Archive for the ‘சிக்கலானப் பிரச்சினை’ Category

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

மார்ச் 28, 2013

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

 

சி.பி..  சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.

 

  1. தில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.
  2. சோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.
  3. அந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].

 

சி.பி.அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

 

  1. லல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.
  2. மாயாவதி மீதான வழக்குகள்.
  3. முல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.
  4. ஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்

 

ஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].

 

முடிவை இரவே  எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா? …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்

 

அர்த்த ராத்திரியில் ரெய்ட்  ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா?

 

டி.ஆர்.அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].

 

கைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி?: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.

 

இந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா?: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].

 

சி.பி.ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்?: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா? நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்?

 

சி.பி.. என்னவிதமாக சுதந்திரமாக,  தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம்! அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது? அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.

 

© வேதபிரகாஷ்

28-03-2013


[1]CBI’s clean chit to the Italian middleman Ottavio Quattrocchi in the Bofors case.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[2]  Naïve as he is, even Rahul Gandhi had blurted out that political parties tended to misuse CBI. “Every party in power can pressure institutions. Every government tries to push its people into such agencies. It is a fact, it is a reality of Indian politics,” he said in May 2009.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[5] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

 

[9] . Immigration officials had arrested Joseph when he arrived at Hyderabad airport from Dubai on November 6, 2011 with a fake passport.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[10] Among the vehicles under the CBI scanner are 11 allegedly being used by the India Cements group, belonging to BCCI president N. Srinivasan.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[11] The DRI had assigned the probe to one of its senior officers called Muruganandam. However, Muruganandam fined only one vehicle while letting free the other 32.

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

அப்துல் நாசர் மௌதானியும், சீதாராம் யச்சூரியும்!

ஓகஸ்ட் 29, 2010

அப்துல் நாசர் மௌதானியும், சீதாராம் யச்சூரியும்!

மதானியுடன் கூட்டு, சி.பி.ஐ (எம்) என்ன சொல்கிறது? சி.பி.ஐ (எம்) தலைவர்களில் ஒருவரான சீதாராம் யச்சூரி என்பவர், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது உரையாடிக் கொண்டிருந்தார். மம்தா பேனர்ஜி அவரைப்பற்றியும், நேபாள மாவோயிஸ்டுகளைப் பற்றியும் இணைத்து பேசியுள்ளதைப் பற்றி ஒரு நிருபர் கேட்டார். இன்னொருவரோ, தீவிரவாதியான மதானியுடன் கேரளாவில் 2009ல் கூட்டுவைத்துக் கொண்டீர்களே, என்று கேட்டார்.

இதனால், சங்கடமடைந்த யச்சூரி[1], தனக்கு உரித்தான பாணியில் நழுவலுடன் பதிலளித்ததாவது, “நேபாள மோவோயிஸ்ட்கள் மற்றும் மம்தா என்று பார்க்கும்போது, அது மிகவும் சிக்கலானப் பிரச்சினையாகும். அதனுடன் மதானியை செர்த்து விட்டால், இன்னும் மிக-அதிகச்சிக்கலான பிரச்சினையாகி விடும். ஆகவே, மம்தாவைப் பொறுத்த கேள்விக்கு மட்டும் பதிலளிக்கிறேன்”, என்று தப்பித்துக் கொண்டுவிட்டார்!


[1] http://sify.com/finance/ducking-madani-news-analysis-ki3akdijgfi.html