Archive for the ‘கிருத்துவ வழிபாட்டு மையம்’ Category

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு!

மார்ச் 4, 2011

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு:

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு: பி. கே. குன்ஹாலிக்குட்டி என்பவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முக்கியமான தலைவர். அவர் இப்பொழுது மற்றொரு குற்றச்சாட்டிற்குட் பட்டுள்ளார். ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு கேரளாவில் மிகவும் பிரசித்தியானது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லர் விபச்சாரத்தின் திரையாக உபயோகப்பட்டு வந்தது. இங்கு வரும் இளம்பெண்களை மயக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தனர். அவ்வாறு பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி கொத்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால், இது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு என்றும் அழைக்கப் படுகிறது[1]. அதுமட்டுமல்லாத அந்த பாதிக்கப் பட்ட பெண் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலில் புணர்ச்சிகளுக்குட் பட்டு, கொத்தமங்கலத்தில் ஒரு வீட்டில் கிடந்தாள். அக்டோபர் 5, 1997 அன்று ஒரு இளம்பெண் தன்னை பலர் பாலியல் ரீதியில் வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர் என்று புகார் கொடுத்தாள். அதன் பிறகு அவள் அடையாளங்காட்டிய 43 பேர் குற்றஞ்சாட்டப் பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த ஏழுபேர்களில் ஒருவர் தான் இந்த குன்ஹாலிக்குட்டி(Kunhalikutty).

1997 லிருந்து 2011 வரை நடந்த விவகாரங்கள்[2]: இதுவரை நடந்துள்ள விவகாரங்கள்:

1997: ஐஸ்கிரீம் பார்லரை முகப்பாக வைத்துக் கொண்டு கோழிக்கோட்டில் செக்ஸ் / விபச்சாரம் நடப்பதாகவும், அதில் கேரளாவின் பெரிய அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால்[3], அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வேஸி என்ற அரசு சாரா நிறுவனம், அப்போதைய கேரள முதன் மந்திரி ஈ.கே. நாயனாரிடம்[4] புகார் கொடுத்தது.

1998: ரெஜினா என்ற பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி, எப்படி, குன்ஹாலிக்குட்டி என்ற மந்திரி தன்னை பாலியல் ரீதியாக புணர்ந்தார் என்று விவரித்து, ஒரு வாக்குமூலம் கொடுத்தாள்.

1999: திடீரென்று ரெஜினா தன்னுடைய வாக்குமூலத்தை மறுத்தாள்[5]. இதனால், குன்ஹாலக்குட்டி, இந்த வழக்கில் ஒரு சாட்சியாக ஆஜரானார்.

2003: உள்ளூர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரையும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது.

2004: ரெஜினா மறுபடியும் குன்ஹாலக்குட்டியின் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றாள். தான் பயமுறுத்தப் பட்டதாலும், பண ஆசை காட்டியதாலும் தான் அவ்வாறு முரண்பட்ட வாக்குமூலத்தைக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டாள்.

2005: இதனால், குன்ஹாலக்குட்டி, ஒமன் சாண்டி அரசிலிருந்து, ராஜினாமா செய்தார்.

2006: உச்சநீதி மன்ற இவ்வழக்கை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.

2011: குன்ஹாலக்குட்டி-ரௌஃப் பிரச்சினையால், மறுபடியும் இவ்வழக்கு அனைவரது கவனத்தை ஈர்த்த்துள்ளது.

குற்றஞ்சாட்டப் பட்ட குன்ஹாலிக்குட்டி தப்பியது: இவர் என்ற தொழிற்துறை அமைச்சரரக இருந்தார், இந்த செக்ஸ் வழக்கினால் பதவி 2005ல் விலக நேர்ந்தது. ஐஸ் கிரீம் பார்லருக்கு வரும் இளம்பெண்களை மயக்கி செக்ஸில் ஈடுபடுத்தி வந்த வழக்கில், பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி இவரது பெயரைக் குறிப்பிட்டதால், ராஜினாமா செய்யவேண்டியிருந்தது. இருப்பினும், பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று, அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டார். அப்பொழுது குன்ஹாலிக்குட்டி அப்பெண்ணிற்கு பணம் கொடுத்துதான், தப்பித்துக் கொண்டார், என்று சொல்லப் பட்டது.

குன்ஹாலிக்குட்டியின் மீதுள்ள குற்றச்சாட்டுகள்: அதுமட்டுமல்லாது, உள்ளூர் ஆஸ்பத்திரிலிருந்து அப்பெண் மனநிலை சரியில்லலதவர் என்று சான்றிதழ் பெற்றது, பொய்யான சுய-வாக்குமூலங்களைப் பெற்றது, குன்ஹாலிக்குட்டியின் டைரியில் பிரயாணங்களைப் பற்ரிய விவரங்களை திருத்தியது, என ஆரம்பித்து, இப்பொழுது நீதிபதிகளுக்கே பணம் கொடுத்து சாதகமான தீர்ப்பு வாங்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. ரெஜினா என்ற பெண்ணின் வாக்குமூலத்தில், குன்ஹாலிக்குட்டியின் செயல்கள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அதன் பிரதி / நகல் கேரள பெண்கள் கமிஷனிடம் உள்ளது[6].

மறுமகன் இப்பொழுது குற்றஞ்சாட்டுவது: ஆனால், இப்பொழுது, அவ்வாறு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதில், இரு நீதிபதிகள் காசு வாங்கிக் கொண்டுதான், அவ்வாறு செய்தனர் என்ற குற்றாச்சாட்டு இப்பொழுது (பிப்ரவரி 14, 2011) எழுந்துள்ளது. குன்ஹாலிக்குட்டியின் மைத்துனரான கே. ஏ. ரௌஃப் என்பவர் கே. நாராயண குருப் மற்றும் கே. தங்கப்பன் என்ற இரு நீதிபதிகள் அவ்வாறு செய்ததாக, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்தபோது, வெளிப்படையாகக் கூறினார். “அப்பெண் பொட்டா என்ற இடத்தில் உள்ள கிருத்துவ வழிப்பாடு மையத்திற்கு[7] செல்வது வழக்கமாக இருந்ததால், அம்மையத்தின் பாதிரியார் ஜியார்ஜ் பணக்கல் என்பவரை நாங்கள் சந்தித்தோம். எப்பெண்ணின் வாயை மூட ரூ……..லட்சம் பணம் கொடுத்தோம்”, என்றெல்லாம் கூறினார்[8]. கேரளாவின் பார் கவுன்சில் இதற்கான – நீதிபதிகள் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது[9].

இப்படி தொடர்ந்து காங்கிரஸ்காரர்கள் செக்ஸ் வழக்குகளில் சிக்கி வருவது, காங்கிரஸ் பாரம்பரியம் என்றுதான்  தோன்றுகிறது. நேரு காலத்தில் அவரே பற்பல பெண்களுடன் தொயர்பு வைத்திருந்தது பற்றி புத்தகங்களே வந்துள்ளன. பிரோஸ் காந்தியும் அவ்வாறே பேசப்பட்டார். என்.டி.திவாரி சமீபத்தில் மாட்டிக் கொண்டார். பி.ஜே.குரியன், குட்டி ……என்று தொடர்கிறது.

வேதபிரகாஷ்

04-03-2011


[3] அரசியல் இருப்பதால் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இருப்பினும் செக்ஸ் ஆட்டங்கள் நடந்துள்ளதை மறுக்கவில்லை.

[4] கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது என்று பொன்மொழியை உதிர்த்தவர் இவர்தான். பிறகு நான் என்ன இல்லாததை சொல்லிவிட்டேன், அதுதான் கம்யூனிஸ்ட் மானிஃபஸ்டோவிலே இது உள்ளதே என்று விளக்கமும் அளித்தார்!

[5] ரெஜினாவின் கணவன் பிரமோத் என்பவருக்கு வளைகுடா நாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும் வாக்குக் கொடுக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது.

[7] ரெட்ரீட் என்று அழைக்கப் படும் இந்த கிருத்துவ மையங்களிலும் பல செக்ஸ் கேளிக்கைகள் நடக்கின்றன, அச்வற்றிலும் பலர் சிக்கியுளனர்.