Archive for the ‘போலி வேதம்’ Category

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

ஜூன் 28, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களாஇல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

Voltaire appreciated Vedas

போலிஏஸுர் வேதம்உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி?: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன? அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[2].

Ezourvedam - Ludo Rocher

யஜுர் வேதம்மற்றும் யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda]: “யஜுர் வேதம்” [Yajur Vedam] நான்கு வேதங்களில் ஒன்று என்பது அறிந்த விசயமே, இருப்பினும், கிருத்துவர்கள், தங்களது “ஏசு கட்டுக்கதை”யின் படி, 18 [12 முதல் 30 வரை] வருடங்கள் காணாமல் போயிருந்த போது, இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையினை உருவாக்கினர். அந்நிலையில் அவர் போதித்தது தான் “யஸூர் வேதம்” [Yasur Veda] என்று சொல்லி, அதனை பலவாறாக, ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிட்டனர். “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda] என்றெல்லாம் குறிப்பிட்டு குழப்பினர். எல்லீஸும் இதில் குழம்பிபோனதில் ஆச்சரியம் இல்லை. மச்சிலிப்பட்டனத்தில் நீதிபதியாக இருக்கும் போது, ஒருவேளை, அத்தகைய யஸுர் வேதத்தைத் தயாரித்திருக்கலாம். சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். இங்கு, “பாதிரி எல்லிஸ்” [“Fr. Ellis”] என்றிருப்பதால், இவர் பாதிரியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது, என்றதும் ஏற்கெனவே சுட்டிக்கட்டப்பட்டது.

How Ezour Vedam was manufactured by the Christian missionaries

போலி வேதங்கள் எத்தனை இருந்தன?: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா? எல்லீஸ் அதை பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தார் என்றுள்ளது. ஆனால், 1822 வரை அது வெளியிடப்படவில்லை, எச்.எச்.வில்சன் அறிக்கையிலும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது, இன்னொரு குறிப்பில், எல்லீஸ் தென்னிந்திய மற்றும் ஈப்ரூ மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை ஆய்ந்ததாக உள்ளது. மேலும், இலங்கையின் தலைமை நீதிபதி சர். அலெக்சாந்தர் ஜான்சன், எல்லீஸிடம் பாரிஸில் அச்சடிக்கப் பட்ட ஏசுர் வேதம் புத்தகத்தைக் கொடுத்தார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளில், ஒன்றல்ல, மற்ற மூன்று போலி வேதங்களின் பிரதிகளும் இருந்தன என்றுள்ளது[3]. அதாவது, இத்தகைய போலி வேதங்களை அதிகமாகவே உருவாக்கியுள்ளனர் என்றாகிறது.

ezoure-Vedam - Jean Calmette and Ludo Rocher

போலிஏஸுர் வேதம்மிஷினரிகளை உலுக்கியது ஏன்?: லுடோ ரோச்சர் “ஏஸுர் வேதம்” உருவாக்கப்பட்டத்தில், மூன்று நிலைகள் / காலங்கள் உள்ளதாக விளக்குகிறார்[4].

போலிஏஸுர் வேதம்உண்டாக்கப் பட்ட காலம் யார் உருவாக்கியிருக்க முடியும்?
முதல் கட்டம் – 1760-1782

இரண்டாம் கட்டம் – 1782 – 1822

மூன்றாம் கட்டம் – 1822லிருந்து

ராபர்டோ டி நொபிலி Roberto de Nobili
ஜீன் கால்மெட் Jean Calmette
அன்டோய்ன் மொசாக் Antoine Mosac
மற்ற மிஷினரிகள் Other Missionaries
மெர்ரி மார்டீன் Pierre Martin
மதம் மாறியவர் New converts

ezoure-Vedam published in French-vol.I and II

சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். ராபர்ட் டி நொபிலைப் பற்றி முதன் முதலில் 1822ல் குறிப்பிட்டவர் எல்லீஸ் தான். பொதுவாக அவர்தான், முதன் முதலில் அத்தகைய மோசடி வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால், எல்லீஸ்ஸின் கட்டுரையே, பல போலி கையெழுத்துப் பிரதிகள் இருந்ததை வெளிக்காட்டியது[5]. லௌவினன் [Lauuenan] என்பவர், “ஏஸுர் வேதத்தின்” மூலம் [சமஸ்கிருத ஓலைச்சுவடி] காணாமல் போனதற்கு காரணம் எல்லீஸ் தான் காரணம் என்றார். 1816ல் பாண்டிச்சேரி நூலகத்திலிருந்து, அப்பிரதி எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது திரும்பக் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கேஸ்டெட்ஸ் [Castets] மறுத்தார். எல்லீஸ் தனது கட்டுரையில், அந்த போலி ஏஸுர் வேதம் கையெழுத்துப் பிரதி சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இருந்தது. மொழி பெயர்த்தவர் மற்றும் மூலத்தை எழுதியவர் ஒன்றே என்றும் கூறினார்[6].  அதாவது கத்தோலிக்க  ஜெசுவைட் மிஷினரிகளை குற்றஞ்சாட்டினார்[7]. இதனால், ஹோஸ்டன் [Hosten, 1921: 499] ஜெசுவைட்டுகளைப் பற்றி அவதூறு பேசியதில் எல்லீஸ் தான், முக்கியமான ஆளாக இருந்தார், என்று கோபத்துடன் கூறினார். எல்லீஸ் ஒரு புரொடெஸ்டென்ட் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், தமது வித்தியாசத்தை, சண்டையை மறைக்க, இவ்விசயத்தில் ஜாதிப்பிரச்சினையை நுழைத்தனர். அதுதான், போப்பை ஐயராக்கியது, ஆனால், வள்ளுவரை  பறையன் ஆக்கியது.

Pope Iyer - usage by Tamil writers

போப் ஐயர்என்று சொல்லும் போது, “போப் பறையர்ஏன்று ஏன் சொல்வதில்லை?: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை! ஆனால், அவனை கொல்வதற்கு ஒரு ஐயர் வேண்டும், ஆனால், மோசடியில் வல்லவர்களான அவர்கள், நாமத்தைப் போட்டு மாட்டிக் கொண்டனர். இதெல்லாம் தெரிந்தும்-தெரியாத தமிழ் வல்லுனர்கள், “போப் ஐயர்” என்று இன்று வரை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி வருகின்றனர்[8]. ஆனால், “போப் பறையர்” என்று ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று யாரும் கேட்பதில்லை. மேலும் “ஐயர்” எனும்போது, ஐயங்கார், முதலியார், பிள்ளை, வேளாளர் என்றெல்லாம் கூட உபயோகப் படுத்தியிருக்கலாம். இது “பார்ப்பனீயம்” என்று கூட யாரும் எதிர்க்கவில்லை. இது பார்ப்பன ஆதரவா, எதிர்ப்பா என்றும் புரியவில்லை. அதாவது, ஜாதிப்பிரிவினை உண்டாக்கவும் அத்தகைய முயற்ச்சிகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றாகிறது. அந்நிலையில், தாமஸ் ட்ரௌட்மேன், எல்லீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் ஆரிய-திராவிட பிளவுதான், பிறகு, 20ம் நூற்றாண்டில் பிராமணர்-பிராமண விரோத போக்காக மாறியது என்று எடுத்துக் காட்டுகிறார்[9]. பிராமண விரோத போக்கு, பிராமண-எதிப்பாக இருப்பதற்கான வழிமுறை, கால்டுவெல்லின் சித்தாந்தம் மூலம் பெறப்பட்டது என்று, வி.ரவீந்திரன்[10], நிக்கோலஸ் டிக்ஸ்[11] போன்றோர் விளக்கம் கொடுக்கின்றனர். இவ்வளவு விவகாரங்கள் இருக்கின்ற நிலையில் தான், பித்தம் பிடித்த, இந்துத்துவவாதிகள், அறக்கட்டளை உருவாக்கி, போலி புத்தகங்களை உண்டாக்கிய எல்லீஸைப் போற்றி, விழா எடுத்து, வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்துள்ளனர். பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்ட மோசடி பேர்வழி, எல்லீஸ் பெயரில், வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்த இந்துத்துவவாதிகளை என்ன செய்வது?

© வேதபிரகாஷ்

27-06-2017

Nobili Lost Veda fraud

[1] Ezour Védam arrives in France in 1731. It is sent by the Abbot Bazin and is destined to the library of the king. The Knight of Maudave, returning from India, visits Voltaire in 1760 and offers him his copy of the Ezour Vedam . The text is presented to Voltaire as an excerpt from the Veda translated into French by Father Martin, a former Jesuit missionary from Pondicherry. Maudave expresses doubts as to the quality of Father Martin’s translation. In 1761, Voltaire read the manuscript handed over by Maudave and prepares a new chapter entitled “Bracmanes, Vedam, and Ezourvedam” for the second edition of the Essay on Morals .

[2]  Peter R. Bachmann, Fr. Ellis: Account of a Discovery of a modern imitation of the Vedas with Remarks on the genuine works, Asiatic Rsearches, Vol.14, 1882, pp.1-59.

[3] Prodosh Aich, Lies with Long Legs: Discoveries, Scholars, Science, Enlighent Documentary, Samskriti, New Delhi, 2004

[4] Ludo Rocher (Ed.), Ezourvedam: A French Veda of the Eighteenth Century, John Benjamins Publishing Company, Philadelphia, 1984.

[5] In this dissertation, Ellis describes eight manuscripts of the same type as the Ezour Vedam , called “pseudo-Vedas,” found in the library of the Jesuit missionaries of Pondicherry, and having in the conversion business by accomodatio .

[6] Ellis, Francis Whyte, “Account of a Discovery of a Modern Imitation of the Vedas“, in Asiatic Researches , vol. 14, London, printed for J. Sewell et al., 1822, p. 1-49.

[7] The posthumous publication of the article by Francis Whyte Ellis on the manuscripts in deposit in the library of the Jesuit missionaries of Pondicherry. Ellis proves in this article that it is not a Vedic text but the work of Jesuit missionary Roberto de Nobili written in 1621 for conversion purposes. Ellis visits the library of the Capuchins and discovers the “pseudo-Vedas”. He considers the Ezour Vedam and the other pseudo-Vedas as dangerous counterfeits which were intended to shake the Hindu religion without succeeding in substituting it for Christianity.

[8] http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=306&pno=116

[9] In his book, Tom Trautmann suggests that the Aryan-Dravidian contrast `revealed’ by F. W. Ellis and his Tamil assistants in the early nineteenth-century was later resignfied as a Brahmin/non-Brahmin opposition, and in that form contributed to the non-Brahmin movement in the early twentieth-century.

Trautmann, Thomas R.. Aryans and British India. Berkeley: University of California Press, 1997, pp.221-222

[10] Ravindran, V. 1996. `The unanticipated legacy of Robert Caldwell and the Dravidian movement‘. In South Indian Studies, Vol. 1, pp.83-110.

[11] Dirks, Nicholas. 1995. The conversion of caste: location, translation and appropriation. In Conversion to Modernity, ed. Peter van der Veer, pp. 115-136. London: Routledge