபோல பணத்தைப் போட்டு வைத்தால் பலன் கிடைக்கும் என்று, பணம் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், கேரளாவில் இதை வைத்துக் கொண்டு கோடிகளில் ஊழல் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Chandys two aides arrested

அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் ஊழல் ஈடுப்பட்டுள்ளது: கேரளாவின் அரசியல்வாதிகள் மத்திய அதிகமான தாக்கம் கொண்டிருப்பவர்கள். சோனியா சர்வ வல்லமை படைத்த தலைவராக இருப்பதனால், கிருத்துவர்கள் பெரிய பகுதிகளில் இருக்கின்றனர். இதனால், சாதாரணமான விஷயத்திற்கு கூட தமது அதிகாரத்தை, அரசியல் நெருக்கத்தைக் காட்டிக் கொண்டு வருவர். இந்நிலையில் பிஜு ராதாகிருஷ்ணன் என்பவர், சரிதா நாயர் என்ற பெண்மணியுடன் சேர்ந்து கொண்டு சூரிய ஒளி பெனல் திட்டம் மூலமாக கோடிகளை ஏமாற்றியுள்ளதாக விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு கவர்ச்சிகரமான நடிகைகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அந்நடிகைகளுடன் மத்திய அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்களின் தொடர்புகள்ளும் உள்ளன.

Saritha-S-Nair - IE photo- Solar scam

சரிதா நாயரின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள்: பிஜு ராதாகிருஷ்ணன் டீம் சோலார் ரெநியூபல் எனர்ஜி சிஸ்டம்ஸ் [Team Solar Renewable Energy Systems] என்ற கம்பெனியை தடபுடலாக ஆரம்பித்தார்[2]. அக்கம்பெனியின் கிளைகளும் மந்திரிகள், நடிகைகள் என்று வைத்து ஆரம்பிக்க வைக்கப் பட்டன. ஊடகங்களில் பிரமாதமாக விளம்பரமும் செய்யப்பட்டது. அரசில் தொடர்புள்ள சரிதா நாயர், லட்சுமி நாயர், நந்தினி நாயர் என்று ஆறு பெயர்களை உபயோகப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக மும்தாஜ் என்ற பெயரை உபயோகப் படுத்தி, டீம் சோலார் கருவிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டு வியாபாரப் பேச்சுகளை நடத்தியுள்ளார். வெற்றிகரமாக பணத்தையும் பெற்றுள்ளார். சரிதா அமைச்சர்களை “மாமா” என்றுதான் அழைப்பாராம். அந்த அளவிற்கு நெருக்கம் இருந்தது[3]. யாரிடம் பணம் உள்ளது என்று அறிந்து அவர்களிடம் சென்று சோலார் பெனல் திட்டதில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்வாராம். சிலரிடம் தனது யுக்திகளைப் பயன்படுத்தி மயக்கவும் செய்வாராம். அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்பொழுது ரகசிய கேமரா மூலம் அக்காட்சிகளை படமெடுத்து, அவற்றைக் காட்டி, அவர்களை மிரட்டியும் பணமுதலீடு செய்ய வைத்திருக்கிறார். நிறையபேர் புகார் கொடுக்காமல் இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் தங்களுடைய கருப்புப் பணத்தை இவ்வாறு முதலீடு செய்து வெள்ளையாக்கலாம் என்று நினைத்தனர்[4]. ஆனால், இப்பொழுது பிரச்சினை பெரிதானவுடன் மைனமாகி விட்டனர். பாதிக்கப்பட்ட சிலரே புகார் அளித்துள்ளனர்[5].

Salu with Biju - Solar scam-before arrest

ஷாலு மேனன் – கவர்ச்சிகர வியாபாரம் பெருகியது: ஷாலு மேனன் ஒரு நடிகை, நாட்டியம் ஆடுபவர், கோரியோகிராபர் ஆவர். இவர் பல அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். இதனால் சென்சார் போர்டின் உறுப்பினர் பதவியினையும் பெற்றார். ஜெய கேரளா நடனப் பள்ளி[6] என்ற நாட்டியப்பள்ளியை பதனம்திட்ட மாவட்டம் முழுவதும் பல கிளைகள் வைத்து நடத்தி வந்தார். அங்கு நடனம், பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டது[7]. டீம் சோலார் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர் என்று பிஜுவால் அறிமுகப்படுத்தி வைக்கப் பட்டார். சரிதா நாயருடன் பிஜு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும், ஷாலுவுடன் இருந்தது மற்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன[8].

Solar scam - more names of actresses

உத்திரா உன்னி டீம் சோலாரின் பிராண்ட் அம்பாசிடரா?[9]: உத்திரா உன்னி என்ற இன்னொரு நடிகையின் பெயரும் இவ்விவகாரத்தில் அடிபடுகிறது. சென்னை-தில்லி சென்றுவர விமான டிக்கெட்டுகள் பிஜு-சரிதாவினரால் ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் வாங்கப் பட்டுள்ளன. அவை உத்திரா உன்னி செல்வதற்காக வாங்கப் பட்டுள்ளன. ஆனால், கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதால், அந்த டிராவல் ஏஜென்சி உத்திரா உன்னி மேல் புகார் கொடுத்துள்ளது. மேலும் பேஸ்புக்கில் உத்திரா உன்னி, டீம் சோலார் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்திரா உன்னி தான் பிராண்ட் அம்பாசிடர் இல்லை, ஆனால், அக்கம்பெனியின் விளம்பரத்தில் நடித்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். முக்தா என்ற இன்னொரு நடிகையும் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் கொடுத்தார்[10]. இதில் வேடிக்கையென்னவென்றால், ஷாலு மேனனே தன்னை பிஜு ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளது தான்!

Saritha has contacts with ministers and Chennitala

அரசியல் தொடர்புகள் விரியும் மர்மங்கள்: டீம் சோலார் ஊழல் வழக்கில் ரஷீக் அலி, மனாகாட், திருவனந்தபுரம் என்ற நபர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது[11]. இதனையடுத்து ஷாலு மேனன் என்ற அந்த நர்த்தகி மற்றும் நடிகை வெள்ளிக்கிழமை 05-07-2013 கோட்டயத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டிலிருந்து தம்பனூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்[12]. திருவனந்தபுரம் மேஜிஸ்ட்ரேட் ஷாலு மேனனுக்கு ஜாமின் கொடுத்தால் தனக்குள்ள அரசியல் சக்தியினால் சாட்சிகளை களைத்துவிடுவார் என்று அவரது ஜாமினும் நிராகரிக்கப்பட்டது[13]. இடதுசாரிகள் உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த நடிகைக்கும் தொடர்பு உள்ளது என்று கூறிவருகிறது. திரிசூரில் ஒரு பெரிய வீடு கட்டி, கிருகபிரவேஷம் செய்தபோது, அமைச்சர் வந்திருக்கிறார்[14], அதனால், அவர் இந்நடிகையை இவ்வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவி வருகிறார் என்று குற்றஞ்சாட்டி வருகின்றன[15]. ஷாலு மேனன் மற்றும் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் டீம் சோலார் கூட்டத்தில் பங்கு கொண்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன[16]. கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி, எர்ணாகுளத்தில் உள்ள பிஜுவின் வீடு, டீம் சோலார் அலுவலகங்களில் (திருபுனித்துரா, ஆலப்புழா, திரிசூர்) சோதனை நடத்தப் பட்டது. பல ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன[17].

The office of Team Solar on Chittoor Road in Kochi raided on Sunday 16-06-2013

நடிகைகளுடான தொடர்புகள், சேர்ந்து வாழ்தல், கொலை முதலியன: பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயருடன் சேர்ந்து வாழ்வதை அவரது மனைவி ரேஷ்மி எதிர்த்ததால், 2006ல் கொலை செய்தான். சென்ற மாதம் ஜூன் 17 அன்று அதற்காக கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டான்[18]. இப்பொழுது இந்த சோலார் ஊழலில் பிஜு, சரிதா மற்றும் கே.பி. கணேஷ்குமார் என்ற நடிகர்களை இழுத்துள்ளான். கைது செய்யப்பட்டபோது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சொல்லிக் கொண்டான்[19]. ஏற்கெனவே கணேஷ்குமாரின் மனைவி மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சரிதா நாயரே கணேஷ்குமாரின் முந்தைய மனைவி அல்லது சேர்ந்து வாழ்ந்திருக்கிறார் என்று கேரள ஊடகங்கள் கூறுகின்றன[20]. கே.பி. கணேஷ்குமார் முந்தைய மந்திரியும் கூட. பெண்களைக் கொடுமைப் படுத்தினார் என்பதனால் பதவி விலக நேர்ந்தது. கே. சி. வேணுகோபால், மத்திய அமைச்சரின் தொடர்பும் இதில் காணப்படுகிறது[21]. அவர் தான் என்றுமே உதவியதில்லை என்று மறுத்தாலும், நடுராத்திரி வேளைகளில் சரிதாவுக்கு போன் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[22]. முன்பு கே. சி. ஜோசப் சரிதாவின் கோட்டயம் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார்[23]. இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்பு கொண்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன. சரிதா குறைந்த பட்சம் ஆறு கேரள மந்திரிகளுடன்[24] போனில் பேசியுள்ளதற்கு[25] ஆதாரங்கள் உள்ளன[26].

Saritha has contacts with ministers and Chennitala2

சரிதா பற்றி முதலமைச்சரிடம் பேச வேண்டிய அளவிற்கு என்ன விஷயம் இருக்கிறது?: இன்றைக்கு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் என்பது சிலரின் வழக்கத்தில் வந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே “மனைவி-துணைவி” என்ற சித்தாந்தங்கள் உள்ளன. இவற்றை தமிழகத்தில் நாத்திகம் என்று சொல்லிக் கொண்டு நடிகர்-முதலமைச்சர் என்று பின்பற்றப் பட்டு வருகிறது. இதெல்லாம் புரட்சி என்று சொல்லிக் கொண்டாலும், சமூகசீரழிவிற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்தகைய கூடா தாம்பத்திய உறவுமுறைகள் கேரளாவிலும் உள்ளது போலிருக்கிறது. இங்கு பிஜு, கே.பி. கணேஷ்குமார், சரிதாவுடன் கொண்டுள்ள உறவு பற்றி சாண்டியுடன் ஒரு மணி நேரம் பேசியதாக கூறியுள்ளான்[27]. தான் குற்மற்றவன் என்றும் சரிதாவின் கணேஷ்குமாருடைய தொடர்புகளால் தான் இப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று பிஜு கூறியுள்ளான்[28]. சாண்டி இதைப் பற்றி ஒன்றும் கூறாவிட்டாலும், காங்கிரஸ் எம்பி எம்.ஐ.ஷானவாஸ் பிஜுவை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததை ஒப்புக் கொள்கிறார்[29]. இதனால் உம்மன் சாண்டி, சரிதா-கணேஷ்குமார் இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது[30]. என்ன இருந்தாலும், தன்னுடன் வாழும் பெண்னைப் பற்றி உம்மன் சாண்டியுடன் பேச வேண்டிய அவசியம் என்ன? மேலும் தனது மனைவியை 2006லேயே கொலை செய்துள்ளான் என்ற பிஜுவுடன் என்ன பேச்சு வேண்டியுள்ளது?

வேதபிரகாஷ்

© 13-07-2013


[3] Allegedly Saritha’s clout in power circles was such that she even used to address one of the LDF ministers as ‘Uncle’

[4] ஶ்ரீஜன் என்ற டைம்ஸ்-நௌ நிருபர் இவ்விஷயங்களை எடுத்துக் காட்டியுள்ளார். அந்த டிவி செனலும் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. “Sleaze, scam and scandal” என்ற நிகழ்ச்சி திரும்ப—திரும்பக் காட்டப்பட்டுகிறது.

[5] CNN-IBN, NDTV, Headlines Today, News-X முதலிய செனல்களில் இதைப் பற்றி அதிகமாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவையும் இங்கு எட்டுத்தாளப்பட்டுள்ளன.

[6] JAYAKERALA SCHOOL OF PERFORMING ARTS, OPP.N.S.S COLLEGE, PUZHAVATHU ROAD, CHANGANNACHERRY, PH: +91 481 2421487, 3205111; Mob: + 91 9387611137
jayakeralachry@gmail.com; http://jayakerala.org/

[7] She owns her own dancing school named Jaya Kerala School Of Performing Arts. It has branches almost in every part of Pathanamthitta District, Kerala. It also taught music, both vocal and non-vocal apart from all types of dancing. Read more at: http://entertainment.oneindia.in/malayalam/news/2013/shalu-menon-was-to-marry-biju-radhakrishnan-113922.html#slide234889

[14] ccording to the latest reports, Home Minister Thiruvanchoor Radhakrishnan is said to have visited the residence of serial actress Shalu Menon. But the visit is said to have been made on an occasion other than the house warming.  According to Thiruvanchoor Radhakrishnan, he paid a visit to Shalu Menon’s house, “not on the occasion of her housewarming, but on route to a visit to Amritanandamayi Mutt.” “Party activists who were in the area called me over. Also I know Shalu Menon’s grandfather Tripunithura Aravindaksha Menon. Otherwise there is no way that I know her,” said Thiruvanchoor Radhakrishnan. “When you are a minister, there are occasions like housewarming and marriages, which cannot be avoided. We cannot find out if those persons are involved in any case, before we set out for these functions,” he said. “All I did was spend around two minutes in Shalu’s home. Otherwise there is no other connection. I am not related to her by blood or any other way. In fact there have been other political leaders from other parties too, that day,” he said.

http://www.janamtv.com/news/Thiruvanchoor_Radhakrishnan_has_visited_Shalu_Meno_116274.php

[16] Images of Menon and Radhakrishnan attending a meeting of the solar panel company also appeared in the media. Reports also surfaced that Radhakrishnan had given a good amount of the money to Menon, and also purchased expensive gifts for her.

http://indialocalnews.in/2013/07/06/actress-shalu-menon-produced-in-court/

[20] இதைத் தவிர சரிதா நாயருக்கு 10 பேர் கணவர்கள் இருந்தனர் என்றெல்லாம் மலையாள ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

http://www.marunadanmalayali.com/index.php?page=newsDetail&id=16221

[21] “Con woman” Saritha S Nair’s estranged husband Biju Radhakrishnan on Saturday dropped a bombshell saying former minister K B Ganesh Kumar and Union minister K C Venugopal had illicit relationships with his wife and that it was Ganesh who destroyed his  family and their solar power business.

http://newindianexpress.com/states/kerala/Callgate-Saritha-hubby-targets-Ganesh-Venugopal/2013/06/16/article1637437.ece

[22] Union minister of state for Civil Aviation and Energy K C Venugopal claims he never helped her, though records of late calls from Saritha to him have been found.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

[23]  K C Joseph, Kerala’s culture minister inaugurated Saritha’s Kottayam office.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece

[24] Phone call list of solar cheating scam accused Sarita S Nair made available is sure to give sleepless nights to many ministers. The phone list which first mentioned calls made to the chief minister and the home minister has now extended to some more ministers and KPCC president Ramesh Chennithala. On Thursday, when the phone call list was made available to the media, Ramesh Chennithala and union minister K C Venugopal, state ministers Aryadan Muhammed, K C Joseph, Adoor Prakash, M P Anilkumar, Shibu Baby John and MLAs P C Vishnunath, Benny Behan, Hiby Edin, former minister Moncy Joseph, congress leaders Shanimol Usman, T Sidhique among others figured in the list. The calls were made ranging from a few minutes to a longer duration, according to available documents.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137684

[28] The prime accused in the solar cheating case Biju Radhakrishnan had revealed to a private TV channel on Saturday that he is innocent and that his wife Sarita S Nair had illegal links with former minister K B Ganesh Kumar and that was the reason for all the present issues. Biju revealed that after the inauguration of his office in Coimbatore, Ganesh and Sarita had stayed together in a hotel. It was the managers who had revealed to him about their relationship. Records revealing the teleconversations between Sarita and Ganesh would be given to P C George later, Biju said.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137050

[29] Causing further trouble for the CM, Biju claimed he had met the chief minister once for an hour-long discussion on Ganesh’s affair with Saritha. Chandy is yet to reveal the details. However, he said that Biju was referred to him by Congress MP M I Shanavas.

http://newindianexpress.com/thesundaystandard/Keralas-first-couple-of-sleaze-and-blackmail/2013/06/23/article1648086.ece