கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (1)
முற்றும் துறந்த துறவிகள் தற்கொலை செய்து கொள்ளலாமா?: இந்துமடாதிபதிகள் கொலை செய்யப் படுவது, தற்கொலை செய்து கொள்வது, புதிய செயல்பாடு, நிகழ்வு மற்றும் போக்காக தென்படுகிறது. கர்நாடகாவில் அடிக்கடி நடப்பது திகைப்பாக இருக்கிறது. 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். இவ்வாறு நடப்பது, மடாதிபதி பதவிக்கு வரவா, சொத்தா, அரசியலா போன்ற கேள்விகள் எழத்தான் செய்தன, செய்கின்றன. ஆனால், உடனே, அப்பிரச்சினை அமுங்கி விடுகிறது. துறந்தவர் என்ற நிலையில், துறவியாகி, சந்நியாசியாகி, மடாதிபதியாகி விட்டப் பிறகு, உலக ஆசைகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு, இத்தகைய நிலையை அடைவது, துறவிக்கு, துறவறத்திற்கு, மடத்திற்கு, இந்துமதத்திற்கே இழிவைத் தேடித் தரும் காரியமாகும். இதெல்லாம் திட்டமிட்டு நடத்தப் படுகின்றனவா, அவ்வாறான இழுக்கை உண்டாக்க நடத்தப் படுகின்றனவா அல்லது மனித ஆசைகளால் நிகழ்கின்றனவா என்று பாரபட்சம் இல்லாமல், நடுநிலையோடு பிரச்சினையை அலச வேண்டியுள்ளது.
லிங்காயத்து சைவ நம்பிக்கையும், வேத மறுப்பும்: கர்நாடகாவில் ஒரு பிரிவினர் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்[1]. லிங்காயத் பிரிவை 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் நடைமுறையில் கொண்டு வந்தார்[2], ”வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. லிங்காயத்தை பின்பற்றுபவர்கள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வர். இவர்கள் தங்களோடு எப்போதும் லிங்கத்தை உடன் வைத்திருக்க வேண்டும், லிங்கத்தை கைகளில் வைத்து பூஜிக்க வேண்டும், குழந்தை பிறந்ததும் லிங்கத்தை கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பது பசவண்ணா உருவாக்கிய கோட்பாடுகள். அதோடு அசைவம் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது போன்றவை பசவண்ணா உருவாக்கிய கொள்கைகள். சாதிகளை வைத்து மக்கள் பிரிக்கக்கூடாது என்றார். விதவை திருமணத்தை ஆதாரித்தார், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்,” என்றார்.
லிங்காயத் தனிமதம், இந்து மதமல்ல போன்ற கோரிக்கைகள், ஆர்பாட்டங்கள்: உண்மையில், இடைக்கால ஜைன-பௌத்த போராட்டங்கள், மோதல்கள், வாத-விவாதங்கள் வன்முறையில் முடிந்துள்ளன. இடைகாலத்தில் சைவவிரோத, ஜைனத்திலிருந்து விடுபட, பசவேஸ்வரர் இத்தகைய கொள்கைகளை முன்வைத்து, ஜைனத்தை தோற்கடித்தார். இந்த முற்போக்கு கருத்துக்களால் பசவண்ணா பின்னால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இவர்களே லிங்காயத்தார் என அழைக்கப்படுகின்றனர். லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் 2018 கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் சுமார் 17% பேர் லிங்காயத் மதத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து லிங்காயத்தை தனிமதமாக அறிவித்தனர். இதை வைத்துக் கொண்டு, தமிழகத்திலும் சில கோஷ்டிகள் கலாட்டா செய்து வருகின்றன[3]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை, வகை-வகையாக தங்களது சித்தாந்தங்களை வெளிப்படுத்தி, திரிபு விளக்கங்களுடன் கலாட்டா செய்வர். திமுக இவர்களுக்கு மேடை கொடுப்பதால், ஊடக விளம்பரமும் தாராளமாகக் கிடைக்கிறது[4]. கர்நாடகாவில், அதே வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது.
திங்கள்கிழமை 24-10-2022 அன்று குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது: கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டத்தில் உள்ள குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை செய்து கொண்டார்[5]. ராமநகரம் மாவட்டம், மாகடி வட்டத்தில் கெம்பாபுராவில் அமைந்துள்ளது குஞ்சகல் பண்டே மடம்[6]. இதன் தலைமை மடாதிபதியாக பசவலிங்கேஷ்வரா சுவாமி கடந்த 1997 முதல் பொறுப்பு வகித்து வந்தார்[7]. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக உள்ள பசவலிங்கேஸ்வர சுவாமிகள், தனது மடத்தின் பூஜையறையின் கண்ணாடிக் கம்பியில் திங்கள்கிழமை 24-10-2022 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்[8]. 1997ஆம் ஆண்டு மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பசவலிங்கேஸ்வர சுவாமிகள், அண்மையில் வெள்ளி விழாவைக் கொண்டாடியிருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மடத்தின் பணியாளர்களுடன் நிதி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தன் அறைக்கு உறங்க சென்றவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
பூஜைக்குப் பிறகு எடுத்த முடிவு: தினமும் அவா் காலை 4 மணிக்கு எழுந்து பூஜை செய்வது வழக்கம். அந்த சமயத்தில் பூஜையறையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக திங்கள்கிழமை காலை 6 மணிக்குப் பிறகும் பூஜையறையின் கதவுகள் மூடியிருந்ததைக் கண்ட மடத்தின் ஊழியா்கள், கதவைத் தட்டினா். கார் டிரைவர் தான் முதலில் கவனித்தார் என்று சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அவரது கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தனா். ஆனாலும், கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த மடத்தின் ஊழியா்கள், பின்புறமாகச் சென்று அறைக்குள் பார்த்த போது பீடாதிபதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மடத்தில் இருப்பவர்கள், இதனை நம்பவில்லை. நிச்சயமாக, ஏதோ ஒரு காரணத்திற்காக, குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக, அவர் மிரட்டப் பட்டிருக்க வேண்டும், அதனால், அத்தகைய முடிவுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப் படுகிறது.
பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டியுள்ளது: இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் எழுதி வைத்திருந்த மரணக் குறிப்பை போலீஸார் கைப்பற்றினா். அதில், ஒருசிலா் தனது செல்வாக்கை குறைக்கும் வகையிலான தகவல்களை வெளியிடுவதாக மிரட்டியதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அக் கடிதத்தில் தன்னை யார் மிரட்டினார்கள் என்பதையும் பீடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் கூறினா். அவா்களின் பெயரைத் தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனா். இந்த நிலையில் மடாதிபதிக்கு யாரோ அடிக்கடி வீடியோ கால் பேசியதும் தெரியவந்து உள்ளது[9]. இதனால் அவர் பயன்படுத்திய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்[10]. மேலும் மடாதிபதி பசவலிங்க சாமியின் டைரியையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்[11]. மேலும் ஹனிடிராப் முறையில் மடாதிபதி மிரட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[12]. பிறகு, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் அடையாளம் காணப் பட்டு, அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப் படுமா என்று கவனிக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
26-10-2022.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், Lingayat Seer : லிங்காயத் மடாதிபதி பசவலிங்க ஸ்வாமி தற்கொலை என தகவல்.. 2 பக்க கடிதத்தில் இருந்தது என்ன?, By: ஆர்த்தி | Updated at : 25 Oct 2022 01:33 PM (IST),Published at : 25 Oct 2022 01:33 PM (IST)
[2] https://tamil.abplive.com/news/india/karnataka-lingayat-seer-found-hanging-cops-find-blackmail-angle-in-2-page-suicide-note-80901
[3] சைவசித்தாந்த மாநாடு நடத்திய சரவணன் கோஷ்டி, ஸ்டாலின் மேடையில் பேசிய சைவர்கள் முதலியோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
[4] சைவர் வேறு, இந்து வேறு போன்று விசமத்தனமான வாத-விவாதங்களையும் குறிப்பிடலாம்.
[5] தமிழ்.இந்து, கர்நாடகாவில் மடாதிபதி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 05:40 AM, Last Updated : 26 Oct 2022 05:40 AM
[6] https://www.hindutamil.in/news/india/887689-abbot-commits-suicide-in-karnataka.html
[7] தினமணி, குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை, By DIN | Published On : 26th October 2022 01:23 AM | Last Updated : 26th October 2022 01:23 AM
[8] https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2022/oct/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3938168.html
[9] தினத்தந்தி, “வீடியோவை காட்டி மிரட்டியதால் ஜன்னல் கம்பியில் மடாதிபதி தற்கொலை?” – சிக்கிய கடிதத்தால் பரபரப்பு, By தந்தி டிவி, 25 அக்டோபர் 2022 10:43 PM
[10] https://www.thanthitv.com/latest-news/abbot-suicide-karnataka-144627
[11] தினத்தந்தி, தற்கொலை செய்த மடாபதியின் செல்போன்கள் பறிமுதல், தினத்தந்தி அக்டோபர் 26, 12:15 am (Updated: அக்டோபர் 26, 12:15 am)
[12] https://www.dailythanthi.com/News/India/the-cell-phones-of-the-abbot-who-committed-suicide-were-seized-822140