Archive for the ‘ஹைதர் அலி’ Category

ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

ஜூன் 24, 2013

ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

Mani-mandapam for Umaruppulavar, Kattapomman, Pattukkoottaiyarமணிமண்டபங்கள்கட்டும்தமிழகஅரசியல்: மணிமண்டபம் கட்டுவது என்பது தமிழகத்தில் ஒரு அரசியல் ஆகிவிட்டது. அது “கலைமாமணி” விருது அளிக்கப்படும் தோரணையில் தான் உள்ளது. யார்-யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் கட்சி ஆதரவு, சித்தாந்த ஆதரவு, பரிந்துரை என்பதெல்லாம் பார்க்கப்படுகின்றனவே தவிர, தனிமனிதரின் தராதரம், திறமை, பண்டித்துவம் முதலியவையெல்லாம் கண்டுகொள்ளப் படுவதில்லை. ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் முதலிய பேதங்கள் இருந்தும்-இல்லாமல், எந்தவித வேறுபாடுகள் இருந்தும்-இல்லாமல், எல்லோருக்கும் என்று உள்ளவற்றை பகிர்ந்து அளிக்கும் முறையில் இவை கொடுக்கப்படுகின்றன. முதலியார், செட்டியார், பிள்ளை, தேவர், நாயக்கர் என்றுதான் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. அதாவது அதிலும் இடவொதிக்கீடு உள்ளது. தபால்தலை, நாணயம் வெளியீடுகளும் இதில் அடங்கும். இதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் ரீதியில் தான் பரிந்துரை, சிபாரிசு, லாபி எல்லாம் செய்யப்படுகின்றன. மக்களின் விருப்பங்களுக்காக செய்யப்படுவதில்லை. சிலரின் மணிமண்டபங்கள் கட்டப்படும் போது, தபால்தலை-நாணயம் வெளியிடப்படும் போது, யாரிவர் என்று கேட்கப்படுவதிலிருந்தே, அவரது பிரபலம், மக்கள் அறிந்துள்ள நிலை முதலியவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால், வெகுஜன மக்களின் அத்தகைய அறியாமையைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை!

tipu-no-heroமணிமண்டபம் கட்டுவதால் யாருக்கு லாபம்?: எதுஎப்படியாகிலும் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் கிடைக்கிறது, அதனை தொடர்ந்து பராமரிக்க, பழுது பார்க்க, மராமத்து பார்க்க, புனரமைக்க முதலியவற்றிற்கும் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. தோட்டம் அமைக்க, செடிகள் வைக்க, புல்தரை அமைக்க, தண்ணிர் ஊற்ற என்ற இத்யாதிகளுக்கு கான்ட்ராக்ட், பணம் கிடைக்கிறது. ஆகையால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு மணிமண்டபம் கட்டிவிட்டு, அடுத்தது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். நாளைக்கு நூறு மணிமண்டபங்கள் கட்டிவிட்டேன் என்று தனக்கு ஒரு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சொல்லி கட்டப்பாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி உயிருள்ளபோதே தனக்கு சிலை வைத்துக் கொண்டதை ஞாபகத்தில் கொள்ளலாம்.

Tipu Sultan - opposed by the people of Karnataka2மேமாதத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவு[1]: தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனு நீதிச் சோழன் ஆகியோருக்கு மணி மண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத் தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இதே போன்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்[3]. ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tipu 214th Memorial celebration day - PF functionஇந்துக்கள் – முஸ்லிம்கள் இருவரும் திப்புசுல்தான் மணிமண்டபம் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[4]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று ஹெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[5] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[6]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Tipu 214th Memorial celebration day - Popular front functonபி. ஆர். கௌதமன் இதனை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்[7]. Photo1212இதைத்தவிர 23-06-2013 அன்று மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி அரங்கத்தில் இதை எதிர்த்து ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

Photo1214

கலந்து கொண்டவர்கள் – கூட்டத்தின் ஒருபக்கம்.

Photo1215

ஹைதர் – திப்பு மணிமண்டபம் முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்?: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[8]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று தொந்தரவுப்பட்டதும் உண்டு[9].

Nagai Mansur - expecting more than Manimandapamநாகை மன்சூர், “ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்” என்று ஒருபக்கம் போட்டுவிட்டு, “வேண்டாம்! மணிமண்டபம் வேண்டாம்….!! 13 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு தற்போது 7 சதவிகித இடஒதுக்கீடு போதும். இதனை மட்டும்தான் இந்த சமுதாயம் உங்களிடம் எதிர்பார்க்கிறது”, என்று ஜெயலலிதா படம் கீழ் போட்டிருக்கிறார். அதாவது, மக்கட்தொகை பெருக்கம், அதற்கேற்றப்படி இடவொதிக்கீடு, ஆதிக்கம் என்ற நிலையில் தான் அவர்கள் சிந்தனை உள்ளது.

Tipu Sultan - opposed by the people of Karnatakaஹைதர்திப்பு மணிமண்டபம் இந்துகள் எதிர்ப்பதேன்?: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும்? யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்? தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?”, என்று முடித்திருக்கிறார்[10]. “வாய்ஸ் ஆப் இந்தியா” என்ற பதிப்பகம் ஏற்கெனவே இவ்விவரங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறது.

Photo1216ஐ. எம். முத்தண்ணா[11] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.

Photo1217

ஐ.எம். முத்தண்ணா

Photo1220

ஹைதர்-திப்பு – மாயைகளும், கட்டுக்கதைகளும், உண்மைகளும்: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்.

வேதபிரகாஷ்

© 24-06-2-13


[1]

[4] Chief Minister J Jayalalithaa on Wednesday (16th May 2013)  announced that memorials would be raised for Swami Sahajananda of Chidambaram and freedom fighters Hyder Ali and Tipu Sultan. She also announced a memorial for Kuyili, the commander of freedom fighter Velu Nachiyar. Making a suo motu statement in the State Assembly, the CM said CK Thamizharasan (RPI) and S Gunasekaran (CPI) had made requests for raising a memorial for Kuyili.  She said the memorial for her would be established in the complex being constructed for the memorial of Velu Nachiyar. Similarly, the request for raising memorials in honour of Hyder Ali and Tipu Sultan was made by A Soundararajan and K Balabharathi (CPM) and Aslam Basha, TMMK MLA from Ambur[4].  The CM said a memorial would be built for both freedom fighters in one complex in Dindigul district.

http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[7] பால கௌதமன், திப்புசுல்தான்: மணிமண்டபமும்மானங்கெட்டஅரசியலும், http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/

[8] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனைய்ல் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[9] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[11]  I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.