Archive for the ‘பிரச்சாரம்’ Category

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

PondyLitFest-participants-program

இந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

  1. காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
  2. இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
  3. அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
  4. பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
  5. புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
  6. இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
  7. தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
  8. புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
  9. இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
  10. அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.

PondyLitFest-participants-program-2

இன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].

  1. ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
  2. கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
  3. அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
  4. இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
  5. காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!

இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.

PondyLitFest-participants-program-3

மாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].

PondyLitFest-participants-program-4

முடிவுரைஇலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:

  1. பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
  2. சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
  3. ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
  4. பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
  5. சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
  6. 1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
  7. பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
  8. சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
  9. நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
  10. அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.

© வேதபிரகாஷ்

09-09-2018

PondyLitFest-dates.folder

[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.

[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.

[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.

[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.

[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.

[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.

[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

மே 29, 2016

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

TN 2016 BJP failed in alliance

பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.  அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை           எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை! ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம்  பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

poll-of-exit-polls_NDTV 2016தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].

தமிழக பிஜேபி - ஜவடேகர் பிரச்சாரம்- 2016மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016தமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்

[2] http://www.bjptn.org/event.php?id=47

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]

http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-3rd-place-t-nagar-254060.html

[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக!, By சென்னை, First Published : 23 May 2016 03:14 AM IST

[5]http://www.dinamani.com/tamilnadu/2016/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/article3446859.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)

மார்ச் 7, 2014

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)

 

பாலதுவாரகர்கள் திருமலை

பாலதுவாரகர்கள் திருமலை

திருமலையைத்  தாக்க  முஸ்லிம்கள்,   கிருத்துவர்கள்  பின்பற்றும்  திட்டங்கள்: கிருத்துவரான ஜகன் எப்படி தந்தையைப் போன்றே அடாவடியாக திருமலை கோவிலில் நுழைந்தார் மற்ற விவரங்கள் முதல் பதிவிலும்[1], YSR கிருத்துவக் குடும்பத்தினால், இந்துக்களுக்கு எப்படி தொந்தரவு, திருமலைக்கு கிருத்துவப் பிரச்சார பொருட்கள் வந்தது முதலியவை இரண்டாவது பதிவிலும் விளக்கியுள்ளேன்[2]. திருமலையைத் தாக்க கிருத்துவர்கள் திட்டமிட்டிருப்பது புதியதல்ல. போர்ச்சுகீசியர் இக்கோவிலைக் கொள்ளையடிக்க பலமுறை முயன்றிருக்கின்றனர், ஆனால், எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதால் அவ்வாறு செய்யமுடியவில்லை. அப்பொழுதும் அவர்கள் மாறுவேடம் போட்டுக் கொண்டு கோவிலில் நுழைந்து விசயங்களை அறிந்திருக்கக் கூடும். ஏனெனில், அவர்களது ஆவணங்களில், குறிப்பாக ஜெசுவைட் எழுத்துகளில் விவரங்கள் காணப்படுகுகின்றன. முகமதியர், துலுக்கர் முதலியோரும் திட்டமிட்டனர், ஆனால், நெருங்க முடியவில்லை. இப்பொழுது 21ம் நூற்றாண்டில் அவர்களது வழிமுறைகள் காலத்திற்கேற்றபடி மாறியுள்ளன.

 

1000-pillared Mantap demolished at Tirumala in 2004

1000-pillared Mantap demolished at Tirumala in 2004 – In figure 100 has been mentioned wrongly.

சாமுவேல்  ராஜசேகரன்  2004  முதல்  2009 வரை: YSR 2004முதல் 2009 வரை ஆட்சியில் இருந்தாலும், இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை[3]. திரும்பக் கட்டினால்; ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் இருந்ததால், குறிப்பாக இந்த கிருத்துவ YSR டபாய்த்து வந்தார் என்று தெரிகிறது. திருமலைக்கு தவறாமல் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்தாலும்[4], இஸ்ரேலுக்குச் சென்று, கிருத்துவ புண்ணிய ஸ்தலங்களில் காங்கிரஸ்-சோனியா வெற்றிக்கு பிரார்த்தனை நன்றி-கடன் செய்ய குடும்பத்தோடு சென்றார் என்ற விசயம் சிறியதாகவே வந்தது[5]. இந்த கிருத்துவ தீர்த்த யாத்திரை இரண்டுமுறை 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடந்துள்ளது. “வெய்யி கல்ல மண்டபம்” என்கின்ற 1000-கால் மண்டபத்தை “பெரிய திட்டம்” என்ற பெயரில் 2004ல் இம்மண்டபம் இடிக்கப்பட்டபோது பலர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர். ஊடகங்களில் இவை சாமர்த்தியமாக அமுக்கி வாசிக்கப்பட்டது, அதாவது “மாஸ்டர் பிளேன்” மூலம் பகதர்களுக்கு வசதி செய்துதரும் நிமித்தம் மேற்கொண்ட வேலைகளுக்காக, அம்மண்டபம் இடிக்கவேண்டியதாயிற்று[6] என்று “தி ஹிந்துவின்” பிரென்ட் லைன் வக்காலத்து வாங்கியது. விசயம் தெரிந்தவர்கள் வைகானச ஆகம முறைகள் மீறுவதாக குற்றம் சாட்டினர். ஆனால், செக்யூலரிஸ அரசு, வழக்கம் போல பண்டிதர்களைப் பிரிக்கும் போக்கில் ஈடுபட்டது. இதனால், “வைகானஸ தீக்ஷித சமக்ய” என்ற குழு 1000-கால் மண்டபம் இடிக்கப் பட்டதில் எந்த தவறுல் இல்லை என்ற வாதத்தை ஆகஸ்ட் 2004ல் வைத்தது[7]. அப்பொழுது ஏனிப்படி பண்டிதர்கள் முரண்படுகிறார்கள் அல்லது வைகனாஸ ஆகமம் எப்படி இரண்டுவிதமாக விதிமுறைகளை அறிவிக்கும் என்று கேள்வி கேட்கவில்லை. ஆனால், அதே போல சார்மினார் கட்டிடத்தையும் இடிப்பாயா என்று கேட்டதற்கு மௌனமாகி விட்டனர்[8]. இதிலிருந்தே, இவ்விசயத்தில் செக்யூலரிஸ அரசியல்வாதிகள் புகுந்து விளையாடியுள்ளார்கள் என்று தெரிகிறது.

 

Photo courtesy from  - irupati-balaji-photos-old-17

Photo courtesy from – irupati-balaji-photos-old-17

2012 வரை  மண்டபம்  கட்டப்  படவில்லை: ஶ்ரீ கோவிந்த ராமானுஜ என்ற இந்துமதத்துறவி, 1000-கால் மண்டபத்தை இடிப்பதற்கு எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அவ்விவரங்கள் ஊடகங்களில் குறைவாகவே வெளி வந்தன. ஒருநிலையில் அவருக்கு அபாயம் என்ற நிலையில், உச்சநீதி மன்றத்தில் மனு போட்டார். அப்பொழுது அவருக்கு போதிய பாதுகாப்புக் கொடுக்க ஆணையிட்டது. ஆனால், இவ்விவரங்கள் வெளியே வரவில்லை[9], அம்மண்டபம் திரும்பக் கட்டப் படவேண்டும் என்று 2005ல் நீதிமன்றம் ஆணையிட்டும் திரும்ப வேறுஇடத்தில் [2012 வரை] கட்டப்படவில்லை[10].  “வெய்யி கல்ல மண்டபம்” 1472ல் கட்டப்பட்டதாகும்.  ரோஸைய்யா 2004ல் இடிக்கப்பட்ட அம்மண்டபத்தை 2007ல் அதனை திரும்ப கட்ட ஆணையிட்டார், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை[11]. பிப்ரவரி 2011ல் பூமி பூஜை நடத்தப்பட்டது என்றார்கள், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே, அந்த மண்டபத்தைக் கட்டத் தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் உண்மை கிருத்துவர் தமது புண்ணியஸ்தலங்களுக்கு சென்றுவரும் வேளையில், இக்காரியத்தை செய்தால், ஒத்துவராது என்றும் நினைத்திருப்பார். மேலும் இவர் காலத்தில் திருப்பதி-திருமலை பகுதிகளில் கிருத்துவர்களின் சர்ச் கட்டுதல், பிரச்சாரம் முதலியவை ஆரம்பித்து விட்டதால், ஶ்ரீ கோவிந்த ராமானுஜ இந்துக்கள் [எஸ்.சி] மதம் மாற்றப்படுவதைத் தடுக்க “ஆதி இந்து பரிரக்ஷண சமிதி” என்ற இயக்கத்தினையும் அவர் தொடங்கிவைத்தார்[12].  அரசியலின் பின்னணியை அறிய இந்த YSR [1949-2009]ன் பின்னணியை, கடப்பா ரெட்டிகளின் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

Arrest Ezhumalaiyan an anti-Hindu website depiction

Arrest Ezhumalaiyan an anti-Hindu website depiction

கிருத்துவ  ரெட்டிகளின்  கிருதுவ  ராஜ்யம்,  மதப்பிரச்சாரம்,  முதலியன: இந்த கிருத்துவ ரெட்டிகள் கடப்பாவின் அரசர்களாகத்தான் இருந்து வாழ்ந்து வருகிறார்கள். பிரிடிஷர் காலத்திலேயே, இக்குடும்பம் கிருத்துவர்களாக மதம் மாறினார்கள். YSR [1949-2009] மூன்றவது தலைமுறை, இன்றைய ஜகன் நான்காவது தலைமுறையாக இருக்கிறார்கள். இவருக்கு ஜன்மோஹன் ரெட்டி, ஷர்மிளா மற்றும் வெரோனிகா அன்று சந்ததியர் உள்ளனர் ஜே. பி. லாரன்ஸ் [Reverend Dr P J Lawrence] என்ற கிருத்துவ பிஷப் [the bishop of the Church of South India’s Nandyal diocese] இந்த ரெட்டி குடும்பத்திற்கு வேண்டியவர். இவர் வைஹாயசி பி டேனியல் [Vaihayasi P Daniel] என்பவருக்கு கொடுத்த பேட்டியில் வெளியாகியுள்ள விவரங்கள்: “Dr YSR” என்று  அன்புடன் அழைக்கப்பட்ட இவர்  தென்னிந்திய  சர்ச்சின்  [ Church of South India]  உறுப்பினர் ஆவார். இவர் ஒரு தீவிரமான  விசுவாசமுள்ள  கிருத்துவர்  ஆவர்.   இவரது  தந்தையான  ராஜா  ரெட்டியும்  கிருத்தவர்தாம், அவரது  ஊரான  புலிவென்டுல [Pulivendula] உள்ள  சி.எஸ்.ஐ  சர்ச்சில்  வழிபட்டு  வந்தார். வொய்.எஸ்.ஆரும்  எப்பொழுதெல்லாம், தம்மூரில்  இருப்பாரோ, அப்பொழுதெல்லாம்  தவறாமல்  சர்ச்சுக்கு  வந்து  வழிபாடு  செய்வார்.  நானும் YSRம் பெல்லாரியிலுள்ள வீரசைவ  கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்”.

 

YSR devouted Christian Rediff.com cutting

YSR devouted Christian Rediff.com cutting

பெல்லாரிதொடர்பும், கனிமவளசுரண்டல்களில்கிருத்துவர்களின்பங்கும்: பிஷப் ஜே. பி. லாரன்ஸ் தொடர்கிறார், “இந்தபெல்லாரி  கிழக்குப்  பகுதியில்  ஆந்திராவுடன்  ஒட்டுயுள்ள  மாவட்டமாகும். எனக்கு  YSR-குடும்ப  கிருஸ்துமஸ்  விழா  கொண்டாட்டத்தில்  பங்கு  கொள்ளும்  வாய்ப்புக்  கிடைத்தது. அது  ஒரு   500  நெருங்கிய  உறவினர்கள்  கொண்ட  கூடுதல்  கொண்டாட்டம்  ஆகும்.   அதில்  பல  நெருங்கிய  உறவினர்களும்,   போதகர்கள்,   பிரச்சாரகர்களும்  இருந்தனர்.   YSR   பைபிளைப்  படித்து,  தினமும்  கிருத்துவமுறைப்படி சிரத்தையாக  வழிபாடு  செய்தார்.  அவரது  தாயாரும்  மிகசிறந்த  விசுவாசியாவார். அவர்  YSRன்  வெற்றிக்காக  மிகசிறந்த  முறையில்  பிராத்தனை  செய்துகொண்டார். YSRம்  எப்பொழுதும்  தனது  வெற்றிக்கான  காரணம், தனது  தாயாரின்  பிரார்த்தனையே  என்று  ஒப்புக்  கொண்டுள்ளார்”, என்று விவரித்தார். ஆனால், அந்த ரெட்டி சகோதர்களைப் போலவே, இந்த ரெட்டி குடும்பமும் பல ஊழல்களில் சிக்கியுள்ளது நோக்கத்தக்கது. இந்த கனிம-சுரண்டல் காரணத்தை வைத்துக் கொண்டு நியூரப்பா மற்றும் இந்த ரெட்டிகளை சோனியா தூகிக்கிய அரசியல் தந்திரத்தையும் நோக்கத்தக்கது.

 

இது கூட அந்த ஜகன் கூட்டத்திற்கு தெரியவில்லை என்றால் இந்துக்கள் நம்ப வேண்டுமாம்!

இது கூட அந்த ஜகன் கூட்டத்திற்கு தெரியவில்லை என்றால் இந்துக்கள் நம்ப வேண்டுமாம்!

கிருத்துவர்களுக்காகவே  உதவிய  ரெட்டிக்  கிருத்துவ  குடும்பம்: பிஷப் ஜே. பி. லாரன்ஸ் தொடர்கிறார், “நிச்சயமாக  YSR சுவர்க்கத்தில்  கடவுளின்  கூடத்தான்  இருக்கிறார்.   அவர்  மக்களை  விரும்பினார்,   மக்களும்  அவர்  மீது  அன்பை  பொழிந்தனர்.  அந்த  அன்புதான்  அவரை  முதன்மந்திரியாக்கியது,   இரண்டாவது  முறையாகவும்  அவ்வாறே  பதவிக்கு  வரச்செய்தது  [2004-2009].   மக்களது  நலனுக்காக  அவர்  பல  திட்டங்களை  செயல்படுத்தினார்.  அவர்  மக்களிடம்  உகந்த  கவர்ச்சிகரமான  அரசியல்வாதி  ஆவார்,   பெரிய  தலைவர்  மட்டுமல்ல,   ஒரு  சரித்திரமாகி  விட்டார்.   நான்  அவரை  பலமுறை  சந்தித்துள்ளேன்.   சமீபத்தில்   2009-செப்டம்பரில்  அவரை  எச்.பி.ஜி.  உயர்நிலைப்  பள்ளியின்   125வது  ஆண்டு  விழா   [ 125th anniversary of the SPG high school, Nandyal]   நிகழ்ச்சியில்  முக்கிய  விருந்தினராக  கலந்து  கொள்ள  வந்தபோதும்  நான்டியாவில்  சந்தித்தேன்.  அவர் கிருத்துவர்களுக்கு  நிறையவே  உதவி  செய்திருக்கிறார்,  குறிப்பாக  தலித்  கிருத்துவர்களுக்கு  தாராளமாக  உதவியிருக்கிறார்.  சமீபத்தில்  மற்ற  எஸ்.சிக்களுக்கு  என்ன  சலுகைகள்  உள்ளனவோ,  அவை  மதம்  மாறிய  தலித்  கிருத்துவர்களுக்கும்  கொடுக்கப்பட  வேண்டும்  என்று  விதிமுறையைக்  கொண்டு  வந்தார்.  இப்பொழுது, அவர்  இல்லாமல்  இருந்தாலும்,   மகன்  ஜகன்மோஹன்  ரெட்டியை  விட்டுச்  சென்றிருக்கிறார்.  அவர்  கடப்பாவின்  எம்.பி  ஆவார்.  YSRக்கு  ஒரு  மகளும்  இருக்கிறார்,  அவர்  அனில்குமாரை  திருமணம்   செய்து  கொண்டுள்ளார். அவர்  ஒரு  பிரபலமான  எவாஞ்சலிஸ்ட்  ஆவார்”,  என்று  விவரித்தார்.

 

திதிதே மூடவேண்டும் - ராஜபக்ஷே எதிர்ப்பு

திதிதே மூடவேண்டும் – ராஜபக்ஷே எதிர்ப்பு – கோவில்களை இடித்தவனை எதிர்க்கும் சாக்கில் திருமலை திருப்பது தேவஸ்தானத்தை இழுத்து மூடும் போராட்டம் என்று இந்த கூட்டம் ஆர்பாட்டம் செய்தது. இப்பொழுது கிருத்துவர்கள் செய்யும் அக்கிரமத்திற்கு இந்த போலிகள் என்ன செய்யும்?

செக்யூலரிஸ  இந்தியாவில்  இந்துக்கள்  தாக்கப்  படுவது: சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா செய்வது என்பது தனது அப்பனின் வழியைப் பின்பற்றுவது தான் என்பது ஊர்ஜிதமாகிறது. வெளியில் தங்களுக்கு “ஏடு கொண்டலவாடு, வெங்கடேஸ்வருடு” மேலே பக்தி உள்ளது என்று காட்டிக் கொண்டு, சாதாரண இந்துக்களின் மனங்களில் தங்களைப் பற்றி அத்தகைய எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன், அதே நேரத்தில், “ஏய்  இந்துக்களே,  பாருங்கள், நாங்கள்  எப்படி  வேண்டுமானாலும்  உள்ளே  நுழைவோம், வருவோம், செல்வோம். ஆனால்,   நீங்கள்  அடிமைகள்  போல  காத்துக்  கிடக்கக்  வேண்டும். ஆட்சியாளர்களான  நாங்கள்  ஏற்படுத்தும்  சட்டதிட்டங்கள், விதிமுறைகள்  எல்லாம்  சாத்தான்களை  வழிபடும்  உங்களுக்குத்தான்  பொறுந்தும்,  ஆனால், எங்களுக்குக்   கிடையாது”, என்று அகம்பாவத்துடன், ஆணவத்துடன் வெளிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள். முகமது கோரி, முகமது கஜினி, மாலிக்காபூர், ஔரங்கசீப் முதலிய துலுக்கர்கள் அவ்விதமாகத்தான் மதவெறியோடு இந்துகோவிலைத் தாக்கினர். மனங்களுக்குள் எல்லா கோவில்களையும் அழித்தொழித்து விடவேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது, ஆனால், லட்சக்கணக்கில் இந்துக்கள் அக்கோவில்களைச் சுற்றி வாழ்ந்து கொண்டு இருந்ததால், அவ்வாறு முழுவதுமாக செய்யமுடியவில்லை. அதனால் தான் சில ஆயிரம் கோவில்கள் தப்பித்தன, ஆனால் பல்லாயிரம் கோவில்கள் மறைந்தன. அக்கோவில்கள் தர்காக்களாக, மசூதிகளாக, சர்ச்சுகளாக மாற்றப் பட்டன.

 

இப்படித்தான் பக்தர்கள் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது

இப்படித்தான் பக்தர்கள் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது

 

திருமலை  தரிசனத்தின்  போது  பெண்கள்  பூவைத்துக்  கொள்ளக்  கூடாது: இப்படி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் திருமலை கோவிலில் நுழைவதால், இந்துக்களுக்கு பற்பல தொந்தரவுகள், இடைஞ்சல்கள், துன்பங்கள் ஏற்படுகின்றன. இப்பொழுது தீவிரவாதிகள் தாக்குதல் பட்டியலில் உள்ளது என்பதால், கீழ் திருப்பதி முதல் மேல் திருமலை செல்லும் வரை பல விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. கோவிலின் பிரதம வாசல் வழியாக நுழைவதற்கு முன்னர் பக்தர்கள் பலவித இன்னல்களுக்கு உள்ளாகிறாகிறார்கள். அவர்கள் இரண்டுமுறை உடல் முழுவதும் தடவப் பட்டு சோதனைக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் பூ வைத்துக் கொள்ளாது என்ற விதிமுறை ஏற்படுத்தப் பட்டு, ஒருவேளை பெண்கள் பூ வைத்துக் கொண்டு வந்தாலும், அவற்றை பாதுகாப்பு-பெண்கள் வலுக்கட்டாயமாக எடுத்துவிடுகிறார்கள். பல பெண்களுக்கு இது மிக மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குளித்து, புத்தாடை அல்லது துவைத்த ஆடைகளை அணிந்து கொண்டு, பொட்டு-பூ வைத்துக் கொண்டு தரிசனத்திற்காக வரும் பெண்களை இவ்வாறு நடத்துவது அவர்களை அவமதிப்பதற்கு மேலான செயலாகும். அநாகரிகமான காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான காரியமாகும். ஆனால், பாதுகாப்பு என்ற போர்வையில் இது நடந்து வருகிறது.

 

பக்தர்கள் எங்கு தங்கினாலும் சுற்றி-சுற்றிதான் வரவேண்டும், ஆனால், ஜகன் போன்ற ஆட்கள் நேராகவே போய் விடுவார்கள்!

பக்தர்கள் எங்கு தங்கினாலும் சுற்றி-சுற்றிதான் வரவேண்டும், ஆனால், ஜகன் போன்ற ஆட்கள் நேராகவே போய் விடுவார்கள்!

பக்தர்கள்  அலைக்  கழிக்கப்  படுவது: தரிசனத்திற்குப் பிறகு, திரும்பி கோவில் வாசல் வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் மாடவீதிவழியாகச் சுற்றிக் கொண்டு, முன்பக்கம் வரவேண்டியுள்ளது. குறிப்பாக வயோதிகர், கால்வலிக் கொண்டவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் மற்ற நரம்பியல் நோயாளிகள் இவ்வாறு சுற்றிக் கொண்டு வருவதில் கஷ்டப்படுகிறார்கள். இதுவும் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறுகிறது. மேலும், செருப்புகளை விட்ட இதத்திற்கு சென்று எடுத்து வரவும் சுற்றி வர வேண்டியுள்ளது. கோவிலின் பக்கம் இருந்த மண்டபம் இடிக்கப் பட்டு, புதிய பாதை படிகட்டுகளுடன் அமைக்கப் பட்டிருப்பதால், வைகுண்டம் கியூ வரிசைக்கு, தரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், YSR மற்றும் மகன் ஜகன் இப்படியெல்லாம் கஷ்டப்படாமல், ஆனால், கஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களைப் போல, எந்த சிரமும் படாமல், எந்த சோதனையும் இல்லாமல், கிருத்துவர்களாக இருந்தும் ராஜ மரியாதையோடு சென்று வந்துள்ளனர் எனும் போது, உண்மையான பக்தர்களுக்கு கோபம், வருத்தம், வெறுப்பு முதலியவை வரத்தான் செய்யும்.

 

கடைசியாக பக்தர்களுக்கு சாப்பாடு, ஆனால் அந்த பெரிய பக்தர்கள் இங்கு சாப்பிடுவதில்லை!!

கடைசியாக பக்தர்களுக்கு சாப்பாடு, ஆனால் அந்த பெரிய பக்தர்கள் இங்கு சாப்பிடுவதில்லை!!

கியூவரிசைகளில் தண்ணீர், உணவுகள் அனுமதிக்கப் படுவதில்லை: மேலும் வரிசைகளில் நிற்க உள்ளே செல்லும் போது, தண்ணீர் பாட்டில்கள் கூட எடுத்துச் செல்வது தடுக்கப் படுகிறது. கிட்டத்தட்ட ஏதோ விமனத்தில் பிரயாணம் செய்யும் போது, அனைத்தையும் பிடுங்கி வைத்துக் கொள்வது போல, இங்கும் கெடுபிடி நடக்கிறது. “ராம் பகீசா கெஸ்ட் ஹவுஸ்”சுக்குச் செல்பவர்கள், இப்பொழுது தங்களது பெட்டி-பைகளை சுமந்து கொண்டு தான் செல்லவேண்டும். வணிடிகள் அனுமதிக்கப்படுவதில்லை. வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டு, நடந்து தான் “வைகுண்டம் கியூ”விற்கு செல்லவேண்டும். இதுவும் வயோதிகர், கால்வலிக் கொண்டவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் மற்ற நரம்பியல் நோயாளிகள் முதலியோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.

© வேதபிரகாஷ்

07-03-2014


[3] The demolition of the thousand Pillar Mandapam at Tirumala that many believe. As the cause of down fall of Nara Chandrababu Naidu in 2004, will be built again. While disposing a writ petition filed by a devotee Justice C.V. Nagarjuna Reddy of AP high court has directed Tirumala Tirupati Devasthanams (TTD) to take steps to re buiild the ‘Maha Mandapam’, within three months and complete it quick. The TTD had adopted a resolution on October 24, 2005, for reconstruction of the Maha Mandapam soon after YSR government took charge.

http://www.telugumirchi.com/en/other-news/rebuild-550-yr-1000-pillar-mandapam-at-tirumala.html

[5]  Y.S.R, who took charge as AP C M for the second consecutive term last week [Wednesday, May 27, 2009 ], on Wednesday left for a pilgrimage to Israel along with his family members.YSR will visit Bethlehem and other holy places for Christians during the four-day visit. He will return to Hyderabad on May 31. YSR, a Christian by faith, is accompanied by his wife Vijayalakshmi, his son and daughter and their family members. His son Y.S. Jaganmohan Reddy was elected to the Lok Sabha from Kadapa in the just-concluded polls while his son-in-law Anil Kumar is an evangelist. The chief minister will offer thanks-giving prayers at the holy places for the victory of the Congress party, which won 156 seats in the 294-member State Assembly and 33 out of 42 Lok Sabha seats. This is YSR’s second pilgrimage to Israel. He first visited Bethlehem after coming to power in the State in 2004. http://www.hindu.com/thehindu/holnus/004200905271081.htm

[6] The acquisition of private land enabled the TTD to accelerate the implementation of its long-pending master plan, conceived with the twin objectives of decongesting the pilgrim-choked surroundings of the temple and augmenting security in the context of the deteriorating security atmosphere in the country. As part of the implementation of the master plan, the management took up the task of constructing the massive “maha prakaram” (ambulatory) at a budget outlay of Rs.70 crore and the widening of the mada streets at a cost of over Rs.5 crore. In the process, it had to demolish the centuries-old “Thousand-pillar Mandapam” located in front of the main temple complex.

http://www.frontline.in/static/html/fl2418/stories/20070921508310200.htm

[7] TIRUPATI, AUG. 31, 2004. The Vaikhanasa Deekshitha Samakhya owing allegiance to the Tirumala-Tirupati Devasthanams (TTD) today defended the demolition of the 1,000-pillar Mandapam at Tirumala and maintained that it did not see anything objectionable behind the demolition, as the Mandapam was not being used for the performance of any ritual or festival. http://www.hindu.com/2004/09/01/stories/2004090107060500.htm

[8] Though hypothetical, the a Tamil Nadu-based Srivaishnavaite organisation also raised a very sensitive question– whether Hyderabad’s `Charminar’ could be disturbed from its present location and re-located in some other place on the ground that it was also in a dilapidated condition and impeding the movement of traffic. http://www.hindu.com/2004/09/01/stories/2004090107060500.htm

[10] The  Tridandi Srimannarayana Chinna Jeeyar Swamy was particularly critical about the demolition of the ancient ‘Thousand Pillar Mandapam’ and other heritage structures at Tirumala and regretted that even seven years after the court ordered the re-location of the mandapam, neither the government nor the TTD had taken any concrete step towards it.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/jeeyar-locks-horns-with-tirumala-archakas/article2859235.ece

[11]  ‘Bhoomi pooja’ was on Friday performed for the construction of the ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the main temple complex of Lord Venkateswara. Here it may be recalled that the TTD management was in the thick of controversy soon after the demolition of the thousand-pillar mandapam, popularly known as Veyyi Kalla Mandapam, in course of the implementation of its master plan envisaged at widening of the mada streets in Tirumala. It is a replacement for the demolished 1,000-pillar mandapam that the then TTD Board of Trustees, under the chairmanship of T. Subbarami Reddy, had resolved to construct a ‘Maha mandapam’ at the demolished site in October 2005. The TTD management is constructing the mandapam at an estimated Rs. 10.70 crore. http://www.hindu.com/2011/02/26/stories/2011022652310300.htm

[12] Dalit body formed: With a view to putting up a stiff resistance against deliberate attempts by vested interests to promote religious and sect conversions, a dalit body christened ‘Audi Hindu Parirakshana Samithi’ took shape in the presence of Sri Tridandi Srimannarayana Chinna Jeeyar Swamy here on Friday[TIRUPATI, February 4, 2012] . Members of the local Dalit community led by founder-president of the Samithi Kalluri Chengaiah visited the venue here where the Swamiji was presiding over the ‘Vishnu Sahasranama Parayanam’ and took his blessings signalling the emergence of the organisation. The Jeeyar Swamy appreciated the spirit of the Dalits behind their movement and said it would augur well for the propagation and protection of Hinduism and its values.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/jeeyar-locks-horns-with-tirumala-archakas/article2859235.ece

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்?

செப்ரெம்பர் 15, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்?

 

அமர்சிங் வெளியேற்றம், ஆசம்கான்மறுநுழைவு: அமர்சிங் பிஎஜேபி எம்.பிக்கள் விசயத்தில் அதிகமாகவே வேலை செய்து, அதாவது, பணம் கொடுத்து மாட்டிக் கொண்டு, சிறையிலும் இருந்துள்ளார். போதாகுறைக்கு அக்காலத்தில் தான், ஆசம்கானுடன் தகராறு ஏற்பட்டது. ஒருவேளை, இருவரும் கட்சிக்காக யார் அதிகமாக உழைக்கிறார் என்று காட்டிக் கொள்ள அத்தகைய காரியங்களை செய்திருக்கலாம். ஆனால், அமர்சிங் விவகாரம் பிஜேபி எம்.பிக்களுக்கு லஞ்சம் என்ற விதத்தில் பெரிதாகி விட்டது. காங்கிரசுக்கு தொடர்பு என்று கூட விவகாரங்கள் இருந்தன. போதாகுறைக்கு பாட்லா தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொண்டார்[1]. இதனால், 06-01-2010 அன்று அமர்சிங் சமஜ்வாடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 02-02-2010 அன்று கட்சியிலிருந்தும் முல்லாயம் சிங்கால் வெளியேற்றப்பட்டார். ஆனால், முன்னர் 04-12-2010 அன்று மறுபடியும் ஆசம்கான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், எல்லாமே, சேர்ந்து நடத்திய நாடகமா அல்லது அமர்சிங்கை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளா இல்லை பிஜேபியின் பலம் குறைக்க மேற்கொண்ட வழிகளா என்று அரசியல் ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.

ராஜினாமாமிரட்டல்இவருக்குசாதாரணவிசயம்தான் (2012): 25-07-2012 அன்று தனக்கு மீரட் மாகாணத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்வதாக மிரட்டினார். அதாவது, மீரட் மிகவும் மதசார்புள்ள, கலவரங்கள் நடக்கும் இடமாகும். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இவர்களைப் பிரித்து வைத்துதான் அரசியல் செய்ய முடியும். ஆகவே, தன்னுடைய அதிகாரம் குறைந்து விடுமே என்று ஆத்திரப்பட்டதில், ஆச்சரியமில்லை (இன்றும் கலவரப் பகுதிகளில் மீரட் உள்ளதை கவனிக்கலாம்). முஸ்லிமாக இருந்தாலும், வேண்டுமென்றே முல்லாயம் சிங், இவரை கும்ப மேளா கமிட்டிக்கு சேர்மேனாக நியமித்தார். ஏதோ உபியில் இவரைவிட சிறந்த இந்துவே கிடைக்காத மாதிரி, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் நியமிக்கப்பட்டது வினோதமே. ஆனால், அந்நேரத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனால், அல்லாஹாபாத் ரெயில் நிலையத்தில் நடந்த நெரிசலில் 40ற்கும் மேற்பட்டவர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்காணவர் காயமடைந்தனர். அப்பொழுது தான், தான் அதற்கு பொறுப்பில்லை, ரெயில்வே தான் காரணம் என்றெல்லாம் திமிராகப் பேசினார். அந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினை வரும் போலிருந்தது. இதனால், 11-02-2011 அன்று அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். முல்லாயம் விடவில்லை, ஆமாம், ராஜினாமை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் நிர்வாகத்தைப் போற்றிப் பாராட்டினார். ஒரு முஸ்லிம் நிர்வாகம் செய்ததில் 40 இந்துக்கள் இறக்க நேர்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. போதாகுறைக்கு, ஹார்வார்ட் பல்கலைக் கழகம், இவர் எவ்வாறு கும்ப மேளாவை நிர்வகித்து நடத்தினார் என்று பேசுவதற்காக அழைத்ததாம்!

பாஸ்டன் விமான நிலையத்தில் தகராறு செய்தது (ஏப்ரல், 2013): ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அழைப்பு வந்ததால், கும்ப மேளா நிர்வகிப்புப் பற்றி பேசச் சென்றார். ஆனால், பாஸ்டன் விமான நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்லது. இவரது கட்சி சமாஜ்வாடி பார்டி மற்றும் அதற்குண்டான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப் பட்டது. அல்-குவைதா மற்றும் டி-கம்பெனிகளினின்று அக்கட்சிக்கு பணம் வருவது, மற்றும் இதர தொடர்புகள் பற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தார்[2].  [இந்திய ஊடகங்கள், குத்தி-நோண்டி விவரங்களை சேகரிக்கும் புலன்-விசாரணை பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது ஆச்சரியமே. குறிப்பாக டெஹல்காகாரர்கள் இதைப் பற்றி ஆராயதது ஏன் என்று தெரியவில்லை] அந்த அதிகாரி ஒரு பெண்மணி என்று குறிப்பிடத் தக்கது[3]. ஆனால், தான் முஸ்லிம் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாது, தான் தடுத்து நிறுத்தப் பட்டதற்கு, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்[5]. வாதம், கூச்சல்கள் அதிகமானதால், நியூயார்க் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. நிலைமை மோசமாகியதால், அது தலையிட்டு, விமான நிலையத்திலிருந்து ஆசம் கானை வெளியே அழைத்துச் செல்லப்பணிக்கப்பட்டார். இதை தனக்கு நேர்ந்த அவமானம் என்று அறிவித்து, இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவற்றையெல்லாம், இவர் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் கூறியுள்ளார். அதாவது, உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரங்கள் இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை.

இயற்கைவளங்களைகொள்ளையெடிக்கமனிதனுக்குஉரிமைஇருக்கிறது. ராமரின்பெயரால்கொள்ளைஅடிப்பதாகஇருந்தால், கொள்ளையடியுங்கள்”: சென்றமாதத்தில் துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்வதற்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருந்தார்[6]. மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்க முயன்ற அவரை, மசூதியின் சுவறை இடிக்க ஆணையிட்டார் என்று பொய் சொல்லி அவரை பதவி நீக்கம் செய்தனர். அப்பொழுது, அத்தகைய கொள்ளையைப் பற்றிக் கேட்டபோது, “இயற்கை வளங்களை கொள்ளையெடிக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. ராமரின் பெயரால் கொள்ளை அடிப்பதாக இருந்தால், கொள்ளையடியுங்கள்”, [leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal] என்று நக்கலாகவும் பேசினார். உண்மையில், இவர் குரானில் உள்ளதை மாற்றி இப்படி ராமரின் பெயரில் ஏற்றிச் சொன்னதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது மறுபடியும் “கம்யூனலிஸம்” பிரச்சினை வந்துவிடும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.

ஆசம்கான் பெண்கள் விசயத்தில் விரோதமாக நடந்து கொண்டது ஏன்?: ஆசம்கான் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்-அல்லாத பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் அப்படி ஏன் நடந்து கொண்டார், அவரது பிரசினை என்ன என்பதை யாரும் ஆராயமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ்கண்ட பெண்கள் விசயத்தில், இவர் நடந்து கொண்ட முறை, மிகவும் மோசமாக இருந்துள்ளது:

  1. ஜெயபிரதா (2009)
  2. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி (2013)
  3. துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (2013)

இவர்களுக்கும் ஆசம்கானுக்கும் எந்த விதத்திலும், சம்பந்தமோ, தொடர்போ இல்லை. ஜெயபிரதா ஆவது, அக்கட்சியில் இருந்தார், ஆனால், அமெரிக்க அதிகாரி மற்றும் இந்திய அதிகாரி அவர்களது கடமையைச் செய்துள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், மதரீதியில் காழ்ப்புடன் அவர்கள் மீது தூஷணம் செய்துள்ளார் என்று தெரிகிறது. இஸ்லாம் பெண்களுக்கு பதிப்பு அளிக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி இவர், அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியும்? இப்பொழுது கூட, பெண்களை, அதிலும் இந்து பெண்களை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால் தான், இந்த கலவரமே நடந்துள்ளது. இவர் தாம், முசபர்நகர் பகுதிக்கு பொறுப்பாக இருக்கிறார். பிறகு, இவருக்குத் தெரியாமல், இதெல்லாம் நடந்திருக்க முடியாது. ஆகவே, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் என்பதனால், இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா என்று ஆராய வேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

© 14-09-2013


[1] On 22 July 2008 he accused Uttar Pradesh Chief Minister Mayawati of kidnapping six MPs of his party from Uttar Pradesh and holding them captive in Uttar Pradesh BhavanNew Delhi. Later, Samajwadi Party expelled the six MPs for defying the party directive during the confidence motion voting. He also courted controversy by asking for a probe in the Jamia Nagar batla house encounter case. First he gave 10 Lakh rupees cheque to the family of Mohan Chand Sharma, a police officer who died in the encounter, which bounced when checked its validity. Later he asked for a judicial enquiry into the firing incidence suggesting that the encounter may have been fake. Mohan Chand Sharma‘s family criticized him and returned his money. Amar Singh has been chargesheeted for offering bribes to three parliament members of the Bharathiya Janata Party in 2008 under the Prevention of Corruption Act by the Delhi Police on 24 August 2011. Amar Singh has pleaded health grounds for not appearing before the courts where the chargesheet was being heard. However, distressed by adverse media reports, Mr. Singh has appeared before the courts to dispel allegations that he is running away from a process of law. After hearing his personal pleas the Court has sent Mr. Amar Singh to judicial custody till September 19, 2011, in Delhi’s Tihar jail. A. Singh had filed a petition in 2006 after some of his telephone conversations were illegally tapped and were in circulation. The leader had moved the apex court and got a restraint order against their publication in the media. In May 2011, the Supreme Court of India removed the stay on publishing the taped conversations with political leaders and Bollywood stars. In these tapes, Amar Singh can be heard discussing bribes and bending government policies to suit vested interests. On September 6, 2011, Amar Singh was arrested for his alleged involvement in the scam and was ordered to be remanded in custody until 19 September. He had appealed to the court to exempt him from appearing personally, stating that he was ill with an infection; however, his request was rejected.

[2] However, Khan was detained at the Boston Airport for questioning, over his Samajwadi Party finances, and its links to Al-Qaeda and D-Company. Specifically, a female officer of the U.S. Customs and Border Protection wing of the U.S. Department of Homeland Security took Khan to an adjacent room “for further questioning”.

[3] A woman officer of the US Customs and Border Protection wing of the Homeland Security took Khan to an adjacent room “for further questioning,” sources said.

http://indiatoday.intoday.in/story/i-was-detained-at-boston-airport-because-i-am-a-muslim-alleges-azam-khan/1/267872.html

[5] The Minister was reportedly detained for about 10 minutes for “further questioning.” The high-power contingent led by Mr. Akhilesh Yadav, which included among others, State Chief Secretary Javed Usmani, had arrived by a British Airways flight.

http://www.thehindu.com/news/national/sp-condemns-azam-khans-detention-at-boston-airport/article4656605.ece

[6] Even as suspended Indian Administrative Service (IAS) officer Durga Shakti Nagpal, who took on the sand mining mafia in Gautam Budh Nagar, is to be served a chargesheet by the Uttar Pradesh government for allegedly mishandling a communally sensitive situation, senior Samajwadi Party leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal. Durga Shakti Nagpal, during her tenure as the sub-divisional magistrate of Gautam Budh Nagar, had cracked down on the sand mining mafia. She had recently seized 24 lorries involved in illegal mining and form April to June, under her watchful eye, the mining department impounded 297 vehicles and collected a fine of over Rs 80 lakh. Read more at: http://ibnlive.in.com/news/you-can-loot-in-lord-rams-name-sp-leader-azam-khan-on-ias-durga-case/410856-37-64.html?utm_source=ref_article

இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

ஜூன் 27, 2013

இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

ஹம் ஆத்மி கட்சியின் பிரச்சாரம்

பொது மக்கள் கட்சியின் பிரச்சார சுவரொட்டியும், வாசகங்களும்: “ஆம் ஆத்மி கட்சி” (आम आदमी पार्टी) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் இறங்கியுள்ள அரவிந்த கேசரிவால் செய்து வரும் பிரச்சாரத்தில், வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சுவரொட்டி, பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. அதில் “பேயிமான்” என்ற வார்த்தை மனிதத்தன்மைக்கு எதிராக உள்ள எல்லா குணங்களையும் குறிக்கும் மற்றும் அத்தகைய தன்மைகளைக் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் –

  • மனிதத்தன்மையற்றவர்கள்,
  • ஊழல்காரர்கள்,
  • கெட்டவர்கள்,
  • அயோக்கியர்
  • அரக்கர்கள்,
  • கொடுங்கோலர்,

என்று பலவித அர்த்தங்களில் பிரயோகப்படுத்தலாம். சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள்.

AAP - propaganda against Cong or BJP

வாசகமும், அதன் அர்த்தமும்:  “बेईमानों को वोट तो महिलाओं के साथ होता रहेगा बलात्कार” –

இஸ் பார் பி தியா பேயிமானோம் கோ ஓட் தோ

மஹிலாவோங் கா ஹோதா ரஹேகா பலாத்கார்

‘Is baar bhi diya beimaano ko vote toh mahilao ka hota rahega balatkaar  (if you vote for the corrupt this time, rapes will continue to occur)’

இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

AAP - propaganda against Cong or BJP2

மூன்று மாதங்களில் 500 கற்பழிப்புகள்: தில்லியில் ஜனவரி முதல் மூன்று மாதங்களில் சுமார் 500 கற்பழிப்புகள் நடந்துள்ளன. தில்லி என்றாலே “ரேப் சிடி” அதாவது கற்பழிப்பு நகரம் என்றெல்லாம், டிவிசெனல்களில் விவாதம் செய்து வருகிறர்கள். ஆனால், இந்திய பெண்கள் நாகரிகமாக நடந்து கொள்ளஏண்டும் என்ற விஷயம் வரும்போது, நவீன உலக மங்கையர், இதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கூற வேண்டாம். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று பேசினார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்களா அல்லது கண்டிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.

AAP - propaganda against Cong or BJP4

காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த கலாச்சாரத்தைப் பின்பற்றும் புதிய கட்சிகள்: அசிங்கமான, கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் செய்வதில் காங்கிரஸ் ஏற்கெனவே வழி காட்டியுள்ளது. ராஜிவ் காந்தி காலத்திலேயே, காங்கிரஸார் கோடிகளை செலவழித்து, இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டது. அவற்றைப் படித்தால், அவ்வளவு மோசமான வாசகங்களு, அதற்கேற்றார்போல, தூண்டிவிடும் படங்களும் இருந்தன. ஒருவேளை மக்கள் இப்பொழுது மறந்திருக்கமாட்டர்கள்.

AAP - propaganda against Cong or BJP5

அரசியல்வாதிகள் எப்பொழுது நல்லவர்கள் ஆவார்கள்: அரசியல்வாதிகளை அப்படி விமர்சிப்பதால், அவர்கள் ஒன்றும் கவலைப்படப்போவதில்லை. அதனால், மனிதத்தன்மையற்றவர்கள்,

  • ஊழல்காரர்கள், கெட்டவர்கள், அயோக்கியர், அரக்கர்கள், கொடுங்கோலர்,……….

என்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரப்போவதில்லை. கொலைகாரர்கள், கொள்ளைக் காரர்கள், கற்பழிப்பாளிகள், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் என்பவர்களே எம்.பிக்களாக உள்ளனர், அமைச்சர்களகவும் உள்ளனர். சுத்தமாக வரவேண்டும் என்றால், எல்லோரும் அத்வானி மாதிரி ஒதுங்கிக் கொண்டு, வழக்கு முடிந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படியே இருந்து கொண்டுதான் அனுபவித்து வருகிறார்கள். ஜெயிலுக்கு போனாலும், கனிமொழி போன்றவர்கள் எம்.பி ஆகிவிடவேண்டும் என்ற வெறியில் உள்ளது, தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள போடும் வேடம் தான். அதற்கு காங்கிரஸ் உதவுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்பொழுது, இங்குகூட, பிஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸை வெல்லமுடியாது என்று அரவிந்த கேசரிவால் பொன்றோர் பிரச்சாரம் செய்கிறார்கள். பிறகு, இவர்கள் காங்கிரஸைத் தோற்கடிக்கடிக்கப் போகிறார்களா? இல்லையே, இவர்கள் காங்கிரசூக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கிறார்கள். அப்படியென்றால், காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. பிறகு பிஜேபியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வதேன்.

AAP - propaganda against Cong or BJP3

காங்கிரஸ்  2013ல் மறுபடியும் வெற்றி பெற்றால் யார் பொறுப்பு?: காங்கிரஸ்-பிஜேபி ரகசிய கூட்டு வைத்திருக்கிறது என்றுகூட பெரிய அரசியல்வாதிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், இப்பொழுதும் கூறி வருகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்டு பேரம் பேசுவார்களா, காங்கிரஸை மறுபடியும் ஜெயிக்க வைப்பார்களா? கம்யூனிஸ்டுகள் 190களிலிருந்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களால், அவர்களையும் புனிதர்களாக்கிக் கொள்ளமுடியவில்லை, மாறாக மற்ற கொள்கயுடைவர்களையும், தங்களது போலித்தனத்தனத்தால், இரட்டை வாழ்க்கையினால் பலரை சீரழித்தனர். சித்தாந்த பேசியே எமாற்றினர், ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவத்தை விட அதிகமாகவே அனுபவித்தனர், அனுபவித்து வருகின்றனர்.

 

வேதபிரகாஷ்

© 27-06-2-13

ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

ஜூன் 24, 2013

ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

Mani-mandapam for Umaruppulavar, Kattapomman, Pattukkoottaiyarமணிமண்டபங்கள்கட்டும்தமிழகஅரசியல்: மணிமண்டபம் கட்டுவது என்பது தமிழகத்தில் ஒரு அரசியல் ஆகிவிட்டது. அது “கலைமாமணி” விருது அளிக்கப்படும் தோரணையில் தான் உள்ளது. யார்-யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் கட்சி ஆதரவு, சித்தாந்த ஆதரவு, பரிந்துரை என்பதெல்லாம் பார்க்கப்படுகின்றனவே தவிர, தனிமனிதரின் தராதரம், திறமை, பண்டித்துவம் முதலியவையெல்லாம் கண்டுகொள்ளப் படுவதில்லை. ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் முதலிய பேதங்கள் இருந்தும்-இல்லாமல், எந்தவித வேறுபாடுகள் இருந்தும்-இல்லாமல், எல்லோருக்கும் என்று உள்ளவற்றை பகிர்ந்து அளிக்கும் முறையில் இவை கொடுக்கப்படுகின்றன. முதலியார், செட்டியார், பிள்ளை, தேவர், நாயக்கர் என்றுதான் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. அதாவது அதிலும் இடவொதிக்கீடு உள்ளது. தபால்தலை, நாணயம் வெளியீடுகளும் இதில் அடங்கும். இதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் ரீதியில் தான் பரிந்துரை, சிபாரிசு, லாபி எல்லாம் செய்யப்படுகின்றன. மக்களின் விருப்பங்களுக்காக செய்யப்படுவதில்லை. சிலரின் மணிமண்டபங்கள் கட்டப்படும் போது, தபால்தலை-நாணயம் வெளியிடப்படும் போது, யாரிவர் என்று கேட்கப்படுவதிலிருந்தே, அவரது பிரபலம், மக்கள் அறிந்துள்ள நிலை முதலியவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால், வெகுஜன மக்களின் அத்தகைய அறியாமையைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை!

tipu-no-heroமணிமண்டபம் கட்டுவதால் யாருக்கு லாபம்?: எதுஎப்படியாகிலும் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் கிடைக்கிறது, அதனை தொடர்ந்து பராமரிக்க, பழுது பார்க்க, மராமத்து பார்க்க, புனரமைக்க முதலியவற்றிற்கும் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. தோட்டம் அமைக்க, செடிகள் வைக்க, புல்தரை அமைக்க, தண்ணிர் ஊற்ற என்ற இத்யாதிகளுக்கு கான்ட்ராக்ட், பணம் கிடைக்கிறது. ஆகையால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு மணிமண்டபம் கட்டிவிட்டு, அடுத்தது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். நாளைக்கு நூறு மணிமண்டபங்கள் கட்டிவிட்டேன் என்று தனக்கு ஒரு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சொல்லி கட்டப்பாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி உயிருள்ளபோதே தனக்கு சிலை வைத்துக் கொண்டதை ஞாபகத்தில் கொள்ளலாம்.

Tipu Sultan - opposed by the people of Karnataka2மேமாதத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவு[1]: தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனு நீதிச் சோழன் ஆகியோருக்கு மணி மண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத் தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இதே போன்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்[3]. ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tipu 214th Memorial celebration day - PF functionஇந்துக்கள் – முஸ்லிம்கள் இருவரும் திப்புசுல்தான் மணிமண்டபம் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[4]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று ஹெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[5] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[6]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Tipu 214th Memorial celebration day - Popular front functonபி. ஆர். கௌதமன் இதனை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்[7]. Photo1212இதைத்தவிர 23-06-2013 அன்று மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி அரங்கத்தில் இதை எதிர்த்து ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

Photo1214

கலந்து கொண்டவர்கள் – கூட்டத்தின் ஒருபக்கம்.

Photo1215

ஹைதர் – திப்பு மணிமண்டபம் முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்?: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[8]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று தொந்தரவுப்பட்டதும் உண்டு[9].

Nagai Mansur - expecting more than Manimandapamநாகை மன்சூர், “ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்” என்று ஒருபக்கம் போட்டுவிட்டு, “வேண்டாம்! மணிமண்டபம் வேண்டாம்….!! 13 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு தற்போது 7 சதவிகித இடஒதுக்கீடு போதும். இதனை மட்டும்தான் இந்த சமுதாயம் உங்களிடம் எதிர்பார்க்கிறது”, என்று ஜெயலலிதா படம் கீழ் போட்டிருக்கிறார். அதாவது, மக்கட்தொகை பெருக்கம், அதற்கேற்றப்படி இடவொதிக்கீடு, ஆதிக்கம் என்ற நிலையில் தான் அவர்கள் சிந்தனை உள்ளது.

Tipu Sultan - opposed by the people of Karnatakaஹைதர்திப்பு மணிமண்டபம் இந்துகள் எதிர்ப்பதேன்?: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும்? யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்? தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?”, என்று முடித்திருக்கிறார்[10]. “வாய்ஸ் ஆப் இந்தியா” என்ற பதிப்பகம் ஏற்கெனவே இவ்விவரங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறது.

Photo1216ஐ. எம். முத்தண்ணா[11] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.

Photo1217

ஐ.எம். முத்தண்ணா

Photo1220

ஹைதர்-திப்பு – மாயைகளும், கட்டுக்கதைகளும், உண்மைகளும்: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்.

வேதபிரகாஷ்

© 24-06-2-13


[1]

[4] Chief Minister J Jayalalithaa on Wednesday (16th May 2013)  announced that memorials would be raised for Swami Sahajananda of Chidambaram and freedom fighters Hyder Ali and Tipu Sultan. She also announced a memorial for Kuyili, the commander of freedom fighter Velu Nachiyar. Making a suo motu statement in the State Assembly, the CM said CK Thamizharasan (RPI) and S Gunasekaran (CPI) had made requests for raising a memorial for Kuyili.  She said the memorial for her would be established in the complex being constructed for the memorial of Velu Nachiyar. Similarly, the request for raising memorials in honour of Hyder Ali and Tipu Sultan was made by A Soundararajan and K Balabharathi (CPM) and Aslam Basha, TMMK MLA from Ambur[4].  The CM said a memorial would be built for both freedom fighters in one complex in Dindigul district.

http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[7] பால கௌதமன், திப்புசுல்தான்: மணிமண்டபமும்மானங்கெட்டஅரசியலும், http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/

[8] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனைய்ல் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[9] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[11]  I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.