Archive for the ‘அருணை வடிவேலு முதலியார்’ Category

திடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம் தொடர் பயிலரங்கம்!

ஜூன் 10, 2020

திடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம்  தொடர் பயிலரங்கம்!

Kural new warriors June 2020

தென்னிந்திய படிப்பு மையம்: தென்னிந்திய படிப்பு மையம் [Centre for South Indian Studies[1]] என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டு, திடீரென்று திருக்குறளில் அபரிதமான காதலை வெளிப்படுத்தி இருப்பது புளகாங்கிதம் அடையும் வகையில் புல்லரிக்கிறது. 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் எங்களுக்கு, தென்னிந்திய படிப்பு மையம் என்று புதியதாக முளைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், இவர்களை நாங்கள் இந்திய வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, என IHC, SIHC, APHC, TNHC, THC, AIOC etc., எங்குமே பார்த்ததில்லை! திருக்குறளை கேவலப் படுத்தி, தூஷித்து, அசிங்கப் படுத்திக் கொண்டிருந்த போது, இவர்கள் எல்லோரும் எங்கிருதார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது பல்கலைக்கழகத்தில் “சைவ சித்தாந்த மாநாடு” நடந்தபோதும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது, குறள், வள்ளுவர் என்று கிளம்பி விட்டார்கள். ஏற்கெனவே சில கோஷ்டிகள், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி நாறடித்து விட்டார்கள். ஆகவே, இதன் பின்னணி என்ன என்று அறியப் படுத்த வேண்டும். 05-06-2020 அன்றே, “வள்ளுவரை, திருவள்ளுவரை, குறளை, திருக்குறளை எந்த விதத்திலும் வியாபாரம் செய்யக்கூடாது. வள்ளுவம் வணிகத்திற்கு அல்ல!” என்று பதிவு போட்டிருந்தேன்.

Centre for South Indian Studies, commercialization of Valluver-1

தென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி [Centre for South Indian Studies (CSIS)[2]]: தென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி என்ன என்று கேட்டபோது, சரியான பதில் கிடைக்கவில்லை. இணைதளத்தில் தேடி பார்த்த போது, இது ஒரு டிரஸ்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் கீழ்வருமாறு:

Centre Board of Trustees உறுப்பினர் பெயர் நிபுணத்துவம்
1 என்.சி.பிந்த்ரா [NC Bipindra[3]]

 

பத்திரிக்கையாளர்
2 மருத்துவர் சுப்பையா சண்முகம்

[Dr Subbiah Shanmugam[4]]

புற்றுநோய் நிபுணர்[5]
3 பி. சந்தீப் குமார் [Sandeep Kumar P[6]] பொருளாதாரம்-வணிகம்
4 அபிஷேக் டான்டன் [Abhishek Tandon[7]] வணிகவியல் பேராசிரியர்

இவர்கள் எல்லோருமே தத்தம் துறைகளில் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால், சரித்திரத்துடன் சம்பந்தப் படாதவர்களாக இருப்பது விசித்திரமாக இருக்கிறது. அவர்கள் சரித்திர ஆராய்ச்சி செய்யக் கூடாது என்பதில்லை, ஆனால், கடந்த 40-60 வருடங்களில் இவர்களது / அவர்களைச் சார்ந்த சித்தாந்திகளது பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை. தமிழகப் பல்கலைக் கழகங்களில் சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளார்களா, முறையாக சித்தாந்திகளை எதிர்கொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை. தமிழகம், தமிழக வரலாறு, தென்னிந்தியா சரித்திரம் என்பதில் எல்லாம் நிறைய நடந்துள்ளன. அந்நிலையில், விசயங்களை அறிந்தவர்களை விடுத்து, இப்படி புதியவர்களைப் போட்டிருக்கும் போக்கு புரியவில்லை. இப்பொழுது, “தொடர் பயிலரங்கம்” என்று ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் யாருக்கு பயிற்றுவிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

Centre for South Indian Studies, commercialization of Valluvar-2

தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவதரித்த தினம் வைகாசி அனுசம் ஜூன் 5, 2020: இதுவரை, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்ற பெயரில் 2017லிருந்து, இந்துத்துவ வாதிகள் சேர்ந்து, ஒரு நிறுவனத்தை அமைத்து, விழாக்களை நடத்தினார்கள். 2017ல் விஜி சந்தோஷத்திற்கே, விசுவாசமாக எல்லீஸர் விருது வழங்கி, சந்தோசித்தார்கள்.  2018லும் கொண்டாடினார்கள். இதிலும் விஜி.சந்தோசம் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. 2019ல் தெரியவில்லை. இப்பொழுது, 2020ல் வேறு பெயரில் / இயக்கத்தின் கீழ் நடத்துகிறார்கள் போலும். ஆனால், இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்று அவர்களே சொல்கிறார்கள். குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர் – பேராசிரியர் மதுசூதனன் கலைச் செல்வன், என்ற பெயர் திகைப்பாக இருக்கிறது. இவர் ஏற்கெனவே இந்து-எதிர்ப்பு வாதங்கள், திரிபு விளக்கங்கள் முதலியவை செய்துள்ளது தெரிகிறது[8]. மேலும், காஞ்சி சங்கரச்சார்யா முதல் மற்ற ஆதினம் வரை போட்டோ எடுத்துக் கொண்டு, சமூக வளைதளங்களில் போட்டுக் கொண்டு, அதிரடி விளம்பரப் பிரியராக இருப்பதும் தெரிகிறது. இவரை யாரும் கேள்விக் கேட்கக் கூடாது, லேப்டாப்பை வைத்துக் கொண்டு, கதாகாலக்ஷேபம் செய்வதில், வித்தகராக இருப்பது பிரபலம். நவீனகால டூரிஸம் என்று ஐந்து நட்சத்திர பாணியில் “டூர்” நடத்துகிறார்கள்[9].

தேதி தலைப்பு பேச்சாளர்
ஜூன்.4 2020 வரலாற்றில் வள்ளுவர் தினம் கல்வெட்டு

எஸ். ராமச்சந்திரன்

ஜூன்.5 2020 வள்ளுவரின் அறக்கோட்பாடுகள் பேராசிரியர் கே.எல். மாதவன்
ஜூன்.6 2020 வள்ளுவரின் இறைக் கொள்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்
தெ.ஞானசுந்தரம் பதிலாக இவர் பேசினார். பேராசிரியர்

செ. ஜகந்நாதன்

இதில். கல்வெட்டு ராமச்சந்திரன் தவிர, மற்றவர்கள், தென்னாட்டு சரித்திரத்தில் என்ன ஆராய்ச்சி செய்தார்கள் என்று தெரியவில்லை. பொறுமையாக, இவர்கள் பேசியதைக் கேட்டு, குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, இக்கட்டுரையை எழுதுகிறேன். இவர்கள் அதை எப்படி முறையாக மறுப்பது, எதிர்ப்பது என்பதில்லாமல், அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! இதனால், யாருக்குப் பலன் என்று தெரியவில்லை.

Centre for South Indian Studies, commercialization of Valluvar-3

எஸ். ராமச்சந்திரன் சரித்திரத்தைச் சொன்னார்: ராமச்சந்திரன் மட்டும் தான் பிரச்சினையை அணுகியுள்ளார். 1969ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எவ்வாறு திருக்குறளுக்கு எதிராக வேலை செய்து வருகிறது என்று எடுத்துக் காட்டினார். உண்மையில் வைகாசி-அனுசம் அன்று வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட 1966ல் பிறப்பித்த அரசு ஆணை உள்ளது. 1966ல் இந்திய ஜனாதிபதி, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம், திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப் பட்டது. 1971ல் கருணாநிதி முதலமைச்சர் ஆனதும், இதனை மாற்ற முயன்றார். அந்த ஆணையை நீக்கி, புதிய அணையை பிறப்பிப்பதற்குப் பதிலாக, தை.2க்குப் பிறகு, திருவள்ளுவர் தினம் என்று அறிவித்து, கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. திருவள்ளுவர் கோவில் திருப்பணிக் குழுவுடன், திருவள்ளுவர் கோவில் நிலமீட்பு இயக்கமும் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால், வள்ளுவர் கோட்டம் என்று ஆரம்பித்து, திசைத் திருப்பப் பட்டது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அதற்குள், தெய்வநாயகம் கோஷ்டி எவ்வாறு, கருணாநிதியின் உதவியுடன் “திருவள்ளுவர் கிறிஸ்தவர், திருக்குறள் கிறிஸ்தவர் நூல்” முதலியவற்றை வெளியிட்டதையும் குறிப்பிட்டார்.

Prof Ram Nah NMadurai

ஜூம்ஜூம்  தொடர் பயிலரங்கம்!: இந்த கொரோனா காலத்தில், எல்லோருமே, பெரும்பாலும், இத்தகைய ஜூம்-கூட்டத்தை ஏற்பாடு செய்வது வழக்காமாகி விட்டது. இப்படி சிலர் பேசிக் கொண்டே இருப்பர், மற்றவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இதில் கேள்வி கேட்பது, பதில் சொல்வது முதலியன இல்லை. பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான். பிறகு யூ-டியூப்பில் போடுகிறார்கள். பொழுது போகவில்லை என்றால், ஏதோ, டிவி பார்ப்பது போல பார்க்கிறார்கள். ஆனால், படிப்பு, ஆராய்ச்சி, இதனால் பலன் என்றெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. விளம்பரம், காசு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். நோய் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. இவர்களால் மருந்து கொடுக்க முடியவில்லை. போதாகுறைக்கு, அந்நோயுக்கு சாதகமாக சிலவற்றை செய்து சென்று விடுகிறார்கள். அரசியல், அதிகாரம், குறிப்பிட்டத் தலைவரை ஆதரிப்பது என்ற ரீதியில் செல்லும் இத்தகைய தமாஷாக்களால், சிலருக்கு பலன் கிடைக்கலாம், ஆனால், பிரச்சினையை விட்டு விடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

10-06-2020

Madghu sudden interest in Tirukkural

[1] The so-called “Centre for South Indian Studies” appeared to have floated recently with not known persons like N.C.Bipindra, Subbaiah Shanumuga, Sandeep Kuma, Abhishek Tandon.

[2] Centre for South Indian Studies (CSIS) is a public charitable trust established in Delhi, engaged in academic study, research and analysis of economic, social, historical and political developments, both past and contemporary. CSIS commissions scientific research on various subjects and topics pertaining to South India, directly by its researchers and funds studies of interests that conform to its aims and objectives. It also motivates academicians and students to take up new research initiatives to rework on conventional narratives on South India to enable understanding these topics scientifically. Apart from organising research programmes, CSIS also brings out publications periodically and carries out social awareness programmes. CSIS regularly organises lectures, debates, panel discussions and talks on various subjects related to South India. We also organise seminars and workshops, as part of our academic activity. https://csisdelhi.com/about-centre-for-south-indian-studies/

[3] NC Bipindra has been a journalist for over two decades, writing and reporting on matters aerospace, defence and national security for two-thirds of that period. He has worked as the Defence Affairs Editor of a leading national daily newspaper and as the Chief Defence Correspondent of India’s premier news wire, establishing a strong relationship with politicians, government officials and the armed forces. While journalism has been a passion, Bipindra is also a qualified lawyer, with specialisation in Criminal and Civil laws, Arbitration and Intellectual Property Rights. He also has valuable experience as a serial entrepreneur. He is also a social media best-practices mentor to several individuals, including politicians and celebrities, business houses and social institutions.

[4] Dr Subbiah Shanmugam is a Surgical Oncologist and a Professor, with over 30 years of medical practice, of which 20 years have been spent teaching medical students. At present, he is the Head of the Department of Surgical Oncology at the Government of Tamil Nadu’s Kilpauk Medical College and Government Royapettah Hospital at Chennai. During his spare time, the medical doctor is involved in the activities of several professional organisations and social movements. Dr Subbiah is at present the Visitor’s (President of India) nominee in third Executive Council (2016-19) at the Central University of Tamilnadu, Tiruvarur, and an External Member of the Board of Studies for Super-Specialities, Rajiv Gandhi Medical University, Karnataka (2018-21). He was a National Executive member of Indian Association of Surgical Oncologists between 2014 and 2016.

[5] Oncology is a branch of medicine that deals with the prevention, diagnosis, and treatment of cancer. A medical professional who practices oncology is an oncologist.

[6] Sandeep Kumar P is a research scholar on Applied Economics and Business Management. He is also an active participant in various social movements. As a writer, he contributes to various journals on socio-political issues in English and Malayalam. He is a regular participant of Malayalam TV debates on issues pertaining to national importance. Sandeep is also member of various committees under Ministry of Human Resources Development and Ministry of Health, Government of India.

[7] Abhishek Tandon is currently working as an Assistant Professor in Shaheed Sukhdev College of Business Studies, University of Delhi. He received his PhD degree in Software Reliability and Marketing from Department of Operational Research, University of Delhi. He was awarded best Teacher award by Government of NCT of Delhi in 2016-17. He has published papers in the field of Reliability Modeling, Optimization theory, Forecasting and Marketing Research. He is a life member of the Society for Reliability Engineering, Quality and Operations Management (SREQOM).

[8] ஜூன் 14, 2019 அன்று திநகரில், “மிஸ்டிக் பல்மேரா” என்ற இடத்தில், கோவில்களில் கொக்கோக சிலைகள் என்ற தலைப்பில் பேசியபோது, கேள்விகள் கேட்டபோது, தடுக்கப் பட்டது. லிங்கத்தைப் பற்றி, வழக்கம் போல, “ஃபல்லிக்” என்றெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது.

 [9] Embassy Travel and Tours Pvt. Ltd, Mystery Palmyra போன்ற எலைட் அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன. செல்லும் இடங்களில் ஜாலியாக, 5-ஸ்டார் வசதியாக இருக்கலாம்.

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

ஜூன் 26, 2017

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

Tamil writers, speakers, researchers have been rhetoric

ல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர்.  எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1].  ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.

Malar Mannan - 2013

இந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.

Thiruvalluvar coin minted by F W Ellis. front and observe- British museum

வள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம்.  இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.

Tiruvalluvamalai- 11-12th cent CE, interpolated

மதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

Ellis forged works

திருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy]  முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

26-06-2017

Tiruvalluvamalai- works forged in his name

[1] மலர் மன்னன்,  , http://puthu.thinnai.com/?p=11110

[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

[3]  ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524

[4] Sir Walter Elliot came to Madras in 1821 and worked till 1860, as a Member of the Council of the Governor of Madras. He was a life long and devoted student of Oriental Studies inBotany, Zoology, Indian languages, Numismatics and Archeology. He rescued the Amaravathi Marbles, which are now housed in the British Museum along with his coin collection and collection of other artifacts.. His work, ‘Coins of Southern India’, formed part of the famous series ‘Numismata Orientalia’, published in 1884

[5] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[6] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

ஜூன் 25, 2017

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைனபௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

C.F.C. Volney - Christos from Krishna

ஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனபௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்?: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.

Constantaine Joseph Beschi and Sivaprakasa Munivar

கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.

Zigenbalg, Dubois, Pope, Colebrooke, Wilson, Beschi

ஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்கபுரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:

  1. பார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.
  2. ஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.
  3. கோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.
  4. மெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].
  5. பிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].
  6. எல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].
  7. கால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.

Co. Tod - Annals and Antiquities of Rajasthan

கல்கத்தாமதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].

© வேதபிரகாஷ்

25-06-2017

Madras school of orientalism

[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது! 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்! 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது!

[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.

[3] Mackenzie’s story of the presentation of Tirukkural to the Tamil Cankam depicts its author, Tiruvalluvar, as a Saiva. Upon the occasion when the superiority of this literary work was demonstrated, the whole of the Tamil Cankam of Madurai, composed of Jains, was forced to commit suicide (Cotton et al. 1992, 1.14; Wilson 1828, 180ff, VII and XVIII; Taylor 1857–62, III, 163).

[4] Mackenzie’s account of the struggle at Kanchipuram between the Buddhists and the Jains, with Akalanka at their head, tells us that the Buddhists were defeated. The Jains, in keeping with the spirit of ahimsa, refrained from grinding up the Buddhists in an oil press and instead banished them to Sri Lanka (Mahalingam 1972–6, 14.3 and 68; cf. Taylor 1857–62, 3, 368, 423–5, 436–7).

[5]  Buchanan, Francis. 1999 [1807]. A Journey from Madras through the Countries of Mysore, Canara, and Malabar, 3 vols, New Delhi: Asian Educational Services.

[6] Mahadevan, Iravatham. 1995. ‘A Unique Gold Coin with Tiruvalluvar’s Portrait’, Studies in South Indian Coins, 5, pp. 139–45.

[7] Caldwell, R., A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages, 3rd edn, revised by J.L. Wyatt and T. Ramakrishna Pillai (eds), New Delhi: Oriental Books Reprint Corporation. 1974 [1913]. pp. 83-84.

[8] Wilson has nothing to say about Jain contributions to Tamil literature, in part because he rejects the Madras School of Orientalism’s ideas about the antiquity, originality, and quality of this literature, maintaining that the earliest Tamil works are simply translations of Sanskrit texts (1828, xxxii–xxxiv).

[9] Major James Delamaine, Of the Sra’wacs or Jains, published in 1827, 426–7, 433.

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

2-stage-krishnaswamy-kasivelu-s-kalyanaraman-vedantham-sami-thyagarajan-s-ramachandran-k-v-ramakrishna-rao-g-p-srinivasan

சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில்  கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:

எண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்
1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்
2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.
3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.
4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.

தலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.

17-sami-thyagarajan-speaking

சாமி. தியாகராசன் பேச மறுத்ததேன்? [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது?” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்?” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா?” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார்.  இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.

Gauthaman outbursts

கௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன்? [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார்.  எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017

பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்?: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன?

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-2

2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன?: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு? மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது? இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-3

[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.

[2] http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[3]  அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.

[4] http://vsrc.in/

[5] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-53-42

[6] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/705-2016-06-17-07-14-45

[7] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker. When I told them that those who had come there were educated and elite and not of such category as apprehended. I told that the speaker was telling that Siva is not Indian god and so on. The officer retorted, “Is it so? How then that IAS officer Iravatham Mahadevan was keeping quite? He knows everything”. The police informed that they had not obtained permission to stage demonstration against the meeting. The officer added that every body has a right to demonstrate, but they should have obtained prior permission.

https://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/