Archive for the ‘தாண்டவராயபுரம் ராமசாமி’ Category

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து பாரிவேந்தர் ஆன கதை: பச்சமுத்து திடீரென்று தன்னை “பாரிவேந்தர்” என்று கூறிக்கொண்டு, பிஓஸ்டர்கள் அடுத்து, விழாக்கள் நடத்த ஆரம்பித்தார். இவையெல்லாம் 1960களில் இருந்த இன்றும் வாழ்ந்து வரும் பழைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், பச்சமுத்து அத்தகைய விளம்பரங்களுக்கு ஆசைப்படுபவர் அல்ல. அப்படியென்றால், ஒன்று அவரே மாறியிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கூட்டம் அவரை மாற்றிருக்கவேண்டும்[1]. சமீபத்தைய திரைப்பட முதலீடுகள், தொடர்புகள் அவர்களை தூரத்தில் எடுத்துச் சென்று விட்டது. சங்கர், “நண்பன்” திரைப்படத்தில் “பாரிவேந்தர்ரென்ற பெயரை அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்கு  அப்பெயரைச் சூட்டியதால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்[2] என்பவர் கண்டித்து “விடுதலையில்” எழுதியுள்ளார்.  “பேராசிரியர்    பச்சமுத்து   உழைப்பின்  குறியீடு.  முயற்சியின்    வடிவம்.    ஆல்போல்   தழைத்து    அருகுபோல் வேர்விட்டு  வளர்ந்து வரும்  ஒரு  பெரிய  நிறுவனத்தின்  தலைவர்.  ஓர் அரசியல் கட்சியின்  நிறு வனர்.    மணிமேகலை    அமுதசுரபியைக்கொண்டு, காணார், கேளார், கால்  முடப்பட்டோர்  பேணுநரின்றிப் பிணியால்  வாடியோர்  ஆகியோருக்குச்  செய்த அறங்களைப் போல, இன்று  ஆயிரக்கணக்கான  ஏழை,  எளியோருக்கு  வாழ்வளிக்கும்  வள்ளல்  பாரிவேந்தர்  என  அவரை  மற்றவர்கள்அவரால்  பயன்பெறும்  மக்கள்  அழைத்து  மகிழ்கின்றனர். விருதுக்கு  ஏற்ப  வாழும்  வாழ்க்கை  அவரின்  வாழ்க்கைஅவரைச் சிறுமைப் படுத்துவது  தனிமனித  அவதூறாகும்  இது மன்னிக்க  முடியாத  குற்றமே!”, என்று முடித்துள்ளார்[3]. திராவிட இயக்கத்தின் “விடுதலை’யில், இது வந்துள்ளதால் இதெல்லாம், அரசியல், சித்தாந்தம், ஜாதி முதலியவை கலந்துள்ள பிரச்சினை போன்று தெரிகிறது. இவரைப்பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற கல்லூரி வேந்தர்கள், முதலாளிகள் முதலியோரும் கோடிகளை அள்ளிக் கொண்டிருந்தாலும், திமுக-அதிமுக ஆதரவுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அத்தகைய விமர்சனங்கள் வருவதில்லை.

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார்

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார் – உதாரணத்திற்கு கொடுக்கப் பட்டது

பாரிவேந்தர்  மீது  பாலியல்  புகார்  கூறும்  திலகா[4]: பச்சமுத்து பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டது. உதாரணத்திற்காக இவை கொடுக்கப் படுகின்றன. இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்….

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும்

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும் இருப்பது செக்யூலரிஸமா, ஊழல் தர்மமா?

பியர்ல்  சிட்டி  பவுண்டேசன்  நடத்தும்  திலகா (2011-12): ‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன். 2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது. திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

எஸ்.ஆர்.எம். லேனிங்  ட்ரீ  பிரைவெட்  லிமிடெட்  நிறுவனத்திற்கு  திலகா   செலவழித்தது: இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.

 

modi-tatto-னநமோ பச்சை குத்துதல்

modi-tatto- நமோ பச்சை குத்துதல்

பெண்களைக்  கூட்டி  வந்தாயா  என்ற  பிரச்சினை: இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயே வேந்தரை சந்தித்தேன். என்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்? மதன் ஏதும் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.

 

selling Modi and brand

selling Modi and brand

எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட்  பிரான்சைஸ்  வியாபாரமா, மோசடியா: நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா? என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி[5]. இதில் உண்மை எந்த அளவிற்கு, பிரச்சினை என்ன என்பதெல்லாம் தெரியவந்தால் தான் பின்னணி விளங்கும்.

 

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

பச்சமுத்துவின் மாற்றங்கள் பெயரிலும், நடவடிக்கைகளிலும் உள்ளன (2010-14): தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து அரசியல் நோக்கோடுதான் “பாரிவேந்தர்” ஆனார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர்கள், எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள் முதலியோரை சிறப்பித்து ஆதரவைப் பெருக்கினார். பெரிய அரசியல்வாதிகள், தொழிலாளிகள், பணமுதலைகளின் வாரிசுகள் இவர் கல்லூரிகளில் படித்து அல்லது படிக்க வைக்கப் பட்டு பொறியியல், மருத்துவ, நிர்வாக பட்டங்களுடன் வெளியேறியுள்ளனர். அதில் கட்சிபேதம் பார்க்கப்படவில்லை. ஆனால், அவரே அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், இவரது சாம்ராஜ்யத்தையே ஒரு திராவிடக் கட்சி விலைபேசியது, இவரை ஒழிக்கத் தீர்மானித்தது எனும் நிலையில் பாரிவேந்தர் இரண்டாவது முறையாக மாறிவிட்டார். பழையமாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறிய போது ஏற்பட்ட மாற்றத்தை விட, இம்மாற்றம் வித்தியாசமானது. ஆக அரசியல்வாதியாகி விட்டப் பிறகு அவரிடம் கொள்கைகள், நியாயங்கள், தர்மங்கள் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கூட்டணிகள் என்று வரும்போது, யாரோடோ கூட்டு வைத்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

 

namostore-launched

namostore-launched

“மோடி பிரான்ட்” மூலம் அரசியல் வியாபாரம்: தூய்மையின் சின்னமாக இருக்கும் அன்னா ஹஜாரே கூட இப்பொழுது மம்தா பேனர்ஜியை ஆதரிக்கிறேன், அவருக்காக பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டார். மம்தா பேனர்ஜி ஊழலற்ற சுத்தமான அரசியல் தங்கமா, வெள்ளியா என்று தெரியவில்லை. அதைப் பற்றி சில கம்யூனிஸ்டுகளைத் தவிர யாரும் பேசுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. இந்நிலையில், பிஜேபியுடன் கூட்டு என்பது கட்டாயமாகி விட்டது. போதாகுறைக்கு “மோடி பிரான்ட்” கண்டு கருணாநிதி போன்ற அரசியல் வித்தகர்களே கலக்கத்தில் உள்ளனர். சோனியாவைவிட, இவருடன் சேர்ந்தால் வெர்றிபெறலாம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. வாஜ்பேயியையும் மிஞ்சக்கூடிய கவர்ச்சி, பேச்சு, அனைவரைம் வசீகரிக்கும் திறன், அமெரிக்கா போன்ற நாட்டினரையே திகைக்க வைக்கும் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இல்லை. ஆகவே தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகளை “மோடி பிரான்ட்” மூலம் தீர்த்துக் கொள்ள தீர்மானித்ததில் வியப்பொன்றும் இல்லை. பதிலுக்கு பிஜேபியும் அனுசரித்து, சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] விடுதலை, பகடிக்குரியபெயராபாரிவேந்தர்?, வியாழன், 26 ஜனவரி 2012 , பேராசிரியர் க.நெடுஞ்செழியன் என்றிருந்தாலும், எழுதியவர் “சங்கர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[5] இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை. என்னதான் நடக்குது நாட்டில்? – நன்றி ஏகவலைவன் வார இதழ்

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

 

பச்சமுத்து  என்கின்ற  பாரிவேந்தர்  மோடியைப்  புகழ்வது (10-02-2014): சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் குஜராத் மாநிலத்திற்கு சென்றேன். அங்கு டாஸ்மாக் கடை இல்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலைகள் மிக அருமையாக உள்ளன. அங்கு இலவசங்கள் எதுவும் இல்லை. அங்கு 3–வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி மிகவும் நல்லவர். நாணயமானவர். ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் தந்து தொடர்ந்து முதல்வராக உள்ளார். நான் பல கல்வி நிறுவனங்களை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவி ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறேன். இதோடு போதும் என்று நின்று விடாமல் நமது மக்களுக்கு ஏதாவது நல்லது நம்மால் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியை ஆரம்பித்தேன்[1]. இதெல்லாம் இவருக்கு முன்னர் தெரியாமல் போயிற்றா அல்லது இப்பொழுது தான் அறிந்து கொண்டாரா என்று ஆராய்ச்சி செய்யவேண்டும்.

Narendra Modi at SRM convocation 2014

Narendra Modi at SRM convocation 2014

பாரதிய ஜனதா கூட்டணி: “இன்று பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்”, இவ்வாறு பாரிவேந்தர் பேசினார். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் டி.பி.பச்சமுத்து, அமைப்பு செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்[2]. மோடி கூட்டத்தில் பேசும் போது, “எனது கல்லூரி விழாவுக்கு மோடியை அழைத்த நான், எங்கள் கட்சியின் பொதுகூட்டத்திற்கும் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அவர் பாஜக மாநிலத் தலைவரையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்எனக் கூறினார். அப்படி நடைபெறுவதுதான் இந்த கூட்டம்”, என்றார். தமிழக பிஜேபியில் 20-30 ஆண்டுகளாக வேலை செய்துவரும் தலைவர்களுக்குக் கூட சீட் கிடைக்காது என்ற நிலையில், லீமா ரோஸுக்கு சீட் எனும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. 39 தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படும் என்றும் பார்க்க வேண்டியுள்ளது. பிஜேபி ஜெயிக்கும் என்று ஒரு தொகுதியும் இல்லை. ஆனால், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என்ற சில இடங்களில் ஒருவேளை கூட்டணி பார்முலாவில் வெல்லலாம். ஆனால், அவை மற்ற கட்சிகளுக்குக் கொடுத்தால் பிஜேபி அம்போதான்! ஆகவே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மோடி பேசியபோது, மோடி ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கலாம். மோடி ஆதரவாளர்கள், அறிவுஜீவிகள் இணைதளங்களில் அதைப் பற்றி புகழ்ந்து போற்றியிருக்கலாம். ஆனால், இந்த கூட்டணி பற்றி அவர்கள் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

 

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் சோதனை (2013): பணம் அதிகமாக வரும் போது, குறிப்பாக கணக்கில் வைக்க முடியாத பணம் வரும் போது, ஒரு இடத்திலிருந்து பணம் வந்ததாகவும், மற்ற இடத்தில் அவை செலவழிந்தது போலவும் காட்டுவது சார்டெட் அக்கௌன்டன்ட்களின் வேலை. அவற்றை செய்து வரும் அவர்களை யாரும் ஊழலுக்குத் துணைப் போகிறார்கள் என்று யாரும் விமர்சிப்பதில்லை[3]. அப்படி உருவான நிறுவனமான வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் ரெய்ட் நடந்தபோது அதன் ஒரு பார்ட்னர் காணாமல் போய்விட்டார் என்று செய்திகள் வெளியிடப் பட்டன. எதிர் நீச்சல், தில்லுமுள்ளு போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது. ரெயிடுகளில் கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, வாங்கப்பட்ட கொடைப்பணம், அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது போல காண்பித்து, மீதமுள்ளள பணத்தை டிரஸ்டுகளுக்கு திருப்பி விட்டது தெரியவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து, வருமான வரியை குறைத்துக் காட்ட இம்முறை கையாளப்பட்டதாகத் தெரிகிறது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன[4]. கொஞ்ச நாட்களில் இவையெல்லாம் மறக்கப்பட்டன. துப்பாக்கி பட விசயத்தில் கூட பச்சமுத்து பெயர் அடிபட்டது. எஸ்.ஆர்.எம். மருத்துவ மனைக்கு அருகில் கூட பச்சமுத்துவை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து   சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

மருத்துவக்  கல்லூரியில்   சேர்க்க  நன்கொடை  பிரச்சினை (ஏப்ரல் 2013): மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை பெற்றதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கு ஒன்றில் சிக்கிய சுங்கத்துறை அதிகாரி ஜம்போ லாலின், தனது மகள் மானசாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை கொடுத்ததாக சிபிஐ-யில் வாக்குமூலம் அளித்ததாக கூறி, அதன் அடிப்படையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதி 2013 சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி மேற்கூறிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், மனுதாரர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் சிபிஐ அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டபோது, அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது.  இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான இருவரும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பிறகு இதைப் பற்றிய செய்திகள் நின்றுவிட்டன.

 

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து  சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பழைய  நண்பர்களை  மறந்து,  புதியநண்பர்களை உருவாக்கிக் கொண்டார் (1960-1990): 1960களிலிருந்து, கடின உழைப்பில் உயர்ந்த பச்சமுத்து, பணம் வந்ததுடன் மாறித்தான் போனார். அதனால், பழைய நண்பர்களை மறக்க / ஒதுக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு டுடோரியல்ஸ் (Tamilnadu Tutorials, started in 1967), நைட்டிங்கேல் நர்சரி பள்ளி (Nightingale Nursery School, started in 1969), ஏசியன் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலாஜி (Asian Institute of Technology, started in 1976) போன்றவற்றில் அவருக்கு உதவியவர்களை மறந்து விட்டார். பழைய மாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறியபோது, இவரும் மாறி விட்டார். முன்பாவது, அதாவது 1980களில் பார்க்க வந்தால், அனுமதித்து வந்தார், ஆனால், இப்பொழுதோ “பழைய நண்பர்கள்” உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. வெளியே காரியதரிசி என்று சொல்லிக் கொள்ளும் புதிய ஆட்கள், அவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல் அனுப்பி விடுவது பழக்கமாகியது. ஆனால், புதிய நண்பர்கள் அவருக்காக உழைப்பது போல காட்டிக் கொண்டு, தாங்களும் தங்களை உயர்த்திக் கொண்டனர். மார்ச் 2005ல் அப்படியொரு புகாரை அவரே அளித்தார். தனக்குக் கீழ் வேலை செய்துவந்த சுப்ரமணியம் என்ற ஆடிட்டர், சில ஆவணங்களை உபயோகித்து, ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக பச்சமுத்து புகார் கொடுத்தார்[5]. இதுவும் ஒரு உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] தினத்தந்தி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்தொகுதிகளைபா.ஜனதாவிடம்கேட்டுள்ளோம்.இந்தியஜனநாயககட்சிதலைவர்பாரிவேந்தர்தகவல், பதிவு செய்த நாள் : Feb 11 | 03:45 am

[3]அரவிந்த கேசரிவாலும் இதே போலித்தனத்தைக் கடைபிடித்து வருகிறார். வருமானவரித்துறையிலிருந்து வந்துள்ள அவருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவ்வாறு நடித்து வருகிறார்.

[4] According to the sources, the searches were also conducted in the premises of Vendhar Movies and TV news channel ‘Puthiya Thalaimurai’. One of the partners of Vendhar Movies is absconding since Tuesday. The recent hits of Vendhar Movies are Ethir Neechal and Thillu Mullu. The search led to confiscation of documents which indicated receipt of donations, inflated expenditure, diverting funds of trusts and evasion of income tax for the last few years. Jewels have been seized and kept in sealed conditions.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/it-raid-on-srm-group-yields-unaccounted-cash-of-rs-675-crore/article4830954.ece

[5] Auditor arrested on cheating charge, By Our Staff Reporter; Thursday, Mar 31, 2005http://www.hindu.com/2005/03/31/stories/2005033112710300.htmCHENNAI, MARCH 30. The police have arrested the auditor of Valliammal Society, which runs the SRM Groups of Institutions, following a complaint by the society’s chairman T.R. Pachamuthu.Mr. Pachamuthu told police that his auditor of over a decade, Subramaniam, had cheated him by misusing the institution’s property documents to get loans from private financiers of over Rs.2.5 crores. Speaking to The Hindu over phone, Mr. Pachaimuthu said the signatures in the promissory notes that Mr. Subramaniam had handed over to the financiers could either be forged or signed by him by mistake. “He has been managing the finances of my institutions for more than a decade and I trusted him. He might have tricked me into signing some of the papers,” he said.

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (1)

 

modi vandalur5

modi vandalur5

இந்திய  ஜனநாயக  கட்சி 2010-2014: இந்திய ஜனநாயக கட்சி 28-04-2010 அன்று துவக்கப்பட்டது, மே மாதத்தில் கட்சியின் முதல் தேசிய மாநாடு 29ம் தேதி திருச்சியில் நடந்தது[1].  தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து, பாரிவேந்தர் ஆனார்[2]. தனித்தே போட்டியிடுவோம் என்றெல்லாம் பேசிவந்த பச்சமுத்து (2011) இப்பொழுது பாஜகவுடன் கூட்டு சேருவதில் வியப்புத்தான் ஏற்படுகிறது[3]. 2012ல் பச்சமுத்துவை வளைத்துப் போடவும் திமுக மற்றும் அதிமுக முயன்றன. அக்கட்சி ஒரு நிலையில் ஜனவரி 2012லேயே பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறது[4]. கட்சி ஆரம்பிக்கப் பட்டதற்கு முன்பாகவே திமுக மற்றும் அதிமுக கூட்டணி முயற்சிகள், பேரங்கள் நடந்தன. ஆனால், அவை பச்சமுத்துவுக்கு சாதகமாக அமையவில்லை.  மேலும், அவற்றை எதிர்க்கும் அளவில் பலத்தையும் பெற்றுவிட்ட அவர், தனித்துக்கூட போராடலாம் என்ற துணிவும் வந்துவிட்டது. வழக்கம் போல 2013ல் அவர் மீது வருமான வரி சோதனை[5], கல்லூரியில் சேர பணம் வாங்குதல்[6], பண மோசடி, நில அபகரிப்பு[7], பாலியல் தொந்தரவு போன்ற புகார்கள் எழுப்பப்பட்டன, நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்ட், விசாரணை கூட நடத்தப்பட்டது. ஒருவேளை காங்கிரஸும் அவர்மீது கண் வைத்ததோ என்னமோ? ஏனெனில் மத்திய அரசு ஆணையில்லாமல் சிபிஐ ரெய்ட் நடக்காது[8]. ஆக திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் முதலியவற்றிலிருந்து தப்ப ஒரே வழி பிஜேபி தான். ஆனால், அது கொஞ்சம் “ரிஸ்க்” ஆன விசயம் தான், இருப்பினும் வியாபார ரீதியில் “மோடி பிரான்ட்” பிராமாதமாக வேலை செய்து வருவதால், பச்சமுத்து சரியாகவே தீர்மானித்து கூட்டு சேர்ந்துள்ளார்.

 

rajnath-pachamuthu-தில்லியில் சந்திப்பு ஆகஸ்ட் 2013

rajnath-pachamuthu-தில்லியில் சந்திப்பு ஆகஸ்ட் 2013

மோடி  சின்னத்தைப் பயன்படுத் தவிரும்பிய  பச்சமுத்து: கல்வியும் அரசியலும் வியாபாரமாகி விட்ட பிறகு, அவற்றில் கூட்டு சேருவது, அதற்காக பணம் செலவழிப்பது முதலியவை எல்லாம் சகஜமானவை தாம். ஆகஸ்ட் 2014ல் பச்சமுத்து தமிழிசை சௌந்தர் ராஜனுடன் தில்லிக்குச் சென்று ராஜநாத் சிங்குடன் பேசியுள்ளனர். முன்னர் குஜராத்திற்குச் சென்று மோடியையும் சந்தித்துள்ளார். இவ்வாறாக பிஜேபி-ஐஜேகே கூட்டு உருவாகியுள்ளது. ஆக, ‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்’’ என்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார் என்றால் அது வதந்தியாகாது. அதாவது ஒன்று பச்சமுத்துவிற்கு, மற்றது அக்கட்சி மகளிரணி அமைப்பாராக உள்ள லீமாரோஸ் மார்ட்டின்[9] என்பவருக்கு. இவர் லாட்டரி கிங் சான்டியாகோ மான்ட்டினின் [lottery kingpin Santiago Martin] மனைவி, பல மோசடிகளில் சிக்கியுள்ளவர்[10].  இங்குதான் பிரச்சினை வருகிறது. ஊழலை எதிர்க்கும் கட்சி என்றால், ஐஜேகேவுடன் பிஜேபி கூட்டு வைக்கக் கூடாது. முன்பு திமுகவுடன் கூட்டு வைத்ததால், இவையெல்லாம் மறக்க/மறைக்கப்படும். ஒருவேளை ஆம் ஆத்மி கட்சியினர் வேண்டுமானால் கலாட்டா செய்யலாம், ஆனால், தமிழகத்தில் அவர்களின் அகையே நாறிவிட்டது.

 

Leema-Rose கைது

Leema-Rose கைது

திராவிடக்  கட்சிகளுடன்  மோதிய  லீமாரோஸ் (2012-2013): பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் திடீரென அரசியலில் புகுந்துள்ளார்[11]. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அதிபர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் அவர் இணைந்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் ஆட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தார் மார்ட்டின். படத் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். அதன் பின்னர் ஆட்சி மாறி அதிமுக பதவிக்கு வந்ததும் (2012) மார்ட்டின்  மீது பல்வேறு வழக்குகள் சரமாரியாக பாய்ந்தன. அடுத்தடுத்து ஒவ்வொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். குண்டர் தடுப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. கோர்ட்டுக்கும், சிறைக்கும் அலைக்கழிக்கப்பட்டார். இந்த நிலையில், மார்ட்டினை விடுவிக்க தன்னிடம் அதிமுகவினரும் போலீசாரும் கோடிக்கணக்கில் பேரம் பேசுவதாகவும், இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்[12]. மார்ட்டினை விடுவிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று மிரட்டி ஆளும் கட்சியின் பெயரைச் சொல்லியும் போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லியும் பலரும் தன்னிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்து வருவதாக மார்ட்டினின் மனைவி லீமா புகார் கூறியிருந்தார். மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் முன்னாள் உதவியாளர் தங்களிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் லீமா ரோஸ் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் தந்துள்ளார், அது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் திடீரென பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் போய்ச் சேர்ந்துள்ளார் லீமா ரோஸ். அரசியல் ரீதியான பாதுகாப்பு கருதி அவர் பாரிவேந்தரிடம் போய்ச் சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் இந்திய ஜனநாயகக் கட்சி அவருக்கு எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்பது தெரியவில்லை[13], இப்படி ஒரு தமிழ் இணையம் முடித்திருந்தது.  ஆனால், இப்பொழுது லீமா ரோஸுக்கு சீட்டே கேட்டாகி விட்டாயிற்று! மற்ற கட்சிகள் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

 

பீஜேபி அரசியல் கூட்டு வியப்பானது

பீஜேபி அரசியல் கூட்டு வியப்பானது

சான்டியா  கோமார்ட்டின்திராவிட  கட்சிகளின்  சண்டைகள்: சான்டியாகோ மார்ட்டின் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் சமரசமாகவே இருந்து வந்தார். ஆனால், இந்த கட்சிகளின் சுழற்சி ஆட்சி மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள பரிமாற்றங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தின. சான்டியாகோ மான்ட்டினின் மனைவி மற்றும் ஐஜேகே கட்சி மகளிரணி அமைப்பாராக உள்ள லீமா ரோஸ், 2012ல் கருணநிதியின் மகள் செல்வி ஆளை வைத்து தன்னை மிரட்டி வருகிறார் என்று மகன் சார்லஸ் மார்ட்டின் மற்றும் மகள் டெய்ஸி மார்ட்டின் சகிதம் வந்து கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்[14]. நிலமோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் முதலிய சட்டமீறல்களில்[15] மார்ச் 22ம் தேதி 2013 அன்று கைதாகி[16], ஒரு மாத காலம் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தவர்[17]. மார்ட்டினைப் பற்றி கேட்கவே வேண்டாம். “இளைஞன்” என்ற படத்தை ரூ.50 கோடி செலவழித்து எடுத்தாராம் (பிப்ரவரி 2011), அந்த படத்திற்கு “ஸ்கிரிப்ட்” எழுதியதற்காக கருணாநிதிக்கு ரூ.45 லட்சம் கொடுத்தாராம்[18]. திருட்டு லாட்டரி மூலம் கோடிகளை சம்பதிக்கும் இவருக்கு கருணாநிதி உதவியும் செய்துள்ளார்[19], அதாவது பி.எஸ்.ராமன் என்ற மூத்த வழக்கறிஞர் மார்ட்டினுக்காக வாதாடியிருக்கிறார்ரானால், கேரள அரசு கருணாநிதிக்கு கடிதம் எழுதி அவரை திரும்பப் பெறச் செய்தது. மார்ட்டினின் லைசென்ஸையும் கேன்சல் செய்தது. இவையெல்லாம் இப்படியிருந்தாலும் திமுக மற்றும் அதிமுக அரசியல்வாதிகளுடன் மறைமுக ஆதரவு முதலியவை இருந்து வருகின்றன. இத்தகைய கூட்டுகள் நடுநிலை வகிக்கும் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

 

வேதபிரகாஷ்

© 15-02-2014


[13] தமிள் ஒன் இந்தியா,இந்தியஜனநாயகக்கட்சியில்அடைக்கலம்புகுந்தலாட்டரிமார்ட்டின்மனைவிலீமாரோஸ், Posted by: Vadivel, Published: Tuesday, March 12, 2013, 14:25 [IST]

[16] Leema Rose, wife of lottery kingpin Santiago Martin, has been arrested from Coimbatore airport in connection with a case relating to the seizure of 7 crore from an accomplice of her husband in 2012, which was believed to be from the sale of illegal lotteries in the state. She is being brought to Chennai by a Central Crime Branch (CCB). Police said Leema Rose had then created fake documents and submitted them in the Madras high court to prove the cash was obtained out of a land deal. While scrutinising the documents, court found them to be fabricated. Police booked Santiago Martin, businessman Nagarajan and Murthy after they seized 7 crore from Nagarajan’s house in Thillai Ganga Nagar in Chennai on March 13, 2012. After the documents were found to be fabricated, CCB police registered a case under IPC section 468 (forgery for purpose of cheating), 471 (using as genuine a forged document) and was on the lookout for Rose.

http://articles.timesofindia.indiatimes.com/2013-03-23/chennai/37959985_1_santiago-martin-fake-documents-sale-of-illegal-lotteries

[17] The Madras High Court has granted conditional bail to Leema Rose, wife of lottery baron S. Martin, who was arrested in a case for alleged offences including cheating, conspiracy and forgery. Justice R. Subbiah granted the relief on a petition by Mrs.Rose. The prosecution case was that during a search of the house of M.Nagarajan at Nanganallur here, Rs.7.20 crore was recovered along with records relating to transport of lottery tickets to West Bengal, Bhutan and Sikkim. A search of the house of G. Moorthy at Annanagar yielded Rs.50 lakh. The cash was seized. Interrogation revealed that Nagarajan sold lottery tickets of other States in Tamil Nadu. Nearly 3,625 lottery tickets were seized. The allegation was that the petitioner colluded with the other two accused and fabricated documents to obtain bail for her husband, who was an accused. She made arrangements along with other accused to convert the ill-gotten money into white money and tried to cheat the government. Counsel said the petitioner had been falsely implicated in the case. Mr.Justice Subbiah said the petitioner had been in jail for more than a month. There was no need for her custodial interrogation. He ordered that she be released on bail on executing a bond for Rs.10,000 with two sureties for a like sum. She should appear before the City Central Crime Branch daily for four weeks and thereafter as and when required.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/conditional-bail-for-leema-rose/article4675218.ece

[18] M. Karunanidhi’s 75th film as scriptwriter,Ilaignan, got him Rs.45 lakh – the highest-ever fee he had taken. All thanks to Santiago Martin, or “lottery king” as he is better known, who revived the movie, which was lying in limbo for over three years. Martin’s venture S. Martin Productions spent around Rs.50 crore on the movie.

http://indiatoday.intoday.in/story/santiago-martin-is-indias-illegal-lottery-king/1/129601.html

[19] Another controversy broke out when Tamil Nadu’s advocate general P.S. Raman appeared for Martin in a case in Kerala. The Tamil Nadu Government clarified that Raman appeared in his capacity as a senior counsel. But after the Kerala Government sent a letter to Karunanidhi, he asked Raman to step down. “In Kerala alone, lottery sale is fetching him Rs.6 crore every day,” says Balaji. Martin’s business interests in Coimbatore include a textile showroom in his wife Leema’s name, a nursing college, and recently floated property firm Martin Promoters. If sources are to be believed, he has floated more than 300 companies in the last 10 years.

http://indiatoday.intoday.in/story/santiago-martin-is-indias-illegal-lottery-king/1/129601.html