Archive for the ‘இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர்’ Category

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!

மே 18, 2010
இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!
முதலிடம் பின்லாடன், மூன்றாமிடம் தாவூத் இப்ராகிம்
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7568

Front page news and headlines today

நியூயார்க் :  உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.

‘கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’  பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்

மே 4, 2010

கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம்!” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும்? ஏதோ செத்துவிட்டார்கள் என்று மெழுகு வர்த்தி எரித்து, ஊர்வலம் வந்து, டிவிக்களில் காட்டி, விவாதங்கள் நடத்தில் நேரத்தைக் கழித்து விடலாமே?

கோட்ஸேவும், கசாப்பும், இந்திய சித்தாந்தவாதிகளும்: மஹாத்மாவைக் கொன்றவன் கோட்ஸே, அவன் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது, நேரு போன்ற செக்யூலரிஸவாதிகள் கூட, “அவனைத் தூக்கில் போடவேண்டாம், அவனை தூக்கில் போடுவதால், போன உயிர் திரும்ப வந்துவிடுமா“, என்றெல்லாம் அறிவிஜீவித்தனமான தத்துவங்கள் பேசவில்லை. ஆனால், இந்த கசாப்புக்கடைக்காரனைவிட குரூரமான கசாப்பின் விஷயத்திக்ல் இப்படி பேசுவது ஏன்? எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது? ஊடகங்களிலும் பெருமையாக தலைப்புச் செய்திகளாகப் போட்டு, விவாதிக்கப் படுகிறது?

ஃபஹிம் அன்சாரியின் மனைவி, மகிழ்ச்சியில் திளைத்தாள்!: ஃபஹிம் அன்சாரி மற்றும் சஹாப்புத்தீன் அஹமத் மீதான கூற்றங்கள் நிரூபிக்கப் படும் வகையில் போலீஸாரால், பலமான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை, ஆகையால்அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது, என்று தஹல்யானி நீதிபதி கூறினாராம். கேட்டவுடன், தன் காதுகளையே நம்ப முடியவில்லையாம், ஃபஹிம் அன்சாரியின் மனைவி யாஸ்மி[2], மகிழ்ச்சியில் திளைத்தாளாம், கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியதாம்!

பிறகு அந்த உயிரிழந்த 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர்,. காயமடைந்த 304 பேர்களுடைய மனை-மக்கள் ஏன் சந்தோஷப்படவில்லை? அந்த செத்தவர்கள் எல்லாம் யார்? அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன? அவர்கள் சொல்வது என்ன? ஏன் அவர்களுடைய படங்கள், பேச்சுகள் முதலியவை இடம் பெறவில்லை?

இப்படி திசைத் திருப்பும் நோக்கம் என்ன? “மைனாரிட்டி”, “மைனாரிட்டு வோட் பேங்க்” …………….என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர்[3]. என்.டி.டி.வி போன்ற கேடு கெட்ட ஐந்தாம் படைகள், கசாப் ஒரு வீரன் போன்று காட்டி வருகிறது. அவன் ஆடுவது, பாடுவது போன்று சித்தரிக்கப் படுகிறது. முன்பே, “அவன் பால் கொடுக்கும் சிறுவனல்லாவோ, அவன் அம்மாதிரியெல்லாம் செய்திருக்க முடியுமோ“, என்பது போல, அவன் ஒரு சிறுவன் என்றெல்லாம் நாடகமாடினர். ஆனால், அவனோ எனக்கு சென்ட் வேண்டும், உலாவ வேண்டும் என்று சொகுசாக வாழ்க்கை நடத்தினான். கோடிகள் கொட்டி அரசாங்கமும் வசதி செய்து கொடுத்தது.

கசாப்பின் தாயார் இந்தியாவிற்கு வர அனுமதிப்பார்களா? இப்படியும் இனி விவாதங்கள் வரப்போகின்றன. என் மகனை பார்க்க வேண்டும் என்றால், அரசு அனுமதித்து தான் வேண்டும் என்று வாதிட கிளம்பி விடுவர். இல்லை, சில தாராள பேர்வழிகள், கட்சிகள், அவர் இந்தியா வந்து செல்ல ஆகும் செலவையெல்லாம் நாங்களே செய்து தருகிறோம் என்றெல்லாம் கூப்பாடுப் போடுவர்.


[1] http://timesofindia.indiatimes.com/NEWS/City/Hyderabad/Kasab-should-not-be-hanged/articleshow/5887870.cms

[2] http://www.deccanherald.com/content/67380/tears-joy-fahims-wife.html

[3] Do you think Ajmal Kasab will get death penalty? , http://www.merinews.com/article/do-you-think-ajmal-kasab-will-get-death-penalty/15805892.shtml

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்!

மே 3, 2010

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்

வளர்ந்ந்து வந்த குரூர – முகமதிய-தாலிபான் -இஸ்லாமிய – அல்-உம்மா-ஜிஹாதி தீவிரவாதம், பயங்கரவாதம், கொலைவாதம் முதலியவற்றைச்சட்டப்படி தண்டிக்க வேண்டுமானாலும், நீதித்துறை தனது “செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம்” என்பதனை நிரூபித்துவிட்டுதான் செய்யவேண்டும் என்று யாரோ கட்டளையிட்டது போல நீதித்துறை, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, போலீஸார், என எல்லோரும் வேலை செய்வது தெரிகின்றது. ஊடகங்களும் அதற்கேற்றாற்போல செய்திகள் அள்ளிக் கொடுக்கின்றன.

கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும்: நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்த கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் மற்றும் மேலும் எட்டு தீவிரவாதிகள் மும்பையின் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர். ரத்தத்தில் மிதந்த மும்பை, மீண்டுவர பல நாட்கள் ஆகின. உயிகளை இழந்த தாய்கள், தந்தையர், முதலியோர் அந்த கொடூரனைத் தூக்கில் போடவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதில் மாற்றுக் கருத்துக் கூடாது என்று உறுதியாக உள்ளனர்.

இதனிடையே அக்கொடூர சம்பவத்தை நினைவுகூர்ந்த ஜமுனாவகேலா என்ற 50 வயது பெண்மணி, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த பிறகு தன்னுடைய 32 வயது மகனை தீவிரவாதி அஜ்மல் கசாப் சுட்டுக் கொன்றதை குறிப்பிட்டு அவனை இனியும் தாமதமின்றி தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், கசாப்புக்கு எவ்வித கருணையும் காட்டப்படக்கூடாது என்று தெரிவித்தார். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று ஜார்கண்ட் பிரச்சினை: கசாப்பைத் தூக்கில் போடவேண்டுமென்றால் இந்துக்களும் தண்டிக்கப் படவேண்டும் என்ற சித்தாந்தம் இங்கு வைக்கப் படுகிறது. ஜார்கண்டில் ஏற்கெனவே காங்கிரஸ், பிஜேபிஐ ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கிறது. கருணாநிதி போல அங்கு பல கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள சிபு சோரன் காங்கிரஸ் சொல்லியபடி அல்லது காங்கிரஸை மிரட்டி அதிகாரம் செல்லுத்தி வருகிறார். ஆகவே, அம்மாநிலத்தையும் தொடர்பு படுத்தி கைதுகள் நடக்கின்றன. ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா (36) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்[1]. ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள தர்காவில், கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாயினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவேந்திர குப்தா(36) என்பவரை போலீசார் தேடி வந்தனர். ‘அபிநவ பாரத் சங்கதன்’ என்ற அமைப்போடு குப்தா தொடர்புடையவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த தேவேந்திர குப்தா, தனது தாயை பார்ப்பதற்காக ஆஜ்மீர் வந்த போது நேற்று முன்தினம் போலீசாரிடம் பிடிபட்டார். மாலேகான் குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள பெண்சாமியார் பிரக்யா தாக்குருக்கும், குப்தாவுக்கும் தொடர்பு உண்டு என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆஜ்மீர் செக்ஸ், பங்களூர் செக்ஸ் என்று ஊடகங்கள் ஆரம்பித்து விட்டன: திடீரென்று முஸ்லீம் பாபாக்களின் செக்ஸ் விவகாரங்கள் அங்கும் இங்குமாக காலந்தாழ்த்தி வெளிவருகின்றன. இதன் மர்மம், நேரம் முதலியவை ஆச்சரியமாக உள்ளது. ஆனால், அந்நேரத்தில் ஏன், ஆஜ்மீர் பாபா செய்யும் காமலீலைகள் கண்டுக்கொள்ள மாட்டோம், ஆதாரங்களைத் தேடி மாட்டியே விடுவோம் என்ற ரீதியில் ஆஜ்மீர் குண்டு வெடிப்பிற்காக ஆட்களைப் பிடிப்போம் என்று வேகமாக வேலை செய்கின்றனர்? பங்காரப்பா தன்னுடைய மைத்துனர், சபலமுள்ளவர் என்று திடீரென்று போட்டுத்தரவேண்டும்? நவம்பர் 2009லேயே புகார் கொடுக்காமல், இப்பொழுது ஏன் புகார் கொடுக்கவேண்டும்?


[1] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18232

அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

ஏப்ரல் 5, 2010

அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

லாஹூர் நீதிமன்றத்தின் நீதிபதி – குவாஜா ஸெரிஃப் (Justice Khwaja Sharif), இந்துக்கள் அந்த நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள் என்றாராம்.

உடனே அந்நாட்டில் உள்ள ஒன்பது ஹிந்து எம்.பிக்களுக்கு கோபம் வந்துவிட்டதாம்!

பாகிச்தானில் நான்கு மில்லியன் / 4,000,000 – 40 லட்சம் ஹிந்துக்கள் இருக்கிறார்களாம்.

இப்பொழுதுதான் தெரிகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ்/பிஜிபி/முதலியோர் கூட இந்த விவரத்தைச் சொல்லவில்லையே!

உடனே பாகிஸ்தானிய தேசிய அசெம்பிளியை விட்டு புதன் கிழமை அன்று (31-03-2010) வெளிநடப்பு செய்து விட்டார்களாம்!

“பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது முஸ்லீம்கள் தாம், இந்துக்கள் இல்லை”, என்று சொல்லிவிட்டு, “அவர்கள் அந்த தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கிறார்கள்”, என்று சொன்னாராம்!

எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்பு செய்தவர்கள், சமாதானப்படுத்தப்பட்டு உள்ளே வரும்படி செய்தார்களாம்.

அதுமட்டுமல்லாது, “அவர்கள் நல்ல பாகிஸ்தானியர்கள். ஆகையால் நீதிபதியின் அவர்கள் மீதான பேச்சு கண்டனத்திற்கு உரியது. மேலும், அவர்களால் அதனைத் தாங்முடியாது (“They are good Pakistanis. The judge’s statement against Hindus is condemnable and indefensible)!

1947ல் கோடிகளில், ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி வாழ்ந்துவந்த ஹிந்துக்கள் என்னவானார்கள் என்று யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

பலவந்தமாக மதம் மாற்றுதல், ஹிந்து அடையாளங்களை மறைத்து வாழ்தல் / அவ்வாறு வாழ வற்புறுத்துதல், கோவில்களை அபகரித்தல், ஹிந்துக்களை விரட்டிவிட்டு கோடவுனாக-கழிப்பிடமாக உபயோகித்தல், இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளதால் “ஜிம்மி” வாழ்க்கை வாழுதல்,…………………ஆனால், இந்திய செக்யுலரிஸவாதிகள் இதைப் பற்றியெல்லாம் கண்டுக் கொள்வதில்லை.

இந்தியாவிலுள்ள ஹிந்துக்கள், காஷ்மீர ஹிந்துக்களுக்கேக் கவலைப் படுவதில்லையாம், பாவம், பிறகு, அவர்கள் எப்படி பாகிஷ்தான், ஆப்கானிஸ்தான்……………முதலிய நாடுகளில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப் படப் போகின்றனர்?