"செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..
ஆர்.எஸ்.எஸ்., முழுநேரஊழியர்களின்எண்ணிக்கையைஅதிகரிக்கதிட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.
புதியநிர்வாகிகள்எவ்வாறுதேர்ந்தெடுக்கப்படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.
10-07-2023 முதல் 15-07-2023 வரைநடந்தகூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.
2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –
63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.
எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.
இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
மதமாற்றத்தை தடுத்தல்,
கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்
போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன. சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..
ஜே.எஸ்.எஸ்பப்ளிக்ஸ்கூலுக்குபள்ளிக்கல்வித்துறைமூலம்நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.
அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.
ஜே.எஸ்.எஸ்பப்ளிக்ஸ்கூலில்கூட்டம்நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.
முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].
ஜே.எஸ்.எஸ்பப்ளிக்ஸ்கூல்விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”
ஆர்எஸ்எஸ்மக்கள்தொடர்புப்பிரிவின்தலைவர்சுனில்அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3]. நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4]. ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5]. இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.
கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.
நந்தினி, நிரஞ்சனாவைபோலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
தமிழகத்தில்ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.
2018 முதல் 2023 வரைமேற்கொண்டமுயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….
ஆர்.எஸ்.எஸ்என்னசெய்யப்போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1]. ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.
2024 மற்றும் 2025 ஆண்டுகளின்முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.
ஆர்எஸ்எஸ்ஸின்விரைவானவளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.
13-07-2023 அன்றுகூட்டம்ஆரம்பம், படுகரின்வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4]. இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].
[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”
[4] தினமணி, உதகையில்ஆர்எஸ்எஸ்உயர்நிலைக்குழுகூட்டம்!, By DIN | Published On : 14th July 2023 12:49 PM | Last Updated : 14th July 2023 12:49 PM.
[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில்ஆர்.எஸ்.எஸ். தலைவர்மோகன்பகவத்க்குஉற்சாகவரவேற்புஅளித்தபடுகர்இனமக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST
சித்தராமையா, கருணாநிதிஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.
மதுரையில்உள்ளமக்கள்சமூகநீதிபேரவைசெங்கோல்கொடுக்கதீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].
மதச்சார்பற்றஆட்சியைநடத்துவதால்மதசார்புள்ளசின்னமானசெங்கோலைவாங்கமுடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல்என்பதுஅரசமரபைபோற்றும்ஒன்று. அதனாலேயேபாஜக, நாடாளுமன்றத்தில்செங்கோல்வைப்பதைநாங்கள்எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].
10 கிலோஎடையுள்ளஇந்தபெரியார்தலை, முகம், உருவம்பொறிந்த, செங்கோலையார்செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
அம்பேத்கர்–பெரியார்–திப்புசுல்தான்சின்னங்கள்செக்யூலார்ஆகாது, செக்யூலரிஸம்என்றும்சொல்லிக்கொள்ளமுடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஊடகக்காரர்கள்ஊதிவிடும்செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார்சிலைபொறித்தசெங்கோலைவாங்கமறுத்தசித்தராமையா – காரணம்என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST), Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).
[7] தமிழ்.வெப்துனியா, பெரியார்முகம்பொரித்தசெங்கோலைவாங்கமறுத்தமுதலமைச்சர்.. என்னகாரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).
IUML – DMK கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது! அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தம், ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.
இந்தியயூனியன்முஸ்லிம்லீக்தோற்றதும், ஜவஹிருல்லாவென்றதும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் போட்டியிட்ட மூன்று இடங்களிலும் – கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் தோல்வியடைந்தது. உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், தங்களது சின்னத்தினால் நின்றதால் தோல்வியடைந்தனர். ஆனால், ஜவஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தது கவனிக்க வேண்டும். சிலர் ஜவஹிருல்லாவை விமர்சித்தாலும், வெற்றி பெற்றது நிதர்சனம் ஆகிறது. மேலும், சபாநாயகராக நியமிக்கப் படுவார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, அப்படி செய்யப் பட்டால், இவர் மீதான வழக்குகள், அரசியல் ரீதியில் நீர்க்கப் பட்டு விடும்.
SDPI, AIMIM, அம்மா.முககூட்டுயாரைதோற்கடிக்கவைத்தது?: டிடிகே.தினகரனுடன் கூட்டு வைத்துக் கொண்ட அஸாசுதீன் ஒவைஸி – AIMIM கட்சியினரும் தோல்வியடைந்தனர் –
டி.எஸ். வகீல் அஹ்மது, வாணியம்பாடி (T.S. Vakeel Ahmed contested in Vaniyambadi),
அமீனுல்லா, கிருஷ்ணகிரி (Ameenualla in Krishnagiri),
முஜிபூர் ரஹ்மான், சங்கராபுரம் (Mujibur Ragiman in Sankarapuram)
அஸாசுதீன் ஒவைஸளாம்பூருக்கு வந்து, உருதுவில் பேசி, பிரச்சாரம் செய்தும், அங்குள்ள முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். ஆக, இங்கெல்லாம் முஸ்லிம்கள் தோல்வியடையவில்லை, வெல்லும் குதிரைகளுக்கு ஓட்டளித்துள்ளனர் அல்லது ஏற்கெனவே திட்டமிட்டு, திமுக கூட்டணி வெல்லாமல் இருக்க இவ்வாறு செயல்பட்டனர் என்றாகிறது..
தோல்வியடைந்தஇந்தியயூனியன்முஸ்லிம்லீக்கட்சியின்தலைவர்காதர்மொஹிதீன்ஸ்டாலினைபாராட்டியது: தலைவர் காதர் மொஹிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், சாதுர்யமாக, சாமர்த்தியமாக ஸ்டாலினைப் போற்றி, 07-05-2021 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உண்மையினை எடுத்துக் காட்டியுள்ளார். முதன் முதலில், காமராஜர் தான், ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். பிறகு, அந்த வழக்கம் பின்பற்றப் பட்டது. அண்ணா-கருணாநிதி வழி வந்த ஸ்டாலினும், இரு முஸ்ம்களை மந்தியாக்கியுள்ளார்[1]. தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்னும் பேர் பெற்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கலும் தனது தந்தையின் வழிநின்றுளைரனு முஸ்லிம்களுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால், அவரும், சம்பிரதாயத்தை மறக்காமல் பின்பற்றியுள்ளார்[2]. சரியான தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவராக, ஸ்டாலின் விளங்குகிறார் என்றெல்லாம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஆவடிசா.மு.நாசர் [S M Nasar – Minister for Milk & Dairy]: அமைச்சரை வீழ்த்திய வேட்பாளருக்கு கட்சி தலைமை அமைச்சர் பதவி கொடுத்து கவுரவிக்கும் என்கிற பொதுவான செண்டிமெண்ட் ஒன்று இருக்கிறது[3]. தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி[4]. பால்வளத்துறை அமைச்சராகும் சா.மு. நாசர் (61) ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள சா.மு.நாசருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர். ஆவடி சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை வீழ்த்தி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
செஞ்சிகே.எஸ். மஸ்தான் [Gingee K S Masthan – Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare – Minorities Welfare, Non Resident Tamils Welfare, Refugees & Evacuees and Wakf Board]: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவுள்ள செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (66) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருக்கு சைத்தானி பீ மஸ்தான் என்கிற மனைவியும் கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் என்கிற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகளும் உள்ளனர். செஞ்சி தேசூர் பாட்டையில் வசித்து வருகிறார். தொடர்ந்து திமுக விசுவாசியாக, பல பொறுப்புகளில் இருந்து வேலை செய்துள்ளார்.
பெரும்பாலான முஸ்லிம், கிருத்துவத் தலைவர்கள், நிறுவனங்கள் வாழ்த்து சொல்லியிருப்பது: இது ஒரு சாதாரணமான, வழக்கமாக, ஏதோ மரியாதை நிமித்தம் செய்யப் பட்டது இல்லை.
ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், ஊவா மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான செந்தில் தொண்டமான்,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன்,
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார்,
அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன்,
இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்,
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன்,
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்-கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம்,
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் அறம் அருண்,
இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன்,
தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம்,
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்கள் தோல்வியடைந்து, வென்றுள்ளது திட்டமே: முஸ்லிம் கட்சிகள் பிரிந்து கிடப்பது காட்சியளித்தாலும், ஓட்டளிப்பதில், அவர்கள் கட்டுண்டுள்ளனர்.
ஒவைசியை, மஸ்தான் இதயங்களை இணைப்போம் மாநாட்டிற்கு அழைத்து, ஜகா வாங்கியது, முக்கியமான நிகழ்வு. அந்த மஸ்தான் இப்பொழுது மந்திரியாகியுள்ளார்.
குறைந்த வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, ஐஜேகே, ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட்டவர்கள் பல இடங்களில் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
ஆகவே, வெல்ல மாட்டோம் என்று தெரிந்தும், இவை கூட்டணி அமைத்து, தேர்தலில் களம் கண்டன. இதனால், திமுக எதிர்ப்பு மற்றும் அதிமுக ஆதரவு ஓட்டுகள் சிதறின.
பல இடங்களில் அமமுக மற்றும் அதிமுக ஓட்டுகளை சேர்த்தால், திமுக் ஓட்டுகளை விட அத்கமாக வருகிறது.
இதே போலத்தான் மக்கள் நீதி மய்யம், பிஜேபி ஆதரவு ஓட்டுகளை உடைத்துள்ளது.
அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம், திமுகவின் பி-டீமாக வேலை செய்து வெற்றி பெற செய்துள்ளது.
ஐஜேகே / பச்சமுத்து, தனது வியாபாரத்தை காத்துக் கொள்ள திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது. வேலூர் இஞ்னியைங் குழுமம் விஸ்வநாதனும் அவ்வாறே செய்துள்ளார். முன்னர் இவர்கள் பிஜேபியுடன் இருந்தனர். இதற்கு பிரஷாந்த கிஷோர் ஆலோசனை கொடுத்தாரா என்று தெரியவில்லை.
ஐஜேகே அட்மிஷன் வியாபாரத்திற்கு உதவுவதால் தொடர்ந்து இருக்கும். ஆனால், மக்கள் நீதி மய்யம் மறைந்து விடும்.
தோல்வியுற்ற காதர் மொஹிதீன் அபாரமாக புகழ்ந்தது, ஆற்காடு நவாப் செக்யூலரிஸமாக வாழ்த்து தெரிவித்தது எல்லாமே, இதில் சேரும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தி.மு.க. கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது!
இந்தியயூனியன்முஸ்லிம்லீக் (ஐ.யூ.எம்.எல்), தி.மு.க. கூட்டணி: மார்ச் மாத கூட்டணி அரசியல் பேரம், முடிவு முதலியன தேர்தல், தேர்தல் வெற்றி-தோல்வி மற்றும் எம்.எல்.ஏ மந்திரி நியமனம் போன்றவற்றில் வெளிப்படுகிறது. DMK-IUML-கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேச்சுவார்த்தை நடத்தினார்[1]. முஸ்லிம்களுக்கு பொதுவாக வேட்பாளரை மனதில் வைத்து தான் தொகுதிகளை கேட்பது வழக்கம்[2]. அதனால், திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், சென்னையில் ஒரு தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது 3 தொகுதிகளை ஒதுக்குமாறு IUML-பிரதிநிதிகள் கோரினர்[3]. ஆனால் அவர்கள் (திமுகவினர்) திருவாடானை, திருச்சி கிழக்கு, சென்னை தொகுதிகளை தர முடியாது என்று கூறி, கடையநல்லூர் தொகுதியை அவர்களுக்கு திமுகவினர் ஒதுக்கினர்[4]. அந்த ஒரு தொகுதி மட்டும் உறுதியாகியது. இப்படி மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன.
இழுபறியில் DMK-IUML-கூட்டணிபேச்சு, பேரம், முடிவு: மீதம் உள்ள 2 தொகுதிகளில் சிதம்பரம் அல்லது பாபநாசம், ஆம்பூர் அல்லது வாணியம்பாடி ஆகிய தொகுதிகளை முஸ்லிம்லீக் கேட்டது[5]. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் (கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம்) ஒதுக்கப்பட்டுள்ளன[6]. இப்படி செய்திகள் வந்தது வியப்பாக இருந்தது, DMK-IUML-கூட்டணி பேரம் அவ்வளவு மகத்தானதா, முக்கியமானதா, எதற்கு ஊடகங்கள் அதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், போன்ற கேள்விகள், புதிர்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பேரம் ஒரு வழியாக முடிந்தது. மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிறகு, ஸ்டாலின் முன்னிலையில் ஒரு வழியாக, திமுக – ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் மற்றும் மமக நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்[7]. காதர் மொஹிதீன் திருப்தியடையாமல் ஊடகங்களில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்ததையும் கவனித்திருக்கலாம். இவை தினம்-தினம் முக்கிய செய்திகளாக வெளிவந்தது[8], சாதாரண மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அதன் பின்னர் இருந்த அரசியல்-வியாபாரம், அவர்களுக்குத் தான் தெரியும்.
ஒவைசி-திமுக “இதயங்களை இணைப்போம் மாநாடு” நாடகம்: கிருத்துவ மாநாடுகள் டிசம்பைல் நடத்திய பிறகு, “ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்க உள்ளார். ஓவைசி முதல் முறையாக திமுக மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் நுழைகிறார்,” என்றெல்லாம் அதிரடியாக செய்திகள் வந்தன.. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற இருக்கிற நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6ஆம் தேதியன்று ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. அதில் இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு திமுக சிறுபான்மை நல உரிமை அணியின் செயலாளர் மஸ்தான் அழைப்பு விடுத்தார். இந்த சூழலில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதும் முஸ்லிம் கட்சி தலைவரான அசாதுதின் ஓவைசியை மஸ்தான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்க ஓவைசிக்கு மஸ்தான் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலில் ஓவைசியின் கட்சி போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததால்தான் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழலில், தமிழகத்துக்கு ஓவைசியை அழைப்பது நல்லதல்ல என இஸ்லாமிய இயக்க தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தால், அது நடக்கவில்லை.
பூவா–தலையா, ஹெட்–ஆர்–டெயில், எங்களுக்குத்தான்வெற்றிஎன்றுமுஸ்லிம்கள்திட்டத்துடன்செயல்படுகின்றனர்: பாகிஸ்தானை உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இன்றும் செக்யூலர் போர்வையில் நடமாடிக் கொண்டு, அரசியல் செய்து வருகிறது. “மதசார்பற்ற முற்போக்கு அணி” என்ற முகமூடிகள், பதாகைகள், கோஷங்கள், மேடை பேச்சுகள் வேறு. அதற்கு ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர், வருகின்றனர். அரசியல், வியாபாரம், சினிமா, அந்நிய முதலீடுகள் என்று பிண்ணிக் கிடக்கும் சம்பந்தங்களில் பரஸ்பர லாபங்களுக்கு அவர்கள் செயல் பட்டு வெற்றி கண்டு வருகின்றனர். பெருங்கட்டுமான அமைப்புகள், தொடர்புடைய திட்டங்களுக்கு (Infrastructure) ஆரம்பித்திலிருந்து கருணாநிதி முஸ்லிம் கம்பெனிகளுக்கு ஆதரவு கொடுத்தார். இப்பொழுது, ஸ்டாலின் அதை பின்பற்றுவதில் ஆச்சரியம் இல்லை. கூட சாடிலைட், டிவி-செனல், விளம்பரங்கள், சினிமா, படபிடிப்பு, ஊடக வியாபாரங்கள், பணப்பரிமாற்றம், கொரியர், என்று பற்பல வியாபார நெருக்கங்களும், சம்பந்தங்களும் வேலை செய்து வருகின்றன. அதனால், மாறன் – ஸ்டாலின் சொந்தங்கள் இணைந்தே செயல் படும். இப்பொழுது வாழ்த்து சொல்ல அழகிரி குடும்பமும் சேர்ந்து விட்டது.
ஏழு / எட்டுமுஸ்லிம்வேட்பாளர்கள்வெற்றிபெற்றுஎம்.எல்.ஏஆகியுள்ளனர்: திமுக, விசிகே மற்றும் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து, ஆறு முஸ்லீம்கள் வென்றுள்ளனர்:
ஜே. மொஹம்மது ஷானவாஸ், விசிகே [J. Mohamed Shanavaz from VCK]
[Mastan, Senji]
எம். அப்துல் வஹாப், திமுக [Abdul Wahab M, DMK]
எம்.எஹ். ஜவஹிருல்லா, திமுக [Jawarihullah M H, DMK ]
எச்.எம். நாசர், திமுக [Nasar S M, DMK ]
பி. அப்துல் சமது, திமுக [Abdul Samad P]
அஸன் மௌலானா, காங்கிரஸ் [Aassan Maulaana, Congress]
கே. காதர் பாட்சா என்கின்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் [K. Kader Basha alias Muthuramalingam, Ramanathapuram]
கடையாக இருப்பவர் நிலை சரியாக தெரியவில்லை. முஸ்லிம்கள் இப்படி பல கட்சிகளில், உருவங்களில், பெயர்களில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில், மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இவ்வாறு அதிகாரகத்தில், அரசியலில் ஆதிக்கம் பெற்று, தொடர்ந்து வருகின்றனர்.
SDPI கீழ்கண்டஆறுஇடத்தில்நின்றாலும்தோல்வியடைந்தது: SDPI முஸ்லிம் கட்சிகளில் தீவிரமானது, கேரளாவில், கர்நாடகாவில், ஏன் தென் மாவட்டங்களிலும் முஸ்லிகளிடையே ஆதரவு பெற்றது.
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சர்சைகளுக்குமுற்றுப்புள்ளி.. இந்தியயூனியன்முஸ்லிம்லீக்தனிசின்னத்தில்போட்டி.. காதர்மொய்தீன்அறிவிப்பு.!, By Vinoth Kumar, Chennai, First Published Mar 1, 2021, 7:26 PM IST
இந்துத்துவஎழுத்தாளர்கள், கவிஞர்கள்முதலியோரின்இரட்டைவேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.
காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.
முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.
இன்றைக்குகவிஎழுதுவதற்குஇலக்கணம்இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].
ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில்நாங்கள்நன்றாகத்தூங்கிக்கொண்டிருந்தோம்அப்போதுஎங்கள்மீதுஒருபோர்வையைப்போர்த்திவிட்டனர்அதுஇந்தியத்தேசியக்கொடிஎன்றபோர்வை. விடிந்ததும்விழித்துப்பார்த்தோம்போர்வைஇருந்தது. கோவணத்தைக்காணவில்லை. தூங்குபவனுக்குப்போர்வைமுக்கியம்.விழித்துக்கொண்டவனுக்குக்கோவணம்முக்கியம்வாருங்கள்தேசியக்கொடியைக்கிழிப்போம். அவரவர்கோவணத்தைஅவரவர்கட்டிக்கொள்வோம்!”
இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.
மாதவிடாய்மூன்றுநாட்களில்உங்கள்பெண்தெய்வங்கள்எங்குபோயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].
முடிவுரை – இலக்கியவிழாஏற்பாடுசெய்தவர்களின்கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:
பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.
[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.
[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.
[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.
[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.
[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.
[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.
கருத்துசுதந்திரம்எப்படிமற்றமதவிசயங்களில்சுருங்கிவிடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –
ஷா பானு வழக்கு,
சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,
சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,
உஸைன் சித்திரங்கள்,
பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,
தேசிய கீதம் பாடுவது,
அதற்கு மரியாதை கொடுப்பது,
மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்)
என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
Marx, Lenin, Mao- trinity of Communism
சித்தாந்தங்களை, சித்தாந்தரீதியில்எதிர்ப்பதுஎப்படி?: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:
“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.
நாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்!
“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன!
குடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.
பொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது!
நாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்!
சமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்?
என் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா?
சம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.
வகுப்புகள்போன்றுநடத்திபயிற்சிஅளிக்கவேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.
கடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
அதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.
குறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.
ஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.
சித்தாந்தம், சித்தாந்திகளைமுறையாகஎதிர்கொள்வதுஎப்படி?: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.
கல்பாக்கம்அருகேஆளுநருக்குபாதுகாப்புக்குவந்தவாகனம்மோதிவிபத்து: சிறுவன்உட்பட 3 பேர்பலி, போலீஸாரும்காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையேஆளுநர்சென்னைக்குகிழக்குக்கடற்கரைசாலைவழியாகதிரும்பினார். அவருக்குபாதுகாப்புஅளிக்ககாஞ்சிபுரத்திலிருந்துசென்றபொலிரோஜீப்வாகனம்பின்னர்கோவளம்வரைபாதுகாப்புக்குவந்துவிட்டுபின்னர்காஞ்சிபுரம்திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா? இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
கற்பனைசெய்தியின்வர்ணனை– கருப்புக்கொடிஆர்ப்பாட்டம்எதிர்ப்பையும்மீறிஆய்வுநடத்தஆளுநர்பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].
கற்பனைசெய்தியின்வர்ணனை– நடப்பதுபாஜகஆட்சி, அதனால்கிருஷ்னர்முறையைக்கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].
கற்பனைசெய்தியின்வர்ணனை– கண்னைத்துடைத்துக்கொண்டஆளுநர்பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].
இந்துக்கள்எளிமையானதாக்குதல்இலக்கில்உள்ளனர், தொடர்ந்துதாக்கப்பட்டுவருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.