Archive for the ‘இந்து மக்கள்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் கூட்டம் நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  1. பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, Sarkaryavah Shri Dattatreya Hosabale
  2. கிருஷ்ண கோபால், Sah sarkaryavah Krishna Gopal
  3. மன்மொஹன் வைத்யா, Sah sarkaryavah Manmohan Vaidya 
  4. சி.ஆர்.முகுந்த் Sah sarkaryavah CR Mukund
  5. அருண்குமார், Sah sarkaryavah Arun Kumar
  6. ராம்தத் Sah sarkaryavah Ramdutt 

முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”

ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3].  நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4].  ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5].  இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.

கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] Rashtriya Swayamsevak Sangh, RSS Akhil Bharatiya Prant Pracharak Meet, 2023, at Ooty, on July 13-15, ., 11-Jul-2023, press statement

[2] https://www.rss.org/Encyc/2023/7/11/RSS-Akhil-Bharatiya-Prant-Pracharak-Meet-2023-at-Ooty-on-July-13-15.html

[3] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது , தினத்தந்தி ஜூலை 12, 12:23 am.

[4] https://www.dailythanthi.com/News/India/2611-like-attack-if-threat-call-over-pak-woman-who-came-to-india-for-lover-1007682?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான், By Nantha Kumar R Published: Friday, July 14, 2023, 9:43 [IST]

[6] https://tamil.oneindia.com/news/coimbatore/3-day-rss-conclave-begins-in-ooty-mohan-bhagwat-expected-to-give-advices-tomorrow-521049.html?story=1

[7] குமுதம், கோயம்புத்தூர்: பெண் போலீசை தாக்கியதாக நந்தினி, நிரஞ்சனா கைதுஎன்ன நடந்தது?, ஜூலை 15, 2023.

[8] https://www.kumudam.com/news/tamilnadu/nandini-was-arrested-in-coimbatore

[9] மீடியான்.காம், ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சிதடுத்த போலீஸுக்கு பளார்மதுரை நந்தினி கைது!, Karthikeyan Mediyaan News, 04.00 மாலை, 14-07-2023.

[10] https://mediyaan.com/covai-police-arrested-social-activists-madurai-nandhini-niranjana/

[11] இ.டிவி.பாரத், Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!, Published: 14-07-2023. 12.00 hours

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/two-social-activists-arrested-for-assaulting-female-police-officer-in-coimbatore/tamil-nadu20230714125845520520247

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

ஜூன் 19, 2017

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

V. G. Santhosm awarded - life time achievement

வி.ஜி.சந்தோசம் யார்?: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.

V. G. Santhosam was awarded Doctorate Degree by Jerusalem university

அனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.

First early Christianity in India held 2005 - Santhosam, Deivanayagam, John Samuel

சுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுகிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].

VGP Evangelixal nexus

 

முருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:

1.        ஜி. ஜான் சாமுவேல்.

2.       டி. தயானந்த பிரான்சிஸ்[9].

3.       ஜார்ஜ் மெனசேரி

4.       வி. தெய்வசிகாமணி.

5.        மோசஸ் மைக்கேல் பாரடே[10].

6.       பி. தியாகராஜன்.

7.        ஜி. ஜே. பாண்டித்துரை

8.       பி. லாசரஸ் சாம்ராஜ்

9.       தன்ராஜ்.

10.     ஜே. டி. பாஸ்கர தாஸ்.

11.      வொய். ஞான சந்திர ஜான்ஸான்.

12.     ஜாலி செபாஸ்டியன்.

13.     டி. யேசுதாஸ்.

14.     ஜொனாதன் சான்டியாகோ

15.     லாரன்ஸ் வின்சென்ட்.

16.     எர்னெஸ்ட் பிரதீப் குமார்.

இப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம்,  இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.

The covention was held at VGP grounds, Vandalur on 26-01-2015

விஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.

V. G. Sathosam awarded Doctorate etc

கிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்?: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.

© வேதபிரகாஷ்

19-06-2017

Tamil christuva koil, New York-2

[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.

[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.

[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.

[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.

[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.

[6] http://www.instituteofasianstudies.com/board_governors.html

[7] For further details on the Conference, please contact: Dr. G. John Samuel, Founder-Director, Institute of Asian Studies, Chemmancherry, Sholinganallur P.O.

http://www.instituteofasianstudies.com/christianity_conference.html

[8] G. John Samuel (General Editor),  Early Christianity in India : (with parallel developments in other parts of Asia), editors, J.B. Santiago, P. Thiagarajan, International Centre for the Study of Christianity in India, Institute of Asian Studies, 2008, Chennai.

[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.

[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

[11]  கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

ஜூன் 12, 2016

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

காங்கிரஸின் எதிர்ப்பு - சைனிக் காலனி

காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.

No land to sainik colony protest - Hiriyat conferenceசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2].  அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.

J and K assembly debate about sainik colonyமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

sainik-colony- omar in twitterமுஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை  சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

kashmiri-pandit-cries-for-human-rights.2காஷ்மீரப்   போர்வையில்  இந்து பெண்களின்   உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!

© வேதபிரகாஷ்

12-06-2016

[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ட்டசபையில் மெகபூபாஉமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST

[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.

[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249

[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By  ஸ்ரீநகர், First Published : 10 May 2016

[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/

[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece

[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee

[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.

http://www.storypick.com/sadhvi-prachi-rant/;

[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs

[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html

[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST

[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece

[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (2)!

நவம்பர் 18, 2015

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடிஎதிர்ப்பு, இந்தியவிரோதம்இந்தியர்களுக்கு ஆபத்தானது (2)!

awaaz- how denigrated OM - 13-11-2015.3

பக்தி, ஆன்மீகம் மற்றும் சேவை போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகளை தூஷிப்பது ஏன்?: இணைதளத்தில் கவனித்தால், தில்லியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன; சல்மான் ருஷ்டி உட்பட எழுத்தாளர்கள் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவது பற்றி கவலைக் கொண்டுள்ளார்கள்; இந்துமஹாசபா கோட்சே நினைவுநாளைக் கொண்டாடுகிறது. என்று தான் செய்திகளை அள்ளி வீசுகின்றது. இதன் இணைதளத்தில் தமக்கு எந்த அரசியல் கட்சி, மதம், இயக்கம் முதலியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை, யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்றெல்லாம் அறிவித்துள்ளது[1]. இருப்பினும், இந்த“அவாஸ் நெட்வொர்க்”, முழுக்க-முழுக்க இந்து-விரோத குழுமமாக இருப்பது திடுக்கிட வைக்கிறது[2]. பக்தி, ஆன்மீகம் மற்றும் சேவை போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகளைப் பற்றி அவதூறான புத்தகத்தை வெளியிட்டுள்ளது[3]. குறிப்பாக, இந்து-விரோத போக்குடன் இருப்பதை, இங்கிலாந்து இந்துக்களே எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. வழக்கமாக மோடி-எதிர்ப்பு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது[5]. அப்சல் குரு, யாக்கூப், அஜ்மல் கசாப் [Afzal Guru, Yakub and Ajmal Kasab] போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, தூக்குத்தண்டனை கூடாது என்று பிரச்சாரம் செய்த குழுமமாக உள்ளது. தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் இவை, ஒரு பில்லியன் இந்திய மக்களைப் பற்றி ஏன் கவலைப்படாமல் இருக்கின்றன?

 awaaz- how denigrated OM - 13-11-2015

ஸ்வதிகசின்னத்தை உபயோகப்படுத்தி குழப்பத்தை விளைவிக்கும் போக்கு: மேலும், இப்பொழுது, இக்கூட்டத்திற்கு எந்தவித அனுமதியும் இங்கிலாந்து அரசாங்கம் வழங்காததால், மற்றவர்களைக் கூட்டி வைத்து ஆர்பாட்டம் செய்துள்ளது[6]. மேலும் “ஸ்வதிக” சின்னத்தை உபயோகப்படுத்தியதில், பாப் பிளேக்மேன் போன்ற பிரிடிஷ் எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவ்வாறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்[7]. ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இந்நேரம், விடுதலை, தமிழ்.ஒன்.இந்தியா போன்ற இணைதளங்கள் அந்த மோடி-எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆதரித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. “குஜராத் கலவரங்கள், பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அதிகரித்து வரும் சகிப்பின்மை படுகொலைகள் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவை விற்பனை செய்ய முயற்சிக்கிறார் மோடி; மோடியின் ஆட்சியில் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருந்த மதச்சார்பின்மை மீது பெருந்தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு”, என்று கூறுகின்றன[8].

Suresh Grover, Pragna patel, Gautam Appa, Vrinda Grover, Anish Kapoor, Chetan Bhagat, Mike Wood, Helena Kennedy

இந்துக்களை வெளிப்படையாக எதிர்க்கும் அவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள்: தெரிந்தோ, தெரியாமலோ ஸ்வதிக சின்னத்தை இடது-வலது மாற்றி, ஹிட்லர் உபயோகித்தது, நிறைய பேர்களுக்குத் தெரியாமல் உள்ளது. இந்திய அல்லது ஹிந்து ஸ்வதிக சின்னம், ஹிட்லர் உபயோகித்த அஸ்வதிக சின்னம் வெவ்வேறானவை. ஆனால், இந்த ஆவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள், வேண்டுமென்றே விஷமத்தனமாக, ஸ்வதிக சின்னத்தை, ஹிட்லர் சின்னம் என்று பொய்யாக பிரச்சாரம் செய்துள்ளது. அதாவது, யூதர்களைக் கொன்ற ஹிட்லர் போன்று மோடியைச் சித்தரிக்கும் முயற்சியில், ஹிந்துக்களை தூஷித்துள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபாப் பிளேக்மேன் பிரிடிஷ் எம்பி கேட்டுக் கொண்டபோது, “இல்லை, நாங்கள் ஹிட்லருடைய ஸ்வதிக சின்னத்தை உபயோகப்படுத்தவில்லை, உண்மையான ஸ்வதிக சின்னத்தை, ஓம் மீது போட்டு, அதை உரு சின்னமாக்கி போட்டிருந்தோம்”, என்ரு ஒப்புக் கொண்டன. அதாவது, அவர்களது குறி, இந்துக்கள் தாம் என்பது வெட்டவெளிச்சமாகியது. பிறகு, இவர்கள் எப்படி செக்யூலரிஸம் பேச முடியும்?

Leslee Udwin, Nirmala Rajasingam, Vrinda Grover, Teesta Setalvad, Kavita Krishnan, Indira Jaising

மோடிஎதிர்ப்பில் நிர்மலா ராஜசிங்கம்: போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நிர்மலா ராஜசிங்கம் இது குறித்து கூறுகையில், “நாங்கள் மோடி அரசிற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறோம். காரணம் குஜராத் கலவரத்திற்கு இன்று வரை முழுமையான தீர்வு காணப்படவில்லை. பா.. ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் மத துவேஷம் உச்சத்திற்கு சென்றுள்ளது. குறிப்பாக இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக மாற்றுவதற்கான முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து சிறுபான்மையினர்களும் அச்சத்தில் உள்ளனர். ஆனால் பிரதமர் இவர்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் கண்டிப்பதில்லை.” என்றார்[9]. கடந்த 2002 குஜராத் கலவரத்துக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு வரை மோடிக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த மற்றும் நடக்கும் பிரச்சினைகளில் ஈடுபாடு கொள்ளாமல், மோடி-எதிர்ப்பில் குறியாக இருக்கும் இம்மணியின் பின்னணி தெரியவில்லை. இணைதளங்களில் உள்ள இவர்களது எழுத்துகள் மற்றும் பேச்சுகளைப் படித்த ;பிறகு, ஷோபாசக்தி, நிர்மலா ராஜசிங்கம் முதலியோர் “பெண்ணியப்” போர்வையில், கம்யூனிஸத்தைக் குழப்பி, பொருளாதார திரிபுவாதங்களைக் கொடுக்கும் நாரீமணிகளாக உள்ளது புலப்படுகிறது.

 love-press-confernce-Setalvad, vrinda grover etc

மோடிக்கு எதிராக போராட்டம் ஆட்களை திரட்டும் இயக்குனர்[10]: பிரதமர் மோடி, பிரிட்டன் வரும்போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்த, ஹாலிவுட் பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின், ஆட்களை திரட்டும் தகவல் வெளியானது. பிரிட்டனை சேர்ந்தவர், லெஸ்லி உட்வின், [Leslee Udwin  58]. ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை இவர் வெளியிட்டார். கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி, சிறைக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததற்காக, இந்த படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்தது. கற்பழித்தவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரபரப்பு ஏற்படுத்தி, அதன் மூலம் பிரபலத்தை அடைய முயற்சித்ததாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி கொஞ்சித்தும் கவலைப்படாததாகவும், அவர் குற்றஞ்சாட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்[11].

women-protest-in-underwear-against-rape-in-london

கூட்டத்திற்குஆள் திரட்டும் வேலை இங்கிலாந்திலும் நடைபெறுவது வேடிக்கைதான்: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் நவம்பர் 12ல், பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, லண்டனில் பிரிட்டன்வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசும் இடத்தின் அருகே, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில், லெஸ்லி உட்வின் ஈடுபட்டார்[12].  இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு, சமூக வலை தளங்கள் மூலமாக, லெஸ்லி உட்வின் அனுப்பியுள்ள தகவல்: “இந்தியாவின் மகள்என்ற ஆவணப்படத்தை திரையிட, இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இது தான் சரியான நேரம். வரும், 12ல், மோடி, லண்டனுக்கு வரும்போது, மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும். மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போஸ்டர், பேனர்களுடன் ஏராளமானோர் திரள வேண்டும். நமக்கு குறுகிய அவகாசமே உள்ளது. அதற்குள் ஏராளமானோரை திரட்ட வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டது[13]. இதை எழுதும் போது, “20 வயதானவன், 13 வயது இளம் பெண்ணை தடுத்து நிறுத்து, காட்டிற்குள் வலுக்கட்டாயாமாகக் கூட்டிச் சென்று கற்பழித்தான்!”, என்ற செய்தி வருகிறது[14]. அங்கும் இது தினம்-தினம் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அம்மணி அங்கெல்லாம் படம் எடுப்பதில்லை போலும்! அந்த கற்பழிப்பாளர்களை பேட்டி கண்டு, சேர்த்துக் கொள்வதில்லை போலும்!

 Women-protest-in-underwear-against-rape-in-london-SLUT

© வேதபிரகாஷ்

18-11-2015

[1] Awaaz is an independent network. It receives no funds except those its members contribute out of their own pockets for specific projects. It receives no funds from any political party or government body. Awaaz itself is not affiliated to any political party or religious organisation, or nationalist, sectarian or religious ideology. Awaaz has no affiliation to a political ideology except a common platform of democracy, secularism, human rights and social justice which members and all affiliated organisations have to agree to if they want to become part of the Awaaz network.

[2] http://awaaz-uk.org/wp-content/uploads/2014/04/awaaz_in_bad_faith.pdf

[3] http://www.india.com/news/india/all-you-need-to-know-about-awaaz-network-who-is-opposing-narendra-modis-uk-visit-696639/

[4] http://www.cityhindusnetwork.org.uk/anti-hindu-sentiments-parliament/

[5] http://awaaz-uk.org/wp-content/uploads/2014/03/Modi_Exposed_website.pdf

[6] Welcoming Prime Minister Narendra Modi, The Member of Parliament for Harrow East Mr. Bob Blackman has also clarified that no permission was granted to this network and those who are responsible should be thoroughly ashamed.

http://satyavijayi.com/full-expose-the-shocking-truth-of-awaaz-network-who-did-this-shameful-deed-read-it-full/

[7] http://www.mirror.co.uk/news/uk-news/fury-swastika-projected-houses-parliament-6804402

[8] http://tamil.oneindia.com/news/international/pm-modi-faces-protests-london-239756.html

[9] http://www.maalaimalar.com/2015/11/12230557/Hundreds-protest-against-Modi.html

[10]  தினமலர், மோடிக்கு எதிராக போராட்டம் ஆட்களை திரட்டும் இயக்குனர், பதிவு செய்த நாள் நவ 02,2015 21:05; மாற்றம் செய்த நாள்: நவம்பர்.3, 2015:00.37.

[11] Other critics of Udwin’s film have expressed disapproval over the fact that the film-maker provided a platform for the rapist to voice his feelings, with many claiming Udwin “sensationalised” his lack of remorse over his actions. The controversy sparked a debate over freedom of expression and whether the airing of the documentary would be a positive or negative thing for India.

http://www.ibtimes.co.uk/narendra-modi-uk-visit-film-director-leslee-udwin-rallies-protesters-outside-wembley-stadium-1528652

[12] http://www.ibtimes.co.uk/narendra-modi-uk-visit-film-director-leslee-udwin-rallies-protesters-outside-wembley-stadium-1528652

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1378272

[14] http://www.bbc.com/news/uk-england-london-34825989

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?

நவம்பர் 14, 2015

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)?

Hasan Suroor caught in pedophile case, arrested

Hasan Suroor caught in pedophile case, arrested

 ஹசன் சுரூர் லண்டனில்பிடோபைல்குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய்துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.

As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu

As leftists, N Rams patronage is obvious in accommodating in The Hindu

14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானேபிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது?: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5].  இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது.  பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Marx, Lenin, Mao- trinity of Communism

Marx, Lenin, Mao- trinity of Communism

பிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.

Hasan Suroor - Muslim apologetic columnist supporting IS

Hasan Suroor – Muslim apologetic columnist supporting IS

பிடோபைல்கள் மேனாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.

Hasan Suroor - Muslim apologetic columnist

Hasan Suroor – Muslim apologetic columnist

செய்தியாளர்கள் செய்யும்ஸ்டிங் ஆபரேஷனில்பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.

Beef eating party politics- good or bad

Beef eating party politics- good or bad

இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்?’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it? புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்?’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேறுவிதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

உற்சாகமான மோடி ஆதரவாளர்கள்

ஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்?: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில்,செக்யூலரத்துவம்என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

14-11-2015

[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1385051

[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.

[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST

[5] http://in4india.in/news/Other-News/2015/11/indian-journalist-arrested-in-london

[6] http://www.huffingtonpost.in/2015/11/11/hasan-suroor-video_n_8529978.html

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7869057.ece

[8] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Indian-origin-journalist-Hasan-Suroor-arrested-in-UK-on-paedophilia-charges/articleshow/49756604.cms

[9] http://marudhang.blogspot.in/2014/03/blog-post.html

[10] Hasan Suroor, Modi, fauxsecularists and Muslims, September 22, 2014 Last Updated at 21:46 IST.

[11] http://www.business-standard.com/article/opinion/hasan-suroor-modi-faux-secularists-and-muslims-114092201238_1.html

[12] http://www.thehindu.com/opinion/op-ed/narendra-modi-and-ties-with-muslims/article7114109.ece

[13] http://www.thehindu.com/opinion/op-ed/comment-article-islamic-difference-and-radicalisation/article6760854.ece?ref=relatedNews

[14] http://www.ibnlive.com/news/india/narendra-modi-not-welcome-image-on-uk-parliament-photoshopped-1162875.html

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)?

திக படம் - பசுவதையா, மனித வதையா

திக படம் – பசுவதையா, மனித வதையா

அக்டோபர் 26ம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இவ்விவகாரம் திட்டமிட்டதா?: அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. பத்தாண்டுகள் கழித்து அதே அக்டோபர் 26 அன்று இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக, இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக, இதெல்லாம் பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்று மற்றவர்கள் கணிப்பார்கள். ஆனால், உண்மையில் இதனால் யார் லாபமடைகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி என்று முன்னர் பிரச்சினை செய்தவர்கள் யார் என்று பார்த்தால், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்கள் மற்ற இவர்களுடன் தொடர்பு கொண்ட குழுக்கள், இயக்கங்கள் என்பதனை கவனிக்கலாம். மாணவர்களிடையே, பிரிவு, வெறுப்பு, துவாசங்களை உருவாக்கவே, அவர்கள் செய்து வருகிறார்கள். ஏ.பி.வி.பி வருகிறது, வளர்ச்சியடைகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், சரஸ்வதியை எதிர்ப்பது, பசுமாமிசம் உண்ணுவதை ஆதரிப்பது என்ற முறைகளில் தடுத்துவிட முடியாது.

கோமாதா படம்

கோமாதா படம்

எதை வேண்டுமானாலும் உண்ணுவோம், அதை கேட்க நீ யார்?: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார்? என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா? கருத்தரங்கங்கள் நடத்துவார்களா?

கோமாதா - தெய்வமாக மதித்தல்

கோமாதா – தெய்வமாக மதித்தல்

தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு பொறுத்தவரையில் மாடு என்பது தான் சகலமும்: சங்காலத்திலிருந்தே ஆநிரை, மாடுகள் முதலியன தெய்வீகமாக, செல்வமாக, சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. “கோ” என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் மற்றும் அதிலிருந்து பல வார்த்தைகளும் உருவாகின. கோ என்றால் தலைவன், அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. பசுக்களை வளர்ப்பவர்கள், காப்பவர்கள் என்று ஆயர், கோவலர். இடையர், பூழியர், குடவர் என்று பல பக்கள் குழுமங்கள் இருந்தன. பசுக்கள் செல்வமாகக் கருதப் பட்டதால், அப்பொழுது அவற்றைக் கவர்வது, திருடுவது என்ற பழக்கம் இருந்தது. இதனால், ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பறு புலவர்கள் தங்களது பாடல்களில் அவற்றை விவரித்துள்ளனர். பசுக்களை காக்கும் ஆயர்களுக்கும், அவற்றைக் கவரும் மழவர், மறவர், எயினர், வேடர் போன்றோருக்கும் சண்டை, போர் நடந்ததை சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர்.  “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”, என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து அதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம். இடைக்காலத்தைய இலக்கியங்களும் அவ்வாறே மதித்து வந்தன.

ஆநிரை கவர்தல் - காத்தல்

ஆநிரை கவர்தல் – காத்தல்

இடைக்காலத்தில் ஆநிரை காப்பது: ‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைப்பட்டனர், பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கப்பட்டன. செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர், அதாவது, ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் / செரு புரியும் கோவலர்கள், கோ-காவலர்கள், கோரகக்ஷ்கர்கள் ஆனார்கள். ஆகவே, ஆநிரை காத்தல் என்பது தமிழரின் அறம் மட்டுமல்லாது கடமையும் ஆகும். குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி என்னும் ஊரின் மிக அருகில் உள்ள வங்கட்டூர் என்ற ஊரில் நடுகற்கள் துரைசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து நான்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.. இந்த நடுகற்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரனும், சுந்தரசோழனின் மூத்த மகனுமான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனால் படைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு நடுகற்களில் இரண்டு பழங்கால போர் பற்றிய செய்தியினை தருகின்றது. அதாவது ‘ஆநிரை காக்கும் பூசலில்’ இறந்துபோன தந்தை தின்மச்செட்டி மற்றும் அவரது மகன் சாத்தையன் பற்றி குறிக்கின்றது[1].

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை கவர்தல்- நடுகற்கள்

ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு[2]: 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் “ஆநிரை மீட்ட வீரக்கல்.’ இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது[3].

ஆநிரை காத்தல் - தெய்வமாக மதித்தல்

ஆநிரை காத்தல் – தெய்வமாக மதித்தல்

இக்காலத்தைய நிலைமை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 – 1898 ஜூலை 5) 19 ஆம் நூற்றாண்டில் புலால் உணவுக்காக பசுக்கொலை செய்து மாமிசம் உண்ணும் ஆங்கிலேயர்களின் கொடுமையை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நூறு பாடல்கள் கொண்ட, “ஆங்கிலியர் அந்தாதி” என்று பாடினார். இவ்வாறிருக்கும் போது, “தமிழர்கள்” என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், இவற்றையெல்லாம் மறைத்து, மறந்து ஏதேதோ பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், தங்களை கவிக்கோ, பெருங்கவிக்கோ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுமாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள், பிறகு எப்படி, ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்?

1966 anti-cow slaughter rally Delhi.6

1966 anti-cow slaughter rally Delhi.6

1966ல் தில்லியில் நடைப்பெற்ற பசுவதை எதிர்ப்பு பேரணியும், சாதுக்கள் கொல்லப்பட்டதும்: இந்தியாவில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டி இந்துக்கள் பல காலமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 7, 1966 அன்று “கோபாஸ்டமி” என்று கொண்டாடப்படும் தினத்தன்று சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும் பசுவதையை தடை செய்யக் கோரி குரல் எழுப்பினார், இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார்[4]. சாதுக்களின் பேரணி பாராளுமன்றைத்தை நோக்கிச் சென்றபோது, பேரணி மீது அப்போதைய இந்திரா காந்தி அரசின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எட்டு சாதுக்கள் பலியானார்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், தில்லியில் இருந்த காமராஜர் வீடு தாக்கப்பட்டது. இதற்காக சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தீர்த்தர், சுவாமி பர்பத்திரி, மஹாத்மா ராமசந்திர வீர் முதலியோர் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டர். மஹாத்மா ராமசந்திர வீர் 166 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா இதற்காக பொறுபேற்று ராஜினாமா செய்தார். ஆனால், தமிழகத்தில் இவ்வுண்மைகளைச் சொல்வது கிடையாது. மாறாக, நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் (ஏனெனில் அவர்கள் எழுதும் விதத்திலேயே அதனை வெளிப்படுத்துக் கொள்கின்றனர்[5]) இதைக்கூடத் திரித்து எழுதுகிறர்கள் என்பதை கவனிக்க வேண்டும்[6].

1966 anti-cow slaughter rally Delhi.1

1966 anti-cow slaughter rally Delhi.1

சென்னையில் நடைப்பெற்ற போராட்டங்கள்: ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது. சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

1966 anti-cow slaughter rally Delhi.3

1966 anti-cow slaughter rally Delhi.3

© வேதபிரகாஷ்

31-10-2015

[1] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/03/22223735/Planting-defense-appeal-to-remain-in-a-state-of-near.vpf

[2] தினமலர், ஆநிரை மீட்ட வீரக்கல்தேனியில் கண்டுபிடிப்பு, செப்டம்பர்.5, 2014.02.34.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1062756&Print=1

[4] In his letter, written in 1966 to the then Prime Minister, Mrs. Indira Gandhi of 1966, Lok Nayak Shri Jaya Prakash Narayan wrote that “ For myself, I cannot understand why, in a Hindu majority country like India, where rightly or wrongly, there is such a strong feeling about cow-slaughter, there cannot be a legal ban”. A copy of the letter is annexed and marked as Annex I (4). http://dahd.nic.in/ch1/chap1.htm#item13

[5] http://www.unmaionline.com/new/2486-euthanasia-cow-human-euthanasia.html

[6] http://subavee-blog.blogspot.in/2015/03/2.html

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)

Gajendra Chauhan - Vaasanaa- afilm acted by him

Gajendra Chauhan – Vaasanaa- afilm acted by him

பிட்டு பட ஹீரோவை / செக்ஸ் நடிகரை கல்லூரி சேர்மனாக நியமித்த பாஜக : போராட்டத்தில் மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க‍ வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.

Mahesh Bhatt muslim kissing woman

Mahesh Bhatt muslim kissing woman

சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.

Gajendra Chauhan - Khuli khidki - afilm acted by him

Gajendra Chauhan – Khuli khidki – afilm acted by him

கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு, 5 பேர் கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Janab Mahesh Bhatt and his second wife Parveen Babi

Janab Mahesh Bhatt and his second wife Parveen Babi

ஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர்  பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும்  எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].

Gajendra Chauhan - Jaungal ki rani - afilm acted by him

Gajendra Chauhan – Jaungal ki rani – afilm acted by him

கைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].

Janab Mahesh Bhatt and his three wives

Janab Mahesh Bhatt and his three wives

அரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.

Janab Bhatt, Dig - conspiracy-theory- book agaibst RSS

Janab Bhatt, Dig – conspiracy-theory- book agaibst RSS

“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் முதலியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.

 

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] http://www.tutyonline.net/view/28_97394/20150722193753.html

[2] h5ttps://www.youtube.com/watch?v=f4v7Pw_ajc8

[3] htt6p://www.vinavu.com/2015/07/08/interview-with-ajayan-adat-ftii/

[4]  தினகரன், புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது: கல்லூரிவளாகத்தில் பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1321584

[6] தினமலர், புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது, ஆகஸ்ட்.19, 2015; 03.27.

[7]மாலைமலர், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 5 புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 11:34 PM IST

[8] http://www.maalaimalar.com/2015/08/19233425/5-arrested-FTII-students-get-b.html

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=162276

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

U R Ananathmurthy and his christian wife Esther

U R Ananathmurthy and his christian wife Esther

யு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம்  முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.

Saeed-Akhtar-Mirza

Saeed-Akhtar-Mirza

சயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

Saeed aktar mirza, babar and masjid

Saeed aktar mirza, babar and masjid

கஜேந்திர சௌஹான் ஒருபுரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

தகுதிதராதரம்பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும்  இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] He married a Christian lady, Esther, and faced many problems for his inter-religious wedding. http://www.firstpost.com/living/ur-ananthamurthy-pioneer-kannada-literatures-navya-movement-1677817.html

[2] http://scroll.in/article/675713/kannada-writer-ananthamurthy-loved-whiskey-and-a-good-argument

[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.

Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81.,  Aug 23, 2014 · 07:46 am

[4] http://parallelcinema.blogspot.in/2005/08/salim-langde-pe-mat-rodont-cry-for.html

[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.

[6]In a debate moderated by TIMES NOW’s Editor-in-Chief Arnab Goswami, panelists — Gajendra Chauhan, Chairman, FTII, Paintal, Actor; Uday Shankar Pani, Filmmaker & Alumni FTII; Narendra Pathak, Member, FTII; Anupam Kher, Actor; Vinay Shukla, Filmmaker and Writer; Aruna Raje Patil, Filmmaker; Prateek Vats, Alumni, FTII; Saurabh Shukla, Actor; and Vikas Urs, Student, FTII (Cinematography).

 http://www.timesnow.tv/Debate-FTIIMahabharat-Bollywood-fights-Yudhisthira/videoshow/4478061.cms

[7] http://www.firstpost.com/politics/gajendra-chauhan-to-pahlaj-nihalani-the-unstoppable-rise-of-the-anti-intellectuals-under-modi-govt-2376458.html

[8] Rishi Majumder, Gajendra Chauhan to Pahlaj Nihalani: The unstoppable rise of the anti-intellectuals under Modi govt, Aug 3, 2015 15:44 IST.

[9] http://www.thehindu.com/features/magazine/bishwanath-ghosh-gajendra-chauhans-appointment-as-ftii-chairman/article7460395.ece

[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST

[11] Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue,   Updated: July 16, 2015 12:26 am.

[12] http://indianexpress.com/article/opinion/columns/the-problem-with-gajendra-chauhan/

[13] Mohua Chatterjee & Himanshi Dhawan, Chauhan was RSS pick for top job at FTII, TNN | Jul 11, 2015, 12.08 AM IST

[14] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Chauhan-was-RSS-pick-for-top-job-at-FTII/articleshow/48025610.cms

[15] Deeptiman Tiwary, Gajendra Chauhan: A 34-year veteran of C-grade exploits, TNN | Jul 11, 2015, 01.19 AM IST

[16]  http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Gajendra-Chauhan-A-34-year-veteran-of-C-grade-exploits/articleshow/48026077.cms

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)

மார்ச் 9, 2015

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)

Periyar statue in front of Sri Rangam Gopuram

திருமாவளவனின் அதிகப்பிரசிங்கத் தனமான பேட்டி: இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[1],  ‘தாலி பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா அல்லது பெருமைப்படுத்துகிறதா?’ என்ற தலைப்பில் ‘உரக்கச் சொல்லுங்கள்’ என்ற நிகழ்ச்சி உலக மகளிர் தினத்தில் ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி நேற்று அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்துக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர்.  இவர்கள் இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு இருக்கும்போதே இன்று (08.03.2015) புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்துக்கு எதிரில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை நான்கைந்து லாரிகளில் வந்து இறங்கிய ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. அவரது காமிராவும் உடைக்கப்பட்டிருக்கிறது. பெண் நிருபரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் போலிஸ் அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே நடத்தப்பட்டும் அவர்கள் தடுக்கவில்லை. தாக்கியவர்களை இதுவரை கைதுசெய்யவும் இல்லை என அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, என்று சொல்லியிருக்கிறார்.

 Indian soldier beheaded - wife cries demands for head

தாலி மறுப்புத் திருமணங்கள் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன: திருமாவளவன் தொடர்கிறார், தாலி மறுப்புத் திருமணங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் நடந்துவருவதை நாம் அறிவோம். திருமணமானவர் என்பதன் அடையாளமாகப் பெண் மட்டும் தாலி அணிந்துகொள்ளவேண்டும் ஆனால் ஆணுக்கு எந்த சின்னமும் தேவையில்லை என்பது ஆணாதிக்க அணுகுமுறை தவிர வேறில்லை. இதைப்பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் என்ன கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்பது தெரியாமலேயே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணங்கள் சட்டரீதியில் எந்தநிலையை அடைந்து, பிறகு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர் என்பதெல்லாம் அறிந்த விசயமே.

 OLYMPUS DIGITAL CAMERA

தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்: திருமாவளவன் தொடர்கிறார், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மதவாத வன்முறைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது. அரசியல் தளத்தில் செல்வாக்கு இல்லாத மதவெறி சக்திகள், பண்பாட்டுத் தளத்தில் வன்முறையை ஏவி தமது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன.  இத்தகைய மதவெறி வன்முறைக்கு ஜனநாயக அமைப்பில் இடம் கொடுக்கக்கூடாது.  தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்.  கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்[2].

இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது உண்மையா, பொய்யா? செய்திகள் வெளியிடப்பட்டுள்ள விதம், இந்து அமைப்பினர் என்று குறிப்பிட்ட அமைப்பினரை குற்றஞ்சாட்டுதல், விவாதத்தின் தலைப்பு, கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது முதலியன, பாரபட்சத்துடன் இருக்கின்றன என்பதனை, ஒரு சாதாரணமான வழிபோக்கன், பார்வையாளன் அல்லது யாருக்கும் புரிந்த விசயமாகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு, போக்கு, திட்டம் உள்ளது என்றும் கூறலாம். அதாவது, இந்துக்களை எதிர்ப்பதாக உள்ளது என்று தெரிகிறது. இந்துக்களைத் தாக்கும் போக்கு ஏன் என்பதை யாரும் விளக்குவதாக இல்லை. அதுதான் செக்யூலரிஸம் ஆகும் என்று இரச்சாரம் செய்து ஏற்புடைய கருத்தாக வைத்திருப்பது முதலியனவும் சரியாகாது. இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது இவர்களுக்கு  தெரிந்திருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இரண்டும் ஒன்றே என்பது போல தாக்குதலில் உட்படுத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல.

மற்ற மதங்களிலிருந்து உதாரணங்களை விவாதத்திற்கு உட்படுத்துவதில்லை: இதே மாதிரி, மற்ற உதாரணங்களை, மற்ற மதங்களிலிருந்து எடுத்து விவாதித்ததில்லை என்பதிலிருந்து, இந்துக்களைத் தாக்கவேண்டும் என்ற திட்டம் தெரிகிறது. தாலி போன்ற அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மோதிரம், பர்தா, முத்தம் என்ற பலவிசயங்கள் உள்ளன, ஆனால், அவை விவாதிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி எந்த டிவியிலும் பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மேலும், இந்து அமைப்பினர் தாக்கினர் என்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எல்லோருமே கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் சித்தாந்திகளாக இருப்பதும், இந்து-விரோத போக்கை எடுத்துக் காட்டுகிறது. தொடர்ந்து இவ்வாறு இந்து-எதிர்ப்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, ஒருதலைப்பட்சமான கருத்து திணிப்பு, அதற்கேற்றாற்போல, ஆட்களைக்கூட்டி வந்து பேச வைப்பது, காட்டிய நிகழ்ச்சியை திரும்ப-திரும்ப காட்டுவது, இதனை மறுத்தால், மறுப்புக் கருத்து தெரிவித்தால், அதனை தடுப்பது, மறைப்பது, மேலும் அவை கம்யூனலிஸம் என்பது என்ற போக்கு நடந்த வருகின்றது.

கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால்,  மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் ஷா பானு வழக்கு, சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது, சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை, உஸைன் சித்திரங்கள், பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேசிய கீதம் பாடுவது, அதற்கு மரியாதை கொடுப்பது, மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்) என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

வேதபிரகாஷ்

© 10-03-2015

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139195

[2] நக்கீரன், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தாக்குதல்: தொல்.திருமாவளவன் கண்டனம் , 10-03-2015.